Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மீண்டும் மரண தண்டனை

Featured Replies

கொடூரமான கொலைகள் உள்ளிட்ட பயங்கரவ குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்த தண்டனையை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மரண தண்டனையை அமுல்படுத்துவது, முதலில் யாருக்கு அந்த தண்டனையை நிறைவேற்றுவது, அதற்கான நேரம், திகதி என்பவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. ஜனாதிபதி தண்டனை நிறைவேற்ற உத்தரவிடும் நேரத்தில், அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்காக தூக்கு மரணம் தயார் நிலையில் இருப்பதாக சிறைச்சாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படாத காரணத்தில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அச்சமின்றி பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது அண்மைய கால சம்பவங்கள் தெளிவுப்படுத்தியுள்ளதால், இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது.

இலங்கையில் 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி இறுதியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81428/language/ta-IN/article.aspx

[size=4]தமிழர்களை பொறுத்த வரையில் இந்த சட்ட மாற்றத்தில் எந்த மாற்றமுமில்லை. அவர்களின் மரணதண்டனைகளை யாரும் எப்படியும் நிறைவேற்றலாம். அவர்கள் சுதந்திரமாகவும் நடமாடலாம். [/size]

எதற்கும் அடிவாங்கி சாகிறதிலும், ஐ.நா. மனித உரிமைகள் சபை போர்குற்றவாளிகளைத் தண்டிக்க கூறுகிறது என்று கூறி இப்படி நீக்கிவிட்டார்களாயின் வேதனை குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் சட்டமூலம் மரணதண்டனை என்று தலைப்பை போட்டிருக்கலாம் ,

சிறிலங்காவில் தினமும் சட்டத்துக்கு முரணாக மரணதண்டனைகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்தது .

மரண தண்டனையை அமுல்படுத்துவது, முதலில் யாருக்கு அந்த தண்டனையை நிறைவேற்றுவது, அதற்கான நேரம், திகதி என்பவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது.

பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாகிய சனாதிபதி தனக்குத்தானே மரண தண்டனையை கொடுக்கும் அதிகாரம் இதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது. வேடிக்கையான முயற்சி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை இனிச் சட்டரீதியாகக் கொல்லவும், அனைத்துலக மனித உரிமைவாதிகளின் குரலை ஒடுக்கவும் சிறிலங்கா அரசு கொண்டுவரவுள்ள சட்டமூலம்.குறிப்பாக சிறிலங்கா கடும் குற்றங்கள் புரிந்தததாகச் சுட்டும் சிறையிலுள்ள முன்னாள் போராளிகளை (389) இலக்குவைத்துத் தான் செய்ய இருக்கும் படுகொலைகளுக்கு ஒரு சட்டப்பாதுகாப்பை வழங்க முன்னெடுக்கும் ஆயுதமாகும்.

எமது புலம்பெயர் சட்டவாளர்கள் இது தொடர்பிலும், சரணடைந்த, பலவந்தமாகக் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் நிலை தொடர்பிலும் ஏதாவது நகர்வுகளைச் செய்ய முன்வருவார்களா?

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் முன்னால் யோசித்திருந்தார்களென்றால் பொன்சேகாவையும் போட்டிருக்கலாம்.. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை கரும்பு! சொன்னமாதிரி மகிந்தன் தனக்குத்தானே கிடங்கு வெட்டுறான் போலை கிடக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

போடுங்கையா போடுங்கையா தூக்குல முதல்ல அவங்கள போடுங்க

  • கருத்துக்கள உறவுகள்

கிருசாந்தி கொலை வழக்கில் சிங்கள காவல்துறையைச்சேர்ந்த சிலருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கி இருந்தார்கள். அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

கிருசாந்தி கொலை வழக்கில் சிங்கள காவல்துறையைச்சேர்ந்த சிலருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கி இருந்தார்கள். அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இது ஐ.நா பிரேரணைக்கு சவலாக ஆரம்பிக்கப்பட்ட மகிந்த சித்தாந்தம். அந்த பிரேரணையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட LLRC அறிக்கையே முள்ளி வாய்க்கால் அவலத்திற்கு தமிழர்மீது பழி போட்டுத்தான் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த புதிய சட்டமும் குற்றவாளிகளை தண்டியாமல் காப்பாற்றும் இலங்கை கலாச்சாரத்தை தொடந்து பாதுகாக்கவே இயற்றப்படுகிறது. இலங்கையில் எந்த குற்றவாளியையும் தண்டிக்க வேண்டுமாயின் வெள்ளைவான் இருக்கிறது. சட்டம் தேவை இல்லை. இப்படி சட்டம் தேவைப்படுவது வெள்ளைவான் ஆட்சிப்பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பிரேரணைகள் நிறைவேற்றும் சர்வதேச ஆதரவாளர்களுக்கு பாடம் புகட்டவே.

UN அறிக்கைப்படியும் புலிகள் போர்குற்றத்தில் ஈடுபட்டிருந்தார்கள். சர்வதேசம் எப்படி முள்ளிவாய்க்காலில் புலிகள் என்றுதாம் நினைத்தவர்கள் அழிக்கப்படும் வரை வாய்பொத்தி மௌனமாக இருந்தார்களோ அதே மாதிரியே தாம் புலிகள் என்று நினைப்பவர்கள் தூக்கப்படும்வரை மௌனமாகத்தான் இருப்பார்கள். அவர்கள் UN அறிக்கையை மறுக்கப்போவதில்லை.

