நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
தமிழ் குடும்பத்தை நாடு கடத்த தயாராகின்றது அவுஸ்திரேலியா-இலங்கையில் அடக்குமுறைகள் தொடர்வது குறித்து தமிழர்கள் அச்சம் ஏபிசி தமிழில் - ரஜீபன் தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியா நாடு கடத்துவதற்கு தயாராகும் அதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் தாங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாக தமிழர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் என ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அவுஸ்திரேலியாவின் ஏபிசி நியுஸ் மேலும் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் குயின்ஸ்லாந்தின் பைலோ நகரிலிருந்து தமிழ் குடும்பத்தினை இலங்கைக்கு நாடு கடத்த தயாராகின்றது அதேவேளை அவர்கள் அங்கு சித்திரவதைக்கு உள்ளாகலாம் என அவர்களிற்கு சார்பாக குரல்கொடுப்பவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் பிறந்…
-
- 0 replies
- 273 views
-
-
சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட உரிமை மாவைக்கு மறுக்கப்படுகிறதா.? - நா.யோகேந்திரநாதன் அண்மையில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள ஒரு விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள், மத நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் ஒன்றுகூடி அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து தமிழர் பேரவை என்ற பேரில் செயற்படுவது பற்றி ஆலோசனை இடம்பெற்றது. கஜேந்திரகுமாரைத் தலைமையாகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அனைவரும் ஒரே சக்தியாகத் திரண்டெழுந்து ஒரு குடையின் கீழ் செயற்படவேண்டும் என்ற கருத்து சகல தரப்பினரால…
-
- 0 replies
- 224 views
-
-
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை Manavai Mustafa Scientific Tamil Foundation அறிவியல் தமிழ் வாரம் விழிய வரிசை 8th August ; Friday ; Morning show—10 am உயிரணுவில் உள்ள DNA அமைப்பை தமிழில் விளக்க முடியுமா ? ஒரே ஒரு திருக்குறளை மைய்யப்படுத்தி 120 பக்கங்களில் எழுதப்பட்ட அதி நவீன அறிவியல் நூலில் இருந்து இந்த கருத்தாக்கம் பெறப்பட்டது. This video series is produced for Manavai Mustafa Scientific Tamil Foundation by Dr.Semmal டாக்டர்.மு.செம்மல் MBBS,D.L.O.,M.Phil.,M.D நிர்வாக இயக்குனர் , அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிறுவனர், மணவை முஸ்தபா மெய்நிகர் அறிவியல் தமிழ் ஆவண காப்பகம் www.tamilarchives.org – Worlds First and Exclusive Scientific…
-
- 0 replies
- 521 views
-
-
கட்சியிலிருந்து வெளியேறியமை : தமிழ் மக்கள் இணையம் உருவாக்கம் : எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து சண்.குகவரதன் வழங்கிய நேர்காணல் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் மீண்டும் இணையப்போவதில்லை. பதினொரு வருடங்கள் பொறுமைகாத்த பின்னரே இளைஞர்களுக்கான அரசியல்களத்தினை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்கள் இணையத்தினை உருவாக்கியுள்ளோம் என அதன் தலைவரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன் வீரகேசரிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். சுமூகங்களின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொள்ளும் தலைவர்கள் தீர்வை வழங்குவதில்லை என்றும் அவர் கூறினார். அப்பேட்டியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழ் மக்கள் இணையம் என்ற பெயரில் புதிதாக உருவாகியுள்ள கட்சியின் நிருவாக கட்டமைப்பு பற…
