நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை; ‘குழந்தை’களை வதைக்காதீர் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கல்வியின் நோக்கம் என்ன என்ற வினாவை, நாம் அடிக்கடி மீளக் கேட்டுக்கொள்வதற்கான நிகழ்வுகள், தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. கல்வி என்பது பரீட்சையாகவும் கல்வியைக் கற்பது என்பது பரீட்சையில் சித்தியடைவதாகவும் சுருங்கி விட்டது; கல்வியின் நோக்கங்கள் மாறிவிட்டன; கற்பித்தலின் நோக்கங்களும் மாறிவிட்டன; இது வருந்தத்தக்கது. இதன் பின்னணியிலேயே கல்வி என்பது, எவ்வாறு மிகப்பெரிய வணிகமாக உருப்பெற்று நிற்கிறது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது. இந்த வாரம் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சார்ந்து, சமூகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் நிகழும் உரையாடல்களை, கடந்த சில நாள்களாக அவ…
-
- 0 replies
- 441 views
-
-
மனோவைக் கண்டு அஞ்சுகின்றதா கூட்டமைப்பு? வடக்குக் கிழக்கு வீடமைப்பு, வீதி அபிவிருத்தி அமைச்சர் மனோவிடமிருந்து பறிபோகிறது” என்று தலைப்புச் செய்தியிட்டுள்ளது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதைப்போல ஒரு செய்தியை “அமைச்சர் மனோவின் குழப்பத்தால் வடக்குக் கிழக்கு வீடமைப்பு தாமதம்” என்று தலைப்பிட்டு அதே பத்திரிகை வெளியிட்டது. அதற்கு மனோ கணேசன் தன்னுடைய முக நூலில், “இதென்னப்பா... அநியாயம்? வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று வருடங்களாக, இதோ, அதோ என்ற அறிவிப்ப…
-
- 0 replies
- 441 views
-
-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பு குறித்து புலம் பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் உள்ள ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எல்லாவற்றிலும் தொடர்சியாக ஆய்வுகள் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. சுமந்திரனுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுமா? தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் யாருக்கு? என்பிபிக்கு ஏன் தமிழ் மக்கள் வாக்களித்தனர்? தமிழ் தேசியம் தோற்றுவிட்டது என்றும், இல்லை தோற்கவில்லை என்றும் பலர் விலாவாரியான புள்ளிவிபரங்களுடன் விவாதங்களும் தொடர்கின்றன. ஆனால், வன்னி மண்ணில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட பெண் போராளி பற்றி எவரும் கணக்கெடுக்கவேயில்லை. தூக்கி வீசிய கருவேப்பிலையாக, கண்ணி வெடியில் காலை இழந்த பெண் போராளி கருணாநிதி யசோதினி உள்ளார். இ…
-
- 3 replies
- 441 views
-
-
இன்று இந்திரா காந்தி நினைவு நாள். ஆங்கில டியூஷன் முடிந்து, தெஹிவல கடற்கரைப் பக்கத்தில் இருந்து, நண்பருடன் வெள்ளவத்தை நோக்கி ரயில் பாதை மேலாக நடந்து வந்து கொண்டிருந்தோம். இரு போலீஸ் காரர்கள், கிரந்தம் விட யோசித்து, கூப்பிட்டு அரை மணி நேரம் வதை பண்ணி கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணம் அடையாள அட்டை வேறு அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. நேரம் ஆக எமக்கு கவலை வரத் தொடங்கியது. எம்மிடம் பிளேன் டீ காசு தான் இருந்தது. அவர்களோ, காசு வெளில வருமோ என்று வதை பண்ணிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து வந்த 'அன்னாசி' விற்பவர், 'தீடிரென' நின்று தனது சிறிய ரேடியோவில் நியூஸ் கேட்டு பதட்டத்துடன் 'இந்திரா காந்தி சுடப் பட்ட' செய்தியினை அறிவித்தார். எல்லோருக்கும் …
