அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
சர்ச்சைக்குரிய இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் October 9, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அன்றைய பிரதமர் டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். கைத்தொழில் துறை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். முதற்தடவையாக பிரதமர் பதவிக்கு வந்த அவர் லேக்ஹவுஸ் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் “அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பத்திரிகை ஆசிரியராகியிருப்பேன் என்று பதிலளித்தார். விக்கிரமசிங்கவுக்கு பத்திரிகை ஆசிரியராக வருவது ஒன்றும் சிரம…
-
- 0 replies
- 447 views
-
-
சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகமும்-Rule of Law and democracy -பா.உதயன் —————————————————————————————————————— ஆக்குவதும் நானே அழிப்பதுவும் நானே என்பது போல் நானே அரசு “l am the state“ என்றான் 1655 இல் பாரிஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரெஞ்சு மன்னர் பதினான்காம் லூயிஸ். ஒரு கையில் எல்லா அதிகாரத்தையும் வைத்திருந்து சட்டம், நீதி, நிர்வாகத்திற்கு (Executive legislative and judiciary) இடையிலான அதிகாரப் பிரிவும் (Separation of power) சமநிலை சட்ட வரையறையும் ( Checks and balances) இல்லாத விடத்தில் தனி நபர் சுதந்திரமும் இருக்கப் போவதில்லை. இவை அனைத்தும் ஒருவர் கையில் இருந்தால் இது ஓர் சர்வாதிகார ஆட்சியே (Authoritarianism ) ஒரு காலத்தில் அரசனுடைய அதிகாரத்தை குறைப்பதற…
-
- 0 replies
- 427 views
-
-
அரோகராப் போராட்டம்? - நிலாந்தன் ஒரு நீதிபதிக்கு நீதி கேட்டுத் தமிழ் மக்கள் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்திலிருந்து தமிழ்ப் பகுதிகளெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். இது குத்துவிளக்குக் கூட்டணியால் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும் ஏனைய கட்சிகளும் அதற்கு ஆதரவைக் காட்டின. அந்தப் போராட்டம் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது சொந்த மக்களின் கவனத்தையும், உலக சமூகத்தின் கவனத்தையும் ஈர்க்கத்தக்க விதத்தில் பிரம்மாண்டமானதாக முன்னெடுக்கப்பட்டதா? மருதனார் மடத்திலிருந்து தொடங்கி யாழ்ப்பாணம் வரையிலு…
-
- 0 replies
- 306 views
-
-
ஜெனிவாவில் எதிரொலித்த முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்..!
-
- 0 replies
- 811 views
-
-
நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் என்.கே. அஷோக்பரன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா திடீரென்று தனது பதவியை இராஜினாமச் செய்தது இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுப்பப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. 23.09.2023 திகதியிடப்பட்ட, நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு முகவரியிடப்பட்ட தனது பதவிவிலகல் கடிதத்தில், நீதிபதி சரவணராஜா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும், அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாலும் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாகவும், குறிப்பிட்டிருக்கிறார்.நீதிபதி சரவணராஜாவின் திடீர் பதவிவிலகலின் முன்னர், அவர் குருந்தூர்மலை வழக்கை விசாரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கானது தேசியளவில் பேசப்பட்ட வழக்காக …
-
- 0 replies
- 348 views
-
-
04/21 தாக்குதல் அன்றும் இன்றும் தேர்தலுக்கான யுக்தி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் தாக்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது. அதாவது, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்வது மாத்திரமே ஒற்றைத் தீர்வு என்கிற விடயம் தென் இலங்கை முழுவதும் பெரும் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டு, வாக்கு அறுவடை நிகழ்ந்தது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியோடு ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்கள். ஆனால், இம்முறை ராஜபக்ஷக்களுக்கு எதிராக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் விவகாரம் முன்னுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. தற்போது, குறித்த தாக்குதல்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்க…
