நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
கொரோனோ: நீதியின் எல்லைக்கோடுகள் பட மூலம், @PARLNetworkSL மனிதர்களின் இருத்தலின் நிலையாமையை அறிவித்த பல சிந்தனைப் பள்ளிகளும், தத்துவ மரபுகளும் பசியை `பிணி` என்று விழித்தன. அவை சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பசிப்பிணியைத் தீர்ப்பது மேலான அறவாழ்வாக தம் அன்றாடத்துடன் இணைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் எழுந்த மகத்தான இலக்கியங்கள் பசியை நெருப்புடன் ஒப்பிட்டன. அடிவயிற்றிலும் நெஞ்சிலும் எரியும் நெருப்பாகப் பசி உருவகிக்கப்படுகின்றது. தமிழில் எழுந்த பேரிலக்கியமான மணிமேகலை “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்கிறது. மணிமேகலையின் கதைப்புனைவில் மண்மேகலை என்னும் பெளத்த துறவி தேவகணங்களான தீவதிலகை, மணிமேகலா போன்றவற்றிடம் இருந்து ‘அட்சய பாத்திரம்’ என்பதைப் பெற்று பசித்திருப்…
-
- 1 reply
- 725 views
-
-
உலகமே கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் மிரண்டு போயிருக்கும் நிலையில், கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவர் என்றாலும் அவர்களது உடல்களை தகனம்தான் செய்ய வேண்டுமென்றும், எவர் உடலையும் அடக்கம் செய்ய கூடாது என்றும், மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியது. பிறகு, மத ரீதியிலான பிரச்சனையாக இந்த விவகாரம் மாறியதால், அந்த அறிக்கை திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை எப்படி நடத்த வேண்டும், அடக்கம் செய்யப்பட்ட நோயாளியின் உடலிலிருந்து வைரஸ் பரவுமா, அல்லது உடல் தகனம் செய்யப்படும்போது வைரஸ் முற்றிலும் அழிந்துவிடுமா, இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிற…
-
- 0 replies
- 242 views
-
-
வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்படுகிறது. அந்த அளவுக்கு, அவற்றிடமிருந்து பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளன. பீட்டர் டஸ்ஸாக் என்ற சீன ஆய்வாளர், கடந்த 15 ஆண்டுகளாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்றுநோய்கள் குறித்து ஆய்வுசெய்துகொண்டிருக்கிறார். தான் செய்த ஆய்வுகளின் அடிப்படையில், "கொரோனா வைரஸுக்கான ஆதாரம் என்னவென்று 100 சதவிகிதம் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அது சைனீஸ் ஹார்ஸ்ஷூ (Chinese horseshoe bat) என்ற ஒருவகை வௌவால்களிடமிருந்துதான் பரவியது என்பதற்கு மிகவும் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று கூறியுள்ளார். வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்பட்டுவருகி…
-
- 1 reply
- 317 views
-
-
தேவையற்ற அச்சம் நோய் பரவலை தீவிரப்படுத்தும்: து. வரதராஜா எச்சரிக்கை சுய பாதுகாப்பின் மூலமே கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும் என்று வன்னியில் இறுதி யுத்தத்தின்போது பணியாற்றிய வைத்திய கலாநிதி து. வரதராஜா தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தாக்கம் உலகம் தழுவிய ரீதியில் மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று, மற்றும் இனப்படுகொலைக்கான நீதி குறித்து மருத்துவர் து. வரதராஜா வழங்கிய நேர்காணலைத் தருகிறோம். -ஆசிரியர். உலக சமூகத்தை முடக்கியுள்ள கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் பற்றி மக்களுக்கு விளக்க முடியுமா? தற்பொழுது உலக மக்களால் பேசப்படுகின்ற ஒரு கொடிய நோயாக கொரோனா வைரஸ் மாறி இருக்கின்றது. சீனாவில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரசானது அந் நா…
-
- 0 replies
- 383 views
-
-
