அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இனப்பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையானால் புதிய அரசியல் கலாசாரம் வெற்றுச் சுலோகமே October 21, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையப்போகிறது. இந்த ஒருமாத காலத்தில் அவரும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தி பெரமுனயின் (ஜே.வி.பி. ) முக்கிய தலைவர்களும் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இலங்கை அரசியல் நிலக்காட்சியில் காணப்படக்கூடியதாக இருக்கும் மாறுதல்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள். பல அரசியல்வாதிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விடுவதற்கு தீர்மானித்ததை ஜே. வி.பி.யின் தலைவர்கள் பெரிய ஒரு மாறுதலாக குறிப்பிடுகிறார்க…
-
- 0 replies
- 262 views
-
-
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வருமா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் அக்கறை செலுத்தி வருகிறார். ‘சர்வகட்சி அரசாங்கம்’ என்பதன் மூலம், பொருளாதாரத்தில் வீழ்ந்துபோய், வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டை, மீளக்கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளை எடுப்பதே அவரது திட்டம். அனைத்துக் கட்சிகளும் ஒரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது, அதை நடைமுறைப்படுத்துவது மிக இலகுவாயிருக்கும். அத்துடன், மக்களை திருப்திப்படுத்துவதும், அல்லது குறைந்தபட்சம் சாந்தப்படுத்துவதும் பெருமளவுக்குச் சாத்தியமாகும் என்பதுதான், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதன் பின்னணியிலுள்ள சிந்தனையாக இருக்கும். வழமைபோல…
-
- 0 replies
- 391 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வில் அதிகரங்கள் விரியுமா, சுருங்குமா? – செல்வரட்னம் சிறிதரன்:- இந்த வருடம் செப்டம்பர் மாத நடுப்பகுதியாகிய இந்த வாரம் இலங்கை அரசியலில் மிகந்த முக்கியத்துவம் மிக்க கால கட்டமாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்த மாதத்திற்குரிய நாடாளுமன்ற அமர்வில் மூன்று முக்;கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளன. அவற்றில் நல்லாட்சி அரசாங்கத்;தின் அடிப்படை குறிக்கோள்களில் ஒன்றாகிய புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இரண்டாவதாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை, மாகாண சபைகளுக்கான தேர்தலில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான, 20 ஆவது அரசியலமைப்புத…
-
- 0 replies
- 402 views
-
-
யாழ் களத்தில் அரசியல் தெளிவு பெற கருத்துரைகள், கருத்துக்கள் எழுதுங்கள். சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் எங்கள் எல்லோருடைய அரசியல் விருப்பு, வெறுப்புகளை ஒப்புவிக்க முயற்சிப்போம்.
-
- 2 replies
- 502 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு சாத்தியமா? செல்வரட்னம் சிறிதரன் பிராந்திய பாதுகாப்பு, அரசியல் இராணுவ, பொருளாதார ரீதியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு இலங்கையின் அரசியல் நிலைமை ஸ்திரமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதேவேளை, மேற்கத்தேய நாடுகளும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளும் கால் பதிக்கத்தக்க நிலைமைகளை உருவாக்க வல்ல இனப்பிரச்சினைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதும் அவசியமாகும். இத்தகைய நிலைமையில், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆக்கபூர்வமான முறையில் பங்களிப்பு செய்து ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன் வர வேண்டும் இலங்கையில் தமிழர்கள் மீது ஓர் இன அழிப்பு நடவடிக்கையாக 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்…
-
- 0 replies
- 403 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி மீண்டும் பேசிய ஜனாதிபதி ரணில் என்.கே அஷோக்பரன் இலங்கையின் இனப்பிரச்சினையை இவ்வருட இறுதிக்குள் தீர்த்து வைப்பதில் ஆர்வமாக உள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை (01), தான் நிகழ்த்திய மே தின உரையில் மீண்டும் தெரிவித்துள்ளார். “இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் அடிப்படையில், நாட்டின் நீண்டகால இன மோதலைத் தீர்க்க, இந்த ஆண்டு இறுதிக்குள் ஓர் உடன்பாட்டை எட்ட எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், “இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, நாடு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் முன்னேற முடியும்” என்று தெரிவித்தார். அதில் ஒரு நிபந்…
-
- 2 replies
- 370 views
-
-
