நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
ஒரு அமைப்பு சர்வதேச விதிமுறைகளை மீறின என்ற காரணத்தால் அதே விதிகளை பின்பற்றுவோம் என உலக சாசனங்களில் கையெழுதிட்ட நாடுகள் செய்யலாமா?? செய்தால் அவர்களும் பயங்கரவாதிகள் தானே?? அவர்களுக்கு என்ன தண்டனை? யார் தண்டனையை பெற்றுக்கொடுப்பது??
-
- 2 replies
- 673 views
-
-
சொன்னது: இலங்கையில் போருக்கு பிறகு இந்து கோவில்கள், தமிழர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மொழியின் ஆக்கத்தை மறைக்க இப்படி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதே போல்தான் தமிழகத்திலும் திருவரங்கம்- ஸ்ரீரங்கம் என்றும், திருவில்லிபுத்தூர்- ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும், திருப்பெரும்புதூர்- ஸ்ரீபெரும்புதூர் என்றும் இங்குள்ள இனப் பகைவர்களால் தமிழ்ப் பகைவர்களால் ஸ்ரீ என்ற வடமொழி புகுத்தப்பட்டது. அதே போல்தான் சிங்கள இனவெறியர்கள் தமிழ்ப் பெயரை அழித்திட தமிழர்களை அழித்திட முனைந்து வருகிறார்கள். அவனுக்கு பாடம் கற்பிக்கத்தான் தமிழகமே திரண்டிருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் வேறு சில பகுதிகளிலும் போராட்…
-
- 0 replies
- 653 views
-
-
வடக்கில் உண்மையான சிவில் நிர்வாகம் துரித கதியில் இடம்பெறவில்லை: பிரிட்டனின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அலிஸ்ரெயார் இலங்கையில் மோதலுக்கான விடயங்கள் மங்கிச் சென்றாலும் அதற்கான அடிப்படைக் காரணங்கள் அழிந்துவிடவில்லையெனவும் வடக்கில் இராணுவத்தின் கடுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும் பிரிட்டனின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அலிஸ்ரெயார் பேர்ட் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் ஒரு சில படையினரே வீதிகளில் காணப்படுகின்றனர். ஆனால், பொதுமக்களின் வாழ்வில் பல விடயங்களில் இராணுவத்தின் பிரசன்னம் இப்போதும் காணப்படுகிறது. அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் பேசுவோரை இராணுவப் புலனாய்வு இப்போதும் விசாரணை செய்கின்றது என்று அலிஸ்ரெயார் பேர்ட் கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்…
-
- 2 replies
- 372 views
-
-
நியூயார்க்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல பேஷன் டிசைனர் ஆனந்த் ஜான், பாலியல் குற்றத்திற்காக அமெரிக்காவில், 59 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ள நிலையில் தன்மீதான ஒரு புகாரை அவர் ஒத்துக்கொண்டுள்ளார். புகழ் பூத்த பாடகர் ஜேசுதாஸ் தங்கை மகனான, கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் ஜான், 1999ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற பேஷன் டிசைனராக இருந்தவர். பிரபல நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்தவரான ஆனந்த் ஜான் மீது, 2007 ஆம் ஆண்டு பாலியல் புகார் சுமத்தப்பட்டது. பேஷன் உலகில் மாடலாக வலம் வருவதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தங்களை பலவந்தப்படுத்தியதாக ஜான் மீது 7 பெண்கள் புகார் தெரிவித்தனர். இவர்களில் 14 வயது சிறுமியும் ஒருவர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜான் மீது 49 பிரிவுகளில் …
-
- 11 replies
- 1.2k views
-
-
