நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
இரு தேசங்கள்! இரு அபிலாசைகள்!! | ஜூனியர் விகடனில் கவிஞர் தீபச்செல்வன் இலங்கையில் நடந்த தேர்தல் இரு தேசங்களை, இரு அபிலாசைகளை தெளிவுபடுத்தியிருப்பதாக ஈழக் கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரையில் அதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டுரையை முழுமையாக தருகிறது வணக்கம் லண்டன். இன்னமும் ஈழ மண்ணில் இன அழிப்பின் குருதியின் நெடில் விலகவில்லை. போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் போரின் தாக்கம் சமீபமாகவே இருக்கிறது. சொற்களாலும் அரசியலாலும் உளவியல் ரீதியாக தமிழர்களை கொல்லுகிற இன அழிப்பு போர் முடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத இப் போரை உணரத்தான் முடியும். இலங்கை பாராளுமன்றத் தேர்தல், தமிழர்களை இனப்படுகொலை செய்த தரப்புக்கு…
-
- 0 replies
- 551 views
-
-
இரு பிரதான கட்சிகளும் சிறுபான்மை மக்களை கைவிடுமா? ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள், கருத்து முரண்பாடுகள் மிக மோசமான அளவில் தலைதூக்கியுள்ளன. இது அசாதாரண நிலைமையொன்றல்ல; தேர்தல்களில் தோல்வியடைந்த கட்சிகளுக்குள், இது போன்ற கருத்து முரண்பாடுகள் பல தோன்றுவது சகஜமே! ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஆரம்பத்தில் சஜித்தை வேட்பாளராக நியமிக்க விரும்பாமல் இருந்தது போலவே, அவருக்குப் போதிய ஆதரவை வழங்கவில்லை என்றும் கட்சித் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காகப் போதியளவில் பணம் வழங்கவில்லை என்றும் சஜித்தின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேவேளை, சஜித்தைக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்க வேண்டு…
-
- 0 replies
- 305 views
-
-
இலங்கையைப் பற்றி, குறிப்பாக இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி தமிழகச் சமூகம் அறிந்திருக்கும் விடயங்கள் பல உள்ளன. இறுதி யுத்தத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றைக் கனத்த இதயங்களோடு, ஏதும் செய்வதறியாத கையறு நிலையுடன் பார்த்து வந்துள்ளோம். இலங்கைத் தமிழினத்தை நம் சகோதர, சகோதரிகளாய்ப் பார்க்கும் இயல்புணர்வால் இத்தாக்கம் நமது சமூகத்தில் மேலதிகமானதாக இருந்தது. இதேபோன்று வேறு பலவிதமான ஆதிக்கங்களால் பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மார், ஈராக், சிரியா, செக், ஸ்லேவாக்கியா, பொஸ்னியா, ஹெர்ஜ கோவினா என பல நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தங்கள் மக்களை அழித்தும் இடம்பெயரச் செய்தும் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாக்கியபோது இந்த அளவு தாக்கத்தை நாம் உணரவில்லை. தமிழக அரச…
-
- 0 replies
- 335 views
-
-
ஒருபுறம் கொரோனா பேரபாயம் நாட்டை சூழ்ந்து கொண்டு இருக்கிறது. மறுபுறத்தில் அரசியல் ஜூரம் அனலடிக்கிறது. இரண்டுக்கும் இடையே சிக்கி மக்கள் பாடாய்ப்படுகிறார்கள். ராஜபக்ச தரப்பினரை – குறிப்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைப் பிடித்துள்ள அதிகார மோகம் நாட்டை மேலும் அபாயத்திற்குள் தள்ளும் சூழலே காணப்படுகின்றது. இந்தப் பேராபயத்திலும் – அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் ராஜபக்ச தரப்புகள். இதற்கு வலுவான காரணம் சர்வதேசம் – நாடு இப்போதிருக்கும் நிலையில் எதுவும் கண்டுகொள்ளப்படாது என்பதுதான். கொரோனா அச்சுறுத்தலில் உலகம் சிக்கித் தவித்தபோது, மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்டார். இவரது விடுதலையை சர்…
-
- 0 replies
- 455 views
-
-
