அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
கண்ணுக்குத் தெரியாத எதிரியும் அரசுகளின் இராணுவ அணுகுமுறையும் மனித குலத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கொரோனாவைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உட்பட கடுமையான பல நடவடிக்கைகளை கடந்த மூன்று மாதகாலமாக முன்னெடுத்திருக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் போர் ஒன்றில் ஈடுபட்டிருப்பது போன்ற மனோநிலையிலேயே பேசிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கையில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஆரம்பமே விடுதலை புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக தோற்கடித்த அரசாங்கத்தின் “சாதனையை” பெருமையுடன் நினைவுபடுத்திய வண்ணமே அமைந்தது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஒரு பொதுச் சுகாதார நெருக்கடி நிலையைக் கையாளும் பொறுப்பில் மருத…
-
- 0 replies
- 449 views
-
-
ஜனநாயகம் பறிபோகிறது- சிங்களக் கட்சிகளின் கூக்குரலும் தமிழர்களின் அரசியல் விடுதலையும்! By sharmi - இலங்கை ஒற்றையாட்சி அரசின் ( (Unitary State) நீதித்துறை எப்போதும் சுயாதீனமாகச் செயற்பட்டதாகக் கூற முடியாது. சில நேரங்களில் சுயாதீனமாகச் செயற்பட்டது என்று கூறினாலும் அது சிங்கள நிலை சார்ந்ததாக அமைந்திருக்கும். ஆனாலும் ஆட்சியாளர்களின் தேவை கருதி சில முக்கியமான சந்தர்ப்பங்களில், சுயாதீனத் தன்மை இழந்ததும் உண்டு. 1999 ஆம் ஆண்டு சந்திரிகா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சிறாணி பண்டாரநாயக்கவை மூப்பு நிலைக்கு மாறாக உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்திருந்தார். …
-
- 0 replies
- 658 views
-
-
-
- 3 replies
- 943 views
-
-
வடமாகாணசபை தேர்தலும் கூட்டமைப்பின் உள்நெருக்கடிகளும் முத்துக்குமார் வடமாகாணசபை தேர்தலுக்கான திகதியை தேர்தல் திணைக்களம் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அரசாங்கத்திடம் இருந்து அதற்கான உத்தரவு கிடைக்கவில்லை என்றே தேர்தல் ஆணையாளர் குறிப்பிடுகின்றார். சர்வதேச அழுத்தங்களின் வீரியத்தைப் பொறுத்து தேர்தல் அறிவிப்புதினம் வெளியாகலாம். சர்வதேச அழுத்தங்கள் இல்லாவிட்டால் தேர்தல் நடைபெறாமலும் போகலாம். மாகாணசபை முறையில் தமிழ் மக்களுக்கு தீர்வு எதுவும் இல்லை. வெறும் தோற்றப்பாட்டளவிலேயே சில விடயங்கள் அங்குள்ளன. காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், மாகாணசபை முறையில் உண்டு எனக் கூறப்படுபவை எல்லாம் வெறும் தோற்றப்பாடுகளே. இந்த தோற்றப்பாட்டு நிலையில் இருப்பவற்றை முழுமையாக நீக்கிய பின்…
-
- 2 replies
- 892 views
-
-
கோரிக்கையின் நியாயம் குறித்து சிந்தியுங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்க்கவேண்டும் என்ற நல்லிணக்க செயலணியின் பரிந்துரையானது தொடர்ச்சியாக சர்ச்சைகளை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் இந்த பரிந்துரை தொடர்பாகவே பேசப்பட்டுவருகின்றது. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் சிவில் நிறுவனங்களும் நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதனை வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில் உள்நாட்டிலும் இந்த விடயம் சர்…
-
- 0 replies
- 408 views
-
-
உண்மை நிலை வரலாற்று ஓட்டத்தின் அடிப்படையிலேயே தற்போதைய 34 ஆவது மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. 2015 ஆம் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியுள்ளது என்று சகல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தபோது இந்த இணை அனுசரணையின் சாத்தியப்பாடுகள் அல்லது நிறைவேற்றல்கள் எந்தளவுக்கு முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் பல்வேறு சவால்கள், எதிர்பார்ப்புக்கள், விமர்சனங்கள், கண்டனங்கள் என்பவற்றின் மத்தியில் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பமாகியிருப்பதும் அதில் வெளிவிவ…
