அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
தேசியப்பட்டியல்: ஓர் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு - முகம்மது தம்பி மரைக்கார் அரசியலின் அகராதி விசித்திரமானது; பொது வெளியில் நாம் கண்டு, கேட்டு, கற்றறிந்த சொற்களுக்கு, அங்கு அர்த்தம் வேறாகும். கழுத்தறுப்பு, துரோகம் போன்றவற்றுக்கு அரசியல் அகராதியில் ‘ராஜ தந்திரம்’ என்று பெயராகும். வாக்கு மாறுதல், பொய் என்று அங்கு எதுவுமில்லை. அவற்றினை ‘சாமர்த்தியம்’ என்றுதான் அரசியல் அகராதி விவரிக்கிறது. சாதாரண குடிமகனின் வலிகளுக்கும்,கண்ணீருக்கும் அரசியல் அகராதியில் அர்த்தங்கள் எவையுமில்லை. பொதுத் தேர்தல் நடந்து 16 மாதங்கள் கடந்து விட்டன. முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, யாரை நியமிப்பது என்கிற விவகாரத்துக…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள் February 12, 2021 — கருணாகரன் — சுதந்திர தினத்தன்று (04.02.2021) வட்டுக்கோட்டையில் ஒரு முதியவர் ஒரேயொரு கத்தரிக்காயை 90 ரூபாய்க்கும், ஐம்பது கிராம் புளியை 200 ரூபாய்க்கும், 50 கிராம் பச்சை மிளகாயை 50 ரூபாய்கும் வாங்கிக் கொண்டு செல்வதைக் கண்டேன். அதற்கு மேல் வாங்குவதற்கு அவருக்குக் கட்டுப்படியாகாது. அந்தளவுக்கு ஒவ்வொரு பொருளும் உச்சவிலையிலிருந்தன. ஆனால், அவர் வாங்க வந்தது இதையும் விட அதிகமாக. அதற்கு அவரிடம் கொள்வனவுச் சக்தி –வருமானம் – இல்லை. திரும்பி வரும் வழியில் இயக்கச்சியில், தன்னுடைய வீடிருந்த காணியைத் தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார், காமாட்சி அக்கா. அந்தக் காணியில் பதின்மூன்று ஆண்டு…
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-
-
அரசியல் சுயநலத்தைப் புடம்போட்டுக் காட்டும் ஆளும் கட்சியின் உட்பூசல் -எம்.எஸ்.எம். ஐயூப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆளும் கட்சிக்குள் பலம் இழந்து வருகிறாரா? ஆளும் கட்சிக்குள், அவரை ஒதுக்கித் தள்ளும் நிலை உருவாகி வருகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், அண்மையில் சில சம்பவங்கள் இடம்பெற்றன; இடம்பெற்றும் வருகின்றன. தரை ஓடு போன்ற செரமிக் பொருட்களை இறக்குமதி செய்வதை, அரசாங்கம் ‘கொவிட் 19’ நோயால் ஏற்பட்ட பயணக் கஷ்டங்களின் காரணமாக, கடந்த வருடம் ஜூலை மாதம் தடை செய்திருந்தது. அப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரதமர் அண்மையில் அத்தடையை நீக்கும் வகையில், ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு இருந்தார். ஆனால், ஏற்றுமதி - இறக்குமதி கட்ட…
-
- 0 replies
- 910 views
-
-
திருப்புமுனை யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது ஊழல் குற்றச்சாட்டுக்களையும் ஏனைய மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி அவரை அரசியல் ரீதியாக முடமாக்குவதற்கு முனையவில்லை. தேர்தலில் தோல்வியடைந் தாலும்கூட, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். அதற்கான அடித்தள அரசியல் செயற்பாடுகளை அவர் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றார். நல்லாட்சிக்க…
-
- 0 replies
- 441 views
-
-
ஆட்டம் காணும் தேசிய அரசாங்கம் மக்களின் பல்வேறு வகையான அர்ப்பணிப்புக்கள், தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய நல்லாட்சி அரசாங்கமானது இன்று பல்வேறு சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும், சிக்கல்களுக்கும் முகம் கொடுத்துள்ளது. அதாவது எந்த நேரத்தில் நல்லாட்சி அரசாங்கம் உடையும் அல்லது எந்த நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்லும் என்ற கேள்விகள் தொடர்ச்சியாக அனைவர் மத்தியிலும் எழுந்துகொண்டிருக்கின்றன. அந்தளவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய தேசியக்க…
