அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
-
- 1 reply
- 701 views
-
-
தடைகளைத் தாண்டிய பயணத்தை ஆரம்பிக்கலாமா? ச.சேகர் தெரிவு செய்யப்பட்ட 305 பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதித் தடை இந்த வாரம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டிருந்ததை காண முடிந்தது. இந்த இறக்குமதித் தடைகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த பலர், தற்போதைய ஜனாதிபதியினால் தான்தோன்றித்தனமாக மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனால் நாடு மேலும் பின்னடைவை எதிர்நோக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். அந்நியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளமையின் காரணமாக தற்போது சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக நாடு பாதிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 179 views
-
-
சமந்தா பவரை இலங்கைக்கு அனுப்புகிறது வொஷிங்டன் By VISHNU 23 AUG, 2022 | 05:23 PM (லியோ நிரோஷ தர்ஷன்) அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இறுதி திகதி உறுதிப்படுத்தப்படாத நிலையில் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இவரது விஜயம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்தைகள், ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் மற்றும் சீன கப்பலை அனுமதித்த விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ள நிலையில் சமந்தா பவரின் விஜயம் அமைகின்றது. ஏழு நாட்களுக்கு பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விட்டு வெளியேறியுள்ளது சீன இரா…
-
- 1 reply
- 841 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 807 views
-
-
அய்மன் அல் ஜவஹிரியின் கொலையும் - புவிசார் அரசியல் தாக்கங்களும் By RAJEEBAN 26 AUG, 2022 | 04:25 PM By Sanjay Pulipaka and Shreyas D Deshmuk https://economictimes.indiatimes.com அல்ஹைதாவின் தலைவரானஅய்மன் அல் ஜவஹிரி ஜூலை மாதம் 31 ம் திகதி இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டார். செப்டம்பர் 11 தாக்குதல் உட்படஅமெரிக்காவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களில் ஒசாமா பி;ன்லேடனுடன் இணைந்து சூத்திரதாரியாக இவர் விளங்கினார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரி;க்கா படைகளை விலக்கி தலிபான ஆப்கானை கைப்பற்றி ஒருவருடத்தின் பின்னர் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
ஒரு சீனா கொள்கையிலிருந்து யுவான் வாங் 5 வரை By RAJEEBAN 26 AUG, 2022 | 04:00 PM QI ZHENHONG இலங்கைக்கான சீன தூதுவர் ------------ சமீப நாட்களில் சீனா தொடர்பான இரண்டு விடயங்கள் இலங்கையின் பரந்துபட்ட கவனத்தையீர்த்துள்ளன. இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்கசனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் சீனாவின் தாய்வான் பிராந்தியத்திற்கான இரகசிய விஜயத்தின் பின்னர் சீனா தரப்பு கடுமையான பல பதிலடி நடவடிக்கைகளை எடுத்தது. உலகின் 170 நாடுகள் ஒருசீனா கொள்கைக்கு தங்கள் உறுதியான ஆதரவை வழங்கியுள்ளதுடன் அமெரிக்காவின் பதற்றத்தை தூண்டும் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளன. …
-
- 1 reply
- 450 views
- 1 follower
-
-
