அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
அமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூன் 05 எதிர்வுகூறல்கள் சரிவரும் போது, மகிழ்ச்சியை விட, சோகமே மிகுதியாகிறது. உலகம் தொடர்ந்தும் நியாயத்துக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது. மனிதனை மனிதன், மனிதனாக மதிக்காத ஒரு மனிதகுலத்தின் அங்கமாக நாம் இருக்கிறோம் என்பதில் அச்சப்படவும் வெட்கப்படவும் நிறையவே இருக்கின்றன. இக்கணத்திலும், அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் குரல் கொடுக்காமல், மௌனியாகவே ஏராளமான மனித மனங்கள் இருக்கின்றன. அடக்குமுறையையும் அநியாயத்தையும் ஆதரிக்கும் குரல்கள் இப்போது, அமெரிக்காவில் நடப்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்;கும் நகைச்சுவையும் இங்கு நடந்தேறுகிறது. மறவாதீர்! ஓர் அநியாயத்தை ஆ…
-
- 2 replies
- 1.1k views
-
-
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பாராளுமன்றமும் அதற்குள்ள அதிகாரமும் புதிய அரசியலமைப்பும் ஓர் ஆய்வு இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இன்று வரை மூன்று அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டு வந்தது. 1948 ஆம் ஆண்டு முதல் சோல்பரி அரசியல் சட்டத்தின் கீழும் 1972ஆம் ஆண்டு முதல் முதலாவது குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழும் 1978 ஆம் ஆண்டு முதல் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழும் ஆளப்பட்டு வந்தது. தற்போது அமுலில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் அடுத்த பட்ஜெட் தொடருக்கிடையில் மாற்றப்படவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. ஆகவே நாலாவது அரசியலமைப…
-
- 0 replies
- 2.4k views
-
-
காணாத தேசத்திற்கு இல்லாத வழி : தங்கம் வன்னிப்பகுதியிலிருந்து 109 பெண்கள் இராணுவத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பான செய்தி பற்றி சிதறுசமூகத்தில் பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை ஊடகங்களில் இச்செய்தியை விமர்சிக்க முடியாத சூழலில் இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் ஊடகங்களில் நடைபெறுவது ஒருவகையில் ஆரோக்கியமானதே. தெற்காசிய நாடுகளையொத்த நிலையில் இலங்கையிலும் தந்தைவழிப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூக அமைப்பே காணப்படுவதாக நாம் இன்றும் கொள்ளவேண்டும். இச்சமூக அமைப்பில் பெண்கள் பத்னிகளாக, வீராங்கனைகளாக இன்னபிற புனைவுகளைக்குட்பட்டவர்களாகவோ அல்லது பரத்தையாகவோ, விபச்சாரிகள் போன்ற புனைவுகளுக்குட்பட்டவர்களாகவோ இருக்க …
-
- 0 replies
- 768 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலின் ஆதரவுத் தளம் சரிந்து விட்டதா? -அதிரதன் பலூனை ஊதஊத அது பெரிதாகி, பின்னர் வெடித்துப் போனால், ஒன்றுமில்லை என்றாகிப் போய்விடுவதைப் போலதான், தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான விரோதப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசியலில் கற்றுக்குட்டிகளும் கட்டாயம் தேவைதான். ஆனால், தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியலில் அவை, பன்றிக் குட்டிகளாக இருப்பதுதான் வினோதம். இவர்களை விடவும், “தமிழ்த் தேசியத்துக்காகவே எல்லாம்” என்று கூறிக்கொண்டே, தமிழ்த் தேசிய எதிர்ப்பைக் கக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள், பலூனுக்குள் காற்றை ஊதிக்கொள்ள முடியாத நிலைலேயே இருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல் சூழல், யுத்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசியத்தையும் உரிமை அரசியலையும் தக்கவைத்தல் கூட்டமைப்பின் தோல்வியிலேயே தங்கியுள்ளது லோ. விஜயநாதன் ஒரு பக்கம் உலக மனித குலத்தை அழிந்துவரும் கொரோணா நோயின் தாக்கமும் மறுபக்கம் அதன் மூலம் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் என உலக நாடுகள் சிக்கி தவித்துவருகின்றன. இது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு தமிழ் மக்களை மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல் மேலும் பாதித்துள்ளது. இந்தநிலையில் தான், அரசாங்கம் சிறிலங்காவின் 16ஆவது பாராளுமன்ற தேர்தலை நடத்துகின்றது. பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் திரட்சியடைந்த சிங்கள பெளத்த பெரும் தேசியவாதம் ஐக்கிய தேசிய கட்சியின் பிளவினூடாக இந்த தேர்தலில் மேலும் வலுவடைந்துவருகின்றது. வட-கிழக்…
