Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்திய துணை தூதரக நடவடிக்கை சொல்லும் செய்தி என்ன? யாழ்ப்பாணத்தில், முன்னாள் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களால், கிட்டு பூங்காவில் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் மாத நினைவுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட மரம் நாட்டும் நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி கிருஷ்ணமுர்த்தி அவர்களும், துணை தூதர் ராஜேஷ் ஜெயபாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஜெயபாஸ்கர் மதுரையை சேர்ந்த வெளிநாட்டு சேவையியல் அதிகாரி. அதேவேளை கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் (ரா?) உளவுத்துறை அதிகாரியாக இருந்தவர். மாவீரர் மாத நிகழ்வுகளில் இந்திய அதிகாரிகள் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை. இம்முறை இவர்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாது, கார்த்திகைப்பூவினையும் அணிந்து கொண்டிருந்தனர். இது ஒரு முக்கிய செய்தியை சொல்லும்…

    • 12 replies
    • 1.4k views
  2. உலகப்பந்தில் தமிழீழத் தனியரசு தனக்கான இடத்தைப் பிடிக்கும் – வி.உருத்திரகுமாரன் உலகின் புவிசார் அதிர்வுகளிள் விளைவாகவும், சுதந்திர வேட்கையின் பயனாகவும், உலகப்பந்தில் ஒரு நாள் தமிழீழத் தனியரசு தனக்கான இடத்தைப் பிடிக்கும் என தமிழீழ தேசியக்கொடி நாள் உரையில் தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், அப்போது தமிழீழத் தேசத்தின் கொடி தமிழீழ நாட்டுக்கான கொடியாகவும் உலகப்பரப்பெங்கும் பட்டொளி வீசிப்பறக்கும் தெரிவித்துள்ளார். உலகில் அமைந்துள்ள தேசங்கள் எல்லாம் தமக்கானதொரு தனியரசை இதுவரை அமைத்துவிடவில்லை. அரசாக அமைந்த தேசங்கள் மட்டுமன்றி அரசற்ற தேசங்களும் தமது விடுதலையை அவாவை தமது தேசியக் கொடிகள் மூலம் வெளிப்படுத்தி நிற்கிறார்கள் …

    • 2 replies
    • 376 views
  3. நாம் தமிழர் சீமான்: ஆமைக்கறி தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்பி பேசியதில் சர்ச்சை என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையில் இருந்து, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NAAM TAMILAR நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி இலங்கை எம்.பி. ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், சீமானுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒப்பிட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். இல…

  4. மாதன முத்தாக்களின் கும்மாளம் November 20, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — பெரும்பாலான சிங்கள வீடுகளில் இப்பொழுது “மாதன முத்தாக்களின்” கதையே பேசப்படுகிறது. மாதன முத்தாக்களை நம்பித் தங்களுடைய ஆட்டின் தலையைக் காப்பாற்றுவதற்குக் கொடுத்து விட்டோமோ என்று சிங்கள மக்கள் யோசிக்கிறார்கள். கடைசியில் பானையும் மிஞ்சாது. ஆடும் மிஞ்சாது என்ற நிலையென்றால் யாருக்குத்தான் யோசினை வராது? முட்டாள்களை நினைத்துச் சிரிப்பதற்கு இலங்கையில் மாதன முத்தாவின் கதை பிரபலம். அதிகாரத்தையும் அறிவீனத்தையும் பரிகாசம் செய்வதற்கு –பழிப்பதற்கு – இந்தக் கதையை விட வேறு எதுவும் சிறப்பில்லை. காலந்தோறும் இந்தக் கதையை நினைவூட்டும் ஆட்கள் இருப்பார்கள். வரலாற்று நிகழ்வுகளும் நடந்து கொண்டி…