#இதுவெறுமனேஒருசிறுகதைஅல்ல. #இன்றையநிலைமையைஆதாரமாகக்கொண்டுஎழுதப்பட்டஒருசிறுகதை. #இந்தக்கதையைவாசித்துக்கொண்டுபோகும்பொழுதுஉங்களுக்குசிரிப்புவரலாம். #நன்றாக_சிரியுங்கள். #கொரோனாவும்_மாரிமுத்துவும்* நான் கோரோனா கிருமி பேசுகிறேன். இப்பொழுது மாரிமுத்துவின் தொண்டைக்குள் இருக்கிறேன். நான் இங்கு வந்து இரண்டு மணித்தியாலங்கள் ஆகிவிட்டன. மாரிமுத்துவின் உடலில் வெற்றிக்கரமாக நுழைந்த கடைசி கிருமி நான். நான் உள்ளுக்குள் வந்த கதையைச் சொல்லிவிட நினைக்கிறேன். இன்று சரியாக மதியம் 12.35க்கு ஓர் உணவகத்தில் மாரிமுத்து "பரோட்டா" சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இன்று இரவு ஊரடங்கு சட்டம் பிரப்பிக்கப்படலாம் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் சற்ற…
-
- 0 replies
- 451 views
-
-
சீனாவில் கொவிட் – 19 நெருக்கடியின் பரிமாணம் குறைவடைந்து கொண்டுவரும் நிலையில், சீன அரசாங்கம் அந்தத் தொற்றுநோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கும் ஏனைய நாடுகளின் தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அதன் கவனத்தை இப்போது திருப்பியிருக்கிறது. சீனாவில் அண்மைய வாரங்களில் உள்நாட்டில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அத்துடன் சமூக மட்டத்தில் புதிதாகத் தொற்று ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் அதன் நிபுணத்துவத்தையும், அனுபவங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்திருக்கிறது. பல நாடுகளுக்கு விமானங்கள் நிறைய மருத்துவ பரிசோதனைக் கருவிகளையும், முகக்கவசங்களையும், க…
-
- 2 replies
- 534 views
-
-
மருத்துவர்கள் உயிர்களத்தின் போராளிகள்: தீபச்செல்வன் கொரோனா நோய் ஏற்படுத்திய உயிரழிவுகளின் மத்தியில், மருத்துவம் செய்வதென்பது போர் களம் ஒன்றின் நடுவே நிற்பதைப் போல இருப்பதாக இத்தாலிய மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடு. யுத்தங்களின் போதும், கொள்ளை நோய்களின் போதும் மருத்துவர்கள் ஆற்றும் உயிர்காக்கும் பணி என்பது மிகவும் மகத்துவமானது. கொரோனாவின் அச்சுறுத்தல் உலகை மிரட்டுகின்ற தருணத்தில், மருத்துவர்களின் இடையறாத பணிகள் இப் பூமியை மீட்டுவிடும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. உலகமெங்கும் உள்ள மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போர் புரிந்தபடியிருக்கும் சூழலில் நமக்கு முள்ளிவாய்க்கால் யுத்தம் கண் முன்னே வருக…
-
- 1 reply
- 360 views
-
-
கொரோனா வைரசும் உள்ளூர் அறிவு முறைமைகள் குறித்த அக்கறைகளும் – கௌரீஸ்வரன்… March 29, 2020 இலங்கைத்தீவில் வாழும் மனிதர்களுக்கு அனர்த்தங்கள் புதியவையல்ல வரலாற்றில் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்த அனுபவங்கள் பெற்றவர்கள். இயற்கையான அனர்த்தங்கள் ஏற்பட்ட போதும் , செயற்கையான அனர்த்தங்கள் உருவான போதும் பாரதூரமான பட்டினியை எதிர்கொள்ளாததுடன் அதனால் வரும் போசாக்கின்மையால் பாதிக்கப்படாதவர்களாகவும் இலங்கைத் தீவின் மக்கள் கடந்த கால வரலாற்றில் இனங்காணப்பட்டுள்ளனர். தசாப்தகால உள்நாட்டுப் போர் நடைபெற்ற உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் போசாக்கின்மையால் பாதிக்கப்படாத மக்களைக் கொண்ட நாடாக இலங்கைத் தீவு தன்னை அடையாளப்படுத்தியது. இவ்வாறு கடந்த காலத்தி…
-
- 3 replies
- 345 views
-
-
-
- 1 reply
- 390 views
-
-
கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்கொள்வது எப்படி? மின்னம்பலம் சத்குரு ஜகி வாசுதேவ் கொரோனா வைரஸ் பற்றி சத்குரு சில காலங்களில் செயல்படுவதைக் காட்டிலும், செயல்படாமல் இருப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இது, அதைப்போன்ற ஒரு காலம். பணிரீதியாக, குறிப்பாக பயணரீதியாக நீங்கள் எவ்வளவு குறைவாகச் செயல்படுகிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனென்றால், நாம் பல தொற்று நோய்களைக் கண்டிருக்கிறோம். மலேரியா தொற்று மற்றும் மிகச் சமீப காலத்தில் டெங்கு, சிக்குன் குனியா தொற்றுகளால் இந்தியா பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கிறது. இந்த மூன்று தொற்று நோய்களுக்குமே, கொசுக்கள் தொற்று பரப்பிகளாக இருக்கின்றன. ஆகவே நாம் எப்போதுமே கொசுக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்…
