நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கையில் சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின்போது அவர் நாட்டின் அதிபர், பிரதமருடன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய ஆட்சி மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றில் எந்த குறிப்போ விளம்பங்களோ இடம்பெறாதது பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. இதன் மூலம் இலங்கையில் சீன மொழியின் ஆதிக்கம் இலங்கை மண்ணில் ஓங்குகிறதா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு, பல்வேறு சந்திப்புக்களை நடத்திய பிறகு உடனடியாக அவரது தாயகத்துக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில், சீனாவின் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு …
-
- 4 replies
- 514 views
-
-
மலக் கப்பலுக்கு முன்பாக மண்டியிட்ட அரசாங்கம் - சஜித் பிரேமதாஸ அடுத்து என்ன? நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு நாட்டின் நிலைமை இருக்கிறது. எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு, எங்குமே நீண்ட வரிசை, பற்றாக்குறை, விலையேற்றம், பதுக்கிவைத்து கொள்ளை விலைக்கு விற்றல், இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கிடையே, மியன்மாரில் இருந்து ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசியை உடனடியாக இறக்குமதிச் செய்வதற்கும் அதனை ஜனவரி மாத இறுதிக்குள் களஞ்சியப்படுத்துவதற்கும் வர்த்தக அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமன்றி, அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து, வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்த நா…
-
- 0 replies
- 325 views
-
-
2022இல் நாட்டில் பஞ்சம் வருமா? வ. சக்திவேல் “இதுவரை காலமும் யூரியா உரங்களைப் பாவித்து வந்த எமக்கு, தற்போது ஓர் ஏக்கருக்கு நைதரசன் எண்ணை ஒரு லீற்றர், பொட்டாசியம் 24 கிலோ தந்துள்ளார்கள். இன்னும் பசளை எண்ணை ஒரு லீற்றர் தருவதாகச் கூறியுள்ளார்கள். எமக்குத் தந்துள்ள நைதரசன் எண்ணையில் அரை லீற்றரை 5 கிலோ மண்ணில் கலந்து இரண்டு தடவைகள் விசிறும்படி தெரிவித்துள்ளார்கள். இது எமக்குப் புதிய விடயமாகும். இதனை இம்முறை பாவித்து விளைச்சலைப் பார்த்தால்தான் தெரியும். நோய்க்கு வைத்தியரிடம் சென்றால் மாத்திரைகள் எடுத்து, அதைப் பாவித்த பின்னர்தான் நோய் தீர்ந்ததா இல்லையா என்பது பற்றிக் கூறமுடியும். அதுபோன்றுதான் எங்களுடைய நிலைமையும். எனினும் இந்த இயற்கை பசளை மற்றும் எண்ணை வகைகளைப் பய…
-
- 2 replies
- 405 views
-
-
வட கொரியப் புதிர்களுக்கும், மர்மங்களுக்குமான பின்னணி என்ன? -சாவித்திரி கண்ணன் வட கொரியா என்றாலே இரும்புக் கோட்டை, சர்வாதிகாரம் என்பதே பொதுப் புரிதல்! இந்த நாடு குறித்த புதிரான, கொடூரமான சம்பவங்கள் உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன! ஆனானப்பட்ட அமெரிக்காவையே மிரள வைக்கும் வட கொரியாவில் உண்மையில் என்ன நடக்கிறது? தன்னை ஒரு புரட்சிகர சோசலிஷ நாடாக பிரகடனப்படுத்திக் கொள்கிறது, வட கொரியா! அங்குள்ள மக்கள் அனைவருக்கும் உணவு , மருத்துவம்,கல்வி ஆகியவற்றை உத்திரவாதம் செய்து உறுதிபடுத்தியுள்ளது! வெளி நாட்டு நச்சு கலாசாரம் உள் நுழைய முடியாத நாடாக அது உள்ளது! ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் நாடாக திகழ்கிறது! கொரா…
-
- 0 replies
- 275 views
-
-