  5. ஜெய்பீம்: எதிர்மறை அரசியல் போதும் அன்புமணி - சமஸ் தமிழ்நாடு மேலே ஒரு சாண் ஏறினால், அதன் காலை முழம் அளவுக்குக் கீழே இழுப்பார்கள் நம் ஆட்கள். இந்தியாவில் முன்னுதாரணம் இல்லாத, ஓர் யதேச்சதிகார ஆட்சி நடக்கிறது. மாநிலங்கள் என்னும் மொத்த அமைப்பின் மீதும், இன்றைய ஒன்றிய அரசு மோதுகிறது. தன் கை கால்களை முறித்து, தானே புசிக்க முற்படும் ஒரு விநோத விலங்கைப் போல அது காட்சியளிக்கிறது. எல்லா மாநிலக் கட்சிகளுக்குமே இது கலக்கக் காலம். அடுத்த மக்களவைத் தேர்தலில், பாஜக வென்று ஆட்சியமைத்தால் என்னவாகும்? இப்படியொரு கேள்வி எழும்போதே, மாநிலங்கள் எனும் உயிரின் சுயாதீனம் என்னவாகும் என்ற கேள்வியும் கூடவே எழும். மாநிலங்களே அதிர்வுக்குளாகும்போது, மாநிலக் கட்சிகளின் எதிர்காலம்…

    • 3 replies
    • 486 views
  6. மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரப் பலப்பரீட்சை லக்ஸ்மன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தை மீறும் அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்காத ஆளுநர் என்ற கோசம் மட்டக்களப்பிலிருந்து நாட்டின் உள்ளூராட்சித்துறைக்குள் கேள்விகளை எழுப்பிவருகிறது. இது ஒரு மாநகர சபை சம்பந்தப்பட்டது மட்டுமே. உள்ளூராட்சி சபைகளில் நடைபெறும் சாதாரணமான விடயம் என்றே அதிகாரிகள், திணைக்களங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட எல்லோரும் பார்க்கின்றனர். ஆனால், இதற்குள் இருக்கின்ற சூட்சுமம் மிகவும் சிக்கலானது. உள்ளூராட்சிச் சட்டங்களின் கீழ் உள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளின் அதிகாரம் அளிக்கப்பட்ட அரசியல் அலகே சபைகளாகும். தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளின் சபைக்க…

  7. புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, பாரிய போராட்டமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கின்றது. போராட்டத்தை முடக்குவதற்கு, ராஜபக்‌ஷர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கால கட்டுப்பாடுகளைக் காட்டி, நீதிமன்றத்தின் ஊடாகத் தடை உத்தரவுகளைப் பெற முனைந்தார்கள். அதுபோல, கொழும்பின் பிரதான நுழைவாயில்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து வெளி மாவட்டங்களில் இருந்து உள்வரும் வாகனங்களை சோதனையிட்டு போராட்டக்காரர்களுக்கான நெருக்கடிகளை ஏற்படுத்தினார்கள். ஆனாலும், இவற்றை எல்லாம் தாண்டி, இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தி…

  8. தமிழருக்கு என்று ஒரு குணமுண்டு! November 18, 2021 —கருணாகரன் — தமிழர்களிடம் சில பழக்கங்களும் ஆழமான நம்பிக்கையும் உண்டு. 1. போட்டியில் பங்கெடுக்காமல், அதற்குத் துணியாமல், ஓடி முந்துவதற்கு முயற்சிக்காமல் மைதானத்துக்குக் குறுக்கே ஓடிக் கவனத்தை ஈர்த்து விடலாம் என்று கருதுவது. 2. முந்திச் செல்வோரைப் பற்றிக் குறை சொல்வது அல்லது குற்றம் சாட்டுவது. முந்திச் செல்வோரைப் பார்த்து வெப்பியாரப்படுவது. 3. முந்திச் செல்வோரை எப்படியாவது விழுத்தி விட வேண்டும் என்று யோசிப்பது. 4. அப்படிச் செய்து வெற்றி இலக்கை எட்டி விடலாம் என்று நம்புவது. 5. ஒன்றும் சாத்தியமில்லை என்றால் வெளியாரிடம் இதைப் பற்றி முறையீடு செய்து …

