Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலையில் பந்து விளையாட்டாக மாறியுள்ள காணி விவகாரம் – செல்வரட்னம் சிறிதரன் தமிழ் மக்களின் காணிப்பிரச்சினை என்பது பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்ற ஒரு விவகாரமாகும். வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்ற கோரிக்கை எழுவதற்கு இந்தக் காணிப் பிரச்சினையே மூல காரணமாகும். தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை படிப்படியாகக் குறைப்பதற்காகவே, வலிந்து மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களின் காணி உரிமைகளைப் பறித்தெடுக்கின்ற அரசியல் உத்தியை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பின்பற்றி வந்துள்ளன. ஆனால் ஆயுதப் போராட்டமானது, இந்த சிங்களக்…

  2. சீனாவின் செல்நெறியில் திபெத்தை விளங்கிக் கொள்ளல் -நரசிம்மன் புனைகதைகளின் மூலம் ஏமாற்றி, காரியங்களைச் சாதிக்கும் முயற்சிகளில் ‘அழுங்குப்பிடி’யாகத் தொடர்வதையே, திபெத்தில் சீனாவின் செல்நெறியாகக் காணப்படுகின்றது. ஆனால், அந்தப்போக்கை எவரும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதிலும் கவனமாகக் காரியமாற்றுகின்றது. திபெத் ஒருபோதும் சீனப்பேரரசின் கீழ் இருந்ததில்லை என்பது, சீனாவுக்குத் தேவையான மறைக்கப்பட வேண்டிய உண்மை என்பதால், எவரையும் நம்பவைக்கும் விதத்திலும் மிக நேர்த்தியாகவும் ஆனால் தந்திரமாகவும் திபெத் குறித்து பல புனைகதைகள் கட்டியெழுப்பப்பட்டு இருக்கின்றன. வரலாற்றுக் காலம் முதற்கொண்டு, ஆதாரபூர்வமான பல உண்மைகள், தான்தோன்றித்தனமான முறையில், மறைத்தழிக்கும் வகையிலேயே இ…

  3. தேர்தலைக் கண்டு ஓடும் கூட்டு அரசு ஐ.தே.க. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி கூட்டு அர­சாங்­கத்தின் எதிர்­காலம் பற்­றிய கேள்­விகள் நாளுக்குள் நாள் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இந்தக் கூட்டு அர­சாங்கம் நிலைத்­தி­ருக்க வேண்டும். அப்­போது தான், இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் உள்­ளிட்ட மிக முக்­கி­ ய­மான விவ­கா­ரங்­க­ளுக்கு தீர்வு காண முடி யும் என்ற நம்­பிக்கை பர­வ­லாக காணப்­ப­டு­கி­றது. எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்­தனும் கூட இந்தக் கருத்­தையே அண்­மையில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். ஆனால், இந்தக் கூட்டு அர­சாங்கம் இனி ­மேலும் நீடிக்கக் கூடாது, நீடித்தால் நாட்­டுக்கு ஆபத்து என்ற கருத்தை கூட்டு…

  4. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஜனவரியில் வரவிருக்கின்ற நிலையில், அதற்கான ஆயத்தங்களில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இருந்த இழுபறிகளுக்கு முடிவேற்பட்டுள்ளதையடுத்தே தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மாகாணசபைத் தேர்தல்களைப் போலவோ அல்லது பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களைப் போன்று, ஒப்பீட்டளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என கூற முடியாது. இருந்தபோதிலும், உள்ளுராட்சி சபைகளிலும் அரசியல் கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு போக்கே நாட்டில் நிலவுகின்றது. இதனால், அரசியல் கட்சிகள் தமது இருப்பின் மகிமையையும், தமது அரசியல் இருப்பின் பலத்தையும் பரீட்சித்துக் கொள்வ…

  5. இந்தியாவை நோக்கிச் செல்லுதல் ? - யதீந்திரா இந்தியா ஒரு பிராந்திய சக்தி. ஈழத் தமிழர்களுக்கான உடனடி அயல்நாடு. இது ஒரு மாறாத, ஒரு போதும் மாற்றவே முடியாத பிராந்திய யதார்த்தமாகும். இந்தியா தொடர்பில் இந்தக் கட்டுரையாளர் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றார். ஆனாலும் இந்தியாவை புரிந்து கொள்வதில் எப்போதுமே ஒரு குழப்ப நிலை இருக்கவே செய்கின்றது. இதற்கு என்ன காரணம்? பொதுவாகவே அரசியல் விவகாரங்களை எங்களின் விருப்பு வெறுப்புக்களிலிருந்து நோக்கக் கூடாது. மாறாக, யதார்தத்திலிருந்து நோக்க வேண்டும். குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர், அப்துல்லா ஒச்சலான் கூறுவது போன்று, ‘நேற்றையவற்றுடன் இன்றையவற்றை ஒப்பிடுவதை விட, அது இன்றெப்படி ஒரு யத…

