Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைத் தலைமைகள் கூட்டறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையைக் கைவிட்டுப் பேச்சுக்குத் திரும்ப புலிகளுக்கு வற்புறுத்து

ஆயுதக் குழுக்களின் பயங்கரவாதத்தை

இலங்கை விரைந்து தடுக்க வேண்டும்!

இணைத் தலைமைகள் கூட்டறிக்கை

* விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றைக் கைவிட்டு உடன் அமைதிப் பேச்சுகளுக்கு மீளத் திரும்ப வேண்டும்.

* இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஆயுதக் குழுக்கள் ஈடுபடுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பகிரங்கமான கூட்டறிக்கை மூலம் கோரியிருக்கின்றன இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகள்.

கருணா மற்றும் ஈ.பி.டி.பியின் வன்முறை மூலங்களின் தாக்குதல்களைத் தடுக்க இலங்கை அரசு தவறி விட்டதாகவும் இணைத் தலைமை கள் குற்றம் சுமத்தியிருக்கின்றன.

இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஜப்பானின் சார்பில் அதன் இலங்கை அமைதி முயற்சிகளுக் கான விசேட தூதுவர் யசூசி அகாஷி, அமெ ரிக்காவின் சார்பில் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக் காவின் உதவி இராஜாங்க அமைச்சர் ரிச்சட் பௌச்சர், நோர்வே சார்பில் அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கையில் நோர்வேயின் அனுசரணைப் பணிக் குப் பொறுப்பானவருமான எரிக் சொல்ஹெய்ம், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேவ் ஜெனஜீன் ஆகியோர் பங்குகொண்டனர்.

நேற்றைய கூட்டத்தின் பின்னர் இணைத் தலைமை நாடுகள் விடுத்த கூட்டறிக்கை யின் முழு விவரம் வருமாறு:

போரின் விளிம்பில் இலங்கை உள்ள நிலையில் இணைத் தலைமைகளின் இந்தச் சந்திப்பு டோக்கியோவில் நடைபெற்றது.

வன்முறைக்குள் மீண்டும் நாடு வீழ்வ தைத் தடுக்கும் நிலமையில் இலங்கை அரசும், புலிகளும் இல்லை என்பதுபோல தென்படுகின்ற இச்சூழலில்

ஐரோப்பிய யூனியன், ஜப்பான், அமெ ரிக்கா, நோர்வே ஆகிய இணைத் தலைமை நாடுகள் இலங்கை நெருக்கடி குறித்துக் கவ னித்து பயனுள்ள முறையில் அதற்கு உதவ முடியுமா என்பதைக் கண்டறிவதற்காக

இலங்கையின் மீள்கட்டமைப்பு, அபி விருத்திக்கான டோக்கியோ மூல மாநாட்டின் மூன்று ஆண்டுகளின் பின்னர்

ஜப்பான் இந்த டோக்கியோ சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றது.

சீர்கெட்டு வரும் நிலைமையைத் தலை கீழாக மாற்றி நாட்டை மீண்டும் சமாதானப் பாதையில் தூக்கி நிறுத்துவதற்கு உடனடி நட வடிக்கைகளை எடுக்குமாறு இரு தரப்புகளை யும் இணைத் தலைமைகள் கோருகின்றன.

புலிகளுக்கு

விடுதலைப் புலிகள் அமைப்பு பேச்சு நடவடிக்கைகளுக்குக் கட்டாயம் மீளத் திரும்ப வேண்டும். பயங்கரவாதத்தையும், வன்முறைகளையும்கைவிடுவதாக அது அறிவிக்க வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தேவைப் படுகின்ற அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான அரசியல் இணக்கப்பாட்டுக்கு தனது இசைவை அது வெளிப்படுத்த வேண்டும். அத் தகைய தீர்வு இலங்கையின் சகல மக்களின தும் ஜனநாயக உரிமைகளை உள்ளடக்கிய தாக இருக்க வேண்டும். அத்தகைய நடவடிக் கைகளுக்கு சர்வதேச சமூகம் சாதகமான பிரதி பலிப்பைக் காட்டும்; அப்படிச் செய்யத் தவறு வது விடுதலைப் புலிகளை மேலும் மோச மாகத் தனிமைப்படுத்தும்.

அரசுக்கு

தமிழ் மக்களின் சட்டபூர்வமான ஆதங் கங்களைக் கவனத்தில் எடுப்பதை அரசும் வெளிப்படுத்த வேண்டும். தனது கட்டுப்பாட் டுப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள குழுக் கள் வன்செயல்கள் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக அரசு தடுக்க வேண்டும். நாடு முழுவதும் வாழும் தமிழர்களின் உரிமைகளும், பாதுகாப்பும் பேணப்படுவதையும் அவற்றை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை யும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

முஸ்லிம்கள் உட்பட இலங்கை மக்கள் அனைவரினதும் உரிமைகளை மேம்படுத்தி நிலைநாட்டும் புதிய ஆட்சி முறை ஒன்றைக் கொண்டு வருவதற்கான பெரிய அரசியல் மாற்றத்துக்குத் தான் தயார் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் ஆதரிக்கும். அத்தகையை நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவது சர்வதேச ஆதரவை இழக்கச் செய் யும்.