-
- 0 replies
- 434 views
-
-
அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்ள அடிமைப்படுத்தப்பட்ட கருப்பின பெண்கள் Reuters 1515 முதல் 19-ம் நூற்றாண்டின் மத்தியில் வரை 1.25 கோடி ஆப்பிரிக்கர்கள் அமெரிக்க நாடுகளுக்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்டனர். அமெரிக்க நாடுகளுக்கு 16 முதல் 19-ம் நூற்றாண்டு வரை அடிமைகளாக அழைத்துவரப்பட்ட ஆப்பிரிக்க மக்கள் பற்றிய பல புதிய தகவல்களை மரபணு ஆய்வு ஒன்று வெளிக்கொண்டு வந்துள்ளது. 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அடிமை வணிகம், அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் எத்தகைய ’’மரபணு தாக்கத்தை’’ ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்த கூடுதல் தகவல்களை அறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது. …
-
- 0 replies
- 558 views
-
-
பொம்பியோவின் வருகையும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் - யதீந்திரா அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இலங்கை வரவுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. புதுடில்லியில் இடம்பெறும் இருதரப்பு அமைச்சர்கள் சந்திப்பிற்காக (U.S.-India 2+2 Ministerial Dialogue) வரும் மைக் பொம்பியோ, தொடர்ந்து கொழும்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார். இந்தியாவில் இடம்பெறும் இருதரப்பு சந்திப்பிற்கென அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பரும் வருகைதரவுள்ளார் ஆனால் அவர் இலங்கைக்கு வருவது தொடர்பில் இதுவரையில் எதுவிதமான தகவல்களும் இல்லை. ஆனால் அண்மையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் எஸ்பர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் தெலைபேசியில் உரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க…
-
- 8 replies
- 1.4k views
-
-
அரசே எங்கள் மகள் காணாமல் போனது எவ்வாறு... பதில் கூறு அரசே.... பதில் கூறு.., வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்... காணாமல் போவதும் அரசாலே.. கடத்திச் செல்வதும் அரசாலே.., குற்றம் செய்திருந்தால் கோட்டுக்கு கொண்டு வா.., எங்கள் பிள்ளைகளை மீண்டும் எங்களிடம் தா... தடுத்து வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடு, எனது அப்பா எங்கே? அவரை பார்ப்பதற்கு அனுமதி தா.., அனுமதி தா..., எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தந்துவிடு... இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு...,எங்கள் வாழ்க்கை இன்னும் தெருவில் தானா!!! இனியாவது எங்களை நிம்மதியாக வாழவிடு .. இந்தப் புலம்பல்கள் எல்லாம் எதற்காகவென்று நினைக்கின்றீர்களா.... வோறொன்றும் இல்லை. காணாமல் போன உறவுகளின் உள்ளக் குமுறல்களே இவை. …
-
- 0 replies
- 904 views
-
-
சீனா முன் அமெரிக்கா தோல்வி! 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா விலகல்; இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம் Bharati November 16, 2020 சீனா முன் அமெரிக்கா தோல்வி! 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா விலகல்; இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்2020-11-16T08:07:19+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore அ.