Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்கலாம் : மீண்டும் கூட்டரசு மஹிந்த - மைத்திரி இணைந்தால்.. : - பாலிதவின் அதிரடி கருத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தினத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்க முடியும். மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டிணைவார்களானால் மீண்டும் மஹிந்தவின் குடும்பத்தவர்களின் அதிகாரமே வலுக்கும். 2015 இல் மக்கள் கூட்டு அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணை உயிர்ப்புடன் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை இணைத்து மீண்டும் கூட்டு அரசாங்கம் முன்னெடுக்கப்படும் என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார வீரகேசரிக்கு…

  2. நெடுமாறனின் அறிவிப்பினால் யாருக்கு பயன்? February 24, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கடந்த வாரம் கூறியது நிதானமாக சிந்திக்கக்கூடிய எவரையும் பரபரப்புக்கோ குழப்பத்துக்கோ உள்ளாக்கியிருக்க முடியாது. இதற்கு முன்னரும் சில தடவைகள் அவர் அவ்வாறு கூறியிருந்தார். கடந்த திங்கட்கிழமை தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நெடுமாறன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்புக்கு பிறகு இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது அவர் 2010 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் செய்தியாளர்கள் மத்தியில் முதற்தடவையாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாக க…

  3. “இந்தியா: மோடி என்ற கேள்விக்குறி” – பிபிசி ஆவணப்படம் கூறுவது என்ன? Feb 20, 2023 07:00AM IST ராஜன் குறை இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் சென்ற வாரம் ஒன்றிய அரசின் வருமான வரித்துறை சோதனையிட்டது கடுமையான விமர்சனங்களுக்கும், கண்டனங்களும் உள்ளாகியுள்ளது. இது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். திடீரென சென்று சோதனை செய்யுமளவு பிபிசி என்ன அதானி நிறுவனம் போல லட்சம் கோடிகளில் புரளும் நிறுவனமா என்ன? அது குறைந்த அளவே இந்தியாவில் செயல்படும் ஒரு சர்வதேச ஊடக நிறுவனத்தின் கிளை. அதனுள் சென்று ஊழியர்களின் செல்பேசிகளைப் பறிமுதல் செய்து முற்றுகையிட்டு விசாரிக்கும் அளவு அது என்ன ப…

  4. 1999 ற்கும் – 2009ற்கும் இடைப்பட்ட காலத்தில் EPDP குறித்த விமர்சனங்களுக்கு நான் பொறுப்புக் கூற முடியாது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளருமான முருகேசு சந்திரகுமார் வழங்கிய நேர்காணல்.

  5. வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களின் அரசியல் தலைமையை ஏற்பதை ஆட்சியாளர்களும் சிங்கள பேரினவாதி களும் ஒருபோதும் விரும்பவில்லை என்பது தெள்ளத் தெளிவு. இதற்கு துணைக் காரணங்கள் பல இருந்தாலும் பிரதான காரணங்கள் இரண்டு. அதில் ஒன்று நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களின் அரசியல் தலைமையை எடுத்துக் கொண்டால், அவரை ஏமாற்றவோ அல்லது சலுகைகளைக் காட்டி தம்பக்கம் வாலாசப்படுத்தவோ முடியாது என்பது ஆட்சியாளர்களுக்கு நன்குதெரியும். இதனால் அவரை அவர்கள் விரும்ப வில்லை. இரண்டாவது காரணம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் எழுந்து பேசுவாராயின் அதற்கு சர்வதேச சமூகம் நிச்சயம் செவி சாய்க்கும் மதிப்பளிக்கும். அதிலும் குறிப…

    • 0 replies
    • 333 views
  6. எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் இந்தியத் தலையீடு எவ்வாறு தவிர்க்கமுடியாத இடராக அமைந்தது என்பது நாம் அறிந்ததே. ஆனால், இந்த இந்திய வெளியுறவுத்துறையின் எமது விடுதலைப் போராட்டத்தினைக் கைய்யாண்ட, கருவறுத்த மிக முக்கியமானவர்களாக மலையாளிகள் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. திக்சீத், எம் கே நாராயணன், சிவசங்கர் மேனன். அந்தோணி, விஜய் நம்பியார், சதீஷ் நம்பியார், ராமன், ஹரிஹரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் ஈழப்போராட்டம் தோல்வியடையவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையினை வகுத்தார்கள், செயற்படுத்தினார்கள். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் தமிழர்கள் மீதான மலையாளிகளின் ஏளனமும், வெறும் ரகசியமும் அல்ல. மலையாளைச் சினிமாக்களில் தமிழர்கள் நடத்தப்ப…

