அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
தவறுகளா? தப்புக்களா? – கலாநிதி சூசை ஆனந்தன்! கச்சதீவு ஒப்பந்தம் 1974 கச்சதீவு தொடர்பான ஒப்பந்தம் இன்று இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக் அரசியல் பொருளாதாரரீதியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவருகின்ற ஓர் ஒப்பந்தமாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்தும் இத்தீவு சார்ந்து தவறுகளையே இந்தியா செய்து வருவது போலவே பார்க்க வேண்டியுள்ளது. வடக்கில் பாக்குநீரிணைப் பகுதியில் இந்திய இலங்கை ஆள்புல நீர்ப்பரப்பரப்பு எல்லையில் இட அமைவு பெற்றுள்ளது கச்சதீவு ஆகும்.மனித சஞ்சாரமற்ற வெறும் பாறைத்தீவு இது.இதன் பரப்பு ஆக 82ஹெக்டேர் மட்டுமே. 1974 இல் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நட்புக்கா…
-
- 0 replies
- 812 views
-
-
சீனாவை மகிழ்விக்கும் ராஜபக்ஷர்கள் புருஜோத்தமன் தங்கமயில் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையில் புதிய 1,000 ரூபாய் நாணயக் குற்றி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 06) வெளியிடப்பட்டது. சர்வதேச ரீதியில், நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டின் பெருமையான விடயங்கள் குறித்து, மற்றொரு நாடு, தன்னுடைய கௌரவங்களை வெளிப்படுத்துவது உண்டு. ஆனால், ஒரு நாட்டை ஆளும் கட்சியொன்றைக் கௌரவப்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டில் நாணயக் குற்றி வெளியிடப்படுவது ஆச்சரியமானது. ஏனெனில், இராஜதந்திர உறவு அல்லது, வெளிநாட்டு உறவு என்பது, அரசுகளுக்கு இடையிலான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கின்றது. கட…
-
- 5 replies
- 951 views
-
-
ராஜபக்ஷர்களின் ஆட்சியில் திவாலாகும் நாடு புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சி பீடமேறி, ஒன்றரை ஆண்டுகளுக்கு உள்ளேயே, நாடு திவாலாகும் கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிகளைச் செலுத்துவதற்கே, கடன்களைப் பெற வேண்டிய நிலை; உணவுப் பொருட்களின் இருப்பு அபாயக்கட்டத்தை அடைந்திருக்கின்றது; ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வழங்குமா என்ற சந்தேகம் நீடிக்கின்றது; உள்நாட்டு உற்பத்தி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது; விவசாயிகள் உரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், கறுப்புச் சந்தை பெரியளவில் விரிந்திருக்கின்றது. அங்கு ஒரு சில பண முதலைகளுக்கான வசதி வாய்ப்புகள் தங்கு தடைய…
-
- 2 replies
- 477 views
-
-
-
- 0 replies
- 709 views
- 1 follower
-
-
பசிலின் மறுபிறவி எம்.எஸ்.எம். ஐயூப் ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, நாளை (08 ஆம் திகதி) தேசிய பட்டியல் மூலமாக, பாராளுமன்றத்துக்கு வருவார் எனச் செய்திகள் பரவியுள்ளன. அவர், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தடையாக இருந்த, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற நிலைமை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நான்கு பேர், அவருக்காக இராஜினாமாச் செய்யத் தயாராக இருப்பதாக, கடந்த வாரம் கூறப்பட்டது. கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், மர்ஜான் பலீல், ஜயந்த கெட்டகொட, பேராசிரியர் ரஞ்ச…
-
- 0 replies
- 494 views
-
-