“பறையா” என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "என்னை பள்ளியிலுள்ள சக மாணவர்கள் ஒரு 'பறையன்' போல் நடத்துகிறார்கள்." இந்த வரியை பார்த்தவுடன் முகம் சுழிக்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்த வார்த்தையின் வரலாற்றுப் பின்னணியை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அந்த வார்த்தை ஏற்படுத்தக்கூடிய காயம் அவர்களுக்குப் புரியும். ஆனால், ஆங்கில மொழியில் 'பறையா' மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான். சமீபத்தில், இளவரசர் ஆண்ட்…
-
- 0 replies
- 437 views
- 1 follower
-
-
எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் இந்தியத் தலையீடு எவ்வாறு தவிர்க்கமுடியாத இடராக அமைந்தது என்பது நாம் அறிந்ததே. ஆனால், இந்த இந்திய வெளியுறவுத்துறையின் எமது விடுதலைப் போராட்டத்தினைக் கைய்யாண்ட, கருவறுத்த மிக முக்கியமானவர்களாக மலையாளிகள் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. திக்சீத், எம் கே நாராயணன், சிவசங்கர் மேனன். அந்தோணி, விஜய் நம்பியார், சதீஷ் நம்பியார், ராமன், ஹரிஹரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் ஈழப்போராட்டம் தோல்வியடையவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையினை வகுத்தார்கள், செயற்படுத்தினார்கள். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் தமிழர்கள் மீதான மலையாளிகளின் ஏளனமும், வெறும் ரகசியமும் அல்ல. மலையாளைச் சினிமாக்களில் தமிழர்கள் நடத்தப்ப…
-
- 0 replies
- 330 views
-
-
திருமணமும் இராணுவ மயமாகிறதா? எதற்காக இந்த புதிய நடைமுறை? – அகிலன் January 3, 2022 திருமணமும் இராணுவ மயமாகிறதா?: வெளிநாட்டுப் பிரஜைகளைத் திருமணம் செய்ய விரும்பும் இலங்கையர்கள், புதிய தடையைத் தாண்ட வேண்டியவர்களாக உள்ளார்கள். குறிப்பிட்ட வெளிநாட்டவர் குறித்த பாதுகாப்பு அமைச்சின் ‘கிளீயரன்ஸ் றிப்போர்ட்’ வரும் வரையில் அவர்கள் காத்திருக்க வேண்டும். ஆக, திருமணம் கூட இப்போது இராணுவ மயமாக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை பாதகமானதாக இருந்தால், அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்பதும் தெரியவில்லை. மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் மேலதிக பதிவாளர்களுக்குப் பதிவாளர் நாயகத்தினால் கடந்த வாரம் அனுப்பப்பட்ட சுற்றுநிருபம் ஒன்றிலேயே, இந்த புதிய நிபந்தனைகள் க…
-
- 6 replies
- 522 views
-
-
2021 ஒரு பார்வை தேதி January 03, 2022 சக்தி சக்திதாசன் 2021 ! கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள் ஆரவாரமின்றியே நடந்தேறி விட்டிருக்கிறது. உலக அரசியலை எடுத்துக் கொள்வோம், மிகுந்த அமர்க்களத்துடனும், ஆரவாரத்துடனும் அமெரிக்க முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் தோல்வியை ஏற்றுப் பதவி துறக்கச் செய்யப்பட்டு, புதிய ஐனாதிபதியாக பைடன் அவர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோடு பதவியலமர்ந்தது 2021ம் ஆ…
-
- 0 replies
- 276 views
-
-
தோற்ற மயக்கம் – தூரம் அதிகமில்லை January 3, 2022 — கருணாகரன் — இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தமிழ்த்தரப்பு கடுமையாக முயற்சிப்பதைப்போன்ற ஒரு “தோற்றம்”அண்மைக்காலமாகக் காணப்படுகிறது. இது தோற்றமா அல்லது மாயையா என்ற குழப்பம் பலருக்குண்டு. அதைப்போலவே அரசியல் தீர்வுக்கு முயற்சிப்பதைப்போலக் காணப்படுகிறதா அல்லது அவ்வாறு காண்பிக்கப்படுகிறதா என்ற கேள்வி பலரிடத்திலும் உண்டு. இப்படிச் சந்தேகிப்பதற்கான காரணங்கள் உண்டு. ‘இதோ பொங்கலுக்குத் தீர்வு. தீபாவளிக்கு நற்சேதி” என்ற மாதிரி விடப்பட்ட கதைகள் உலர்ந்து சருகாக நம்முடைய கால்களில் மிதிபடுகின்றன. அதாவது ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகவும் மக்களுக்கு உறுதி மொழியாகவும் வெளிப்படுத்தப்பட்ட ச…
