நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
-
- 0 replies
- 384 views
-
-
தமிழ்த்தேசியப் பேரவையும், கலைக்கப்படவேண்டிய ஈழப்போராட்ட இயக்கங்களும்..!! March 1, 20211 min read — இரா.வி.ராஜ் — தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறுவதற்காக ஜனநாயக ரீதியிலான போராட்டத்தினை அல்லது பிரச்சினைகளைத் தீர்பதற்கான வழிவகைகளை உருவாக்குவதற்காக கூட்டாக இணைந்து தமிழ்த் தேசியப் பேரவை அல்லது வேறு பெயருடனோ இனப்பிரச்சினையினைக் கையாள நினைப்பவர்கள் பல விடயங்களில் தன் நலம் சாரா விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாரான பின்னரே தம்மை தமிழர்களின் பிரதிநிதிகளாக பிரகடனப்படுத்தவேண்டியது கட்டாயமானது . இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் எமக்கு நடந்த அநீதிகளுக்கான நீதியினையும், அதற்கான தண்டனையினையும், நஷ்டஈட்டினையும் பெற போராடும் ஒரு மக்கள் அமைப்பாக அல்ல…
-
- 0 replies
- 556 views
-
-
சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட உரிமை மாவைக்கு மறுக்கப்படுகிறதா.? - நா.யோகேந்திரநாதன் அண்மையில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள ஒரு விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள், மத நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் ஒன்றுகூடி அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து தமிழர் பேரவை என்ற பேரில் செயற்படுவது பற்றி ஆலோசனை இடம்பெற்றது. கஜேந்திரகுமாரைத் தலைமையாகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அனைவரும் ஒரே சக்தியாகத் திரண்டெழுந்து ஒரு குடையின் கீழ் செயற்படவேண்டும் என்ற கருத்து சகல தரப்பினரால…
-
- 0 replies
- 231 views
-
-
இன்று நடைபெற்ற யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், அங்கவீனம் உற்ற மாணவனுக்கு துணைவேந்தர் சற்குணராஜா அவர்கள் முழங்கால் படியிட்டு பட்டமளித்து கவுரவித்துள்ளார்
-
- 0 replies
- 643 views
-
-
தீவுகளில் நீடிக்கும் பனிப்போர் -ஹரிகரன் - “நெடுந்தீவில் சீனா தளம் அமைக்க அனுமதிக்கும் அளவுக்கு இலங்கை அரசு முட்டாள்தனமான காரியத்தைச் செய்யும் என்றும் இந்தியா நம்பவில்லை. ஆனால் தாம் பாரம்பரியமாக செல்வாக்குச் செலுத்தி வந்த பகுதிக்குள் சீனா ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதை அனுமதிப்பது இந்தியாவுக்கு கௌரவப் பிரச்சினையாக உள்ளது” ஒரு திட்டத்தை முடிவு செய்யும் உரிமை இலங்கைக்கு உள்ளது என்று கூறும் சீனா, அதில் தலையிடத் தயாரில்லை என்று கூறும் சீனா, கிழக்கு முனையத்தை இந்தியாவின் கையில் இருந்து தட்டி விட்டு இப்போது, வடக்கு மின்திட்ட விடயத்தில் இலங்கை சர்வதேச இணக்கப்பாடுகளை மதிக்க வேண்டும் என்று கூறுவது தான் வேடிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளுக்காக சீனாவும் இந்திய…
-
- 2 replies
- 523 views
-
-
கண்ணுக்கு தெரியாத மகுட நுண்ணியும், கலங்கி நிற்கும் மனித மனங்களும் -விக்கிரமன் 20 Views இருபதாம் நூற்றாண்டின் பெரும் சவாலாக இன்றுவரை மனித குலத்தை கலங்க வைத்துக் கொண்டிருக்கும் மகுட நுண்ணி தொற்று நோய்-19 (கோவிட் -19), மனித ஆற்றல் மீது மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கையை ஆட்டம் காண வைத்துள்ளது என்றால் மிகையாகாது. மனித குல வரலாற்றில் பல்வேறு தொற்று நோய்கள் பல கோடி உயிரிழப்புகளை ஏற்படுத்தியமைக்கான தடயங்கள் இருந்த போதும் தற்போதைய உலகளாவிய தொற்று பற்றிய தகவல்கள் ஒப்பீட்டளவில் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு வருவதும், பகிரப்பட்டு வருவதும் நவீன தொடர்பாடல் உலகில் நோய் தொற்றை தவிர்ப்பதற்கு பதிலாக பீதியை ஏற்படுத்துவதாகவும், எதிர்மறை விளைவுகளை…