பெப்ரவரி 2006 இல் ஜெனிவா சந்திப் பில் தெரிவிக்கப்பட்ட உறுதிப்பாடுகள் உட் பட நிறைவேற்றத் தவறிய பல பொறுப்புகள் இரு தரப்புக்கும் உள்ளன என்பதை இணைத் தலைமைகள் அறிந்துள்ளன. பல்வேறு பயங் கரவாதத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகள் பொறுப்பு. கருணா மற்றும் ஈ.பி.டி.பி யின் வன்முறை மூலங்கள் ஆகியவை உட்பட ஆயுதம் தாங்கிய குழுக்களின் தாக்குதல்களைத் தடுக்க அரசும் தவறிவிட்டது.

பிணக்கில் சம்பந்தப்பட்ட தரப்புகள் மீது வன்முறைகள் என்ற நிலையைத் தாண்டி, அவை அப்பாவிக் குடிமக்களின் உயிர் களைக் குடித்து அவர்களின் வாழ்வைச் சீர ழிக்கத் தொடங்கி விட்டன. இது சட்டம், ஒழுங்கை செயலிழக்கச் செய்து பாதிக்கப்பட்ட குடிமக் களைப் பெரும் பயங்கரத்துக்குள் மூழ்கடித்திருக்கின்றது. மனித உரிமைத் துஷ்பிரயோ கங்கள் ஐ.நாவினாலும், ஏனையோராலும் அண்மைக் காலத்தில் மதிப்பீடு செய்யப்பட் டிருக்கின்றன. மனித உரிமைகளை மதிக் கும்படியும், மனித உரிமைத் துஷ்பிரயோகத்துக்கு எதிராகச் செயற்படும்படியும் சகல தரப் புகளையும் இணைத் தலைமைகள் கோரு கின்றன.

இந்த நிலைமை தொடர்ந்து தாங்கக் கூடியதல்ல. இரண்டு பொறுப்புத் தரப்புக ளும் வன்முறைகளை நிறுத்தி, தங்கள் வேறுபாட்டை அமைதியான பேச்சு மூலம் தீர்த் துக் கொள்ள முன்வராவிட்டால் நாடு தொடர்ந்து பெரும் பிணக்குக்குள் மேலும் மூழ்குவது தவிர்க்க முடியாததாகும்.

நிலைமை ஆழ்ந்த கவலைக்குரியதாக இருந்தாலும் அமைதித் தீர்வுக்கான மூலங் கள் இன்னும் காத்திருக்கின்றன என்ற முடிவுக்கே இணைத் தலைமைகள் வந்துள்ளன. பெரும்பான்மையான இலங்கை மக்கள் இன்னும் சமாதானத்தையே வேண்டுகின்ற னர்.

தற்போது நோர்வே அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கி, அமைதி நிலையை மேம்படுத்துவதற்குத் தேவையான இயன்ற அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதற்கான தமது உறுதிப்பாட்டை இணைத் தலைமைகள் அனைத்தும் மீளத் தெரியப்படுத்துகின்றன. ஏனைய நாடுகளும், நிறுவனங்களும் இணைத் தலைமையின் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருப்ப தோடு இது விடயத்தில் இணைத் தலைமை களை ஆதரிக்கின்றன.

இந்தவகையில், மூன்ற வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற டோக்கியோ மாநாட்டில் பங்கு பற்றிய நாடுகள் வகுத்த விடயங்களின் அடிப்படையில், உரிய வேலைகளின் திற மைப்பாட்டை மேலும் மேம்படுத்துவதற் குரிய பொறுப்பு களையும், இலக்குளையும் ஏனைய நாடுகளின் குழுக்களிடம் ஒதுக்கீடு செய்வதற்கான ஈடுபாட்டு வாய்ப்புக் குறித்து இணைத் தலைமைகள் ஆராயவுள் ளன.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் நியாயமான ஆதங் கங்கள் இருக்கின்றன. இவை முழுமையான அளவில் கவனிக்கப்படவில்லை. இந்த ஆதங் கங்களை நீக்குவதற்கு உருப்படியான கொள் கைகளை ஏற்படுத்தும்படியும் சமூகங்களி டையே பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பும்படியும் இலங்கை அரசாங்கத்தை இணைத்தலைமைகள் ஊக்குவிக்கும். இதனை அமுல்செய்யும் பணியில் இணைத்தலைமை களும், சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங் கத்துக்கு ஆதரவு வழங்கும்.

சர்வதேச சமூகம் இலங்கையில் சமா தானத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க முடியும். ஆனால், சமாதானத்தைக் கொண்டு வர முடியாது என்பது டோக்கியோ மாநாடு நடைபெற்ற பின்பு கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்ற நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கை மக்களால் மட்டுமே இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவர முடியும்.

பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்புகள் சமாதானத்தை ஏற்படுத்து வதில் நேர்மையு டனும் உறுதியுடனும் செயற்பட்டால் மாத்திரமே இணைத் தலைமைகளின் பங்களிப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும்.