-
- 1 reply
- 282 views
-
-
இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மரவள்ளிக் கிழங்கு - சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது - சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை தொகையின்றி மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்து விட்டன. சில்லறைச் …
-
- 0 replies
- 399 views
- 1 follower
-
-
தமிழீழ மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே அமைக்க வேண்டும் ! வி.உருத்திரகுமாரன் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே வடிவமைத்து, இந்த அரங்கை நோக்கி அனைத்துலக சமூகத்தை இழுக்க வேண்டும் என தனது புத்தாண்டுச் செ ய்தியில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தாயக அரசியற் தலைவர்கள் பலரது செயல் குறித்து தனது எச்சரித்துள்ளார். தற்போது நடப்பதைப் பார்த்தால் தாயக அரசியற் தலைவர்கள் பலர் தெரிந்தோ தெரியாமலோ ஏனைய சக்திகள் போடும் அரசியல் அரங்கத்தில் ஏறி நின்று ஆடுவது போல் தெரிகின்றது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது தமிழீழ மக்களுக்குப் பயன் தரும் செயலாக அமையாது என எச்சரித்துள்ளதோடு,ஏனையோருக்குச் சேவை செய்யும் செயலாக மட்டும…
-
- 0 replies
- 245 views
-
-
இந்தியாவை இலக்கு வைத்து இலங்கையில் கால் பதிக்கிறதா சீனா? தமிழர்களைப் பதறவைக்கும் சீன ஆக்கிரமிப்பு தீபச்செல்வன் ஈழத் தீவு முழுவதும் ஈழத் தமிழர்கள் பரந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு ஈழத்தின் நாற்புறமும் உள்ள சிவாலயங்கள் சாட்சியாக இருக்கின்றன. ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்கள் எனப்படும் இந்தக் கோயில்கள் பல்லவர் காலத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றவை. அவற்றின் வரலாறு கிறிஸ்துவுக்கு முந்தைய தொன்மைக்கும் முந்தையவை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த ராவணன் என்ற தமிழ் மன்னன், சிவபக்தனாக இருந்திருப்பதும் தொன்மையின் ஆதாரமாகும். இப்படிப்பட்ட தொன்மையைக் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் இன்றைக்கு தாம் எஞ்சியுள்ள வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் வாழ்வுரிமையை, ஆட்சியுரிமையைக்…
-
- 1 reply
- 297 views
-
-
சீனா மீதான தமிழர்களின் அவநம்பிக்கையும் அதிலுள்ள நியாயமும் ! வடக்கிற்கு விஜயம் செய்திருந்த சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தனது உத்தியோகப்பூர்வமான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று செயற்பட்டிருந்தார். முன்னதாக, வடக்கிற்கு வரும்போதே, வன்னிக் கட்டளை தலைமையத்திற்குச் சென்றிருந்தவர் அங்கிருந்து விசேட அதிரடிப்படைகளின் பாதுகாப்புடனேயே யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்தார். குறிப்பாக, பருத்துறை முனைப்பகுதிக்குச் சென்றவர் அங்கு ட்ரோன் கமராவினை பறக்கவிட்டுமிருந்தார். ஆனால் முனைப்பகுதி கடற்றொழிலாளர்கள் பற்றி அவர் கரிசனை கொண்டிருக்கவில்லை. அவரது கரிசனை பருத்தித்துறை துறைமுகத்தினை ‘அபிவிருத்தியின் பெயரால்’ எப்படியாவது தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே திரைமறைவில் இருந்த க…
-
- 35 replies
- 1.8k views
-
-