-
- 0 replies
- 305 views
-
-
இந்தியாவைத் தென்முனையில் பலவீனப்படுத்த, இதுவரை இலங்கையை மறைமுகமாகப் பயன்படுத்தி வந்தது சீனா. தற்போதோ இந்தியாவின் எல்லையில் இருந்து 50 கி.மீ தொலைவுக்குள்ளாகவே ‘காற்றாலை மின் திட்டம்’ என்ற பெயரில் கால் பதிக்கிறது. இலங்கையின் நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய மூன்று தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை சீனாவின் சினோசர் - இடெக்வின் (Sinosar-Etechwin) நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது ஒரு புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திட்டத்தைப் போன்று தோன்றும். ஆனால், இதன் நோக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது தான். இந்தத் திட்டத்தின் மதிப்பு …
-
- 1 reply
- 439 views
-
-
சாதி கட்சியாக மாறுகிறதா நாம்தமிழர் கட்சி ? நாம்தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பாளர்கள் ஒரே சாதியை சார்ந்தவர்கள் என்பது உண்மையா?
-
- 0 replies
- 842 views
-
-
இலங்கையில் பஸ் பயணத்தைப் புறக்கணித்து சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றுவந்து 60 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவை சேமித்த ஒருவரது செய்தி வைரலாகப் பரவியுள்ளது. எச்.எஸ். பீரிஸ் என்பவர் கொழும்பு 7, விஜேராமய மாவத்தையிலுள்ள ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆய்வுப் பணியகத்தில் தொழில்செய்பவர். வாரத்தில் 05 நாட்களிலும் அவர் வேலைநாட்களில் அலுவலகத்திற்கு வருவதற்காக பஸ் பிரயாணத்தை தவிர்த்து வருகின்றார். குறிப்பாக தனது சைக்கிளிலேயே அவர் வீட்டிலிருந்து அலுவலகத்திற்குப் பயணம் செய்கின்றார்.கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்திலிருந்து ஹொரண – சியம்பலாகொடவில் உள்ள அவரது வீட்டிற்கு சுமார் 21 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அப்படிப் பார்த்தால் தினமும் அவர் 42 கிலோ மீட்…
-
- 23 replies
- 1.9k views
- 1 follower
-
-
#P2P போராட்டம் – நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஊடக சந்திப்பு 25 Views ”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது வரலாறு காணாத வெற்றியைக் கண்டது” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ”வடக்கு கிழக்கு முழுவதும் அதற்குக் கிடைத்த ஆதரவு என்பது தமிழ் சமூகத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சியாகவே இருந்தது. கிழக்கில் இருந்து வடக்கை நோக்கிப் பயணித்த அந்தப் பயணத்திற்கு பாரிய வரவேற்பு கிடைத்தமை சிறப்பானது. உண்மையில் இந்தப் போராட்டம் வெற்றியடைந்தமைக்கு பலரின் ப…
-
- 0 replies
- 390 views
-
-
நான்அவர்களைக் கொன்று விட்டேன்" அமெரிக்க தூதுவர் இப்போது அதிர்ச்சியளிப்பது ஏன்? "நான்அவர்களைக் கொன்று விட்டேன்" என்று சரணடைந்ததவர்கள் பற்றி கோட்டபாய ராஜபக்ச 2012 இல் தன்னிடம் சொன்னதாக அமெரிக்க சிறப்புத் தூதுவர் இப்போது சொல்கிறார். முன்னாள் ஐ.நா துணைச்செயலாளர் ஐநாவுக்கு போதிய உறுதிப்பாடு இல்லை இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு என்கிறார். இவற்றின் பின்னான அரசியல் என்ன? குணா கவியழகன்
-
