அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
2022ல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஆரம்பம்!- தயான் எச்சரிக்கை வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட நீதிமன்றத்தை நிறுவி உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்படத் தொடங்கிவிடும். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.- இவ்வாறு ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் அமர்வுகளில் என்ன நடக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 2 replies
- 467 views
-
-
தன்னாட்சி உரிமையை அங்கீகரிப்பதே இனஅழிப்பைத் தடுக்க ஒரேவழி 96 Views சிறீலங்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை மீண்டும் ஏற்க மறுத்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஈழத்தமிழர்களுடைய உள்ளக தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதலில் அனைத்துலக நாடுகளும், அனைத்துலக அமைப்புக்களும் பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது மீண்டும் உறுதியாகியுள்ளது. இம்முறை ஐ.நா. தீர்மானங்கள் வெளிவந்ததின் பின்னர் சிறீலங்கா அரச அதிபர் செய்துள்ள சில வேலைகளையும், எடுத்துள்ள முடிவுகளையும் எடுத்து நோக்குவது; அடுத்து எதனைச் செய்து, எப்படிச் செய்து ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கலாம் என்பதில் தெளிவு பெற உதவும். சிறீலங்காவின…
-
- 0 replies
- 486 views
-
-
-
- 0 replies
- 668 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
வாய்ப்பேச்சால் பயனேதுமில்லை; நியாயமான செயற்பாடே தேவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இருகட்சிகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பாதையில் பயணிக்கும் இரு கட்சிகளே எனச் சிலர் கருதி வருகின்றனர். அதேபோன்று இந்தக் கட்சிகளின் தலைவர்கள் தாம் சார்ந்த கட்சிகளுக்கு உயிரைக் கொடுத்துழைக்கும் விசுவாசிகளாக இருக்கின் றனர் எனப் பலர் கருதி வருகின்றனர். ஆனால் நாட்டின் அரசியல் வரலாற்றை நோக்கும் போது இவை மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கை என்பதை உணர இயலும். ஐ.தே.கட்சியிலிருந்து டி.ஏ.ராஜபக்ச வுடன் வெளியேறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயகா சுதந்திரக் கட்சியை நிறுவினார். அதிலிருந்…
-
- 0 replies
- 398 views
-
-
ஜெனிவா தீர்மானத்தின்போது தமிழகத்தின் உணர்வுகளைப் புறக்கணித்து, சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதன்மூலம், காங்கிரஸ் கட்சி தமிழகத்துடன் முழுமையான போர் ஒன்றைத் தொடுத்துள்ளது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு நிகரான ஆக்கிரமிப்பு ஆட்சியொன்றை தமிழகத்தில் நடாத்தும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டதன் காரணமாகவே, திராவிடக் கட்சியான தி.மு.க. தமிழகத்தின் இனமான உணர்வைத் தட்டி எழுப்பி, தமிழகத்தின் ஆட்சியைத் தனதாக்கியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வரானார். அன்றுமுதல், காங்கிரஸ் கட்சி தமிழகத்தைத் தன் எதிரியாகவே பாவித்தது. ஆனாலும், தமிழகத்தில் தன் பிடி முற்றாகத் தளர்ந்துவிடக் கூடாது என்ற சிந்தனையில், நாவில் சிறிது தேனைத் தடவிக்கொண்டது. தமிழகத்தை வீழ்த்தி, அதன்மீத…
-
- 1 reply
- 562 views
-
-