-
- 0 replies
- 304 views
-
-
-
- 0 replies
- 311 views
-
-
கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள் அலறல்கள் கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும், *இன்னொரு பக்கம் ஆச்சரியமானது. ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு சொல்கின்றது*1950க்கு பின் வேகமாக மாறிய உலகிது. அதுவும் 1990க்கு பின் பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவுக்கு நிலைமை மாறியது.குறிப்பாக இத்தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை. அவர்களின் சிந்தனையும் மனமும் குணமும் பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருந்ததுஉலகின் உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது உலகம், அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் …
-
- 0 replies
- 386 views
-
-
ஊர்கூடித் தேரிழுப்போம் கொரோனா வைரஸ் அச்சம், இலங்கையெங்கும் பரவியுள்ளது. அச்சத்துக்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால், இன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளில், உண்மை குறைவாகவும் பொய் அதிகமாகவும் உள்ளன. எதை நம்புவது, எதை நம்பக் கூடாது என்பதைப் பிரித்தறியும் வாய்பற்ற நிலையே தொடருகிறது. ஏராளமான தவறான தகவல்கள் குறிப்பாக, எமது அலைபேசிகளை நிறைக்கின்றன. இவை, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்குகின்றன. முதலாவது, கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்தும் தொற்றுக்கான தீர்வு குறித்தும் பரப்பப்படும் செய்திகள், அறிவியலுக்கு முரணாக இருக்கின்றன. இவ்வாறான தீர்வுகளை மக்கள் பின்பற்றுமிடத்து, ஏற்படும் தீமைகள் அதிகம். எனவே, இவை சமூகத்தில் ஏற்படுத்தவுள்ள பாதிப்புகளின் தீவிரத்த…
-
- 0 replies
- 407 views
-
-
கொரோனா வைரஸ்: இளம் வயதினருக்கு இருக்கும் ஆபத்துகள் என்ன? Getty Images நீங்கள் வயது முதிர்ந்தவராக இருந்தால், கொரோனா வைரஸால் உங்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று சொல்ல முடியாது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "கொரோனா வைரஸ் வயதானவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களை மட்டும்தான் தாக்கும் என்றில்லை" என பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் எம்.பி-யும் மருத்துவருமான டாக்டர் ரோசேனா அல்லின்-கான் பிபிசியிடம் தெரிவித்தார். பிரிட்டனில் இந்த வைரஸ் தொற்றால் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 30 மற்…
-
- 0 replies
- 465 views
-
-
தற்போது கொரோனாவால் முழு உலகமே பாதிக்கப்பட்டு பயந்து அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.சைனாவின் வுகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பரவிக்கொண்டிருக்கிறது.அரசாங்கம் முழு மூச்சுடன் வைரஸ் மேலும் பரவுதலை தடுக்கமுயன்றுகொண்டிருக்கிறது இதற்கு நாம் ஒத்துளைப்புதரும்வகையில் எம்மை வீடுகளில் தனிமைப்படுத்திவைத்திருப்பது மிக அவசியம் ஏனென்றால் இந்த வைரஸ் எம்மூடாகவே அடுத்தவர்களுக்கு பரவும்தன்மையைக்கொண்டது எமது அலட்சியப்போக்கால் எம் வீடு மாத்திரமல்ல ஒரு ஊரே இன் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவே இதுபோன்ற அவசரகால நிலமையின்போது சமயவழிபாடுகள் போன்றவற்றை வீட்டில் இருந்தே நாம் கடற்பிடிப்பதும் பொது இடங்களில் கூடாமல் இருப்பதும…
-
- 0 replies
- 622 views
-
-
