நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
இலங்கைக்கு தேவை ஒரு தர்மன் அல்ல…! September 13, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — வெளிநாடுகளில் குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில் அல்லது வட அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவர்கள் அல்லது புலம்பெயர்ந்த சமூகத்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல் உயர் பதவிகளுக்கு வரும்போது இலங்கையிலும் அவ்வாறு நடைபெறமுடியுமா என்று மக்கள் மத்தியில் பேசப்படுவதும் ஊடகங்களில் அலசப்படுவதும் வழமையாகிவிட்டது. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான பராக் ஒபாமா ஜனாதிபதியாக தெரிவானபோது, இந்திய — ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக வந்தபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் கடந்த வருடம் பிரிட்டிஷ் பிரதமராக வந்தபோது அவ்வாறெல்லாம் பேசப்பட்டது. …
-
- 0 replies
- 662 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சம் தெரிவிக்கின்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை, இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர், இலங்கைக்கு விஜயம் செய்வாக் என்றும் அவரது வருகையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங…
-
- 3 replies
- 329 views
-
-
இலங்கைக்கு பொறுப்புக்கூறலிலிருந்து விலகிச்செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது - சுரேன் சுரேந்திரன் விசேட செவ்வி இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசியல் பிரதிநிதிகள் எவ்வாறான கருத்துக்களை முன்வைத்தாலும் சர்வதேச அரங்கில் இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அதிலிருந்து விலகிச்செல்ல முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஜெனீவாவில் நடைபெற்ற 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? பதில்:- பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும் செயற்பாட்டை முக்கியமானதொரு…
-
- 0 replies
- 295 views
-
-
இலங்கைக்கு முன்னால் உள்ள பாதை ஆபத்தானது-முன்னாள் இந்திய இராஜதந்திரி கே.பி பேபியன் இலங்கைக்கு முன்னால் உள்ள பாதை ஆபத்தானது என முன்னாள் இந்திய இராஜதந்திரி கே.பி பேபியன் தெரிவித்துள்ளார் திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தூதுவர் கே.பி பேபியன் 1964 முதல் 2000 ஆண்டுவரை இந்திய வெளிவிவகார சேவையில் பணியாற்றியவர்இஅக்காலப்பகுதியில இவர் மடகாஸ்கர் இலங்கை அவுஸ்திரியா கனடா உட்பட பல நாடுகளில் பணியாற்றியுள்ளார்இதனது இராஜதந்திர சேவையின் போது மூன்று வருடங்கள் ஈரானில் பணியாற்றிய இவர் ஈரான் புரட்சியை நேரடியாக பார்த்தார்இவளைகுடாவிற்கான இணை செயலாளராக பணியாற்றியவேளை 1990-91 இல் ஈராக்கிலிருந்து 176இ000 இந்தியர்களை வெளியேற்றும் நட…
-
- 0 replies
- 271 views
-
-
இலங்கையின் அழைப்பை ஏற்று, ஜனவரி 20-24, 2012ல், அங்கு மும்மொழித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வைபவத்தில், நானும் என் குழுவினரும் கலந்து கொண்டோம். இலங்கையில் இதுவரை நடந்த, நடந்து வரும் அனைத்து சம்பவங்களையும், போர்க் காலசம்பவங்களையும் பற்றி, நான் கனத்த இதயத்தோடு அறிவேன். போருக்கு பின்னால், அங்கு வாழும் இலங்கை தமிழ் மக்களைச் சென்று பார்த்து, கலந்துரையாடி, அங்குள்ள நிலைமை என்ன என்று அறிந்து வர வேண்டுமென, வெகுநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே, எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, இலங்கைக்கு சென்று வந்தேன். இலங்கை தமிழர் பிரச்னையில், நான் இரண்டு விதமாக பங்கெடுக்க முடியும். ஒன்று, இந்தியாவில் இருந்து கொண்டே அறிக்கை விடுவது, பத்திரிகைகளில் எழுதுவது, பகைமையை…