-
- 0 replies
- 476 views
-
-
கஜன்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் தமிழீழ விடுதலைப் புலிகள், தனிநாடு கோரிப் போராடவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (கஜன்கள் அணி) செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் பேசிய விடயம், கடந்த வாரம் சர்ச்சையானது. அதுபோல, அதேவாரத்தில் வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில், பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவரத் தீர்மானித்திருந்த முன்னணி, இந்திய தூதரக அதிகாரியின் தொலைபேசி அழைப்பை அடுத்து, அந்த ஒத்திவைப்புப் பிரேரணையைக் கைவிட்டது. இது, வடக்கு மீனவர் அமைப்புகளால் நம்பிக்கைத் துரோகமாக விமர்சிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நெருக்கடியான காலப்பகுதியில், (குறிப்பாக, 2010 பொத…
-
- 4 replies
- 827 views
-
-
வடக்குப் பெண்களும் சமூக மாற்றமும் Ahilan Kadirgamar / சிவப்புக் குறிப்புகள் போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் தினசரி வாழ்க்கை, பிரச்சினைகளிலிருந்து பிரச்சினைகளுக்கு, கடனிலிருந்து துஷ்பிரயோகத்திலிருந்து வன்முறைக்கு என, நகர்ந்து செல்கிறது. இந்த நெருக்கடிகளின் பாதிப்புகளை, பெண்களே எதிர்கொள்கின்றனர்: அவர்களது உழைப்பும் நேரமும் சுரண்டப்படுகிறது; அவர்களுடைய சொற்ப உழைப்பும், கடன் சுறாக்களால் உறிஞ்சப்படுகின்றன; அவர்களுடைய குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியவர்களாக அவர்கள் இருக்கின்றனர்; அவர்களுடைய உடல்கள், கட்டுப்பாட்டுக்குள்ளேயே காணப்படுகின்றன. இருந்த போதிலும், தமிழ்த் தலைமைத்துவமும் அ…
-
- 0 replies
- 475 views
-
-
நலத்திட்டம் இலவசமா ? - சுப. சோமசுந்தரம் 'இலவசங்கள்' பற்றிப் பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு (உபயம் : இந்திய ஒன்றிய அரசும் தமிழக நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும்) சற்றே ஓய்ந்திருக்கிறது. சற்று தாமதமானாலும் கூட நாமும் பேசாவிட்டால் எப்படி என்ற எண்ணத்தின் விளைவே இக்கட்டுரை. சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவற்றை தொகுத்தளிப்பதாக அமையலாம். புதிதாக நம் சிந்தனையும் சேரலாம். எவ்வாறாயினும் ஒரே கருத்தைச் சொல்வதில் ஒவ்வொருவருக்கும் தனியானதொரு பாணி என்று உண்டே ! இதோ : வளர்ச்சித் திட்டம் எதுவும் பற்றி எட்டு ஆண்டுகளாக சிந்தித்தே பார…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
வடக்கில் தேர்தல்களும் தமிழ் அரசியலும் சிகப்பு குறிப்புகள் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், இலங்கை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தல்கள் காரணமாக, ஆளும் தேசிய அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டு, அரசாங்கம் பிளவடைவது, கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ராஜபக்ஷவின் பரப்பியல்வாதத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய எழுச்சியைத் தொடர்ந்து, தேசியவாத அரசியல், மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஆளும் அரசாங்கத்தின் பொருளாதாரத் தோல்விகள் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்க, அரசமைப்பு ரீதியான அரசியல் தீர்வுக்காக 2015இல் கிடைக்கப்பெற்ற பொன்னான வாய்ப்பு, கிட்டத்தட்ட முழுவதுமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 427 views
-
-
கண்டி கலவரத்தின் பின்னணி என்ன? கலவரங்களை வழிநடத்தியது யார்? #Groundreport இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கண்டி கலவரங்கள் நடந்து ஒரு வாரம் கழிந்துவிட்ட நிலையில், தங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுட்டுள்ளனர். ஆனால், இதுபோன்ற கலவரங்கள் தொடரக்கூடுமோ என்ற அச்சமும் அவர்களிடம் காணப்படுகிறது. இந்தக் கலவரம் எப்படித் துவங்கியது, பின்னணி என்ன? கண்டியின்…
