நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
அரசியல் விமர்சனம்: சிங்களத்திடம் புலிகள் முன்வைத்த கோரிக்கை..? இவ் விடயம் 02. 03. 2011, (புதன்),தமிழீழ நேரம் 11:15க்கு பதிவு செய்யப்பட்டது தமிழர்களைத் தொலைப்பதிலேயே கவனம் செலுத்துகின்ற மகிந்த அரசாங்கம் நெருக்கடியான தருணங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமது அரசின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதற்கு அவர் இத்தகைய உத்தியைக் கையாண்டு வருகிறார். அனைத்துலக நெருக்கடிகளும் உள்ளூர் நெருக்கடிகளும் அதிகரித்துள்ள கட்டத்தில் கடந்த வாரம் ஊடக ஆசிரியர்களுடனான ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார் ஜனாதிபதி. இதற்கு முன்னர் நடந்த கூட்டத்தில் அவர் தமிழ் ஊடகங்களை காட்டமாக விமர்சி…
-
- 1 reply
- 838 views
-
-
இந்துத்துவம் ஏன் அஹிம்சையைக் கொன்றது? ராஜன் குறை கிருஷ்ணன் காந்தி, 1948 ஜனவரி 30 அன்று கொலையுண்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் சமயத்தில் முன் எப்போதையும்விட அந்த நிகழ்வு நம் சிந்தனையைத் தூண்டுகிறது. நிறைய கூட்டங்கள் நடக்கின்றன. கட்டுரைகள் எழுதப்படுகின்றன. குறிப்பாக அவர் கொலைக்கு நேரடி காரணமான இந்துத்துவக் கருத்தியல், அதாவது இந்து ராஷ்டிரம் / இந்து அடையாளவாத தேசம் என்ற கருத்தியல் இந்திய அரசியலில் முதன்மை பெற முயலும் நேரத்தில், அவர் கொலை அதிக முக்கியத்துவம் பெறுவதும், அனைவரையும் சிந்திக்க வைப்பதிலும் வியப்பில்லை. நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் காந்தியைக் கொன்ற கோட்சேவின் கருத்தியலான இந்து ராஷ்டிரம் என்ற இந்து அடையாளவாத தேசியம் மட்டும் ஏன் காந்தி கொல்ல…
-
- 6 replies
- 863 views
-
-
தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றானதும் ஒழுக்கமும் தெய்வீக ஐதீகமும் கொண்டதுமான அருகிவரும் விளையாட்டுமான போர்த்தேங்காய் (எறி தேங்காய்) அடித்தல் வைபவம் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நேற்று (18) மாலை நடைபெற்றது. ஒருவர் தனது கையிலே தேங்காய் வைத்திருக்க இருபது மீற்றர் தூரத்திலுள்ள இன்னொருவர் தனது கையிலுள்ள தேங்காயை மற்றவரின் கையிலுள்ள தேங்காயை நோக்கி வீசுவார். அந்த சந்தர்ப்பத்தில் மற்றையவர் தனது கையிலுள்ள தேங்காயினால் எதிரே வரும் தேங்காயை தடுத்து உடைக்கும் அல்லது அடிக்கும் நிகழ்வு “போர்த்தேங்காய் அடித்தல்” என அழைக்கப்படுகிறது. சித்திரை வருடபிறப்பினை தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு தொடர்ச்சியாக இந்த தேங்காய் அடித்தல் வைபவம் நடைபெறும். தேங்காய் …
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய் ஆர்.மகேஸ்வரி / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, பி.ப. 05:55 Comments - 0 கடந்த 4 மாதங்களாக, இழுப்பறி நிலையில் காணப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம், நேற்று முன்தினம் (28), கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கைச்சாத்தானது. இதனால், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை விட, ஒப்பந்தத்துக்குப் பின்னர், மலையகம், தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் சூடு பிடித்துள்ளன. இவ்வாறு எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாள் சம்பளமான ஆயிர…
-
- 0 replies
- 219 views
-
-
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது ! வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம் தலைமைகளையோ மக்களையோ தண்டிப்பதைக் கூட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதனை அவர் கொள்கையாக ஏற்று இறுதிவரையில் உறுதியாக இருந்தார். எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏப்ரல் 11இல் அறிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அதுகுறித்த முழமையான விடயங்களை கண்டறியாத வரையில் இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் தொடரும் நிலைமையே உள்ளது என…
