Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பூகோள ரீதியான சட்ட அதிகாரத்தை ஐ.நா தனது கைகளில் எடுக்காவிட்டால் போர்க்குற்றவாளிகளின் பெருங் கூட்டத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று eruditiononline.co.uk இணையத்தில் Alex Longley எழுதியுள்ள Can the UN Learn From Its Own Grave Failures? கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். Can the UN Learn From Its Own Grave Failures? http://eruditiononline.co.uk/article.php?id=1482 சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டம் தொடர்பான ஐ.நாவின் நடவடிக்கைகளை உள்ளடக்கிய உள்ளக அறிக்கை கடந்த நவம்பர் மாத ஆரம்பத்தில்,வெளியிடப்பட்டது. போரில் அகப்பட்டுத் தவித்த பொதுமக்களை ஐ.நா காப்பாற்றத் தவறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. வடக்கு …

  2. அண்மையில் (கடந்த 2ம் திகதி) அவசர சந்திப்புக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பை வரும்படி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைத்திருந்தமை குறித்த செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்...ஆனால் திகதிப்பிரச்சினைகாரணமாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு இந்த சந்திப்பில் கலந்துகொள்ளமுடியாதென்றும் வேறொரு திகதியில் சந்திப்பை வைக்குமாறு கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன..அவைகுறித்த இரண்டு செய்திகளையும் கீழே இணைத்துள்ளேன்... பேச்சுக்கு வருமாறு மகிந்த ராசபக்ச விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்ல வேண்டுமா அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்வதில் உள்ள சாதக பாதகமான விடயங்கள் என்பவை சம்பந்தமான உங்கள் எண்ணங்கள்,கருத்து…

  3. அன்பு உறவுகளே பல தடைகள்,எதிர்ப்புக்கள்,துரோகங்கள்,பின்னடைவுகள்,அழிவுகளைத்தாண்டி எமக்கான ஒரு நாட்டை,சுபீட்சமான வாழ்வைக்கட்டியமைக்க வேண்டிய தேவை எம் ஒருவருக்கும் கடமைகளாக உள்ளன. சாதி,மத,கட்சிபேதங்களை மறந்து நாம் பயணிக்க வேண்டிய தேவைகள் உள்ளன. வெறும் தூற்றுதல்களும்,துதிபாடுதலும்,சேறடிப்புகளும் எம்மில் ஏதும் பயனுள்ள மாற்றங்களைச் செய்யப்போவதில்லை, சமூகம் குறித்த சிந்தனைகளே அவற்றை முன்னோக்கி வழி நடத்தும், அந்த வகையில் உறவுகளே உங்கள் சமூகம் குறித்த பார்வை என்ன? நல்லவை,தீயவை எல்லாவற்றையும் எழுதுங்கள். முரண்படும் இடங்கள்,ஒன்றுபடும் வழிகள்,மக்களை இணைக்கும் செயற்பாடுகளைத்தெரிவியுங்கள் உறவுகளே நாம் எங்கு நிற்கிறோம் என்பதை உணரமுடியும் அந்த வகையில் எதிர்காலத்திலேனும் ஒற்றுமையுடன் பயணிக…

  4. ஈழத்தமிழர்களை கைவிட்டது ஐ.நா. ஈழத்தில் மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஆனால் போரினால் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், இழந்தவைகள் எத்தனை என்ற முழுமையான விவரம் இன்னமும் சர்வதேசத்திடம் கிடைக்கவில்லை. இறுதிப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் சர்வதேசப் போர் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இன்று நிலைமை மாறி இலங்கை அரச படைகளின் கால்பட்டு சிதைந்து கொண்டிருக்கிறது. இந்தநிலைமை மாற வேண்டும். தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். மீண்டும் தமிழர்களுடைய பிரதேசம் கட்டி எழுப்பப்பட வேண்டும். தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்த மாவீரர் நாளில் உறுதி கொள்வோம். ஈழத்தில் மூன…

    • 1 reply
    • 1.3k views
  5. -கே.சஞ்சயன் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாடு அடுத்த ஆண்டு ஹம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த மாநாடு எந்தளவுக்கு வெற்றிகரமானதாக அமையும் என்ற கேள்விக்கு இப்போதே விடை கூறமுடியாத நிலை ஒன்று உருவாகி வருகிறது. இதற்குக் காரணம், இலங்கையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து பல்வேறு நாடுகளில் வலியுறுத்தப்பட்டு வருவதேயாகும். 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சில மாதங்களின் பின்னர், ட்ரினிடாட் இன் டுபாகோ நாட்டின் தலைநகர் போட் ஒவ் ஸ்பெய்னில் நடந்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், 2013இல் ஹம்பாந்தோட்டையில் 23ஆவது உச்சி மாநாட்டை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது அந்த முடிவுக்கு இலங்கை எதிர்ப்புகள…