-
- 1 reply
- 924 views
-
-
தமிழ் நாட்டிலிருந்து அங்குள்ள பெண்கள் இயக்கத்தினைச் சார்ந்த பெண்ணிலைவாதியொருவர் ஜுன் மாதம் 23ம் திகதி சர்வதேச விதவைகள் தினத்தினை நினைவுகூரும் ஓர் சிறிய நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார். இது வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் சுமார் 30 பெண்களின் பங்கேற்றலுடன் நடந்தது. குறிப்பிடக்கூடத் தேவையில்லாத சம்பவம். ஆனால், துரதிர்~;டவசமாக வட மாகாணத் தேர்தல் இடம்பெறப்போகும் காலத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்த புலனாய்வாளர்களினால் இது ஸ்ரீலங்கா அரசினை நிலைகுலையச் செய்ய தமிழ்நாடு செய்கின்ற சதித்திட்டம் என்று தலைமையகத்துக்கு அறிக்கையிடப்பட, ஆரம்பித்தது சதிராட்டம். பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு இந்த விடயம் கையளிக்கப்பட்டு உடனேயே கு…
-
- 4 replies
- 813 views
-
-
ஊரறிந்த வழக்கும் உலகப் பஞ்சாயத்தும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பற்றிய தாருஸ்மான் அறிக்கை ஒரு ஒடுக்கப்பட்ட இனக்குழுமம். அதன் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்கள், அவை பற்றிய அறிக்கை வெளியாகியிருக்கிறது. மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள். ரக்கைன் மாநிலத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள். இவை பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் குழுவொன்று விசாரித்தது. இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் இலங்கை மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். மர்சுக்கி தாருஸ்மான் தலைமையிலான குழுவினர் வரைந்த அறிக்கை. சுருக்கமாக சொன்னால், இன்னொரு தாருஸ்மான் அறிக்கை. கடந்த ஆகஸ்ட் ம…
-
- 0 replies
- 936 views
-
-
மாற்று அணி உடையுமா? ஒட்டுமா? – நிலாந்தன் November 25, 2018 தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்கு கையாளக் கூடிய ஒரே அரசியல் வெளியாக காணப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிதான். இந்தப்பரப்பில் தங்களது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்கள் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்று. மேலும் அவர் ‘இப்போது அரங்கிலுள்ள பெரும்பாலான சக்திகள் Spent Forces தீர்ந்துபோன சக்திகள்’ என்றும் தெரிவித்தார். இப்படிப்பட்ட தீர்ந்து போன சக்தி…
-
- 3 replies
- 1.1k views
-
-
எரித்திரியா தேசிய விடுதலை ஆப்பிரிக்க கண்டத்தில், எந்தவொரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரேயொரு நாடு எத்தியோப்பியா. 1896 ம் ஆண்டு, காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி நடத்திய போரில், எத்தியோப்பியப் படைகளிடம் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை ஏந்தியிருந்த இத்தாலி இராணுவம், வாள், அம்பு-வில், போன்ற புராதன கருவிகளேந்தி போரிட்ட எத்தியோப்பியர்களிடம் தோல்வியுற்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இந்த சரித்திர உண்மையை நம்பித் தான் ஆக வேண்டும். இப்போதே உங்களால் நம்ப முடியவில்லை என்றால், அன்று இந்த செய்தி ஐரோப்பாவில் எத்தகைய அதிர்வலைகளை தோற்றுவித்திருக்கும்? ஐரோப்பியர்கள் அந்த காலனியப…
-
- 1 reply
- 1.3k views
-
-
உலக தமிழர் பேரவையை யார் யார் முன்னின்று நகர்த்துகிறார்கள் என நேரடியாக சொல்லும் ஆய்வாளர். ரணிலின் தேர்தலுக்கான வியூகம். அடுத்த தேர்தல்களில் தமிழ்மக்களின் நாடி பிடித்து பார்க்கும் மேற்கு.