-
- 0 replies
- 290 views
-
-
வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பெரும் பாதுகாப்புக் கெடுபிடிகளுடன் நல்லூர்க் கந்தனின் உற்சவம் தொடங்கியிருக்கின்றது. போர்க் காலத்தில்கூட இல்லாத அளவுக்குப் பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கப்பட்டு ஆலய வளாகம் பாதுகாப்புப் படையினரின் பலமான கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆலய வளாகம் மட்டுமன்றி ஆலயத்துக்குச் செல்லும் வழியிலுள்ள பல்வேறு இடங்களிலும்கூட பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆலயத்துக்குள் வழிபாட்டுக்காகச் செல்லும் பக்தர்கள் உட்பட அனைவருமே உடல் சோதனைக்கு உட்டுப்படுத்தப்படு கிறார்கள். இதனால் பக்தர்களுக்குத் தாமதமும்…
-
- 3 replies
- 743 views
-
-
மறதி - அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளும் மக்களின் மறதியும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஓகஸ்ட் 28 புதன்கிழமை, மு.ப. 10:51 Comments - 0 மக்களின் ஞாபக மறதியில்தான், அரசியல்வாதிகள் பிழைப்பு ஓடுகிறது. தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கும் அவர்கள், அதிகாரத்துக்கு வந்தபின், அதிகமானவற்றை நிறைவேற்றுவது இல்லை. அதற்கு, ஆயிரத்தெட்டுக் காரணங்களையும் கூறுவார்கள். மீண்டும் ஒரு தேர்தல் வரும்போது, எந்தவித வெட்கமோ குற்ற உணர்ச்சியோ இன்றி, மீண்டும் அவர்கள் தேர்தலில் குதிப்பார்கள், திரும்பவும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். முன்னைய தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள், மக்களுக்கு மறந்து போயிருக்கும். மீண்டும் அதே அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பார்கள். ஆண்டாண்…
-
- 0 replies
- 308 views
-
-
முருகன், சாந்தன், நளினி விடுதலை விவகாரம்: தமிழக - இந்திய அரசாங்கங்களுக்கிடையில் அதிகாரப் போட்டி? இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு, தமிழக தேர்தல்க் களத்தில் மீண்டும் பிரசார வியூகமாக மாறுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று விவாதம் இப்போது மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசாங்கத்துக்கும் மாநிலத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்துக்கும் சர்ச்சைக் களமாக மாறிவிட்டது. இந்த ஏழு பேரில் ஜெயக்குமார், ரொபேர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் அடக்கம். இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபேர்ட் பையாஸ் ஆகிய நால்வரு…
-
- 0 replies
- 228 views
-
-
இலங்கையின் உள்விவகாரங்களின் நாம் தலை போடமாட்டோம் எண்டு இந்தியா அதிகமாக அறிக்கை விடுவார்கள் ஆனால் இந்தியா புத்தர் காலத்தில் இருந்தே தலையும்,காலையும் இலங்கையில் போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் இந்திரா அம்மையார் காலத்தில் தலை போட நினைத்த விடயம் ஒன்று தற்பொழுது ஒரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.அதாவது இலங்கையின் ஆச்சியாளர்கள் இந்தியாவிடம் மண்டியிட வேண்டும் என்ற அந்த ஆசை தான் . தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இந்தியாவின் இந்த ஆசைக்கு எண்ணங்களுக்கு ஏற்ற மாதிரி நடக்க மாட்டார் என்று தெரிந்த இந்தியா புலிகளுக்கு எதிராக ஒரு சக்தியை உண்டாக்க வேண்டும் என்று முடிவு பண்ணியது அதில் வெற்றியும் கண்டது.அது தான் "தமிழீழ மக்கள் விடுதலை புலிகள்" என்ற அமைப்பை உருவாக்கியமை இந்த அமைப்பினர்…
-
- 1 reply
- 984 views
-
-
தேசியப் பட்டியல் பதவி யாருக்கு? வீட்டுக்குள் வெடித்தது பூகம்பம்! August 9, 2020 பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு ஆரம்பமானபோதே, தேசியப்பட்டியல் குறித்த சர்ச்சை கூட்டமைப்புக்குள் ஆரம்பமாகிவிட்டது. அம்பிகாவா?, கே.வி.தவராஜாவா?, திருமலை குகதாசனா? என ஆரம்பமான அந்த சர்ச்சை இப்போது சசிகலாவா? கலையரசனா? மாவையா என்ற கேள்விக்குறியுடன் தொடர்கின்றது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தக் கேள்விக்குப் பதில் காணவேண்டும் என்பதால் அடுத்த மூன்று நாட்களும் வீட்டுக்குள் பூகம்பம்தான்! கடந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்தது. ஆனால், இந்த முறை ஒன்றுதான் கிடைக்கும் என்பது முன்னரே ஊகிக்கப்பட்டிருந்தமையால் போட்டி கடுமையாக இருந்தது. …