சீனாவின் ‘கடன்பொறிக்குள்’ இலங்கை? சமகாலத்தில் இலங்கையில் அரசியல் முட்டி மோதல்களுக்கு அப்பால் பெரிதும் பேசப்படுகின்ற விடயம் பொருளாதார நெருக்கடிகளாகும். சமையல் எரிவாயு, சிலிண்டர்கள் வெடிகுண்டுகளாக ஒவ்வொரு வீடுகளிலும் மாறியுள்ளது. எரிபொருட்களின் விலை ஒரே இரவில் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதையும், இயற்கை உரத்தினை பயன்படுத்துவதையும் அரசாங்கம் தேசிய கொள்கையாக கொண்டிருக்கின்றபோதும், அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது. சீனாவிடமிருந்து உரத்தினை பெற்றுக்கொள்வதற்கு முயன்று, இறுதியில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக மாறியிருக்கின்றது. அதேநேரம், பொருட்களின் விலையேற்றம், மரக்கறிகளின் விலையேற்றம் என்று மக்…
-
- 0 replies
- 349 views
-
-
புலம்பெயர் தேசத்து செயற்பாடுகளில் தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021ம் இணைந்துள்ளது – வேல்ஸ் இல் இருந்து அருஸ் December 28, 2021 தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021: வழமைபோலவே தமிழ் மக்களின் ஏக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி, இந்த வருடமும் கடந்து போயுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தேடுதல், தாயக மக்களின் மேம்பாடு மற்றும் அங்குள்ள மக்களினதும், தாயக பிரதேசங்களினதும் பாதுகாப்பு என்பன தொடர்பில் கடந்த ஒரு வருடத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் என்ன நகர்வுகளை மேற்கொண்டது என்பது தொடர்பில் பார்ப்பதன் மூலம் நாம் எமது அடுத்த வருடத்திற்கான செயற்பாடுகளை செழுமைப்படுத்த முடியும். கடந்த…
-
- 0 replies
- 263 views
-
-
இடதுசாரி அலையில் தென் அமெரிக்கா -சுவிசிலிருந்து சண் தவராஜா. சிலி நாட்டில் டிசம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் 56 விழுக்காடு வாக்குகளைப் பெற்று கப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி மாணவர் தலைவரான இவரின் வெற்றி தென் அமெரிக்கப் பிராந்தியத்தின் தற்போதைய அரசியல் போக்கின் ஒரு காட்டியாக உள்ளது. 2010 முதலே இந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் தேர்தல்களில் இடதுசாரிகள் அல்லது இடதுசாரிக் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள வேட்பாளர்கள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் போக்கு தென்படுகின்றது. சில நாடுகளில், இக் காலப் பகுதிகளில் இடதுசாரிகள் தங்கள் பதவிகளை இழந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் உள்ள நடப்பு அரசியல் நிலவரம், இடதுசாரிகளை நோக்…
-
- 0 replies
- 248 views
-
-
நன்றி - யூரூப் காலைப் பாம்பு சுற்றிய பின்னர் விழிப்பதுதான் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நகர்வா? சில தகவற் தவறுகள் இருந்தாலும் மேஜர். மதன்குமார் சில உண்மைகளையும் சுட்டியுள்ளார். புலவரவர்களின் செய்தியின் தாக்கமாக இருக்குமா? அல்லது சற்றுச்சிந்திக்கத் தொடங்குகின்றார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
- 1 reply
- 231 views
-
-
இலங்கை ஈரானுக்கு பெற்றோல் வாங்கிய கடன்காசு வாற ஜனவரியில இருந்து கட்டோணுமாம்.. அந்த காசை தேயிலையா குடுத்து கழிக்க போகுதாம்.. ஈரானுடன் வர்த்தகம் செய்ய ஜநா தடை இருந்தாலும் இது தேயிலை உணவுப்பொருள் வகைக்கே வருவதால் மனிதாபிமான அடிப்படையில் அவற்றை ஏற்றுமதி செய்ய தடை இல்லையாம்.. யார் சொன்னது மோட்டு சிங்களவன் எண்டு.. ஒரேகல்லில ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கு இலங்கை.. ஈரானிட்ட எண்ணெய் குறைஞ்ச விலைக்கு எண்ணெய்வாங்கினதும் ஆகுது இப்ப வெளிநாட்டு டொலர் குறைவான நிலையில் டொலர சேவ் பண்ணினதும் ஆகுது தடை செய்யப்பட்ட ஈரானுடன் வியாபாரம் செஞ்சதும் ஆகுது..