மண்ணெண்ணெய் விலை உயர்வு ‘நெருப்புடன் விளையாட்டு ‘ தேவக குணவர்த்தன அகிலன் கதிர்காமர் அரசாங்கம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத் தில் உழைக்கும் மக்கள் மீது பெருந் துன்பதை தரும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. மண்ணெண்ணெய் விலை லிற்றர் 87 ரூபாவிலிருந்து 340 ரூபாவாக – அல்லது தற்போதுள்ள விலையை கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்த்துவது – மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். படகுகளுக்கு மண்ணெண்ணெய்யை நம்பியிருக்கும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அத்துடன் மண்ணெண்ணெய்யை தங்கள் விளைநிலங்களுக்குப் நீர்ப் பாசனம் செய்யும் சிறு விவசாயிகளும், சமையலுக்கு மண்ணெண்ணெய்யை…
-
- 0 replies
- 382 views
-
-
ஆரம்பம் கடினமாக இருந்தாலும் முடிவு சிறப்பாக இருக்கும்- ஜனாதிபதி ரணில் கூறுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ‘ த எகானாமிஸ்ட்‘ ஆகஸ்ட் 14 அன்று கொழும்பில் நேர்காணலை மேற்கொண்டுள்ளது. அப்பேட்டியில் ஜனாதிபதி விக்கிரமசிங்க , பொருளாதார ரீதியில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இருபெரும் பலம் வாய்ந்த நாடுகளின் நலன்சார்ந்த விடயங்களை இலங்கை சமாளிக்க வேண்டிய அணுகுமுறைகள் பற்றியும் நாட்டை எதிர்காலத்தில் உயர்ந்த வருமானம் பெறும் நாடாக மிளரச்செய்வதற்கு மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விரிவாக உரையாடியுள்ளார். பேட்டி வருமாறு; த எகனோமிஸ்ட் : …
-
- 0 replies
- 263 views
-
-
இனவாத தொழுநோய் மாறாதவரை நாட்டுக்கு விமோசனம் இல்லை கலாநிதி சூசை ஆனந்தன் கடந்த இரு மாதங்களாக காலி முகத்திடலில் சுனாமி அலைகள் போல சீறி எழுந்த “கோட்டா கோ ஹோம்” என்ற மக்கள் எழுச்சி அலைகள் இப்போ பின்வாங்கி ஓய்ந்து போயுள்ளது.இதன் விளைவு, மகத்தான வெற்றிபெற்று சிம்மாசனத்தில் அமர்ந்து “நீங்கள் தேடிய தலைவன் நானே” என்று மார்தட்டிய ஒருவர் நாட்டைவிட்டு தப்பி ஓடி அகதியாய் அலைகின்றார்.ஏற்கனவே தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோற்றோடிய ஒருவர் ஆட்சிப் பீடம் ஏறியுள்ளார். இரும்புத் திரைக்குப் பின்னாலிருந்து தமக்கு வேண்டாத ஒருவர் தூக்கப்பட்டு வேண்டிய ஒருவர் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளார் போலவே படுக…
-
- 0 replies
- 315 views
-
-
விஜயகாந்த் அரசியல் எழுச்சியும் வீழ்ச்சியும்: எதிர்க்கட்சித் தலைவராக எழுந்தவர் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக முடியாமல் வீழ்ந்தது எப்படி? க. சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DMDK விஜயகாந்த். தமிழ் திரையுலகிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றி நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வளர்ந்த விஜயகாந்த், தமிழக அரசியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டது எப்படி? அவர் நடிக்கத் தொடங்கி சில காலத்திலேயே, அவருக்கு ரசிகர் மன்றங்கள…
-
- 3 replies
- 328 views
- 1 follower
-
-
ஆட்சியைப் பிடிக்கும் மகுட வாசகம் ‘சிஸ்டம் சேஞ்ச்’ என். கே அஷோக்பரன் Twitter: nkashokbharan ‘சிஸ்டம் சேஞ்ச்’ (கட்டமைப்பு மாற்றம்) என்ற சொற்றொடர், சஜித் பிரேமதாஸ முதல் அநுர குமார திஸாநாயக்க வரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும், உச்சரிக்கும் மந்திரமாக மாறியுள்ளது. ஆனால், இது ஆட்சியைப் பிடிக்க விரும்பும் அரசியல்வாதிகள் மட்டும் சொல்லும் வார்த்தை அல்ல! பொதுவாகவே சமகால யதார்த்தத்தில், அதிருப்தி கொண்டுள்ள பலரும், ‘சிஸ்டத்தின்’ மீது பழிபோடுவது என்பது, சர்வசாதாரணமான விடயமாகிவிட்டது. ஜனநாயகம் என்பது, ஆட்சியைத் தீர்மானிக்கும் பலத்தை மக்களிடம் கொடுத்திருக்கிறது. இன்று, நாம் அனுபவிக்கும் ஜனநாயகக் கட்டமைப்பும் மனித…
