Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடேசன் அண்ணாவின் பேட்டி: இந்திய தேர்தல், தளபதிகளின் மரணம் பற்றி பதில் சொல்கின்றார்

Featured Replies

தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல் உச்சகட்டத்தைத் தொட்டு நிற்கிறது. மூன்று லட்சம் மக்கள் ராணுவப் படுகொலையை எதிர்பார்த்துத் தவித்து நிற்கிறார்கள். 1995 ஜூலையில் நடந்த உலகையே உலுக்கிய `செர்பேனியா இனப் படுகொலை'யைப் போன்று இலங்கையில் நடந்துவிடுமோ? அதை உலக நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமோ என அச்சத்தோடு எழுதுகிறது அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளேடான `நியூயார்க் டைம்ஸ், களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகள் தரப்பிலோ தீபன், துர்கா, விதுஷா உள்ளிட்ட பல அனுபவம் வாய்ந்த தளபதிகள் ஒரே நேரத்தில் ராணுவத்துக்கு பலியாகிப் போனார்கள். `புலிகளின் பலம் அவ்வளவுதான்! ஒன்று சரணடைய வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும்' என்கிறார் ராஜபக்ஷே. இந்தியா உள்பட சர்வதேச நாடுகளும் போர் நிறுத்தக் குரலை எழுப்பிக் கொண்டுள்ளன.

இந்த நிலையில், விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசனிடம் சென்ற வாரத்தில் சில கேள்விகளை முன்வைத்தோம்...

`விடுதலைப்புலிகளின் கடைசி தளமான புதுக்குடியிருப்பும் வீழ்ந்தது. அந்தச் சண்டையில் தீபன், துர்க்கா, கடாபி, மணிமாறன் உள்ளிட்ட பல முக்கியத் தளபதிகள் மட்டுமன்றி, 420-க்கும் மேற்பட்ட புலிகள் அழிக்கப்பட்டார்கள். எஞ்சியிருக்கும் முக்கியத் தலைவர்களும் சரணடைந்து விடுமாறு இறுதி எச்சரிக்கை விடுக்கின்றோம். இல்லையென்றால் முற்றாக அழிக்கப்படுவார்கள்' என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறது. உண்மை நிலை என்ன?

``பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் துர்க்கா உள்பட புகழ்பூத்த தளபதிகள் சிலரை இந்தச் சண்டையில் நாம் இழந்துவிட்டோம். இது ஒரு முற்றுகைச் சண்டை. எமது 30 வருட கால போராட்ட வரலாற்றில் இதுபோன்று சில தடவை எமது முக்கியத் தளபதிகளை ஒரு சண்டையில் அல்லது ஒரு சம்பவத்தில் இழந்திருக்கிறோம். அப்போதும் இவ்வாறுதான் சிங்கள ராணுவம் வெற்றிவிழா கொண்டாடியது. `புலிகள் ஒழிந்தார்கள்; போராட்டம் நசுக்கப்பட்டது!' என்றெல்லாம் கூறியது. அது போன்று இப்போதும் மகிழ்ச்சியடைந்து வெற்றிப்பெருமித அறிக்கைகள் விடுகின்றது. இப்போது புதிய களமுனை திறக்கப்பட்டுள்ளது. புதிய போர்வியூகங்களை அமைத்துச் சண்டையிடுகின்றோம்.''

விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மையானால், இயக்கத்தின் அடுத்தகட்ட போராட்டம் என்னவாகும்? யார் முன்னெடுத்துச் செல்வது? அனுபவமிக்க தலைமை இல்லாத நிலையில் இனிவரும் நாட்களில், சிங்கள ராணுவத்தை உங்களால் எப்படி எதிர்கொள்ள முடியும்?

சங்கிலித்தொடர் போன்று பல கட்டளைத்தளபதிகளைத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்டுள்ளார். தலைவரின் தலைமையின்கீழ் வீரத்தளபதிகள் பலர் உள்ளனர். ஒருவரின் இடத்தை இன்னொருவர் இட்டு நிரப்பி, போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தும் ஆற்றல் எமது இயக்கத்திற்கு உண்டு. இதை எமது வரலாறு நிரூபித்து வருகின்றது

முக்கியத் தளபதிகள் உள்பட ஏராளமான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படங்களைப் பார்க்கும்போது போராளிகளின் உடல் முழுதும் கருகிய நிலையில் காணப்படுகிறது. இணையதளச் செய்திகள், அது ரசாயனக் குண்டு வீச்சால் ஏற்பட்ட கொடுரம் என்று கூறுகிறது. உண்மைதானா?