-
- 11 replies
- 1.5k views
-
-
இலங்கைதீவின் இனப்பிரச்சினையில் தேர்வுகள் அற்றநிலையில் பன்னாட்டு சமூகம் -புரட்சி (தாயகம்)- சிங்கள அரசுகள் காலத்திற்கு காலம்;, தமது தேவைக்கேற்றபடி அமைதித் தீர்விலே மட்டுமே நம்பிக்கை கொண்டவர்களாகவும் கௌதம புத்தரின் அகிம்சை, சமாதானம், நல்லிணக்கம் போன்ற அன்புவழிக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களில் தாம் முதன்மையானவர்களாகவும் உலகத்திற்கு நாடகமாடி வருவது வழமையான ஒன்றாகும். அதாவது தமக்கெதிராக பன்னாட்டு சமூகமோ அல்லது பிராந்திய வல்லரசுகளோ இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான நியாயமான தீர்வினை முன்வைக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் போதும், உள்நாட்டிலே அரசியல் சிக்கல்கள் கொந்தளிப்புக்கள் ஏற்படும்போதும் அல்லது பாரிய பின்னடைவுகளை படைத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேர்தல் என்றாலே... விளம்பரங்களும், சுவரொட்டிகளும்... "கட் அவுட்களும்" முக்கிய இடத்தைப் பிடிக்கும். உங்கள் கண்ணில் பட்ட... விளம்பரங்களையும் பதியுங்கள்.
-
- 45 replies
- 4.5k views
-
-
இலங்கைத் தமிழர் அரசியலில் அடுத்தது என்ன....? இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களின் வரலாற்றிலே இன்று உள்ளதைப் போன்று முன்னர் என்றுமே நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருந்ததில்லை. இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்த மூன்று தசாப்தகால அகிம்சைப் போராட்டங்களும் அவற்றுக்குப் பின்னரான மூன்று தசாப்தங்களில் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டங்களும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. போர் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கம் முன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து வந்த நாட்களில் பல உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகளில் இலங்கைத் தமிழ் மக…
-
- 1 reply
- 540 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னை தமிழகக் கட்சி அரசியலா? தா. பாண்டியன் இலங்கையில் நடந்து முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படும் போர், இரண்டு நாடுகளுக்கிடையில் நடந்த போர் அல்ல. முழுக்குடியுரிமை பெற்ற தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிராக, பல நாட்டுப் படை, போர்க்கருவிகள், அரசியல், நிதியுதவியுடன், அரசு அதிகாரத்தை கையில் வைத்துள்ள இலங்கை அரசு நடத்திய கொடூரமான போர் என்பதை - மீண்டும் நினைவுறுத்தும் அவசியம் எழுந்துள்ளது. 2009-மே மாதத்தில் தமிழ்ப் போராளிகளை முற்றாக அழித்து ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதன் மகிழ்ச்சிக்காக விழாவையும் கொண்டாடிக் கொண்டது. இந்திய அரசும் இதைப் பாராட்டி, போரினால் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்து கொள்ள நிதியுதவி செய்வதாக அறிவித்தது. தொடர்ந்தும் பல்…
-
- 0 replies
- 548 views
-
-
சூரியசேகரன் என்னும் பத்திரிகையாளர் தனது கட்டுரை ஒன்றில், இலங்கைத் தமிழர்கள், மெது மெதுவாக ஆனால் உறுதியாக, தமது உரிமைகளை சிங்கள மக்களுடன் இணைத்து வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இது தவிர இப்போதைய நிலையில் வேறு வழியில்லை. இன்று எழுதுகிறார். வேலையில் ஒரு சிங்களவர் இணைந்துள்ளார். இதோ உனது நாட்டுக்காரர் என்றார்.... பாஸ்... புதிதாக இணைந்த அவரை அறிமுகப்படுத்தும் போது. நான் ஒருபோதும் பிறந்த நாட்டினை விட்டுக் கொடுப்பதில்லை. அரசியல் வாதிகளின் தவறுக்காக, இலவச கல்வியும், மருத்துவமும் தந்து வளர்த்த நாட்டினை விட்டு விட முடியாது என்பதே எனது கொள்கை. ஆகவே நான் இலங்கையை சேர்ந்தவன் என்று சொல்லி வைத்திருப்பதால் பாஸ் அறிமுகம் அவ்வாறு அமைந்தது. பாஸ்சுக்கு சிங்க…