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் பாலியல் வல்லுறவுகளும் அ.நிக்ஸன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்) பெண்கள் மீதான அடக்கு முறைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இலங்கை, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த நிலைமை காணப்படுகின்றது. இலங்கையின் போர் நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாலியல் வல்லுறவுகள் தற்போது படையினரால் மாத்திரமல்ல உறவினர்கள், அரச ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களினாலும் இடம்பெறுகின்றது. வடக்கு ,கிழக்கில் நாளொன்றுக்கு ஐந்து பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுகின்றனர். கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நாளொன்றுக்கு மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இதன் எண்ணிக்கை அதிகம் என்றே பெண்கள் அமைப்புகள் கூறுகின்றன. கைவிடப்பட்ட நிலைமை இந்திய…
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு மயிலாம்பாவெளி சிறுவர் இல்லம் திறப்புவிழா. கனேடிய தமிழ் மக்களின் பூரண பங்களிப்பில் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மயிலாம்பாவெளி C REPசிறுவர் இல்லம் 2013 மாசி 09 திகதி சனிக்கிழமை அன்று திருமலை மறைமாவட்ட ஆயர் வண கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களள் திறந்துவைக்கப்பட்டது. சிறுவர் இல்ல கட்டிட நிர்மானத்துக்கு ஆதரவுதந்துதவிய கனேடிய தமிழ் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு 2013 மாசி 10 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று 733 Birchmount Rd, Scarborough, Ontario இல் அமைந்திருக்கும் கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் மாலை பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் சிறுவர் இல்லத் திறப்புவிழா காணொழி காண்பிக்கப்பட்டதுடன் கலை கலாச்சார நிகழ்வுகளும…
-
- 0 replies
- 427 views
-
-
பிரான்சு பாரிஸ் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சாசனம் முதல் முதலாக அறிவிக்கப்பட்ட மனிதவுரிமை சதுக்கத்தில் நேற்று 12.02.2013 செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முத்துக்குமார் முருகதாசன் மற்றும் தமிழுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக, தமிழீழ மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக தமிழரின் எழுச்சிக்காக தங்களை வேள்வி தீயாக்கிய செங்கொடி மற்றும் அனைத்து தியாக உள்ளங்களும் நினைவிற்கொள்ளப்பட்டன. கடுங்குளிருக்கு மத்தியில் நிகழ்ந்த இந்நிகழ்வின் போது, வெளிநாட்டு மக்களுக்குத் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி எமது போராட்டத்தின் நோக்கம் பற்றி வி…
-
- 0 replies
- 350 views
-
-
12/02/2013 அன்று உலகமெங்கும் இருக்கும் ஐ.நா அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினோம் - மே 17 இயக்கம் http://www.sankathi24.com
-
- 6 replies
- 613 views
-
-
ராஜீவ் காந்தி புலிகளால் கொல்லப்படவில்லை http://youtu.be/DCGE5cJ8iVg
-
- 0 replies
- 859 views
-
-
பிரிட்டனை அச்சுறுத்தும் நரிகள் வேட்டை நாய்களின் உதவிகளுடன், குதிரை மீது அமர்ந்து நரிவேட்டை என்று கிளம்பும் பெரும் பிரபுகளின் வீர விளையாட்டாக பல ஆண்டுகளாக நடை பெற்று வந்த நிகழ்வு, மிருக வதை தடுப்பு அமைப்புகளின் அழுத்தங்களினால் தடை செய்யப்பட்டது. குருரமாக வேட்டை நாய்களினால், கொல்லப் படும் நரிகள் மீது பொதுமக்கள் கொண்ட அனுதாபமே இந்த தடைக்கு காரணம். இப்போது நிலைமை என்னவெனில், பல்கிப் பெருகி விட்ட நரிகள், நாட்டினுள் வந்து, வீடுகளுக்குள் புகுந்து கிடைப்பதனை தூக்கிப் போகின்றன. இப்பொது கதை, கைமீறி, குழந்தைகளைப் பதம் பாக்கும் அளவுக்கு சென்று விட்டதால் அரண்டு போய் விட்டது தாய்க்குலம். கடந்த வருடம், லண்டனுக்கு அருகில் ஒரு வீட்டினுள் புகுந்து, தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந…
-
- 14 replies
- 2.1k views
-
-