-
- 0 replies
- 227 views
-
-
ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில் தடை செய்வதில் உள்ள சவால்கள் ! ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப்பிறகு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புகள் இரண்டை அரசாங்கம் தடை செய்திருந்தது. ஏன் ஐ.எஸ்.அமைப்பை இலங்கையில் தடை செய்ய முடியாது என்ற கேள்விக்கு எவரும் பதில் கூற வில்லை. மாறாக அது ஒரு சர்வதேச தீவிரவாத அமைப்பு என்பதால் அதை இலங்கையில் ஏன் தடை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. குறித்த அமைப்பில் பயிற்சி பெற்றவர்களை கைது செய்வதற்குக் கூட சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இல்லை என பிரதமர் ரணில் பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் தொலைகாட்சி அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தமையை நாம் அறிவோம். ஏனெனில் தீவுக்கு வெளியே உள்ள ஒரு அமைப்பின் கீழ் பயிற்சி பெற்று நாட…
-
- 0 replies
- 299 views
-
-
மதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்களை பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டும் - முன்னாள் இராணுவத் தளபதி மதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு: கேள்வி:- நாட்டின் தேசிய பாதுகாப்பில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? பதில்:- ஆம், பாதுகாப்பு சரியாக இருந்திருந்தால் இத்தகைய தாக்குதல்…
-
- 0 replies
- 191 views
-
-
இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகியுள்ள நிலையில், அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதற்கு விசேட கூட்டத்தொடர் ஒன்றை நடத்துமாறு இணை அனுசரணை வழங்கிய நாடுகளிடத்தில் கோருவதே பாதிக்கப்பட்ட தரப்புக்கு உடன் காணப்படும் நடைமுறைச்சாத்தியமான வழியாகும் என்று; தமிழர் இயக்கத்தின் அனைத்துலக வெளியுறவுத்துறைக்கான ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ தெரிவித்தார்.; ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் அதில் பங்கேற்றுள்ள அவர் ஜெனீவாவிலிருந்து வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் தெரிவித்தார் அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,; கேள்வி:-ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் வலுவற்றதொன்றாகும் என்று …
-
- 0 replies
- 221 views
-
-
எந்தவொரு உயிர்க்கும் தீங்குவரகூடாது என்று கொள்கைகொண்டவரும் ஆசையே பிறர்க்கு துன்பம் என்று போதித்தவருமான புத்தரை கடவுளாக கொண்டவர்களின் நிலை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது..ஒரு காலத்தில் சுற்றுலாத்துறையில் நல்ல வருமானமும் மதிப்பும் ஈட்டிய இலங்கை ஏன் இப்படியெல்லாம் தன்னை கேவலப்படுத்திக்கொள்கிறது..இன ்னும் எத்தளை நாளைக்குத்தான் தமிழர்க்கு அதிகாரத்தை தாராமல் இழுத்தடிக்க முடியும்..என்றாவது ஒரு நாள் தரப்போகும் உரிமைகளை இப்போதே பிரித்து கொடுத்து அனைத்து மக்களும் அங்கே அமைதியாய் வாழ வழிவகை செய்வதை விடுத்து..ஏன் இப்படியெல்லாம்.. சிங்களனே உன் நாட்டு பொருளாதாரம் எவ்வளவு கீழ் போய்ககொண்டிருக்கிறது என்று தெரியாமலேயே நீயும் ஆளும் வர்க்கத்திற்கு துணை நிற்கிறாய்..உலக வல்லரசு அமெரிக்கா…
-
- 0 replies
- 1.2k views
-
-
காணொளி : இலங்கைத் தமிழர் தொடர்பாகவும் , கூடாங்குளம் தொடர்பாகவும் சீமானின் பேச்சு...
