நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4203 topics in this forum
-
‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை, நலன்கள் மட்டுமே நிரந்தரமானவை’ என்பது பண்டைக் காலம் தொட்டு இன்று வரை அரசியலில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதியாகும். ஆனால் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோக வரலாற்றை முதிசமாகச் சுமந்து நிற்கும் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த ஐந்தரை ஆண்டுகால அரசியல் நகர்வுகள் இவ்விதியின் அடிப்படையில் அமையவில்லை என்றே கூறவேண்டும். நாடாளுமன்ற அரசியல் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமுகமாக செயற்படுவதற்காக 2001ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ தேசியத் தலைவரின் அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். அதாவது தமிழீழ தேசத்தின் …
-
- 0 replies
- 407 views
-
-
-
- 5 replies
- 774 views
-
-
2015-ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடு குறித்து உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்காத நிலையில் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாக எழுதுவதுபோல் பல திடுக்கிடும் அரசியல் ஆய்வுகள் தமிழ் இணையங்களில் சில வெளியிட்டுள்ளன. அதனை சிலர் யாழ் கருத்துக்களம் பகுதியில் இணைத்துள்ளனர். தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக பணமும் அமைச்சுப் பதவியுமா..? – இரவி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையை மேற்போக்காக வாசித்தால் தமிழ்த்தேசியத்தின் பால் காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கியது போல் தெரியும். ஆனால் அந்த கட்டுரையின் வரிகளுக்கிடையில் கூர்ந்து அவதானித்தால் தெரியும் அவை அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டு எழுதப்பட்ட அரசியல் அவதூறுகள் ஆகும். இன்னும் பசையாகச் சொன்னால் மகிந்தவுக்க…
-
- 10 replies
- 1.1k views
-
-
மகிந்த சிந்தனை 2, 2010 தேர்தலில் வந்திருக்க வேண்டும். வெற்றியில் பெரு நம்பிக்கை கொண்டதால், அது குறித்து அவர் அலட்டிக் கொள்ள வில்லை. இம்முறையும் அது குறித்த கவலை இல்லாமல் தான் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். மைத்திரியின் பிரவேசம் மகிந்த சிந்தனை இரண்டினை அவசரம் அவசரமாக கொண்டு வர வைத்து விட்டது. டிசம்பர் 26 ம் திகதி வெளியிட இருந்த அதனை, தீடீரென, அடடா, தபால் மூல வாக்களிப்பு 23ம் திகதி அல்லவா என்று நினைவுபடுத்த, முதல் நாளே அவசர அவசரமாக பல குளறு படிகளுடன் வெளியிடப் பட்டது. ஆங்கிலத்தில் இல்லாத சிங்களத்தில் மட்டும், சிங்கள வாக்காளரை பயமுறுத்தும் வகையில், 'அங்கே உலகம் முழுவதும், உறுமியபடி, தகுந்த தருணம் வரும் வரை, தமது இரையினை கவ்வ புலிப் பயங்கரவாதிகள் இன்னமும் இருகின்றார்கள…
-
- 0 replies
- 839 views
-
-
மைத்திரியின், முதலாவது வடபகுதி தேர்தல் பிரச்சார கூட்டம் யாழ் முத்திரைச் சந்தியில் வரும் 30ம் திகதி நடைபெறுகின்றது, சந்திரிகா, ரணில், ரஜித்த என பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். அதேவேளை அன்று காலை கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனேகமாக எல்லோருக்கும் புரியும் முடிவான, மைத்திரியை ஆதரிக்கும் முடிவு எடுக்கப்படுவதுடன், அன்று நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பு பிரமுகர்களும் மேடையில் தோன்றக் கூடும் எனவும் கருதப் படுகின்றது. அதேவேளை மகிந்தர் ஜனவரி 2ம் திகதி வடக்கு வருகின்றார். யாழ் - KKS ரயில் பாதை திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருந்த போதும், தேர்தல் விதி முறை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப் …
-
- 1 reply
- 568 views
-
-