-
- 0 replies
- 488 views
-
-
தமிழீழம் சிவக்கிறது - பழ. நெடுமாறன் தமிழீழத்தின் வரலாற்றுப் பதிவாய் விளங்கும் இந்நூல் 1993-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழ. நெடுமாறன் தடா-வில் கைது செய்யப்பட்ட போது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்த பிறகு, 2002-ஆம் ஆண்டு அந்நூலை வெளியிடுவதற்கான தயார் நிலையில் இருந்த போது, 2002 ஏப்ரலில் அந்நூல் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமான நூல் என வழக்கு தொடரப்பட்டது. அந்நூலை ஏற்றுமதி செய்யவிருந்ததாக சாகுல் அமீது கைது செய்யப்பட்டார்.1989ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரையுள்ள மூன்று நாள்களிலும் வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவம் நடத்திய படுகொலைகள் வரலாறு காணாத துயர நிகழ்ச்சி ஆகும். அதுபற்றிய பதிவே இந்த பகுதியாகும். அண்மையில் நூ…
-
- 0 replies
- 910 views
-
-
ராஜபக்ஷாக்களுக்கு ஜெனிவா அமர்வில் யாதார்த்தம் புரியும்: கலாநிதி தயான் ஜயதிலக விசேட செவ்வி (நேர்காணல் ஆர்.ராம்) “எம்.சி.சி.விடயத்தை லக்ஷ்மன் கதிர்காமரும், ஜெனிவா விடயத்தினை அன்ரன்பாலசிங்கமும், நீலன் திருச்செல்வமும் உயிருடன் இருந்திருந்தால் முரண்பாடுகளின்றி யதார்த்தத்தின் அடிப்படையில் கையாண்டிருப்பார்கள்” இறைமையானது உலக சட்டங்களை கடந்து மன்னர்களுக்கு நிகரான சர்வவல்லாதிக்கத்தை வழங்குவதாக கருதிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷாக்களுக்கு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் யதார்த்தம் புரியும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான(ஜெனிவா) முன்னாள் நிரந்தரவதிவிடப் பிரதிநிதியும், இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி.தயான் ஜயதில வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது தெர…
-
- 0 replies
- 400 views
-
-
இருள் சூழ்ந்த இலங்கை! காரணங்கள் என்ன? -ச.அருணாசலம் பஞ்சமும், பதட்டமும், கலவரச் சூழலுமாக இலங்கை தகிக்கிறது! உணவுக்கும், எண்ணெய்க்கும் நீண்ட க்யூ வரிசைகளில் காத்து கிடந்து சிலர் உயிரிழந்துள்ளனர்! கொந்தளிப்பின் உச்சத்தில் இலங்கை மக்கள், ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு போராடுகின்றனர். என்ன நடக்கின்றது? தேயிலைக்கும், மீனுக்கும் இயற்கை சூழல்களுக்கும் பெயர்போன இலங்கையின் இன்றைய சூழலுக்கு பல காரணிகள். ஆனால், அவற்றில் முதன்மையானது ஆட்சிக்குளறுபடி -Mismanagement என்றால், அது மிகையல்ல. அதிபர் ராஜபக்சே , ” நாடு ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது, நான் பன்னாட்டு பண நிதியத்திடம் (IMF) உதவி கேட்டுள்ளேன் ; அவர்களும் சில நிபந்தனைகளுடன் உதவ முன் வந்துள்ள…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கையை... நெருக்கடிகளிலிருந்து மீட்கும், இந்தியா! -யே.பெனிற்லஸ்- இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையால் மிகமோசமான நிலைமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. காலிமுகத்திடலில் சுயாதீனமாக ஒன்றிணைந்த குழுவினர் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு மூன்றாவது வாரத்தினை கடந்து தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தொடர்போராட்டத்திற்கு ஆதரவாக நாடாளவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்விதமான போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறையில் பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அதேநேரம், அனைத்து தொழிற்சங்கங்களும் வீதிக்கு இறங்கி பாரிய போராட்டங்களையும்…
-
- 0 replies