-
- 0 replies
- 441 views
-
-
யாழ். திரைப்பட விழா விட்ட பெருந்தவறு புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஒக்டோபர் 03 புதன்கிழமை யாழ். சர்வதேசத் திரைப்பட விழா இன்று புதன்கிழமை ஆரம்பிக்கின்றது. நான்காவது ஆண்டாக நடைபெறும், குறித்த திரைப்பட விழாவில் கவனம்பெற்ற உள்நாட்டு - வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. உள்ளூர் கலைஞர்களின் குறும்படங்களுக்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. ஆனால், இம்முறை திரைப்பட விழா ஆரம்பிப்பதற்கு முன்னரேயே, திரைப்பட விழாக்குழு கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது, சர்ச்சைக்குரிய ‘Demons in Paradise’ என்கிற படத்தின் இயக்குநரான ஜூட் ரட்ணம். இம…
-
- 0 replies
- 440 views
-
-
ஏதோ இருத்தரப்பினர் சண்டையால் நம்மூரில் கடைகள் கதவடைப்பு செய்யும் நிலை போல இன்று அமெரிக்கா இருக்கிறது. உலக நாடுகளின் மூத்த அண்ணன் என்று கருதப்படும் அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், தேசிய பொழுதுப்போக்கு பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள் போன்றவை அக்டோபர் முதல் தேதியிலிருந்து இழுத்து மூடப்பட்டன. இதற்கு கூறப்படும் காரணம் அமெரிக்காவின் பட்ஜெட் அவசரநிதி மசோதாவிற்கு எதிர்கட்சிகள் ஒப்புதல் தர மறுத்தது. இந்தியாவில் லோக்சபா, ராஜ்யசபா என்கிற இரு அவைகள் இருப்பது போல அமெரிக்காவில் காங்கிரஸ் மற்றும் செனட் என்ற அவை அமைப்புகள் உள்ளன. இந்தியாவின் நிதி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ளது போல் அமெரிக்காவின் நிதி ஆண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை உள்ளது. ஒவ்வொரு …
-
- 0 replies
- 440 views
-
-
இந்தியப்படை மீது போர்க்குற்ற விசாரணை வருமா..? இந்திய அமைதிப் படை இலங்கையில் தமிழர்கள் மீது நடாத்தியதும் சர்வதேச போர்க்குற்றச் செயல்தான் என்ற கோணத்தில் விசாரணைகள் உலக மன்றில் இன்னமும் ஆரம்பமாகவில்லை. இப்போது இந்தியப் படைக்கு தரக்குறைவான உணவு வழங்கியதால் இருவர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள், இதுபோல இந்தியப் படை செய்த தரக்குறைவான செயல்களுக்கு யார் தண்டனை வழங்குவது என்ற கேள்வி பதிலின்றிக் கிடக்கிறது. இந்த வழக்கு மேலும் விரிவுபடுத்தப்பட்டு இந்தியப் படைகள் செய்த குற்றச் செயல்களும் விசாரிக்கப்படும் நிலை வருமா என்பது ஆதங்கமாக உள்ளது. தரக்குறைவான உணவுக்கு மட்டும் தண்டனை வழங்கினால் போதுமா..? இது குறித்த செய்தி : எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கையில் நிலைகொண்டிருந்…
-
- 0 replies
- 440 views
-
-
-
- 0 replies
- 440 views
-
-
விண்ணுய வீரத்தை விமான தளத்துள் சமராடிக் காட்டிய எம் கரும்புலி மறவரின் நினைவு சுமந்து கறுப்பு யூலையின் நாளுள் நனைவோம். எட்டி உதைக்கும் கால் தழுவி தொழுது கிடந்த பொழுதுகளாகவே ஆண்டுகள் பலவாக அப்படியே கிடந்தோம். காலிமுகத்திடலில் யூனியன்கொடி இறக்கி ஏற்றி வைத்த சிங்கக்கொடியின் நிழலே எந்நாளும் எமக்கானது என்ற நினைப்பிலேயே நீட்டித் தூங்கிக் கிடந்தனர் எம் முன்னோர். ஒரு தீவு ஒரே நாடு என்ற தேசியக்கனவில் திளைத்திருந்தோம். -சத்தியமாகவே லங்கா நமது நாடென்றே மனதார நினைத்திருந்தோம். ஆதிகாலைப் பொழுதொன்றில் யாழ்தேவி புகையிரத்தின் உள்ளிருந்து களனிப்பாலத்தின் முழு அழகையும், சேறு உழக்கும் எருமையின் காலடியில் விரிந்திருக்கும் செங்கமலப்பூவின் சிலிர்ப்பையும், விடிந்தும் விடியாத அந்தப் பொழுதில் தூ…