-
- 9 replies
- 1.2k views
- 2 followers
-
-
விக்கியின் கனவு வீணாகிப் போகுமா? Editorial / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, மு.ப. 01:05 Comments - 0 -க. அகரன் மாற்றுக்கருத்து என்ற சொல்லால் தமிழர் அரசியல் களம் நீண்ட காலமாகவே ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தவகையில், ‘மாற்றுக்கருத்து’ என்பது ஒரு கொள்கையுடன் பயணிக்கும் ஒருசாராருக்கு எதிராக, அந்தக் கொள்கையில் நம்பிக்கையற்றவர்களால், பிடிப்பற்றவர்களால் புதியதொரு கொள்கையில் நம்பிக்கை வைத்து, அவ்வழியில் முன்னெடுக்கப்படும் பயணம், பிரசாரப்படுத்தப்படும் கொள்கைகள், மாற்றுக்கருத்து அல்லது மாற்றுக்கொள்கை என வரையறுத்து ஆராயப்படலாம். இதற்கும் அப்பால், குறித்த மாற்றுக்கருத்தை கொண்டு நகரும் தலைமைகளை, மாற்றுத்தலைமைகள் எனப் பொருள்கோடல் கொள்வதானது தமிழ் மக்கள்…
-
- 1 reply
- 782 views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றிய எனது நெடுங்கவிதையின் கரு இதுதான். PLOT OF MY LONG POEM UNDER WRITING -TAMILS OF THE WORLD NEVER FORGET THE BACKGROUND OF THE GENOCIDE 2019 . . Home Minister P Chidambaram said the Sri Lankan government's statement meant that it is end and cessation of hostilities which Indian interlocutors had been urging. - India Today 2009-04-27 , பொய்யெனத் தெரிந்தும் யுத்தநிறுத்தம் என உள்நோக்கத்துடன் அமைச்சர் கிண்டலடித்ததை நம்பி மறைவிடங்களால் வெளிவந்த பல்லாயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொளிக்கபட்ட நிகழ்வை நந்திக் கலம்பகம்போன்ற ஒரு குறுங்காவியமாக எழுதி வருகிறேன். (https://www.indiatoday.in/…/karunanidhi-ends-fast-after-sl-…) …
-
- 0 replies
- 505 views
-
-
உத்தேச அரசியல் யாப்பும் வடகிழக்கு இணைப்பும்" வளவாளராக-சட்ட முதுமானி YLS. ஹமீட்
-
- 0 replies
- 709 views
-
-
சீனாவின் பட்டுப்பாதை ஆராய்ச்சியும் இலங்கையும் உலக பொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர். ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா. பொருளாதாரம் ,அரசியல்,தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை அது மீள்பரிசீலனை செய்யப்போகின்றதோ தெரியவில்லை. எனினும் பண்டைய காலத்தில் வணிகத்தேவைகளுக்காக கடல் மற்றும் தரைப்போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதை தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்திருக்கிறது சீனா. இது தொடர்பான தனது ஆ…
-
- 0 replies
- 1.6k views
-
-
THEORETICAL BOTTLENECK FACED BY THE MUSLIMS. - - V,I,S,Jayapalan Poet முஸ்லிம்கள் எதிர்நோக்கும் முக்கிய கோட்பாட்டு சிக்கல். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் . இது முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலம். முஸ்லிம்களின் நெருக்கடிகளில் கால் பகுதி தற்காலிகமான சலசலப்புகள். இன்னொரு கால் பகுதி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்தது. மிகுதி முஸ்லிம்களின் ஒருமித்த தேசிய நிலைபாட்டை அசாத்தியமாக்குவதில் ஊர்வாதத்த்தின் தொடர் வெற்றிகள் எனலாம். . . சலசப்புகளை புறக்கணிப்பதும் சலசலப்பின் பின்னே பாதகமாக நகர்த்தபடுகிற அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி செயல்படுவதும் முக்கியமானதாகும். ஆனால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் வரலாற்று சிக்கல் முஸ்லிம்களின் தேசிய நலன்களையும் தமிழ் முஸ்லிம்…
-
- 0 replies
- 473 views
-
-
பொருத்து வீடுகள் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல – மொறட்டுவ பல்கலைக்கழக வல்லுனர்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பொருத்து வீடுகள் பலமான அடித்தளத்தையோ அல்லது பலமான கூரை வசதிகளையோ கொண்டிருக்கவில்லை எனவும் நீண்ட காலப் பாவனைக்குப் பொருத்தமற்றவை எனவும் மொறட்டுவப் பல்கலைக்கழக வல்லுனர்கள் தமது தொழினுட்ப ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். லக்சம்பேர்க்கைத் தளமாகக் கொண்ட ‘ஆர்செலோர் மிட்டல்’ என்ற நிறுவனத்தின் இத்திட்டமானது சீமெந்து வீடுகள் போன்று நீண்டகாலம் நிலைத்து நிற்காது எனவும், இந்த வீடுகளை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தவோ அல்லது திருத்தவோ முடியாது எனவும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இப்பொருத்து வீடுகள் காற்றோட்டம் அற்றவை எனவும் அடுப்…