ஈழத்தமிழரின் இன்றைய சவால்: நாம் மனந்திறந்து பேசுவது எப்போது? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இன்று, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்ன? என்ற கேள்விக்கான ஒருமித்த பதிலை, ஈழத்தமிழ்ச் சமூகத்தால் சொல்லிவிட முடியாது. அதேபோலவே, ஈழத்தமிழர் என்ற வரையறைக்குள், யாரெல்லாம் அடங்குகின்றார்கள் என்பதற்கும் ஒருமித்த பதில் இல்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள், இலங்கையில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களாகக் கருத விரும்புகிறார்கள். ஆனால், ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களை ஈழத்தமிழர்களாக அடையாளம் காட்ட விரும்புகிறார்களா என்ற கேள்வி இயல்பானது. அகஒடுக்குமுறைகள் நிரம்பிக் கிடக்கின்ற சமூகமொன்றில், புறஒடுக்குமுறையின் காரணமாக, அகஒடுக்குமுறைகளை மிகக் கொடூரமான முறையில்,…
-
- 0 replies
- 443 views
-
-
பெரும் சாபக்கேடுகள் - என்.கே. அஷோக்பரன் ‘சிங்கப்பூரின் சிற்பி’ லீ க்வான் யூவின் நேர்காணல்கள் அடங்கிய நூலொன்று 1998இல் வௌியானது. அதில், லீ க்வான் யூ, இலங்கை பற்றிப் பேசியிருக்கும் விடயமும் பதிவாகியிருக்கிறது. ‘எங்கள் செயல்களின் விளைவுகளுடன் நாம் வாழ வேண்டியிருக்கிறது. எங்கள் சொந்த மக்களுக்கு நாங்கள் பொறுப்பு. அவர்களுக்காகச் சரியான முடிவுகளை எடுக்கிறோம். நீங்கள் பழைய பிலிப்பைன்ஸைப் பாருங்கள். பழைய இலங்கையைப் பாருங்கள். பழைய கிழக்கு பாகிஸ்தான் மற்றும் பலவற்றைப் பாருங்கள். நான் இந்த நாடுகளுக்கும் இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். 1956 ஆம் ஆண்டில், நான் முதன்முறையாக கொழும்புக்குச் சென்றபோது, அது சிங்கப்பூரை விடச் சிறந்த நகரமாக இருந்தது. ஏனெனில், சிங்கப்பூர் மூன்றரை ஆண்…
-
- 0 replies
- 390 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சூழ்ந்து நிற்கும் ஆபத்து – மட்டு.நகரான் தமிழர்களின் இழப்புகளும், தியாகங்களும் வீண்போய் விடுமோ என்ற அச்சம் தினமும் வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. தமிழர்களின் தியாங்களும், இழப்புகளும் வெறுமனே வீதிக்காகவும், சோத்துக்காகவும் நடத்த ப்படவில்லை. தமிழர் தாயகத்தினை பாதுகாப்பதற்கும், தமிழர்கள் உரிமையுடன் வாழ்வதற்கும் நடத்தப்பட்ட போராட்டமாகும். இந்தப் போராட்டத்தின் தியா கங்கள் மறக்கப்படுவதன் காரணமாகவே இன்று வடகிழக்கில் தமிழர்கள் மத்தி யில் பல்வேறு வகையான பிரச்சினைகள் தலை தூக்கி வருகின்றன. வடகிழக்கில் தமிழர் தாயகப் பகுதிகள் சூறையாடப் படுகின்றன என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். திட்டமிட்ட …
-
- 1 reply
- 292 views
-
-
இலங்கையைக் காப்பாற்ற பசிலிடம் உள்ள உபாயம்? – அகிலன் July 7, 2021 ஜனாதிபதியின் சகோதரரும், ஆளும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச அடுத்த வாரம் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்க வுள்ளார் என்ற செய்தி தான் கொழும்பு அரசியலில் இந்த வாரப் பரபரப்பு. ராஜபக்ச சகோதரர்களில் அரசியல் அதிகாரப் பதவிகள் எதிலும் இல்லாத ஒருவராக பசில் இருந்தாலும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற முறையில், அதிகாரத்துடன் கூடிய ஒருவராகவே அவர் இருக்கின்றார். அதனை விட, ஆளும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் என்ற முறையிலும், சக்தி வாய்ந்த ஒருவராக அவர் இருக்கின்றார். ஆனால், இப்போது அரசியல் அதிகாரம் மிக்க பதவி ஒன்றை அவருக்குக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆளும் கட்சிக…
-
- 1 reply
- 596 views
-
-
