Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பராக் ஒபாமா வருகிறார் பராக்! மாற்றம் ஏற்படுத்த வருகிறார் பராக்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பராக் ஒபாமா வருகிறார் பராக்! மாற்றம் ஏற்படுத்த வருகிறார் பராக்!

[06 நவம்பர் 2008, வியாழக்கிழமை 7:40 மு.ப இலங்கை]

கறுப்பு இன வம்சாவளியினரான பராக் ஒபாமாவை தமது நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்திருக்கின்றார்கள் வெள்ளையர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அமெரிக்க மக்கள்.

ஜனநாயக அரசியல் சமுதாயத்தில் இது ஒரு புதிய மாற்றம் மட்டும் அல்ல, பராக் ஒபாமா திரும்பத் திரும்பப் பிரகடனப்படுத்திய மாதிரி புதிய உலக மாற்றத்துக்கான அமெரிக்க மக்களின் அறைகூவலாகவும் அங்கீகாரமாகவும் கூட இது அமைகின்றது.

2000 ஆம் ஆண்டில் தெரியாமலும், 2004 ஆம் ஆண்டில் தெரிந்தும் தவறிழைத்த அமெரிக்க மக்கள், அந்தக் குற்றத்துக்குப் பிராயச்சித்தம் செய்வது போல இந்தத் தடவை நடந்துகொண்டிருக்கின்றார்கள

  • கருத்துக்கள உறவுகள்

ஓபமாவின் வெற்றி சொல்லும் செய்தி

முதலில் ஓபமாவின் வெற்றியின் முன்னால் உள்ள செய்தி அல்லது உண்மை என்னவென்றால்

அவர் ஒரு கறுப்பின ஐனாதிபதியல்ல

அவர் ஒரு அமெரிக்க ஐனாதிபதிஇதில் எந்த சமரசமும் அவர் செய்யமாட்டார்

செய்யவும் முடியாது

அடுத்தது

உலகவழக்கில் இப்போதெல்லாம் தேர்தல்களில்வாக்களிக்கும்ப???து

தனக்கு பிடித்த தலைவருக்கு வாக்களிப்பதைவிட

தனக்கு பிடிக்காத தலைவர் தெரிவாகக்கூடாதுஎன வாக்களிக்கும் பண்பே??? அதிகரித்து வருகிறது

அதாவது ஓபாமாவுக்கு விழுந்தவாக்குகளில் அதிகமானவை மீண்டும் மீண்டும் குடியரசுக்கட்சி ஆட்சிக்கு வந்தால் பொருளாதார மற்றும்........????????? பிரச்சினைகள் வளரவழிவகுக்கும் என்ற பயத்தினால் அதற்கு மாறாக விழுந்த வாக்குகளேயன்றி ஓபாமாவுக்காக விழுந்த வாக்குகள் அல்ல

இதற்கு உதாரணமாக 2002 இல் பிரான்சில் நடந்த ஐனாதிபதி தேர்தலை சொல்லமுடியும் என்னால்.

கடும்வலதுசாரியான லூபென் வரக்கூடாது என்பதற்காக 85 வீதமக்கள் சிராக் அவர்கட்கு வாக்களித்திருந்தனர்

ஆனால் 2மாதத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் அவருக்கு 25வீதமான ஆதரவே இருப்பதாக கணிக்கப்பட்டது

அதேபோல்தான் தற்போதைய ஐனாதிபதி சார்க்கோசி அவர்களும் 2007 தேர்தலில் 51வீதவாக்குகளை பெற்றுஇருந்தாலும் சில நாட்களின் பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அவருக்கு 23வீதமான ஆதரவே இருப்பதாக கணிக்கப்பட்டுள்து

எனவே இந்த முறை மாற்றப்படவேண்டும்

மக்களில் உண்மையான தலைவர் ஆட்சிக்கு வருவதற்கு என்ன செய்யலாம்?????

Edited by KUGATHASAN

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். தமிழீழத்தைத் தங்கத்தட்டில் வைத்துத் தரப் போகின்றார். எனவே அனைத்து தமிழர்களும் குஜாலாக இருங்கள்.

பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வென்றதை உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கிறது. வரலாற்றில் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு இது ஒரு அமெரிக்கத் தேர்தலாக அன்றி உலகத் தேர்தலாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், அமெரிக்க ஜனாதிபதியாக மட்டுமன்றி ஒரு உலகத் தலைவனாகவும் ஒபாமா பார்க்கப்படுகிறார்.

நாடுகளிடையே மோதல், ஆக்கிரமிப்பு, அத்துமீறல், படுகொலைகள், சுரண்டல் என நீண்டுசெல்லும் கொடுமைகளால் களைத்துப்போன மக்கள், இவை எல்லாவற்றுக்குமான ஒட்டுமொத்தத் தீர்வொன்றுக்காகக் காத்திருப்பதே ஒபாமா தொடர்பான இந்த அவர்களுடைய எதிர்பார்ப்புக்குக் காரணம் எனலாம். ஈராக், ஆப்கானிஸ்தான், சூடான், கொங்கோ, பாலஸ்தீனம், இலங்கை என நீண்டு செல்லும் முரண்பாடுகள், மோதல்கள் நிறைந்துள்ள எல்லாத் தேசங்களிலும் மக்களின் ஒரே எதிர்பார்ப்பு அமைதி. நிம்மதியான, கௌரவமான, சமத்துவமான வாழ்வு.