வடக்குக் -கிழக்கு ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது சீனாவைக் கட்டிப்போட அமெரிக்காவும் இந்தியாவும் கையாளும் உத்தி கோட்டாபய ராஜபக்சவுக்கு வசதியாகவுள்ளது ஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை வெறுமனே இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகவும், இலங்கையின் ஜனநாயக உரிமைக்கான போராட்டமாகவும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் மாற்றியமைத்து வருகின்றன. கோட்டாபய ராஜபக்ச சென்ற 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அதாவது ராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இவ்வா…
-
- 2 replies
- 806 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் தமிழர் தரப்பும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை முதல், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் ஆரம்பமாகி இருக்கின்றன. இது ஒரு பொன்னான வாய்ப்பு. இப்படிச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தானாக முன்வந்து, 2022 நவம்பரில் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, “இலங்கை தனது 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கும் 2023 பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்பதாக, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்” என்று கூறியதுடன், தமிழர் தரப்பை அதற்கான பேச்சுவார்த்தைக்கும் அழைத்திருந்தார். இதைத் …
-
- 0 replies
- 898 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எதிரான சக்திகளை மேலும் வலுப்படுத்தும் ஜனாதிபதியின் அணுகுமுறைகள் Veeragathy Thanabalasingham on August 17, 2023 Photo, THE TIMES OF INDIA இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புக்கு அது நடைமுறையில் இருந்துவரும் நான்கரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட இருபதுக்கும் அதிகமான திருத்தங்களில் வேறு எதுவும் 13ஆவது திருத்தம் போன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியது இல்லை என்று இந்தப் பத்தியில் ஏற்கெனவே சில தடவைகள் குறிப்பிட்டிருந்தோம். கடந்த வருடம் நடுப்பகுதியில் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வைக் காணப்போவதாகக் கூறிக்கொண்டு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப…
-
- 0 replies
- 267 views
-
-
இனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார் காரை துர்க்கா / “தமிழ் மக்கள், கடந்த 70 ஆண்டு காலமாக ஈழம், சமஷ்டி கேட்டுப் போராடி வருகின்றார்கள். 26 ஆண்டுகளாகத் துப்பாக்கி ஏந்திப் போராடினார்கள். ஆனால் ஈழத்தைப் பெற முடிய முடிவில்லை. தமிழ் மக்களுக்கு வேறு மொழி, கலாசாரம் உள்ளது. அதேபோல, முஸ்லிம் மக்களுக்கும் உள்ளது. ஆனால், அவர்கள் யார் அரசு அமைத்தாலும், அவர்களுடன் சேர்ந்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்று விடுகின்றனர். உங்கள் தலைவர்களோ, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, சமஷ்டி வேண்டுமெனக் கோரிவருகிறார்கள்” என ஒன்றிணைந்த எதிரணியின், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்முனை தமிழ்…
-
- 0 replies
- 386 views
-
-
இனப்பிரச்சினையை அங்கீகரித்தலே ஆரோக்கிய ஆரம்பமாக அமையும் sachinthaNovember 22, 2024 ன் வாக்களித்த முதலாவது தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலேயாகும். இத்தேர்தலில், அப்போது நவசமசமாஜ கட்சி சார்பாக போட்டியிட்ட வாசுதேவ நாணயக்காரவுக்கே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் எனது வாக்கை அளித்தேன். அத்தேர்தலில் குமார் பொன்னம்பலமும் தமிழ் வேட்பாளராக, தமிழர் நிலைப்பாட்டை முன்னிறுத்திப் போட்டியிட்ட போதிலும், எனது வாக்கை அவருக்கு நான் அளித்திருக்கவில்லை. நான், வாசுதேவ நாணயக்காரவுக்கு வாக்களித்தமைக்குக் காரணம் நான் இடதுசாரிச் சிந்தனை நிலைப்பாடு கொண்டதனால் அல்ல. மாறாக, இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனங்கள் குறித்த அங்கீகாரம் சார்ந்தும், இத்தேசிய இன…
-
- 0 replies
- 228 views
-
-
இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு இருக்கும் காலஎல்லை இதுவே January 26, 2023 — கலாநிதி ஜெகான் பெரேரா — பெருமளவு தாமதத்துக்கு பிறகு இறுதியில் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி தேர்தல்கள் மார்ச் 9 நடத்தப்படும் என்று தீர்மானித்திருக்கிறது. இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம் ஏற்கெனவே ஒரு வருடத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. ஒரு வருடத்துக்கும் அப்பால் தேர்தல்களை ஒத்திவைத்தால் அது சட்டவிரோதமான ஆட்சிமுறைச் சிக்கலுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதுடன் அதன் விளைவாக சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கும். நாடு இப்போது தேர்தல் திசை நோக்கி நகர்த்தப்படுகிறது. இது ஒன்றும் …
-
- 0 replies
- 815 views
-
-
இனம் சார்பாக ஜனாதிபதியுடன் பேசுவதில் தவறில்லை...
