Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஸாப்பை தூக்கிலிடப் போவது யார்?

Featured Replies

[size=4]மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் பிரஜை முகமது அஜ்மல் அமீர் கஸாப்பின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள போதிலும், அவரைத் தூக்கிலிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.[/size]

[size=4]தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யவும், அதன்பிறகு குடியரசுத் தலைவரிடம் மனுத்தாக்கல் செய்யவும் வாய்ப்பு இருக்கும் நிலையில், அந்த வழிகள் அனைத்திலும் அவர் தோல்வியடைந்தாலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதே கேள்வி.[/size]

[size=4]காரணம், தூக்கில் போடுவதற்கு, இந்தியச் சிறைகளில் பயிற்சி பெற்ற நபர்கள் யாரும் இல்லை.[/size]

[size=4]கடைசியாக, இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது 2004-ம் ஆண்டில். மேற்கு வங்க மாநிலத்தில், பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தனஞ்செய் சாட்டர்ஜிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியவர் நாடா மாலிக். அந்த தண்டனையை நிறைவேற்றிய சில காலத்துக்குப் பிறகு அவரும் காலமாகிவிட்டார்.[/size]

[size=4]அதன்பிறகு, பஞ்சாபில் ஒரு தூக்கு தண்டனையை நிறைவேற்ற யாரும் இல்லை. தண்டனை பெற்ற பல்வந்த் சிங் ரஜோவனா விவகாரம் அதன்பிறகு அரசியல் பிரச்சினையாக மாறியதால் தண்டனை தள்ளிப்போனது வேறு விடயம்.[/size]

[size=4]ஆனால், இப்போது பயிற்சி பெற்ற தூக்கிலிடும் நபர் இல்லாத நிலையில், யார் அதைச் செய்ய முடியும்?[/size]

[size=4]இதுதொடர்பாக, மகாராஷ்டிர மாநில சிறைத்துறைத் தலைவர் பிபிசியிடம் பேசும்போது, மூத்த சிறை அதிகாரிகளில் ஒருவர் பயிற்சி பெற்று, அந்தப் பணியை நிறைவேற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]தயாராக இருக்கும் வாரிசு[/size]

[size=4]கடைசியாக தூக்கிலிடும் பணியில் இருந்த நாடா மாலிக்கின் மகன், மகாதேவ் மாலிக் தற்போது மேற்கு வங்க சிறையில் வேறு பணியில் இருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு அஜ்மல் கஸாப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த போதே, அந்தத் தண்டனையை நிறைவேற்ற தான் தயாராக இருப்பதாக மகாதேவ் மாலிக் தெரிவித்தார்.[/size]

[size=4]தனது தந்தை நாடா மாலிக், 25 தூக்கு தண்டனைகளை நிறைவேற்றியவர் என்றும், தனது தாத்தா 600 தூக்கு தண்டனைகளை நிறைவேற்றியவர் என்றும் அதனால் தூக்கிலிடும் அனுபவம் வாய்ந்த பரம்பரை தங்கள் பரம்பரை என்றும் மகாதேவ் மாலிக் கூறுகிறார். ஆனால், அவர் அதற்கான பயிற்சியை இதுவரை பெறவில்லை.[/size]

[size=4]அதிகாரிகள், அவருக்குப் பயிற்சி கொடுப்பார்களா அல்லது வேறு யாரையாவது தயார் செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.[/size]

[size=4]http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120829_whowillhangkasab.shtml[/size]

  • தொடங்கியவர்

[size=4]மும்பை தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு வழங்கிய மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. இவ்வழக்கின் முக்கிய நிகழ்வுகள்...[/size]

[size=4]கடந்த 2008, நவ., 26: பாகிஸ்தானிலிருந்து வந்த 10 பயங்கரவாதிகள், மும்பையில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தொடர்பாக அஜ்மல் கசாப் மட்டும் கைது.[/size]

[size=4]2009 ஜன., 16: கசாப்பின் வழக்கு விசாரணைக்கு, மும்பை ஆர்தர் ரோடு ஜெயில் தேர்வு செய்யப்பட்டது.[/size]