  7. 24 நிமிடங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்பட்டு, 20 நாட்களேயான சிசுவொன்று பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம், இலங்கையை மாத்திரமன்றி, பல உலக நாடுகளில் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. இந்த சம்பவத்தினால் மனமுடைந்த சிலர், கொழும்பு - பொரள்ளை மயானத்தின் இரும்பு வேலியில் வெள்ளை நிறத்திலான துணிகளை கட்டி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிராக பிரிட்டனில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது …

  8. ‘கண்பொத்தியார்’ விளையாட்டு முகம்மது தம்பி மரைக்கார் / 2018 டிசெம்பர் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:10Comments - 0 நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக, ஜனாதிபதி வெளியிட்ட அறிவித்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பைப் பரபரப்போடு நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பத்தி எழுதப்படுகிறது. தத்தமது விருப்பு - வெறுப்புகளுக்கேற்ப, தீர்ப்புக் கிடைத்து விட வேண்டுமென்பதே கணிசமானோரின் ஆசையாக உள்ளது. ஆனால், ‘நீதிக்குக் கருணை கிடையாது’ என்பதை, இங்கு பதிவுசெய்ய வேண்டியுள்ளது. அதனால், அடுத்தவரின் அபிலாஷைகளுக்கேற்ப அது, செயற்பாடுவதில்லை. எனவே, தீர்ப்பு எப்படியும் அமையலாம். அரசியலரங்கில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பானது, மேலே கூறப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புடன், முடி…

  9. தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 66 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழ். நகர விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய குடியரசு தினத்தில் என்னை அழைத்தமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் புதியதொரு அரசியல் சூழலில் பதவியேற்று வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ள துணைத்தூதுவர் நடராஜ் அவர்களினால் இந்தியாவுக்கும் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான உறவு மேலும…

  10. லாயக்கு முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை, மு.ப. 07:18Comments - 0 ஒரு மக்கள் கூட்டம் தனக்கான நிலத்தையும் மொழியையும் இழத்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஓர் இனத்தை அழித்து விடுவதற்கு, அவர்களை நிலமற்றவர்களாக மாற்றி விடுவதே, மிகச் சூழ்ச்சிகரமான வழியாகும். நிலத்தை மீட்பதற்காகவும் மொழிக்கான அங்கிகாரத்துக்காகவும் உலகில் ஆரம்பித்த சண்டைகள், இன்னும் முடிந்தபாடில்லை. இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களும், நீண்ட காலமாக, இந்த ஆபத்துக்குள் சிக்கி விட்டன. ‘தேசிய இனம்’ எனும் அடையாளத்தை, சமூகமொன்று பெற்றுக் கொள்வதற்கு, நிலமும் மொழியும் மிகப் பிரதானமானவையாகும். அதனால்தான், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் நிலங்களை அபகரிக்கும் முயற்சிகளில், பெரு…

  11. அவலங்களைக் காட்சிப்படுத்தல்: சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது பற்றி... Editorial / 2019 மே 09 வியாழக்கிழமை, பி.ப. 12:22 Comments - 0 அண்மைய குண்டுவெடிப்புகளும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் இலங்கையர் ஒவ்வொருவரது மனத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்வுகள் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர காலமெடுக்கும். அந்த அவலங்கள் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவை ஒருபுறம் பிரசாரக் கருவிகளாகின்றன. இன்னொருபுறம், உணர்ச்சிகளைக் கிளறுவதற்கான வாய்ப்பாகின்றன. இலங்கை அரசியலின் கேடுகெட்ட பக்கங்கள், இப்போது இந்த அவலங்களை அறிக்கைப்படுத்துவதன் ஊடாகத் தொடர்கின்றன. கடந்த மூன்று வாரங்களில் அறிக்கையிடப்பட்ட படங்கள், காணொளிகள் பற்றி ஒருக…

  12. பிள்ளையானுக்கு பிணை - எழும் கடும் விமர்சனங்கள்.! ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை குற்றத்துடன் தொடர்புடையவராக கருதப்பட்டு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை, தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை எழுச் செய்துள்ளது. இவ்வாறு முகநூலில் எழுதப்பட்ட பதிவு ஒன்று வாசகர்களுக்காக… பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபயா ராஜபக்சே போட தமிழ் முஸ்லீம் ஆயுத குழுக்களை ஒருங்கிணைத்து புலனாய்வு துறை அதிகாரிகளை முன்னிலைப்படுத்தி ஒரு இரகசிய புலனாய்வு குழுவை 2005-2009 காலப்பகுதியில் இயக்கினார் இந்த குழுவின் ஏற்பாட்டில் தமிழ் ஆயுத குழுக்களின் பங்குபற்றலுடன் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கடத்தி காணாமலாக்கப…