சுழன்றடித்த சுனாமி பேரலை – 10 ஆவது நினைவு தினத்தில் ஒரு நினைவு கூறல்! சென்னை: "சுனாமி" - பெயரைக் கேட்டால் அழகாய் இருந்தாலும் 2004 ஆம் ஆண்டில் கிட்டதட்ட பல்லாயிரக்கணக்கான பேரை பலிவாங்கிக் கொண்டது இந்த ஆழிப்பேரலை. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் 2004 ஆம் ஆண்டில் சிறியதாய் தோன்றிய அலை ஒன்று பூதாகரமாய் பெருக்கெடுத்து, தெற்காசிய நாடுகளையே புரட்டிப் போட்டது. உறவினர்கள், நண்பர்கள், உடைமகளை இழந்துவிட்டு பல்லாயிரம் மக்கள் தவியாய் தவித்தனர். என்னவென்றே தெரியாத அந்த பேரலை இன்று எல்லோர் மனதிலும் பாதிப்பாய் பதிந்து போய் கிடக்கின்றது. துறைமுகப் பேரலை: ஜப்பானிய மொழியில் துறைமுக பேரலை என்பதே சுனாமி என அழைக்கப்படுகிறது. இது தமிழில் ஆழிப்பேரலை என அழைக்கப்படுகிறது. பூ…
-
- 5 replies
- 2.4k views
-
-
ஜனவரி 30 - சம்பளங்கள் அதிகரிக்கும்,. அத்தியாவசிய பொருட்களின் வரிகள் குறைக்கப்படும்.போரினால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் துன்பப்படும் மக்களின் பொருளாதார சுமை குறையும். பெப்ருவரி - 20 தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று வாரங்களுள் சட்டமாக்கப்படும்.காணாமல் போனவர்கள் பற்றியும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் கைப்பற்ற பட்ட நிலங்கள் சொத்துக்கள் பற்றியும் அரசாங்கத்தை தகவல்களை தரும்படி நீதி மன்றங்கள் மூலம் பணிக்க இந்த சட்டம் வழி செய்யும். ஏப்ரல் 23 - இருபத்தைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து தெரியப்பட்ட அமைச்சர்களை கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். இந்த தேசிய அரசாங்க…
-
- 0 replies
- 544 views
-
-
எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். …
-
- 0 replies
- 365 views
-
-
இந்திய நடிகர்களுடன் இணைந்து இலங்கை மக்களை நிர்வாணிகளாக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!: எம்.ரிஷான் ஷெரீப் மகிந்தவின் பொதுக்கூட்டத்தில் நிர்வாணப்படுத்தித் தாக்குதல் நடத்தும் போலிஸ் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு சர்வாதிகாரியென உலகம் முழுவதும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. என்றாலும், அவரே அச்சப்படும் ஒருவர் இருக்கிறார் எனில் அது, ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிடும் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேன ஆவார். பௌத்த பிக்குகளைத் தாக்கும் மகிந்த ஆதரவுப் போலிஸ் தன் மீது மக்களுக்கிருந்த செல்வாக்கும் நம்பிக்கையும் சரிந்துகொண்டு வருகிறது என்ற நிதர்சனத்தை உணர்ந்து, மீண்டும் இலங்கை ஜனாதிபதியாகும் வாய்…
-
- 1 reply
- 7.2k views
-
-
கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை யாழ்ப்பாணக் நன்னீர்க் கிணற்றில் எண்ணை இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அந்த நாட்டின் மிகப்பெரும் பணக்காரரான தம்மிக்க பெரேரா யாருக்கு ஆதரவளிப்பார் என்று கேள்வியெழும்பினால் யார் வெற்றி பெறுகிறார்களோ அவரை ஆதரிப்பார் என்பதே பதில். வெலிவெரிய என்ற கொழும்பை அண்மித்த கிராமத்தில் தம்மிக்க பெரேராவின் ஹேலிஸ் நிறுவனம் அப்பிரதேச மக்களின் குடிநீரை மாசுபடுத்திவந்தது. அதற்கு எதிராக மக்கள் நட்த்திய ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பாசிச இராணுவம் தாறுமாறாகச் சுட்டத்தில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினர். ஆறாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் எந்த முன்னறிவுப்புமின்றிப் புகுந்த போலிஸ் படை கண்ணீர்ப் புகை, தடியடிப் பிரயோகம் செய்த…
-
- 1 reply
- 832 views
-
-