44 . Views . உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லிங்க” என்ற இந்த பாடல் வரிகள் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகளாகும். 34 வருடத்திற்கு முன்னர் வெளிவந்த இப்பாடல் வரிகள் இன்று எந்தவித குற்றமும் செய்யாமல் சிறையில் அடைபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொருத்தமான வரிகளாகும். “வெளிய உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லிங்க” என்ற அடுத்த வரியும் துமிந்த சில்வாவுக்கும் சாலப் பொருந்தும். குற்றம் செய்யாதவர்கள் உள்ளேயும் குற்றம் செய்தவர்கள் வெளியேயும் உள்ள நிலைமையாக மாறிப் போய்விட்டது இலங்கையின் சட்ட நீதி நிர்வாகம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலையுடன் தொடர்புடைய கைதியான துமிந்த சில்வா அண…
-
- 0 replies
- 745 views
-
-
இலங்கை: வீழ்ச்சி கண்ட நாடாகியுள்ளதா…..? – பி.மாணிக்கவாசகம் இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடாக மாறி வருகின்றதா என்ற சந்தேகம் பல தரப்பினரிடையேயும் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபச்ச தலைமையிலான அரசாங்கத்தின் செயல் வல்லமையற்ற செயற்பாடுகளினால் இந்த நிலைமை உருவாகி உள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அறுபத் தொன்பது இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று, தன்னிகரற்ற தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் ஆட்சி முறைமை பல துறைகளிலும் பலவீனமாகி இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என அவதானிகளும், ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டி உள்ளனர். தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்தி, சுபீட்சம் மிகுந்ததாக நாட்டைக் கொண்டு நடத்துவதாக உறுதியளித்த ஜ…
-
- 0 replies
- 615 views
-
-
கண்ணை மூடிக் கொண்ட பூனைகள் -இல அதிரன் ஒரு பதவிக்கு வந்துவிட்டால், நான் சொல்வதெல்லாம் சரி; நான் செய்வது மட்டுமே முழுமை; நானே எல்லாமும் என்ற எண்ணம், ஒரு சிலரைத்தவிர ஏனையோருக்கு வந்துவிடுகிறது. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜபுத்திரன் வியாழக்கிழமை (01) கூறிய “மட்டக்களப்பின் ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது, குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது” என்ற கருத்துக்கும் இதற்கும் தொடர்புண்டு. இருந்தாலும் அது தலைகீழானது; இவருடைய இந்தக் கருத்து பெரியளவில் பேசப்படுவதாகவும் மாறியிருக்கிறது. வியாழக்கிழமை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். அவரது வரு…
-
- 0 replies
- 347 views
-
-
மேதகு திரைப்படம் ஓர் அரசியல் குண்டு
-
- 6 replies
- 1.2k views
-
-
-
புதுடில்லிக்கான அமெரிக்க நிதியுதவியும் ஈழத்தமிழர்களும் –வடக்குக் கிழக்கில் சீன ஆதிக்கம் அதிகரித்து வருவதாகக் கூறி சீனாவுடன் பகைமையைச் சம்பாதிகக் கூடாதென்பதையே புவிசார் அரசியல் சூழல் கற்பிக்கின்றது. ஆகவே இந்தோ- பசுபிக் விவகாரம் அமெரிக்க- சீன மோதலாகவே மாறியுள்ளது. சீன இந்திய முரண்பாடு வெறுமனே எல்லைப் பிரச்சினை மாத்திரமே- -அ.நிக்ஸன்- சீன- ரஷிய நட்புறவு ஒப்பந்தம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கடந்தவாரம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ள வர்த்தகச் செயற்பாடுகள் மற்றும் இராணுவ உதவிகள் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குளோபல் ரைம்ஸ் என்ற சீன ஆங்கில ஊடகம்…
-
- 0 replies
- 374 views
-
-