-
- 0 replies
- 766 views
-
-
மற்றொரு ‘அரகலய ’விற்கான சாத்தியப்பாட்டிற்கு எதிராக அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கும் உத்தேச இணையவழி பாதுகாப்பு சட்டம் – கிஷாலி பின்ரோ ஜயவர்த் தன – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு (நட்பாகவோ அல்லது வேறு விதமாகவோ) பதிலடி கொடுத்தார் .அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார். ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும்பிரிட்டனின் முன்னுதாரணங்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் பற்றிய கடுமையான பொது விமர்சனங்களால் வெளிப்படையாகத் தாக்கப்பட்ட ஜனாதிபதி, …
-
- 0 replies
- 264 views
-
-
தேசத்தைக் கட்டியெழுப்புதலும், அதிகாரப் பகிர்வும் 13ஆவது திருத்தமும் தெற்கில் இடம்பெற்ற இரண்டு எழுச்சிகளும், வடக்கில் மூன்று தசாப்த கால ஆயுத மோதல்களும், மக்கள் எந்தவொரு அரசியல் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்வதில் இருந்து ஒதுக்கப்பட்டால், அவை தற்போதுள்ள முறைமையின் நியாயத்தன்மைக்கு சவால் விடும் வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். சமஷ்டி அல்லது அதிகாரப்பகிர்வு என்பது பல்வேறு அரசியல் நிறுவனங்களிடையே அவர்களின் இன அல்லது பிராந்திய உறவுகளைப் பொருட்படுத்தாமல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும். வெற்றிகளையும் சுமைகளையும் நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொண்டால் ஜனநாயகம் சிறப்பாக வாழும். …
-
- 0 replies
- 327 views
-
-
தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இணையப் பாதுகாப்பு விதிகளும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபும் இன ஒடுக்கலுக்கு மேலும் வழி வகுக்கும் தம் மீதான விமர்சனங்களைத் தடுக்கும் நோக்கில் அமைதிகாக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணையங்கள் ஊடாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதாகக் கூறிக் கொண்டு அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள இணையவழிப் பாதுகாப்பு எனப்படும் "நிகழ் நிலைக்காப்புச் சட்ட வரைபு" (Online Safety Bill ) அரசியல் - பொருளாதார நோக்கில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் வலுப் பெற்றுள்…
-
- 0 replies
- 310 views
-
-
தெற்காசியா தொடர்பிலான பெரியண்ணனின் கொள்கை மாறியிருக்கிறதா? என்.கே.அஷோக்பரன் கனடாவும், இந்தியாவும் மிகப்பெரிய இராஜதந்திர முறுகல் நிலையை சந்தித்து நிற்கும் காலப்பகுதியிது. பதினைந்து வருடங்கள் முன்பு கூட இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டிருக்காது. ஏனென்றால், உலகளவில் இந்தியா தனது பலத்தை இதற்கு முன்னர், இத்தனை தூரம் வௌிக்காட்டியதில்லை. தனக்குக் கிடைக்கவிருந்த ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆசனத்தையே, சீனாவுக்கு வழங்காததை தாம் பெறுவது கூடாது என்று ஏற்காது விட்ட நேருவிய இந்தியா இப்போது இல்லை. வறிய நாடு, பிச்சைக்கார நாடு என்று மேற்குலகமானது தனது ஆதிக்கப்பார்வையின் காரணமாக, ஆபிரிக்காவுக்கு அடுத்து மோசமாகப் பார்த்த இந்தியா இன்று இல்லை. இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம்…
-
- 0 replies
- 317 views
-
-
நீதிபதிக்கே கிடைக்காத நீதி? - நிலாந்தன் கடந்த வாரம் திலீபன். இந்த வாரம் ஒரு நீதிபதி. முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிரான சரத் வீரசேகரவின் கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அவை ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுகள் என்றும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவை ஒரு கூட்டு உளவியலின் வெளிப்பாடுகள். கடந்த பல தசாப்தங்களாக சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் எனப்படுவது வெறுப்பு பேச்சுக்களைக் கக்கும் ஓரிடமாகத்தான் காணப்படுகிறது. இனப்படுகொலை தொடர்பான ஐநாவின் நிபுணத்துவக் கூற்று ஒன்று உண்டு. ” யூத இனப்படுகொலை எனப்படுவது காஸ் சேம்பர்களில் இருந்து-நச்சு வாயுக் கொலைக்கூடங்களில் இருந்து தொடங்கவில்லை. வெறுப்புப் பேச்சுகளில் இருந்துதான் தொடங்கிய…