-
- 0 replies
- 390 views
-
-
‘இந்தியா - சிறீலங்கா சதுரங்க ஆட்டத்தில் தமிழர்கள் மீண்டும் பகடைக் காய்களா?’ என கடந்த இதழில், இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் குறித்து எமது சந்தேகத்தை எழுப்பியிருந்தோம். காரணம், ஜெனீவாவில் அமெரிக்கப் பிரேரணையை ஆதரித்து இந்தியா வாக்களித்ததன் பின்னர், இந்தியாவின் வருகையாளர்களை வேண்டத்தகாதவர்களாகவே சிறீலங்கா நோக்கும் நிலை இருந்தது. அவ்வாறான கருத்துக்கள் தான் சிறீலங்கா உயர்மட்டத் தலைவர்களின் குரல்களிலும் ஒலித்தது. ஆனால், மாறாக இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் வருகையை சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் (தீவிர இனவாதிகளைத்தவிர) மகிழ்ச்சியுடன் வரவேற்க முனைந்தது மட்டுமல்ல, தற்போதைய காலகட்டத்தில் இந்தியக் குழுவினரின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக…
-
- 0 replies
- 732 views
-
-
இலங்கைப் பொருளாதார நெருக்கடி – 50 ஆண்டு தவறின் விளைவு March 15, 2022 — கருணாகரன் — நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, சமையல் எரிவாயுவில் தொடங்கி மின்வெட்டு வரை வந்திருக்கிறது. எரிபொருட்களை நிரப்புவதற்கு நீண்ட நேரம், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுப்பாடற்று விற்கப்படுகின்றன. பொதுவாகவே கட்டுப்பாடற்ற சந்தை அல்லது கட்டுப்பாடற்ற நிலை உருவாகி விட்டது. அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இதைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது – “ஐம்பது ஆண்டுகாலத் தவறுக்குத்தான் இப்பொழுது கூட்டுத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் இதை விளங்கிக் கொள்ள யார…
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்? ஆர்.ராமகுமார் தமிழில்: வ.ரங்காசாரி கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது இலங்கைப் பொருளாதாரம். இப்போதைய நெருக்கடிக்குக் காரணங்கள் என்ன, இத்தகு நிலையை நோக்கி அதைத் தள்ளியவர்கள் யார்? இதையெல்லாம் அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். இந்த நெருக்கடிக்கான மூல காரணத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இலங்கை காலனியாக இருந்த காலகட்டத்திலிருந்தும், உள்நாட்டுப் போருக்குப் பிறகும்கூட நாட்டின் வளர்ச்சி முயற்சிகளில் நடந்த தவறுகள் வரையிலும் எழுதலாம் என்றாலும், நம்முடைய தேவைகளுக்காக, கடந்த பத்தாண்டுகளில் இலங்கை அரசு எடுத்த முடிவுகள் - நடந்த சம்பவங்கள் பற்றி மட்டும் அதிகக் கவனம் செலுத்துவோம். 21ஆம் நூற்ற…
-
- 0 replies
- 338 views
-
-
இலங்கையினை குழப்பிய ஸ்டாலினின் அறிக்கை இந்தியா, ஐநா சபையில், இலங்கை பிரேரணை மீது, எந்த விதமாக நடந்து கொள்ளும் என்று இன்னமும் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், இலங்கை வெளியுறவு செயலர், இந்தியா தமக்கு, ஆதரவு தரும் என்று அறிவித்தது எங்கனம் என்று கேள்வி கேட்டுள்ள ஸ்டாலின், 9 கோடி தமிழர்கள், இந்தியா, இலங்கையில் உள்ள தமிழர்களை கை விட்டால் மன்னிக்க மாட்டார்கள் என்றும், பிரதமர் மோடி உறுதியான தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று வந்த போதும், மோடி, கோத்தபாயவுடன் பேசிய போதும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படாத ஒரு முக்கிய முடிவினை, இலங்கை வெளியுறவு செயலர் அறிவிப்பது எங்கனம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்…
-
- 0 replies
- 695 views
-
-
இலங்கையின் அவலநிலைக்கு... சிங்களத் தலைவர்களின், இந்திய எதிர்ப்புவாதம்தான் காரணமா?