  13. இரகசியங்களை ஜனாதிபதி வெளியிடாமல் இருக்கலாமா? எப்போதும் தமது எதிரிகளுக்கு ஆயுதம் வழங்காது பேசுவதில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 19ஆம் திகதி மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் கூட்டரசாங்கத்துக்கு ஒரு வருடம் பூர்த்தியாவதையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது வசமாக மாட்டிக் கொண்டார். கூட்டு எதிர்க்கட்சி எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களை நேரடியாகக் குறிப்பிடாமல் அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, சிலர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகக் கூறியிருப்பதாகவும் அவ்வாறு அவர்கள் புதிய கட்சியொன்றை ஆரம்ப…

  14. ஜேஆர், சந்திரிகா, மகிந்த, கோட்டா, ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடுகிறார்? April 22, 2025 11:21 am அரசற்ற இனம் ஒன்று தமது ”அரசியல் விடுதலை” நோக்கிச் செல்வதை – பேசுவதை, இனவாதம் என்று ”அரசு” என்ற கட்டமைப்பு உள்ள இனம் ஒன்றின் தலைவர் கூற முடியாது. குறிப்பாக அந்த அரசின் ஜனாதிபதி, தேர்தல் மேடைகளில் அவ்வாறு கூற முடியாது. இனிமேல் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்கிறார் அநுர. ஆனால் ஒரு அரசுக்குரிய நிதி – நீதி- நிர்வாகம் மற்றும் முப்படைகள் அனைத்தையும் பயன்படுத்தி 2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைகள் எத்தனை? 2015 இல் மைத்திரி – ரணில் நல்லாட்சி என்று வர்ணிக்கப்பட்ட அரசாங்கம், தமிழ் வரலாற்று பாட நூல்களில் …

  15. ரணிலுக்கு உதவி செய்யும் ஜப்பானும் இரண்டாம் உலக போரும் - இந்தக் கதை தெரியுமா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்த தருணத்தில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்திருந்தாலும், ஜப்பான் அந்த சந்தர்ப்பத்தில் பெரிதும் உதவி கரம் நீட்டவில்லை. எனினும், ஜப்பான் தற்போது உதவி கரம் நீட்ட முன்வந்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி…

  16. டயகம சிறுமியின் மரணம் - இது ஒன்றும் மலையகத்துக்கு புதிதல்ல! ஜூலை 19, 2021 –குமார் சுகுணா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவுகள், அரசியல் வாதிகளின் அறிக்கைகள்… பல அரசியல் வாதிகள் வீதியில் இறங்கி போராட்டம் என தற்போது பேஸ்புக் பக்கங்களிலும் மலையக அரசியல் வாதிகளினதும் பேசுப்பொருளாக மாறியுள்ள விடயம் டயகம சிறுமியின் மரணம். பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில் இம்மாதம் 03 ஆம் திகதி தீ காயங்களுடன் சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த வியாழக்கிழம…

  17. ஆசிரியர்களே மாணவர்களை வாழ விடுங்கள் February 7, 2016 - சி.ரமேஸ் மாணவர்கள் என்றும் உங்களின் கைபொம்மைகள் அல்ல. அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உங்களுடைய அசட்டையீனத்தால் இன்று ஒரு மாணவியை இழந்து தவிக்கிறோம். பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டி என்னும் பெயரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. பிஞ்சுகளை வெய்யிலிலும் பனியிலும் போட்டு வருத்தும் இவ்விளையாட்டுப் போட்டி ஒன்று தேவையா என்று எண்ணத் தோன்றுகிறது. வலயங்கள் பாடசாலை விட்ட பின்னர் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்த சொல்லிப் பணிப்பதால் பல பாடசாலைகள் பி.பகல் 1மணியிலி இருந்து பயிற்சியில் ஈடுபடுகின்றனர். காலை 7.30 மணிக்கு அணிநடை பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களே பிற்பகலில் விளையாட்டிலும் பயிற்சியிலும்…

  18. யார் வந்தாலும் சவால் இல்லை ! நாளை அறிவிப்பேன் ! மஹிந்த விசேட செவ்வி ஆளும் தரப்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகிய மூவர் வேட்பாளர் பட்டியலில் பிரதானமாக உள்ளனர். ஆனால் அவர்களில் யார் வந்தாலும் எங்களுக்கு சவால் இல்லை. நாம் தான் வெற்றிபெறுவோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்று வரும் போது அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணலாம். குறிப்பாக இந்தியாவின் காஷ்மீரில் நடந்த நிலைமையை கருத்தில் கொண்டே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை புரிந்து கொண்டே அரசியல் தீர்வு திட்டத்தை தேட வேண்டும். ஆனால்…

  19. தமிழர் தரப்பின் ஜெனிவா வரைபில் சர்ச்சைக்குள்ளான இனப்படுகொலை!- நடந்தது என்ன? இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரை நோக்கி தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கி அனுப்பி இருந்தன. இதற்காக மூன்று தேசியக் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இணைந்து சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தன. இதில் முன்னதாக இனப்படுகொலை என்கிற வார்த்தையை பொது ஆவணத்தில் உள்ளடக்கப்படவில்லை என்கிற விடயம் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. இது தொடர்பில் சிவாஜிலிங்கம் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் அவர்களையும் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம். உண்மையில் என்ன தான் நடந்தது?

