Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - எழிலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - எழிலன்

வீரத்தை வெளிப்படுத்தி, விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லையென, எழிலன் கட்டியம்கூறியுள்ளார்.

வட்டக்கச்சியில் இடம்பெற்ற வீரமுரசு எழுச்சி நிகழ்வில் உரை நிகழ்த்திய, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன், தமிழீழ மக்களின் எழுச்சி, மகிந்த அரசை விரைவில் நிலைகுலைய வைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்கா அரசாங்கம் திணித்துள்ள யுத்தத்தையும், மனிதாபிமான நெருக்கடிகளையும், விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு, விடுதலையை வென்றெடுப்பதன் ஊடாகவே, எதிர்காலத்தில் வீரமுள்ள இனமாக தமிழர்கள் வாழ முடியும் என்றும், எழிலன் சுட்டிக் காட்டியுள்ளார்.

உலகில் வீரத்தை வெளிப்படுத்திய இனங்களே விடுதலை பெற்றுள்ளன.என்றும், இந்த வகையில் விரைவில் தமிழினமும் விடுதலையை வென்றெடுக்கும் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் கட்டியம்கூறியுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - எழிலன்

ஆனால் சிறிலங்கா கூறுகின்றது இப்படி

ஆனால் இந்த படத்தில் இருப்பது போல நிகழ்வதற்கு அமெரிக்கா விடாது என்பதும் தெரியும் :rolleyes:

இது சிங்களத்தினதும் இந்தியாவினதும் கனவே

greenmap.jpg

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி எங்கிருந்து இந்தத் திடீர் அமெரிக்க ஆதரவு வந்தது ? எதை வைத்து இப்படி எண்ணுகிறீர்கள் ? விளக்கம் தேவை ?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி எங்கிருந்து இந்தத் திடீர் அமெரிக்க ஆதரவு வந்தது ? எதை வைத்து இப்படி எண்ணுகிறீர்கள் ? விளக்கம் தேவை ?!

ஏன் திடிரென அமெரிக்கா தடைகளை ஏற்படுத்தியது :rolleyes:. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் அமெரிக்கா என்பது துர நோக்க சிந்தனையுடையது என்பதை. இந்தியா போல் அதன் சிந்தனை குறுகிய துரம் கொண்டதல்ல.

சின்ன விளக்கம் இங்கேயேயுள்ளது http://www.yarl.com/forum3/index.php?showtopic=33083

ஆனால் சிலர் ஈழத்தமிழரை மீண்டும் முட்டாளாக்க கவிதை சொல்வாங்கள். அதற்கு ஈழத் தமிழர் நன்றி மட்டும் சொல்லாமல் இருந்தாலே போதும்.

அப்படி நன்றி சொல்லப் போனால் மீண்டும் தடைகள் வரும் :lol:

Edited by tamillinux

ஏன் திடிரென அமெரிக்கா தடைகளை ஏற்படுத்தியது :rolleyes:. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் அமெரிக்கா என்பது துர நோக்க சிந்தனையுடையது என்பதை. இந்தியா போல் அதன் சிந்தனை குறுகிய துரம் கொண்டதல்ல.

இந்தியா என்பது தென்னாசியாவின் வல்லரசு, அத்துடன் அமெரிக்காவின் நட்பு நாடு எனவே அமெரிக்கா இந்தியாவின் விருப்பிற்கு மாறாக இந்தியாவிற்கு எதிராக இலங்கைத் தீவு தொடர்பான எந்த நிலைப்பாட்டையும் எடுக்காது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களிற்கான தீர்வு தனியரசாக மலர்ந்தால் அதெற்கெதிரான நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து இருந்தால் எந்தவொரு வல்லரசும் ஏன் வேறு சாதாரண நாடுகள் கூட தனியரசிற்கான ஆதரவை வழங்க மாட்டா.

ஆனால் தமிழீழ தனியரசு ஒன்று தமிழரின் படை பலத்தின் மூலம் உருவாக்கப்படுமாக இருந்தால் இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் அந்த மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் ஈழத்தமிழரை முட்டாளாக்க கவிதை பாடுவதாக நீங்கள் எண்ணுறவர்களும், எப்போதும் ஈழத்தமிழருக்காக தமிழகத்தில் குரல் எழுப்புபவர்களும் தான். அந்த நேரம் வரும்போது அவர்கள் தமது பங்களிப்பை கட்டாயம் வழங்குவார்கள் என எதிர்பார்ப்போம்.

அவர்களின் பங்களிப்புக்களிற்கு இன்னும் காலங்கள் இருக்கிறது. ஆனால் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு அறிவுரை கூறுவதை விடுத்து உருப்படியான பங்களிப்புக்களைச் செய்யுங்கள். தலைவருக்கும், தளபதிகளிற்கும், போராளிகளிற்குமான தொழில் தமிழரின் விடுதலையை வென்றெடுப்பது. அவர்கள் எப்போதுமே அதற்காகவே செயற்படுகிறார்கள். நீங்கள் அவர்களிற்கு எதிரியின் பலம் பலவீனம் பற்றியெல்லாம் அறிவுரை கூறவேண்டியதில்லை. அது அங்கே களத்தில் நிற்பவர்களிற்கு அமெரிக்காவில் இருக்கும் உங்களை விட எப்படி என்று தெரியும்.

நீங்கள் தலைவர் மீதும், போராளிகள் மீதும் நம்பிக்கை வைத்து உங்களால் முடிந்த உச்ச பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குகள். தமிழனுக்கு விடிவு விரைவில் கிடைக்கும்.

ஒன்று உலக வல்லரசு, மற்றையது பிராந்திய வல்லரசு.இரண்டும் நட்பு காடுகள். ஆனால் இலங்கை, தமிழர் என்றவிடயத்தில் நோக்கங்களில் வேறுபட்டவர்கள். சீனாவின் பிரசன்னத்தை இந்தியா வெளிப்படையாகவே விரும்பவில்லை. அமெரிக்கா சீனப் பிரசன்னத்தை எதிர்க்கவேயில்லை. இதுதான் வேறுபாடு. இதைப் பயன்படுத்தக் கூடிய நிலையெடுப்பதுதான் தமிழர் தரப்பு சிந்தனைக்கு எடுக்க வேண்டிய விடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.