Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் பொது நிறுவனம் பொறுப்பெடுப்பதால் இரு தொகுதிகளில் தேர்தல் பிற்போடப்படுகிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் பொது நிறுவனம் பொறுப்பெடுப்பதால் இரு தொகுதிகளில் தேர்தல் பிற்போடப்படுகிறது!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்காக ஜேர்மனியில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 10 பிரதிநிதிகளில், இரு தேர்தல் தொகுதிகளில் மூன்று பிரதிநிதிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனைய இரு தேர்தல் தொகுதிகளில் தெரிவு செய்ய வேண்டிய 7 மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக......

...மே மாதம் 16 ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்தலை ஜேர்மன் பொது நிறுவனம் ஒன்;று பொறுப்பெடுத்துச் செய்யும் வகையில் ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளமையால் தேர்தல் திகதியினைப் பிற்போடவேண்டியுள்ளது. மத்திய ஜேர்மன் தேர்தல் தொகுதியில் யூன் மாதம் 20 ஆம் திகதியும் தெற்கு ஜேர்மன் தேர்தல் தொகுதியில் யூன் மாதம் 27 ஆம் திகதியும் தேர்தல்கள்; நடைபெறும்.

இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலை நடாத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜேர்மன் தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜேர்மனியின் நான்கு தேர்தல் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் விபரங்கள் பின்வருமாறு:

தேர்தல் தொகுதி 1: Berlin மாநிலம் (தலைநகரை உள்ளடக்கியது) – மே 2 இல் நடைபெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி

திருமதி வித்யா ஜெயசங்கர்.

தேர்தல் தொகுதி 2: வடக்கு ஜேர்மனி: Bremen, Hamburg, Niedersachsen, Schleswig

Holstein - போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்

திரு இராஜரட்ணம் ஜெயச்சந்திரன்

திருமதி ரேணுகா லோகேஸ்வரன்

தேர்தல் நடைபெறவேண்டிய தொகுதிகள் மற்றும் தேர்தல் நடைபெறும் நாட்களின் விபரங்கள் பின்வருமாறு:

தேர்தல் தொகுதி 3: மத்திய ஜேர்மனி: Nordrhein-Westfalen (தமிழ் மக்கள் மிகவும்

செறிந்து வாழும் இடம்) - 4 பிரதிநிதிகள்

தேர்தல் நடைபெறும் நாள்: 20.06.2010 ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் தொகுதி 4: தெற்கு ஜேர்மனி: Baden-Württemberg, Bayern, Hessen, Rheinland

Pfalz, Saarland - 3 பிரதிநிதிகள்

தேர்தல் நடைபெறும் நாள்: 27.06.2010 ஞாயிற்றுக்கிழமை

இவ்விரு தேர்தல் தொகுதிகளிலும்; போட்டியிடும் வேட்பாளர்கள்: விபரங்களை www.tgte-germany.de என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

தேர்தல் தொகுதி 3 இல்; 50 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் தொகுதி 4 இல் 40 வாக்குச்சாவடிகளிலுமாக மொத்தம் 90 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம் பெற்றது போன்ற தேர்தல் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல்களைப் பொறுப்பெடுத்து நடாத்தித் தருமாறு ஜேர்மனியில் நன்மதிப்புப் பெற்;ற பொதுநிறுவனம் ஒன்றைத் தேர்தல் ஆணையம் அணுகியது. ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அப் பொது நிறுவனம் மே மாதம் 16 ஆம் திகதி தேர்தலை நடாத்துவது சாத்தியமில்லை எனக்கூறி மத்திய ஜேர்மன் தேர்தல் தொகுதியில் ய+ன் மாதம் 20 ஆம் திகதியும் தெற்கு ஜேர்மன் தேர்தல் தொகுதியில் ய+ன் மாதம் 27 ஆம் திகதியும் தேர்தல்களை நடாத்தித் தர முன்வந்துள்ளது.