-
- 0 replies
- 467 views
-
-
தனிச் சிங்கள தேசமாகிறதா இலங்கை? -தீபச்செல்வன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அண்மையில், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் சட்டத்தை இயற்றுவதற்கான செயற்குழுவை அறிவித்திருந்தார். இந்தக் குழுவில் ஒருவர்கூட தமிழர்கள் இல்லை என்று சில சிங்கள தரப்பினர்கூட கவலை வெளியிட்டிருந்தார்கள். இலங்கைத் தீவு இரண்டாக இருக்கிறதா அல்லது இலங்கைத் தீவில் இரண்டு சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்விகள் ஒருபுறம் எழுகின்றன. அத்துடன், இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான செயற்குழுவில் தமிழர்கள் இல்லை என்பது ஒரு பிரச்சினையல்ல என்பதும் இங்கே குறிப்பிட்டாக வேண்டியது. ஏனென்றால், தனிச் சிங்கள நாடு ஆக்குவதற்கான சட்ட மூலத்தை இயற்றுவதற்கு, தமிழர்கள் எவரும் தேவையில்லை என்று அதிபர் கோத்தபய நினைத்திருக்கலாம் …
-
- 0 replies
- 239 views
-
-
நரேந்திர மோடியின் முடிவுகள் வெட்டொன்று துண்டு இரண்டாக இருக்குமா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதுடெல்லிப் பயணம், இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமானதாக அமைந்ததா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடத்திய சந்திப்புக் குறித்த முழுமையான விபரங்களை வெளியிடாமல், ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு மறைத்து விட்டதால் தான் இந்தக் கேள்வி வலுப்பெற்றுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் தான் இந்தியாவில் அடுத்து ஆட்சியமைக்கப் போகிறது என்று தெரிந்ததுமே, நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு அவரை அணுக முயன்றிருந்தா தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. சுப்பிரமணியன் சுவாமி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே போன்றவர்களின் ம…
-
- 0 replies
- 725 views
-
-
அண்மைய காலங்களில் விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் சுப்பர் சிங்கர் நிகழ்வில் புலம்பெயர் தமிழர்களும் சிங்கப்பூர்,மலேசிய தமிழர்களும் கலந்துகொண்டு இம்முறை உலகளாவியரீதியில் என்பதை நிரூபித்ததோடுமட்டுமல்லாது பலரும் வியக்கும் வண்ணம் தங்கள் சாதனைகளையும் நிரூபித்துள்ளார்கள் http://www.tamilbase.com/index.php?option=com_content&view=article&id=26797:super-singer-3-16-03-11-&catid=131:super-singer-juniour-2&Itemid=138 http://tamilbase.com/index.php?option=com_content&view=article&id=26339:super-singer-3-09-03-11&catid=131:super-singer-juniour-2&Itemid=138 http://tamilvision.tv/tvi/clients/Vote.aspx (please vote for them)
-
- 0 replies
- 1.2k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசு கனடா - நடாத்திய 2ம் ஆண்டு மனித உரிமைக் கருத்தரங்கு. [sunday 2015-04-26 21:00] இன்று ஏப்ரல் 25, 2015 சனிக்கிழமை நாடுகடந்த தமிழீழ அரசு கனடா, Consortium of Tamil Associations, மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் இணைந்து ஒழுங்கமைத்து நாடத்திய '2ம் ஆண்டு மனித உரிமைக் கருத்தரங்கு' நிகழ்வு ஸ்கார்புரோவில் 940 Progress வீதியில் அமைந்துள்ள Centennial College Residence & Conference Centre இல் நடைபெற்றது. "Assimilation or Annihilation" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழீழ மக்களின் எதிர்காலமும் தமிழீழ மக்களுக்கான நீதியை பெறுவது பற்றியும் ஆராயப்பட்டது. இந்த கருத்தரங்கு நிகழ்வு தமிழ் மக்கள் அனைவரும் பயன் பெறும் பொருட்டு இலவச நிகழ்வாக அ…
-
- 0 replies
- 321 views
-
-
முதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழ் அரசியலும் Administrator / 2017 பெப்ரவரி 27 , மு.ப. 07:52 - 0 - 331 FacebookTwitterWhatsApp - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 81) குட்டிமணியின் நாடாளுமன்ற நியமனம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் வெற்றிடமான வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு குட்டிமணி என்கிற செல்வராஜா யோகசந்திரனின் நியமனத்தை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டாலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவரான குட்டிமணியை சிறையிலிருந்து நாடாளுமன்றம் சென்று பதவிப்பிரமாணம் செய்து கொள்…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள் அலறல்கள் கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும், *இன்னொரு பக்கம் ஆச்சரியமானது. ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு சொல்கின்றது*1950க்கு பின் வேகமாக மாறிய உலகிது. அதுவும் 1990க்கு பின் பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவுக்கு நிலைமை மாறியது.குறிப்பாக இத்தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை. அவர்களின் சிந்தனையும் மனமும் குணமும் பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருந்ததுஉலகின் உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது உலகம், அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் …
-
- 0 replies
- 384 views
-
-
அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம் -நளினி ரட்ணராஜா கொரோனா என்ற கொடிய அசுரன் இந்த மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருப்பதோடு மனிதகுலத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றான். அவனுக்கு ஜாதி, மதம், இனம், நாடு, தேசம், பணக்காரர், ஏழை போன்ற வேறுபாடுகள் தெரியாது; புரியாது. இந்தக் கொடிய அரக்கனிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுவதற்கு மருத்துவ வசதிகள், மருத்துவர்கள், மருத்துவ ஆய்வாளர்கள், மிகுந்த வசதி வாய்ப்பு உடைய ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மருத்துவ நுண்ணியல் நிபுணர்கள் போன்றவை தேவைப்படுகின்றன. இவைகள் இல்லாதபோது இவற்றை இறக்குமதி செய்யவும் நிபுணர்களை வரவழைத்து கொள்வதற்கும் பணம் தேவை. ஆனால் இந்தக் காலகட்டத்தில் மொத்த உலகமே நடுங்கிக்…
-
- 0 replies
- 238 views
-
-
கொரோனாவும் அன்றாடங்காய்ச்சிகளின் நிலையும் இந்திய அரசு அமைப்புசாராத் தொழில்கள் என்று 60 வகையான தொழில்களை வரையறை செய்துள்ளது. அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியத்தையும் அமைத்துள்ளது. ஆனால் அந்த அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. தற்போது தொழில்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில், இவரின் அமைச்சகத்தின் கீழ்தான் இந்த அமைப்புசாராத் தொழிலாளர் நலத்துறை வருகிறது. இதில் என்னென்ன துறைகள் வரும் என்று பார்க்கலாம். 1. விவசாயத் தொழிலாளர் நல வாரியம் 2. மீனவர் நல வாரியம் 3. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் 4. சீர்மரபினர் நல வாரியம் 5. பழங்குடியினர் நல வாரியம் 6. ஆட்…
-
- 0 replies
- 487 views
-
-
சர்வதேசத்தின் அடுத்த நகர்வுக்குக் கதவை மூடிய சம்பந்தன் - நா.யோகேந்திரநாதன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டனால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட தீர்மான முன் வரைவு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தனது மனம் நிறைந்த திருப்தியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அப்பாராட்டுரையில் அத்தீர்மானம் மிகவும் கனதியாகவும் வடக்குக் கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் பிரேரணையின் புதிய வரையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் பல நாடுகள் இப்பிரேரணை…
-
- 0 replies