  20. சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர் விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது. விமானம் தாக்கப்பட்டதும் விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் விமானத்தின் அவசரகால வாசல் மூலம் பாராசூட் பயன்படுத்தி தப்பியதாகவும், அவர்களில் ஒருவரை சிரியா கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றதாகவும் செய்தி பரவிவருகிறது. மேலும் கிளர்ச்சியாளர் அதற்கான ஆதாரத்தையும்…

  21. மன்­னார் நகர்ப் பகு­தி­யில் சதோச வளா­கத்­துக்­கான கட்­ட­டம் அமைப்­ப­தற்­காக நிலம் தோண்­டப்­பட்­டது. அந்த இடத்­தைத் தோண்­டி­ய­தில் மனித எலும்பு எச்­சங்­கள் தென்­பட்­டன. அங்கு தொடர்ந்து எலும்பு எச்­சங்­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை போர்க்­கா­லத்­தில் இரா­ணு­வத்­தால் கொன்று புதைக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளின் எலும்­புக்­கூ­டு­கள் என்று கரி­சனை கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்கை இரா­ணு­வத்­துக்­கும், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கும் 2009ஆம் ஆண்டு நடந்த இறு­திப் போரில் ஏரா­ள­மான தமிழ் மக்­கள் கொல்­லப்­பட்­ட­தாக முறைப்­பா­டு­கள் எழுந்­தன. இறு­திப்­போ­ருக்கு முன்­ன­ரும் வடக்கு மாகா­ணத்­தில் ஏரா­ள­மான தமி­ழர்­களை இரா­ணு­வம் கொன்று குவித்­தி­ருந்­தத…

  22. Published on 2022-01-31 16:55:00 ம.ரூபன் கடந்த 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1962 இல் இடம்பெற்ற முதலாவது புரட்சிச்சதி முயற்சி 60 ஆண்டுகளுக்குமுன் இடம்பெற்றது. ஜனநாயக ரீதியில் தெரிவான சுதந்திரக்கட்சி ஆட்சியை கவிழ்க்க சில உயர் பொலிஸ், இராணுவ கடற்படை அதிகாரிகள் மேற்கொண்ட இச்சதித்திட்டம் தோல்வியடைந்தது. 24 எதிரிகளில் 21 கிறிஸ்தவர்கள் இச்சதியுடன் தொடர்பு. இந்துக்கள், முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை. அதனால் இதனை ( CHRISTIAN COUP) என்கின்றனர். இச்சதி குறித்து ஓய்வு பெற்ற பொலிஸ் இராணுவ அதிகாரிகளும், பலரும் பத்திரிகைகளிலும், நூல்களிலும் எழுதியுள்ளனர். அவற்றில் இருந்து சில. 1962 ஜனவரி 25 பிரத…

  23. தமிழ் அரசியல்வாதிகளால் என்ன பயன்? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தொடங்கியுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் ஜீ.எல். பீரிஸ் அவர்களின் உரை பற்றியும், இலங்கை அரசாங்கம் பீரிஸ் மூலம் கையாள்வது பற்றியும், அதே நேரம் தமிழ் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்வியுடன் இந்த ஆய்வு அமைகின்றது. மற்றும் தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/

    • 0 replies
    • 330 views
  24. தொடர்ந்து தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சினிமாத்துறையின் நோக்கம் என்ன? – அருட்தந்தை ஜெகத் கஸ்பர் June 2, 2021 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் ஒரங்கட்டும் நோக்கத்துடன் தமிழர்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவணங்களைத் தயாரிக்கும் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதற்கான ஆதரவுகளை வழங்குவதில் இந்திய சினிமாத் துறை முன்னணி வகிக்கின்றது. அதிலும் குறிப்பாக வேற்று மாநில கலைத் துறையினர் தொடர்ந்து இவ்வாறான இழிவான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியே தற்போது அமசோனில் வெளிவரவுள்ள Family man -2 (பமிலி மான்- 2) என்ற தொடர் நாடகம். இது தொடர்பில் ‘இலக்கு’ ஊடகத்தி…

  25. ஒருங்கிணையும் தமிழர் தரப்பும் சிறீலங்கா எதிர் கொள்ளும் அழுத்தங்களும் கிந்திய வெளியுறவு கொள்கை தலை குணிந்து நிற்கின்றது😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.