Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஆட்சி மாற்றத்தில் இந்திய, அமெரிக்க தரப்புக்கள் ஆர்வம் காட்டுகின்றனவா? - யதீந்திரா ஆட்சி மாற்றம் தொடர்பில் எதிரணிகள் மத்தியில் பலவாறான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பின்னணியில் இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், இலங்கை தொடர்பில் கரிசனை கொண்டிருக்கும் இந்திய மற்றும் அமெரிக்க தரப்புக்களும் ஆட்சி மாற்றத்தில் ஆர்வம் காட்டுகின்றனவா என்னும் கேள்வியெழுகிறது. அரசாங்க தரப்பினர் எதிரணிகளின் கூட்டணிக்கு பின்னால் சில சர்வதேச சக்திகள் தொழிற்படுவதாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், ஆளும் தரப்பின் தேர்தல் பிரச்சாரங்களின் போது மேற்கு மீதான எதிர்ப்பு அதிகம் வெளிப்படுவதற்கான புறச்சூழலே தெரிகிறது. எனவே இத்தகையதொரு பின்புலத்தில், மேற்குலக சக்திக…

  2. திட்டமிடப்படாத கிரவல் அகழ்வும் திட்டமிட்டே அழிக்கப்படும் வன்னிக் காடுகளும் – மு.தமிழ்ச்செல்வன் எவனொருவன் திட்டமிடாமல் செயற்படுகின்றானோ அவன் திட்டமிட்டே தோல்வியை தழுவிக்கொள்கிறான் என்பது ஒரு பழமொழி. இது அனைத்து வகையான செயற்பாடுகளுக்கும் பொருந்தும். மிக முக்கியமாக அபிவிருத்தி பணிகளின் போது சிறந்த திட்டமிடல் அவசியம் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் இது கட்டாயம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் வன்னியின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் போது இந்த திட்டமிடலுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும்பும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக அபிவிருத்திக்கான கிரவல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட…

  3. சாதியவாதிகளால் நிரம்பும் தமிழ்த் தேசிய அரசியல் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி விக்னேஸ்வரன், தன்னுடைய சாதியை அறியும் நோக்கில் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஐங்கரநேசன் அண்மையில் வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், விக்னேஸ்வரன் அணியில் ஐங்கரநேசன் முக்கிய பங்கை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்திலேயே, ஐங்கரநேசனின் சாதியை விக்னேஸ்வரன் அறிய முயன்றிருக்கிறார். தன்னுடைய அணியில் முக்கிய நபராகச் செயற்பட்ட இன்னொருவரின் சாதியை சுட்டிக்காட்டியே, ஐங்கரநேசனின் சாதியையும் விக்னேஸ்வரன் அறிய விரும்பி இருக்கிறார். தம…

    • 2 replies
    • 1.1k views
  4. இன்றுவரை சீனா தவிர்ந்த எந்த ஒரு வெளி நாடும் மகிந்தவை வாழ்த்தவில்லை. இதற்கு முக்கியமான காரணம், யுத்த விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒருவர், அல்லது பதில் சொல்ல வேண்டிய ஒருவர், பின்புறம் வழியாக பதவிக்கு வர முனைவதும் அந்த விடயத்தில் சீனா காட்டும் பேரார்வமுமே ஆகும். பதவியினை மீள பெறவே ஜனாதிபதியா இருந்த மகிந்தர் குருநாகல் மாவட்ட பா உ ஆக பாராளுமன்று புகுந்தார் என்ற காரணத்தினால், இவர் மீண்டும் கொல்லைப்புற வழியாக நுழைந்தால், அசைக்க முடியாத சர்வாதிகாரி ஆக மாறுவது தவிர்க்க முடியாது என வெளிநாடுகள் கருதுகின்றன. நாட்டின் மிக உயர் பதவி வகித்த ஒருவர், ஓய்வுக்கு போகாது, மீண்டும் கீழ்நிலை பதவி ஒன்றினை எடுத்தபோதே, பலருக்கு சந்தேகம் இருந்தது. இது இப்போது உறுதிப்படுத்தப்…