  6. சீன கப்பல் தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா By RAJEEBAN 07 NOV, 2022 | 09:09 AM சீனாவின் யுவான்வாங் 6 கப்பல் தனது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள இந்தியா இந்த கப்பல் தொடர்பில் இலங்கை எடுக்கவுள்ள நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது. கடலிற்குள் 200 கடல் மைல் தூரம் வரை காணப்படும் தனது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் யுவான் வாங் கப்பல் நுழைவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. ஒடிசா கரையில் உள்ள அப்துல் கலாம் சோதனை நிலையத்திலிருந்து இந்தியா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனைகள…

  7. சம்பந்தனின் தோல்வி யதீந்திரா கொழும்பிலிருந்து வெளிவரும் சிலோன் டுடே என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் சம்பந்தனை புகழ்ந்து ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. ‘சம்பந்தன் சேர் பொன்னம்பலம் இராமனாதனின் மறு உருவம்’ என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு. இராமனாதன் எவ்வாறு தமிழ் மக்களின் தலைவராக மட்டும் தன்னை கருதி செயற்பட்டிருக்கவில்லையோ அதைப் போன்றுதான் சம்பந்தனும் முழு நாட்டிற்குமான தலைவராகவே செயற்பட்டு வருகிறார் என்று அந்தக் கட்டுரையாளர் சம்பந்தனின் தலைமைத்துவ ஆற்றலை பாராட்டியிருக்கிறார். அந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுவது போன்று சம்பந்தன் தற்போது தான் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய இனத்திற்கான தலைவராக செயற்படவில்லை என்பது முற்றிலும் சரியான ஒரு…

  8. 1990 களில் விடுதலைப்புலிகள் அமைப்போடு சேர்த்து.. இல்லாத பொல்லாத கட்டுக்கதைகள் கட்டப்பட்டு.. மேற்குலகால் பயங்கரவாதிகள் என்று வர்ணிக்கப்பட்ட குர்திஷ் போராளிகள் இன்று.. ஈராக்கில்.. சிரியாவில்.. மேற்குலகின் ஆயுதப் பயிற்சி மற்றும் இராணுவ வளங்களைப் பெற்று இஸ்லாமிய ஜிகாத் ஐ எஸ் அமைப்புக்கு எதிராகவும் தங்களின் குர்திஸ்தான் விடுதலையை உறுதி செய்யவும் போராடி வருகிறார்கள்..! இன்றும் துருக்கியால் இவர்கள் பயங்கரவாதிகளாகவே நோக்கப்படுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்து தமிழீழ விடுதலைப் புலிப் பெண் போராளிகள் போல சண்டைக்களத்தின் நேரடியாகக் களமாடும் குர்திஷ் பெண் போராளிகள்.. மீண்டும் ஒரு முறை ஈழத்துப் பெண் போராளிகளை நினைவில் மீட்டிச் செல்ல வகை செய்கிறார்கள். http://y…

  9. நினைவேந்தலும் அரசின் நிலைப்பாடும் யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட பொது­மக்­களை நினை­வு­கூர்­வ­தற்குத் தடை இல்லை என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யத்­தையே ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இருப்­பினும் இது வர­வேற்­புக்­கு­ரிய நிலைப்­பா­டா­கவே கருத வேண்டும். யுத்­தத்தில் பொது­மக்கள் எவ­ரையும் இரா­ணு­வத்­தினர் கொல்­ல­வில்லை. பயங்­க­ர­வா­தி­க­ளாக அர­சாங்கத் தரப்­பினால் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கின்ற விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரா­கவே அவர்கள் யுத்தம் புரிந்­தார்கள். நடந்து முடிந்த யுத்தம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­ப­ட­வில்லை என்றே அரச தரப்பில் கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்டு வந்­தன. இந்த நிலையில் கொல்­லப்­பட்ட பொது­மக்­களை நினை­வு­கூர …