  6. ஆனால் போரின் போது ஒருவன் இறந்து விட்டால் அவன் எதிரிப் படையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனின் சடலத்துக்கு உரிய மரியாதை வழங்கப்படுவது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஓர் இராணுவ மரபு. 1996 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டை ஏற்கனவே கைப்பற்றிய அரச படையினர் சத்ஜெய நடவடிக்கை மூலம் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சியை நோக்கி முன்னேற முயன்ற நாள்கள் அவை. அப்போதுதான் வட இலங்கையின் கிழக்கு முனையில் ஒரு பூகம்பம் வெடிக்கிறது. விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் ஒன்று பொங்கியெழுந்து முல்லைத்தீவு இராணுவத்தளம் மீது பாய்கிறது. யாழ்.குடாநாட்டைக் கைபற்றிய வெற்றியின் மமதை சிதறடிக்கப்பட்டு முல்லைத்தளம் முற்றாகவே நிர்மூலம் செய்யப்படுகிறது. …

  7. கனடாவுக்குள் ஏதிலியெனப் புகலிடம் தேடிய ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்க்கு சமீபத்தில் ஒரு பேட்டியை விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசத் தொடர்பாளராக இருந்த கே.பியென்கிற குமரன் பத்மநாதன் வழங்கியிருந்தார். இப் பேட்டியில் தான் தோன்றித்தனமாக தமிழீழ விடுதலை குறித்தும் அதற்காகப் போராடிய போராளிகள் குறித்தும் கே.பி. உளறி இருக்கிறார். பத்திரிகையாளர் ஜெயராஜ் சில தசாப்தங்களாகவே தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருவதுடன், சிறிலங்காவின் மறைமுக தூதுவராகவே கனடாவில் இயங்கி வருகிறார். கே.பி. கைது செய்யப்படுவதற்கு முன்னரே நல்லதொரு உறவை ஜெயராஜ் கே.பியுடன் பேணி வருகிறார். தாய்லாந்தில் வசித்து வந்த கே.ரி.ராஜசிங்கம் போன்ற தமிழர்களைப் போன்…

    • 3 replies
    • 1.4k views
  8. கட்டாக்காலி நாய்பிடிகாரர் போல பல்கலை மாணவர்களை நடுறோட்டில் வைத்து அடித்து, விரட்டிய பின்னரும் கூட ஆட்சியாளர்களின் வெறி அடங்கிய பாடாகத் தெரியவில்லை. பிரச்சினைக்கான வேர்களைப் பிடுங்குவதன் மூலம் பல்கலை மாணவருக்கு பயம் காட்டும் பாணியில் அதிகார ஏவலாளிகள் இறங்கிவிட்டார்கள். போர் முடிவுக்கு வந்து புலிகளைஒழித்து விட்டதாக அரசு அறிவித்த பின்னரும் அதற்கான தலையிடிகள் வெவ்வேறு ரூபங்களில் தொடரவே செய்தன. சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலிகள், புலம்பெயர் தமிழர் ஆர்ப்பாட்டங்கள், ஐ.நாஅறிக்கைகள், ஜெனிவாத்தீர்மானம் என்று ஓயாது அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த பேரினவாதிகளுக்கு யாழ்.பல்கலை மாணவர்களும் தீராத் தலைவலியாக மாறியிருந்தார்கள். குறிப்பாக கார்த்திகை27 இல் எப்படியேனும் பல்கலை…

  9. போரில் உயிரிழந்த சிங்களப் படைகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்று நிகழ்வை நடத்தமுடியும் என்றால், தமிழ் மக்களுக்காகவே தமது உயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கு தமிழ் மாணவர்கள் ஏன் அஞ்சலிசெலுத்தக் கூடாது? ஐயோ அம்மா ! அடிக்காதேங்கோ சேர் ! இந்தக் காட்டுக் கத்தல்களை காதில் வாங்காத படைச்சிப்பாய்கள் தாக்குவதற்காகவே களமிறக்கப்பட்டது போல தொடர்ந்து தாக்கிக் கொண்டேயிருந்தார்கள். செத்த பாம்பை அடிப்பது போல் தனித்து மாட்டுப்பட்ட ஒருவன் மீது கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தமது வீரத்தைக் காட்டினார்கள். தமிழர்களது உணர்வுகளைச் சீண்டிப் பார்த்து அதனால் வந்த விளைவுகளை தென்னிலங்கை மறந்து விட்டது. அதனால் மீண்டும் தமிழர்களது தமிழ் மாணவர்களது உணர்…