-
- 0 replies
- 439 views
-
-
மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரத மக்கள் பாதை யின் போராட்டம்
-
- 3 replies
- 439 views
-
-
ஆங்கிலவழிக் கல்வியும் நீங்களும்… கடந்த திங்கட்கிழமை மாலை, இமெயில் தமிழர் சிவா அய்யாதுரையின் சொற்பொழிவை, அரங்கம் ஒன்றில் கேட்க நேர்ந்தது. ராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்ட பர்மா ரிட்டன் தந்தைக்கு, மும்பையில் பிறந்து, தனது ஏழாம் வயதில் குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர் சிவா அய்யாதுரை. “நான் தமிழும் இங்லிஷும் மிக்ஸ் பண்ணி பேசுறேன்” என்று மேடையேறியவர், கிட்டத்தட்ட 98 விழுகாடு ஆங்கிலத்தில்தான் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்த சொற்பொழிவு, 100 விழுக்காடு புரியும்படி எளிமையாக இருந்தது. எனக்கு ஆங்கிலப் புலமை இப்போதுவரை கைகூடவில்லை. அலுவல் நிமித்தமாக பல்வேறு ஆங்கிலக் கூட்டங்களுக்கு சென்றபோதும், மண்டை குழம்பியே வெளியேறியிருக்கிறேன். சிவா அய்யாத…
-
- 0 replies
- 439 views
-
-
இந்தியாவைத் தென்முனையில் பலவீனப்படுத்த, இதுவரை இலங்கையை மறைமுகமாகப் பயன்படுத்தி வந்தது சீனா. தற்போதோ இந்தியாவின் எல்லையில் இருந்து 50 கி.மீ தொலைவுக்குள்ளாகவே ‘காற்றாலை மின் திட்டம்’ என்ற பெயரில் கால் பதிக்கிறது. இலங்கையின் நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய மூன்று தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை சீனாவின் சினோசர் - இடெக்வின் (Sinosar-Etechwin) நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது ஒரு புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திட்டத்தைப் போன்று தோன்றும். ஆனால், இதன் நோக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது தான். இந்தத் திட்டத்தின் மதிப்பு …
-
- 1 reply
- 439 views
-
-
தமிழர் கடலில் நடப்பது என்ன? - மறவன்புலவு க.சச்சிதானந்தன் உடன் நேர்காணல்
-
- 1 reply
- 439 views
-
-
அண்மைக் காலங்களிற் தமிழில் எழுதும் சிலபத்தியாளர்களின் பத்திகளை வாசிக்கும் போது அவர்கள் எவ்வளவு கவனமாகவும் நுட்பபமாகவும் தொழிற்படுகிறார்கள் என்பது தெரியவருகிறது. இவர்கள் எதில்கவனமாக இருக்கிறார்கள் என்பதனையும் எதனை நுட்பமாக வாசிப்பவர்களின் மனதில் பதியவைக்க விரும்புகிறார்கள் என்பதையும் நாங்கள் கவனிக்கவேண்டும் இந்தப்பத்தியாளர்கள் இரு வகையானவர்கள் ஒரு வகையினர் விடுதலைப் புலிகளை நிரந்தரமாகவே கடுமையாக எதிர்த்து இலங்கை அரசுடன் இணைந்திருந்தவர்கள். மற்றவகையினர் விடுதலைப் புலிகளின் அழிவுடன் தீடீர் என ஒடுக்குமுறை அரசின் பக்கம் சாய்ந்து விட்டவர்கள். விடுதலைப் புலிகளை மிக வீராவேசமாக ஆதரித்த பலர் இன்றைக்குள்ள சிங்களப் பேரினவாத அரசின் ஆதரவாளர்களாக மாறியுள்ளமை பலருக்கு ஆச்சரியமாக இர…
-
- 0 replies
- 439 views
-
-
இனப்படுகொலைக்கு முன்னோடி ‘இந்திய அமைதிப்படை’யே (10) (சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு, பகுதி-10) “ஒரு முறை இந்தியப் படை, தளம் 14-ஐ முற்றுகையிட்டு பிரபாகரனை சுற்றி வளைத்தது. அப்பொழுது அவருடைய மெய்க்காப்பாளர்கள் பிரபாகரனுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் இடையே வலிமையான ஒரு சுவரைப் போல நின்றார்கள். இறுதியில் அந்த முகாமை இந்தியத் துருப்புகள் கைப்பற்றின. ஆனால் தளம் 14-ன் 17 மெய்க்காப்பாளர்கள் தங்கள் உயிரைத் துறந்து, பிரபாகரன் வன்னிக் காட்டிற்குள் தப்பிச் செல்ல போதுமான நேரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதுவே இந்திய அமைதிப்படை ம…