நிக்ஸன் அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Regional Comprehensive Economic Partnership) (RCEP) ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. உலகின் 39சதவீத பொருளாதார கட்டமைப்புகளை இந்த நாடுகள் உள…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியப் பேரவை ? நிலாந்தன்… November 22, 2020 கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருந்து வரும் தமிழ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கூட்டமைப்பு பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு உருவாக்கப்பட்ட நிபுணர் குழுக்களோடு பேசுவதற்கு இந்தியா விருப்பம் கொண்டுள்ளது என்பதே அந்த செய்தியின் சாராம்சம் ஆகும். இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயும் பொருட்டு சில பத்திரிகை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டேன். ஒருவராலும் செய்தியின் மூலத்தை குறிப்பிட முடியவில்லை. இணையத்தில் கண்டெடுத்தது என்று கூறினார்கள்.அதாவ…
-
- 1 reply
- 750 views
-
-
அதிகரித்து வரும் பெளத்த மதவாதம் இலங்கை அரசியலானது ஒரு இரட்டைப் பிளவு கொண்டதாகவே எப்பொழுதும் இருந்து வந்துள்ளது என்பதை சுதந்திரத்திற்குப் பின்னுள்ள வரலாற்றுப் புள்ளிகள் எல்லாவற்றிலும் காணக்கூடிய ஒரு பொதுத்தன்மையாகும். பௌத்த மத ஆதிக்கம், சிங்களப் பேரினவாதம் என்ற இரு தண்டவாளங்களில் ஓடும் அரசியல் தொடரூந்தாக அல்லது இரட்டைப் பிறவிகளாக இலங்கை இருந்து வந்துள்ளது என்பதனை சுதந்திரத்திற்குப் பின்னுள்ள அரசியல் போக்குகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் இலங்கை அரசியலில் ஊடுருவிக் காணப்படும் பௌத்த மத வாதமும் விகாராதிபதிகளின் கடும் இன்று நேற்று உருவாகிய ஒரு விடயமல்ல. வரலாற்றுக் க…
-
- 0 replies
- 2.7k views
-
-
துணைவேந்தரின் வாக்குறுதியை நம்பத் தயாராக இல்லை – தமிழ் சிவில் சமூக அமையம் 32 Views “நினைவுத் தூபி அழிக்கப்பட்ட இடத்திலேயே மீள அதனை அமைப்பேன் எனச் சொல்லி “யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியிருப்பதை நாம் நம்பத் தயாராக இல்லை. இனப்படுகொலையை நினைவு கூரும் தூபியை நீக்கி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டது போல ‘சமாதானத்’ தூபியோ அல்லது யுத்த வெற்றி தூபியோ அமைக்கப்படலாம் என நாம் அஞ்சுகிறோம். நாம் எப்படி எவ்வாறு எதனை நினைவு கூர வேண்டும் என்பதனை நாமே தீர்மானிக்க வேண்டும்.” இவ்வாறு தெரிவித்திருக்கின்றது தமிழ் சிவில் சமூக அமையம். யாழ். பல்கலைக்கழக நிலைமை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அமையம் இ…
-
- 0 replies
- 480 views
-
-
அரசியலமைப்பாக்க சபையின் (Constitutional Assembly) வழிநடத்தல் குழு (Steering Committee) டிசம்பர் 10 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அறிக்கை பிற்போடப்பட்டது. அதற்குப் பதிலாக அன்றைய தினமே வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழிநடத்தல் குழுவின் ஒரு தற்காலிக உப குழு (adhoc sub-committee) ஒன்றின் அறிக்கையை தாக்கல் செய்தார். அரசியலமைப்பாக்க சபை மார்ச் 2016இல் உருவாக்கப்பட்ட போதே வழிநடத்தல் குழு ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு 6 உப குழுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன. அவ்வுபகுழுக்களின் அறிக்கை 19 நவம்பர் 2016 அரசியலமைப்பாக்க சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது இப்படியிருக்க ஏன் முன்னர் அறிவிக்கப்படாத ஓர் உபகுழு திடீரென உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழு…
-
- 0 replies
- 472 views
-
-
கட்சிப் பெயர்களும் இனவாதமும் -என்.கே. அஷோக்பரன் இனம், மதம் ஆகியவற்றின் பெயர்களைத் தன்னகத்தே கொண்ட அரசியல் கட்சிகளை, இனிப் பதிவுசெய்ய மாட்டோம் என்று, இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு, அண்மையில் அறிவித்திருந்ததாகச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செய்வதற்குத் தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சட்ட அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இனவாதம் அல்லது மதவாதம் அல்லது இன-மைய அரசியலை மாற்றியமைக்க, கட்சியின் பெயரில் குறித்த இன, அல்லது மதப் பெயரை இல்லாதொழிப்பதுதான் முதற்படி என்ற சிந்தனை ஒன்றில், அறியாமையின் விளைவு; அல்லது, அது வேறுகாரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையில் பேரினவாதத்தைத் தோற்றுவித்த பெருந்தேசி…