    • 12 replies
    • 1.9k views
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெடாசியன் பதவி, பிபிசி உலக செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தங்கள் நாடுகளை நிறுவியதற்காக நினைவில் கொள்ளப்படும் உலகத் தலைவர்கள் பட்டியலில் டேவிட் பென்-குரியனும் ஒருவர். மே 14, 1948 அன்று, அல்லது யூத நாள்காட்டியின் படி 5708 ஆம் ஆண்டின் இயார் மாதத்தின் 5 ஆம் தேதியில், டெல் அவிவ் அருங்காட்சியகத்தில் இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தவர் அவர்தான். அன்று பாலத்தீனத்தின் பிரிட்டிஷ் ஆட்சி சட்டப்பூர்வமாக காலாவதியானது; பிரிட்டிஷ் படைகள் இன்னும் வெளியேறவில்லை. பிரகடனத்தை தாமதப்படுத்துமாறு அமெரிக்கா அவருக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் பென்-…

  6. ஈ.பி.ஆர்.எல்.எவ் வலைக்குள் விக்னேஸ்வரன் கே. சஞ்சயன் / 2019 பெப்ரவரி 08 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:40 விடுதலைப் புலிகளைக் கொலைகாரர்களாக அடையாளப்படுத்தும் ஆவணமொன்று, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதை, வெளியிட்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மாநாடு நடந்த அரங்கில், அந்த ஆவணப் பதிவை வெளியிட்டு வைத்தவர், வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன். அதில், தமது கட்சியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்டவர்கள் விடுதலைப் புலிகளால், படுகொலை செய்யப்பட்டதாக மாத்திரம் அந்த வரலாற்று ஆவணக் குறிப்பு வெளிப்படுத்தவில்லை. ‘கந்தன் கருணை’யில் 60 பேர் படுகொலை…

  7. Courtesy: Mossad இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வ…

      • Like
    • 2 replies
    • 396 views
  8. நீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம் சிறீலங்கா அரச பயங்கரவாத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக வளர்க்கப்பட்ட இஸ்லாமிய அடிப்டைவாதம் என்ற பயங்கரவாதம் தனது கோரப்பற்களை மீண்டும் தமிழ் மக்கள் மீதும் வெளிநாட்டவர்கள் மீதும் பதித்துள்ளது. சிறீலங்காவில் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 369 பேர் கொல்லப்பட்டதுடன், 600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தமக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களை சிறீலங்கா அரசு உதாசீனப்படுத்திய அதேசமயம், சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ் என்ற அமைப்புடன் இணைந்தே இந்த …

    • 0 replies
    • 852 views
  9. தினமென் சதுக்க படுகொலைகளை உலகம் மறக்கவிடமாட்டோம் ரோஜினா சியாவோக்கிங் ஹீ கார்டியன்- தமிழில் - ரஜீபன் 1989 இல் தினமென் சதுக்கத்தில் படையினரால் சுடப்பட்ட இளைஞன் ஒருவனின் சகோதரனனை கட்டுப்படுத்துவதற்கு தான் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை லயனே நினைவுகூறுகின்றார். அவன் சிறியவன் ஆனால் பெரிய மனிதர்களை போன்று கதறினான் என அவர் தெரிவிக்கின்றார். 1989 இல் தினமென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானவேளை லயனே ஹொங்ஹொங் பல்கலைகழகத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்தார்.ஆர்ப்பாட்டங்கள் பற்றி அறிந்ததும் அதற்கு ஆதரவு வழங்குவதற்காக அவர் தினமென் சதுக்கத்திற்கு சென்றார். யூன் 3 ம் திகதி சீனா 200,000 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய படையினரை அப்பாவி பொதுமக்க…