-
- 0 replies
- 410 views
-
-
1987ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ம் திகதி, நேரம்: அதிகாலை 1 மணி, திட்டமிட்டபடி இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளின் தலைவரை குறிவைத்து தமது நகர்வினை ஆரம்பித்திருந்தன. விடுதலைப் புலிகளின் தலைவரைக் குறிவைத்த அந்த அதிரடி இராணுவ நடவடிக்கையில் இந்திய இராணுவத்தின் இரண்டு முக்கிய படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டன. 1. இந்தியப் படையின் முக்கியமான படை அணியான பராக் கொமாண்டோக்கள் (Para Commandos) 2. 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 - Sikh Light Infantry) நான்கு எம்.ஐ.-8 (MI8) ஹெலிக்காப்டர்கள் பராக் கொமாண்டோக்களையும், விஷேட பயிற்சி பெற்ற சீக்கியக் காலாட்படையினரையும் தரையிறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஸ்ரீலங்கா வான் படையினரின் வழிகாட்டல்களிலேயே இந்த தரையிறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்…
-
- 17 replies
- 1.6k views
-
-
கூட்டமைப்பும் ராஜதந்திரப் போரும் - நிலாந்தன் 27 அக்டோபர் 2013 ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் ஸ்கண்டிநேவிய நாடொன்றிலிருந்து வந்த ஒரு டயஸ்பொறாத் தமிழர் சொன்னார், ''இப்போதிருக்கும் நிலைமைகளே தொடர்ந்தும் இருக்குமாயிருந்தால் அல்லது இவற்றின் இயல்பான வளர்ச்சிப் போக்கின்படி மாற்றங்கள் நிகழுமாயிருந்தால் டயஸ்பொறாவில் உள்ள தமிழர்கள் பொதுப் பணிகளிலிருந்து விலகி தனிப்பட்ட வாழ்வின் சுக துக்கங்களிற்குள் அதிகம் முழ்கத் தொடங்கிவிடுவார்கள்... அடுத்த வசந்த கால விடுமுறைக்கு எங்கே போகலாம். பிள்ளைகளை வேறெந்த உயர்தரமான பள்ளிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கலாம் அல்லது இப்போதிருப்பதை விட வேறெப்படி வசதியாக வாழலாம்... என்பவற்றைப் பற்றியே அதிகம் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள்' என்…
-
- 0 replies
- 480 views
-
-
தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு – நிலாந்தன். June 26, 2022 பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர்.இவர் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை குறித்து உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. போர்காலத்தில் மிக நெருக்கடியான ஒரு சூழலில் நிர்வாகம் செய்து பழகிய தமிழ் அதிகாரிகளிடமிருந்து முழு நாடும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுவாராம். அதில் உண்மையும் உண்டு.நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு நிர்வாகங்களுக்கு இடையே செயல்படுவது என்பது கயிற்றில் நடப்பது போன்றது. மூத்த தமிழ் நிர்வாகிகள் பலரிடம் அந்த ஆற்றல் இருந்தது. ஆனா…
-
- 0 replies
- 331 views
-
-
பற்றாக்குறைக்கும் பதகளிப்புக்கும் மத்தியில் முடங்கிக் கிடக்கும் இலங்கை இலங்கையில் இன்னும் சில மாதங்களில் பஞ்சம் வரும் நிலைமை ஏற்படக்கூடுமென பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ___________________________________________________________________________ ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் அனைத்து நடைமுறை நோக்கங்களினாலும் வீழ்ச்சி கண்டுள்ளது ______________________________________________________________________ எம்.ஆர். நாராயண் சுவாமி முன்னர் விநியோகித்திருந்தமைக்கு பணம் செலுத்தாததால் , வழமையான விற்பனையாளர்கள்வழங்குவதற்குவிரும்பாததாலும் கொழு…
-
- 0 replies
- 265 views
-
-