-
- 1 reply
- 637 views
-
-
ராஜனி திராணகம: நெருக்கடிக்கு மத்தியில் அறிவும் செயற்பாடும் Mahendran Thiruvarangan on September 22, 2023 “என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால், அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படும் ஒரு துப்பாக்கியாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும், இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்.” 1989-09-15ஆம் திகதி ராஜனி தனது நண்பர் ஒருவருக்கு இறுதியாக எழுதிய கடிதத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உடற்கூற்றியற் துறையின் தலைவராகவும், மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும் 1980களில் யாழ்ப்பா…
-
- 100 replies
- 8.7k views
- 1 follower
-
-
நிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன். “சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது. என்னை பற்றி எதனையும் கூறட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஆனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன,கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சமூக ஊடகங்களுக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். சமூக ஊடகங்களையும் கைபேசிச் செயலிகள் வழியாகப் பகிரப்படும் விடயங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை…
-
- 0 replies
- 820 views
-
-
தமிழ் இன விடுதலைப் போராட்டம்” என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் குறித்த தமிழ் இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாத ஒன்று ஒட்டு மொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்துக்காகத் தமது பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும் போது தான், விடுதலைக்கான மக்கள் புரட்சியும், அதன் மூலமான இன விடுதலையும் சாத்தியமாகும். தமிழர் நாம் ஆண்ட பூமி தமிழுக்கும், தமிழ் மக்களுக்குமான தனித்துவ வரலாற்றைக் கொண்டு வாழ்ந்த இனம். தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட “தனிநாடு தமிழீழம்” வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தைத் தமிழர் தேசத்தின் பால் திரும்பிப் பார்க்க வைத்த இன விடுதலைப் போராட்டம்.…
-
- 0 replies
- 500 views
-
-
ஒரு புலப்பெயர்ச்சி அலை? நிலாந்தன். கனடாவில் வசிக்கும் ஒரு நண்பர் சொன்னார்..கனடாவுக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கு படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு என்று கிட்டத்தட்ட 30 மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று.அம்மையங்களில் ஒரு படிவத்தை நிரப்புவதற்கு ஆயிரம் கனேடியன் டாலர்கள் அறவிடப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.கிட்டத்தட்ட இலங்கை ரூபாயில் இரண்டரை லட்சம். கனடாவில் இருக்கும் தமிழர்கள் தாயகத்தில் உள்ள தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களை அவ்வாறு அழைக்கலாம் என்று ஒரு கதை பலமாக உலாவுகிறது. அதனால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்ல, நண்பர்கள் தெரிந்தவர்கள் போன்றவர்களும் கனடாவில் இருப்பவர்களை அனுகி தமக்கு விசா பெற்றுத் தருமாறு கேட்கின்றார்கள். இது சம்பந்தமாக அண்…
-
- 30 replies
- 2.9k views
- 1 follower
-
-
முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா ? - நிலாந்தன் திருகோணமலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகன ஊர்தி தாக்கப்பட்டிருக்கிறது. திலீபனின் படத்தை ஏந்திய அந்த ஊர்தி கடந்த ஆண்டும் அந்த வழியால் சென்றிருக்கிறது. இது இரண்டாவது தடவை. அது தாக்கப்பட்ட இடம் கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் கீழ் அபகரிக்கப்பட்ட தமிழ் நிலம். கடந்த ஆண்டு அந்த ஊர்தி குறிவைக்கப்படவில்லை. இந்தமுறை தான் அது குறிவைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊர்தியை குறிவைத்து அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்பது ஏற்கனவே மட்டக்களப்பில் உணர்த்தப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு தாக்குதலை முன்னணி எதிர்பார்க்கவில்லை என்பது காணொளிகளைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. தம்மைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ஆளணிகளோடு அவர்கள் வ…