2002 2003 காலப் பகுதியில் நடை பெற்ற வெற்றிகரமான சமாதானப் பேச்சு களில் இரு தரப்பினரும் எதிர்காலப் பேச்சு கள் தொடர்பான அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருந்தனர். இரு தரப் பினரும் யுத்த நிறுத்த ஒப்பந்தம், ஆறு சுற் றுப் பேச்சுகளில் எடுக்கப்பட்ட தீர்மானங் கள், கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற ஜெனீ வாப் பேச்சு ஆகியன தொடர்பான இந்த அடிப்படைக் கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதை மீள உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கையின் பிரதேச இறைமை, தமிழ் மக்களினதும் மற்றும் முஸ்லிம் மக்களின தும் பாதுகாப்பு, அபிலாஷைகளை பூர்த்திசெய்தல், சகல சமூகத்தினருக்கும் ஏற்புடைய ஜனநாயக மனித உரிமைகளுக்கு உத்தர வாதம் அளித்தல் ஆகியவை தொடர்பாக இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்மானங்களுக்கு இணைத் தலைமைகள் ஆதரவு வழங்கும்.

இரு தரப்பினரையும் பேச்சு மேசைக்குக் கொண்டு செல்வதற்காக நோர்வே பல யோசனைகளை வைத்துள்ளது. அவை விரை வில் வெளியிடப்படும். இணைத் தலைமை இந்த யோசனைகளை ஏற்றுக் கொண்டுள்ளன.

இலங்கை இனப்பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு கண்டுவிட முடியாது. யுத்தம் மூலம் எவரும் வெற்றி பெற முடியாது என் பதை இலங்கையின் கடந்த கால வரலாறு எடுத்துக் காட்டுகிறது. யுத்தத்தால் பொது மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். தீர்வு ஏற் படுவதற்கு அரசியல் பற்றுறுதி , இணக்கப் பாடு காணும் மனநிலை, பொறுப்புத்தன்மை ஆகியவை இலங்கை அரசுக்கும், விடு தலைப் புலிகளுக்கும் தேவை.

சமாதான முயற்சிப் பணியிலும் நெருக்கடியான தற்போதைய வேளையில் போர் நிறுத்தக் கண்காணிப்புப் பணியிலும் ஈடு பட்டுவரும் அனுசரணை நாடான நோர்வேயின் முக்கிய பங்களிப்புக்கு இணைத் தலை மைகள் தமது ஆதரவை மீண்டும் தெரி விக்கின்றன. அதேசமயம், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பணிகளை எப்படிப் பலப்படுத்த முடியும் என்பது குறித்து பரி சீலனை செய்யவேண்டியதும் அவசியம் ஆகும்.

டோக்கியோவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகள் மாநாட்டில் ஏற்றுக் கொள் ளப்பட்டதன் அடிப் படையில் கடந்த மூன்று வருடங்களில் உதவியாகவும், ஆழிப்பேரலை நிதியாகவும் 340 கோடி டொலர் பணம் வழங் கப்பட்டிருப்பது இணைத் தலைமைகள் கவ னத்தில் உள்ளது. இந்த நிதியில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் விடு தலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் உள்ளடக்கமாக 20 சதவீதத்துக்கு மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துட னேயே இந்த உதவி ஒதுக்கப்பட்டது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இரு தரப்பி னரும் சரியான முறையில் கடைப்பிடிப் பார்கள் என்பதைத் தமது நடவடிக்கைகள் மூலம் நிரூபிப்பார்களானால் மேற்கண்ட நிதி உதவிகளுக்கு அப்பால் சுகாதார மற்றும் கல்வி அபிவிருத்தி போன்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடிய துறைகளுக்கும் உதவி வழங்கப்படும். அவசர தேவைகளுக்கான நிதியும் வழங்கப்படும்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்து வதற்கு ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சி லுவை, அரசசார்பற்ற தொண்டு நிறுவனங் கள் உட்பட்ட சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் சாதகமான பங்களிப்புகள் மிகவும் அவசியமானவை என்பதை இணைத் தலை மைகள் மீண்டும் வலியுறுத்துகின்றன.

எனினும், இவற்றின் பணிகள் சம்பந்த மான விமர்சனங்கள் இவற்றின் மீதான தாக் குதல்கள் அதிகரித்து வருவதை இணைத் தலைமை கண்டிக்கிறது. இவற்றின் பாதுகாப்புக்கு இலங்கை அரசாங்கமும் விடு தலைப் புலிகளும் உறுதி அளிக்க வேண்டும். ஐ. நா. மற்றும் கண்காணிப்புக் குழு போன்ற மனித உரிமைகள் கண்காணிப்பில் ஈடுபடும் ஏஜென் சிகளுடன் இணைத்தலைமைகள் நெருக்க மான அவதானிப்புகளை வைத்துக்கொள் ளும்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் நடை பெற்ற டோக்கியோ மா நாட்டில் இலங்கை யின் சமாதான முயற்சிகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு கோரப்பட்டது.

இவற்றில் முக்கியமானவை நோர்வே யின் அனுசரணைப்பணி, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பணி, இணைத் தலைமை கள், உதவும் நாடுகளின் நிதியுதவி.