  10. சுகாசினி பற்றிய பதிவில் தொடர மனமில்லை. சுய அடையாளத்துடனேயே ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு தயாராகாத எம் இனம் முகமற்ற இணையத்தில் எதை எழுதும் என்று சொல்ல தேவையில்லை . தமிழ் அரங்கத்தில் தொடராக வெளிவரும் நேசனின் "புளொட்டின் அராஜகத்தை " விடாமல வாசித்து வரும் நுணாவிலானுக்கு நன்றிகள் . எமது போராட்டத்தில் நடந்த சரி ,பிழை என்பவற்றை விமர்சனம் செய்யாமல் ,இன்னமும் தொடர்ந்து இயங்குபவர்கள் கடந்த காலங்களில் நடந்ததை சுயவிமர்சனம் செய்யாமல் நாம் ஒரு நேர்மையான அரசியல் செய்ய முடியாது என்பதுதான் என்கருத்து. இங்கு பலர் மற்றவர்கள் மேல் புழுதிவாரி தூற்றிகொண்டு ஆனால் தம்மை அல்லது தாம் சார்ந்த இயக்கத்தை எதுவித விமர்சனதிற்கும் உட்படுத்த தயாராகவும் இல்லை, உட்படுத்தவும் கூடாது என்ற தொனியி…

  11. KANNIYA OR UNITED SRI LANGLKA? BALL IS IN SINHALESE COURT. கன்னியாவா ஐக்கிய இலங்கையா- பந்து சிங்களவர்களின் ஆடுகளத்தில்’ - வ.ஐச.ஜெயபாலன் கவிஞன். . கன்னியா ஆக்கிரமிப்பால் தமிழ் இளைஞர்கள் மீண்டும் தனிமைப் படுகிறார்கள் என்பதை சம்பந்தன் ஐயா ரணிலுக்கும் சிங்கள தலைமைகளுக்கும் உணர்த்தவேண்டிய கடைசி சந்தர்பம் உருவாகியுள்ளது. சம்பந்தன் ஐயா உறுதியாகவும் உரத்தும் உடனடியாகவும் குரல்கொடுக்க வேண்டும். . தமிழரையும் முஸ்லிம்களையும் பிழவுப்படுத்திக் கிழக்கை கைபற்ற முனையும் சிங்கள புத்த இனவாதிகள் ஒருபோதும் வெல்லப்போவதில்லை. இலங்கையின் இறைஆண்மையை அழிக்கும் ஒரு போராட்டத்திலேயே பெளத்த பிக்குகள் ஈடுபட்டிருக்கிறார்கள். சிங்கள பவுத்த இனவாதிகள் தொடர்ந்து இரண்டுதடவை அதிஸ்ட்ட வெற்றிவாய்ப்…

    • 0 replies
    • 457 views
  12. தனது சுய­நல அர­சியலிற்காக மக்களிடையே பாரிய பிளவை ஏற்படுத்தி, சிறு­பான்மையினரை ஏமாற்றுகிறார் ரணில்..! வி.கே.ரவீந்­திரன் "கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் தொடர்­பான முஸ்லிம் தரப்­பி­னரின் நிலைப்­பாடு, நிபந்­தனை இன்று மரு­த­மு­னைக்­கான ஒரு புதிய பிர­தேச செய­ல­கத்தை உடன் பெற்றுக் கொள்­வ­தாக இருக்­கின்­றது. இதற்கு நற்­பிட்­டி­முனை, பெரி­ய­நீ­லா­வணை ஆகிய பிர­தே­சங்­களை உள்­வாங்­கு­வ­தென்ற திட்­டத்­தையும் வகுத்­தி­ருக்­கின்­றார்கள்" வடக்கு ,தெற்கு, மலை­யகம் சார்ந்த அர­சியல் வாதி­களின் கவனம் முற்­று­மு­ழு­தாக கிழக்கை நோக்கி திரும்பி இருக்­கின்­றது. அத்­த­கை­யதோர் நிலையில் ஆள் மாறி ஆள் அடிக்­கடி வந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக த…