- 167 views
-
-
நன்றிகள் வினவு .கொம்http://www.vinavu.com/2014/09/16/manipur-criminals-as-judges/ இவர்களிடம் தான் நாங்கள் நீதி கேட்க துடிக்கிறோம் சொந்த மக்களின் உரிமைகளை மதிக்காதா உத்தமர்களிடம்.... மணிப்பூர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் போலி மோதல்கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சங்கமும் மனித உரிமை விழிப்புணர்வு அமைப்பும் அம்மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளில் போலி மோதல்படுகொலைகளில் 1528 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, இப்படுகொலைகள் குறித்து சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தன. நினைவிடம் அசாம் துப்பாக்கிப் படை நடத்திய மாலோம் படுகொலையில் உயிரிழந்தவர்களின் 13-ம…
-
- 0 replies
- 657 views
-
-
துரித்திக்கொண்டு இருக்கும் போர் வெற்றிச் சின்னங்களும் எரிந்து கொண்டிருக்கும் காயங்களும்! குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன் வடக்கு கிழக்கு நிலரப்பின் எத்தனையோ ஏக்கர் நிலப் பகுதிகளை சுதந்திர இலங்கையின் பின்னர் ஈழத் தமிழர்கள் இழந்துவிட்டனர். இலங்கைத் தீவு முழுவதுமுள்ள, ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு கிழக்கில் எஞ்சியிருந்த தொன்மங்களையும் அழித்து ஒழித்துவிட்டு, அங்கு பெரும்பான்மையின மக்களின் தொன்மங்களை நிறுவும் முயற்சிகளை பெரும்பான்மையின மக்கள் முன்னெடுக்கின்றனர். சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில் சிவனொளிபாத மலை என்ற பெயரை புத்த பாதம் என மாற்றப்பட்டுள…
-
- 0 replies
- 347 views
-
-
2004ம் ஆண்டு தடம் புரண்ட ஜனநாயகம் இன்றும் பழைய நிலைமைக்கு திரும்பவேயில்லை : வீ . ஆனந்தசங்கரி November 1, 2018 2004ம் ஆண்டு தடம் புரண்ட ஜனநாயகம் இன்றும் பழைய நிலைமைக்கு திரும்பாது புதைந்து கிடப்பதே. எனது ஒரேயொரு கவலையாகும் இன்று நடந்திருப்பவை சம்பந்தன் சேனாதிராசா போன்றோருக்கு பொது மக்களின் அடிப்படை உரிமைகளில் விளையாடாதீர்கள் என்ற எச்சரிக்கை ஒலியாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ . ஆனந்தசங்கரி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு முன் எப்பொழுதும் இல்லாதவாறு மிகவும் குழப்பமான நிலையில் நம்நாடு இருக்கும்போது நான் இந்த அறிக்கையை விடுவதற்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கைலா எப்ஸ்டீன் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும், அமெரிக்க வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டிய நிகழ்வுளில் ஒன்று. அதேபோல் மிகவும் ஆய்வுக்கு உள்ளான நிகழ்வுகளில் முக்கியமானதாக இந்தப் படுகொலை கருதப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இன்னமும் ஜான் எஃப் கென்னடியின் படுகொலை குறித்த புதிய விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. பால் லாண்டிஸ், 88 வயதான இவர் ரகசிய புலனாய்வு முகமையின் முன்னாள் அதிகாரி. அதிபரின் மரணத்தை நெருக்கமாக அருகில் …
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
16 ஜனவரி 2019 இல் 100 kg அதி சக்தி வாய்ந்த வெடிமருந்தையும், 160 பயங்கரவாதிகளின் விபரங்களையும் கண்டுபிடித்தார்களாம். உயர் மட்ட உத்தரவு இல்லாததால் ஒருவரையும் கைது செய்யவில்லையாம்; தலையைப் பிச்சுக் கொண்டு ஓடலாம் போல இருக்கு🤬 http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=203107 A list of 160 terrorists found, but no arrests made April 24, 2019, 6:53 am By Hemantha Randunu The State intelligence agencies had gathered information about 160 National Thowheed Jamath members who had been trained by terrorists, but it had not been possible to arrest them as there had been no orders…
-
- 2 replies
- 670 views
-
-
சிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் ? இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையைப் பீடித்துள்ள இரத்தப் புற்றுநோயாகும். இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது எளிதான விடயமல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே தயவுசெய்து நாட்டில் காணப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தல் குறித்து அரசியல்வாதிகள் கருத்துக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுபலசேனா இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முழு மூச்சுடன் செயற்படுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் அமைப்பிடமிருந்து இலங்கை தௌஹீத் அமைப்புகளுக்கு பெரும்பாலும் கட்டளைகள் கிடைக்கப்பபெற்றுள்ளது. கோவை ஐயூப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கையில் மிக மோசமாக பிரசாரங்களை மேற்கொண்டிரு…
-
- 2 replies
- 482 views
-
-
ஒடுக்குமுறை அற்ற ஆரோக்கியமான மாற்றங்களே அவசியமானவை – கீதாநந்தி… April 10, 2020 காலங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்றவாறு மாற்றங்கள் நிகழ வேண்டியது அவசியமானது. ஆனால் அம் மாற்றம் ஒடுக்குமுறை அற்றதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் அல்லவா? தற்போது உலகமே ஒரு நோய்த் தொற்றால் அவதியுற்று கொண்டும் அதற்கான தீர்வுகளை சிந்தித்தும், செயற்படுத்தியும் கொண்டிருக்கும் இவ்வேளையில். எமது நாட்டிலும் அதற்காக பல தரப்பினரும் தமது அர்ப்பணிப்பை வழங்கி வருகின்றமை மறுக்க முடியாத உண்மை. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டப்பட்டுள்ளோம். இந்நேரத்தில் “அனைத்து அரசு ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கல்வ…
-
- 0 replies
- 248 views
-
-
தொடரும் கோவிட் 19ம் அதனால் உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தலும் முடக்கப்பட்ட நகரங்களும் மீண்டும் மெதுவாக அவதானமாக திறக்கப்பட்டு வருகின்றன. நகரங்கள், மாகாணங்கள், நாடுகள் இந்த புதிய கொள்கைவகுப்பில் மிக மிக அவதானமாக செயல்படுகின்றன, ஒருவரில் இருந்து ஒருவர் படிக்கின்றனர். ஹாங்கோங் NEW VIRUS TEST ARRANGEMENTS FOR ARRIVALS TO HK Update on COVID-19 testing procedures for inbound travellers arriving at Hong Kong International Airport! Starting from tomorrow (April 22), all asymptomatic passengers arriving in the morning must await test results before leaving the temporary test centre at AsiaWorld-Expo. For those arriving on afternoon fligh…
-
- 10 replies
- 2.2k views
-
-
கேபி. க்கு எதிராக ஏன் குற்றஞ் சுமத்தப்படவில்லை? அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஆற்றிய உரை ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து இப்போது ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. பெருமளவு காலம் கடந்துவிட்டபோதிலும் தடுப்புக் காவலிலுள்ள இந்தத் தமிழ் கைதிகளின் பிரச்சினைக்கு இன்னும் ஒரு முடிவு ஏற்படவில்லை என்பதோடு, பலர் நீண்ட காலம் தடுப்புக்காவலில் உள்ளனர். இக் கைதிகள் தமது விடுதலையைக்கோரி காலத்திற்குக் காலம் பல்வேறு எதிர்ப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். அதைவிடத் தீவிர குற்றங்களுக்காக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக…
-
- 2 replies
- 402 views
-
-
சீன மீனவர் ஒருவர் படகொன்றையும் மோட்டோர் சைக்கிளையும் பயன்படுத்தி நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடிய படகு ஒன்றை உருவாக்கியுள்ளார். புஜியான் மாகாணத்தில் ஸங் ஸொயு நகரைச் சேர்ந்த சென் குவோஹொங் (43) என்ற மீனவரே 4.5 மீற்றர் நீளமும் 1.6 மீற்றர் அகலமும் 750 கிலோகிராம் நிறையும் உடைய படகை உருவாக்கியுள்ளார். இந்தப் படகு வீதியில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேத்தில் பயணிக்கக் கூடியது. இதனை உருவாக்கிய நபர் 13 வயது முதல் மீன்பிடித் துறையில் ஈடுபட்டு வருகின்றார். http://www.virakesari.lk/article/interesting.php?vid=76
-
- 1 reply
- 520 views
-
-