மூன்று வருடங்களுக்கு முன்னர் டோக் கியோ மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையிலேயே சர்வ தேச சமூகம் இன்றும் தனது ஆதரவை வழங்க உறுதி கொண்டுள்ளது. அதேநேரம், யுத்தத் தைத் தவிர்க்க வேண்டுமானால் இலங்கை அரசும், புலிகளும் தங்கள் பக்கத்தில் நிறைவேற்ற வேண்டியவற்றை நிறை வேற்ற வேண்டும். இப்படித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-உதயன்

ஏமாற்றியது ரோக்கியோ அறிக்கை! -சங்கதியின் செய்திஆய்வு

பண்டார வன்னியன் -

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தனது தடையை உத்தியோக பூர்வமாக அறிவித்த மறுநாள் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தின் அறிக்கை ஸ்ரீலங்கா அரசுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது.

மிகக் கடுமையாகப் புலிகளைச் சாடும் என ஸ்ரீலங்காவினால் எதிர்பார்க்கப்பட்ட அந்த அறிக்கை ஒப்;பீட்டளவில் ஸ்ரீலங்கா அரசின் மீது அதிக கவனத்தையும் கண்டனத்தையும் வெளியிட்டிருந்ததே இதற்கு காரணமாகும்.

குறிப்பாக ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் தவறி யமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை காலமும் துணைஇராணுவக் குழுக் கள் விடயத்தில் அரசு கடைப்பிடித்த தீக்கோழி அணுகுமுறை இணைத்தலைமை நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கருணாகுழு, ஈ.பி.டி.பி குழு என்பன ஆயுதக்குழுக்களாக பெயர் குறித்து அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளன.

இதிலே ஈ.பி.டி.பி யானது ஸ்ரீலங்காவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதோடு அதனது தலைவர் அரசால் மிகவும் பேணப்படும் ஒரு அமைச்சராகவும் உள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல வன்முறைகளுக்கும் கொலைகளுக்கும் ஈ.பி.டி.பியினர் மீது பலதரப்பினராலும்; குற்றஞ்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. அல்லைப்பிட்டிப் படுகொலைச் சம்பவத்தில் இக்குழுவின் தொடர்பு குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை பெயர்குறித்துக் கண்டித்திருந்தது.

யுத்தத்தை நிறுத்துவதற்கு இருதரப்பும் தமது தரப்புக் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தும் அறிக்;கை புலிகள் அவ்வாறு செய்யத்தவறினால் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனக்கூறியுள்ளது. ஆனால் அரசாங்கம் தனது கடப்பாட்டை நிறைவேற்றாவிடில் சர்வதேச ஆதரவை இழக்க நேரிடும் என எச்சரித்துள்ளமை மிக முக்கியமானது. ஏனெனில் ஸ்ரீலங்கா அரசானது சர்வதேச உதவிகளிலேயே முழு அளவில் தங்கியுள்ளது.

எனவே ஸ்ரீலங்கா எதிர்பார்த்தது போல விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை அறிவிப்பின் பின்னான சர்வதேச களநிலவரம் அமைந்துவிடவில்லை என்பதை யே இணைத்தலைமை நாடுகளின் ரோக்கியோ மாநாட்டு அறிக்கை வெளிப்படுத்துகிறது.

-ஆசிரியர்குழு-

என்னுடைய கருத்து

இந்த அறிக்கையைப் பார்த்துவிட்டு இணைத்தலைமை நாடுகள் இலங்கை அரசாங்கத்தையும் கண்டித்திருக்கிறது என்று எம்மை நாமே திருப்திப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற இந்தக் கூத்தாடிகள் இதைக் கூட நடுநிலையாய்ச் செய்யவில்லை.

வன்முறைகளுக்கு புலிகளை நேரடியாகக் கண்டித்தவர்கள் தமிழ்மக்கள் படுகொலைகள் எல்லாவற்றையும் ஒட்டுப் படைகளே செய்வது போலவும் அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறியது மட்டுமே அரசின் குற்றம் என்பது போலவும் தான் சொல்லியிருக்கின்றன.

அப்படியானால் ஒட்டுப் படைகளிடம் குண்டு வீச்சு விமானங்களும் இருக்கின்றன என்று இணைத் தலைமைகள் சிந்திக்கின்றனவோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடுநிலை தவறி பக்கச்சார்பாக

செயற்படும் சர்வதேச சமூகம்

ஈழத் தமிழர் தரப்புக்கு ஒரு குட்டுப் போடும் விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தடை வந்து விட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் போட்ட குட்டைத் தட்டிச் சமாளிக் கும் விதத்தில்உதவும் நாடுகளின் டோக்கியோ மாநாட்டின் இணைத் தலைமைகளின் கூட்டறிக்கையும் வெளி யாகி விட்டது.

இரண்டிலுமே ஒரு விடயம் அவதானிக்கத்தக்கது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாளும்போது ஐரோப்பிய ஒன்றியமாகட்டும், இணைத் தலைமைகளா கட்டும் ஒரு பக்கச்சார்பாகவே ஒரு தலைப்பட்சமாகவே நடந்து கொள்கின்றன என்பதுதான் அது.