``போர் விதிகளுக்கு முரணாக சிங்கள அரசு போரை நடாத்துகின்றது என்பது உண்மையே. தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை - கொத்துக்குண்டுகளை சிங்களப்படையினர் போரில் பயன்படுத்துகின்றார்கள். இதுபோன்று சிவிலியன்கள் மீது வான்தாக்குதல்களை - குண்டுத்தாக்குதல்களை அவர்கள் நடத்துகிறார்கள். தமிழருக்கு வரவேண்டிய உணவை - மருந்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். குடிநீர் நிலைகளில் நஞ்சைத்தூவி வருகிறார்கள். இவ்வாறாக, வெற்றிக்காக எந்தவிதமான அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் செய்யத் தயாரான ஒரு பயங்கரவாத அரசாகவே சிங்கள அரசு உள்ளது.''

சிங்கள ராணுவத்திற்குப் பெரிய இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, ராணுவத்தின் பலம் வாய்ந்த 58 மற்றும் 59-வது படையணி முற்றாக சீர்குலைக்கப்பட்டிருக்கிறத

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் கடைசி தளமான புதுக்குடியிருப்பும் வீழ்ந்தது. அந்தச் சண்டையில் தீபன், துர்க்கா, கடாபி, மணிமாறன் உள்ளிட்ட பல முக்கியத் தளபதிகள் மட்டுமன்றி, 420-க்கும் மேற்பட்ட புலிகள் அழிக்கப்பட்டார்கள். எஞ்சியிருக்கும் முக்கியத் தலைவர்களும் சரணடைந்து விடுமாறு இறுதி எச்சரிக்கை விடுக்கின்றோம். இல்லையென்றால் முற்றாக அழிக்கப்படுவார்கள்' என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறது. உண்மை நிலை என்ன?

``பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் துர்க்கா உள்பட புகழ்பூத்த தளபதிகள் சிலரை இந்தச் சண்டையில் நாம் இழந்துவிட்டோம். இது ஒரு முற்றுகைச் சண்டை. எமது 30 வருட கால போராட்ட வரலாற்றில் இதுபோன்று சில தடவை எமது முக்கியத் தளபதிகளை ஒரு சண்டையில் அல்லது ஒரு சம்பவத்தில் இழந்திருக்கிறோம். அப்போதும் இவ்வாறுதான் சிங்கள ராணுவம் வெற்றிவிழா கொண்டாடியது. `புலிகள் ஒழிந்தார்கள்; போராட்டம் நசுக்கப்பட்டது!' என்றெல்லாம் கூறியது. அது போன்று இப்போதும் மகிழ்ச்சியடைந்து வெற்றிப்பெருமித அறிக்கைகள் விடுகின்றது. இப்போது புதிய களமுனை திறக்கப்பட்டுள்ளது. புதிய போர்வியூகங்களை அமைத்துச் சண்டையிடுகின்றோம்.''

நடேசன் அண்ணாவின் பேட்டி நம்பிக்கை தருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் துர்க்கா உள்பட புகழ்பூத்த தளபதிகள் சிலரை இந்தச் சண்டையில் நாம் இழந்துவிட்டோம். இது ஒரு முற்றுகைச் சண்டை. எமது 30 வருட கால போராட்ட வரலாற்றில் இதுபோன்று சில தடவை எமது முக்கியத் தளபதிகளை ஒரு சண்டையில் அல்லது ஒரு சம்பவத்தில் இழந்திருக்கிறோம். அப்போதும் இவ்வாறுதான் சிங்கள ராணுவம் வெற்றிவிழா கொண்டாடியது. `புலிகள் ஒழிந்தார்கள்; போராட்டம் நசுக்கப்பட்டது!' என்றெல்லாம் கூறியது. அது போன்று இப்போதும் மகிழ்ச்சியடைந்து வெற்றிப்பெருமித அறிக்கைகள் விடுகின்றது. இப்போது புதிய களமுனை திறக்கப்பட்டுள்ளது. புதிய போர்வியூகங்களை அமைத்துச் சண்டையிடுகின்றோம்.''

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னசெய்வது என்றே தெரியவில்லை ஆனால் நம்பிக்கையென்ற ஒண்றைமட்டும் நாம் இழக்கவில்லை அவர்களும் இழக்கவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இழப்புகள் புதிதல்ல!! இயங்கிக்கொண்டே இருப்போம் என்பதுதான் எங்கள் விடுதலைப்போராட்ட வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

கடச்சியா பாத்த முகம்

:unsure:

mannar20kalamunai206.jpg

Edited by kuddipaiyan26

நன்றி நிழ

இழப்புக்களில் இருந்தும் இமயம் காண்போம்...!

இனி வரும் காலங்கள் அதை பறை சாற்றும்.

ஒரே நேரத்தில் 17 தளபதிகளை இழந்த பின் தான் இந்தியாவுக்கு வன்னிக்காட்டில் பாடம் கற்பிக்க பட்டது என்பதை மறக்க வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

கடசியா கேட்ட குரல்

நம்பிக்கையுடன் தொடர்த்து போராடுவோம்.; வெற்றி நிச்சயம் கிடைக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.