Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலிகளின் வித்துடல்களை புதைக்க உத்தரவிடவில்லை: அனுராதபுரம் நீதிமன்றம் அறிவிப்பு.

Featured Replies

கரும்புலிகளின் வித்துடல்களை புதைக்க உத்தரவிடவில்லை: அனுராதபுரம் நீதிமன்றம் அறிவிப்பு.

ஜ வெள்ளிக்கிழமைஇ 26 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கரும்புலிகளின் வித்துடல்களை புதைக்குமாறு உத்தரவிடவில்லை என்று அனுராதபுரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அனுராதபுர மாவட்ட நீதிபதி ஜனதாசவின் உத்தரவுக்கிணங்கவே கரும்புலிகளின் வித்துடல்களை அனுராதபுரத்தில் புதைத்ததாக சிறிலங்கா இராணுவம் அறிவித்திருந்தது. ஆனால் இது குறித்து நீதிமன்ற செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அனுராதபுரம் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டோம். ஆனால் கரும்புலிகளின் உடலங்களை புதைக்கும் உத்தரவு எதனையும் நீதிமன்றம் வழங்கவில்லை. பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலங்களை என்ன செய்வது என்பது தொடர்பாக நீதிமன்றத்துடன் கலந்துரையாடவும் என்று மட்டுமே இராணுவத்திற்கு தெரிவித்தோம். ஆனால் அவற்றை அனுராதபுரத்தில் புதைக்கும் எந்த உத்தரவையும் நீதிமன்றம் வழங்கவில்லை என்றார். அனுராதபுரம் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை அடுத்து இராணுவத்தினர் வேண்டுமென்றே திட்டமிட்டு கரும்புலிகளின் உடலங்களை புதைத்துவிட்டு அந்தப் பழியை நீதிமன்றத்தின் மீது போடும் திட்டம் அம்பலமாகியிருப்தாக நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி

நிதர்சனம்

--------------------------------------------------------------

தாங்கள் செய்யும்எல்லா தில்லுமுல்லுகளையும் நீதிமன்றத்தை காரணம் காட்டியே செய்கிறார்கள் என்று புரிகிறது

விடுதலைப்புலிகளது சடலங்களை அநுராதபுரத்தில் புதைக்குமாறு தாம் உத்தரவிடவில்லை என்று நீதிமன்றம் கூறுகிறது

20071023174517anuradha-bodies1.jpg

விடுதலைப்புலிகளின் சடலங்களைக் கொண்டுசென்ற வாகனம்

அநுராதபுரம் விமானத்தளத்தின் மீதான தாக்குதலின் போது பலியான விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களது சடலங்களை புதைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்றம் உத்தரவு எதனையும் பிறப்பிக்கவில்லை என்று அந்த நீதிமன்றத்தின் பதிவாளர் சுஜித சித்ராங்கனி செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் நீதிமன்றத்துக்கு வந்து அறிவித்து மேலதிக உத்தரவைப் பெறுமாறே நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார் என்று அவர் கூறினார்.

ஆனால் பொலிஸார் அப்படிச் செய்யவில்லை என்றும், நேற்று முன்தினம் நீதிமன்ற உத்தரவில்லாமலே அவர்கள் சடலங்களைப் புதைத்து விட்டனர் என்றும் அநுராதபுரம் ,மஜிஸ்ரேட் நீதிமன்றத்தின் பதிவாளரான சுஜீவா சித்ராங்கனி செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் உத்தரவிட்டதன் காரணமாகவே விடுதலைப்புலிகளின் சடலங்களை தாம் புதைத்து விட்டதாக இராணுவத்தரப்பில் முன்னர் கூறப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனத்தின் திறமைமிக்க அறிவுருத்தல்(படம்)

http://nitharsanam.com/?art=24736

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் உடல்களை நிர்வாணமாக்கி புதைக்கும் படி உத்தரவிட்டது கோத்தபாயா என்று செய்திகள் வருகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனத்தின் திறமைமிக்க அறிவுருத்தல்(படம்)

http://nitharsanam.com/?art=24736

[/quot

நல்ல விடயங்களை யார் வேண்டும் என்றாலும் பிரச்சாரம் செய்வது நல்லவிடயம்தானே. :unsure::lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதனால் தான் இணைத்தேன்

அதனால் தான் இணைத்தேன்

நீங்கள் நம்ம சேதுவா?

சந்திப்பதில் மகிழ்ச்சி!

உடலங்களை எடுத்துச் செல்லுமாறு கேட்வில்லை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம்

அநுராபுரம் தாக்குதலில் ஈடுபட்ட தரைத் தற்கொடைக் கரும்புலிகளின் உடலங்களை பொறுப்பேற்று வன்னிக்கு எடுத்துச் செல்லுமாறு தம்மிடம் அரசு கேட்கவில்லை என, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

புனித உடலங்களை சிறீலங்கா அரசும், படைகளும் திட்டமிட்டு களங்கப்படுத்திய பின்னர் எழுந்த உலக கண்டனங்களையும், ஊடகச் செய்திகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில் அரச தரப்பில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அரச தரப்பில் உடலங்களை எடுத்துச் செல்லுமாறு தம்மிடம் அரசு கோரவில்லை என, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் சிறீலங்காவிற்கான பிரதிப் பணிப்பாளர் பீற்றர் கிறகொலினிக் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் சிறீலங்காப் படையினரின் 28 உடலங்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து பொறுப்பேற்று சிறீலங்காப் படைகளிடம் ஒப்படைத்திருப்பதாகவும் பீற்றர் மேலும் கூறியிருக்கின்றார்

http://www.pathivu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.