நேற்று இப்பத்தியில் நாம் சுட்டிக் காட்டியமை போன்று களத்தில் - தமிழர் தாயகத்தில் - அதிகரித்துச் செல்லும் வன் முறைகள், உயிர்ப் படுகொலைகள் போன்றவற்றுக்கு சம் பந்தப்பட்ட இரு தரப்புகள் மீதுமே குற்றம் சுமத்தப்படுகின் றது. இணைத் தலைமைகள் முதல் போர்நிறுத்தக் கண் காணிப்புக் குழுவரை பல்வேறு மட்டங்களிலும் இந்த யதார்த் தம் ஒப்புக் கொள்ளப்படுகின்றது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றிம் தமிழர் தரப்பை - புலிகள் தரப்பை - மட்டும் கண்டித்து, தண்டிக்கும் விதத்தில் நட வடிக்கை எடுக்க முற்படுகின்றது. இணைத் தலைமை களோ தமது தீர்மானத்தை வெளிப்படுத்தும்போது இலங்கை அரசைக் காப்பாற்றி - காபந்து பண்ணும் விதத்தில் - சமா ளிக்கும் வகையில் - கூட்டறிக்கை வெளி யிடுகின்றன. அது தான் தமிழர் தரப்பைப் பெரும் ஆச்சரியத்துக்குள்ளும், விச னத்துக்குள்ளும் ஆழ்த்தியிருக்கின்றது.

இணைத் தலைமைகளில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா வாகட்டும் அல்லது பிரிட்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றிய மாகட்டும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப் பாகத்தான் முத்திரை குத்தியுள்ளன. அந்தத் தரப்பினால் புரி யப்படும் - அல்லது புரியப்படுவதாகக் கூறப்படும் - வன் முறைகளையும், வன்செயல்க ளையும் மீண்டும் மீண்டும் பயங்கரவாதச் செயல்கள் என்று அவை ஒப்புவிப்பதில் "அர்ச்சனை' செய்வதில் அர்த்தமில்லை.

ஆனால், சட்ட ரீதியான ஓர் அரசு - இறைமையுள்ள ஓர் அரசு என சர்வதேச சமூகத்தின் முன்னால் தன்னை உரிமை கொண்டாடும் இலங்கை- தனது குடிமக்கள் எனத் தான் கூறிக்கொள்ளும் மக்கள் மீதே வன்முறைகளைப் புரியும் போது அது, வழக்கமாக சர்வ தேச தரப்புகளால் பயங்கரவாத அமைப்பு எனப் பட்டம் சூட்டப்பட்ட புலிகளினால் புரியப் படுவதாகக் கூறப்படும் பயங்கரவாதத்தை விடவும் மோச மான பயங்கரவாதம் ஆகின்றது.

இலங்கை வன்முறைகளில் ஒரு தரப்பினால் புரியப்பட்ட வற்றை அப்பட்டமாக, புலிகள் புரிந்த "பயங்கரவாதச் செயல்கள்' என்று அடித்துக் கூறும் இணைத் தலைமைகள், மறு தரப்பு வன்முறைகளை "பயங்கரவாதம்' என்று சித்திரிப் பதோடு, அந்தக் குற்றச்சாட்டிலிருந்து தென்னிலங்கை சிங் கள அரசைக் காப்பாற்றி, விடுவிக்க வலிந்து முயற்சிக்கின்றன. அதன் மூலம் தமது ஒரு தலைப் பட்ச நிலைப்பாட்டை அவை அம்பலப்படுத்தி நிற்கின்றன.

தமிழர் தாயகத்தில் அரச படைகளுக்கும், அரச தரப் புக்கும் எதிராகப் புரியப்படும் வன்முறைகள் பலவற்றுக்கு "பொங்கியெழும் தமிழ்ப் படை' என்ற பெயரில் உரிமை கொண்டாடப்பட்டாலும் அந்த வன்முறைகளுக்கு நேரடியா கப் புலிகளே காரணம் என்ற அடிப்படையில் குற்றம் சுமத் தும் இணைத் தலைமைகள், அப்பாவித் தமிழ்ப் பொது மக்களுக்கும், புலிகளின் ஆதரவாளர்களுக்கும், புலிக ளுக்கும் எதிராகப் புரியப்படும் வன்முறைகளுக்கு மட்டும் கருணா குழுவும், ஈ.பி.டி.பியின் வன்முறை மூலங்களும் காரணம் என்று குறிப்பிட்டு - வலிந்து - சிங்கள அரசைக் காப்பாற்றவும், தான் "பயங்கரவாதம்' எனச் சித்திரிக்கும் செயல்களுக்கான குற்றப் பொறுப்பிலிருந்து தென்னிலங்கை அரசை விடுவிக்கவும் முயல்கின்றது.

கருணா குழு போன்ற ஒட்டுப்படைகள் இலங்கை அரச படைகளின் புலனாய்வுப் பிரிவினரின் வழி நடத்தலில்தான் - அரச ஆசீர்வா தத்துடன்தான் - இயங்குகின்றன என்பது பரம ரகசியம். அதேபோல ஈ.பி.டி.பி வன்முறை மூலங்களை இயக் கும் ஈ.பி.டி.பி. கட்சி தொடர்ந்து வரும் சிங்கள அரசுகளில் ஒட்டிக் கொண்டு அங்கம் வகித்து, உயர் பதவிச் சுகங்களை யும் அனுபவித்து வருகின்றது. இணைத் தலைமைகள் "தமிழ் மக்களை பயங்கரவாதம் மூலம் அச்சுறுத்தும் ஈ.பி.டி.பி. வன் முறை மூலங்கள்' என்று குறிப்பிடுகின்ற தரப்பு அரசின் பங் காளியே என்பது மறைக்கத்தக்கதல்ல.

