அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
Published By: VISHNU 09 JAN, 2024 | 02:43 PM சத்திய மூர்த்தி ஒரு வருடத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டின் அரகலய சமூகப் புரட்சியின் ஆரம்பமா அல்லது குறிப்பாக ஆயுதப் படைகள் (வேண்டுமென்றே?!) தங்களின் கடமையைச் செய்யத் தவறியதால் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடா என ஒரு பொது விவாதம் உருவாக ஆரம்பித்துள்ளது. ஒரு வகையில், இது ஓர் கல்விசார் பயிற்சி அல்லது நிகழ்வுக்கு பின்னரான அறிக்கை மட்டுமே, ஆனால் அத்தகைய பயிற்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளதுடன், அதை ஊக்கப்படுத்தாமல் விடக்கூடாது. பாராளுமன்றத்தில் அண்மையில், "ஆளும்" பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் ஒரு தடவை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல…
-
- 1 reply
- 370 views
- 1 follower
-
-
அரச ஊழியமும் பொருளாதாரமும் எதிர்காலமும் என்.கே. அஷோக்பரன் இன்று இலங்கையின் ஏறத்தாழ 1.3 மில்லியன் (13 இலட்சம்) அரச ஊழியர்கள் சேவையில் இருக்கிறார்கள். இதைவிட அரச ஓய்வூதியம் பெறுவோர் கிட்டத்தட்ட 659,000 பேர் இருக்கிறார்கள். இன்றைய இலங்கையின் பாதீட்டில் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் மீளெழும் செலவுகளில் கணிசமான விகிதம் அரச ஊழியர்களின் ஊதியத்துக்கும் வருடாந்த ஊதிய உயர்வுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்கும் செலவாகின்றன. இதைத் தவிர, அரச நிறுவனங்களையும் திணைக்களங்களையும் நடத்துவதற்கான செலவுகள் வேறானவை. அரச வருமானத்தின் பெரும்பகுதி இந்த மீளெழும் செலவுகளுக்கே செலவிடப்படுவதால், அரச வருமானத்தில் மூலதனச் செலவுக்கான பங்கு மிகக் குறைவான…
-
- 0 replies
- 447 views
-
-
அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறைப்பு; யார் விட்ட பிழை? புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை (30) முன்வைத்த இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60ஆக நிர்ணயிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரச மற்றும் அரச சார் நிறுவனங்கள் பலவற்றில், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை 65ஆகக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், 60 வயதைக் கடந்துவிட்ட அனைத்து அரச ஊழியர்களும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியோடு, ஓய்வுபெற்றுச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவ…
-
- 0 replies
- 328 views
-
-
-
- 2 replies
- 677 views
- 1 follower
-
-
அரச தலைவர் தேர்தலும் -சிறுபான்மையின மக்களும்!! எதிர்வரவுள்ள அரச தலைவர் தேர்தலில் இம்முறை சிறு பான்மையின மக்கள் அக்கறை காட்டுவார்களென எதிர்பார்க்கமுடியாது. கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வுககு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றவர்கள் சிறுபான்மையின மக்களே என்பதை எவருமே மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் இம்முறை அவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை. அடுத்த அரச தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இதுவரை முடிவு இல்லை மகிந்த அணியைப் பொறுத்…
-
- 0 replies
- 401 views
-
-
அரச தலைவர் தேர்தலில் மகிந்த தரப்பு வேட்பாளர்? அரச தலைவர் தேர்தலில் மகிந்த தரப்பு வேட்பாளர்? அடுத்த அரச தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்கள் கால அவகாசமுள்ளது. ஆனால் அது குறித்த வாதப் பிரதிவாதங்கள், எதிர்வு கூறல்கள் என அரசியல் நிலமை இப்பொழுதே பரபரப்பாகி வருகின்றது. இன்றைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குற…