  10. வெடுக்குநாறி மலையிலிருந்து தையிட்டிக்கு நிலாந்தன் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். போலீசாரோடு முரண்பட்டதன்மூலம் அதை உணர்ச்சிகரமான ஒரு விவகாரமாக மாற்றியதும் அந்தக் கட்சிதான். அதன் விளைவாகத் தமிழரசுக் கட்சியும் உட்பட ஏனைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்பகுதிக்கு வரவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நீதிமன்றம் தலையிடும் ஒரு நிலைமை உருவாகியது. எனினும் போராட்டம் பெருமளவுக்கு கட்சிப் பிரமுகர்களின் போராட்டமாகவே இருந்தது. கொஞ்சம் தொண்டர்களும் காணப்பட்டார்கள். முன்னணி போலீசாரோடு முரண்பட்டதுங்கூட அதன் பாணியில் வழமையானது என்று சொல்லலாம். அரச படைகளோடு முரண்படுவதை ஒரு சாகசமாக முன்னணி செய்து வருகி…

  11. மெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா? Editorial / 2018 நவம்பர் 12 திங்கட்கிழமை, மு.ப. 06:41 Comments - 0 - தமிழ் மிரரின் விவரணக் குழு இலங்கையின் நாடாளுமன்றத்தை, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தமை தான், இப்போதைய பிரதான பேசுபொருளாக இருக்கிறது. ஜனாதிபதியின் நடவடிக்கை சரியானதா, தவறானதா என்பது தொடர்பான கேள்விகள் ஒருபக்கமாகவிருக்க, இவ்வறிவிப்பால் நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சமும் உள்ளது. என்ன நடந்தது? கடந்த வெள்ளிக்கிழமை இரவு, 2096/70 என்ற இலக்கத்தின் கீழ் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியீட்டின் மூலமாக, அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு…

  12. காஷ்மீர்- குளிர் தேசத்துக்குப் போர்!! பதிவேற்றிய காலம்: Mar 3, 2019 ஜம்மு காஷ்­மீ­ரில் இந்­தி­யா­வை­யும் பாகிஸ்­தா­னை­யும் பிரிக்­கின்ற எல்லை 740 கிலோ மீற்­றர் நீள­மா­ன­தாக இருக்­கி­றது. இது பனி படர்ந்த மலை­களை ஊட­றுத்து எல்­லை­யி­டப்­பட்ட பிர­தே­சம். இந்­தி­யா­வை­யும் பாகிஸ்­தா­னை­யும் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான சிப்­பாய்­கள் இந்த எல்­லைக் கோட்­டின் இரண்டு பக்­கங்­க­ளி­லும் எந்த நே­ர­மும் தயார் நிலை­யில் நிற்­கின்­ற­னர். அவர்­கள் அந்­தப் பனி மலை­க­ளின் அழகை இர­சிக்­கும் நோக்­கில் அங்கு நிலை­கொள்­ள­வில்லை. ஒரு முனை­யி­லுள்­ள­வரை மறு முனை­யி­லுள்­ள­வர் கொல்­லும் நோக்­கில் ஆயு­தம் தாங்­கி­ய­வர்­க­ளாக வக்­கி­ரத்­து­டன் காத்­தி­ருக்­கி­றார்­கள். இந்­தி­யா­வின் …

  13. யதீந்திரா திருகோணமலையில், அமெரிக்கா படைத்தளத்தளமொன்றை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதான செய்திகளை ஆங்காங்கே காணக் கூடியதாக இருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், சீனாவின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில், சீனாவின் முன்னணி படைத்தளமாக மாறுவதற்கான வாய்ப்;புக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். சீனாவின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலேயே ஹம்பாந்தோட்டை சீனாவின் கைகளுக்கு சென்றிருக்கிறது. இது சீனாவின் கடன்பொறி ராஜதந்திரத்தின் (debt diplomacy ) வெற்றி என்றும் பென்ஸ் குறிப்பிட்டிருந்தார். இதே வேளை கடந்த ஆண்டு செம்டம்பரில், அமெரிக்க செனட்டர்கள் 14பேர் இணைந்து, அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மார்ட்டிக்கு (James Mattis) ஒரு கடிதத்தை அனுப்பியிருந்…