-
- 1 reply
- 577 views
-
-
இனரீதியான பிரதேச அதிகாரப் பரவலே ஒரே தீர்வு எஸ். டப்ளியூ . ஆர்.டி.பண்டாரநாயக்கவே முதலில் 1924 ஆம் ஆண்டு சமஷ்டி பற்றிக் குறிப்பிட்டதாக அண்மையில் சுமந்திரன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். அது கரையோர சிங்களப் பெரும்பான்மையினரிடமிருந்தும் கண்டி மற்றும் சப்ரகமுவ சிங்களவரின் தனித்துவங்களைப் பாதுகாக்க அவர் முன்வைத்த சமஷ்டியாகும். எனினும் அது அமுலாகியிருந்தால் சிங்கள மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு இல்லாமற் போய்விடும். வடமாகாண தமிழர்க்கும் தனித்துவப் பிரதேச வலிமை கிடைத்துவிடும் என நினைத்தே சிங்கள மகாசபையின் தலைவராக அவர் ஆனதும் அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டார். 1957 ஆம் ஆண்டு திருமலையில் நிகழ்ந்த தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் தந்தை செல்வா கிழக்க…
-
- 1 reply
- 445 views
-
-
முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்த்தர் குமார்குணரட்ணம் அவர்களுக்கு பகிரங்கக்கடிதம் 2 - இனவாத உப்பில் ஊறிய மிளகாய் சிவக்காது – நடராஜா குருபரன் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிதாமகரும் ஜே.வீ.பீயின் முன்னாள் அரசியற்குழு – மத்திய குழு – செயற்குழு உறுப்பினரும் அக்கட்சியின் இயந்திரம் என அழைக்கப்பட்டவருமான குமார் குணரட்ணத்திற்கு நான் எழுதிய முதலாவது பகிரங்கக் கடிதம் பல வாதப் பிரதி வாதங்களை தோற்றுவித்திருக்கிறது. அந்தப் பகிரங்க மடல் முகப்புத்தகத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியதுடன் என்மீது தனிப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படவும் ஏதுவாகஅமைந்தது. எனது முதலாவது மடலில் நான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதில் முன்னிலை சோசலிசக் கட்சியையும் அதன் முன்னணியான சம உரி…
-
- 0 replies
- 740 views
-
-
இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியும், தமிழ்த்தரப்பும் – பி.மாணிக்கவாசகம் 88 Views இராணுவ உளவியல் நிர்வாக வழிப்போக்கும், இனங்களைப் பிரித்தாளும் ஆட்சி முறையிலான ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் சிறுபான்மை தேசிய இன மக்களை மட்டுமல்லாமல் பெரும்பான்மை இன மக்களையும் பதம் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. சிங்கள பௌத்த மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள போதிலும், சிங்கள மக்களின் மனங்களை வெல்வதற்கு அரசு தவறியிருப்பதாகவே தென்பகுதியில் உணரப்படுகின்றது. குறிப்பாக கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களுடைய உடல்களுக்கு எரியூட்டும் விவகாரத்திற்கு முடிவு காணாமல் இழுத்தடிக்கின்ற அரசாங்கத…
-
- 0 replies
- 360 views
-
-
இனவாத தாக்குதல்கள்: முஸ்லிம்களின் தனித்துவங்கள் இதற்கு முன்னர், முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இடம்பெற்ற நேரங்களைப் போலவே, கடந்த மாதம் அம்பாறையிலும் இம்மாத ஆரம்பத்தில் கண்டி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்ற போதும் ஊடகங்களில், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் போவதாக, அரசாங்கம் கூறிவருகிறது. இம்முறை அரசாங்கம், ஒருபடி முன் சென்று, ‘பேஸ்புக்’, ‘வட்ஸ்அப்’, ‘வைபர்’ ஆகிய சமூக வலைத்தளங்களைத் தற்காலிகமாகத் தடை செய்தது. அத்தோடு, அதன் காரணமாக, இலங்கைக்கு விஜயம் செய்த ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் அதிகாரிகளோடு, ‘பேஸ்புக்’இல…