வடகடலில் சீனர்கள்? நிலாந்தன். July 4, 2021 வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர் என்று கருதி ருவிற்றரில் ஒரு குறிப்பைப் பதிவிட்டிருக்கிறார். உள்நாட்டில் வீதித் திருத்த பணிகளிலும் சீனர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாக அப்பதிவில் உள்ளது. ஆனால் அது சீனர் அல்ல கிழக்கை சேர்ந்த ஒரு முஸ்லிம் என்பது தெரிய வந்ததும் சுமந்திரன் தான் வெளியிட்ட தகவலுக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சுமந்திரனுக்கு ஒரு பதில் குறிப்பையும் பதிவிட்டிருந்தது. வழமையாகத் தான் என்ன கதைக்கிறேன் என்பதனை நன்கு சிந்தித்து பிடி கொடாமல் கதைக்கும் சுமந்திரன் இந்த வி…
-
- 9 replies
- 884 views
- 1 follower
-
-
-
ஈழத் தமிழர் – சீனாவிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமா? - யதீந்திரா இன்றைய நிலையில் உலக அரசியல் விவாதங்களை ஆக்கிரமித்திருக்கும் பிரதான விடயம் என்ன? சந்தேகமில்லாமல், சீனா என்பதே இதற்கான பதில். சீனாவின் அபார பொருளாதார வளர்சியே இதற்கான காரணமாகும். பொருளாதாரம் வளர்ச்சிடைகின்ற போது, கூடவே இராணுவ ஆற்றலும் அதிகரிக்கும். இன்றைய நிலையில் உலகின் பிரதான சக்தியாக அமெரிக்காகவே இருக்கின்றது. சோவியத் – அமெரிக்க பனிப் போருக்கு பின்னரான உலகத்தில், அமெரிக்காகவே ஒரேயொரு தனிப்பெரும் சக்தியாக இருந்தது. ஆனாலும், அமெரிக்கா முன்னர் இருந்த நிலையில் இப்போது இல்லை. இப்போதும் முதல் இடம் அமெரிக்காவிடம்தான் இருக்கின்றது எனினும், ஒப்பீட்டடிப்படையில் அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக…
-
- 0 replies
- 713 views
-
-
மாகாணசபை : யாருக்கும் வெட்கமில்லை July 1, 2021 — கருணாகரன் — “மாகாணசபையை நிராகரிக்கும் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டோர், மாகாணசபைத் தேர்தலில் ஆர்வமாக இருப்பதும் அந்த அதிகாரத்துக்குப் போட்டியிடுவதும் எதற்காக?; சனங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொண்டு தாங்கள் இன்னொரு விதமாக செயற்படுவது ஏன்?இதைப்பற்றிச் சனங்கள் கூட அறியாமல் இவர்களுடைய ஏமாற்றுகளுக்கு (பம்மாத்துகளுக்கு) எடுபடுவது எதற்காக? மாகாணசபையை ஏற்றுக் கொள்ளாத அரசியல் ஆய்வாளர்கள் கூட மாகாணசபைத் தேர்தல் என்று வந்து விட்டால் இந்தத் தரப்புகளின் பக்கம் நின்று கூவுவது ஏன்?” என்ற கேள்விகளை நீண்டகாலமாகவே எழுப்பிக் கொண்டிருக்கிறார் நண்பர் ஒருவர். அவருடைய கேள்விகள் நியாயமானவையே! ஆகவே இதைப்பற்றி நாம் …
-
- 0 replies
- 624 views
-
-
-
ஐரோப்பிய பிரேரணையும் கைதிகளின் விடுதலையும் எம்.எஸ்.எம். ஐயூப் ஐரோப்பிய நாடாளுமன்றம், ஜூன் 10 ஆம் திகதி, இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய பிரேரணை, இலங்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது போலும்! இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாகவும் எனவே, இலங்கைக்கு வழங்கும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகைகளை நிறுத்த வேண்டும் எனவும், அந்தப் பிரேரணை மூலம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்திருந்தது. அது தொடர்பாக, ஐரோப்பிய ஆணைக்குழு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நிலைமையைச் சீர்செய்வதற்காக, இலங்கைக்கு அவகாசம் கொடுத்துவிட்டே, ஐரோப்பிய ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும். அதற்குள் இலங்கை அரசா…
-
- 0 replies
- 819 views
-
-