-
- 0 replies
- 439 views
-
-
தமிழ் அரசியலை செப்பனிடும் விக்னேஸ்வரனின் முன்னுதாரணம் கபிலன் இராசநாயகம் அரசியல் என்றாலே பணம் உழைப்பதற்காக என்று மக்கள் முகம் சுழிக்கும் இன்றைய நிலையில் தனது பாராளுமன்ற பிரவேசம் அத்தகைய ஒரு சாக்கடைக்குள் சிக்காது என்பதை உறுதிப்படுத்தவும் பொதுமக்கள் தன்னை கண்காணித்துக்கொள்வதற்கு ஏதுவாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தனது சொத்துவிபரங்களை தேர்தலுக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார். விக்னேஸ்வரனின் இந்த செயற்பாடு இலங்கை அரசியலில் மட்டுமன்றி தமிழக அரசியலிலும் எதிர்வரும் காலங்களில் பெரும் செல்வாக்கை செலுத்தப்போகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப…
-
- 1 reply
- 439 views
-
-
எனது நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய ஒரு கட்டுரை இது. தயவு செய்து ஆழ்ந்து படித்து கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி. சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் பேசும் மக்களுக்கான தெரிவுகள் எவை? ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் டிசெம்பர் 17ம் திகதி நடைபெறுகிறது. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஆழும் கூட்டணி வேட்பாளர் தற்போதய ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச, எதிர்ககட்சிகளின் பொது வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவரில் ஒருவரே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப் போகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போவரைத் தீர்மானிப்பதில் இத் தடவை தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்க்கமான பாத்திரம் உண்டு. இதனால்…
-
- 0 replies
- 439 views
-
-
அரசியல் ஒரு சாக்கடை என்று பலரும் பேசிக் கொள்வதுண்டு. அதேநேரம் அரசியலின் இயங்குநிலை காரணமாகப் பலரும் அரசியலை வெறுக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு அரசியல் குறித்து மக்களிடையே எழுந்த அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்காக கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலிப் பத்திரிகையில் ஒரு விளக்கக் கட்டுரையை வரைந்தார். அதில் அரசியல் பிழையன்று. அரசியலில் ஈடுபடுவோர் சிலர் அறமின்றி நடந்து கொள்வ தால் அஃது அரசியலுக்கு இழுக்கைத் தந்து விடுகிறது. மற்றும்படி அரசியல் செம்மைப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் வாழ்வு செழுமை பெறும். எனவே மக்கள் அரசியலை ஒதுக்காமல் அரசியலுக்குப் பொருந்தாதவர்களை ஒதுக்க வேண்டும் எனக் கருத்துரைத்தார். கலைஞர் கருணாநிதி வரைந்த விளக்கம் மீது ஈழத் தமிழ் மக்க…
-
- 0 replies
- 439 views
-
-
காலனித்துவத்தில், சிங்கள நடுத்தர வர்க்கத்தின் எழுச்சியும், தமிழ் நடுத்தர (கொழும்பு தமிழ்) வர்க்கத்தின் எழுச்சியும். வர்க்கம், சாதி பிரிவினைகள் இந்த எழுச்சியில் செல்வாக்கு செலுத்திய விதமும். எல்லா பதிவுகளையும் பார்த்தல் புரியும், ஏன் மவுண்ட் பட்டன் சிங்களத்திடம் ஆட்சியை கொடுத்தார் என்று. நூல் வடிவில்: from Nobody’s to Somebody’s by Prof. Kumar Jayawardena.