-
- 0 replies
- 594 views
-
-
அரச தூண்டுதலினால் உருவாகும் இனவாதம் மற்றும் பயங்கரவாதத்தினை எதிர்க்குமாறு இலங்கை மக்களை வேண்டுகிறோம்-விடுதலை இயக்கம் இன்னுமொரு முறைவழியான இனவாத மற்றும் ஒடுக்குமுறையின் வெளிப்பாடாக சிவில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவுத் தூபியை அழிக்கும் செயலுக்கு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்நினைவுச்ச்சின்னமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்டது. ஜனவரி 8 அன்றிரவு அழிபாடுகளை நிரவல் எந்திரத்தின் மூலம் கொண்டுசெல்வதை புகைப்படங்களில் காணமுடிகின்றது. இறந்தவர்களுக்கான நினைவினை மேற்கொள்ளும் தமிழ் மக்களின் உரிமையை தற்போதைய மற்றும் முன்னைய அரசாங்க…
-
- 1 reply
- 568 views
-
-
25 JUN, 2025 | 09:14 AM இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அண்மைய ஒரு தீர்ப்பில் சுயாதீனமான அரச நிறுவனங்கள் வகிக்க வேண்டிய பாத்திரத்தை எடுத்துக் கூறியிருக்கிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றிய தனது கருத்துக்களை சுவரொட்டி மூலம் வெளிப்படுத்தியமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட முஹம்மட் லியாவுதீன் முஹம்மட் ருஸ்டியின் வழக்கில் கோட்பாட்டு அடிப்படையிலான தலையீட்டைச் செய்தமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை தேசிய சமாதான பேரவை வெகுவாக மெச்சுகிறது. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதனாலும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதனாலும் தோன்றுகின்ற ஆபத்துக்களை இந்த வழக்கு தெளிவாக வெளிக்காட்டுகிறது. ருஸ்டியின் கைது இன, மத அடிப்படையிலேயே இடம்பெற்றிருக்கிறத…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா? March 1, 2025 — கருணாகரன் — அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியில் சமூக, அரசியல் மட்டத்திலும் பொருளாதார வட்டாரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. “இது ஒரு மாறுதலான வரவு செலவுதிட்டம். மக்கள் நலன், தேசியப் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை முன்னிலைப்படுத்தியதாக இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறது அரசாங்கம். அரசாங்கத்தை ஆதரிப்போரின் கருத்தும் இதுவே. ஆனால், “இதில் எந்தப் புதுமையும் இல்லை. ஐ.எம். எவ்யையும் ரணில் விக்கிரமசிங்கவையும் கடந்து எந்தப் புதுமையையும் காணமுடியவில்லை. ஐ.எம்.எவ் – ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டு வடிவத்தின் இன்னொரு பிரதிமையே இந்த வரவு செலவுத் திட்டம்” என்கின்ற…
-
- 0 replies
- 267 views
-
-
அரசமைப்பில் மக்கள் மய்யத் ‘திருத்தம்’ அவசியம் மொஹமட் பாதுஷா / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:00 அரசமைப்பில் இன்னுமொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில், அரசாங்கம் துரிதகதியில் களமிறங்கி இருக்கின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி நிறுவப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறுவதற்கு முன்னரே, 19ஆவது திருத்தத்தை நீக்கும் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திருத்தச் சட்டமூலம், அடுத்த மாதம் சபைக்கு வரும் என எதிர்பார்க்கப…
-
- 0 replies
- 475 views
-
-
அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும் -என்.கே.அஷோக்பரன் “சிறந்ததை எதிர்பாருங்கள், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடுங்கள், வியப்படையத் தயாராக இருங்கள்” என்றார் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் டெனிஸ் வெயிட்லி. இன்றைய சூழலில் சிறந்ததை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தாங்கிக்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டி, சூழல் ஏற்பட்டுள்ளது என்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. சுதந்திர இலங்கையின் எந்தவோர் அரசியலமைப்பின் உருவாக்கத்திலும் தமிழ்த் தேசத்தின் பங்கு உள்வாங்க ப்படவில்லை என்பதுதான், பட்டாவர்த்தனமான உண்மை. சோல்பரி அரசியலமைப்பு என்பது பிரித்தானியர்கள் நீங்கள் சிறுபான்மையினர், உங்களுக்கு பிரிவு 29(2) த…
-
- 1 reply
- 669 views
-
-
அரசமைப்பு அரசியல் Ahilan Kadirgamar அரசியல் தீர்வு தொடர்பாக, நாடு முழுவதிலும் உள்ள மக்களிடத்தில், பெருமளவுக்கு ஆர்வம் இல்லாமலிருப்பதற்கான காரணம் என்ன? தெற்கிலும் வடக்கிலும் உள்ள பிற்போக்கான சக்திகள், பொதுத் தளத்தில் தமது ஆதிக்கத்தை உயர்த்தியிருப்பதோடு, அரசமைப்புச் சீர்திருத்தச் செயற்பாடுகளை நிராகரிப்பதில் முன்னேற்றம் காண்பது எப்படி? அரசாங்கத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலும், அரசியல் தூரநோக்குப் போதாமலிருப்பது தான் காரணமென நான் வாதிடுவேன். மக்களுடன் கலந்துரையாடி, அரசியல் தீர்வு தொடர்பாக மக்களைச் சென்றடையாமல், அரசாங்கம் மாற்றப்பட்ட பின்னர் 3 ஆண்டுகள் வீணாக்கப்பட்டிருக்கின்றன. அதனோடு சேர்…
-
- 0 replies
- 744 views
-
-
அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலமும் கட்சித்தாவல்களும் -என்.கே. அஷோக்பரன் அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலம், இலங்கை நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி, 156 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 65 பேர் எதிர்த்துள்ளனர். இதில், பிரதானமாக இரண்டு விடயங்கள், பொது வாதப்பிரதிவாதத்தின் பொருளாக மாறியிருக்கின்றன. முதலாவது, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகள். இரண்டாவது, கட்சித்தாவல்கள். 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகளைப் பற்றி, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் விமர்சனக் கலந்துரையாடல்களும் பாரம்பரிய ஊடகங்களிலும் சமூக ஊடக வௌியிலும் குவிந்து கிடக்கின்றன. 20ஆம் திருத்தச் சட்…
-
- 1 reply
- 661 views
-
-
அரசமைப்புச் சபை சட்டபூர்வமானது. ஆனால், சட்டத்தின் நோக்கத்துக்கு முரணானது எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 பெப்ரவரி 27 புதன்கிழமை, மு.ப. 01:16 Comments - 0 நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காகவென உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சபை, பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இரத்துச் செய்யப்பட்ட அரசமைப்புச் சபையை, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், மீண்டும் கொண்டு வருவதற்காக, 2015ஆம் ஆண்டு, பெரிதும் முயன்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, அதை இப்போது, கடுமையாகச் சாடி வருகிறார். அதேவேளை, 2010ஆம் ஆண்டு, பழைய அரசமைப்புச் சபையை இரத்துச் செய்வதற்கு, மஹிந்த ராஜபக்ஷவுக்கு…
-
- 0 replies
- 654 views
-
-
அரசாங்க வேலைவாய்ப்பு எனும் பொறிக்குள் சிக்க வைக்கப்படும் தமிழ் இளையோர்கள்
-
- 1 reply
- 469 views
-
-
அரசாங்கத்திடம் கூட்டமைப்பு முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டதா அல்லது இணங்கிச் செல்வதற்கான இரகசிய உடன்பாடு ஏதும் உண்டா? - யதீந்திரா வடக்கு கிழக்கிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நியமனக் கடிதங்கள், குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிறிதரன், சிவமோகன், சாள்ஸ் நிமலநாதன் மற்றும் சிறிநேசன் ஆகியோரே குறித்த இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தை மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவ…