கோட்டாவின் நிழல் படம் | AFP/Getty Images, Ishara S. Kodikara, Theglobalmail மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்புதான் கோட்டாபய ராஜபக்ஷ என்ற ஒருவர் இலங்கை அரசியலில் வந்துசேர்ந்தார். இராணுவ சேவையிலிருந்து விலகிய பின் பதினைந்து ஆண்டுகளாக வாழ்ந்தது அமெரிக்காவிலேயாகும். அவர் ஒரு பிரசித்திபெற்ற, அதிகாரமுள்ள, பலமிக்க நபராக மாறியது, சகோதரர் ஜனாதிபதி பதவியேற்புக்கு வந்த பின்னர்தான். அத்தோடு, அவருக்கு அதிகாரமுள்ள பதவியொன்றாக கருதப்படும் பாதுகாப்புச் செயலாளர் பதவி கிடைத்ததோடு, அதன்பின் இடம்பெற்ற நான்காம் ஈழ யுத்தத்தின்போது இராணுவ பாதுகாப்புப் பிரிவினரை நெறிப்படுத்தும் நபராகவும் இவர் பதவி ஏற்றார். யுத்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஒருவர் எனக் கருதக்கூடிய ஜெனரல்…
-
- 0 replies
- 725 views
-
-
இந்துத் தேசியவாத அமைப்பால் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் கண்டியிலுள்ள தலதா மாளிகை போன்றன மதிப்பளிக்கப்படுதல் போன்றன சிறிலங்காவுடனான இந்தியாவின் பண்பாட்டுத் தொடர்பாடலைக் கட்டியம் கூறுகின்றன. இவ்வாறு Swapan Dasgupta என்னும் இந்திய ஊடகவியலாளர் THE ASIAN AGE ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2015ன் முற்பகுதியில் இடம்பெறுவதற்கான சாத்தியமுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெறுகின்றன. சிறிலங்காவின் மத்திய அரசாங்கத்திற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண சபைக்கும் இடையில் நிலவும் முடிவுறாத குழப்பநிலையானது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.…
-
- 0 replies
- 643 views
-
-
முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர், புற்றுநோய்த் தாக்கத்துக்குள்ளாகி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்திருக்கின்றார். கடந்த காலத்தில், பெரும் கவனத்தைப் பெற்றிருந்த முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள், இன்றைக்குப் பெட்டிச் செய்திகளாகச் சுருங்கிவிட்டன. பரபரப்புக்காக மாத்திரம், முன்னாள் போராளிகளின் பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் தரப்புகளும் அந்தப் பரபரப்பு அடங்கியதும், அவர்களை அப்படியே கைவிட்டு, இன்னொரு பரபரப்பைத் தேடிச் சென்றுவிடுகின்றன. மாய்மாலங்களைத் தாண்டிப் பேசினால், முன்னாள் போராளிகள் தொடர்பிலான உரையாடல்…
-
- 0 replies
- 439 views
-
-
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தில் ரணிலினால் தமிழர் பிரச்னையை தீர்க்க முடியுமா? பட மூலாதாரம்,PMD SRILANKA 55 நிமிடங்களுக்கு முன்னர் சுதந்திர இலங்கையின் 75 வருட காலமாக தமிழர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்னைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலக்கேடு இன்றைய தினமாகும். நாட்டின் 75வது சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி உறுதி வழங்கியிருந்தார். தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் அவர் இந்த உறுதிமொழியை அன்றைய தினம் வழங்கியிருந்தார். …
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
உறுதியான அரசியல் தலைமையின் அவசியம் நாட்டில் தேர்தல் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதே தவிர,அதற்கு அப்பால் உள்ள ஜனநாயக அரசியலில் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரியவில்லை.மக்கள் நலன் சார்ந்து நாட்டம் கொள்ளப்பட வேண்டிய சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்தி அரசியலிலும் உரிய வகையில் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரியவில்லை. தேர்தல் அரசியல் அவசியம். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால், தேர்தலுக்கு அப்பால் உள்ள அரசியலே நாட்டுக்கும் மக்களுக்கும் அவசியமான அரசியல். அது ஜனநாயக அரசியல். மக்களுக்கான அந்த ஜனநாயக அரசியல் இல்லையென்றால், அது போலித்தனமானது.வெறுமனே அரசியல் அந்தஸ்தையும், ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கான அரசியலாகும். அது ஆட்சிக்குப் …