-
- 0 replies
- 438 views
-
-
13ஆவது திருத்த சட்டத்தில் உள்ள அதிகாரங்களை குறைத்தல், மாகாணசபை முறை இரத்து செய்யப்பட வேண்டும் என தென்னிலங்கை சிங்கள இனவாத தரப்புக்கள் போர்க்கொடி எழுப்பியிருக்கும் வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய பயணத்தை மேற்கொண்டிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடில்லி செல்கின்றனர் என செய்திகள் பரப்பட்டிருந்தாலும் உண்மை அதுவல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த பயண ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒப்புக்கொண்டிருந்தார். புதுடில்லி சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷியை சந்தித்த…
-
- 0 replies
- 438 views
-
-
மட்டு.நகரான் ‘தமிழர் தேசம்’ மீள முடியாத நிலைக்குச் செல்லும் நிலை இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது இன்று சிங்கள தேசத்தினை உலுக்கியுள்ளதோ இல்லையோ தமிழர் தேசத்தினை நன்றாகவே உலுக்கியுள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது அதற்கேற்றாற்போல் இசைவாக்கம் அடைந்தவர்கள் தமிழர்கள் என்று கூறினாலும் இன்றைய நிலைமை மாறுபட்டதாகவே உள்ளது. பொருளாதார நெருக்கடியென்பது தமிழர்களின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு போராட்டத்தினை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையினை இன்று ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் எந்த போராட்டத்தினையும் நடாத்தாத காரணத்தினால் ஏதோ அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லையென்பது போல சிங்கள தேசம் நடந்து கொள்வதையும் அவதானிக்கமுடிகின்றது. கிழக்கு மா…
-
- 0 replies
- 438 views
-
-
புதிய அரசியலமைப்பு முயற்சி தொடர்பில் சம்பந்தனின் ஆதங்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை உள்ளடக்கி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு இந்தியா உதவி புரிவதுடன் அதற்கான அழுத்தங்களையும் வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடிவடையுமானால் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைவிட தீவிரமான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உருவாவதற்கு வாய்ப்பு ஏற்படுமென்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் கரு ஜ…
-
- 0 replies
- 438 views
-
-
மீண்டும் மகிந்த அதிகாரத்திற்கு வந்துள்ளமை- இந்தியாவிற்கு கவலையளிக்கும்- டைம்ஸ் ஒவ் இந்தியா மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பியுள்ளமை இந்தியாவை கவலையடையச்செய்யும் 2015 இல் இந்தியா ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சிறிசேனவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்துவதற்கான தனது செல்வாக்கை பயன்படுத்தியது ராஜபக்ச கொழும்பு துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கும் சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கையில் தரித்து நிற்பதற்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் உதவியுடன் உருவாக்கவும் தீர்மானித்ததன் மூலம் இலங்கையில் சீனா மூலோபாய அடிப்படையில் காலடி எடுத்து வைப்பதற்கு உதவியதன் பின்னரே இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்தது. கடந்த மூன்று மாதங்…
-
- 1 reply
- 438 views
-
-
அவர்களுக்கு தெரியும், அவர் அந்த பாதையால் அழைத்து வரப்பட மாட்டார் என்று. ஆனாலும் அந்த லண்டன் கீத்ரோ 4வது விமானநிலையத்தின் பயணிகள் வெளியேறும் பாதையில் அவர்கள் தமிழீழதேசிய கொடியை உயர்த்திபடி நின்றார்கள். இனப்படுகொலை குற்றவாளி மகிந்த என்று சத்தமிட்டபடியே நின்றிருந்தார்கள். அவர்களுக்கு தெரியும் அவர்களின் உறவுகளை கொன்று குவித்து இனப்படுகொலை வெறியாட்டமாடிய அந்த நரபலிமனிதனை அவர்களின் முன்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக பிரித்தானிய காவல்துறை அழைத்து கொண்டு வெளியேறாது என்று தெரியும். அப்படி இருந்தும் அவர்கள் அந்த வாசலில் தேசியகொடிகளை ஏந்தியபடியே திரண்டு நின்றிருந்தார்கள். அவர்களுக்கு நன்கு தெரியும். அந்த சிங்களதேசதலைவனை சுற்றி சர்வதேச ராஜதந்திரிகளுக்கான சலுகைகளும், இறையாண்ம…
-
- 0 replies
- 438 views
-
-
சென்னை கோயம்பேட்டில் தனித்து விடப்பட்ட பதினேழு வயது பெண்ணை பத்திரமாக மீட்டது புதிய தலைமுறை
-
- 0 replies
- 437 views
-