- 5 replies
- 794 views
-
-
வன்னி: தெருவில் காயும் நெல் February 15, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — பரந்தனிலிருந்து பூநகரிக்குச் செல்லும் வழியில் தினமும் பார்க்கிறேன், வீதி நெடுகவும் ஓரத்தில் நெல்லைக் காயப்போட்டிருக்கிறார்கள் விவசாயிகள். இது இந்த வீதியில் மட்டும்தான் நடக்கிறது என்றில்லை. வன்னியிலுள்ள பெரிய காப்பெற் வீதிகளெங்கும் நடக்கிறது. இந்த ஆண்டுதான் இது ஏதோ புதிதாக நடக்கிறது என்றுமில்லை. ஒவ்வொரு போகத்துக்கும் இதுதான் கதை. காரணம், நெல்லைக் காய வைப்பதற்கான களமேடு இல்லை என்பதே. அங்கொன்று இங்கொன்று எனச் சில களமேடுகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அந்தக் களங்களில் ஒரு நாளைக்கு ஒரு விவசாயியின் நெல்லைப் போட்டு எடுக்கவே போதாது. அதுவும் இவை 2015 க்கு முன்பு நிர்மாணிக்கப்…
-
- 0 replies
- 612 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்தின் ‘கோட் பாதர்” க்கு அதிர்ச்சி : தொடர்ச்சியாக தவறிழைக்கிறார் கோத்தா - மனோ விசேட செவ்வி (நேர்காணல்: ஆர்.ராம்) • விரைவில் உதயமாகிறது ஐக்கிய மக்கள் கூட்டணி • ராஜபக்ஷ குடும்பத்தின் ‘கோட் பாதருக்கு அதிர்ச்சி • 1000 ரூபா சம்பளம்... சிகிச்சை வெற்றி, நோயாளி மரணம் • தமிழ், முஸ்லிம் தரப்புக்களுடன் பொதுவேலைத்திட்டம் • இந்தியாவின் இலங்கை குறித்த கொள்கை தோல்வி பிரதேச சபை உறுப்பினராக கூட அனுபவத்தினைக் கொண்டிருக்காத கோத்தாபய நந்தசேன ராஜபக்ஷ பரிசுத்தமானவர், இராணுவ ஒழுக்கம் கொண்டவர் என்று சிங்கள மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்புக்களை ஏற்படுத்தியபோதும் அரசியல் அனுபவமின்மையால் தவறுக்கு மேல் தவறிழைத்து வருகின்றார் என…
-
- 0 replies
- 267 views
-
-
கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை தேசிய பாடசாலையாக மாற்றும் விவகாரம், பாடசாலை அபிவிருத்தி மற்றும் எங்களின் இன்றைய கல்வி முறை எப்படியான மனிதர்களை உருவாக்குகின்றது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றார் சமூக, பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின். இவ்வளவு பேருக்கும் வழங்கப்படும் கல்வி என்னவென்று சொன்னால் ஏதோவொரு நிறுவனத்தின் கொத்தடிமையாக வாழ்ந்து கொண்டு வாழ்க்கையின் நோக்கத்தையும் பெறுமானத்தையும் இழந்து உழைக்கின்ற மிருகமாக இருந்து கொண்டு தருகிற பணத்துக்கு வேலை செய்ய தான் இந்த கல்வி முறை உள்ளது. ஒரு விழுமியம் மிக்க வாழ்க்கையை கட்டி …
-
- 3 replies
- 837 views
-
-
உண்மைக்கு திரையிட முயலும் குழப்பகரமான சக்திகள்! தயாளன் 2009 க்குப் பின்னர் (மைத்திரியின் ஆட்சிக்காலம் உட்பட) சிங்களத்துக்கெதிராக எந்த ஆணியையுமே புடுங்கமுடியாது என்ற உணர்வு அநேகரிடமும் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் தமிழரின் இறுதித் தேசியத்தலைவர் கஜேந்திரகுமாரே எனப் பிரகடனப்படுத்திய சட்டத்தரணி சுகாஸ் “எங்களது சடலங்களைக் கடந்தே யாழ் கோட்டைக்குள் இராணுவம் புகமுடியும்” எனக் குட்டி யுத்தப் பிரகடனம் செய்தார். இதனை படைகளோ அரசோ,தமிழர்களோ சீரியஸ்யாக எடுக்கவில்லை. முன்னர் குடா நாட்டிலுள்ள 40 ஆயிரம் படையினரையும் சவப்பெட்டியில் அனுப்புவோம் என்றார் இக் கட்சியைச் சேர்ந்த கஜேந்திரன். இறுதி யுத்தத்தின் போது நாட்டிலேயே இவர் இருக்கவில்லை. முன்னாள் போராளிகள் நலன்,வட கிழக…
