Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுச்திரெலியாவில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியினரும் மானங்கெட்ட சூடு சுரணை அற்ற தமிழர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அணி துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள அவுச்திரெலியாவுக்கு வந்திருக்கிறார்கள். சில தமிழர்கள் (தமிழ், தமிழ்த் தேசியம் கதைக்கிறவர்களில் சிலர்)சிங்கள அணி விளையாடும் போட்டியைப் பார்ப்பதற்காக சிங்கக் கொடி பிடித்து, சிறிலங்காக் கொடி பதித்த உடை அணிந்து செல்ல தயாராக இருக்கிறார்கள். சென்ற ஞாயிற்றுக்கிழமை பாங்ஸ்டவுண் என்ற இடத்தில் சிறிலங்கா அணியினர் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டார்கள். இதில் எங்கட சூடு சுரணை அற்ற மானமிழந்த கேடுகெட்ட தமிழர்கள் நுளைவுச்சீட்டாக 5 வெள்ளி கொடுத்து பார்க்கச் சென்றார்கள். இந்த 5 வெள்ளிகள் சிங்களவர்களுக்கே சேகரிக்கப்படுகிறது. இது தமிழர்களைக் கொலை செய்வதற்கு உதவப் போகிறது. இதைவிட வெளினாடுகளில் வாழும் சிங்களவர்கள் பலர் நிதிசேகரித்து தற்பொழுது சிறிலங்கா அரசுக்கு தமிழர்களை அழிக்க வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆமிக்காரர்கள் தமிழர்களைக் கொலை செய்கிறார்கள். இவங்கள் பெடியள் ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள் என்று சொல்லும் சிட்னி வாழ் தமிழ்த்தேசியம் பேசும் தமிழர் ஒருவர், சிட்னியில் நடைபெறப் போகும் அவுச்திரெலியா சிறிலங்கா துடுப்பாட்டப் போட்டிக்கு இப்பொழுதே வேலையில் விடுமுறைக்கு விண்ணப்பித்து சிங்கக் கொடி பிடிக்கத் தயாராக இருக்கிறார். துடுப்பாட்டம் பார்க்க வேணுமென்றால் சிறிலங்காக் கொடி பிடிக்காது சென்று பார்க்கலாமே?.அல்லது அவுச்திரெலியா தேசியக் கொடி பிடித்து அவுச்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவிக்கலாமே. ஆனால் பிடிப்பது சிங்கக்கொடி. கதைப்பது தமிழ்த்தேசியம்.

p1220333te0.jpg

சிலர் கன்பராவில் நடைபெறவுள்ள சிறிலங்கா, இந்தியா அணி போட்டி பார்க்க சிறிலங்காக் கொடியுடன் சிட்னியில் இருந்து வெளிக்கிட தயாராக இருக்கிறார்கள். அந்தச் சிட்னி வாழ் தமிழர் பாங்ஸ்டவுணில் நடைபெற்ற போட்டியைப் பற்றி ஏன் தனக்குச் சொல்ல வில்லை என்று கவலைப்பட்டார். தான் போய்ப் பார்த்திருப்பேன் என்று கவலைப்பட்டார். நான் சொன்னேன் பாங்ஸ்டவுண் போட்டிக்கு 5 வெள்ளி நுளைவுச்சீட்டு . அது சிறிலங்கா அரசுக்குத்தானே போகிறது என்றேன். அதற்கு அவர் 5 வெள்ளியில் என்ன அயூதங்கள் வாங்கமுடியும் என்று என்னைக் கேட்டார்.ஆனால் அவர் சனிக்கிழமை நடைபெற்ற தமிழர்திரு நாள் போட்டியில் வீட்டில் இருந்தும் செல்வதற்கு நேரமில்லை என்று கலந்து கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு,

உதுகளைக் கதைக்க வெளிக்கிட்டா விசரன் பட்டம் தான் கிடைக்கும்.

'உனக்கென்ன மறை கழண்டு போட்டுதே? விளையாட்டை விளையாட்டாய்ப்பார்! அதுக்குள்ள இனப்பிரச்சினையை ஓட்டாத' எண்டு அட்வைசுகள் கிடைக்கும்.

பத்தாததுக்கு இப்ப புலிகளையும் தங்களுக்குத் துணையா இழுக்கினம்.

உலகக்கிண்ணப் போட்டியின்போது இளந்திரையன் விட்ட ஓர் அறிக்கையைத் தங்களுக்குச் சாதமாகக் கொண்டருகினம்.

'பார்! புலிகள்கூட கிரிக்கெட்டில எவ்வளவு பைத்தியமா இருக்கினம். கிரிக்கெட் மச் பாக்கிறதுக்காக போர் நிறுத்தம் செய்யினம், நீங்கள் கொஞ்சப் பேர் ஏன் இன்னும் கிணத்துத் தவளையா இருக்கிறியள்?' எண்டெல்லாம் அட்வைசுகள் வருது.

அட! அதைவிடுங்கோ,

தலைவர், ஜெயசூரியாவின்ர தீவிர ரசிகர் எண்டு கதைவிடக் கூட ஆக்களிருக்கினம்.

உண்மையோ பொய்யோ ஆருக்குத் தெரியும்?

