Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் மூச்சாக எழுந்து நின்றால் தமிழீழம் விரைவில் வரும்: அனுராதபுரம் தாக்குதலுக்கு தலைமையேற்ற லெப்.கேணல் இளங்கோவின் இறுதி வேண்டுகோள்

Featured Replies

நாம் மூச்சாக எழுந்து நின்றால் தமிழீழம் விரைவில் வரும்: அனுராதபுரம் தாக்குதலுக்கு தலைமையேற்ற லெப்.கேணல் இளங்கோவின் இறுதி வேண்டுகோள்

[வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 02:14 PM ஈழம்] [தாயக செய்தியாளர்]

"வானேறி வந்து குண்டு போடுகின்ற சிங்கங்களை அவையின் குகைக்குள்ளேயே சந்திக்கப் போகின்றோம்- நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்" என்று அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலுக்குத் தலைமையேற்றுச்சென்ற கரும்புலி லெப். கேணல் இளங்கோ தமது அணியின் சார்பில் எழுதிய இறுதிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதம்:

09.10.2007

என் அன்பான மக்களுக்கு,

சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.

தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான் மிகவும் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும். உங்கட பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும்.

அதனால் தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப் போறம். அவைக்கு தமிழன் படுகிற அவலத்தை புரிய வைக்கப் போறம். நிச்சயம் அவைக்கு உணர்த்தியே தீருவம். தமிழர் படையில முப்படையும் வளர்ந்து நிற்குது. இனி நீங்கள்தான் சிங்களவனுக்கு எதிராக எழுந்து நிற்க வேணும்.

எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில அழிக்கத் தெரியும் என அடிச்சுக் காட்டியிருக்கிறம். இதே மாதிரி தொடர்ந்து அடிப்பம் அடிச்சுக் கொண்டே இருப்பம் என அடிச்சுச் செல்லுங்கோ சிங்கள வெறியர்களுக்கு.

வழிகாட்டத் தலைவர் இருக்கிறார். நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

தலைவர் கவனம்.

தலைவர் எங்கட வழிகாட்டி.

தலைவர்தான் எங்கட அப்பா.

தலைவர்தான் எங்கட அம்மா.

அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.

இ.இளங்கோ.

http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e

தலைவர் கவனம்.

தலைவர் எங்கட வழிகாட்டி.

தலைவர்தான் எங்கட அப்பா.

தலைவர்தான் எங்கட அம்மா.

அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.

வீரமும் தன்மானமும்.. உள்ள ஒவ்வொரு தமிழ்மக்களும்.. அவரோட நலனுக்கும் அவரோட வெற்றிக்கம்.. பிரார்த்திப்பார்கள்.. துணை நிற்பார்கள்.. எந்த தாயக்ககனவோடு.. ஒவ்வொரு உயிர்களும் மண்ணுக்கு வித்தானார்களோ.. அந்தக் கனவு ஈடேறும்...விரைவில்.. எல்லோரும் தலைவன் வழி நிற்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தியாகிகளுக்காக நாங்கள் செய்ய கூடியது அவர்கள் மேல் உறுதி மொழி எடுக்கின்றோம் வெற்றிகளை எமதாக்கி தந்து விட்டு கண்உறங்கின்ற கரும்வேங்கைகளே உங்கள் மேல் சத்தியம் செய்கின்றோம் எமது உயிர் உள்ளவரை எமது போரட்டத்துக்காக எந்த விதங்களில் எல்லாம் உதவ முடியுமோ அந்த விதங்களில் எல்லாம் உதவிசெய்வோம் நீங்கள் உங்கள் கடமைகளை முடித்தவிட்டீர்கள் நிம்மதியாக உறங்குங்கள்

விடுதலையின் செய்தி உங்கள் காதுகளில் ஒலிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.....

யாழ்கள உறவுகள் அனைவரும் இதில் உங்க்ள உறுதிமொழிகளை எடுங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தியாகிகளுக்காக நாங்கள் செய்ய கூடியது

அவர்கள் மேல் உறுதி மொழி எடுக்கின்றோம்

வெற்றிகளை எமதாக்கி தந்து விட்டு கண்உறங்கின்ற கரும்வேங்கைகளே

உங்கள் மேல் சத்தியம் செய்கின்றோம்

எமது உயிர் உள்ளவரை எமது போரட்டத்துக்காக

எந்த விதங்களில் எல்லாம் உதவ முடியுமோ

அந்த விதங்களில் எல்லாம் உதவிசெய்வோம்

நீங்கள் உங்கள் கடமைகளை முடித்தவிட்டீர்கள்

நிம்மதியாக உறங்குங்கள்

விடுதலையின் செய்தி உங்கள் காதுகளில் ஒலிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.....

யாழ்கள உறவுகள் அனைவரும் இதில் உங்க்ள உறுதிமொழிகளை எடுங்கள்....

எம் உயிருள்ளவரை உங்களை மறவோம்

இது ஒரு போராளியின் கடிதமல்ல. விடுதலை வரலாற்றின் விதி.

வீரனே இளங்கோ....

சிங்கள வான்படையின் கொடூரத்தாக்குதல்லால் கணம் கணம் கலங்கிய எம் மனங்கள் இன்று நாங்கள் அடைந்த அந்த கலக்கங்களை விட தம் கடைசி கணத்தில் கதிகலங்கி மாண்ட சிங்களத்துச் சிங்கங்களை எண்ணும்போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அந்த மகிழ்சியை காண உங்களையே தந்தீர்கள். எம் மனங்கள் கனக்கின்றன உங்கள் உறுதியின் வெளிப்பாட்டை இன்று நாம் காண்கிறோம். எமைக்காக்கும் காவல் தெய்வங்களே இருகரம் கூப்பி உங்களை வணங்குகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான் மிகவும் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும். உங்கட பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும்.

வீரதிருமகன் இளங்கோ,நீங்கள் உங்கள் உயிரையே கொடுத்து விட்டீர்கள்.எங்கள் மண்ணுக்கு நிச்சயம் எனது பங்களிப்பு உண்டு. உங்கள் கனவு நிச்சயம் பலிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.