    • 2 replies
    • 798 views
  10. யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக ,திட்டமிடப்பட்ட வகையில் பல்கலைகழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலானது , தொடரும் இனவழிப்பு அவலங்களின் மற்றுமோர் வடிவம், கட ந்த வருடம் அக்டோபர் மாதம் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் பத்திற்கும் மேற்பட்டோரால் தலையில் தாக்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இம்முறையும் இரு வேறு பீடங்களை சேர்ந்த மாணவர் ஒன்றியத் தலைவர்கள் இருவர், ஏனைய ஜந்து மாணவர்களும் கைது செய்யப்பட்டுளார்கள் .இவர்கள் அனைவரும் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளில் முன் நின்று செயற்பட்டிருக்கிறார்கள்.இவர்களின் பெயர் விபரங்கள் பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களோடு இருப்பவர்களாலேயே காவ…

  11. தென்னாபிரிக்க மத்தியஸ்தம்: பிரச்சினையை தீர்க்கவா? கால அவகாசத்தைக் கொடுக்கவா? முத்துக்குமார் இந்தியாவும், நோர்வேயும் ஏறிய குதிரையில் தென்னாபிரிக்காவும் ஏறத்தொடங்கியுள்ளது. அரசின் பிரதிநிதிகள் தென்னாபிரிக்கா சென்று வந்த பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. கூட்டமைப்பினர் ஜனவரி மாதமளவில் தென்னாபிரிக்கா செல்லவுள்ளனர். தென்னாபிரிக்காவை களத்தில் இறக்கிவிட்டமை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் இரண்டாவது முயற்சி. முதலில் நோர்வேயைக் களத்தில் இறக்கிவிட்டு தோல்வியடைந்தனர். தற்போது தென்னாபிரிக்காவை களத்தில் இறக்கி சில முயற்சிகளை செய்கின்றனர். இதிலும் வெற்றி கிடைக்கும் என்பதற்கான சமிஞ்ஞைகள் தெரியவில்லை. மேற்குலகத்திற்கும்…

  12. வருஷா வருஷம் வரும் கார்த்திகை 27 ஆம் திகதியை இலங்கைத் தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்துபோக மாட்டினம் பாருங்கோ... அந்த நாள் மக்கள் உணர்வுகளோடு கலந்திட்ட ஓர் நாள். எவ்வளவுதான் அடக்குமுறை வந்தாலும் தடைகள் வந்தாலும் அந்த நாளை தமிழ் மக்கள் மனங்களிலிருந்து எடுத்துவிடமுடியாது பாருங்கோ.... அடிக்க அடிக்கத் தான் கத்தியும் கூராவது போல் அந்த நாளில் அதை இல்லாதொழிக்க அரங்கேற்றப்படும் அடாவடிகளும் சண்டித்தனங்களும் மீண்டும் மீண்டும் அதனை நினைவுபடுத்தவே செய்யும். வன்முறைகளால் தமிழனின் மன உணர்வை மாற்றிவிடலாம் எண்டு சிங்களத் தரப்பினர் இன்னுமும் தான் நம்பிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்குப் பாருங்கோ... தந்தை செல்வா காலத்திலிருந்து ஆயுதப் போராட்டம் வெடித்துக் கிழம்பி அது தணிந்து போ…

    • 0 replies
    • 473 views
  13. [size=4]உலகத் தமிழினம் மிக வேதனையோடு குரல் எழுப்புகின்றது. பல நாடுகள் தமிழர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றன. தமிழர்களை முன்வைத்து சதுரங்கம் ஆடுகிறார்கள். அரசியலா, அங்கும் தமிழர்களை முன்னிறுத்துகிறார்கள். ஐ.நா. நிபுணர்குழு: முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையைக் குறிப்பாகச் சொல்ல முடியாது. இருப்பினும் நாற்பதாயிரமாக இருக்கலாம்.[/size] [size=4]சிறிலங்கா: (சிறிது நாள் கழித்து) சரி, உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம்… ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்…[/size] [size=4]பி.பி.சி. தமிழர்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க ஐ.நா. தவறிவிட்டது என ஐ.நா. ஆய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.[/size] [size=4]ஐ.நா. ஆய்வாளர்: சிறிலங்காவில் ஐ.நா.வ…