-
- 0 replies
- 213 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எந்தவொரு சர்வதேச நாடாலும் தீர்வை வழங்க முடியாது - சம்பிக்க எந்தவொரு வெளிநாடுகளாலும் இலங்கைப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முடியாது. மறப்போம் மன்னிப்போம் என எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பதே யதார்த்தமானதாகும் என பெருநகரங்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தேசிய அரசாங்கமொன்று அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தற்போதும் அரசாங்கத்திற்கு உள்ளதா? பதில்:- ஆம் கேள்வி:- தேசிய அரசாங்கத்திற்கான அவசியம் என்ன? பதில்:- நாட்டில் ஸ்திரமான அரசாங்கமொன்று அமைய வேண்டும். சிறந்த கொள்கையைக் கொண்ட அரசாங…
-
- 0 replies
- 746 views
-
-
Published by T. Saranya on 2022-03-25 15:02:53 தற்போதைய மலினமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம் என்று கேட்டால் கொரோனாவையும் உக்ரைன் போரையும் காரணம் காட்டுவார்கள். உலகம் எங்கும் கொரோனா தாக்கம் ஏற்பட்டிருக்கும் போது ஏனைய நாடுகளில் ஏற்படாத பொருளாதார வீழ்ச்சி இலங்கையில் எவ்வாறு ஏற்பட்டது? கேட்கிறவன் கேனையன் என்றால் எலி ஏரோபிளேன் ஓட்டுமாம். வீடாக இருந்தால் என்ன நாடாக இருந்தால் என்ன கடனில் மூழ்கிருப்போர் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டுமானால் திறமையான இல்லத்தரசிகள் பயன்படுத்தும் அடிப்படை பொருளாதார உபாயத்தை பயன்படுத்த வேண்டும். அதாவது வருமானத்தை மேலும் மேலும் அதிகரிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் செலவுகளை கட்டுப்படுத்துவதே வீட்டையும் நாட்டைய…
-
- 0 replies
- 181 views
-
-
எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05 நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடுபட்டுப் போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). …
-
- 0 replies
- 577 views
-
-
Published By: RAJEEBAN 06 APR, 2024 | 04:45 PM இலங்கை அதன் கடன்களை மீள செலுத்துவதை 2028ம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த இறுதிபேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுப்பதற்காக ஜப்பான் உட்பட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது. கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன, அடுத்த சில வாரங்களில் முழுமையான அறிவிப்பு வெளியாகும் என இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயங்களிற்கான ஆலோசகர் சாகலரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை கடன்களை…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
இலங்கையின் கடன்மறுசீரமைப்பு சீனாவின் மௌனத்தால் தாமதம்? இலங்கை அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் மற்றும் ஊழல் மோசடிகள் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மீட்டெழமுடியாத வகையில் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது. குறிப்பாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வெறுமையாகிவிட்ட நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதமாகின்றபோது 70.2 சதவீதத்தினைத் தொட்டு விட்டது. இதனால் உள்நாட்டில், அத்தியாவசியப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துவகைப் பொருட்களின் விலைகளும் உச்சத்தினைத் தொட்டுள்ளன. இதனால் நாட்டில் 70 சதவீதமானவர்கள் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். அதிகமானவர்கள் இருவேளை உணவையே உட்கொள்வதாகவும், கர்ப்பிணித்தாய்மார்கள், பெண்கள், சிறுவர்கள் போசாக்கி…
-
- 0 replies
- 176 views
-
-