புதிய இந்திய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான கொள்கையும் தமிழ் மக்களும் முத்துக்குமார் இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் சார்க் நாடுகளின் தலைவர்களை மட்டும் அழைத்து பதவி ஏற்பு வைபவத்தை மோடி நடாத்தியிருக்கின்றார். அதில் சர்ச்சைக்குரிய தலைவர்களான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினையும், பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஸ் செரீப்பினையும் அழைத்திருக்கின்றனர். அவர்களும் எவ்வித மறுப்புமின்றி நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்தத் தலைவர்களை அழைப்பது தொடர்பாக உள்நாட்டில் கூட்டணிக் கட்சிகளிடமிருந்துகூட எதிர்ப்புக்கள் வந்தன. மகிந்தரை அழைப்பது தொடர்பாக தமிழ்நாட்டின் கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது காங்கிரஸ் உட்பட ஏனைய தமிழ்நாட்டுக் கட்சிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. பல தமிழ் அமைப…
-
- 3 replies
- 827 views
-
-
‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல் இலங்கையின் அரசியல் கலாசாரமென்பது, முற்றுமுழுதாக ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தைக் கொண்டது என, யாரும் கூறிவிட முடியாது. நேரடியான இனவாதமும் மதவாதமும் பாலின ஒதுக்குதலும் காணப்படாவிட்டாலும், சுதந்திரம் பெறப்பட்ட பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், இவை அனைத்தையும் கண்டே வந்திருக்கிறோம். இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், சிறுபான்மைகளை அல்லது சிறுபான்மைகள் என நாம் கருதுகின்ற சில பிரிவுகளை ஒதுக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது என்பது, வருத்தத்துக்குரியதாகவே இருக்கிறது. முன்னைய அனைத்துத் தேர்தல்களையும் விட, இத்தேர்தல் மிக வேறானது என்பது, திரும்பத் திரும்பக் கூறப்பட…
-
- 0 replies
- 310 views
-
-
குறியிடும் அரசியல் : ஞானசுந்தரம் மனோகரன் ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் வரலாறு கண்டிராத மனித அழிவுகளை விட்டுச் சென்றுள இன்றைய சூழலில் இனி என்ன செய்யப்போகிறோம் என நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம். ஈழப் போரையும், தேசிய இனப் பிரச்சனையையும் மையப்படுத்தி ஆரோக்கியமான வாதப் பிரதிவாதங்கள் எம்மைச் சுற்றி நடைபெறுகின்றன. நூறு கருத்துக்கள் மோதும் இந்த விவாதச் சூழல் தொடரவேண்டும். கருத்துக்களைக் கருத்துக்களாக எதிர் கொள்ளல் என்பதும் அவை குறித்த எதிர்வினையை முன்வைத்தலும் இன்றைய தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒடுக்குமுறைக்கு உள்ளான தேசிய இனத்தின் இன்னொரு பகுதியினர் என்ற வகையில், இந்த நூற்றாண்டின் உலக நெருக்கடிகளுள் நெருங்கிச் செத்துப்போன மக்கள் கூட்டத்தின் த…
-
- 1 reply
- 736 views
-
-
-
- 2 replies
- 865 views
- 1 follower
-
-
சமூகத்தின் சகல தரப்புகளையும் அரசின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் அரவணைப்பதே உண்மையான நல்லிணக்கம் Photo, Eranga Jayawardena/AP மனித உரிமைகளில் அக்கறைகொண்ட பல அமைப்புகள் கடந்த வாரத்தை பல நிகழ்வுகளை நடத்துவதற்கு அர்ப்பணித்தன. குறிப்பாக, போராட்ட இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு மனித உரிமைகள் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறிவிட்டது. தேசிய பாதுகாப்புக்கும் உறுதிப்பாட்டுக்கும் முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் நீதிக்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகிறது. பொருளாதாரம் சீர்குலைந்துபோன பின்புலத்தில் நீதி தொடர்பான பிரச்சினை முன்னரங்கத்துக்கு வந்திருக்கிறது. பொருளாதார சீர்குலைவு சில பிரிவினரை பெருமளவுக்கு பாதிக்காமல் இருக்கக்கூடும் என்ற போதிலும் சனத்தொக…
-
- 0 replies
- 211 views
-
-