இவ்வளவும் தெரிந்தும் - அறிந்தும் - கூட, இத்தரப்பு களின் பயங்கரவாதத்துக்கு நேரடியாக சிங்கள அரசைப் பொறுப்பாக்காமல் பாதுகாக்கும் தனது பகீரதப் பிரயத்தனம் மூலம் தன்னுடைய ஒரு தலைப்பட்ச- ஒரு பக்கச் சார்புடைய - போக்கை இணைத் தலைமைகளும் நிரூபித்து நிற்கின் றன.

ஒரு புறத்தில் இடம்பெறுகின்ற தாக்குதல்களுக்கு உரிமை கோரும் "பொங்கி எழும் தமிழ் மக்கள் படை' என்பது விடு தலைப் புலிகள்தான் என்று திட்டவட்டமாகக் கருதும் இணைத் தலைமைகளுக்கு, இலங்கை அரச படைகளின் வழிநடத்தலில், அரசுத் தலைமையின் பங்களிப்பு மற்றும் ஆசீர்வாதத்தில் கருணா குழு, ஈ.பி.டி.பியின் வன்முறை மூலங்கள் என்பன புரியும் பயங்கரவாதத்துக்கு அரசே பொறுப்பு என்று கூறும் திராணி இல்லாமல் போனது வியப்புக் குரியது. இந்தத் திராணி இல்லாததால் இணைத் தலைமை களின் நடுநிலைப் போக்கு கேள்விக்குரியதாகிவிட்டது.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு வெள்ளைபூச இணைத்தலைமை நாடுகள் முயற்சி தமிழரை பாதுகாக்குமாறு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

இணைத் தலைமை நாடுகளின் அறிக்கையால் விமல் வீரவன்ச ஆவேசம்

இலங்கையின் பிரச்சினையை இந்த வகையில் தான் தீர்க்க வேண்டுமென ஆணையிடும் அதிகாரம் இணைத் தலைமை நாடுகளுக்கு கிடையாது. அவர்கள் எமக்கு ஆணையிட ஆளுநர்கள் அல்ல என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அதன் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக ரீதியான இலங்கை அரசாங்கத்தின் மீதும், நாட்டின் இறைமை மீதும் நிபந்தனைகளுடனான அச்சுறுத்தலை இணைத்தலைமை நாடுகள் விதித்துள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

புலிகளை பயங்கரவாத பட்டியலில் இணைத்த நாடுகளும், இணைத்தலைமை நாடுகளில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அதே

நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கும் பயங்கரவாதிகளைப் போன்று தீர்ப்புச் சொல்லியுள்ளதோடு நிதி வேண்டுமென்றால், புலிகளுடன் இணைந்து சமாதானத்தை ஏற்படுத்துங்கள் என்று நிபந்தனையும் விதித்துள்ளது.

ஜனநாயக அரசியலில் கலந்து அமைச்சுப் பதவியையும் பெற்றுக் கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.யை கட்டுப்படுத்துமாறும் இதன் மூலம் ஈ.பி.டி.பி.யை வன்முறையாளார்களென்றும் சுட்டிக் காட்டியுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா. இதுவொன்றே போதும் புலிக்கு வெள்ளைச் சாயம் பூசுவதற்கு இணைத் தலைமை நாடுகள் முயற்சியெடுக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட.

தமிழ், முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டுமென்று வெள்ளைக்காரர்கள் எமக்கு கற்பிக்கத் தேவையில்லை. எமது ஆட்சியாளர்களுக்கு அது தெரியும்.

அத்தோடு, ஒரு பயங்கரப் பின்னணியுடனான கருத்தும் கூறப்பட்டுள்ளது. அது தான் தமிழ் முஸ்லிம் மக்களின் சட்டரீதியான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென இணைத்தலைமை நாடுகளிடம் நாம் கேட்கிறோம். அந்த சட்டரீதியான எதிர்பார்ப்புக்கள் என்ன? இதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.

அரசாங்கத்தாலும் - புலிகளாலும் யுத்தத்தை வெற்றிபெற முடியாதென கூறியிருப்பதும் வியப்பை அளிக்கின்றது. புலிகளை எமது படையினர் தோல்வியடையச் செய்யும் ஒவ்வொரு தடவையும் அதற்கு தடைபோட்டது இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களும், சர்வதேச தலையீடுகளும், பொட்டு அம்மானுக்கு தகவல்களை வழங்கும் முக்கியஸ்தர்களுமே ஆவார்கள்.

யுத்தத்தில் வெற்றிபெற முடியுமா முடியாதா என்பதையும், தமிழ் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதையும் இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கும்.