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கை -இந்திய உறவின் அரசியல் பொறியாக கொழும்பின் கிழக்கு முனையம் மாறியுள்ளதா?! இலங்கை -இந்திய உறவு புவிசார் அரசியல் உறவாகவே நோக்கப்பட வேண்டியது. இலங்கையின் அனைத்து அரசியல் போக்குகளுக்கும் இந்தியா மையப்புள்ளியாகவே உள்ளது. இதனால் இந்தியாவைக் கடந்து பூகோள அரசியல் பெறுமானத்தை நோக்கி இலங்கை நகர்வது கடினமானதாகவே உள்ளது. ஆனாலும் இலங்கை பூகோள அரசியல் முனைப்புக்களை முன்கொண்டு இந்தியாவை கையாள முனைவதும் அது பின்பு நெருக்கடியைத் தருவதுமாக இலங்கையின் அரசியல் இருப்பு காணப்படுகிறது. அத்தகைய குழப்பம் மிக்க அரசியல் களத்திற்குள் இலங்கை இந்திய உறவு நகருவதனைக் காணமுடிகிறது. குறிப்பாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் பொறுத்து ஏற்பட்டுள்ள களத்தை தேடுவதே இக்கட்டுரையின் பிரதா…
-
- 0 replies
- 316 views
-
-
இனப்படுகொலை இப்போதும் நடக்கிறது – சர்ச்சையை ஏற்படுத்திய கஜேந்திரகுமாரின் உரை 3 Views இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரியும், இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனப்படு கொலையை தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துமே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்ததை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘இன்றும் இனப்படுகொலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது எனக்கூறி ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்டபோதிலும் தன்னால் இந்த வார்த்தையை மீளப்பெற முடியாது என கஜே…
-
- 0 replies
- 329 views
-
-
ஐந்து நாட்கள் இத்தனை பாடுபட்டது எதற்காக? | உடனே விழி தமிழா
-
- 0 replies
- 383 views
-
-
சரோஜ் பத்திரன பிபிசி சிங்கள மொழி சேவை தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதான உறுதி மொழியை வழங்கியிருந்தார். அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்த நிலையில், கடந்த 4ம் தேதி இலங்கை சுதந்திர தின நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் அதன் ஒத்துழைப்பு வழங்கியவர்களை சட்டத்திலிருந்து தப்பிச் செல்ல இடமளிக்கப் போவதில்லை என கூறியிருந்தார். அத்துடன், மத்திய வங்கி முறிகள் மோசடி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதா…
-
- 0 replies
- 720 views
-
-
#P2P சிங்கள அரசை அசர வைத்த காரணம் என்ன? இந்த சிவில் அமைப்புகளின் போராட்டம் நடக்க இருக்கிறது என்றவுடன், அரசு, போலீசாரை, நீதி மன்றுக்கு அனுப்பி, அய்யோ, கொரோனா, பாதுகாப்பு இல்லை. மக்கள் சேர்ந்தால், நோய் பரவும் என்று சொல்லி, தடை வாங்கி இருந்தது. இந்த தடையினை, சாணக்கியன் அலுவலகத்தில் சந்தித்த, போலீசார் வாசித்துக் காட்டி, கையில் கொடுத்து விட்டு சென்றனர். ஆனாலும், திட்டமிடப்படி, ஊர்வலம் பொத்துவிலில் ஆரம்பிக்க, வழமைபோல போலீசார் தடையினை போட்டு, சாணக்கியனை இலக்கு வைத்து, உங்களுக்கு தடை உத்தரவினை தந்தோமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மக்கள், அவர்களை கடந்து வெகுதூரம் சென்று விட்டனர். கொழும்பில், கொரோனா இல்லையா, சுதந்திர தினத்துக்கு தடை வாங்கி விட்டீர்களா இல…
-
- 36 replies
- 4.1k views
-
-
ஒருங்கிணையும் தமிழர் தரப்பும் சிறீலங்கா எதிர் கொள்ளும் அழுத்தங்களும் கிந்திய வெளியுறவு கொள்கை தலை குணிந்து நிற்கின்றது😂
-
- 0 replies