அடக்குமுறைக்கும் அடிமை வாழ்வுக்கும் ஒருமுற்றுப்புள்ளி வைத்து சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக போராடிய ஈழத்தமிழினம் அதற்காக கொடுத்த விலைகள் மதிப்பிடமுடியாதவை. ஒரு இனம் இன்னொரு இனத்தினால் அடிமைப்படுத்தப்படுவைதையோ அடக்கியாளப்படுவதையோ உலகத்தின் எந்த ஒரு சட்டமும் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இலங்கைத்தீவிலே சிங்களமேலாதிக்கத்தால் தமிழர்கள் அடக்கியாளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டபோது அது உள்நாட்டு பிரச்சினை என்று உலகத்தில் யாரும் அதைக்கண்டுகொள்ளவில்லை ஏன் என்றுகேட்க யாரும் இல்லை என்ற காரணத்தினால் சிங்கள இனவெறியர்கள் அப்பாவித்தமிழர்களை படுகொலைசெய்து அவர்களின் சொத்துக்களைக்கொள்ளையடித்து கொடும் தாண்டவம் ஆடியபோது தம்மை தற்காத்துக்கொள்வதற்காக தமிழர்கள் …
-
- 0 replies
- 372 views
-
-
நடராஜா குருபரன்:- 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த காலம்... மீண்டும் யுத்தம் ஒன்று வெடிக்கப் போவதான ஏக்கங்கள் நாடுபூராகவும் சூடுபிடிக்கத் தொடங்கிய காலம்... ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கடும்போக்குவாதக் கட்சிகளும் ஓரணியில் சங்கமித்தன. சமாதானப் பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும்.. றணில் பிரபா கூட்டு நாட்டை இரண்டாக பிளவுபடுத்தப் போகிறது என மிகக் கடுமையான பிரச்சாரங்களை ஜே.விபி – ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் கட்டவிழ்த்து விட்டன... இலங்கையின் தேர்தல் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு நாடுபூராகவும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அநாகரீகமான முறையில் இனவாதத்தை உமிழ்ந்தன... இன்று எதிரணியில் இருக்கும் மங்கள சமரவீரவும் - …
-
- 3 replies
- 617 views
-
-
-
- 36 replies
- 2.9k views
-
-
கடந்த சில தினங்களாக நடந்து வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகளை சிதறடிக்க அரசாங்கம் வகுத்திருந்த திட்டமொன்றிலிருந்து எதிர்;க்கட்சிகள், தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டு இருப்பதாகவே கூற வேண்டும். இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியத் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க போட்டியிட முன்வந்தால், திஸ்ஸ அத்தநாயக்க மூலம் அவரது வேட்பு மனுவை நிராகரிக்கச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டு இருந்ததா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. முன்னாள் சுகாதார அமைச்சராகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமாக இருந்த மைத்திரிபால சிறிசேன, கடந்த நவம்ப…
-
- 0 replies
- 580 views
-
-
பாலா அண்ணாவிடம் இருந்து ஈழத் தமிழர் தேசம் கற்றுக்கொள்ளக் கூடியவை எவை? சர்வே பாலா அண்ணா எம்மை விட்டு பிரிந்து இன்றுடன் (14.12.2014) 8 வருடங்கள் உருண்டோடி விட்டன. இவர் காலம் ஆகிய பின்னர் கழியும் ஒவ்வாரு அரசியற் தருணங்களும், அவர் இல்லாத வெறுமையை இன்றுவரை நினைவூட்டிக் கொண்டே உள்ளன. தமிழீழ தேசத்தின் முதலாவது இராஜதந்திரி எனக் கருதப்படக்கூடியவராக பாலா அண்ணா இருந்தார். தமிழர்கள் மத்தியில் இராஜதந்திரப் பாரம்பரியம் வளர்ந்திராதவொரு சூழலில்தான் பாலா அண்ணா தன்னையொரு இராஜதந்திரியாக நிலைநிறுத்த வேண்டியிருந்தது. தமிழர்களிடம் இராஜதந்திரப் பாரம்பரியம் வளரச்சியடையாமைக்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், தமிழர்கள் நீண்ட நெடும் காலமாக அரசற்றதொரு தேசிய இனமாக …
-
- 1 reply
- 654 views
-
-
பெரும் இனவாதியான ஜாதிக ஹெல உறுமயாவின், சமபக்க ரணவக்க, தமிழ் மக்களை தேர்தல் பகிஸ்கரிக்க கோரும் பெரும், உள்ளூர், சர்வதேச, முனைப்புகள் பெரும் முன்னெடுப்புடன் நடைபெறுவதாக கவலை வெளியிடுள்ளார். இந்த தேர்தல் தமிழ் மக்களுடன் தொடர்பு இல்லாதது என கூறி அவர்களை வாக்களிக்காமல் தடுக்க முனைகின்றனர் என அவர் கவலை வெளியிட்டார். இந்த நாட்டில் வாழும் சகலரது தலைவிதியினை பாதிக்கும் தேர்தல் ஆகையால் சகலரும் வாக்களிக்க வேண்டும் என்றும், 2005ல் பகிஸ்கரிப்பினால் லாபம் அடைந்தவர்களே இம்முறையும் பகிஸ்கரிப்பினை விரும்புவதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். மகிந்தருடன் நின்ற இவரது கட்சி இப்போது மைத்திரி பக்கம் நிக்கிறது.