[size=4]பிப்., 25: கசாப்புக்கு எதிராக மும்பை போலீசார் குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.[/size]

[size=4]2010, மே 6: ஸ்பெஷல் கோர்ட் கசாப்புக்கு மரண தண்டனை விதித்தது. மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு.[/size]

[size=4]அக்., 18: மேல்முறையீடு தொடர்பாக, மும்பை ஐகோர்ட்டில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் கசாப்பிடம் விசாரணை நடந்தது.[/size]

[size=4]அக்., 19: கோர்ட்டில் நேரடியாக ஆஜராக விரும்புவதாகவும், அமெரிக்காவுக்கு அனுப்புமாறும் கசாப் கோபமாக தெரிவித்தார். ஒழுக்கமாக நடக்குமாறு நீதிபதி எச்சரித்தார்.[/size]

[size=4]அக்., 21: கசாப் தனது வழக்கறிஞரிடம், கோர்ட்டுக்கு நேரடியாக வருவதாக, மீண்டும் வலியுறுத்தினார்.[/size]

[size=4]அக்., 25: சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் இருந்த, சி.சி.டி.வி., கேமராவில் பதிவான கசாப் மற்றும் அபு இஸ்லாம் ஆகியோரின் பயங்கரவாத நடவடிக்கைகளை, நீதிபதிகள் பார்வையிட்டனர்.[/size]

[size=4]அக்., 27: கசாப்புக்கு சிறப்பு கோர்ட் வழங்கிய மரண தண்டனை சரி தான் என, அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் கோர்ட்டில் வாதம்.[/size]

[size=4]அக்., 29: சிறப்பு கோர்ட்டில், கசாப் அடிக்கடி கருத்துக்களை மாற்றிக் கூறி, குழப்பம் நிகழ்த்தினார்.[/size]

[size=4]நவ., 22: கசாப் ஒரு பொய்யர், சதி திட்டமிடுபவர் என அரசு வழக்கறிஞர் வாதம்.[/size]

[size=4]நவ., 25: கசாப் வழக்கறிஞர் அமின் சோல்கர் வாதத்தை தொடங்கினார். சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வாதம்.[/size]

[size=4]நவ., 30: இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல் என்ற குற்றத்தின் அடிப்படையில், கசாப்பிற்கு தண்டனை விதிக்கக்கூடாது என, அவரது வழக்கறிஞர் வாதம்.[/size]

[size=4]டிச., 14: கசாப் இளைஞர் இல்லை என, அவரது வழக்கறிஞர் வாதிட்டதை ஐகோர்ட் ஏற்க மறுப்பு. கசாப்பின் மனநிலையை ஆராய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐகோர்ட் ஏற்க மறுப்பு.[/size]

[size=4]2011 ஜன., 5: சபாபுதீன் அகமது மற்றும் பகீம் அன்சாரி இருவரும் மும்பை தாக்குதலுக்கு பயங்கரவாதிகளுடன் சேர்ந்து, கூட்டு சதித் திட்டம் தீட்டியவர்கள் என, அரசு வழக்கறிஞர் வாதம்.[/size]

[size=4]ஜன., 6: மும்பை தாக்குதல் வழக்கில் பகீம் ஈடுபட்டதற்கு, உரிய சாட்சியங்கள் இல்லை. தாக்குதல் குறித்த வரைபடம் அபு இஸ்லாமின் பாக்கெட்டில் இருந்து எடுத்தது இல்லை என, பகீம் வழக்கறிஞர் ஐகோர்ட்டில் வாதம்.[/size]

[size=4]ஜன., 7: பகீம் தவறான விவரங்களைக் கொடுத்து, போலியான பாஸ்போர்ட் பெற்று பாகிஸ்தான் அரசை ஏமாற்றியுள்ளார் என, அரசு வழக்கறிஞர் வாதம்.[/size]