  14. கனடாவுக்குள் ஏதிலியெனப் புகலிடம் தேடிய ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்க்கு சமீபத்தில் ஒரு பேட்டியை விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசத் தொடர்பாளராக இருந்த கே.பியென்கிற குமரன் பத்மநாதன் வழங்கியிருந்தார். இப் பேட்டியில் தான் தோன்றித்தனமாக தமிழீழ விடுதலை குறித்தும் அதற்காகப் போராடிய போராளிகள் குறித்தும் கே.பி. உளறி இருக்கிறார். [size=4]பத்திரிகையாளர் ஜெயராஜ் சில தசாப்தங்களாகவே தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருவதுடன், சிறிலங்காவின் மறைமுக தூதுவராகவே கனடாவில் இயங்கி வருகிறார். கே.பி. கைது செய்யப்படுவதற்கு முன்னரே நல்லதொரு உறவை ஜெயராஜ் கே.பியுடன் பேணி வருகிறார்.[/size] [size=4]தாய்லாந்தில் வசித்து வந்த கே.ரி.ராஜசிங்கம் …

    • 82 replies
    • 4.5k views
  15. [size=4]தற்போது விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிரதான ஈகைச்சுடரினை ஏற்றுகின்றார். சமநேரத்தில்... காற்றலையில் மிதந்து வரும் இந்த அறிவிப்பின் கனதி வெறுமனே வார்த்தைகளால் விவரிக்கும் அளவுடையதல்லவே.[/size] [size=2] [size=4]நேற்றும் கூட ஓயாமல் நினைவுகூர்ந்த இந்த வார்த்தைகளும் அந்த நொடிப்பொழுதுகளும் கண்காணாத இடம் புரியாத இவ்வுலகின் புள்ளியொன்றுக்கு புலம் பெயர்ந்துள்ளமையைத் தவிர வேறெந்தப் புறமாற்றமும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளும் பக்குவம், ஈழத்தமிழர் உணர்வெழுச்சி சுமக்கும் நெஞ்சங்களின் காலக்கடமைகளில் ஒன்று.[/size][/size] [size=2] [size=4]"சுலபமாக மறந்துவிடும், வேகமாக மரத்துவிடும்'' நினைவுகளல்ல நாம் சுமப்பவை என்பதை நிரூபிப்பதற்கு …

    • 0 replies
    • 824 views
  16. [size=5]“தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்” என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல.[/size] [size=4]இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது. தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம் உருவாக்கியது ஆகும்.[/size] [size=4]அவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது.[/size] [size=4]அருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு பூஜ்யம். அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுக்க கொழும்புவிலும் மேல்தட்டு மக்களுடன் இருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் மக்கள் ஆதரவென்பது அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இறுதியில் அவர் கொள்கைகளும் கொலையாகி வெகுஜன ஆதரவு இல்ல…

  17. [size=5]மூன்று மாவீரர்தின அறிக்கைகள் மீதான பார்வை[/size] [size=4]வழமைபோல இம்முறையும் மாவீரர்தினத்தன்று மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன அவையாவன : 1. தேசிய மாவீரர்நாள் அறிக்கை 2012 தமிழீழ விடுதலைப் புலிகள் 2. மாவீரர் நாள் அறிக்கை தலைமைச் செயலகம் 3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் நாள் அறிக்கை இந்த மூன்று அறிக்கைகளையும் தயாரித்தவர்களின் எண்ண ஓட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கின்றன, ஆனால் கொழுக்கட்டைக்கும், மோதகத்திற்கும் உள்ள வேறுபாடுபோல உருவ வேறுபாடுகள் மட்டும் தெரிகின்றன. இந்த மூன்று அறிக்கைகளிலும் மூன்று முக்கிய பிரிவுகளாக நோக்கலாம் : 01. அறிக்கையின் முதற் பகுதி விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் புகழ்..[/size] [size=4]02. இரண்டா…

    • 2 replies
    • 894 views
  18. இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் சுமார் ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்களை ஒருங்கிணைக்கின்ற அமைப்பாக உள்ள பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொடர் முயற்சியால் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 80 பேர் வரை உறுப்பினராக உள்ள தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக்குழு (All Party Parlimentary Groups for Tamils) உருவாகியுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்திலேயே, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை குறித்து ஒரு சர்வதேச சுயாதின விசாரணை கோரி (International Independent Ivestigaion) உலகத் தமிழர் மாநாட்டை கடந்த 7,8,9-ஆம் தேதிகளில் லண்டன் மாநகரில் நடத்தினர். [size=3][size=4]இந்த மாநாட்டி…