    • 1 reply
    • 583 views
  13. ஶ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தல் - தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது? 👆🏿 ஶ்ரீலங்கா தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி என நண்பர் அனுப்பியிருந்தார். பார்த்து கருத்துக்களை வையுங்கள். தேர்தலில் வாக்களிக்கும் தாயகத் தமிழ் உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் எனவும் கேட்டிருந்தார். ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர திசநாயக்க வெற்றி பெற்று, உடனடியாகவே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலும் நடக்கவுள்ள சூழலில் பல தமிழ் யூடியுப்பர்கள் அநுர அலைக்குப் பின்னால் போயுள்ளது தாயகத்தையும், தேசியத்தையும் நேசிப்பவர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க ஓ…

  14. "ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கொரு புதமை" தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருந்தது ஒற்றுமையின்மையே! அதை உணராமல், இன்னும் தொடர்ந்த ஒற்றுமை அற்ற தமிழ் தலைமைக்கு இது ஒரு பாடமாகட்டும்!! ஆனால் இனியாவது திருந்துவார்களா ?? இன்று சமதர்ம சமுதாயம் மலர்வதற்கும் மக்களின் ஒருங்கிணைப்பும் மனங்களின் ஒருமைப்பாடும் இன்றியமையாத தேவைகள். நாடு நன்னாடாகவும் வளத்தில் பொன்னாடாகவும் திகழ்வதற்கு முழுமுதற்காரணமாக விளங்குபவர்கள் அந்நாட்டு மக்களே ஆவர் இதைத் தான் ஔவையார் "நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே" என்றாள். மலைநாட்டவர், கடல்பகுதியினர், மருதநிலத்தவர், …

  15. எழுக தமிழை ஆதரித்து பல்வேறு ஈழ ஆதரவு சக்திகளும் ஒன்றுபட்டுவருகின்றன. இருப்பினும் ஆங்காங்கே சில முரண்பட்ட செய்திகளும் தகவல்களும் வெளிவராமலில்லை. எழுக தமிழ் நிகழ்வுகளின் வெற்றியை எவ்வாறாயினும் குழப்ப வேண்டும் என்பதுதான் அவ்வாறான செய்திகளதும் தகவல்களினதும் உள்நோக்கமாகும். இது ஒரு கட்சிக்கு சார்பானது, இதனால் விக்கினேஸ்வரன் பலமடைவார் என்றவாறான பிரச்சாரங்கள் அனைத்தும் மேற்படி உள்நோக்கத்தின் விளைவே! ஒரு மக்கள் இயக்கமான தமிழ் மக்கள் பேரவை, அதனுடன் கொள்கை அடிப்படையில் உடன்படக் கூடிய அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, மக்களுக்காக போராடும் போது, குறித்த அரசியல் கட்சிகள் இதனால் பயனடையும் என்று வாதிடுவதானது, அடிப்படையிலேயே தவறானதொரு புரிதலாகும். இவ்வாறு வாதிடுபவர்கள் எவ…

  16. அநுரகுமார முன்னிலையில் 13 வது திருத்தம் பற்றி பேசாமல் மோடி இலங்கை தமிழர்களுக்கு கூறிய செய்தி? December 23, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க கடந்த வாரம் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் கடந்த வருடம் அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட இந்திய விஜயத்தில் இருந்து எந்த அடிப்படையில் வேறுபடுகிறது? இலங்கையின் ஜனாதிபதிகள் பதவியேற்ற பிறகு தங்களது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக புதுடில்லிக்கு செல்வது ஒரு சம்பிரதாயமாக இருந்துவருகிறது. அதன் பிரகாரம் திசாநாயக்கவும் இந்தியாவுக்கு சென்று வந்திருக்கிறார். மூன்றாவது தடைவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடி இரு நாடுகளுக்கும் இடையிலான உ…