உறுதி என்ற பதத்திற்கு இரும்பை ஒப்பிடுவார்கள். ஆனால் அதன் புரிதலில் நம்மவரில் பலருக்குச் சரியான விளக்கம் இன்றிய நிலையிருக்கும் என்றால் அதில் மிகையில்லை. ஏனெனில் எவ்வகை இரும்பானாலும் சில காலம் அது ஒரே இடத்தில் இருப்புக்கொள்ளுமாயின் அது துருப்பிடித்து மண்ணோடு மண்ணாகி விடும் என்பதே காலம் சொல்லும் கதை. அவ்வாறிருக்கையில் எவ்வாறு உறுதியை இரும்புக்கு ஒப்பிடுவது என்ற கேள்வி நம்மனத்தைக் குடையாமல் இல்லை.உண்மை என்னவெனில்; இரும்பு; ஒருபோதும் அதன் கனத்திற்காக உறுதியோடு ஒப்பிடப்படுவதில்லை. இரும்பானது, துருப்பிடித்து மக்கிப் போகும் இறுதிக்கணம் வரையிலும் அது இரும்பாகவே இருந்து அழிந்துபோகும், வேறு எந்தப்பொருளும் இறுதிவரை இரும்பைப்போல வாழ்வதில்லை என்பதாலேயே, இரும்பை ஒத்த மனவுறுதி வ…
-
- 0 replies
- 715 views
-
-
இருள் சூழ்ந்த இலங்கை! காரணங்கள் என்ன? -ச.அருணாசலம் பஞ்சமும், பதட்டமும், கலவரச் சூழலுமாக இலங்கை தகிக்கிறது! உணவுக்கும், எண்ணெய்க்கும் நீண்ட க்யூ வரிசைகளில் காத்து கிடந்து சிலர் உயிரிழந்துள்ளனர்! கொந்தளிப்பின் உச்சத்தில் இலங்கை மக்கள், ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு போராடுகின்றனர். என்ன நடக்கின்றது? தேயிலைக்கும், மீனுக்கும் இயற்கை சூழல்களுக்கும் பெயர்போன இலங்கையின் இன்றைய சூழலுக்கு பல காரணிகள். ஆனால், அவற்றில் முதன்மையானது ஆட்சிக்குளறுபடி -Mismanagement என்றால், அது மிகையல்ல. அதிபர் ராஜபக்சே , ” நாடு ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது, நான் பன்னாட்டு பண நிதியத்திடம் (IMF) உதவி கேட்டுள்ளேன் ; அவர்களும் சில நிபந்தனைகளுடன் உதவ முன் வந்துள்ள…
-
- 0 replies
- 309 views
-
-
2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்கள தேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி, ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிகமுக்கியமான ஊடகநிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர். தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலாவதானது. அதனைவிட சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக வந்ததே இல்லையென்றே சிங்கள ஊடகங்கள்கூட வர்ணித்திருந்தன அந்தச் சந்திப்பை. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு திகதி குறித்த பின்னர் இது நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கையும் சிங…
-
- 3 replies
- 663 views
-
-
இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல: நிலாந்தன்:- 08 மே 2016 மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக நினைவு நாளை அனுஷ;டித்தன. ஆனால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமையவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை காவல்துறை தடை செய்தது. அது பற்றி ஏனைய கட்சிகள் வாயைத் திறக்கவில்லை. இம்முறையும் அரசாங்கம் கடந்த ஆண்டைப் போலவே நிலைமைகளைக் கையாளும் என்று கருத இடமுண்டு. அண்மைக் காலங்களாக இடம்பெற்ற…
-
- 0 replies
- 296 views
-
-
பிரித்தானியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் இறப்பதற்கான தனது உரிமையை நீதிமன்றத்தில் போராடி வென்றெடுத்துள்ளார். இருதய துவாரம் காரணமாக பாதிக்கப் பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹன்னா ஜோன்ஸ் என்ற சிறுமியின் உயிரைக் காப்பாற்ற இருதய மாற்றுச் சிகிச்சை மேற்கொள்வதை விட வேறு வழியில்லை என மருத்துவர்கள் தெரிவித்து, அச்சிகிச்சைக்கான நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கினர். ஆனால், ஹன்னா ஜோன்ஸோ அறுவைச் சிகிச்சைக்கு உட்பட மறுப்புத் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமி இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு ஆக வேண்டும் என கடந்த பெப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. எனினும், சிறுமியின் கோரி…