-
- 0 replies
- 573 views
-
-
ரணிலிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கான பதிலில், டக்லஸ், கே பி போன்றவர்கள் இந்தியா கேட்டால் விசாரணைக்கு ஒப்படைக்கப் படுவார்கள் என கூறி உள்ளார். அப்பிடி விஷயம் எண்டால், டக்கியர் கள்ள வோட்டுப் போடப் போறார் எல்லோ ...
-
- 6 replies
- 975 views
-
-
Zero hour:Vanni after 5 years (10-12-14)1/4 Zero hour:Vanni after 5 years (10-12-14)2/4 Zero hour:Vanni after 5 years (10-12-14)3/4 Zero hour:Vanni after 5 years (10-12-14)4/4
-
- 0 replies
- 694 views
-
-
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போர், முடிவுக்கு வந்து ஐந்தரை வருடங்களுக்குப் பின்னரும், இலங்கை அரசியலில் அதுவே மிகப்பெரிய முதலீடாக விளங்கிவருகிறது. ஆளும் கட்சியினர் மட்டுமன்றி, எதிரணியினரும் கூட போர் வெற்றிக்கு உரிமை கோருவதிலும் அதனை பங்குபோட்டுக்கொள்வதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது, போர் வெற்றியே பிரசாரங்களில் பிரதான இடத்தை வகிக்கப்போகின்றது என்பது இப்போது உறுதியாகிவிட்டது. கடந்த திங்கட்கிழமை, வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளன்று, டெய்லி மிரர் உள்ளிட்ட பல நாளிதழ்களின் முன்பக்கத்தில், ஐந்தரை வருடங்களுக்கு முன்னர் வெளியான முகப்புப்பக்கமே இடம்பெற்றிருந்தது. போர் வெற்றி கொள்ளப்பட்ட மறுநாள், வெளிய…
-
- 0 replies
- 526 views
-
-
யாழ்தேவி பின்னணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களை நோக்கி கைகளை அசைத்துக் கொண்டிருக்கும் படத்தையும், 'வரலாற்று சிறப்புமிக்க இந்த நாள் ஞாபகம் உள்ளதா?' என்ற கேள்வியையும் இலங்கையின் அனைத்து தமிழ்ப் பத்திரிகைகளும் கடந்த திங்கட்கிழமை (டிசெம்பர் 08, 2014) முதற்பக்கம் முழுவதுமாக தாங்கியிருந்தன. அதேதினம், சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள், போர் வெற்றி அறிவித்தலை வெளியிடுவதற்காக தான் மேற்கொண்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தை இடைநடுவில் கைவிட்டு மே 17, 2009இல் நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மண்ணைத் தொட்டு வணங்;கும் படத்தையும், 'ஒன்றிணைந்த தேசம், பயங்கரவாதிகளிடமிருந்து நாடு மீட்பு, புலிகளின் கடைசி நிலப்பகுதியையும் இராணுவத்தினர் மீட்ட…
-
- 0 replies
- 502 views
-
-
தமிழ் மக்களின் 5 அம்சக் கோரிக்கை! by Dr. S. Jamunanantha - on December 10, 2014 படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல், ஈழத்தமிழரின் அரசியல் தளத்தில் முக்கியமானது. இங்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும் இனவாத சிங்கள மேலாதிக்கத்தினையே மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர். எதிர்கட்சி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு விமோசனமான தீர்வினை முன்வைக்கவில்லை. மாறாக சிங்கள – பௌத்த தீவிரவாதத்துடன் அதாவது, ஜாதிக ஹெல உறுமய உடன் கூட்டு வைத்து உள்ளார். இது இலங்கை அரசியல் என்பது சிங்கள – பௌத்த தேசியவாதம் என்பதனையே எடுத்துக் காட்டுகின்றது. இன்று பெரும்பான்மை வாக்குப்பலத்தில் நிறைவேற்று அதிகாரத்தினை பெற்று அதனைத் த…
-
- 1 reply
- 649 views
-
-