-
- 0 replies
- 520 views
-
-
இப்தார் அரசியல்: நோன்பு காலத்து கவலைகள் நோன்பு காலம் என்பது இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கே ஒரு புனிதமான காலப்பகுதியாகும். அவர்கள், அக்காலப்பகுதியில் தங்களுடைய மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவான, அமைதியான சூழல் நிலவ வேண்டியது அவசியமாகும். ஆனாலும், கடந்த சில வருடங்களாக அவ்வாறான அமைதியான சூழல் இலங்கையில் இல்லை என்பது மிகுந்த கவலைக்குரியது. நமது அனுபவங்களின்படி, கடந்த சில வருடங்களாக, இலங்கையில் இனவாத செயற்பாடுகள் முனைப்புப் பெற்றிருக்கின்றன. இந்த இனவாதச் செயற்பாடுகள், நோன்பு காலங்களில் தீவிரமடைகின்றன. ‘கிறீஸ் பூதம்’, ‘அபாயா பிரச்சினை’, ‘…
-
- 1 reply
- 324 views
-
-
வரவேண்டாம், வாருங்கள் - செல்வரட்னம் சிறிதரன்:- 03 நவம்பர் 2013 'பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆள்பவன்தான இறைவன்' என்றொரு சினிமா பாடல் வரியொன்று உள்ளது. பூஜ்ஜியம் என்பது ஒன்றுமில்லை, வெறுமை என்பதுதான் கருத்து. ஒரு வெறுமைக்குள்ளே ஓர் அரசை ஆள்வதென்பது முடியாத காரியம். இந்த முடியாத காரியத்தை அல்லது, இல்லாத ஒன்றைச் செய்வதென்பது, மிகமிக கெட்டித்தனமான செயலாகும். இந்தச் செயலைத்தான், இந்த இராஜதந்திரத்தைத்தான் இறைவன் செய்கின்றான் என்பதையே அந்தப் பாடல் வரி எடுத்துக் கூறுகின்றது. இந்த பூஜ்ஜியத்துக்குள் இராஜ்ஜியத்தை ஆள்கின்ற மாயவித்தையைத்தான், மந்திர விளையாட்டைத்தான், இராஜதந்திரத்தையே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, வடமாகாண சபையின் ஊடாகச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின…
-
- 1 reply
- 649 views
-
-
கடன் வலை: இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைப்பது சீனாவா? மேற்குலக நாடுகளா? ரங்க சிறிலால் பிபிசி சிங்கள மொழி செய்தியாளர், கொழும்பிலிருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீன் அதிபர் ஷி ஜின்பிங்: கோப்புப்படம் ராஜிய உறவு உலகில் அண்மை காலமாக அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக ''சீன கடன் பொறி" காணப்படுகின்றது. ''சீனாவின் கடன் பொறியில்" இலங்கை சிக்கியுள்ளதாக பல காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா, கடனை வழங்கி அந்நாடுகளின் பொருளாதார மையங்களை சீனா கையகப்படுத்துவதாக மே…
-
- 0 replies
- 456 views
- 1 follower
-
-
குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல் புதிய கட்சிகளின் உருவாக்கம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள், ஏட்டிக்குப் போட்டியான விமர்சனங்கள், எதிர்கால முதலமைச்சர் யார் என்ற அனுமானங்கள் போன்றவை, வடக்கின் அரசியல் களத்தை மீண்டும் சுவாரசியப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே கொள்கை, கோட்பாடுகளுக்கு அப்பால், எல்லாக் கட்சிகளும், அதற்குத் தயாராக வேண்டிய நிலையில் உள்ளன. ஜனவரி மாதம் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் முறையில், மாற்றங்கள் அறிமுகமாக இருப்பதாலும், மாகாண சபைத் தேர்தலும் கூட, தொகுதிவாரி முறையுடன் கூடியதாக நடக்க இருப்பத…
-
- 0 replies
- 665 views
-
-
காலிமுகத்திடல் போராட்டம் மேற்குலக வலை June 26, 2022 —- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—- 09.04.2022 அன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பெற்ற ‘கோட்டா கோ கோம்’ (GOTA GO HOME) போராட்டம் எழுபது நாட்களையும் தாண்டித் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இப்போராட்டம் ஒரு மக்கள் புரட்சியல்லவென்றும் மேற்குலகச் சக்திகளின் பின்னணியில் – தூண்டுதலில் கொழும்பு வாழ் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கச் சமூகத்தினரைப் பயன்படுத்தி அதாவது பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அதனை அரசியல் நெருக்கடியாக மடைமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையே இதுவென்றும் இப்போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே பல அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டன. இப்போராட்டத்தைத் தத்தம் அரசியல் நிகழ்ச்சி …