குதிரை இறைச்சி முடிந்து கழுதை இறைச்சிக்கு போனது கதை ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படும் தயாரித்து முடித்த உணவுப்பொருட்களின் பெட்டிகளில் மாட்டிறைச்சிக்கு பதில் குதிரை இறைச்சி கலக்கப்பட்ட செய்தி கடந்த சிலநாட்களாக முக்கிய இடம் பெற்றிருந்தது. குதிரை மட்டுமல்ல கழுதை இறைச்சியும் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலை பிரிட்டனில் இருந்து வெளிவரும் இன்டிப்பென்டன்ட் இன்றய காலைச் செய்தியில் வெளியிட்டுள்ளது. கழுதை இறைச்சி பெரும்பாலும் பிரான்சில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறிய பத்திரிகை கழுதை குதிரை போன்றன இறைச்சியடிக்கப்பட்ட கதையையும் அம்பலப்படுத்தியுள்ளது. ருமேனியா நாட்டின் வீதிகளில் குதிரைகளை இனி ஓட முடியாது என்று அந்த நாட்டின் அரசு சட்டம் போட்டுள்ளது, அதைத் தொடர்ந்து…
-
- 2 replies
- 693 views
-
-
முருகதாசன் எனும் ஈழத்து இளைஞன் பிப்ரவரி 12, 2009 அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரிலுள்ள ஐ. நா. அகதிகளுக்கான ஆணையர் அலுவலகத்தின் முன்பு தீயிட்டு தன் இன்னுயிரை தமிழீழ மக்களுக்காக ஈகம் செய்தார். “உலகத் தமிழ் சமூகத்துக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து ஒன்று கூடுங்கள். நம் மக்கள் உரிமைகளை மீட்டிடவும், உலகின் பல்வேறு தேசிய இனங்களின் மனங்களையும், இதயங்களையும் வென்றெடுக்கவும் கைகோர்த்துக் குரலெழுப்புங்கள். இது ஒரு மாபெரும் கடைசி வாய்ப்பு. என் உடல் மீது எரிகிற நெருப்பு உங்களை விடுதலைக்கு இட்டுச்செல்கிற தீவட்டியாகட்டும். உடலால் உங்களை விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும், உங்கள் இதயத்தின் மிக அருகே இருக்கிறேன்” என்று சக்தி மிக்க வார்த்தைகளுடன் தன் வாழ்…
-
- 0 replies
- 347 views
-
-
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி முடக்கிவிட்டோம். விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டாயிற்று. ஆனால் இன்னமும் சாதாரண மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. ஆயினும் அரசுக்கு இதற்கெல்லாம் காரணம் புலிப்பயங்கரவாதமே என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாத நிலை. அடுத்தது என்ன? முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாக தாக்குதல். இஸ்லாமியருக்கு சொந்தமான பிரபல வர்த்தகநிலையத்திற்கு எதிராக போராட்டம். இலங்கையில் இஸ்லாமியரின் ஜனத்தொகை விகிதாசாரம் வேகமாக அதிகரிக்கிறது. இதைத் தடுக்க இஸ்லாமியரைப்போல பௌத்தர்களும் ஐந்து தடவை மணமுடிக்க சட்டத்தில் மாற்றம் செய்யவெண்டுமென புத்தமதகுரு அறிக்கை. என்ன இன்னமும் புரியவில்லையா சிங்கள இனவாத சக்திகள் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி…
-
- 1 reply
- 494 views
-
-
"எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' 09 பெப்ரவரி 2013 அப்சல் குரு "எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து... சிறிய சிறிய அறைகளாகத் தடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் நான் நுழைகிறேன். சிறைவாசிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தடிமனான கண்ணாடிச் சுவரும், இரும்பு சன்னலும்…
-
- 2 replies
- 592 views
-
-
தமிழகத்தில் வெடித்திருக்கும் போராட்டம் சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையினை கொடுக்கின்றது - கிளிநொச்சி மக்கள்! வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013 21:38 தமிழீழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றழித்துவிட்டு இந்தியாவிற்கு வருகை தந்திருக்கின்ற சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக இந்தியாவில் வெடித்துள்ள போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு விரைவில் சுதந்திரம் கிடைக்குமென்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுக்கின்ற இந்தியத் தமிழ் உறவுகளின் தீரமிகு செயற்பாடுகளை நோக்கும்போது தமிழீழ தேசியத் தலைவரையும் தமிழ் மக்களையும் இந்தியத் தமிழ் உறவுகள் எந்த நிலையில் வைத்து மதிக்கின்றனர் என்பது வெளிப்பட…