மலையக மக்கள் என்ன செய்யப்போகின்றனர்? by Jothilingam Sivasubramaniam படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஜனாதிபதித் தேர்தல் களம் மலையகத்திலும் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஏதிர்பார்க்காதவகையில் மைத்திரிபால சிறிசேனா பொது வேட்பாளராக களமிறங்கியதால் மலையக அரசியல் வாதிகள் பலர் ஆடிப்போயுள்ளனர். குறிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செய்வதறியாது தினறுகின்றது. ஆறுமுகம் தொண்டமான் பொது எதிரணிக்கு மாறுவது பற்றியும் யோசித்திருந்தார். ஆனாலும், அமைச்சர்களுடைய கோவைகள் தன் கையில் உள்ளன என ஜனாதிபதி அறிவித்ததும் ஆறுமுகம் அடங்கிவிட்டார். மலையக மக்கள் மஹிந்தவின் இனவாதம் காரணமாக அவரை ஆதரிக்க பெரியளவிற்கு விரும்பவில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசுடன் நிற்பதால் தா…
-
- 0 replies
- 500 views
-
-
இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையே மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கிறது. அக்கட்சி அதனை நேரடியாக கூறாவிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய ஆட்சியை சர்வாதிகார ஆட்சி என்று கூறுவதனாலும் அவ் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பகிரங்கமாகவே கூறி வருவதனாலும் அவ்வாறு தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலின் போது தேற்கடிக்க வேண்டுமாயின் நடைமுறை சாத்தியமான ஒரே வழி, மைத்திரிபாலவை வெற்றிபெறச் செய்வதே. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி அதனை நேரடியாக மக்களுக்கு கூற தயங்குகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்பதே இந் நாட்களில் மக்கள் விடுதலை …
-
- 1 reply
- 669 views
-
-
யாருக்கு வாக்களிப்பது என்பதில் கூட்டமைப்புக்குத்தான் குழப்பங்கள் இருக்கென்று பார்த்தால் எங்கள் குடும்பத்திற்குள்ளும் குழப்பங்கள் தொற்றிவிட்டன. ஒருபோதுமே இப்படிக் குழப்பங்கள் வந்ததில்லை. ஏனெனில் முன்னைய தேர்தல்களில் ஏதாவது ஒரு பக்கம் விரும்பியோ விரும்பாமலோ சிறுபான்மையினர் தொடர்பான நிலைப்பாட்டில் ஏதுவான சூழமைவுகளைக் கொண்டிருப்பர். ஆனால் இம்முறையோ நிலமை தலைகீழாகிவிட்டது. எமது வாக்கு பலமே இம்முறை ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கப்போகின்றது என்ற வெளிப்படையான சூழ்நிலையை தென்னிலங்கை மக்களிடத்தில் சூனியமாக முன்னிறுத்தவே மைத்திரியும் மகிந்தவும் விளைகின்றனர். அதாவது தமிழ் மக்களின் வெளிப்படையான ஆதரவைப் பெற்றால் சிங்கள மக்களிடையே எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்ற அச்ச…
-
- 1 reply
- 899 views
-
-
‘பாப்பரசர் சிறிலங்காவுக்கான பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்’ – சிறிலங்கா வாழ் பிரதிநிதிகளும் மதகுருமார்களும் வேண்டுகோள் Dec 05, 2014 | 10:12 by நித்தியபாரதி “சிறிலங்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து ஐந்து நாட்களின் பின்னர் பாப்பரசர் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சிறிலங்கா அரசாங்கமானது இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன், மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு பாப்பரசர் அவர்கள் தனது ஆதரவை வழங்குவதாக பரப்புரை மேற்கொள்வதால் இந்தப் பயணத்தைப் பிற்போடவேண்டும்” அடுத்த ஆண்டு ஜனவரி 13 அன்று பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்வதாகத் திட்டமிட்டுள்ள நிலையில், பாப்பரசர் அவர்கள் இந்தப் …
-
- 0 replies
- 429 views
-