-
- 0 replies
- 489 views
-
-
அரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மார்ச் 20 புதன்கிழமை, பி.ப. 06:40 Comments - 0 அரசாங்க தூதுக் குழுவின், குழுக்களின் ஜெனீவாப் பயணம், விசித்திரமானதொரு நாடகமாகவிருந்த போதிலும், இறுதி நேரத்தில் அது தவிர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில் ஒரு தூதுக்குழுவும் ஜனாதிபதியின் சார்பில் மற்றொரு குழுவுமாக இரண்டு குழுக்கள், முன்னர் ஜெனீவா செல்லவிருந்தன. இப்போது ஒரு குழு தான், ஜெனீவா சென்றுள்ளது. 2015ஆம் ஆண்டு, அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கி, நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற, அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் தேவை என்கிறது. …
-
- 0 replies
- 829 views
-
-
அரசாங்கத்தின் அலட்சியமும் கொரோனாவின் மீள்பரவலும் புருஜோத்தமன் தங்கமயில் இலங்கை எப்போதுமே ஆச்சரியங்களால் நிறைந்த நாடு. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலகம் பூராவும் சுகாதாரத்துறையினர் தலைமை தாங்கிக் கொண்டிருக்கையில், இலங்கையில் இராணுவம் தலைமையேற்றிருக்கின்றது. சுகாதார அமைச்சரோ, மத அனுஷ்டானங்களை நடத்தி, பானையில் அடைக்கப்பட்ட புனித நீரை ஆற்றில் கொட்டுவதில் கவனமாக இருக்கிறார். பிரதமரோ, மத - மார்க்க நிறுவனங்களிடம் கொரோனா வைரஸுக்கு எதிரான பிரார்த்தனைகளை முன்னெடுக்குமாறு கோருகிறார். ஜனாதிபதியோ, கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பொதுமக்களைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ்ஸுக்கு எதிரான நடவடிக்கைகளில், முதல் தரப்பாக இருக்க வேண்டிய வைத்திய…
-
- 1 reply
- 869 views
-
-
அரசாங்கத்தின் தந்திரோபாயம் செல்வரட்னம் சிறிதரன் பொறுப்பு கூறுவதற்காக மேலும் கால அவகாசம் தேவை என கோருவது பிரச்சினைகளை மழுங்கடித்து, அவற்றுக்கான தீர்வுகளை இல்லாமற் செய்வதற்கான தந்திரோபாயச் செயற்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது. அரசாங்கம் கோருகின்ற கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்குவதாக இருந்தால், அந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதிலும், போர்க்காலச் செயற்பாடுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்வதிலும் நல்லாட்சி அரசாங்கம் உறுதியாகவு…
-
- 0 replies
- 370 views
-
-
அரசாங்கத்தின் நிலைப்பாடென்ன? மொஹமட் பாதுஷா சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குகளாலேயே, இந்த நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதாக, அரசாங்கம் அடிக்கடி சொல்லி வருகின்ற போதிலும், முஸ்லிம்களும் தமிழர்களும், தமது அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற பொருள்பட, ஜனாதிபதியும் பிரதமரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த தேர்தலில், முஸ்லிம் வாக்குகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று, பொதுஜன பெரமுன கருதியிருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு. இருந்தாலும் கூட, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், நிலைமையில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கு உட்பட, நாட்டின் எ…
-
- 0 replies
- 574 views
-
-