தேர்தலைப் பின்போடுவதால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களையும் ஜேர்மன் பொது நிறுவனம் தேர்தலைப் பொறுப்பெடுத்து நடாத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் மதிப்பீடு செய்த தேர்தல் ஆணையம் ஜேர்மன் பொது நிறுவனத்தின் ஊடாகத் தேர்தலை நடாத்துவதே தேர்தல் சிறப்பானதாக நடைபெற வழிகோலும் எனக் கருதி தேர்தலை பிற்போடுவதற்கு முடிவெடுத்துள்ளது.

தேர்தலை பிற்போடுவதால் வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு தேர்தல் ஆணையம் வருத்தம் தெரிவிப்பதோடு, தேர்தலை முறைகேடுகள் இன்றி சிறப்பாக நடாத்த வேண்டும் என்ற நன்னோக்கோடு எடுக்கப்பட்ட இம் முடிவினைப் மக்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறது.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: infogermany@govtamileelam.org

வெளியீடு: அனைத்துலகச் செயலகம்

தொடர்புகளுக்கு: info@govtamileelam.org

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்! ஆனால் சந்தர்பவாதிகள் குழப்புகிறார்களா, என்ற ஐயம் எழுவது நியாயமானதுதானே?

00002710.gif

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் நல்லதெளிவாகத்தானிருக்கிறம். ஆனால் எங்களைச்சோர்வடைய வைக்கமுயற்சிக்கிறார்களோ? என்ற சந்தேகம்தான் வலுக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் நல்லதெளிவாகத்தானிருக்கிறம். ஆனால் எங்களைச்சோர்வடைய வைக்கமுயற்சிக்கிறார்களோ? என்ற சந்தேகம்தான் வலுக்கிறது.

இதைத்தான் நானும் கடந்த மாதத்திலையிருருந்து கேட்டுக் களைச்சுப்போனம். ஒரு ஏற்பாட்டாளரும் பதிலைக் காணேல்லை. ஒருவேளை இவையள் சிறிலங்காவுக்காக வேலைசெய்யினமோ? கோவிக்காதையுங்கோ ஏனென்றால் வட்டக்கொட்டைத் தீர்மானம் மீதான கருத்துக் கணிப்புக்கு இருந்த களைகட்டலைக் காணவில்லைக் கண்டியளோ!....

மற்றது நிர்வாகத்தினருக்கு இதைத் தனித்திரியாக இல்லாமல் யேர்மனியின் திரியுடன் ஒன்றாக்கினால் நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் முடியும் வரைதான் இந்த சோர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெறும், ஏன் எனில் தேர்தலை ஜேர்மனியில் நடத்துபவர்களின் நோக்கமும் அதுதான், ஆனால் மக்கள் கொடுக்கும் தீர்வின் பின்னர் இவர்கள் காணாமல் போய் விடுவார்கள், தேர்தல் வரை பொறுத்திருங்கள்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தருக்கர் சிலர் செயலால் காலத்தில் நடக்க வேண்டிய தேர்தல் இழுத்தடிக்கபட்டு, சோர்வடைய வைத்த தேர்தல்வரும் ஞாயிறு 20/06/2010 நடைபெறுகிறது, தருக்கர் செருக்கொழிக்க தமிழின உணர்வாளர்கள் அலைகடலென திரண்டுவந்து, ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவிதியை எழுதபோகும் நாடுகடந்த தமிழீழ யாப்பை எழுதுவோரை சிறந்த முறையில் தேர்வு செய்து, தமிழர் தலை விதியை காப்போம்.

கொடுவாளினை எடடா கொடியோர் செயல் அறவே, தருக்கர் செயல் ஒழிக்க விரைவாய், விரைவாய் குகைவாழ் புலியே!!!

050410003.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெற்கு மானிலத்தில் 27/06/2010 ஞாயிற்றுகியமை தேர்தல் நடை பெறுகிறது.

  • 5 weeks later...

//

Edited by Panangkai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.