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் தற்போதைய நிலை, சர்வதேச நாடுகள் ஈழத் தமிழ் அகதிகளைக் கையாளும் விதம், சி.ஏ.ஏ விவகாரம், முகாம்வாழ் ஈழத் தமிழ் மக்களின் நிலை என அகதிகள் ஆய்வாளர் இரவிபாகினியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்... இரவிபாகினி ஜெயநாதன். இலண்டனில் வசித்துவரும் இரவிபாகினி ஜெயநாதன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இனப்படுகொலை நடந்த காலகட்டத்தில் தமிழகத்துக்குத் தஞ்சம் கோரி வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில் இரவிபாகினியின் குடும்பமும் ஒன்று. தன் பள்ளிப்படிப்பையும் இளங்கலை பட்டப்படிப்பையும் தமிழகத்தில் முடித்தவர், முதுகலைப் படிப்பை லண்டனில் முடித்திருக்கிறார். ``2009 போரின் முடிவுக்குப் பின்னான ஈழத்தமிழர்களின் தஞ்சக்கோரிக்கைகள் மேலை நாடுகளில் எப்படி அணுகப்பட…
-
- 0 replies
- 458 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% - 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர். கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பொதுவான இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது. உலகளவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 4 சதவீதமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தரவுகள் கூறுகின்றன. பிரிட்டனில் மார்ச் 23ஆம் தேதிவரை இறப்பு விகிதம் 5 சதவீதமாக இருந்தது. ஏனெனில், அனைத்து தொற்றுகளும் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுவதில்லை. யார் யாருக்கெல்லாம் பரிசோதனை செய்யவேண்டும் என்ற முடிவை அந்தந்த நாடுகளே எடுக்கின்றன. அதனால், ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அந்நா…
-
- 0 replies
- 256 views
-
-
-
- 0 replies
- 947 views
-
-
கொரோனா தொற்று நோயும் ; உயிர் கொல்லி அச்சமும்.! உலகெங்கிலும் உள்ள வல்லரசு நாடுகள் முதல் அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இன்று பேசுபொருள் அச்சுறுத்தலாய் காணப்படும் கொரோனா வைரஸ் கோவிட்-19 ( COVID -19) தொற்று நோய். இது மிகப் பெரும் பாதிப்பினை மக்களின் உடலிலும் ,உளத்திலும் ஏற்படுத்தி வருகிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையில், முந்தைய 24 மணி நேரத்தில் உலகில் 32 ஆயிரம் பேருக்கு இந்த நோய் இருப்பது புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் 1344 பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் நோய் பரவும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மறு புறம் கொரோனா குறித்தவதந்திகளும் வலம் வந்து க…
-
- 0 replies
- 627 views
-
-
கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை ஆர். அபிலாஷ் டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப்பார்த்தேன் - “நாளைக்கே உலகம் அழிஞ்சிருங்க” என கையை உதறும் டாக்டர்களைப் போலஅன்றி தெளிவாக நிதானமாகப் பேசுகிறார். பவித்ரா அமெரிக்காவில் பலவருடங்களாககொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர். அவரிடம்சமூகவலைதளங்கள் வழி மக்களிடம் பரவி வரும் பல குழப்பங்கள் குறித்து கேள்விகள் பலகேட்டார்கள். அவற்றில் ஒன்று கொரோனா எந்தளவுக்கு ஆபத்தானது என்பது. அதற்கு அவர்சொன்ன பதில் முக்கியமாகப் பட்டது: 1) கொரோனா என்பது ஒரு புதிய வைரஸ் அல்ல. Covid-19 எனும் இந்த வைரஸானது ஏற்கனவே(70 வருடங்கள…
-
- 1 reply
- 669 views
-
-
கொரோனா வைரஸ் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இவ்வுலகத்தை பேரழிவுக்கு உள்ளாக்கி இருக்கின்றது. சுமார் உலகின் 175 க்கு மேற்பட்ட நாடுகளில் இதன் தாக்கம் வேகமாக பரவியுள்ளது . இன்றைய திகதி வரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதன் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதுடன் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மரணித்தும் உள்ளனர். குறிப்பாக சீனா, இத்தாலி ,ஈரான், ஸ்பைன் போன்ற நாடுகளில் இதன் தாக்கம் மிகப்பெரும் வீரியம் கொண்டுள்ளது. தினந்தோறும் பிணக் காடாய் இந்நாடுகள் காட்சியளிக்கின்றன. நாளாந்தம் நூற்றுக்கணக்கான சடலங்களை புதைக்க முடியாமல் எரித்து வருகின்றனர். உறவினர்களிடம் கூட சடலங்கள் கையளிக்கப் படாமல் …