-
- 3 replies
- 411 views
-
-
இலங்கை தமிழரை புரிந்துகொள்ளுதல். மேயர் மதன்மோகனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் * மேஜர் மதன்மோகன் அவர்களுக்கு வணக்கம். 1.) 2000 ஆண்ண்டின் முன்னும் பின்னும் . விடுதலைப்புலிகளை சீனா சிங்கபூரில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். விடுதலைப் புலிகள் என்னை அழைத்து ”இந்தியாவுடனான உடைந்த உறவை மீழ ஒட்டும் விருப்பத்தோடு சீனாவின் அழைப்பை நாங்கள் ஏற்கவில்லை” என்பதை இந்தியாவுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டனர், நான் இந்திய தூதுவர் நண்பர் நிருபம் சென் ஊடாக அதனை இந்தியாவின் கவனத்துக்குக் கொண்டுவந்தேன். அதுபோல இந்திய தூதரகமும் தகவல் பரிமாற என்னை அழைத்துள்ளது. உயிரை பணயம் வைத்து பணியாற்றியுள்ளேன். 2.) உங்களுக்கு ஒன்று தெரிய வேணும். இலங்கை தமிழர்கள்தான் இதுவரை சீனா வடகிழக்கு பகுதியில் நுழ…
-
- 3 replies
- 415 views
-
-
டில்லியிடம் அவசரமாக நிதி உதவி கோருகிறது கொழும்பு இலங்கையின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிப்பதற்கு இந்தியா தயாராக இல்லாதமை அண்டைய தீவு நாடால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்களைப்படைந்து விட்டதைக் காட்டுகிறதா? இந்தியாவிடம் பணம் இருக்கிறது, ஆனால் குறிப்பாக அதிகாரத்திலுள்ள ராஜபக்சாக்கள் சீனாவுக்கு சாதகமான தன்மையை திரும்பத்திரும்ப காண்பித்துள்ள நிலையில் இலங்கைக்கு உதவி செய்வதற்கான விருப்பம் உள்ளதா? கேர்ணல் ஆர். ஹரிஹரன் 0000000000 இலங்கை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமர்பித்திருந்த வருடாந்த வரவுசெலவுத் திட்டதின் மீதான விவாதம் நடந்துகொண்டிருந்தபோதும், நாட்டின் வரவிருக்கும் பொருளாதாரவீழ்ச்சியை தடுக்க இந்தியாவின் அவசர உதவியைப் பெறுவதற்காக, இரண்டு …
-
- 2 replies
- 272 views
-
-
சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHINESE EMBASSY IN SRI LANKA படக்குறிப்பு, சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ''தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்"" என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர். ''இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகிறது," என்பதை வடக்கு தமிழர்களுக்கு உணர்த்துவது சீனாவின் நோக்கம…
-
- 47 replies
- 2.2k views
- 1 follower
-
-
பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள் மேற்கத்திய சிந்தனை மூலம் வளர்ந்தது எப்படி? சுனில் கில்னானி வரலாற்றாசிரியர் 18 செப்டெம்பர் 2019 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER காந்தியும் அவரது தொண்டர்களும் வெண்ணிற ஆடையை உடுத்தியபோது, தன் தொண்டர்கள் கறுப்பு நிற ஆடையை உடுத்த வேண்டுமெனக் கூறினார் பெரியார். தன்னைப் பின்பற்றுவோரின் மத நம்பிக்கைகளை காந்தி, தடவிக்கொடுத்தபடி கடந்துசென்றார். பெரியார் தன் பேச்சைக் கேட்க வந்தவர்களின் மத நம்பிக்கையையும் ஜாதிப் பழக்கவழக்கங்களையும் தூற்றினார். அவர்களை முட்டாள்கள் என்றார். அவர்களின் கடவுள்களை செருப்பால் அடிக்கப்போவதாக…
-
- 0 replies
- 507 views
- 1 follower
-
-
கிழக்கில் உள்ளூராட்சிமன்றங்களைக் குழப்ப அரசாங்கம் திட்டம்: மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள் – மட்டு.நகரான் December 22, 2021 மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள்: தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல்வேறு கோணங்களில் ஆரம்பித்த காலம் தொடக்கம் அவற்றின் மீது சிங்கள தேசம் எவ்வளவுக்குத் திணிப்புகளையும், அடக்குமுறை களையும் முன்னெடுக்க முடியுமோ அவ்வளவுக்கு முன்னெடுத்து வந்தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசிய உணர்வுகளையும், தமிழ் தேசிய உணர்வுகளுடன் செயற்படுபவர்களையும் தமிழர்கள் மத்தியில் உள்ள ஒட்டுண்ணிகளைக் கொண்டு பல்வேறு வகையான அடக்குமுறைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கும் நிலைமையினை நாங்கள் காணமுடிகின்றது. குறிப்பாகக் க…
-
- 1 reply
- 241 views
-
-
நன்றி - யூரூப்
-
- 5 replies
- 580 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனின் கிராமத்திலிருந்து.......
-
- 0 replies
- 272 views
-