[size=4]ஜன., 10: பகீமால் வரையப்பட்ட மும்பை வரைபடத்தை சபாபுதீன், பயங்கரவாதி அபு இஸ்லாமுக்கு வழங்கினார் என, அரசு வழக்கறிஞர் வாதம்.[/size]

[size=4]ஜன., 13: தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன், சபாபுதீனுக்கு தொடர்பில்லை; அதற்கான ஆதாரமும் இல்லை என, அவரது வழக்கறிஞர் இசாஸ் நக்வி வாதம்.[/size]

[size=4]ஜன., 17: வழக்கு விசாரணை முடிந்தது. பிப்., 7க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு.[/size]

[size=4]பிப்., 7: சில பணிகள் இருப்பதால், தீர்ப்பு 21ல் வெளியிடப்படும் என, ஐகோர்ட் அறிவிப்பு.[/size]

[size=4]பிப்., 21: அஜ்மல் கசாப்புக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட மரண தண்டனையை, மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. சபாபுதீன் மற்றும் பகீம் அன்சாரி ஆகியோரை, கோர்ட் விடுதலை செய்தது.[/size]

[size=4]மார்ச்: மும்பை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கசாப் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.[/size]

[size=4]2012 ஆக., 29: கசாப்புக்கு வழங்கிய மரண தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. சபாபுதீன் அகமது மற்றும் பகீம் அன்சாரி ஆகிய இருவரையும் விடுவித்து உத்தரவு.[/size]

[size=4]http://tamil.yahoo.com/கச-ப்-வழக்க-ம-க்க-181300728.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிடக் கேடுகெட்ட செய்தி வேறு எதுவாக இருக்கமுடியும் மனித உயிர்களை கொல்வது மனித உரிமையற்ற செயல் என ஓதும் ஊதுகுழல்கள் இப்போது இன்னுமொருதனை யார் கொல்வது எனப் பந்தயக்காரன்கணக்கா செய்திவிடுகிறார்கள். பீ பீ சிக்குக் கூட ஒரு உயிரைப் பறிப்பதில் மெகாத்தொடர் பார்க்கும் சுவாரசியம். அட கேவலம் கெட்டவங்களே ஒருவாரமாக இந்தியாவின் முதன்மை நகரங்களையே இயங்கவிடாது செய்த ஆகக்கூடியது இருபதுக்கும்மேல் அதிகரிக்காத துப்பாக்கிதாரிகளை இந்திய எல்லைக்குள் அனுமதித்த மன்மோகன் அரசையும், சிதம்பரத்தையும், நாராஜணனையும் முதலில் தூக்கில் போடுங்கடா.....

  • தொடங்கியவர்

[size=1][size=4]சிங்களமும் அலுக்கோசு வேலைக்கு ஆட்களை தேடுகின்றது [/size][/size][size=1]

[size=4]http://www.yarl.com/forum3/index.php?showtopic=106300[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

கசாபிற்கு பொதுஇடத்தில் தூக்கு : உத்தவ் தாக்ரே

மும்பை : பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள டில்லி பார்ல‌ிமென்ட் தாக்குதலில் தொடர்பு‌டைய பயங்கரவாதி அப்சல் குரு மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்கு பொது இடத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சி செயற்குழு தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார். மும்பை தாதர் பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த உத்தவ் தாக்ரே கூறியதாவது, பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசிற்கு துணிவு இருக்கிறதா?, அப்சல் குருவைப் போன்றே, கசாபின் மனுவையும் கிடப்பில் போடும் திட்டம் மத்திய அரசிற்கு ஏதும் இருக்கிறதா என்பதை மத்திய அரசு ‌தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=538257

  • தொடங்கியவர்

[size=1][size=4]இந்தியா இவரை தூக்கில் இட்டால் அது இன்னும் சில தீவிரவாதிகளை உருவாக்கும். [/size][/size]

[size=1]

[size=4]இவரை தூக்கில் போடாவிட்டால் இந்தியா பலவீனமான நிலையில் உள்ளது என உள்ளூரில் விமர்சிக்கப்படும். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.