தோல்வியடைந்த நாடு என இலங்கையை வெளிப்படுத்தி ஐ.நா. படையை இங்கு கொண்டுவருவதற்கான புறச் சூழலையே இணைத்தலைமை நாடுகள் மேற்கொண்டு வருகின்றன என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

டாக்டர் குணதாச அமரசேகர தேசப்பற்றுள்ள தேசிய இயக்க தலைவர்

புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை வரவேற்கின்றோம். காலம் கடந்தாவது இதனை மேற்கொண்டமைக்காக நன்றி தெரிவிக்க வேண்டும். அதைவிட முக்கியமானது புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டுமென தடை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளமை கவனத்திலெடுக்கத்தக்கது. ஒருபோதும், இது போன்று விதந்துரைக்கப்படவில்லையென இங்கு உரையாற்றிய டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

சமாதான பேச்சுவார்த்தைகளை ஒருபுறம் தள்ளிவிட்டு ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதைப் போன்று முதலில் புலிகளிடமிருந்து ஆயுதக் களைவை மேற்கொள்ள வேண்டும் என்றும் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

தம்பர அமில தேரர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை முழுமையாக நம்பிக் கொண்டிருக்காது அதில் விதந்துரைக்கப்பட்டுள்ள ஆயுதக் களைவை மேற்கொள்ள வேண்டும். வரலாற்றில் நாம் யுத்தங்களை வென்றுள்ளோம். சோழ, பாண்டிய இராஜ்ஜியங்களின் ஆக்கிரமிப்புக்களையும், முறியடித்துள்ளோம். எனவே, எமக்கு எவரும் கற்பிக்கத் தேவையில்லையென்றும் இங்கு உரையாற்றிய தம்பர அமிலதேரர் தெரிவித்தார்.

-தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைத் தலைமைகளின்

முடிவுக்கு இந்தியா வரவேற்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைபற்றி இதுவரை மௌனமாக இருந்து வந்த இந்தியா, வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படா விட்டால், சர்வதேசத்தின் ஆதரவை இழக்க நேரிடும் என்று அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து இணைத் தலைமை நாடுகள் எடுத்திருக்கும் முடிவை இன்று வரவேற்றிருக்கிறது.

""இலங்கையின் இன்றைய நிலைவரம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு எதுவோ அதன் அடிப்படையிலேயே இணைத் தலைமை நாடுகளின் கூட்ட முடிவில் விடுக்கப்பட்ட அறிக்கை அமைந்திருக்கிறது.

""இலங்கை இன்று ஓர் இக்கட்டான நிலையிலேயே உள்ளது. எந்த நேரமும் மோதல் வெடிக்கலாம் என்ற நிலையே காணப்படுகின்றது என இந்தியா உணருகிறது.

""இரு தரப்பாரும் பொறுமை யைக் கடைப்பிடிக்க முன்வர வேண் டும். விடுதலைப் புலிகளும் வன்முறை களைக் கைவிட்டு பேச்சு மேசைக்குப் போய் சமாதானப் பாதையைத் திறக்க வேண்டும். இந்தி யாவின் விருப்பமும் இதுவே.''

என்று இந்திய உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைத் தலைமை நாடுகளின் நிலைப்பாட்டை

நிராகரித்து நிற்கும் ஜனாதிபதி மஹிந்தர்

கடந்த முதலாம் திகதி வியாழனன்று இலங்கையின் தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்களையும் தமது அலரி மாளிகை இல்லத்துக்கு அழைத்து, அவர்களுக்கு காலை விருந்து வழங்கி உபசரித்து, அவர் களுடன் உரையாடினார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அப்போது தமது அரசியல் கொள்கைகள், தாம் கடைப்பிடிக்கப் போகும் கோட்பாடுகள் போன்றவை பற்றியெல்லாம் விரிவாகப் பிரஸ்தாபித்தார் அவர்.

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை கள் எட்டாவது தடவையாகக் கூடி, இலங்கை நிலைவரம் குறித்து ஆராய்ந்த பின்னர் டோக்கியோவிலிருந்து கூட்டறிக்கை வெளியிட்டு, சரியாக 48 மணி நேரத்தின் பின்னர் ஜனாதிபதி மஹிந்தரின் இந்தச் சந்திப்பும், அவரின் கொள்ளை விளக்க விரிவுரையும் இடம்பெற்றன.

அப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கள் இணைத் தலைமையினால் நன்கு ஊன்றி கவனிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தமது அரசையும், தமது தலைமையையும் புதியவை என்று வர் ணித்த ஜனாதிபதி மஹிந்தர், எனவே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளை புதிதாக புதிய ஆரம்பத்திலிருந்து புதிய உத் வேகத்துடன் ஆரம்பிப்போம் என்றார்.

முன்னைய அரசு இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியாக எடுத்த நடவடிக்கைகள் தம்மைக் கட்டுப்படுத்தவே மாட்டா என்று அடித்துக் கூறிய ஜனாதிபதி, பழைய இணக்கப்பாடுகள், முடிவுகளைத் துறந்து விட்டு புதிய முயற்சிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத் தார்.

தற்போதைய அமைதி முயற்சிகள் தொடர்பாக 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு இறுதி வரை எடுக்கப்பட்ட முடிவுகள், ஒஸ்லோ இணக்கப்பாடு, அதனை ஒட்டி ஆறு சுற்றுப் பேச்சுகளில் ஏற்பட்ட உடன்பாடுகள் எவற்றையும் தாம் மதிக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாகவும் அதேநேரம் உறுதியாகவும் இதன் மூலம் வெளிப்படுத்தினார் ஜனாதிபதி.

