Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடுக்கோவிலின் பாரம்பரிய ஆவணி மாதத் திருவிழா இம்முறை இடம்பெறமாட்டாது என மன்னார் ஆயர் அறிவித்துள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ள மடுக்கோவிலில் மடு அன்னையின் திருச்சொரூபம், மடு ஆலயத்தின் தூய்மைப் பணிகள் முடிவுற்றதும் கொலுவேற்றம் செய்யப்படும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக மடுக்கோவிலில் இருந்து தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்ட மடு அன்னையின் திருச்சொரூபம் தற்போது மன்னார் ஆயர் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை தெரிந்ததே.

நான்கு மாதங்களுக்குப் பின்னர் புதன்கிழமை 6 ஆம் திகதியே மடு ஆலயத்திற்கு குருமார்கள் சென்றுள்ளார்கள். மடு ஆலயத்தின் திருத்த வேலைகள் செய்யப்பட்டுள்ள போதிலும் ஆலயத்தின் உட்கட்டமைப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆவணி திருவிழா நடைபெறுவதாக இருந்தால், ஆலயத்திற்கு வரும் பெரும் எண்ணிக்கையான பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மின்வெளிச்சம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு என்பவற்றுக்கான நடவடிக்கைகள் முழுமை பெற வேண்;டியுள்ளது. அதற்கு காலம் போதாத நிலைமையே உள்ளது.

அத்துடன், ஆலயத்திற்கு வரும் எண்ணற்ற பக்தர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் மடுக்கோவில் பிரதேசத்தை மோதலற்ற சூனியப் பிரதேசமாக்கப்பட வேண்டும் என்ற மன்னார் ஆயர் மற்றும் நாட்டின் ஆயர்கள் மன்றத்தினரின் வேண்டுகோள், இராணுவத்தினராலும், விடுதலைப் புலிகளாலும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

ஆகவே இந்தச் சூழ்நிலையில் மடுமாதாவின் பாரம்பரிய ஆவணி மாதத்திருவிழாவை இம்முறை வழமைபோல நடத்த முடியாதிருப்பதாகத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, எமது நாட்டில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும், அதன் மூலம் தற்போது இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பதற்காக மடு அன்னையைப் பிரார்த்திக்குமாறு பக்தர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் மன்னார் ஆயர் மடு நிலைமைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=5656

மன்னார் மடு மாதா ஆலயத்தின் வருடாந்த ஆவணிப்பூசை இந்த வருடம் நடத்தப்பட மாட்டாது என, மறைமாவட்ட ஆயர் யோசப் இராயப்பு அடிகளார் அறிவித்துள்ளார்.ஆயர் இல்லத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மடு மாதாவின் திருச்சொரூபம் உடனடியாக ஆலயத்திற்குக் கொண்டு செல்லப்பட மாட்டாது எனவும் இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

http://www.tamilseythi.com/srilanka/mannar...2008-08-07.html

மடுமாதா உற்சவம் இம்முறை நடைபெறாது: மன்னார் ஆயர் அறிவிப்பு

[வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 08:04 மு.ப ஈழம்] [கி.தவசீலன்]

வருடாவருடம் ஆகஸ்ட் 15 ஆம் தகதி நடைபெறும் மடுமாதா உற்சவம் இம்முறை இடம்பெறாது என்று மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் அறிவித்துள்ளார்.

படைநடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த மடுமாதா திருச்சொரூபத்துடன் நான்கு மாதங்களுக்கு பின்னர் கடந்த புதன்கிழமைதான் தேவாலயத்தை தாம் வந்தடைந்துள்ளதாகவும் -

தேவாலய புனரமைப்பு நடவடிக்கைகள் உட்பட உற்சவகால வேலைகள் பலவற்றை குறுகிய கால இடைவெளிக்குள் செய்து முடிப்பது கடினமான விடயமாக காணப்படுவதாகவும் - அவர் தெரிவித்துள்ளார்.

மடுமாதா உற்சவம் நடைபெறுவதாயின் மடு பகுதி போரற்ற வலயமாக அரச படைகளாலும் விடுதலைப்புலிகளாலும் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று தான் விதித்த முன்நிபந்தனைக்கு இருதரப்பிலிருந்தும் இதுவரை எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் -

இந்நிலையில் உற்சவகாலப்பகுதியில் பக்தர்கள் மற்றும் யாத்திரிகர்கள் சுதந்திரமாக வந்து செல்லக்கூடிய சூழ்நிலை அங்கு இல்லை என்றும் - அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதினம்

மாதாவிற்கே இந்த நிலை!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.