புலிகளையும் நம்பேலாது.

பொறுத்த நேரத்தில் 'ஓம்' எண்டு அறிக்கை விட்டுப்போடுவாங்கள்.

நீங்கள் வாயைப் பொத்திக்கொண்டிருக்கிறது உத்தமம்.

Edited by nallavan

அவுஸ்ரேலியாவிலை இருக்கிற ஆராவது, மயூரன் செய்தது போல, எங்கடை கொடியைக் கொண்டு ஓடுங்களேனப்பா. :wub::lol:

சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குக் கறுப்புப் பட்டி அணிவதுபோல, இதற்கு எதிராகவும் அங்குள்ளவர்கள் ஏதாவது செய்தால் பயனுள்ளதாக இருக்கும். உள்ளே செல்ல முடியாவிட்டாலும், வெளியில் அமைதியான முறையில் பதாகைகள் வைத்திருந்தாலும்கூட, மீடியாக்கள் கவனத்தில் எடுக்கக்கூடும். போட்டிகளைப் பார்க்கச்செல்லும் எமது தமிழர்களுக்காவது குற்றவுணர்வை ஏற்படுத்தலாம்.

Edited by Thamilachchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்தாததுக்கு இப்ப புலிகளையும் தங்களுக்குத் துணையா இழுக்கினம்.

உலகக்கிண்ணப் போட்டியின்போது இளந்திரையன் விட்ட ஓர் அறிக்கையைத் தங்களுக்குச் சாதமாகக் கொண்டருகினம்.

'பார்! புலிகள்கூட கிரிக்கெட்டில எவ்வளவு பைத்தியமா இருக்கினம். கிரிக்கெட் மச் பாக்கிறதுக்காக போர் நிறுத்தம் செய்யினம், நீங்கள் கொஞ்சப் பேர் ஏன் இன்னும் கிணத்துத் தவளையா இருக்கிறியள்?' எண்டெல்லாம் அட்வைசுகள் வருது.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் போது தானே வான் புலிகள் கொலண்ணாவை என்ணைக்குதத்துக்கு குண்டு போட்டவர்கள்.

அவுஸ்ரேலியாவிலை இருக்கிற ஆராவது, மயூரன் செய்தது போல, எங்கடை கொடியைக் கொண்டு ஓடுங்களேனப்பா. :o:)

சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குக் கறுப்புப் பட்டி அணிவதுபோல, இதற்கு எதிராகவும் அங்குள்ளவர்கள் ஏதாவது செய்தால் பயனுள்ளதாக இருக்கும். உள்ளே செல்ல முடியாவிட்டாலும், வெளியில் அமைதியான முறையில் பதாகைகள் வைத்திருந்தாலும்கூட, மீடியாக்கள் கவனத்தில் எடுக்கக்கூடும். போட்டிகளைப் பார்க்கச்செல்லும் எமது தமிழர்களுக்காவது குற்றவுணர்வை ஏற்படுத்தலாம்.

அவுஸ்ரெலிய டமிழ்சும் ஒத்துழைக்க வேண்டும் குறிப்பாக அவுஸ்ரெலிய டமிழ்ஸ் "சிறிலங்கா ஜேர்சியை" அணிந்து கொண்டு தான் போட்டிக்கு போவார்கள் அதனை தயவு செய்து தவிர்த்து கொள்ளவும்...ஆனாலும் இதனை எத்தனை பேர் செவிமடுப்பார்கள் என்பது கேள்விகுறி தான்... :o

குறிப்பாக நடக்க போகும் "கொமன்வெல்த் பாங் கிரிக்கேட் சீரிசில்" சிறிலங்கா ஜேர்சியை புறகணித்து.."ஈழம்" என்ற ஜேர்சி இன்னும் சில கிழமைகளில் வர இருக்கிறது சிட்னியில் :o ..ஜேர்சியில் "புலி" ஒன்று உருமுவது போலும் ஜேர்சியில் "வொயிஸ் ஒவ் தமிழ்ஸ்" என்று ஆங்கிலத்தில் அச்சடிக்கபட்டு நடுவில் "ஈழம்" என்று அச்சடிக்கபட்ட எம் ஜேர்சி மிகவும் நன்றாகவும் கம்பீரமாகவும் இருக்கிறது ஆகவே எமகென்று ஒரு ஜேர்சி இருக்கு போது ஏன் மற்றவையின்ட ஜேர்சியை அணிய வேண்டும் :wub: ஆகவே இதில் அவுஸ்ரெலிய டமிழ்ஸ் சிந்தித்து செயற்படுவீர்கள் என்று நம்புவோமாக.. :D

ஆகவே அவுஸ்ரெலிய டமிழ்ஸ் குறிபிட்ட போட்டியின் போது "ஈழம்" என்ற எங்களின் ஜேர்சியை அணிந்து களத்தில் இறங்கினா மிகவும் நல்லது..செய்வீர்கள் என்று நம்புகிறோம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

தகவலுக்கு மிக்க நன்றி யமுனா. ஆகவே, இந்தக் எனக்கும் அந்த ஜேர்சி ஒன்றை அனுப்பி வையுங்க. சோ (show) காட்டப் பயன்படும். :huh::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.