  14. 'உலகப் பயங்கரவாதி அமெரிக்கா!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- வல்லாண்மை பயங்கரவாதி என்கிறான் துப்பாக்கி வைத்திருப்பவனை, அணுகுண்டு வைத்திருப்பவன்! அன்புக்குரிய அண்ணர், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் மேற்கூறிய ~நறுக்கு|, பயங்கரவாதம் என்பதற்குரிய, தற்போதைய வரைவிலக்கணத்தை இவ்வாறு மிகச்சுருக்கமாக ஆனால் மிகத் தெளிவாக விளக்குகின்றது. இன்று ~பயங்கரவாதம்| என்ற சொல்லுக்குள், உலகிலுள்ள பல நீதியான விடுதலைப் போராட்டங்களும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளதற

    • 0 replies
    • 1.1k views
  15. அலைகளின் நடுவே sudumanal இலங்கை அரசியல் ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும். 2019 இல் 3 வீத வாக்குகளை பெற்ற ஜேவிபியின் தலைவர் அநுர 2024 இல் 42 வீத வாக்குளை எடுத்து ஜனாதிபதியாக வருகிறார். …

  16. கோட்டா Vs சஜித் தெரிவுக்காக காத்திருக்கும் தமிழ்ப் பேசும் சமூகம் Editorial / 2019 ஓகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:59 Comments - 0 -அ. அகரன் அதிகாரமிக்கவர்களுக்கான போட்டியில்; இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்து, நாளுக்குநாள் புத்தம் புதிய தகவல்கள், சுவாரஸ்யமிக்கதாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், ஜனநாயகத்துக்கான போராக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இருக்கவேண்டும் என்கின்ற கோரிக்கை, தற்போது வலுப்பெற்றுள்ள நிலையிலேயே ஜனாதிபதிக்கான வேட்பாளர்கள் தொடர்பில் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளோம். இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்னவென இருந்துவிட்டுப் போகும் நிலையில் சிறுபான்மைச் சமூகம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இருந்துவிட முடியாது என்பதே யதார…

  17. பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கி…

  18. நேர்காணல்: யாழ்ப்பாணம் தோமஸ் சௌந்தரநாயகம் “நாங்கள் ராணுவத்தால் சூழப்பட்டிருக்கிறோம்” சந்திப்பு: இளைய அப்துல்லாஹ் தமிழ் மக்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டபோதும் முகாம்களில் அடைக்கப்பட்டுப் பல்வேறு இன்னல்களுக்குள்ளானபோதும் யாழ் ஆயர் இல்லம் ஏதாவது அறிக்கை விடாதா வத்திக்கான் எங்களுக்கு ஏதாவது உதவாதா என்று தமிழ் மக்கள் ஏங்கிக்கொண்டிருந்தனர். யாழ் ஆயர் இல்லம் தமிழ் மக்கள் நிலை குறித்துத் தொடர்ந்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டது. யுத்தத்திற்குப் பிறகு, இப்போது அம்மக்களின் நிலை குறித்து நீங்கள் அக்கறை காட்டிவருகிறீர்களா? வடக்குப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் தற்போதைய நிலை என்ன? யுத்தம் முடிவடை…

    • 4 replies
    • 933 views
  19. கேள்விகளுடன் உயிர்த்த ஞாயிறு லக்ஸ்மன் ஒன்றை மறைப்பதற்காக இன்னொன்றைக் கொண்டுவருதல் அல்லது உருவாக்குதல் என்பது எல்லா விடயங்களிலும் நடக்கின்ற ஒன்றே. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கம் அட்சியை ஏற்பதற்கு முன்னர் சொன்னவற்றைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு வெளிவருவதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்றே கொள்ளலாம். இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் திடீர் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு காரணமாக இருந்தது. அதேபோன்று, இப்போதிருக்கின்ற அரசாங்கம் உருவாவதற்கும் காரணமாக இருந்தது. ஆனால், மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும், தொடர்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவது கட்டாயம் என்கிற த…

  20. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியாக காணப்படுகின்ற வடக்குக் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக உரிமையானது இன்றை வரைக்கும் பறிக்கப்பட்ட நிலையிலே காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்ட நிலையிலும் வட பகுதில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியல் துயரங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை அவை இன்னும் நீண்டு விரிந்து கொண்டுதான் செல்கின்றது. தமிழ் மக்கள் மறுவாழ்வு பெற்று விட்டனர் அவர்களுடைய நிலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க்கப்பட்டு அவர்களுடைய நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியிலுள்ள அரசு சர்வதேச நாடுகளுக்கு கூறி வருகின்றது ஆனால் நிலைமை தலை கீழாகவே காணப்படுகிறது. இன்று வடக்கில் எந்தவிதமான செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் நிம்மதியாக செ…