-
- 2 replies
- 448 views
-
-
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனும் விடாது கறுப்பு ஆர். அபிலாஷ் நான் இங்கு அபத்தம் எனக் கூறுவது தனிநபர் சுகாதார நடவடிக்கைகளை அல்ல; கொரோனாவந்தாலும் வராவிட்டாலும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது, ஒரே துண்டை பலர்பயன்படுத்தாமல் இருப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது பொதுவாக நல்லதே. ஆனால்மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் மாதக்கணக்கில் இருந்தாக வேண்டும் என நமதுமருத்துவர்கள் சிலர் பரிந்துரைப்பது சுத்த பேத்தல் என்பேன். ஒன்று இது நடைமுறையில் ஏற்புடையது அல்ல. மக்கள் பரஸ்பரம் சந்திக்காமல் பேசாமல் நீண்டநாட்கள் இருந்தால் அது கடுமையான உளச்சிக்கல்களை ஏற்படுத்தும். சமூக இணக்கத்தைஒழிக்கும். அதன் விளைவுகள் மிக மோசமாக இருக…
-
- 0 replies
- 293 views
-
-
இன்று நல்லூரடியில் காலையில் அண்ணனின் மகனுக்கு திருமணம். கடந்த 2 மாதங்களாக ஓடி திரிந்து எல்லா அலுவல்களை முடித்து , பட்டு முதல் பாட்டு வரை தெரிவும் செய்து முருக்கமரம் நட்டு, பொன்னும் உருக்கி, விரதம் இருந்து, மேக்கப் வரை போன நேரத்தில் வந்தது இந்த கொரோனா ஊரடங்கு. கல்யாண மண்டபத்தில் தொங்கிய இரண்டு வாழைத்தாரும் இப்போ வீட்டில் தொங்குது.. பெண் வீட்டில் இருந்து 10 பேர், பையன் வீட்டில் இருந்து 10 பேர் ஆகா மொத்தம் 20 பேர் கூட கல்யாணம் நடத்தலாம் என்று உத்தரவு. பெண் வீட்டு அழைப்புக்கு வண்டியோடு செல்ல விசேஷ அனுமதி. வேலிகளுக்குள்ளாகவும், ஒழுங்கைகளுக்குள்ளாகவும் இன்னும் ஒரு ஐந்தோ, ஆறோ குடும்பங்கள் வந்து சேர வாய்ப்புண்டு. வாங்கின நல்ல சாரி, நகைகளை போட முடியவில்லையே என்று பெண…
-
- 1 reply
- 1k views
-
-
நான் ஒரு வாரத்துக்கு முன்னரே தேவையான பொருட்கள் வாங்கி வைத்தாயிற்று. சாதாரணமாகவே மிளகாய்த்தூள், அரிசிமா, அரிசி, பலசரக்குப்பொருட்கள் என்பன ஒரு மாதத்துக்குத் தேவையானவை என் வீட்டில் இருந்துகொண்டே இருக்கும். டொய்லட் பேப்பரும் மற்றைய பொருட்களுக்கு வாங்கியாகிவிட்டது. ஆனால் சம்போவும் லிக்குவிட் சோப் மட்டும் இருக்கு என்று எண்ணினால் அவை ஒவ்வொன்று தான் இருக்கு. சரி வெங்காயமும் வாங்கத்தான் வேண்டும். சுக்குக்கோப்பி எமக்கு நான் தான் செய்வது. மனிசன் சீரகத்துக்குப் பதில் அதுபோல் இருந்த ஒன்றை வாங்கிவர நேற்று இரவு வறுப்பதற்காகப் பிரித்தால் அந்த மணமே அது சீரகம் இல்லை என்று கூற, அதன்பின்தான் பார்த்தால் அது வேறொன்று. சரி நாளை வாங்கி வறுப்போம் என்று எண்ணி இன்று காலை எழுந்து VP& SON'S இக்…
-
- 25 replies
- 2.8k views
-
-
மருத்துவமனையில் இடமின்மையால் தேவாலயத்திற்குள் பிரதே பெட்டிகள்- இத்தாலியில் செய்தியாளரின் நேரடி அனுபவம் ஸ்கை நியுஸ் - ஸ்டுவார்ட் ரம்சாய் பிரேத அறையின் உதவியாளர் தன்னை பின்தொடர்ந்து வருமாறு தெரிவித்தார். பிரதே பெட்டிகள் நிரம்பியிருந்த அறையை நாங்கள் கடந்து சென்றோம்,அந்த அறையின் மூலையில் இன்னொரு கதவு காணப்பட்டது உதவியாளர் உள்ளே கிறிஸ்தவ தேவாலயம் போல காணப்பட்ட பகுதியை சென்று பார்க்குமாறு சைகை செய்தார். எனக்கு முதலில் விளங்கவில்லை ஆனால் நான் திரும்பிப்பார்த்தவேளை வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரதே பெட்டிகளை எதிர்கொண்டேன். லொம்பார்டியின் கிரெமோனா மருத்துவமனையில் பெருமளவானவர்கள் உயிரிழந்துள்ளதால் அவர்கள் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை உடல்களை சேம…
-
- 0 replies
- 273 views
-