  9. அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ் சீனாவிலிருந்து சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட பிறகும், வெளியேற மறுக்கிறது. சீனக் கப்பல் இப்படி அடம்பிடிப்பதால், ராஜீய உறவிலேயே சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது ஏன்? காரணம், கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள் தவறாகிவிட்டது. நெருக்கமான நட்பைக் கொண்டிருக்கும் இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய ரீதியிலான மிக அரிதான ஒரு மோதல் ஏற்படுவதற்கும் இது காரணமாகிவிட்டது. ஒரு வங்கி தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளும் விஞ்ஞானிகளும் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள். சர்ச்சைக்குரிய அந்தக் கப்பலின் பெயர் ஹிப்போ ஸ்பிரிட். கடந்த செப்டம்பர் மாதம் …

  10. மௌனத்தைக் கலைத்தல்: வட மாகாணத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் July 13, 2021 Photo, Al Jazeera ஒரு சில சமூகங்களின் வரலாறுகள் மௌனிக்கப்பட்டு, அவர்களுடைய அடையாளங்கள் ஒடுக்கப்படுவது மிக மோசமான அடக்குமுறையின் அடையாளமாக இருந்து வருகின்றது. முதலில் கோப்பித் தோட்டங்களிலும், அதனையடுத்து தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் வேலை செய்வதற்கென பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பல்லாயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் இடம்பெயர்ந்த நிலையில் 1960கள் தொடக்கம் 1980கள் வரையில் வட பிரதேசத்திற்குச் சென்றார்கள். அவர்களுடைய பிரஜா உரிமை பறிக்கப்பட்டமை சுதந்திரத்தின் பின்னர் நமது நாடு நிகழ்த்திய பெரும் கொடுமையான சம்பவமாகும்…

  11. யாழ். – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி மோசடி: வலிகாம மக்கள் ஏமாளிகளா? November 12, 2021 யாழ். மாவட்டத்தில் தற்போது பல வீதிகள் காபெற் வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த யாழ்ப்பாணம், மானிப்பாய் – பொன்னாலை வீதியும் புனரமைக்கப்படுகின்றது. நீண்ட காலம் தாம் எதிர்கொண்ட போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கப்போகின்றது என மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், வீதியின் புனரமைப்பு விதம் மக்களை கவலையடையச் செய்துள்ளது. யாழ்ப்பாணம் சுடுகாட்டு ஆலடிச் சந்தியில் இருந்து மானிப்பாய் ஊடாக பொன்னாலைச் சந்தி வரை இந்த வீதி புனரமைக்கப்பட உள்ளது. அதாவது இந்த வீதி யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை …

  12. பார்ப்பனீயத்தால் பார்க்க முடியுமா? மின்னம்பலம்2021-11-08 ராஜன் குறை சென்ற வாரம் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று ஜெய் பீம் என்ற திரைப்படம் ஓடிடி எனப்படும் வலைதளத் திரைப்பட சேவையில் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களைப் பார்வையாளர்களின் உணர்வு பொங்கும் எதிர்வினைகளால் மூழ்கடித்தது. நவம்பர் ஒன்றாம் தேதி ஓடிடியில் வெளியாகும் முன்பே இந்த படத்தின் பிரிவியூ காட்சிகள் அக்டோபர் இறுதியில் சென்னையில் திரையிடப்பட்டன. இருளர் பழங்குடி சமூகத்தினர் காவல் துறை அத்துமீறல்களால் பாதிக்கப்படுவதையும், பொய் குற்றச்சாட்டில் லாக் அப்பில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு ஒருவர் கொலையுண்டதை காவல் துறை மறைத்ததையும், இடதுசாரி இயக்கங்களும்…

  13. பிள்ளையானும், வியாழேந்திரனும் மட்டக்களப்பின் சாபக்கேடு என்கிறார் இரா.சாணக்கியன்

