Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி சுவிகரிப்புக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Vali_nothr.jpg

-நா.நவரத்தினராசா, சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

அரசாங்கத்தினால் வலி வடக்கில் மேற்க்கொள்ளப்பட்ட காணி சுவிகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி வடக்கிலிருந்து இருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினாகளான மாவை சேனாதிராசாஇ எஸ்.ஸ்ரீதரன்இ எம்.ஏ.சுமந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் ஆனந்த சங்கரிஇ தமிழ் மக்கள் தேசிய முன்னனியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் உட்பட எனப் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சுன்னாகம் மதவடியில் இருந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பிரதேச செயலகம் வரையான பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 11.00 மணியளவில் ஆத்திரமுற்ற மக்கள் பொலிஸ் காவலையும் மீறி பிரதேச செயலகத்தினுள் நுழைந்து தமது குறைகளை பிரதேச செயலாளரிடம் முறையிட முயன்றனர்.எனினும் பிரதேச வளாகத்திலிருந்த கலகம் அடக்கும் பொலிஸார் வாசலில் வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை வீதி வழியாக தமது காணிகளுக்கு செல்ல வேண்டும் எனக் கூறி உயர் பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

இந்த மக்களை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திறக்கு அருகாமையில் வைத்து கலகம் அடக்கும் பொலிஸாரும் தடுத்து நிறுத்தினர். மீண்டும் மக்கள் பிரதேச செயலகத்தினுள் நுழைவதற்கு முயன்றும் பொலிஸார் தடுத்து நிறுத்திய நிலையில் பிரதேச செயலகத்தின் முன்னால் கூட்டமொன்று இடம்பெற்றது.  

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/65358-2013-04-29-05-32-00.html

 



DSC03198.JPG
அரசாங்கத்தினால் வலி வடக்கில் மேற்க்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இதனையடுத்து பொலிஸ் காவலையும் மீறி பிரதேச செயலகத்தினுள் நுழைந்து தமது குறைகளை பிரதேச செயலாளரிடம் முறையிட முயன்றனர்.
எனினும் பிரதேச வளாகத்திலிருந்த கலகம் அடக்கும் பொலிஸார் வாசலில் வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.(படங்கள்: நா.நவரத்தினராசா, எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா)

DSC03147.JPG
DSC03153.JPG
DSC03180.JPG
DSC03161.JPG
DSC03169.JPG
DSC03216.JPG
DSC03234.JPG
DSC03177.JPG
DSC03175.JPG

தமிழீழம் கேட்டு போராடிய மக்கள் இன்று அவர்களின் போடாட்டம் குறுகி தமது இருப்பிடத்துக்கான போராட்டமாக மாறி உள்ளது இந்த நிலை தொடருமானால் தமிழர்களின் போராட்டம் அன்றாட வாழ்கை நடத்துவதற்கானதாக மாறி விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது  

 

இதைவிட அங்குள்ள மக்கள் என்ன செய்ய முடியும் . வேணுமெண்டால் உங்கள் தலைமையில் ஒரு ஆயுதபோராட்டம்  தொடங்குவோமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லெக்சன் வந்துட்டுது .....

 

வடமாகான...

 

லெக்சன் வந்துட்டுது ..... :lol:

லெக்சன் வந்துட்டுது .....

 

வடமாகான...

 

லெக்சன் வந்துட்டுது ..... :lol:

இவ்வளவு காலமும் வடக்கிலை மதிவதனங்தான் வென்றவர். இந்த முறை மற்றவர்களும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் நுழையமுற்பட்டவேளை தெல்லிப்பழையில் மக்கள்-பொலிஸார் முறுகலின் போது..

 

 

945397_589388324413922_211654054_n.jpg

 

 

மதிய வெயில் மக்களின் தலையை சூடு பார்க்க கிடைப்பதை தலையில் போர்த்தபடி எமது நிலத்துக்காக போராடும் எம்மினம்

 

21241_589389737747114_1608361229_n.jpg

 

 

காணி அபகரிப்பு மகிந்த சிந்தனையா? இராணுவமே எங்கள் நிலத்தை விட்டு வெளியேறு

 

264300_589392821080139_37938155_n.jpg

 

 

 

வீடியோ:

 

 

(முகநூல்)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இதைதான் மக்கள் போராட்டம் என்று சோசலிசவாதிகள் சொல்லுறவையளோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.