-
- 0 replies
- 850 views
-
-
இனவாத தொழுநோய் மாறாதவரை நாட்டுக்கு விமோசனம் இல்லை கலாநிதி சூசை ஆனந்தன் கடந்த இரு மாதங்களாக காலி முகத்திடலில் சுனாமி அலைகள் போல சீறி எழுந்த “கோட்டா கோ ஹோம்” என்ற மக்கள் எழுச்சி அலைகள் இப்போ பின்வாங்கி ஓய்ந்து போயுள்ளது.இதன் விளைவு, மகத்தான வெற்றிபெற்று சிம்மாசனத்தில் அமர்ந்து “நீங்கள் தேடிய தலைவன் நானே” என்று மார்தட்டிய ஒருவர் நாட்டைவிட்டு தப்பி ஓடி அகதியாய் அலைகின்றார்.ஏற்கனவே தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோற்றோடிய ஒருவர் ஆட்சிப் பீடம் ஏறியுள்ளார். இரும்புத் திரைக்குப் பின்னாலிருந்து தமக்கு வேண்டாத ஒருவர் தூக்கப்பட்டு வேண்டிய ஒருவர் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளார் போலவே படுக…
-
- 0 replies
- 315 views
-
-
இனவாத நிகழ்ச்சி நிரலுக்குள் இனப்பிரச்சினை விவகாரம் by A.Nixon - on July 9, 2015 படம் | Buddhika Weerasinghe/ Getty Images, THE HUFFINGTON POST இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செயற்படுகின்றன. இந்த இரண்டு பிரதான கட்சிகள்தான் இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி புரிந்தும் வருகின்றன. மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற கருத்து இந்த இரு கட்சிகளிடமும் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்களின் 60 ஆண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை குறைப்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் சார்ந்து சர்வதேச ரீதியாக வரக்கூடிய அழுத்தங்கள், யோசனைகளை தவிர்ப்பது. பிரதான நோக்கம்…
-
- 0 replies
- 239 views
-
-
இனவாத முதலீடு - பி.மாணிக்கவாசகம்…. October 21, 2019 தேர்தல்தான் ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதற்கு ஆதாரமாக இருப்பது வாக்குரிமை. மக்கள் தமக்குரிய ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வதற்கு இந்த வாக்குரிமையின் மூலம்தான் வழிசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுரிமை சுதந்திரமானது. நிர்ப்பந்தங்கள் அற்றதாக அமைந்திருத்தல் அவசியம் என்பது ஜனநாயகத்தின் கோட்பாடு. ஆட்சியை நிலைநிறுத்தக் கூடிய தேர்தல் முறையிலான இந்த வாக்குரிமையை மக்கள் அடிக்கடி பயன்படுத்த முடியாது. தேர்தல்களின்போது மட்டுமே பயன்படுத்த முடியும். அப்போதுதான் அது மிகவும் வலிமை பெற்றிருக்கும். ஜனநாயகத்தின் இந்த உன்னதமான அம்சத்தை, உன்னதமான உரிமையை மக்கள் பயன்படுத்தத் தவறக்கூடாது. ஏனெனில் ஆட்சிமைப்பதற்கு உள்ள ஒரேயொரு …
-
- 1 reply
- 1.1k views
-
-
இனவாத முற்றுகை அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களான தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் அடக்கியொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இதுவரையில் காரியங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. நாட்டில் இனவாதத்தையும் மத ரீதியாக இனக் குழுமங்களுக்கிடையில் வெறுப்பையும் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்கு எதிராக இனத்துவேசத்தை ஏற்படுத்தியமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள…
-
- 0 replies
- 570 views
-
-