    • 0 replies
    • 736 views
  19. [size=5]தமிழர்களின் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராகிறதா?[/size] [size=4]-கே.சஞ்சயன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண அரசாங்கம் தவறினால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அரசியல்தீர்வு ஒன்றை அடைவதற்காக தனது உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளதாக அவர் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டிருந்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான முயற்சிகள் எதுவுமே இப்போது முன்னெடுக்கப்படாத சூழலில், இந்த எச்சரிக்கை முக்கியமானதொன்றாகவே கருதப்படத்தக்கது. ஏனென்றால், போர் முடிவுக்கு வந…

    • 2 replies
    • 776 views
  20. சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு தீர்வு இணைப்பாட்சி நிர்வாகமே - இந்திய அரசறிவியல் பேராசிரியர் [ ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012, 09:18 GMT ] [ நித்தியபாரதி ] இணைப்பாட்சி [federal] நிர்வாகத்தை படிப்படியாகச் செயற்படுத்தி, அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிர்வாகக் கட்டமைப்பை மீளவரையறுக்கும் போது மட்டுமே சிறிலங்காவில் நிலவும் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு The New Indian Express ஆங்கில ஊடகத்தில், டெல்லி Jawaharlal Nehru பல்கலைக்கழகத்தை சேர்ந்த அரசறிவியல்துறைப் போராசிரியர் Anuradha Mitra Chenoy* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.…

  21. [size=4]மண்ணில் விழும் வித்துக்கள் அனைத்தும் முளைத்து மரமாக வேண்டும் என்ற காரணத்துடனேயே விழுகின்றன. அவற்றில் சில முளைத்து விருட்சமாகி விட பல ஏனோ முளைத்து வளராமல் வளர்ந்தும் பயன்தராமல் போய்விடுகின்றன.[/size] [size=2][size=4]இயற்கையின் இந்தக் கொடை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. விழுந்த வித்துக்கள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. முளைத்தவையெல்லாம் விருட்சமாகி விடுவதில்லை என்றாலும் ஒரு நோக்கத்துக்காக விதைக்கப்பட்ட வித்துக்கள் சரியாகப் பராமரிக்கப்பட்டு பயன்பெறுதலை நோக்காகக் கொண்டு வளர்க்கப்படுகின்றன. இயற்கையின் தத்துவத்தை மீறி அபரிமிதமாக மனிதனால் எதையும் சாதித்து விட முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. சமய பண்பாட்டு பழக்கங்களுக்கு கட்டுப்பட்டவர…

    • 3 replies
    • 787 views
  22. அஜ்மல் கசாப் தூக்கு : இந்திய அரசின் இன்னொரு சாதனை ! - அ.மார்க்ஸ் சாதனை ! ஆமாம், அப்படித்தான் இந்திய அரசு பீற்றிக்கொள்கிறது. 2008 நவம்பர் 27 தொடங்கி கடும் பாதுகாப்புடன் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்த இளம் கைதியை, 110 கோடி இந்திய மக்களுக்கும் தெரியாமல், மூன்று நாட்களுக்கு முன் புனேயிலுள்ள எரவாடா சிறைக்குக் கொண்டுசென்று நேற்று (நவம்பர் 21) காலை ஏழரை மணிக்குத் தூக்கிலிட்டு, மதியத்திற்குள் சிறை வளாகத்திலேயே புதைத்துக் கதை முடித்தது குறித்து இந்திய அரசு அப்படித்தான் பெருமை கொள்கிரது. இந்திய மக்களுக்கு என்ன, மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் கூடத் தெரியாதாம் என்றும் செய்திகள் கசியவிடப் படுகின்றன. ‘ஆபரேஷன் எக்ஸ்’ என இந்த இரகசியத் தூக்கிற்குப் பெயரிட்டு, …

    • 2 replies
    • 961 views
  23. [size=4]கொழும்பு கடற்கரையோரங்களில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகள் தொடக்கம், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படும் புதிய உந்துருளிகள்[/size] [size=2] [size=4]மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் வரையான பல்வேறு புதிய உற்பத்திப் பொருள்களின் பயன்பாடு, இலங்கை அறிவித்தது போன்று ஆசியாவின் தற்போதைய முன்னணிச் சந்தையாக கொழும்பு மாறிவருவதைக் காண்பிக்கின்றது.[/size][/size] [size=2] [size=4]ஆனால் இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் கூட இங்கே தனியார் முதலீடுகள் போதியளவில் மேற்கொள்ளப்படவில்லை. பொருளாதாரத் துறையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கைக்கொண்டு வரும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையில் தனியார் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.