-
- 0 replies
- 385 views
-
-
சம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு நிலையும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:25 Comments - 0 “தமிழர்கள், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆயுதம் ஏந்தாமல், மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியை பின்பற்றியிருக்கலாம்” என, எதிர்க்கட்சித் தலைவவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் உரையாற்றும் போதே, அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இது, தமிழர்களின் பெயரால், பல தமிழ் ஆயுதக் குழுக்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமை…
-
- 1 reply
- 776 views
-
-
கள்ளு முட்டியும் காத்தான் கூத்தும் ஜெனீவா கூட்டமும்… நாங்க ஜெனீவாக்கு பேசப் போறோம் பெத்தவளே தாயே..! அம்மா நடுச்சுடலை தில்லை வனம் பெத்தவளே தாயே..! நமது கிராமங்களில் காத்தவராயர் கூத்து மேடை ஏறுகிறது என்றால் மேடைக்கு பின்னால் பெரிய பானையில் கள்ளு நிறைத்திருக்கும். கூத்தாட வருவோர் அதில் இருந்து ஒவ்வொரு மிடறாகக் குடித்து குடித்து ஆடிக் கொண்டிருப்பார்ககள். அதிகாலை வரை கூத்துக் கலைஞர்களை களைப்பின்றி வைத்திருக்கும் பணியை பனங்கள்ளு அற்புதமாக செய்யும். இப்படி சொல்வதால் கூத்து கலைஞர்களை கேலி செய்வதாகக் கருதக்கூடாது. நமது வாழ்க்கைக் கூத்தாட்டங்களை விளங்க இதை ஓர் உதாரணமாக எடுக்கிறோம், அவ்வளவுதான். தான் யார், தான் எதற்காக பிறந்திருக்கிறேன் என்ற தேடல்களை ம…
-
- 1 reply
- 834 views
-
-
COLUMNS பத்தி OPINION கருத்து சிறீலங்கா: ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ரணிலின் அரசாங்கம் கவிழ்க்கப்படுமா? சிவதாசன் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் சமீபகாலமாக மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. ஜனாதிபதி தேர்தல் இந்த வருட இறுதிக்குள் நடைபெறுமென்று தேர்தல் ஆணையகம் அறிவித்ததிலிருந்து சில கட்சிகள் அதற்குத் தம்மைத் தயார்படுத்தும் பணிகளில் மும்முரமாயிருந்தாலும் வேறு சில கட்சிகளும் அரசியல்வாதிகளும் இன்னுமொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த இரகசியமான பேச்சுவார்த்தைகளிலும் நகர்வுகளிலும் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் கசிகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது ச…
-
- 0 replies
- 455 views
-
-
கஜனின் அழைப்பு ? - நிலாந்தன் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்குத் தான் தயாராக இருப்பதாக கஜேந்திரக்குமார் அறிவித்துள்ளார். அந்த அழைப்பின் அடிப்படையில் அண்மையில், யாழ்ப்பாணத்தில் சிறீதரனின் வீட்டில் இரண்டு கஜன்களும் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள். முதலாவதாக இந்த நகர்வை வரவேற்க வேண்டும். ஏனென்றால் இது ஏதோ ஒரு அடிப்படையில் தமிழ் ஐக்கியத்துக்கான முயற்சிதான். நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளின் பின்னணியில் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது. என்பிபி அரசாங்கம் ஒரு யாப்பை மாற்றக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு யா…
-
- 0 replies
- 439 views
-
-