-
- 2 replies
- 437 views
-
-
தேசிய அரசாங்கமும் தமிழர் தரப்பும் லக்ஸ்மன் உட்கட்சி முரண்பாடுகளோடு கொள்கைப்பிடிப்போடும் கட்சிகளை நடத்திச் செல்வதென்பது மிகவும் சிக்கலான விடயமே. இதில் உட்கட்சி ஜனநாயகம் பெரும் குழப்பமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதில் நம்முடைய நாடும் அகப்பட்டே இருக்கிறது. இப்படியிருக்கையில் நாட்டின் அரசியல், பொருளாதார நிலைமை காரணமாக ஒரு சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைத்து அதனை ஸ்திரப்படுத்திவிடவேண்டும் என்றே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார். ஆனால் அது இதுவரை கைகூடவில்லை. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் அம் முயற்சியைக் கைவிட்டு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பான முயற்சிகள் ஆரம்பமாகவு…
-
- 0 replies
- 246 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களால் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்கமுடியுமா? - நிலாந்தன் கடந்த இரு தசாப்தகால அனுபவத்தின்படி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் அதிகரிப்பதுண்டு.எனினும் இம்முறை அவர் அதிர்ஷ்டலாபச் சீட்டில் ஜனாதிபதியாக வந்ததும் தென்னிலங்கையில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் சுருங்கியது எனலாம்.மக்கள் எழுச்சிகளின் காரணமாக அந்த வெளி கடந்த மூன்று மாதங்களாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு அதிகரித்துவந்தது. ஆனால் ரணில் அதைச் சுருக்கி விட்டார்.அரகலயவை முறியடிப்பதில் அவர் முதற்கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறார்.அதனால் அவசரகாலச் சட்டத்தைத் நீக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். இவ்வாறு தென்னிலங்கையில் மக்கள் எழுச்சிகளின் விளைவாக அதிகர…
-
- 2 replies
- 680 views
-
-
சர்வதேச நாணய நிதியம்: தரித்திரத்தின் சரித்திரம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை, இன்னொருமுறை கையேந்துவது என்று முடிவாகி, நீண்ட காலமாகிவிட்டது. எப்போது அக்கடன் கிடைக்கும் என்பதே, இப்போதைய பிரச்சினை. ஊடகங்களும் பொருளியல் அறிஞர்களும் அரசியல் விமர்சகர்களும் எழுப்பும் கேள்வி அதுவே! சர்வதேச நாணய நிதியத்திடம் இதற்கு முன்னர் 16 தடவைகள் இலங்கை கடன் வாங்கியதே, அக்கடனினால் இலங்கையால் அந்நியக் கடனை அடைக்க முடிந்ததா அல்லது, இலங்கை மேலும் கடனாளியாகியதா என்ற வினாவை எழுப்புவோர் யாருமில்லை. கடந்த காலத்தில், சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கப்பட்ட கடனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பது பற்றிப் பேசுவாரில்லை. ஆனால், எப்படியாவது இன்னொருமுறை கடனை வா…
-
- 1 reply
- 402 views
-
-
சர்வகட்சி அரசாங்கம் எனும் ரணிலின் தந்திர வலை - புருஜோத்தமன் தங்கமயில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அற்ற ஆட்சியை, நிலைநிறுத்திவிட முடியும் என்று நம்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கனவு, எதிர்க்கட்சிகளால் கலைக்கப்பட்டு இருக்கின்றது. நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்துச் செயற்பட வேண்டிய அவசியம் இருப்பதாக, ரணில் தொடர்ந்தும் கூறிவருகிறார். பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ஷ இருந்து விலகியதும், பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட ரணில், பொதுஜன பெரமுன ஆளுமை செலுத்தாத, ஐக்கிய தேசிய கட்சியின் கொள்ளை, கோட்பாடுகள் கொண்ட …
-
- 0 replies
- 288 views
-
-
இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கான உடனடியானதும் நீண்ட காலத்துக்குமான இலக்குகளுக்கு தீர்வு காணுதல் மோசமான அரசாங்கத்தின் விளைவுகளை அனுபவித்தவர்களுக்கு அதிகளவுக்குத் தேவைப்படும் உதவியை மறுத்து மீண்டும் தண்டிக்கப்படக் கூடாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், தற்போதுள்ள துன்பங்களை அதிகரிக்காமல் நிலையான வேகத்தில் பொருளாதார வளர்ச்சியை அனுமதிக்கும் முன்னோக்கி செல்வதற்கான பாதையை வழங்க சர்வதேச சமூகம் உதவ முடியும். சஷிங்க பூர் இலங்கை தற்போது பல தசாப்தங்களின் பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய…
-
- 0 replies
- 341 views
-
-
ரணில்:- பலமடைகிறாரா? பலவீனமடைகிறாரா? -நிலாந்தன்.- நாட்டுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒரு தேசிய அரசாங்கம்தான். பொருளாதார நெருக்கடி போன்ற நிலைமைகளின்போது உலகின் உயர்ந்த ஜனநாயகங்கள் அவ்வாறான தேசிய அரசாங்கங்களைத்தான் உருவாக்கின.ஆனால் இலங்கைத்தீவின் ஜனநாயகம் அத்துணை செழிப்பானது அல்ல. இலங்கைத்தீவில் தேசிய அரசாங்கம் அல்லது அதைவிட குறைவாக சர்வ கட்சி அரசாங்கம் போன்ற உரையாடல்கள் எப்பொழுது தொடங்குகின்றன என்றால், அரசாங்கம் தன் தோல்வியை ஏனைய கட்சிகளின் தலையில் சுமத்திவிட எத்தனிக்கும் பொழுதுதான்.அதாவது தோல்விக்கு எதிர்க்கட்சிகளை பங்காளிகளாக்கும் ஒரு தந்திரமாகத்தான் சர்வ கட்சி அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக தேசிய அரசாங்கம் என்பது தமிழ் நோக்கு நிலையில் சிங்கள பௌத்த த…
-
- 0 replies
- 560 views
-
-
மக்களுக்கு மேலாக அரசாங்கத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் போக்கு August 15, 2022 Photo, DECCANHERALD, AFP Photo “மனிதகுலத்தின் இயற்கையான வாழ்வுச்சூழல் ஒரு போர்நிலையில் இருந்தது. அதில் வாழ்வு தனிமையானதாக, தரம் தாழ்ந்ததாக, வெறுக்கத்தக்கதாக, கொடுமையானதாக, குறுகிய காலமுடையதாக இருந்தது. ஏனென்றால், தனிமனிதர்கள் ‘எல்லோரும் எல்லோருக்கும்’ எதிரான ஒரு போர் நிலையில் இருந்தார்கள்” என்று தத்துவஞானி தோமஸ் ஹொப்ஸ் கூறினார். அதனால் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதை தத்துவஞானி ஜோன் லொக் சமூக ஒப்பந்தம் (Social Contract) என்று அழைத்தார். தனிமனிதர்கள் தங்களது சுதந்திரங்களில் சிலவற்றை விட்டுக்கொடுத்து ஆட்சியாளரின் அதிகாரத்துக்கு அல…
-
- 0 replies
- 293 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் விடயத்தில் நிலையான கொள்கை வேண்டும் எம். எஸ். எம் ஐயூப் இலங்கையில், அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்து, கடந்து சென்ற 13 ஆண்டுகளில், இலங்கை அரசாங்கங்கள், இரண்டு முறை புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளைத் தடை செய்துள்ளன. இரண்டு முறை, சில அமைப்புகளின் மீதான தடையை நீக்கியுள்ளன. கடந்த வாரம் இரண்டாவது முறையாக, அவ்வமைப்புகள் மீதான தடையை, அரசாங்கம் நீக்கியுள்ளது. மேலும் விளக்கமாகக் கூறுவதாயின், 2014ஆம் ஆண்டுக்குப் பின்னரான எட்டு ஆண்டுகளிலேயே, இவ்வாறு அந்த அமைப்புகள் தடைசெய்யப்பட்டு, மீண்டும் அத்தடை நீக்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்நான்கு சந்தர்ப்பங்களிலும், தடை செய்யப்பட்ட மற்றும் தடை நீக்கப்பட்ட அமைப்புக…
-
- 0 replies
- 307 views
-
-
-
- 0 replies
- 770 views
-
-