    • 0 replies
    • 246 views
  14. தனிச் சிங்கள தேசமாகிறதா இலங்கை? -தீபச்செல்வன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அண்மையில், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் சட்டத்தை இயற்றுவதற்கான செயற்குழுவை அறிவித்திருந்தார். இந்தக் குழுவில் ஒருவர்கூட தமிழர்கள் இல்லை என்று சில சிங்கள தரப்பினர்கூட கவலை வெளியிட்டிருந்தார்கள். இலங்கைத் தீவு இரண்டாக இருக்கிறதா அல்லது இலங்கைத் தீவில் இரண்டு சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்விகள் ஒருபுறம் எழுகின்றன. அத்துடன், இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான செயற்குழுவில் தமிழர்கள் இல்லை என்பது ஒரு பிரச்சினையல்ல என்பதும் இங்கே குறிப்பிட்டாக வேண்டியது. ஏனென்றால், தனிச் சிங்கள நாடு ஆக்குவதற்கான சட்ட மூலத்தை இயற்றுவதற்கு, தமிழர்கள் எவரும் தேவையில்லை என்று அதிபர் கோத்தபய நினைத்திருக்கலாம் …

  15. ஆப்ரேஷன் கள்ளி: மாலத்தீவில் ஈழப் போராளிகள் தாக்குதலை தடுக்க இந்தியா எப்படி உதவியது? tamil.indianexpress நவம்பர் 3, 1988 அன்று இலங்கை போராளிகள் அமைப்பின் உதவியுடன் மாலத்தீவு குடியரச் ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற மாலத்தீவு குழு தோல்வியடைந்தது. அது எப்படி நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம். இந்த வார இறுதியில், முதன்முதலில் எதிரிகளாகச் சந்தித்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு, மேஜர் ஜெனரல் மூசா அலி ஜலீல் (ஓய்வு) மற்றும் அகமது சாகரு நசீரை அவரது மாலி இல்லத்திற்கு காபி விருந்துக்கு அழைத்தார். நவம்பர் 3, 1988 அன்று இந்தியாவின் இராணுவத் தலையீட்டால் முறியடிக்கப்பட்ட மாலத்தீவில் தோல்வியுற்ற சதிப்புரட்சிக்காக நசீர் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டு பேரும் மூன்றாவது முற…

  16. மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடியவர்கள்; இன்று ஒருவேளை சோற்றுக்காகவும் குடிநீருக்காகவும் போராடவேண்டிய நிலை! – மட்டு.நகரான் November 2, 2021 மட்டு.நகரான் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பகுதி மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆதிவாசி மக்களாக நீண்டகாலம் குடியிருக்கும் இந்த மக்கள், எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் துயரமான வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர். கரடியன்குளமானது செங்கலடி-பதுளை பிரதான வீதியில் கரடியனாறு விவசாயப் பண்ணையூடாகச் செல்லும் வீதியில் பத்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. குசனார்மலை அடிவாரத்தில் உள்ள இக்கிராமமானது, நீண்ட பழைமையான கிராமமாக காணப்ப…

  17. இந்திய-இலங்கை மீனவர் விவகாரம்: இழுவை மீன்பிடி படகுகளைப் பயன்படுத்த மூன்று நிமிடம் கூட தமிழக மீனவர்களுக்கு தர முடியாது இந்தியாவிடம் இலங்கை மீனவர்கள் தெரிவிப்பு 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இழுவை மீன்பிடி படகுகளைப் பயன்படுத்த தமிழக மீனவர்களுக்கு இனி மூன்று நிமிடம் கூட அவகாசம் தர முடியாது என இலங்கை மீனவர்கள் கூறியுள்ளனர். இந்திய − இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பில், இலங்கையின் வடப் பகுதி மீனவர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட…

  18. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு 9 ஆண்டுகள் கழித்து 1956 நவம்பர் 1-ம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது `மெட்ராஸ் பிரசிடென்ஸி' என்ற பெயரில் இணைந்திருந்த கர்நாடகத்தின் சில பகுதிகளும், ஆந்திராவின் சில பகுதிகளும் நவம்பர் 1-ம் தேதியன்று பிரிக்கப்பட்டு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என உருவானது. ``பிரிக்கப்பட்ட அன்றுதான் தமிழகத்தின் சில பகுதிகள் கர்நாடகத்துக்கும், கேரளத்துக்கும், ஆந்திராவுக்கும் சென்றுவிட்டன. எனவே நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட வேண்டிய நாள் அல்ல. தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாள் தான் உண்மையான தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்பட வேண்டும்" என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், பேராசிரியர் சுப.வீரபா…