ஏப்பமிடப்படும் ஏகபிரதிநிதித்துவம் காரை துர்க்கா / 2020 பெப்ரவரி 04 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று, அவர்களுடன் மட்டும்தான் பேச்சு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கம் இல்லை. மாறாக, வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, அரசாங்கம் தயாராக இருக்கின்றது என, அரசாங்கத்தின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்து உள்ளார். இன்று, இலங்கை, தனது விடிவு தினமான (72வது) சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில், நாட்டின் ஒரு பகுதி மக்கள், தாங்கள் இன்னமும் இருட்டுக்குள் வாழ்ந்து வருவதாவே உணர்கின்றனர். ஆனால், அவர்களது விடியலுக்கான பேச்…
-
- 0 replies
- 466 views
-
-
என்ன செய்யப் போகிறார் மைத்திரி? ஜனசட்டன என்ற பெயரில் பாதயாத்திரை மற்றும் கூட்டம் என்று, அரசாங்கத்துக்கு எதிரான, பெரியளவிலான போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினர் நடத்தியிருக்கும், இந்த அரசியல் நடவடிக்கை குறித்து அரசாங்கத்தின் தரப்பில் இருந்து வெளியிடப்படும் கருத்துக்களில் தாம் எதற்கும் அஞ்சவில்லை என்பது போன்ற தொனியை அவதானிக்க முடிகிறது. என்னதான் கொக்கரித்தாலும், 2020 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை அசைக்க முடியாது என்று அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர். கால்கடுக்க நடந்தாலும் சரி, வாய்கிழியக் கத்தினாலும் சரி, நாம் ஒன்றும் எமது பயணத்தை நிறுத்திவிடப் போவதி…
-
- 0 replies
- 821 views
-
-
ஜேர்மனியிடம் பிரான்ஸ் வீழ்ச்சியடைந்த நிகழ்வு ஐரோப்பாவின் அன்று அதிசயமாகவே பார்க்கப்பட்டது. பெல்ஜியத்தில் இருந்து இத்தாலி வரை 750 கிலோமீற்றர் நீளமான பலமான பங்கர்களுடன் அமைந்த ‘மகினோட் லைன்’ என்ற பாதுகாப்பு வேலியை அமைந்திருந்தது. பெல்ஜிய எல்லைக்கு சமீபமாக உள்ள இயற்கை பாதுகாப்பு அரண் என்று பிரான்ஸ் கருதிய ஆர்டேனெஸ் (Ardennes)காடுகளினூடாக மிக இரகசியமாக இடம்பெற்ற ஜேர்மனியின் பாரிய படைநகர்வை பிரான்ஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மிக கடினமான நில அமைப்பை கொண்ட ஆர்டேனெஸ் காடுகளூடாக கனரக வாகனங்களுடன் பல லட்சம் வீரர்கள் நகர்ந்தது ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டது. பிரெஞ்சு விமானப்படையின் கண்ணில் பட்டிருந்தால் முழு நடவடிக்கைகளுமே ஜேர்மனிக்கு ஒரு பேரழிவாக அமைந்திருக்கும். ஒரு இருண்ட ஆபத்த…
-
- 1 reply
- 698 views
-
-
உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா. தலையிடாதிருத்தல் முக்கியமானது; ஐ.நா. பொதுச் சபையில் காணொளி மூலம் ஜனாதிபதி உரை “நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாத்தல், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நா. சாசனத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் எழுபத்தைந்தாவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் காணொளி மூலமாக ஆற்றிய உரையிலேயே இதனை அவர் வலியுறுத்தினார். அவரது உயைில் முழுமையான வடிவம் வருமாறு: ஆரம்பத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது கூட்டத்தொடரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைதங்கிய வோல்கன் போஸ்கிர் அவர்களுக்கு …
-
- 2 replies
- 379 views
-
-
தமிழ் மக்களையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றவே அரசு முயற்சி -ஞா.சிறிநேசன் 12 Views மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்று ஒரு குழுவினை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ் மக்களையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றுகின்ற ஒரு கண்துடைப்பு செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்வியை ஏற்படுத்தியுள்ளதுடன் பல்வேறு ஆதங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. 1958ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரையில் தமிழ் மக்கள் திட்டமிட்டு இனஅழிப்பு செய்யப்பட்டனர். அடுத்…
-
- 0 replies
- 334 views
-
-
-
- 0 replies
- 757 views
-