-
- 0 replies
- 924 views
-
-
இறப்பதற்கு முன் தனது 5 உறவுகளையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு கண்ணீர் மல்க தாயார் மன்றாட்டம் ! By VISHNU 01 SEP, 2022 | 01:02 PM சண்முகம் தவசீலன் நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தமானது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பல்வேறு துன்பங்களை விட்டுச் சென்றிருக்கிறது அந்த வகையில் சில தரப்பினர் தங்களுடைய துன்பங்களை படிப்படியாக குறைத்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை முன் கொண்டு செல்கின்ற அதே வேளையிலே இன்னொரு பகுதியினர் தங்களுடைய வாழ்வை நாளும் பொழுதும் தொலைத்தவர்களாக நடைபிணங்களாகி வருகின்ற சோக கதை தொடர்ந்தே வருகின்றது முல்லை தீவு மாவட்டம் பன்னெடுங்கால யுத்தத்தினால் பல்வேறு இன்னல்களை சந்தித்தது மாத்திரமன்றி ஆழி…
-
- 0 replies
- 587 views
-
-
இறுதி கட்ட யுத்தத்தில் நடந்தது என்ன? என்று இந்த இனையதளத்தின் ஒரத்திலே ஒரு ஒளிபதிவைபோட்டிருக்கினம் பாருங்கோ... http://www.tamilnewsinfo.com/
-
- 2 replies
- 4k views
-
-
முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது இந்தச் சம்பவம் பற்றி தளபதி எழிலன் மனைவி ஆனந்தி 40 நிமிடம் தனது அனுபவங்களை விளக்குகிறார் — எல்லோரும் கேட்கவும். http://irruppu.com/?p=32948#more-32948
-
- 1 reply
- 802 views
-
-
FINAL STAGE OF THE TAMIL MUSLIM DISCOURSE. இறுதிக் கட்ட தமிழர் முஸ்லிம்கள் பெரும் கருத்தாடல். . நன்பன் சித்திக் அவர்களுக்கு. . M YM Siddeek மச்சான் நான் என்ன நினைக்கிறேன் நீ என்ன நினைக்கிறாய் என்பது கருத்துகள்தான். அவற்றுக்கு சம்பந்த பட்ட மக்கள் ஆதரவு தராவிட்டால் அவை செயல்படுவதில்லை. வடகிழக்கு விவகாரத்தில் தமிழர் முஸ்லிம்கள் என மொழியால் ஒன்றுபட்ட இனத்தால் வேறுபட்ட இரு இனங்கள் செயல் படுகின்றன. அவை வெவ்வேறு அரசியல் தலைமைகளை கட்டி எழுப்பியுள்ளன. அவற்றின் தேசிய சர்வதேசிய நடவடிக்கைகளின் வரலாறும் வெற்று பட்டவை. இதைவிட சிங்கள பிரதேசங்களும் உள்ளன. இந்த நிலையில்தான் 1987ல் தமிழ்ப் போராளிகளது மிக குறைந்த பட்ச்சக் கோரிக்கையாக இந்திய அழுத்தத்தால் மாகாண சபைகளும் வடகிழக்கு இண…
-
- 0 replies
- 356 views
-
-
இந்தக்காணொளியில் காங்றஸ்செய்யும் தமிழினப்படுகொலைகளையும் மற்றும் சிங்கள இரானுவத்தினர் பென்போராளிகளை நிர்வானப்படுத்திய {உருமறைப்புசெய்யப்பட்டு} காட்சியும் இனைக்கப்பட்டுள்ளது Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/228/Final-war
-
- 1 reply
- 2.2k views
-
-
இறுதிப்போர் மூண்டது எப்படி!!!! இந்தியாவின் நயவஞ்சக பக்கங்கள். இறுதிப்போரை மாவிலாற்றில் விடுதலைப்புலிகள் தொடங்கவில்லை. மாவிலாறு ஏன் களமாக தெரிவு செய்யப்பட்டது என்பது பற்றியதான புவியியல் மற்றும் பிராந்திய வல்லாதிக்க நலன் பற்றியதான பதிவு தான் இது. விடுதலைப்புலிகளை பொறுத்தவரை ஆயுத வழங்கல், உணவு மற்றும் மருந்து வழங்கல் காயப்பட்ட மற்றும் வீரச்சாவடையும் போராளிகளை வெளியேற்றல் என்பவை சரியான முறையில் கட்டமைக்காமல் பெரும் போரை அவர்கள் தொடங்குவது கிடையாது. இது தான் வரலாறு. இனி விடையத்திற்கு வருவதற்கு முதல் சமாதான ஒப்பந்தம் முறிவடைய செய்யப்பட்டது எப்படி காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம். 5 மாணவர் படுகொலை 2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்கள் ப…
-
- 8 replies
- 1.5k views
-
-