  17. [size=5]தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போகுமா?[/size] [size=1][size=4]ஆக்கம்: கே. சஞ்சயன்[/size][/size] [size=4]அண்மையில் மட்டக்களப்பில் நடந்த தமிழரசு கட்சியின் மாநாடு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு வாதப்பிரதி வாதங்களைத் தோற்றுவித்துள்ளது.[/size] இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரை சிங்களத் தேசியவாதிகளால் அச்சத்துக்குரியதொன்றாகப் பார்க்கப்படுகிறது. [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதம் பேசுவதாகவும், அவர்கள் இன்னமும் ஈழக்கோரிக்கையைக் கைவிடவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.[/size] [size=4]இன்னொரு பக்கத்தில் தம்மை யதார்த்தவாதிகளாக காட்டிக் கொள்…

  18. தமிழகத்தின் நிலைமையோ இன்று கன்னடத்தில் இருந்து வந்தவர்களும்,தெலுங்கர்களும் , மலையாளிகளும் வந்து தமிழகத்தை அடக்கி ஆள்வதும்.மலையாள நிறுவனங்கள் தமிழக பொருளாதாரத்தை கொள்ளையடிப்பதும்,தமிழகத்தின் வளங்கள் பிற இனத்தவருக்கு வழங்கப்பட்டதும்.தமிழகத்தில் உயர்பதவிகளை பிற இனத்தவர் ஆக்கிரமிப்பதும்.தமிழ் தமிழ் எனச்சொல்லி ஒரு கூட்டமும்,பார்ப்பானிய ஆதரவு என ஒரு கூட்டமும் கொள்ளையடிப்பதும் இங்கே தான். பணக்காரன் கொலை செய்தால் தற்கொலை என்பதும் ,அதே ஒரு ஏழை கொலைசெய்தால் அவனுக்கு ஆயுள் தண்டனை அளிப்பதும் இங்கே எழுதப்படாத அரசியல் நீதி ஆகிப்போனது.இந்தியாவை போன்றதொரு பாரம்பரியம்மிக்க நாட்டில் மதத்தால் பிரித்து மோதவிடுவதும்,அரசு அலுவலகங்களில் லஞ்சமும்,அரசு அலுவலர்களின் பொறுப்ப…

  19. பதினாறாவது மே பதினெட்டும் உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன். adminMay 18, 2025 ஆரியகுளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் போனது உண்மை. புதுக்குடியிருப்பிலும் கிளிநொச்சியிலும் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதியினர் போனது உண்மை. புதுக்குடியிருப்பில் ஆயிரக்கணக்கில் போய் படைத்தரப்பு வழங்கிய குடிபானங்களையும் அன்னதானத்தையும் வாங்கியதும் உண்மை. அதேசமயம் கடந்த வாரம் தாயகம் முழுவதிலும் ஆங்காங்கே பரவலாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி கொடுக்கப்படுவதும் உண்மை. மக்கள் பரவலாக அதை வாங்கி அருந்துவதும் உண்மை. இன்று முள்ளிவாய்க்காலில் பெருந்திரளாக மக்கள் திரள்வார்கள் என்பதும் உண்மை. ஒரு தேசம் என்பது அப்படித்தான…

  20. அதாவுல்லாஹ்வுக்கு விழுந்த அடிமேல் அடி முகம்மது தம்பி மரைக்கார் வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது உலகம். அனைத்து ஒழுங்குகளையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலொன்று, ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் புதியதோர் அனுபவத்தை, நாடு எதிர்கொண்டிருக்கிறது. உயிர் பற்றிய அச்சம், மக்களிடம் தொற்றிக் கொண்டுள்ளதால், அரசியல் பற்றிய பேச்சுகள் அமுங்கிப் போய் கிடக்கின்றன. ஆனாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற நம்பிக்கை, மக்களுக்கு இருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தை விடவும், பெரிய அழிவுகளையெல்…