-
- 1 reply
- 469 views
-
-
கூடங்குளம் அணுஉலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைவர் சீமான் ஆகியோர் தெரிவித்தனர். கூடங்குளம் முதல் அணுஉலையைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவது தொடர்பான உண்மை நிலவரங்களை வெளியிட வேண்டும்; இது தொடர்பாக மத்திய அரசும் அணுசக்தி துறையும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; தவறினால் அணுஉலை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்…
-
- 0 replies
- 372 views
-
-
-
- 0 replies
- 508 views
-
-
சுவிஸ் பாசல் மாநிலத்தில் இயங்கி வரும் ஆயுதம் தயாரிப்பிலும் சுவிஸ் சப்தபியூசன் இசை வெளியீட்டிலும் வெளிவரத் தயாராகியுள்ள ஒரு நிமிடம் பாடல் காணொளியின் காட்சி முன்னோட்டம். எதிர்வரும் 10.02.2012 ஞாயிற்றுக்கிழமை பாசல் மாநிலத்தில் நடைபெறவுள்ள தமிழ்காத்து 2013 நிகழ்வில் முழுமையான பாடற் காணொளி அகன்ற வெண்திரையில் திரையிடப்பட்டு வெளியிடப்படவுள்ளது. சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த எங்கள் இளைய தலைமுறைக் கலைஞர்களின் எழுத்தில், இசைவார்ப்பில், ஒலிப்பதிவில், ஒளிப்பதிவில், நடிப்பில், இயக்கத்தில் தயாரிப்பில் இப் பாடல் காணொளி வெளிவரவுள்ளது, " "
-
- 2 replies
- 582 views
-
-
தமிழினப் படுகொலைக்கு துணை செய்த ஐ.நா. அதிகாரிகளை தண்டிக்க ஐ.நா. அலுவலகங்களை முற்றுகை இடுவோம்! http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22799 திருமுருகன் காந்தி & உமர் செவ்வாய், 29 ஜனவரி 2013 இலங்கை மீதான சர்வதேச விசாரணையையும், தமிழீழத்திற்கான ஐ.நா.வின் பொது வாக்கெடுப்பினையும் தடுத்து நிறுத்தியதை உடனடியாக நிறைவேற்றுவதே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான உடனடி நிவாரணம்! ஐ.நாவே அதை நிறைவேற்று!! இலங்கை இனப்படுகொலை தொடர்பில் ஐ.நா.வின் நடவடிக்கைகள் குறித்து ஒரு உள்ளக ஆய்வறிக்கையை சார்லஸ் பெட்ரி என்கிற ஐ.நா. அதிகாரி தலைமையிலான குழு நவம்பர் மாதம் வெளியிட்டது. இது ஐ.நா…
-
- 0 replies
- 517 views
-
-
அன்பு சகோதரர் கமலுக்கு , முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை ஏன் படமாக எடுக்கவில்லை? Jan 31 2013 08:36:30 இஸ்லாமிய சகோதரனின் மனத்திறந்த மடல் விஸ்வரூபம் படம் தொடர்பான விவாகரங்கள் உணர்ச்சியின் உச்சக் கட்டத்திற்கு சென்ற பின்னர் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடிதம் ஒன்றை கமலுக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது , உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக. நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலை சிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து அதை திரை உலகத்திலேயே முதலீடு செய்பவர் என்று உங்களை அனைவரும் பாராட்டுவதும் உண்மை. உங்களின் 'உ…
-
- 0 replies
- 597 views
-
-
24-01-2013 அன்று மாலை 15:30 தொடக்கம் 16:30 வரை Niscemi மாளிகையில் இ.ஈ.மக்களவையும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புளும் இணைந்து பலேர்மோ மாநில முதல்வரின் உத்தியோகபூர்வமான வாசஸ்த்தலதலமான Niscemi மாளிகையில் ஓர் அரசியல் சந்திப்பைமேற்கொண்டனர். இச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் இ.ஈ.மக்களவையின் தலைவர் செபஸ்தியாம் பிள்ளை, உப தலைவர் ஐசஸ்வின், ஆலோசகர்கள் லீனப்பு, றஞ்சித் அரசியல் ஊடக பொறுப்பாளர் தட்சாயினி தவராஐசிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு ஐமால், பொருளாளர் சச்சிதானந்தம், சிசிலி மாநில தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் ஸ்ரேபனோ எட்வேட் , உறுப்பினர் சச்சியானந்தம் , தமிழர் புணர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் திரு.க…