மாவீரர் துயிலுமில்லமும் – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும் … குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு. தமிழ்ச்செல்வன்… முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யார் நடத்துவது என்ற வாதப் பிரதிவாதங்களின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அதனை வடக்கு மாகாண சபையே நடத்தும் என நேற்று (07.05.18) அறிவித்துள்ளார் அறிவித்து அவர் தெரிவித்த கருத்துக்களில் முக்கியமானது என்னவெனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் பிரதேச சபைக்குட்பட்ட காணியாகும். எனவே உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் அந்த இடத்தில் நிகழ்வை நடத்தும் சட்ட ரீதியான உரிமை வடக்கு மாகாண சபைக்கே உரியது என்ற கருத்தே. ஆதாவது சட்டரீதியா…
-
- 1 reply
- 850 views
-
-
தமிழர் தேசிய உணர்வுடன் கிழக்கில் ஓரணிக்கான வாய்ப்பு? - இலட்சுமணண் ‘அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்’ என்பதுபோல், கிழக்கு மாகாணத் தமிழர்கள், தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணுவதற்குரிய அரசியல் பொறிமுறைக்கான அடித்தளத்தை, இட்டுக் கொள்வது சாத்தியமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். எவ்வாறிருந்தாலும், வடக்கில் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும், அங்கு தற்போதைய முதலமைச்சரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதா, அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதா, இல்லாவிட்டால் புதியவர் ஒருவரைக் கொண்டு வருவதா என்கிற போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், கிழக்கின் நிலைப்பாட்டைப் பொற…
-
- 0 replies
- 530 views
-
-
நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன. அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவின் புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலும் அடுத்த ஜனவரியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தேர்தலில் தமிழர்கள் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடுவதற்கும் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்த ஒரு விவாதத்திற்கான களமாக இதனை ஆரம்பிக்கிறேன். இந்த நிலையில் பல தெரிவுகள் குறித்து பல தரப்புகளிலிருந்தும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. 1. பொது வேட்பாளரை ஆதரிப்பது 2. தேர்தலைப் புறக்கணிப்பது 3. தமிழர் தரப்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி பலத்தை (?) காட்டுவது 4. தமிழ் முஸ்லிம் தரப்புகள் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்துவது 5. மகிந்தரை ஆதரிப்பது இதைவிட வேறு தெரிவுகளும் உ…
-
- 21 replies
- 1.3k views
-
-
செயலணிக்கான அழைப்பும் கூட்டமைப்பின் முடிவும் வடக்கில் அபிவிருத்தி அரசியல் பரபரப்பாகியிருக்கின்றன. பல்வேறு அமைச்சர்கள் பயணங்களை மேற்கொண்டதன் மூலம், வடக்கில் அரசியல் ரீதியான அரச நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்திருக்கின்றன. அமைச்சர்கள் மட்டுமல்லாமல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்கூட, வடக்கிற்கு விஜயங்களை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கின்றனர். பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றனர். இந்த நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக மயிலிட்டி துறைமுக புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதியின் பங்கேற்றலுடன் நடந்தே…
-
- 0 replies
- 364 views
-
-