    • 0 replies
    • 1k views
  21. 5 வருட முயற்சி பலிக்குமா? அன்று காலை நாடு ஒரு­ப­ர­ப­ரப்­பான சூழலில் காணப்­பட்­டது. முழு நாடும் புதிய பிர­தமர் பத­வி­யேற்­ப­தையும் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்­ப­தையும் தொலைக்­காட்­சி­யூ­டாக பார்ப்­ப­தற்கு தயா­ராகிக் கொண்­டி­ருந்­தது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் ஆட்­சி­ய­மைக்­கக்­கூ­டிய பெரும்­பான்மை பலத்தை பெறாவிடினும் கூடிய ஆச­னங்­க­ளான 106 எம்.பி.க்களை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்­றி­யீட்­டி­ருந்­தது. எனவே, ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சி­ய­மைப்பார் என்றும் பிர­த­ம­ராக பத­வி­யேற்பார் என்றும் ஐக்­கிய தேசிய கட்­சியின் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்கும் என்றும் முழு நாடும் ஏன் சர்­…

  22. பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்டவர்களின் இரத்தவாடையும் வரலாற்றுத் துரோகமும் இலங்கையில் இனப்படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்பிற்கும் யார்யாரெல்லாம் உதவினார்கள் என்று பட்டியல் போட்டால் அவர்களில் பெரும்பாலனவர்கள் ஒன்று கூடியதை இன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பார்த்திருக்கலாம். பாராளுமன்றம் பன்றித்தொழுவம் என்பார்கள். பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் இரத்தவாடை வீசியது. உலகத் தமிழர் பேரவை என்று அழைக்கப்படும் அன்னிய நிதியில் இயங்கும் முன்னைநாள் புலிகளின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட அமைப்பு ஒழுங்கு செய்திருந்த கூட்டம் பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத்துள் நடைபெற்றது. இன்று(27.02.2013) காலை பத்துமணிக்கு ஆரம்பமன இந்தக் கூட்டத்தில், இலங்கை அரசிற்கு இன அழி…

    • 2 replies
    • 728 views
  23. முஸ்­லிம்­க­ளுக்கு ஏமாற்றம் அளித்­துள்ள நல்­லாட்சி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்கள் இன­வாதி­க­ளினால் பல நெருக்­க­டி­களை எதிர் கொண்­டார்கள். பல இடங்­களில் தாக்­கப்­பட்­டார்கள். இதனை அன்­றைய அர­சாங்கம் பாரா­மு­க­மாக இருந்­தது. ஆளு் தரப்பு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை கண்­டித்து அறிக்­கை­களை விடுத்­தார்­க­ளே­யன்றி, அவற்றை தடுத்து நிறுத்­து­வ­தற்கு வலு­வற்­ற­வர்­க­ளா­கவே இருந்­தார்கள். இந்­நி­லையில் ஆட்சி மாற்­றம்தான் முஸ்­லிம்­களை பாது­காத்துக் கொள்­வ­தற்கு சிறந்த வழி என்ற முடி­வுக்கு முஸ்­லிம்கள் வந்­தார்கள். ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்­லிம்கள் சுய­மா­கவே மஹிந்­த­ ரா­ஜ­ப­க்…

  24. புலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா? மனோ கேள்வி 78 Views தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது. அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசா…

  25. மலையாளிகளை எதிர்த்த சிங்கள பேரினவாதம், மறந்த வரலாறு எழுதியது இக்பால் செல்வன் தமிழ் நாட்டில் சிங்கள சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வந்தனர். இதனால் தமிழகம் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. குறிப்பாகத் திமுகக் கட்சி மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து விலகியது. அது மட்டுமில்லாமல் தஞ்சாவூரில் வைத்து இரு பௌத்த சிங்கள பிக்குகள் தாக்கப்பட்டனர். ஐநா சபை மனித உரிமைகள் கூட்டத்தில் இந்திய அரசு இலங்கைக்கு எதிராகவும் வாக்களித்திருந்தது. சென்னையில் அமைந்துள்ள சிறிலங்காவின் துணை தூதரகத்துக்கு அருகே கடுமையான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் இத் துணைத் தூதரகத்தைக் கேரள மாநிலத்துக்கு ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.