அரசாங்கத்தின் போக்கும் மக்களின் சந்தேகமும் நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர், பௌத்த மதத்தை மேலாதிக்கம் கொண்டதாக ஆக்கி, அரசுகள் தமது மனம் போன போக்கில் ஆட்சி நடத் தின. மதச்சாரர்பின்மை கடைப்பிடிக்கப்பட வில்லை. அதேபோன்று சிங்களம் மட் டுமே அரச மொழியென்றும். அதற்கு விசேட அதிகாரமும், உரிமையும் வழங்கப்பட்டிருந்தது. ஏனைய மொழியில் குறிப்பாக தமிழ் மொழி, இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது. அத்துடன், சிறு பான்மை தேசிய இனங்களின் உரிமைகளை, அந்த அரசுகள் மதித்து செயற்படத் தவறியிருந்தன. மோசமான ஒரு யுத்த நிலைமைக்கு நாடு முகம் கொடுப்பதற்கு இத்த கைய ஆட்சிப் போக்கே வழிவகுத்திருந்தது. அனைவரும் சமம். மதச…
-
- 0 replies
- 364 views
-
-
அரசாங்கத்தின் விலக முடியாத பொறுப்பு மொஹமட் பாதுஷா இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கின்றது என, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ள நிலையில், நான்காவது கட்டத்தை அடையமாட்டாது என்று உறுதிபடச் சொல்ல முடியாதுள்ளது. ஆனால், இன்னுமோர் அலையை நாடு தாங்காது என்பதையும் அதே சுகாதார அமைச்சே கூறியுள்ளது. இலங்கையில், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை, இந்தளவுக்குப் பரவியதற்கு, மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணம் என்ற தொனியிலான குற்றச்சாட்டுகள், அரசாங்க அதிகாரிகள் தொடக்கம் ஆட்சியாளர்கள் வரை பலராலும், கடந்த சில நாள்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அரசாங்கம், தனது பொறுப்பிலிருந்தும் பொறுப்புக்கூறலில் இருந்தும், வெளியேறுவதற்கான கதவுகளைத…
-
- 0 replies
- 707 views
-
-
அடுத்தமாதமும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தில் அமெரிக்கா பிரேரணையொன்றை கொண்டுவரவிருக்கிறது. அது இலங்கைக்கு சாதகமானதாக அமையும் என்று கூறுவதற்கில்லை. ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. தமக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதம் அரசாங்கத்திற்கு எங்கிருந்து கிடைத்ததோ தெரியாது. வரவிருக்கும் பிரேரணையை தோல்வியுறக் செய்யவேண்டும் என்று அரசாங்கம் கருதுவதும் அதற்காக சில நாடுகளின் உதவியை நாடுவதும் உண்மைதான். ஆனால் பிரேரணை வராமல் இருப்பதற்காக அல்லது வந்தால் அதற்கு எதிராக பல நாடுகளின் உதவியை பெறுவதற்காக உள்நாட்டில் தாமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் பிரேரணையை த…
-
- 2 replies
- 829 views
-
-
அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்நிலையை அமைச்சரவை மாற்றம் தணிக்கக் கூடிய சாத்தியம் கலாநிதி ஜெகான் பெரேரா கடந்தவாரம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது அரசாங்கத்திற்குள் முக்கியமான பொறுப்புகள் கைமாறியிருக்கின்றன. எந்தவிதமான பிரச்சினையுமின்றி இணக்கமான முறையில் அமைச்சுப் பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றமையும் மாற்றங்களுக்குள்ளானவர்கள் புதிய பொறுப்புகளை நல்லிணக்கத்துடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றமையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான வரவுகளைத் தொந்தரவுக்குள்ளாக்கிக் கொண்டிருந்த பதற்ற நிலை இனிமேல் தணிந்து மேலும் கூடுதலான அளவுக்கு ப…
-
- 0 replies
- 289 views
-
-
அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என்பது உண்மையா, மிரட்டலா? அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களில் 18 பேர், அரசாங்கத்தில் இருந்து பிரிந்து செல்ல இருப்பதாகக் கூட்டு எதிரணி எனப்படும் மஹிந்த ராஜபக்ஷவின் அணியினர் அண்மையில் கூறியிருந்தனர். அவ்வாறு, அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்பவர்கள், தம்மோடு இணையவிருப்பதாகவும் கூட்டு எதிரணியினர் கூறி வருகின்றனர். அதேவேளை, இரண்டு வாரங்களில் அரசாங்கம், நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கப் போவதாக, முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரா…
-
- 0 replies
- 321 views
-