சீனக் கப்பல்: இராஜதந்திர அழுத்தத்தில் இலங்கை என். கே அஷோக்பரன் சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற ஆராய்ச்சிக் கப்பல், ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையவும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கவும் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது என, ஓகஸ்ட் 13ஆம் திகதி, தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் இலங்கையின் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டிருக்கிறது. ‘யுவான் வாங் 5’ கப்பலின் இலங்கை வருகை தொடர்பில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடமிருந்து, கடும் இராஜதந்திர அழுத்தத்தை, கடந்த தினங்களில் இலங்கை சந்தித்திருந்தது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு, ரணில் ஜனாதிபதியாகிய சில வாரங்களிலேயே, ஒரு மிகப்பெரிய இராஜதந்திர சவா…
-
- 1 reply
- 421 views
-
-
சர்வதேச நாணய நிதியம்: கலைய வேண்டிய மாயைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைப்பது என்று, பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியம்தான் ஒரே வழி என்று, மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கி விட்டால், அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் தீர்ந்து விடும் என்ற பிம்பம், தொடர்ச்சியாகவும் கவனமாகவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இன்று, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவது பற்றிய விமர்சனங்களை முன்வைப்போர், மாற்றுக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள், எதிர்ப்பாளர்கள் ஆகியோர் எதிரிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கட்டமைக்கப்படுகிறார…
-
- 1 reply
- 477 views
-
-
சீனாவின் யுவான் வாங்-5, இந்தியாவின் துருவ்: எந்த கண்காணிப்பு கப்பலுக்கு வலிமை அதிகம்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்தியாவின் ஐஎன்எஸ் துருவ் (இடது), சீனாவின் யுவான்வாங் 5 (வலது) இந்தியப் பெருங்கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வந்திருப்பது, அண்டை நாடான இந்தியாவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் தருவதை இந்திய வெளியுறவுத்துறை தவிர்க்கிறது. அதே சமயம், சீன கப்பலின் தன்மையைக் கருத்தில் கொண்டு அதை ஒருவித சந்தேக பார்வையுடனேயே இந்திய…
-
- 0 replies
- 582 views
- 1 follower
-
-
யுவான் வாங் 5: இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் - இந்திய பெருங்கடலில் ஆதிக்கத்தை சீனா உறுதிப்படுத்தியதா? 18 நிமிடங்களுக்கு முன்னர் சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் - 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது. இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார ரீதியில் இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், ஆரம்பம் முதல…
-
- 2 replies
- 321 views
- 1 follower
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜெனீவாவைக் கையாளும் புதிய அணுகுமுறை - தமிழர்களையும் உள்ளடக்கிய பொறிமுறை உருவாக்கத் திட்டம் செம்ரெம்பர் அமர்வில் மேலும் கால அவகாசம் கோர ரணில் முயற்சி -ஜெனீவா குழு கொழும்பு வருகை செப்ரெம்பர் மாதம் கூடவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது, பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்குக் கூடுதல் அழுத்தங்கள் முன்வைக்கப்படலாம். ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல்தீர்வு, இன அழிப்பு மற்றும் சர்வதேசம் கூறுகின்ற போர்க்குற்ற விசாரணைகள் குறித்த விடயங்கள் எதிலும் அந்த அழுத்தங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்க…
-
- 0 replies
- 298 views
-