- 330 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரதினம் தமிழின அழிப்பு துவங்கிய நாள் - கவிஞர் தீபச்செல்வன். 1948 ஆம் ஆண்டு சிலோன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரம் வழங்கினர். ஆனால் அன்றைய நாள் ஈழத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசால் இன்னொரு காலனித்துவ அரசாக அடிமை கொண்ட நாளாகும். அத்துடன் அந்த நாளில் இருந்தே தமிழின அழிப்பும் துவங்கப்பட்டது. ஈழத் தமிழ் மக்களாகிய எம்மைப் பொறுத்தவரை எம்மை புறக்கணித்த, எம்மை ஒடுக்கிய, எம்மை இன அழிப்பு செய்கின்ற திட்டமிட்ட செயல்களால் இந்த நாள் கரி நாளாகிறது. சிங்கள இனத்திற்கு சுதந்திர தினமாகவும் இன்னொரு இனமாகிய ஈழத் தமிழர்களுக்கு இந்த தினம் துக்க தினமாகவும் அமைகிறது. இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச செயலகங்களில் மாத்திரம் அநாதர…
-
- 0 replies
- 366 views
-
-
பேரினவாத பாசிஸ்டுக்களுக்கு எதிராக பொத்துவில் முதல் பொலிகண்டிவரை: புதிய அரசியலுக்கான நுழைவாசல் 02/06/2021 இனியொரு... இலங்கை வரலாற்றில் மிக நீண்ட காலத்தின் பின்னர், தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களோடு வட கிழக்குத் தமிழர்களும் இணைந்து நடத்தும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி ஒரு புதிய அரசியல் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இப் பேரணியில் முன் வைக்கப்படும் முழக்கங்கள் வழமைக்கு மாறாக இனவாதத்தை நிராகரித்து, சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளைக் கோருகிறது. ஆண்ட தமிழன் என்ற இனவெறி எல்லைகளைக் கடந்து மலையகத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான முழக்கங்களையும், முஸ்லீம் மக்களையும் இணைக்கும் இப் போராட்டம் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு இடையேயான …
-
- 0 replies
- 342 views
-
-
கஞ்சா செடி மிக சிறந்த மூலிகை மருந்து ஞானசார தேரர், கஞ்சா பிரியர் என்பதும், அதனை அடித்து விட்டு, கிரிமினல் வேலைகள் எல்லாம் செய்து, உள்ளுக்கு போய், ஜனாதிபதி மைத்திரி, பொதுமன்னிப்பில் வெளிய வந்தார் என்பதும் தெரிந்த செய்தி. 73 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிட்டிஷ்காரன் தான் கொண்டு வந்த சிகிரடினை மக்கள் அதிகம் பாவிக்க வேண்டும் என்று, சுதேச மக்கள் பாவித்த, கஞ்சாவை தடை செய்து விட்டார்கள். இந்த தடையினை நீக்க வேண்டும். கஞ்சா ஒரு அருமையான மூலிகை மருந்து. பிரிட்டிஷ்காரனை நாட்டில் இருந்து நீக்கி அனுப்பியது போல, அவர்களது, இந்த தடை சட்டத்தினை நீக்காவிடில், சுதந்திரம் கிடைத்தது என்று பேசுவதில் அர்த்தம் இல்லை. எனவே அரசாங்கம் இந்த அருமையான மூலிகை மருந்தின் மீது, உள்ள …
-
- 21 replies
- 2.2k views
- 1 follower
-
-
இந்தியா : உலக அவமானத்தின் சின்னம்! 02/05/2021 இனியொரு... இன்று இந்தியாவின் அவமானச் சின்னமாக டெல்லி காட்சியளிக்கிறது. உலகின் அவமானச் சின்னமாக இந்தியா காட்சி தருகிறது. இந்திய இந்துத்துவ அதிகாரவர்க்கத்திற்கு ஏதோ ஒரு காரணத்திற்காக முட்டுக்கொடுக்கும் மனிதர்களும் இந்த அவமானத்தின் தூதுவர்களாகச் செயற்படுகின்றனர். டெல்லியில் தமது நாளாந்த வாழ்க்கைக்காக மட்டுமல்ல 800 மில்லியன் உலக மக்களின் ஒவ்வொருவரதும் வாழ்விற்காகவும் விவசாயிகள் டெல்லியில் அமைதியாகப் போராட ஆரம்பித்து இப்போது எழுபது நாட்களாகும் நிலையில், இந்திய அரசு டெல்லியில் தனது சொந்த மக்கள் மீது யுத்தத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. விவசாயிகள் போராடும் பகுதிகளில் நீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாராம் இ…
-
- 16 replies
- 2k views
- 1 follower
-