ஈழத்தமிழரின் தமிழக மயக்கம்: தெளியாத போதை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஈழத்தமிழர்களின் தமிழக மயக்கம் புதிதல்ல. கடந்த அரை நூற்றாண்டில் அது வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது. தமிழகத்தின் மீதும் குறிப்பாக, தமிழக அரசியல் மீதும் வைக்கப்பட்ட நம்பிக்கைகள், தொடர்ச்சியாகப் பொய்ப்பிக்கப்பட்ட போதும், ‘சூடுகண்டாலும் அஞ்சாது, அடுப்பங்கரை நாடும் பூனை’ மனநிலையில், தொடர்ந்து நம்பிக்கை வைப்பதை இன்றும் காணுகிறோம். எம்.ஜி. இராமச்சந்திரனில் தொடங்கி, சீமான் வரை, ஈழப்போராட்டத்தை சரிவர விளங்காத, அணுக இயலாத, தங்கள் சுயஅரசியலுக்குப் பயன்படுத்தியோரை நம்பி, சீரழிந்தவர்கள் ஈழத்தமிழர்கள். இன்றும் அந்தநிலை வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இந்தத் ‘தமிழக மயக்கம்’ வெறுமனே அரசியலுடன் மட்டுப்ப…
-
- 32 replies
- 2.9k views
-
-
உண்மையும் உணர்வுமுனைப்பும் அரசியலும்: உண்மைகளாகும் பொய்கள் என்.கே. அஷோக்பரன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட, உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான மைக்கல் ஒண்டாச்சி, தன்னுடைய நூலொன்றில், ‘இலங்கையில் சிறப்பாகச் சொல்லப்பட்ட பொய் ஒன்று, ஆயிரம் உண்மைத் தரவுகளுக்குச் சமன்’ என்று குறிப்பிடுகிறார். இதை யார் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, இலங்கைத் தீவின் அரசியல்வாதிகள், நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தை, ‘உண்மையைக் கடந்த, உணர்வுமுனைப்புக் காலகட்டம்’ (Post truth era) எனச் சிலர் விளிக்கிறார்கள். உணர்வுகள், தனிப்பட்ட கருத்துகளுக்கு, உண்மைகளை விட முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை இது சுட்டி நிற்கிறது. சமூக ஊடகப் பயன்பாடு, இந்த உண்மையைக் கடந்த உணர்வும…
-
- 0 replies
- 674 views
-
-
இலங்கை புலனாய்வுத் துறையின் அரசியற் பின்னணி மற்றும் நடவடிக்கைகள். June 11, 2021 சேனன் ஈழம் - இலங்கை, காணொளி, சேனன், தெரிவுகள் 132 . Views . 1 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்கவும் – மீளுருவாக்கம் செய்யவும் முக்கிய ‘மத்திய ஸ்தலமாக’’ பிரித்தானியா இருக்கிறது என்பது இலங்கை அரசின் நிலைபாடாக இருக்கிறது. பேராசிரியர் ரோகான் குணரத்ன இங்கிலாந்து நீதிமன்றத்துக்கு வழங்கிய சாட்சியின்போது இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இலங்கை அரசியலை அறிந்தவர்களுக்கு ரோகான் குணரத்ன நன்கு தெரிந்த பெயரே. பயங்கரவாதம் சார் நிபுணர் என்ற பெயரில் பயணி வருபவர். இலங்கைப் புலனாய்வுத் துறையுடன் ‘நெருங்கிய தொடர்பு’ உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் இல…
-
- 5 replies
- 895 views
-
-
246 . Views . இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக (அமைச்சரவை) – இருந்தபோது, இராணுவத்திற்கு மிகப்பிடித்தமான நபராக இருந்தார். இராணுவம் இழைக்கும் அத்தனை அநீதிக்கும் தான் பொறுப்பு எடுத்துக் கொள்வது போன்ற உறுதிப்பாட்டை வழங்கி எந்த பாரதூரமான செயலுக்கும் அஞ்ச வேண்டாம் என்று அவர் வழங்கிய அனுமதியே அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இறுதி யுத்தகாலத்தின் போது அவர் இராணுவத்திற்கு வழங்கிய உரையில் குறிப்பிட்ட “தமிழ் ஆண்கள் அனைவரும் கடலுக்கு; தமிழ் பெண்கள் அனைவரும் உங்களுக்கு…” என்ற கூற்று மிகப் பிரபல்யமானதாக இருந்தது. தமிழர்கள் உளவியல் கோட்டாபய ராஜபக்ச மீது அச்சமும், வெறுப்பும் கொண்டிருந்தார்கள். அவருக்கு தமிழர்களின் உயிர் பொருட்டாக ஒருபோதும் இரு…
-
- 1 reply
- 657 views
-