  19. தமிழர் தரப்பு மாற்று வழியில் சிந்திக்க வேண்டும் November 2, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊடக ஆய்வாளர்களிற் சிலரையும் சந்தித்திருந்தார். இதன்போது பெரும்பாலான அரசியல்வாதிகள் இலங்கை – இந்திய உடன்படிக்கையில் எட்டப்பட்ட 13வது திருத்தத்தைப் பற்றிப் பேசினர். கஜேந்திரகுமார் போன்றவர்களோ இதற்கப்பால் சென்றே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றனர். ஏனையோர் தமது தனிப்பட்ட விவகாரங்கள் உட்பட இலங்கை அரசாங்கத்தைப் பற்றிய முறைப்பாடுகளைச் செய்வது வரையிலேயே அதிகமாக அக்கறை காட்டினர். வந்தவருக்குச் சற்றுத் தலைசுற்றினாலும் சமாளித்துக் கொண்டார். இத…

  20. நாட்டின் நலன் மக்கள் கையில் November 1, 2021 — கருணாகரன் — நாட்டில் விலைவாசி மலைபோல ஏறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பதட்டத்தோடுதான் மக்கள் வாழ வேண்டிய நிலை. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று சனங்கள் அழுகிறார்கள். சிலர் கண்டபாட்டுக்கு அரசாங்கத்தைத் திட்டுகிறார்கள். அரசாங்கத்தைத் திட்டி என்ன செய்து விட முடியும்? இந்த அரசாங்கத்தை மாற்றுவதுதான் மீட்சிக்கு வழி என்று பலரும் சொல்கிறார்கள். இது நாட்டின் பொருளாதாரத்தோடு சம்மந்தப்பட்டது. இந்த அரசாங்கமாவது இந்தளவுக்குத் தாக்குப் பிடிக்கிறது. இல்லையென்றால் கஞ்சிக்கும் வழியற்றுப் போய் விடும் என்று சொல்வோரும் உண்டு. இவை எல்லாவற்றுக்கும் காரணம் பொருளாதார நெருக்…

  21. மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை எழுப்பும் ஞான சார தேரரின் நியமனம் ”2019மே 23 அன்றுபிக்குவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு, மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது , ஏனெனில் அது “சட்டத்தின் முன் சமத்துவம்” மற்றும் “ஒவ்வொரு இலங்கையருக்கும் பொதுவான சட்டம்” என்றஅனைத்து சட்ட விதிமுறைகளையும் நடைமுறைகளையும் மீறியது ம் நேரடியாக முரண்பட்டதுமாகும்.” 0000000000000000 பி.கே.பாலச்சந்திரன் 000000000 ஜனாதிபதிகோத்தாபய ராஜபக்ச , “ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற கருத்தீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்கும், மதம், இனம் என்ற பேதமின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரே சட்டத்தை கொண்டு வருவதற்குமான சட்ட வரைவை தயாரிப்பதற்கு ஜனாதிபதி செயலணிபிரிவ…

  22. கடும் கோபத்தில் மகிந்தா.... விவசாய அமைச்சருக்கு போனைப்போட்டு திட்டினார். பிரதமர் மகிந்தா, மேலதிக கடன் வாங்கும் விடயம் தொடர்பில் சீன தூதரை சந்தித்தார். பேச்சில், உரக்கப்பல் விடயம் தொடர்பில், சீன தூதர் பேச முயல்கையில், அது குறித்த முழு விபரம் தெரியாது. அதிகாரிகளிடம் பேசி விபரம் எடுத்த பின்னர், பேசுகிறேன் என்று சொல்லி விட்டார். ஆனால் அதேதினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா, பிரதமர், தன்னை சந்தித்த சீன தூதரிடம், உரம் நாட்டினுள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து விட்டார் என்று சொல்லி இருந்தார். ஆத்தை அரிசிக்கு அலைய, குத்தியன் பாலுக்கு அழுதானாம் என்பது போல.... கிடைக்க கூடிய கடனுக்கே ஆப்பு வைக்கும் இந்த வேலையால் பெரும் க…