-
- 0 replies
- 476 views
-
-
சனல் 4, ஜ.எஸ்.ஜ.எஸ் தாக்குதலை மடைமாற்றுகின்றதா? - யதீந்திரா சணல் 4 தொலைகாட்சியின் கானொளி இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தக் கானொளியின் இலக்கு என்ன, என்பதற்கான பதில் அந்தக் காணொளியிலேயே இருக்கின்றது. பிள்ளையானின் பேச்சாளராக இருந்தவரான ஆசாத் மௌலானா என்பவரால் கூறப்படும் விடயங்கள்தான், குறித்த காணொளியின் பிரதான விடயமாகும். அவரது கூற்றின்படி, இந்தக் தாக்குதலானது, ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சதி நடவடிக்கையாகும். இதில் பிள்ளையானும் தொடர்புபட்டிருக்கின்றார். பிள்ளையானுடன் இருந்த ஒருவர் என்னும் வகையில் பிள்ளையானுடன் தொடர்புடுத்தியே, மௌலானா விடயங்களை கூறுகின்றார். அப்படிக் கூ…
-
- 4 replies
- 676 views
-
-
சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா? இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் அவலங்களை, அவர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையினை அப்பட்டமாக பொதுவெளியில் மிகவும் வெளிப்படையாகப் பேசிவருபவர் சீமான் மட்டும் தான் என்பதில் எவருக்கும் ஐய்யமிருக்க வாய்ப்பில்லை. இன்றுவரை தமிழ்நாட்டில் இருந்த அரசியல்வாதிகளில் மிகவும் வெளிப்படையாக இலங்கையினையும், இந்தியக் காங்கிரஸையும் நேரடியாகவே ஈழத்தமிழர் படுகொலையின் சூத்திரதாரிகள் என்று சீமான் குற்றஞ்சாட்டுவதுபோல வேறு எவருமே செய்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணர்வுள்ளவர்களிடையே எமது போராட்டம் பற்றியும், தலைமை பற்றியும், எம்மீது நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றியும் சீமான் பல விடயங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். எமது போராட்…
-
- 196 replies
- 15k views
- 3 followers
-
-
“நல்ல” அரசியல்வாதிகளை மக்கள் ஏன் தேர்ந்தெடுப்பதில்லை? என்.கே அஷோக்பரன் “என்னது அரசியல்வாதிகளுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதும், தேர்ந்தெடுத்த பின் அவர்கள் சரியில்லை என்று புலம்புவதும் ஒரே ஆட்களா?” என்பது போலத்தான் உலகளவில் ஜனநாயக நாடுகளில் வாழும் கணிசமானளவு மக்களின் நிலை இருக்கிறது. மக்களே தான் தேர்ந்தெடுக்கிறார்கள், தாம் தேர்ந்தெடுத்தவர்கள் பற்றி மக்களே தான் அசூயையும், அதிருப்தியும் கொள்கிறார்கள். மீண்டும் கொஞ்ச நாளில் தாம் வெறுத்த அதே நபர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். நல்லவர்கள், வல்லவர்கள் எல்லாரும் அரசியலுக்கு வருவதில்லை. பலரும் வர விரும்புவதில்லை. அதற்குப் பல காரணங்களுண்டு. அது தனத்து ஆராயப்பட வேண்டிய விடயம். ஆனால், அரசியலில் உள்ளவர்களுள், நல்லவர்…
-
- 2 replies
- 601 views
-
-
தமிழர் கட்சிகளின் நிறம் September 19, 2023 —- கருணாகரன் — ஈழத் தமிழர்களின் அரசியல் இன்று பிரதானமாக மூன்று வகைப்பட்டதாக உள்ளது. ஒன்று, “தமிழ்த் தேசிய அரசியல்” என்ற பிரகடனத்தின் கீழ் அரச எதிர்ப்பு மற்றும் தமிழின விடுதலையை மையப்படுத்திப் பேசுவதாகும். இதற்குத்தான் தமிழ்ப் பெருந்திரளினர் ஆதரவளிக்கின்றனர். இதனால் இந்தத் தரப்பே பாராளுமன்றத்திலும் மாகாண சபை, உள்ளுராட்சி மன்றங்கள் போன்றவற்றிலும் முன்னிலையில் உள்ளது. 1980 – 2009 வரையில் இது ஆயுதப் போராட்ட அரசியலாக – செயற்பாட்டு அரசியலாக இருந்தது. 2009 க்குப் பின்னர், செயற்பாட்டுப் பாரம்பரியம் இல்லாதொழிந்து, பேச்சு அரசியலாக – அறிக்கை அரசியலாகச் சுருங்கி விட்டது. அதனால்தான் இதை “தமிழின விடுதலையை மையப…
-
- 0 replies
- 966 views
-
-
எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் September 18, 2023 —- வீரகத்தி தனபாலசிங்கம் — றொடீசியா என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சிக்கு எதிரான கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் றொபேர்ட் முகாபே. வெள்ளையர் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்ட பிறகு அவர் 1980 தொடக்கம் 1987 வரை அந்த நாட்டின் பிரதமராகவும் 1987 தொடக்கம் 2017 வரை ஜனாதிபதியாகவும் பதவிவகித்தார். மொத்தமாக 37 வருடங்கள் அவர் ஆட்சியதிகாரத்தில் இருந்தார். அதிகாரத்தில் இருந்து இறங்கவிரும்பாமல் நீண்டகாலமாக பதவியில் இருந்த முகாபேயிடம் ஒரு தடவை செய்தியாளர் ஒருவர், “நீங்கள் எப்போது சிம்பாப்வே மக்களுக்கு பிரியாவிடை கொட…
-
- 0 replies
- 347 views
-
-
18 SEP, 2023 | 05:27 PM சுகுமாரன் விஜயகுமார் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை பற்றி இப்போது பலரும் கதைத்து வருகின்றனர். கிராமங்களில் வாழும் மக்களுக்கு வசிப்பதற்காக 20 பேர்ச்சஸ் அல்லது அதற்கு அதிகமான அரசக் காணிகள் சட்ட ரீதியாக உரித்துடன் வழங்கப்படுகின்றன. எனினும் மலையக மக்களுக்கு வசிப்பதற்காக 1995ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை ஒரு குடும்பத்துக்கு 7 பேர்ச்சஸ் அளவு காணியே வழங்கப்பட்டுள்ளது. அவையும் சட்ட உரித்து அற்றவைகளாகும். 1972 ஆம் ஆண்டு 01ஆம் இலக்க காணி சீர்திருத்த ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 3(3) இன் பிரகாரம் பெருந்தோட்டங்களில் லயன் வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களுக்க…
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
சனாதனமும், பாரதமும்: ஆரிய மாயையின் வரலாற்று வடிவங்கள்! Sep 11, 2023 07:00AM IST ராஜன் குறை அண்ணா தன் நூலுக்கு ஆரிய மாயை என்று பெயர் சூட்டக் காரணம் ஆரியம் பிறரை மயக்கி தன்னை ஏற்கச் செய்யும் தன்மை கொண்ட து என்பதைக் குறிக்கத்தான். ஆரியம் என்று ஒன்றுமில்லை; அப்படி இருப்பது போல மாயத்தோற்றம் மட்டும்தான் இருக்கிறது என்ற பொருளில் அவர் அந்த பெயரைச் சூட்டவில்லை. ஆரியம் என்று ஒன்று இருக்கிறது. அது பிறருக்கு நன்மை தருவது போல தோற்றமளித்து அவர்களையும் தன் கருத்தியலை ஏற்கச் செய்கிறது என்பதைக் குறிக்கவே அவர் ஆரிய மாயை என்று பெயர் வைத்தார். நாம் அந்த மாயைக்கு ஆட்படாமல், ஆரியத்தின் உண்மையான தன்மையை அறிய வேண்டும். நானும், நண்பர்கள் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், வ…
-
- 2 replies
- 796 views
-
-
2019 குண்டு வெடிப்புக்களை கோட்டா திட்டமிட்டு இருக்கலாமா? எம்.எஸ்.எம். ஐயூப் பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனின் முள்ளாள் அந்தரங்கச் செயலாளரான அன்ஸீர் அசாத் மௌலானாவுடன் நடத்திய நேர்காணலொன்றை மையமாக வைத்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து கடந்த வாரம் வெளியிட்ட விவரணத் திரைப்படம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2018 ஆண்டு ஜனவரி மாதம் தாம் பிள்ளையானின் ஆலோசனையின் படி அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேக்கும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில பல இடங்களில் தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்து 269 பேரை படுகொலை செய்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ச…
-
- 2 replies
- 467 views
-
-
சனல் நாலு வீடியோ ஏற்படுத்திய அதிர்வுகள்? நிலாந்தன். “போர் தொடர்பில் நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.போர் என்பது கூட்டு முயற்சியாகும்.. போரை ஜெனரல் ஒருவரால் செய்ய முடியாது. கூட்டு முயற்சியின் அவசியத்தை கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை நான் எனது கட்டுரைகளில் சுட்டிக் காட்டி இருந்தேன். ராணுவத்தால் மட்டும் போர் செய்ய முடியாது. கடற்படை இருக்க வேண்டும். வான்படை இருக்க வேண்டும். நமக்கு சிவில் பாதுகாப்பு படை இருந்தது. போலீசாரின் ஒத்துழைப்புக் கிடைத்தது. சிறந்த அரசியல் தலைமைத்துவம் இருக்க வேண்டும். பிக்குகள் எம்மை தைரியப்படுத்தினர். வைத்தியர்கள் தாதிமார் சிகிச்சை அளித்தனர். மக்கள் வரி செலுத்தினர். தமது பிள்ளைகளை நாட்டுக்காக வழங்கினர். அமெரிக்கா நமக்கு தொழில் நுட்ப உதவிகளை …
-
- 1 reply
- 654 views
-