-
- 0 replies
- 490 views
-
-
சீன மீனவர் ஒருவர் படகொன்றையும் மோட்டோர் சைக்கிளையும் பயன்படுத்தி நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடிய படகு ஒன்றை உருவாக்கியுள்ளார். புஜியான் மாகாணத்தில் ஸங் ஸொயு நகரைச் சேர்ந்த சென் குவோஹொங் (43) என்ற மீனவரே 4.5 மீற்றர் நீளமும் 1.6 மீற்றர் அகலமும் 750 கிலோகிராம் நிறையும் உடைய படகை உருவாக்கியுள்ளார். இந்தப் படகு வீதியில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேத்தில் பயணிக்கக் கூடியது. இதனை உருவாக்கிய நபர் 13 வயது முதல் மீன்பிடித் துறையில் ஈடுபட்டு வருகின்றார். http://www.virakesari.lk/article/interesting.php?vid=76
-
- 1 reply
- 516 views
-
-
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால் நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை; நம்மால் மறந்துவிடவும் முடியவில்லை. அதே பிரச்சனைதான் மீண்டும் மீண்டும் வருகிறது. படித்தவுடன் சோடா பாட்டில் போல் சீறுகிறோம். பின்னர் காலி பாட்டில் போல் அமிழ்ந்து விடுகிறோம். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் முஸ்லிம்கள் துணையின்றி விடுதலை வாங்க முடியாது என்ற ஒரு நிலைபாட்டை அன்றைய சில தலைவர்கள் எடுத்தார்கள். அதன் விளைவு பல லட்சம் உயிர்கள் மடிந்தன. ஒரு தனி முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவானது. பாரதமே என் தாய் நாடு என்று முழக்கமிட்டு பெரும்பான முஸ்லிம்கள் களத்திற்கு வரவில்லை. ஹிந்துக்கள் தியாகம் செய்தனர். அவர்களைக் கொன்று குவித்து முஸ்லிம்கள் பாகிஸ்தானைப் பெற்றுச் சென்றனர். …
-
- 2 replies
- 679 views
-
-
இறுதிப்போர் மூண்டது எப்படி!!!! இந்தியாவின் நயவஞ்சக பக்கங்கள். இறுதிப்போரை மாவிலாற்றில் விடுதலைப்புலிகள் தொடங்கவில்லை. மாவிலாறு ஏன் களமாக தெரிவு செய்யப்பட்டது என்பது பற்றியதான புவியியல் மற்றும் பிராந்திய வல்லாதிக்க நலன் பற்றியதான பதிவு தான் இது. விடுதலைப்புலிகளை பொறுத்தவரை ஆயுத வழங்கல், உணவு மற்றும் மருந்து வழங்கல் காயப்பட்ட மற்றும் வீரச்சாவடையும் போராளிகளை வெளியேற்றல் என்பவை சரியான முறையில் கட்டமைக்காமல் பெரும் போரை அவர்கள் தொடங்குவது கிடையாது. இது தான் வரலாறு. இனி விடையத்திற்கு வருவதற்கு முதல் சமாதான ஒப்பந்தம் முறிவடைய செய்யப்பட்டது எப்படி காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம். 5 மாணவர் படுகொலை 2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்கள் ப…
-
- 8 replies
- 1.5k views
-
-
பெற்றோர்களை பராமரிக்க தவறும் பிள்ளைகளுக்கு எதிராக சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டமொன்றை சீன அரசு ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பிள்ளைகளால் பராமறிக்கப்படாமால் தனிக்கப்படும் பெற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறதாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், இங்கு 60 வயதுக்கு மேலான முதியவர்கள் 16 கோடியே 70 இலட்சம் பேரும் 80 வயதுக்கு மேல் 10 இலட்சம் பேரும் உள்ளதாக தெரிவிக்கிகப்படுகின்றது. கடந்த 30 ஆண்டுகளாக பெற்றோருக்கு ஒரு குழந்தை சட்டம் சீனாவில் அமுலில் உள்ளது. இதனால், ஒரு பிள்ளை மட்டுமே கொண்ட குடும்பங்களில் அப்பிள்ளை வளர்ந்து தம் இருப்பிடம்விட்டு வேறு இடங்களுக்கு செல்வதால் பெற்றோர் கவனிக்கப்படாமல் விடப்படும்…
-
- 3 replies
- 512 views
-