இலங்கையின் சகல அரசியல் தலைவர்களுடனும் நட்புறவைப்பேணவிரும்பும் இந்தியா தென்னிந்திய நகரமான பெங்களுரில் இந்தியாவின் பிரபல ஆங்கில தினசரிகளில் ஒன்றான ' இந்து' வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்தவாரம் சென்றிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் உறவுகளைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாகத் தோன்றுகின்ற சூழ்நிலையில், புதுடில்லி இலங்கைத் தலைவர்களில் தனது விருப்புக்குரியவர் என்று யாருமில்லை என்று அறிகுறி காட்டியிருப்பதுடன் சகல தலைவர்களுடனும் நட்புரிமையைப் பேணும் கொள்கையொன்றை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ராஜபக்சவின் அரசியல் எதிரியான முன்னாள் ஜனாதிபதி சந்தி…
-
- 0 replies
- 389 views
-
-
இலங்கையின் சுதந்திர தினமும் தமிழ் மக்களின் பேரெழுச்சியும்.! - நா.யோகேந்திரநாதன் எதிர்வரும் பெப்ரவரி 4ம் நாள் பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து 1957ம் ஆண்டு தொட்டு தமிழ் மக்கள் சுதந்திர தினத்தைப் பகிஷ்கரித்து வருகின்றனர். திருமலையில் 1957ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம்நாள் ஏற்றப்பட்டிருந்த இலங்கையின் தேசியக் கொடியை இறக்க முயன்ற திருமலை நடராசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் 1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு இலங்கையின் தேசிய தினம் தமிழ் மக்களால் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு துக்க தினமாகக் கொண்டாடப்பட…
-
- 0 replies
- 333 views
-
-
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்களும் மட்டக்களப்பு மக்களும் September 19, 2024 மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் எப்போதுமே தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள். தமிழரின் விடுதலை போராட்டத்திற்காக பல்லாயிரம் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்தவர்கள். போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய உணர்வு இன்னும் அழிந்துபோகவில்லை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் பறைசாற்றியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா அம்மான், பிள்ளையான் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த வியாழேந்திரன் போன்றோர் அரசுடன் இணைந்தாலும் அவர்களுக்கும் மக்களுக்குமான உறவு பற்றாக்குறையாகவே காணபப்ட…
-
- 0 replies
- 334 views
-
-
இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு. ரஸ்ஸியா: ராணுவ ரீதியிலான உதவிகள் : புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இலங்கைக்கு பெருமளவு உதவிகளை ரஸ்ஸியா செய்துவந்திருக்கிறது. ஆயுதங்கள் , வெடிமருந்துகள், ராணுவ வாகனங்கள், விமானப்படைக்கான மிகையொலி விமானங்கள், அன்டனோவ் துருப்புக்காவி மற்றும் பொருட்களையேற்றும் சரக்கு விமானங்கள், தாக்குதல் மற்றும் துருப்புக்காவி உலங்குவானூர்திகள், பிரதான யுத்தத் தாங்கிகள், துருப்புக்காவி வாகனங்கள், நீண்டதூர ஆட்டிலெறிகள் என்று ஒரு பாரிய ராணுவ உபகரண உதவிகளை ரஸ்ஸியா வழங்கியிருக்கிறது. மேலும் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் களமுனைப் பயிற்சிகள் என்றும், யுத்த தந்திரோபாயங்கள், களமுனை நகர்வு ஆலோசனைகள் என…
-
- 477 replies
- 30.5k views
- 1 follower
-
-
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து அமெரிக்க முன்னாள் தூதுவர் தெரிவிப்பது என்ன? இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளையோ அல்லது எதிர்கால நெருக்கடிகளையோ தீர்ப்பதற்கான அமெரிக்காவினதும் அல்லது வேறு எந்த வெளிநாட்டினதும் திறன் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது என இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சோன் டொனெலி தெரிவித்துள்ளார் வோசிங்டன் டைம்ஸிற்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர்இலங்கையின் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்கு முன்னணியில் நின்று டிரம்ப் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டால் அது எனக்கு ஆச்சரியமளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார் வோசிங்டன் டைம்ஸ் பேட்டியின் தமிழாக்கம் வீரகேசரி இணையம் கேள்வி- இலங்கை உள்நாட்டு யுத்தத்திலிருந்த…
-
- 0 replies
- 478 views
-