மாவீரர் நாள் நினைவேந்தல் நிறைவுக்கு வந்து ஒரு வாரம் கடந்து விட்டது. ஆனால் மழைவிட்டும் தூவானம் விடாத குறையாக, மாவீரர்நாளால் உண்டான சலசலப்பு மாத்திரம் இன்னமும் குறையவில்லை. மாவீரர் நாளைப் பயன்படுத்தி எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம்,பெளத்த - சிங்கள மக்களை உசுப்பேத்தலாம் என்று தென்னிலங்கை தினமும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத்திலும் சரி, அதற்கு வெளியிலும் மாவீரர் நாளை வைத்துக்கொண்டு தென்னிலங்கை அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகள் இன்னமும் அடங்குவதாயில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னக்கோன், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று தொடர்ச்சியாக மாவீரர் நாள்…
-
- 0 replies
- 550 views
-
-
இனவாதக் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கை நேர்மையானதா கடந்த அரசாங்கத்தின் காலத்தில், முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் அவர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களையும் தாக்கி, முஸ்லிம்களையும் அவர்களது சமயத்தையும் நிந்தித்து வந்த, பொது பல சேனா கும்பல், கடந்த மாதம் முதல், மீண்டும் அதன் அடாவடித்தனத்தை ஆரம்பிக்க என்ன காரணம்? இது விளங்கிக் கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது. நாட்டில் பல இடங்களில், ஒரே காலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதாக இருந்தால், அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகத்தான் இருக்க வேண்டும். ஒரே கும்பல்தான் அவற்றில் ஈடுபட்டு வருகிறது என்பதும் தெளிவாகிறது. இதேகாலத்தில் பொது பல சே…
-
- 1 reply
- 327 views
-
-
இனவாதத் தடைச்சட்டம் தமிழர்களை ஒடுக்கும் புதிய சட்டமா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக அன்பழகன்:- 26 ஏப்ரல் 2015 ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கவும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை வளர்ப்பதற்காகவுமே இலங்கையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என பல சட்டங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழத் தமிழர் போராட்டத்தை ஒடுக்கும் இந்தச் சட்டங்கள் தமிழ் மக்களை கடுமையாக ஒடுக்கியுள்ளன. இதனால் தமிழ்மக்களின் இயல்பான வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இயல்பான வாழ்வை பாதிக்க வைத்தலின் ஊடாக போராட்டத்தை கைவிடச் செய்வதும் இந்தச் சட்டங்களின் நோக்கங்களாகும். இனவாதம், மதவாதம் ஆகியவற்ற…
-
- 1 reply
- 318 views
-
-
“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு” என்று ஒரு பலமொழியை தமிழ் பேச்சுவழக்கில் பல இடங்களில் உபயோகிப்பதைக் கண்டிருப்போம். அது தமிழில் மட்டுமல்ல ஆய்வுத்துறையில் இந்த பழமொழியின் உள்ளடக்கத்தை சகலரும் இதனை மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்துவார்கள். குறிப்பாக வர்த்தகம், வியாபாரம், முகாமைத்துவம் சார் கற்கைகளில் இதனை அதிகம் அறிந்துவைத்திருப்பார்கள். எதுவுமே நிலையில்லை. சகலதும் ஒரே சீராக இயங்குவதில்லை. மேலும் கீழுமாக “zigzag pattern” இல் ஏறி இறங்கி, இன்னும் ஏறி, இன்னும் இறங்கி என்று ஒரு அலையாகவே அனைத்தின் வளர்ச்சியும் பண்பாக இருக்கும். இவற்றை இன்னும் சொல்லபோனால் “peak” என்கிற உச்சத்தைக் கூட எதுவும் அடையும். ஆனால் அந்த “உச்சமும்” நிலையாக அங்கே தங்கி விடுவதில்லை. அது மீண்டும் இ…
-
- 0 replies
- 594 views
-