சரியாக 48 மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை நிலைவரம் தொடர்பாக இணைத் தலைமை நாடுகள் தெரிவித்த கருத்துக்குப் பதிலடியாகவே ஜனாதிபதி மஹிந்தரின் பிரதிபலிப்பாகவே இதனைக் கருத வேண்டும்.

இணைத் தலைமை நாடுகள், தமது பிந்திய அறிக்கையில் இவ்விவகாரம் குறித்து முக்கிய விடயத்தைத் தமது கருத்தாக வலியுறுத்தி இருந்தன.

""2002 2003 காலப் பகுதியில் நடைபெற்ற வெற்றிகரமான சமாதானப் பேச்சுகளின்போது இரு தரப்பினரும் எதிர்காலப் பேச்சுகள் தொடர்பான அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருந்தனர். யுத்த நிறுத்த ஒப்பந்தம், ஆறு சுற்றுப் பேச்சுகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற ஜெனிவாப் பேச்சு ஆகியவற்றில் எட்டப்பட்ட இணக்கங்கள், அடிப்படைக் கொள்கைகள் என்பன தொடர்ந்தும் கடைப்பிடிக்கப் படுவதை இரு தரப்பினரும் மீள உறுதிப் படுத்த வேண்டும்.''

என்று இணைத் தலைமை நாடுகள் தமது கூட்டறிக்கையில் மிகத் தெளிவாகக் கோரியிருந்தன.

ஆனால், இந்தத் கோரிக்கையைத் தாம் ஏற்கவேயில்லை, அதை நிராகரிக்கின்றார் என்பதையும்

இதற்கு முன்னர் அமைதி முயற்சிகளில் எட்டப்பட்ட இணக்கங்களைத் தாம் ஏற்றுக் கொள்வது குறித்து மீள உறுதி வழங்குவதற்குப் பதிலாக அந்த இணக்கங்களைத் தாம் புறமொதுக்குகின்றார் என்பதையும்

இணைத் தலைமை நாடுகளின் அறிக்கையும், அதன் ஊடாக அவற்றின் கோரிக்கையும் வெளியாகி இரண்டு நாட்களுக்குள்ளேயே வெகு அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

"கையோடு பதில்' என்ற கணக்கில் இணைத் தலைமைகளின் முகத்தில் கரி பூசும் விதத்தில் இலங்கை ஜனாதிபதி அளித்திருக்கும் இந்தப் பதிலடி குறித்து ஐரோப்பிய ஒன்றியமும், இணைத் தலைமைகளும் என்ன பதில் கூறப் போகின்றன?

ஏற்கனவே, இந்த அமைதி முயற்சித் தொடரில் எட்டப்பட்ட இணக்கங்களை தாய்லாந்தின் சட்டாகிப் நகரப் பேச்சுகளில் தொடங்கி கடந்த பெப்ரவரி ஜெனிவாப் பேச்சுகள் வரை எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் தனக்குள்ள பற்றுறுதியை, இணைத் தலைமைகள் எதிர்பார்ப்பது போல வெளிப்படுத்துவதற்குத் தமிழர் தரப்பு இப்போதும் தயார்.

இதுவரை எட்டப்பட்ட இந்த இணக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் தனக்குள்ள பற்றுறுதியை திடசங்கற்பத்தை இணைத் தலைமைகளின் வலியுறுத்தலுக்கு வெறும் பெயரளவிலாவது உடன்படுவதாகக் காட்டுவதற்கேனும், பேச்சளவிலாவது வெளிப்படுத்த மஹிந்தரின் அரசு தயாரா?

இல்லை என்பதுதான் இதற்குப் பதிலாக இருக்கும்.

இதற்கு முந்திய பேச்சுகளில் காணப்பட்ட சமஷ்டித் தீர்வு தொடர்பான உடன்பாடு, யுத்த நிறுத்த உடன்பாடு, "சிரான்' உப குழு இணக்கம், இடைக்கால நிர்வாக அதிகார சபை குறித்துப் பேசுவதற்கான சம்மதம் போன்றவற்றைத் தாம் ஏற்றுக் கொள்வது, தனது கூட்டணியில் இருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாத மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு உடன்பாடற்றது என்பதை அறிந்து உணர்ந்து இப்படிப் பின்வாங்குகின்றார் ஜனாதிபதி மஹிந்தர்.

பௌத்த, சிங்களத் தீவிரவாதப் போக்குடைய பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காக, தமது வலியுறுத்தலை மதிக்காமல் பொருட்படுத்தாமல் எதேச்சாதிகாரமாகச் செயற்படும் இலங்கை ஜனாதிபதி மஹிந்தரின் இந்தப் போக்குக் குறித்து இணைத் தலைமை நாடுகள் என்ன செய்யப் போகின்றன? வெறும் கண்டன அறிக்கையோடு அமைதி பேணி, வாய் புதைத்து, பயனற்று அமையப் போகின்றனவா? அல்லது தகுந்த நடவடிக்கை எடுக்கப் போகின்றனவா?

பொறுத்திருந்துதான் பார்ப்போமே....

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.