Seelan Ithayachandran இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? - இதயச்சந்திரன் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், இரண்டு விடயங்கள் குறித்து ஊடகப்பரப்பில் அதிகமாகப் பேசப்படுவதைக் காண்கிறோம். ஒன்று, வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள். இரண்டாவது, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தென்னிலங்கையில் எழும் விமர்சனங்கள். இதில் முதலாவது விடயத்தை நோக்கினால், பிரச்சாரக் கூட்டங்களுக்குத் தடை போடப்படுகிறது என்கிற பொதுவான குற்றச் சாட்டுக்களைவிட, வேட்பாளர் மீதான நேரடித்தாக்குதல்களும், வீட்டின் வாசலில் கழிவு எண்ணெய் அபிசேகம் செய்வதுமே முக்கிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சூழலியலாளர் பொ.ஐங்கரநேசனின் காரியாலய வாசலிலும்…
-
- 0 replies
- 381 views
-
-
இலக்கு வைக்கப்படும் ருத்ரகுமாரன் ! [Thursday 2015-12-31 08:00] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், தமிழீழ விடுதலையின் சனநாயகப் போராட்ட புலம்பெயர் அரசியற் தலைமையுமாகிய விசுவநாதன் ருத்ரகுமாரன் இலக்கு வைக்கப்படுவது ஏன் என்ற கேள்வி பொதுவாக மக்கள் மத்தியில் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை பின்னோக்கிச் செல்வதன் ஊடாக நாம் விளங்கிக் கொள்ள முடியும். தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியல் பெருவிருப்பின் வடிவமாக இலங்கைத்தீன் தமிழர் தாயகப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசானது சிங்கள தேசத்துக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இலங்கைத்தீவில் தமிழீழம் - சிறிலங்கா என இரண்டு தேசங்கள் என்ற நிலைப்பாட்டினை இது …
-
- 0 replies
- 704 views
-
-
இலங்கையின் சனத்தொகையின் சமகால மாற்றங்களும் சமூக பொருளாதார விளைவுகளும் அருளம்பலம் பாலச்சந்திரமூர்த்தி [விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை] இன்று உலக சனத்தொகை தினம் ஒரு நாட்டின் சமூகபொருளாதார மற்றும் அரசியல் கலாசார விடயங்களில் தாக்கம் செலுத்தும் ஒன்றாக சனத்தொகை விளங்குகின்றது. எமது நாட்டின் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றியமைக்கும் மிக முக்கிய வளமான மனிதவளத்தினையும் இச் சனத்தொகையே கொண்டிருக்கின்றது. இலங்கையின் குடித்தொகை அளவானது முதலாவது குடிக்கணிப்பு இடம்பெற்ற 1871 ஆம் ஆண்டுகளில் 2.400 மில்லியன்களாக மட்டுமே காணப்பட்டதுடன் 2011 ஆம் ஆண்டு இறுதிக…
-
- 0 replies
- 13.6k views
-
-
இலங்கையில் ஓர் அரேபியாவை கட்டியெழுப்பியிருக்கிறார் ஹிஸ்புல்லாஹ்: அத்துரலியே ரத்ன தேரர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவியிறக்க வேண்டும். ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் தோற்று, தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்து பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றளவில் இலங்கையில் ஒரு அரேபியாவைக் கட்டியெழுப்பியிருக்கிறார். எம்மால் இத்தகைய அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாடு குறித்து சிந்திக்கின்ற முஸ்லிம்கள் இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம். உங்களது சமூகத்திற்குள் காணப்படுகின்ற கொ…
-
- 0 replies
- 662 views
-
-
உலகின் மிகப்ப;ழை;மையான தொழிலாகக் கருதப்படும் பாலியல் தொழில், பல நாடுகளில் சட்ட;ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், மற்றும் சில நாடுகளில் வரையறுக்கப்பட்ட வகையில் சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது. நமது அயல்நாடான இந்தியாவில் இத்தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், பாலியல் தொழிலுக்கு பெயர் பெற்ற, சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்துள்ள மற்றும் அதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் ஆசிய நாடான தாய்லாந்தில் அது சட்ட விரோதமானதாகவே கருதப்படுகிறது. இலங்கையைப் பொறுத்த வரையில், பாலியல் தொழிலானது சட்டவாக்க கட்டுரை 360(சி) பிரிவின்படி, சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தொழிலாகவே கருதப்படுகிறது. இத்தொழில் அயல்நாடுகளில் உள்ளதைவிட இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. என…