    • 0 replies
    • 625 views
  21. தமிழ்க் கட்சிகளின் அணுகுமுறைகள் மாறுமா? கே. சஞ்சயன் / 2020 ஜூலை 05 பொதுத் தேர்தல் பிரசாரங்களில், தமிழ் அரசியல் கட்சிகள் சில முன்வைக்கின்ற கருத்துகள் தொடர்பாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. நாடாளுமன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள், இந்தத் தேர்தலில் வாக்குறுதிகளாக முன்வைக்கப்பட்டு, பிரசாரப்படுத்தப்பட்டு வருவதே இந்த விமர்சனங்களுக்குக் காரணம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள், கடந்த ஒரு தசாப்த காலமாக முன்வைத்து வருகின்ற போர்க்குற்றங்களுக்கு, சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் என்பதை, உதாரணத்துக்குக் குறிப்பிடலாம். இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மீறல்கள், குற்றங்களுக்குத் தமிழ் மக்கள், நீதி கோரிப் போராட்டங்களை நட…

  22. துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் போர் நடந்தபோது எல்லாளனின் தோல்விக்குக் காரணமானது துட்டகைமுனுவின் கந்துலன் என்ற யானைதான் என்று மகாவம்சம் கூறுகிறது. தமிழரை வென்ற கந்துலன் யானையே எமது சின்னம் என்று தெற்கே சிங்கள இனவாதத்தை தூண்டிவரும் கட்சி ஐ.தே.க யானையை தனது கொடியில் வைத்திருப்பது தமிழரை வென்ற குறியீடே என்பது கவனிக்கத்தக்கது. அமைதிப் பேச்சுக்களை நடாத்தி புலிகளை பிளவு படுத்திய பெருமை தன்னையே சாரும் என்று சொன்னவர் ரணில். இப்படிப்பட்ட இனவாத ஐ.தே.கவை தமிழர் நம்பலாமா என்ற உண்மை வடக்கே மீண்டும் புலப்பட ஆரம்பித்துள்ளது. இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் தமிழரின் எதிரிகளே என்பதை உணர்ந்து வருகிறார்கள் வடக்கு மக்கள். பலாலி விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு முக்கியம் எ…

    • 0 replies
    • 562 views
  23. மண்ணெண்ணெயும் தண்ணீரும் எப்படி ஒன்று சேரமுடியாதோ அதேபோல ஈழத்தமிழர்களின் நல்வாழ்வும் கருணாநிதியின் அரசியலும் ஒருபோதும் ஒன்று சேரமுடியாதவை.‏ PostDateIcon புதன்கிழமை, 20 மார்ச் 2013 05:52 ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற ராஜபக்‌ஷவின் அதி உயர் நட்பு சக்தியான காங்கிரஸ் கட்சியுடன், ஒரு தசாப்தகாலமாக கூட்டமைப்பிலிருந்த கருணாநிதியின்,திமுக, ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக அந்தக் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதாக, ஈழ தமிழினத்துக்கு ஆற்றுண்ணா துரோகம் செய்த அக்கட்சியின் மானங்கெட்ட தலைவர் கருணாநிதி, வெட்கம் கெட்டு இன்று அவசரமாக புது அறிவித்தல் ஒன்றை விடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு தமிழ் இனத்திற்கு மகிழ்ச்சியையோ, மறந்தேனும் நற்பலனையோ ஒருபோதும் ஈட்டிவிடப்போவதில்லை. மாறாக…

  24. நிலப்பிரச்சினையும் எச்சரிக்கை மணியும் - கருணாகரன் “2020இல் இலங்கைத் திருநாடு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக. “2020இல் இலங்கை என்று ஒரு நாடு, அநேகமா இருக்காது. இந்தக் குட்டி நாடு, இன்னும் குட்டி குட்டியாப் பிரிஞ்சு, ஒவ்வொரு துண்டிலும் சீனாவுடையதும் அமெரிக்காவுடையதும் ரஷ்யாவுடையதும் இந்தியாவினுடையதும் கொடிகள் பறந்து கொண்டிருக்கும். “இலங்கைக் கொடி எங்கும் பறக்காது. அப்படிப் பறந்தாலும், அது ஏதோ ஓர் ஒதுக்குப் புறத்தில்தான் அசைந்து கொண்டிருக்கும். பறக்கும் திராணியெல்லாம் அதற்கிருக்காது. இங்கே உள்ளவர்கள் எல்லாம், ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குக் காரில் போகவும் விசா எடுக்கவும் எல்லையில் கடவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.