-
- 0 replies
- 372 views
-
-
குஜராத் இறுதி சுற்று: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கொடுத்த குஜராத் கௌரவம் அனல் பறக்கும் பிரசாரத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இரு கட்டங்களாக நடைபெறும் தேர்தல், இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால், 22 ஆண்டு கால பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு, குஜராத்தில் மிகப்பெரிய சவாலாக அமைந்து விட்டது. தேர்தல் கணிப்புகள் காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ‘குரல்வளையைப் பிடிக்கும்’ அளவுக்கு சரிக்குச்சமானமான போட்டி என்றாலும், பா.ஜ.க தரப்பில், பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விடலாம் என்றே இன்னும் கருதப்படுகிறது. …
-
- 0 replies
- 445 views
-
-
மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா? யதீந்திரா தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி மீண்டும் மக்கள் ஆணையை கோரி நிற்கிறது. தமிழரசு கட்சியின் பிரச்சாரங்களை பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, தாங்கள் எதைச் சொன்னாலும் மக்கள் ஆட்டு மந்தைகள் போல் தலையை ஆட்டிக் கொண்டிருப்பர். எனவே தங்களால் மக்களை இலகுவாக ஏமாற்றிவிட முடியுமென்றே அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. சம்பந்தன் முன்னைய தேர்தல்களின் போது எதைச் சொன்னாரோ அதையே தற்போதும் சொல்லிவருகிறார். மக்கள் சுயநிர்ணய உரிமையை வ…
-
- 0 replies
- 278 views
-
-
திலீபன்: நேற்று இன்று நாளை! Kuna Kaviyalahan
-
- 0 replies
- 619 views
-
-
இனவாத தாக்குதல்கள்: முஸ்லிம்களின் தனித்துவங்கள் இதற்கு முன்னர், முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இடம்பெற்ற நேரங்களைப் போலவே, கடந்த மாதம் அம்பாறையிலும் இம்மாத ஆரம்பத்தில் கண்டி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்ற போதும் ஊடகங்களில், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் போவதாக, அரசாங்கம் கூறிவருகிறது. இம்முறை அரசாங்கம், ஒருபடி முன் சென்று, ‘பேஸ்புக்’, ‘வட்ஸ்அப்’, ‘வைபர்’ ஆகிய சமூக வலைத்தளங்களைத் தற்காலிகமாகத் தடை செய்தது. அத்தோடு, அதன் காரணமாக, இலங்கைக்கு விஜயம் செய்த ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் அதிகாரிகளோடு, ‘பேஸ்புக்’இல…
-
- 0 replies
- 856 views
-
-
ஒரு பேரத்தில் negotiation இல் இரு தரப்புக்கும் இரு விடயங்கள் இருக்கும். 1. நிலை position 2. நலன் interest உதாரணம்: ஐந்து ரொட்டி துண்டுகளும் மூன்று கோப்பை நீரும் இருக்கிறது. இருவர் இதற்கு அடிபடுகிறார்கள். இங்கே இருவரின் நிலை : ஐந்து ரொட்டியும், மூன்று கோப்பை நீரும் எனக்கே வேண்டும். ஆனால், உண்மையில் முதலாமவருக்கு பசிக்கிறது ஆனால் அதிக தாகமில்லை. இரெண்டாமவருக்கு அதிக தாகம், குறைவான பசி. இங்கே, முதலாமவரின் நிலை : எனக்கு 5 ரொட்டி+3 கோப்பை நீர் வேண்டும் முதலாமரின் நலன் : 3 ரொட்டி+1 கோப்பை நீரில் அவர் பசியாறி, தாக சாந்தியும் ஆகி விடுவார். இரெண்டாமவரின் நிலை: எனக்கு 5 ரொட்டி+3 கோப்பை நீர் வேண்டும் இரெண்டாமவரின…
-
- 65 replies
- 3.8k views
-
-
இலங்கை பல்லின நாடா? பெரின நாடா? இலங்கையைப் போன்ற பலமத, பல்லின, பல்மொழி, பல கலாசார நாட்டில் ஒரு மத, ஒரு இன, ஒரு மொழி, ஒரு கலாசாரம் எனும் ரீதியில் முக்கியத்துவம் வழங்கப்படும் யாப்பு இயற்றப்படுமாயின் அது பல்லின தேசியத்துக்கும் பல்லின ஒற்றையாட்சிக்கும் பல்லின இறைமைக்கும் பல்லின சுயநிர்ணயத்துக்கும் பொருத்தமாக அமையாது. இதுவே ஆங்கிலேயர் இலங்கைக்குக் கடைசியாக வழங்கிய சேர் ஐவர் ஜெனிங்ஸின் சோல்பரி யாப்பு முன்வைத்த வடிவமாகும். எத்தனையோ நாடுகளை ஆட்சி புரிந்து அனுபவம் பெற்ற அவர்களின் கணிப்புதான் இது அரசியல் அறிவிலும் நிர்வாகத் தந்திரத்திலும் அவர்கள் நுட்பம் மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்கள் …
-
- 0 replies
- 825 views
-