-
- 0 replies
- 357 views
-
-
இலங்கையில் வெற்றிகரமாக செயற்படும் நிலக்கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டம் இலங்கையின் நிலக்கண்ணிவெடி ஆபத்துக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமான ஒரு நிகழ்ச்சித்திட்டமாக பூகோளப் பங்காளர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிவரை ஜெனீவாவில் பிரதானமன்றத்துடனும் பக்க நிகழ்வுகளுடனும் நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய ஒரு மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. பிரதானமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் ஆரம்பத்தில் 1302 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் நிலக்கண்ணிவெடி ஆபத்துள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்…
-
- 0 replies
- 542 views
-
-
-
இலங்கை - சீன தந்திரோபாயத்துக்குள் நம்பிக்கையை மட்டும் கொண்டுள்ள இந்திய-அமெரிக்க தரப்பு.! இலங்கை அரசியலில் இந்திய அமெரிக்க அணுகுமுறையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதனை கடந்த இரு மாத காலப் பகுதிகளில் அவதானிக்க முடிந்தது. இது அண்மிய வாரத்தில் இந்து சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் உரையாடல் ஒன்றுக்காக வருகை தந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் அவர்களின் வருகை யின் போது தெளிவாககத் தெரிந்தது. இந்திய இலங்கை உறவு அயல் நாடு என்பதைக் கடந்து சீன இலங்கை உறவினால் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்த வகையில் அஜித் டோவால் இலங்கையின் ஆட்சியாளர்களையும் தமிழ் தரப்பினரையும் சந்தித்த பின்னர் புதுடில்லி திரும்பினார். அவரது விஜயத்தின் நிறைவு இந்தியப் பிரதமர் நரேந்திர ம…
-
- 0 replies
- 319 views
-
-
இலங்கை -- சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையை ஏன் எதிர்க்கிறார்கள்? இலங்கை இந்திய வர்த்தக உடன்படிக்கையும் எமக்கு சாதகமாக அமையவில்லை இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் (SLSFTA) 2018 ஜனவரி 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே இலங்கை இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இதுபோன்ற இருபக்க தாராள ஒப்பந்தங்களை இலங்கை செய்துள்ளது. எனினும் அந்த ஒப்பந்தங்களுக்கு இல்லாத எதிர்ப்பு சிங்கப்பூர் ஒப்பந்தத்திற்கு ஏற்படக்காரணம் இலங்கையரிடையே காணப்படும் சிங்கப…
-
- 0 replies
- 838 views
-
-
இலங்கை -இந்திய உறவின் அரசியல் பொறியாக கொழும்பின் கிழக்கு முனையம் மாறியுள்ளதா?! இலங்கை -இந்திய உறவு புவிசார் அரசியல் உறவாகவே நோக்கப்பட வேண்டியது. இலங்கையின் அனைத்து அரசியல் போக்குகளுக்கும் இந்தியா மையப்புள்ளியாகவே உள்ளது. இதனால் இந்தியாவைக் கடந்து பூகோள அரசியல் பெறுமானத்தை நோக்கி இலங்கை நகர்வது கடினமானதாகவே உள்ளது. ஆனாலும் இலங்கை பூகோள அரசியல் முனைப்புக்களை முன்கொண்டு இந்தியாவை கையாள முனைவதும் அது பின்பு நெருக்கடியைத் தருவதுமாக இலங்கையின் அரசியல் இருப்பு காணப்படுகிறது. அத்தகைய குழப்பம் மிக்க அரசியல் களத்திற்குள் இலங்கை இந்திய உறவு நகருவதனைக் காணமுடிகிறது. குறிப்பாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் பொறுத்து ஏற்பட்டுள்ள களத்தை தேடுவதே இக்கட்டுரையின் பிரதா…
-
- 0 replies
- 316 views
-