  23. போறாளே பொன்னுத்தாயி.... பொலபொலவென்று கண்ணீர் விட்டு.... இது வைரமுத்தர் பாட்டு.... ஆனால் நான் சொல்ல வரும் விசயம்... வேறு... பிரித்தானியாவின் அரச குடும்ப இளவரசர், ஹரியை.... சாதாரண குடும்ப பெண்.... மேகன்.... அதுவும், அரை வெள்ளை, அரை கறுப்பு இன கலப்பு பெண் தள்ளிக் கொண்டு போன கதை நமக்கு தெரியும்... அதே போல ஒரு கதைதான் ஜப்பானிய அரச குடும்பத்தில் நடந்துள்ளது.... ஜப்பானின், 'ஹரி - மேகன்' கதை என்று இது சொல்லப்படுகின்றது. ஜப்பானிய அரச குடும்பத்தில், முடிக்குரிய இளவரசர் மகள், இளவரசி மக்கோ. இவர் பிரிட்டனின் லெஸ்டேர் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் எடுத்தவர். அவரது காதல் கணவர் கெய் கொமுரோ ஜப்பானிய சமூகத்தில் ஒரு சாதாரண குடிமகன். அதாவது இளவரசர் ஹரியை…

    • 1 reply
    • 622 views
  24. விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ள உரத்தடைப் பிரச்சினை October 27, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — பயிர்ச்செய்கைக்கு உரம் வேண்டும். உடனடியாக உரத்தடையை நீக்க வேண்டும் என்று கேட்டு விவசாயிகள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியிருக்கிறார்கள். கொரோனா தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் கூட முடியாது என்ற அரசு விதித்திருக்கும் அறிவிப்பையும் மீறி, பொலிசாரின் தடைகளையும் கடந்து, விவசாயிகளின் போராட்டம் நடக்கிறது. இந்தப் போராட்டத்துக்குப் பின்னணியில் ஜே.வி.பியினரே உள்ளனர் என்று அமைச்சர் மகிந்தானந்த அளுத்கம தெரிவித்திருக்கிறார். ஜே.வி.பி பின்னணியில் இருந்து தூண்டுகிறதோ இல்லையோ விவசாயிகளின் உரப் பிரச்சினை நியாயமானது என்று அரசாங்கத் தரப்பினரே கூறுகின்றனர். விவசாயிகளின் ப…

  25. சமய மாற்றம் பிழையா? எல்லா சமயங்களும் சமனா? தமிழருக்கென்று ஒரு சமயமா? S. Ratnajeevan H. Hoole on October 25, 2021 Photo, Myadvo அண்மையில் சிவசேனையைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் தெல்லிப்பளையில் கிறிஸ்தவ சமயத்துக்கு நெறிமுறையற்ற மதமாற்றம் செய்ய தூண்டப்படுகிறார்ளென்றும், அதை நிறுத்தவேண்டும் என்றும் பத்திரிகைகளில் 23.09.2021 அளவில் ஒரு கட்டுரையை எழுதி (உதாரணம் காலைக்கதிர் தமிழ்வின், ஈழநாடு), அதை ஒரு அமைச்சருக்கும் அனுப்பியுள்ளார். அந்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அந்த முறைப்பாட்டை ஒரு குற்றச்சாட்டாய்க் கருதி நடவடிக்கைகள் அவர் ஆரம்பித்து விட்டார். இலங்கையிலே நெறிமுறையற்ற மதமாற்றத்தில் அதிகம் ஈடுபடுபடுபவர்…

    • 2 replies
    • 624 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.