-
- 2 replies
- 552 views
-
-
[size=6]முஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை[/size] [size=3][size=4]Innocence of Muslims என்ற தலைப்பில் ஒரு படத்தின் டிரெய்லர் காட்சி யூட்யூபில் வந்தது. அதனால் உலகத்தில் எங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்துள்ளனர். லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின்மீது மக்கள் தாக்குதல் தொடுத்து அமெரிக்கத் தூதரைக் கொன்றுவிட்டனர். நேற்று இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் பெரும் மக்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. நிலைமைக் கட்டுக்குள் வைக்க, ராணுவம் அழைக்கப்படவேண்டியிருந்தது. [/size] [size=4]சென்னை அண்ணா சாலையில் அமெரிக்கத் தூதரகம் உள்ள பகுதியில் தினமும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையின் காவல்துறை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். தென் மாவட்டங்களில் அடக்குமுறையை வெற்றிகரமா…
-
- 0 replies
- 677 views
-
-
தமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்? நிலாந்தன் கடந்த வாரம் யாழ் மறைக் கல்வி நிலையத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மதகுருமார்களும் பங்கு பற்றியிருந்தார்கள். நிலைமாறு கால கட்ட நீதியை தமிழ் நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்வதும் இது விடயத்தில் சிவில் இயக்கங்களை எப்படிப் பங்காளியாக்கலாம் என்பது பற்றிச் சிந்திப்பதற்குமான இச்சந்திப்பில் ஒரு கிறிஸ்தவ மதகுரு பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்தார்.... 'நீங்கள் பெரிய பெரிய சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள், பெரிய பெரிய அரசியல் கோட்பாடுகளைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆன…
-
- 0 replies
- 427 views
-
-
இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 29 இந்தப் பத்தியாளர், ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதியின் தமிழாக்கம் இதுவாகும். இந்தக் கட்டுரையானது, இலங்கைத் தமிழ் மக்கள், சுயநிர்ணய உரிமை கோரலின் வரலாற்றையும் அதன் சூழலையும் சுருக்கமாக ஆராய்கிறது. அத்துடன், ‘சுயநிர்ணய உரிமை’க்கு உள்ளேயும் வெளியேயும் ஆக, இருவகைக் கருத்தாக்கங்களைச் சுருக்கமாக மறுபரிசீலனை செய்கிறது. அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களின், சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது தொடர்பில், சந்திரசோமா எதிர் சேனாதிராஜா வழக்குத் தீர்ப்பின் அரசமைப்பு சார் முக்கியத்துவத்தை, மதிப்பீடு செய்யவும் முனைகிறது. இலங்கைத் தமிழ் மக்களின் உரிமை கோரல் இலங்கையில், 19…
-
- 1 reply
- 704 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை முதலும் கடைசியுமாக ஒரு பிராந்தியப் பிரச்சினைதான். இரண்டாவதாகத் தான் அது ஓர் அனைத்துலகப் பிரச்சினை. சுமாராக கால் நூற்றாண்டுக்கு முன்பு இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாகியபோது அது ஒரு பிராந்தியப் பிரச்சினையாகவே காணப்பட்டது. அதன் பின் நிகழ்ந்த திருப்பகரமான மாற்றங்களால் அது அதன் தர்க்க பூர்வ விளைவாக ஓர் அனைத்துலகப் பிரச்சினையாக மாறியது. அதில் முதலாவது திருப்பம், ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை. அதன் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதோடு அதன் உயர் தலைவர்கள் இருவரும் இந்தியாவில் சட்டப்படி தேடப்படும் குற்றவாளிகளாகினர். எனவே, ரஜீவ் வழக்கிலிருந்து தொடங்கி புலிகள் இயக்கத்திற்கும் புதுடில்லிக்கும் இடையில் ஒரு சட்டப்பூட்டு உரு…
-
- 0 replies
- 582 views
-