இதில் யாரும் எந்த வகையிலும் இனி தலையிட முடியாது. பிள்ளையான் கருணா போன்றவர்கள் அவர்களுக்கு வேண்டியவர்கள். ஆனால் குற்றம் செய்தவர்கள். புலிகளாக தூக்கப்படப்போவர்கள் சிலரின் சொத்துப்பத்து் தூக்குக்கு காரணமாக இருக்காலாம். சிலருடன் பெண்சண்டை காரணமாக இருக்கலாம். சிலர் உண்மையான தலைவர்களாகவும் இருக்கலாம். தயாமாஸ்டர், K.P, கனகரத்தினம், ரமேஸ் போன்றவரகள் எந்தப்பக்கத்தில் போடப்படுவார்கள் என்பது எல்லாம் நடந்து முடிந்த பின்தான் தெரியும்.

தமிழரை பொறுத்தவரையில் தீர்வு இன்னமும் எட்டாக்கனியாக இருக்கும் போது, கையாலாகமல் வெளியில் இருந்து பார்போருக்கு பொதுவில் தூக்கு தண்டனை இலகுவாகத்தெரியும். எனவேதான் நான் அதை வரவேற்று எழுதினேன். எனினும் உள்ளே இருந்து அடி வாங்குபவர்கள் எதை விரும்புவார்கள் என்பது அவரவரின் தனிப்பட்ட விசையம்.

Edited by மல்லையூரான்

பயங்கரவாதி மஹிந்த கும்பலை தூக்கிலேற்ற இது உதவும்!

[size=4]மரணம் not = மரணதண்டனை [/size]

[size=4]சிங்கள நாடில் மீண்டும் மரண தண்டனை அமுலாக்கபடவுள்ளதாக அறிந்தோம். செயற்கை மரணங்கள் மலிந்த தேசத்தில் ஆட்சியில் உள்ள குற்றவாளிகளே இதை அமுல்படுத்த எண்ணுவது சந்தேகத்தை தருகின்றது.[/size]

[size=4]தமிழரை கொல்லவா? தமிழ் அரசியல் கைதிகளை சட்டபூர்வமாக கொல்ல இது வழி சமைக்குமா? [/size]

[size=4]பொதுவாக இந்த உலகில் பிறந்தவர்கள் இயற்கை மரணத்தையே விரும்புவார்கள். எந்த பெற்றோரும் தமது பிள்ளைகள் வாழ்க்கை இடையில் முடிவதை விரும்புவதில்லை.[/size]

[size=4]எனவே ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஊழலும் இனவாதமும் நிறைந்த சிங்கள அரசின் கைகளில் எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது. மேற்குலக நாடுகளிலேயே குற்றம் புரியாதவர்கள் தண்டனைகளை அனுபவிக்கின்றார்கள், கொல்லவும்படுகின்றார்கள்.[/size]

[size=4]உலகின் மிகப்பெரிய செல்வந்த நாடான அமெரிக்காவில் மரண தண்டனை அமுலில் உள்ளது. அங்கே கூட பலர் குற்றத்தை புரியாமலே மரணதண்டைனைக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சிங்களத்தில் என்ன நடக்கும்?[/size]

[size=5]'அலுகோசு" ஊழியர் நியமனம் ஒருவாரத்தில் [/size]

[size=4]இன்னும் ஒருவாரத்தில் 'அலுகோசு" என்றழைக்கப்படும் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் ஊழியர்கள் நியமனம் செய்யவுள்ளதாக சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்கா தெரிவித்தார்.

இதற்கு முன்னர் இலங்கையைப் பொறுத்தவரை மன்னர்காலம் முதல் பிரித்ததானியர் காலம் உட்பட பரம்பரை வழிவந்தவர்களே மேற்படி அலுகோசு பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டனர்.

நீண்டகாலமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை இடை நிறுத்தி வைத்திருந்ததன் காரணத்தால் ஏற்கனவே அப்பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்றதன் பின் புதியவர்கள் நியமிக்கப்படவில்லை.

அண்மையில் கோரப்பட வர்த்தமானி அறிவித்தலின்படி 80 பேர் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் இருவர் தகுதி அடிப்படையில் நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு ஒருவர் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கும் மற்றவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கும் நியமனம் செய்யப்படவுள்ளனர். இன்னும் ஒருவார காலத்தில் இந்நியமனங்கள் வழங்கப்பட இருப்பதாக திசாநாயக்கா தெரிவித்தார்.

போகம்பறை மற்றும் வெலிக்கடைச் சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 844 பேர் மரணதண்டனைக்காகக் காத்து இருக்கின்றனர். இவர்களில் 19 பேர் பெண்களாவர். இப்பெண்கள் 19 பேர் உட்பட மொத்தம் 453 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர். எனவே மேற்படி தொகை போக மரணதண்டனை நிறைவேற்ற வேண்டியவர்கள் 372 பேர்மீதமாக இருப்பதாகவும் அதனைத் துரிதப்படுத்தும் விடயமாகவே அல்கோசுகள் விரைவில் நியமனம் செய்ய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். [/size]

[size=4]http://www.virakesari.lk/article/local.php?vid=173[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.