இது எங்கள் தார்மீகப் பொறுப்பு! நிறான் அங்கிற்றல் படம் | JDS மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர ஆகியோர் முறையே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் பதவியேற்றமையானது போர்க் குற்றங்கள் மற்றும் யுத்தத்தின்போது மனுக்குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்செயல்கள் போன்ற விடயங்களிலே நீதிக்காகப் போராடுவோர் தமது போராட்டத்தைத் தொடரும் முயற்சிகளிலே பெரும் மாற்றம் ஒன்றைக் கொணர்விக்க வேண்டிய தேவைக்கு உள்ளாக்கியுள்ளது. புதிய அரசும் அதன் ஆட்சி வடிவமும் – குறிப்பாக மனித உரிமைகள் விடயத்திலே சர்வதேச அரசியலையிட்டதான அதன் அணுகுமுறை – ராஜபக்ஷ ஆட்சியைவிட அடிப்படையிலேயே வேறுபட்டதாகவே இருக்கும். எனவே, ராஜபக்ஷவுக்கு எதிராகக் கையாண்ட சாணக்கியமும் தந்…
-
- 0 replies
- 625 views
-
-
புதிய பிரதமர் நியமனம்; அரசியலில் எதுவும் நடக்கும். எப்படியும் நடக்கும்!… கருணாகரன். அகரன்October 28, 2018 மழை தூறிக்கொண்டிருந்த முன்னிரவில், இயக்கச்சியில் கடையொன்றின் விறாந்தையில் நின்றபடி தேநீர் பருகிக் கொண்டிருந்தோம். எங்களுக்குப் பக்கத்தில் இன்னும் இரண்டுபேர் வெளி இருக்கையில் உட்கார்ந்திருந்தனர். இருந்தாற்போல ஒருவர் துடித்துப் பதைத்தபடி எழுந்து “மகிந்தவைப் பிரதமராக்கீட்டாங்கள்… இந்தா செய்தி வந்திருக்கு. படமும் போட்டிருக்கு…” என்றபடி கையிலிருந்த மொபைலைக் காட்டினார். முகமும் குரலும் பரபரத்துக் கிடந்தது. இதை யார்தான் நம்புவார்கள்? ஆனால், அவர் சொன்னது உண்மையே. கடைக்காரர் தொலைக்காட்சியை இயக்கினார். நேரலையில் பதவியேற்புக் காட்சிகளும் அதைத் தொடர்ந்த நிக…
-
- 0 replies
- 802 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தமிழில் கவின்:- சர்வதேச யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைப் படையினரின் பெயரை புனர்நிர்மானம் செய்ய சிறந்த சந்தர்ப்பமாக நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்வினை பயன்படுத்திக் கொள்ள தூர நோக்குடன் ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிக்கின்றனர். இதன் ஓர் கட்டமாக நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்வினை பயன்படுத்திக் கொள்ள பிரதமரும் ஜனாதிபதியும் தீர்மானித்துள்ளனர். நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். உலகின் எந்தவொரு மூலையில் அனர்த்தம் ஏற்பட்டாலும் அந்த அனர்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள் கொடுப்பது நாகரீகமான மனித சமூகத்தின் த…
-
- 0 replies
- 227 views
-
-
சிறிதரன் எதிர்நோக்கும் சவால்கள் எம்.எஸ்.எம். ஐயூப் தமிழர்களின் அரசியலைப் பற்றிய சில தென் பகுதி ஊடகவியலாளர்களின் அறிவு எந்தளவு என்பதை அவர்கள் இலங்கை தமிழ் அரசு கடசியின் புதிய தலைவர் தெரிவைப் பற்றி கடந்த 21 ஆம் திகதி எவ்வாறு அறிக்கையிட்டார்கள் என்பதன் மூலம் தெரிகிறது. அவர்கள் தமிழ்த் தேசியகடக கூட்டமைப்பையும் இலங்கை தமிழ் அரசு கட்சியையும் குழப்பிக் கொண்டே செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். 1949 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்டு சொற்ப காலம் சென்றதிலிருந்து இலங்கையில் பிரதான தமிழ்க் கட்சியாக இருக்கும் தமிழரசு கட்சி இலங்கை வரலாற்றில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருக்கும் நிலையிலேயே சில தென்பகுதி ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவ…
-
- 0 replies
- 527 views
-
-
தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள் 07/24/2015 இனியொரு... நான்கு தசாப்தங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் இழப்பும் தியாகமும் இன்று வெறுமனே அரசியல் பிழைப்பு நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படுக்கொண்டிருக்கிறது. இன்னொரு போராட்டம் ஆரம்பமாகிவிடக் கூடாது என்பதற்காக அன்னியர்களின் அடியாட்களும், பேரினவாதிகளும், தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களும் மிகவும் அவதானமாகக் காய் நகர்த்துகின்றனர். கடந்த காலப் போராட்ட உணர்விலிருந்து மக்களை விடுவித்து, வட கிழக்கு உட்பட இலங்கை முழுவதையும் சூறையாடும் அன்னிய நிகழ்ச்சி நிரல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இலங்கையில் பாராளுமன்ற அரசியல்வாதிகளும், புலம்பெயர் நாடுகளில் தேசிய வியாபாரிகளும் தமிழ்ப் பேசும் மக்களை அறியாமை இருளில் அமிழ்த்தி எதிர்கால ச…