- 311 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம்தான் இன்றைய திகதியில் தலைப்புச் செய்தி. யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத் தீவு, திருகோணமலை - என்று பிள்ளை செல்லுமிடமெல்லாம், ராணுவ நெருக்கடிகளையும் மீறி, தமிழ் மக்கள் திரளுகின்றனர். கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவன் ஒரு துரும்பு கிடைத்தால்கூட, உடும்பு மாதிரி பிடித்துக் கொள்வதைப் போல, கடைசி வாய்ப்பான நவ்விப் பிள்ளையைச் சந்தித்து மன்றாடுகிறார்கள் அவர்கள். நவநீதம் பிள்ளையின் யாழ் வருகையின் போது, காணாமல் போன தங்கள் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறுநாளே மிரட்டப் பட்டதும், "இப்படியெல்லாம் புகார் சொல்லிக் கொண்டிருந்தால், உங்கள் பிள்ளைகள் மாதிரியே நீங்களும் …
-
- 0 replies
- 466 views
-
-
'அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு அத்தனை சீக்கிரம் தண்டனை வாங்கிக் கொடுத்து விட முடியாது...' என்பது நம் தேசத்தில் இன்னொரு முறை நிரூபணமாகி உள்ளது! ஹரியானா மாநில முன்னாள் டி.ஜி.பி-யான ராத்தோர் மீது பாய்ந்த பலாத்கார வழக்குக்கு, ஆணித்தரமான சாட்சிகள் இருந்தும், 19 வருடங்களுக்குப் பிறகே அவருக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதில், பாதிக்கப்பட்ட அப்பாவி டீன் ஏஜ் பெண்ணான ருச்சிகா அவமானத்தால் தற்கொலை செய்து கொள்ள... அவரது தோழியின் குடும்பத்தினர் தொடர்ந்து போராடி... நீண்ட காலத்துக்குப் பிறகு ஜெயித் துள்ளனர்! ஹரியானாவின் சண்டிகர் நகரில் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் 14 வயதான ருச்சிகா கிரோத்ரா. டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் அங்கிருந்த சங்கத்தில் உறுப்பி…
-
- 0 replies
- 893 views
-
-
-
- 0 replies
- 573 views
-
-
இலங்கைக்கு எதிராக ஆஸி. செனற்சபையில் பிரேரணை இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செனற் சபையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆஸியின் கிறீன் கட்சியைச் சேர்ந்த செனட்டர் சரா ஹன்சன் யங் இப்பிரேரணையை அங்கு சமர்ப்பித்து உரையாற்ற உள்ளார். இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிரான ஆதாரங்களை அவர் செனற்சபைக்கு சமர்ப்பித்து இலங்கைக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணைக்கு ஆஸ்திரேலியா ஐ.நா சபையில் ஆதரவு வழங்க வேண்டும் என்று அப்பிரேரணையில் கோருவார். இவரின் இந்நடவடிக்கைக்கு கிறீன் கட்சிக்கான தமிழர்கள் அரசியல் அமைப்பு பேராதரவு வழங்க முன்வந்துள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=444…
-
- 0 replies
- 678 views
-
-
100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறுவோருக்கும் வருமான வரி! By T. SARANYA 12 OCT, 2022 | 04:49 PM (நா.தனுஜா) அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித்திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர்கூட வருமான வரியைச் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதுடன், இதன்விளைவாக 20 சதவீதமான வரிவருமானத்தை நாட்டுக்கு ஈட்டித்தரும் தனிநபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடக்கூடிய சாத்தியப்பாடு உயர்வடைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான உள்நாட்டு இறைவரித்திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் …
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
-
ஒருநாள் கப்டன் லலித் ஹேவா என்னை அழைத்தார். மண்வெட்டியை விரைந்து எடுத்துவருமாறு கட்டளையிட்டார். அவர் குறிப்பிட்டபடியே மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அவர் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தேன். நான் அவ்விடத்தை அடைந்தபோது, அங்கு ஆடையின்றி பெண் ஒருவர் நிர்வாணக் கோலத்தில் நின்றார். கப்டன் ஹேவா அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தினார். பின்பு நான் எடுத்துவந்த மண்வெட்டி மற்றும் அங்கிருந்த இன்னும் சில ஆபத்தான பொருள்களைக் கொண்டு அந்தப் பெண்ணையும் அவருடைய துணைவரையும் தாக்கிக் காயப்படுத்தினார்.இருவரும் அந்த இடத்திலேயே சாவடைந்தனர்.அவர்கள் இருவரும் முன்பு முகாமுக்கு அழைத்துவரப்பட்டவர்கள்.” …
-
- 0 replies
- 851 views
-