-
- 1 reply
- 380 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 03:21 PM கலாநிதி ஜெகான் பெரேரா போர் முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை என்பதை போர் முடிவின் பதினைந்தாவது வருட நிறைவு தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது. இராணுவ நடவடிக்கையின் களமாக இருந்த வடக்கிற்கும் கிழக்கிற்கும் வெளியே வழமைநிலை உணர்வு இருக்கிறது. போரின் நினைவு அருகிக்கொண்டு போகிறது. இந்த நிலைவரம் அரசாங்கம் மற்றைய பிரச்சினைகளுக்கு மிகவும் குறிப்பாக அதிகப்பெரும்பான்மையான மக்களின் வாழ்வில் இன்னமும் தொடர்ந்து அவலத்தை ஏற்படுத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி மீது கவனத்தைச் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கமுடியும் என்ற ந…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
சம்பந்தன் வீட்டில் சந்திக்கத் தயாரா? காரை துர்க்கா / 2019 ஜூன் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:24 Comments - 0 யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையம்; பரபரப்பான காலை நேரம்; கால்கள், பாடசாலைகளுக்கும் காரியாலயங்களுக்கும் வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு நடுவே, அன்றைய தினப் பத்திரிகையோடு முதியவர்கள் இருவர், கலகலப்பாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர். “மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார். மைத்திரிக்கு வாக்களித்ததையிட்டு கவலை கொள்கின்றோம் - மாவை தெரிவிப்பு” எனப் பத்திரிகை ஒன்றில், குறிப்பிடப்பட்டிருந்த செய்தியை, இவர்களில் ஒருவர், இன்னொருவருக்கு வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தார். “அப்ப என்ன, ரணில் இவைய ஏமாத்த இல்லையாமே? உது என்ன, கதை விடுகினம், கண்டிய…
-
- 0 replies
- 593 views
-
-
கல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 26 புதன்கிழமை, மு.ப. 10:09 Comments - 0 கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம், தமிழ் மக்கள் மத்தியில் பலகாலமாக உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஒத்துழைப்பை, நிபந்தனைகள் ஏதுமின்றிக் கூட்டமைப்பு வழங்கி வந்திருக்கின்றது. குறிப்பாக, மைத்திரியின் ‘ஒக்டோபர் சதிப்புரட்சி’க் காலத்தில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக, கூட்டமைப்பு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என்பது, நேரடிப் பங்காளிக் கட்சிகள் வெளிப்படுத்தியதைக் காட்டிலும் அதிகமானது. அப்படி…
-
- 0 replies
- 510 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வீ.தனபாலசிங்கம் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு நான்கு தசாப்தகாலத்தில் 7 ஜனாதிபதி தேர்தல்களை நாடு சந்தித்திருக்கிறது.இவ்வருட இறுதியில் நடைபெறவிருப்பது 8 வது ஜனாதிபதி தேர்தலாகும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு (போட்டியிடுவதை தவிர்த்த இரு சந்தர்ப்பங்களை தவிர)அதன் வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசிய கட்சி பிரச்சினைகளை எதிர்நோக்கியதில்லை. 1977 ஜூலை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தபோது பிரதமராக பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன இருமாத காலத்…
-
- 0 replies
- 413 views
-