ஆக, உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த அல்லல்படும் மக்களின் பிரச்சினையும் இன்று ஒன்றாகத்தான் இருக்கிறது. எல்லோரும் வேண்டுவது அமைதியையே. இதை ஒபாமா பெற்றுத்தருவாரோ என்ற நப்பாசையே அமெரிக்கத் தேர்தல் ஒரு உலகத் தேர்தலாகப் பார்க்கப்படும் நிலை தோன்றக் காரணமாகியது. தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து அந்த நாயகிகளுடன் சேர்ந்து தாமும் கண்ணீர் சிந்தும் இல்லத்துப் பெண்மணிகள் வரையில் ஒபாமாவின் வெற்றி கொண்டாடப்பட இதுவே காரணமாகியது.

உலக நாடுகளின் தலைவர்களும் ஒபாமாவின் வெற்றிக்கு வாழ்த்துச் சொல்லத் தவறவில்லை. ஒபாமாவின் தேசமான கென்யாவில் ஒருநாள் விடுமுறை. பாலஸ்தீனம், கியூபா என பல தேசங்களிலும் ஒபாமாவின் வெற்றி கொண்டாடப்படுகிறது.

இந்தப் பட்டியலில் இலங்கையும் தன்னைச் சேர்த்துக்கொண்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஒபாமாவைப் பாராட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் றோகித்த போகல்லாகம பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட ஒபாமா உதவுவார் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்கள் தரப்பில் ஒபாமா தமிழர்களின் நியாயமாக கோரிக்கைகளை வென்றெடுக்க உதவுவார் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. அமெரிக்காவில், �ஒபாமாவுக்கான தமிழர்கள்�(Tamils For Obama)என்ற பெயரிலே ஒரு அமைப்பு உருவாகி, அதன் பெயரில் ஒரு இணையத்தளமும் உருவாக்கப்பட்டு ஒபாமாவின் வெற்றி தமிழர்களின் துயர் துடைக்க உதவும் என்ற நம்பிக்கை வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

ஒபாமாவின் வெற்றி தமிழர்களுக்கு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது – அமெரிக்க தமிழ் அமைப்பு

இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதி பரக் ஒபாமா குரல் கொடுப்பார் என டெமில்ஸ் போ ஒபாமா என்ற அமெரிக்க தமிழ் அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டி, தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க ஒபாமா நிர்வாகம் வழிவகை செய்யும் என எதிர்பார்ப்பதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க தமிழ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றுவரும் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு பரக் ஒபாமா கடுமையான நடவடிக்கை எடுப்பார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சேர்பியாவில் பொஸ்னிய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்காவும், ஐக்கிய நாடுகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போன்றதொரு காத்திரமான நடவடிக்கை இலங்கைத் தமிழர் விவகாரத்திலும் எடுக்கப்பட வேண்டும் என டெமில்ஸ் போ ஒபாமா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் தமிழர்களை பாதுகாக்க முடியும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த எதிர்பார்ப்புக்களையெல்லாம் ஒபாமா பூர்த்திசெய்வாரா? 2009 ஜனவரியில் அவர் அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் ஈராக், பாலஸ்தீனம் முதல் சின்னஞ்சிறு தீவான இலங்கை வரையில் உடனடியாக அமைதி நிலைநாட்டப்பட்டுவிடுமா? அதற்கான ஒரு மந்திரக்கோலை ஒபாமா கையில் வைத்துள்ளாரா?

இவையெல்லாம் ஒருவகையில் மிகையான எதிர்பார்ப்புக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இருக்கலாம். இத்தனைகால அமெரிக்க ஜனாதிபதிகளின் வரிசையில் ஒரு வித்தியாசமானவராக ஒபாமா செயற்படும் வாய்ப்புக்கள் இருக்கவே செய்கிறது. அதற்கான அறிகுறிகள் அவருடைய உரைகளில் தென்படவே செய்கின்றன.

ஆனால், உலகத்தின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்குமான தீர்வை ஒபாமா தன் சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறார் என்று எதிர்பார்ப்பதுதான் அதீத கற்பனையாகத் தெரிகிறது. �பொருளாதார நெருக்கடி� என்கின்ற அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பெரும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே ஒரு சவாலாக இருக்கும்போது, உலகப் பிரச்சினைகளையெல்லாம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பணியாற்ற அவருக்கெங்கே நேரமிருக்கப்போகிறது?

ஆனால், உலகப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் காரணம் என்ன என்பதை ஒபாமா சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார். அதை அவர் தனது தேர்தல் கால உரைகளில் தெளிவாகச் சொல்லி வந்திருக்கிறார். இன்று உலகிலிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளை அவர் Problem of Others என்றே வர்ணிக்கிறார். நிறங்களாலும், இனங்களாலும் மனிதர்கள் பிரித்தினங்காணப்படுவதே இன்றைய உலகின் பிரதான பிரச்சினை என்று அவர் சொல்லியிருக்கிறார்.

ஒபாமாவின் வெற்றி பற்றிய செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்ட பெரும்பாலான இலங்கை ஊடகங்கள் எல்லாம் �கறுப்பின ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியானார்� என்று அவரது கறுப்பின அடையாளத்தை மையப்படுத்தியே தமது செய்திகளை வடிவமைத்திருந்தன.

ஒடுக்கப்படும் இனங்களுக்கு, உலகில் -குறிப்பாக அமெரிக்காவில்- முன்பொருகாலம் கடுமையாக ஒடுக்கப்பட்ட இனமான கறுப்பினத்தவர் அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவானது ஒரு பெரு வெற்றியாகத் தென்படுவதில் ஆச்சரியமில்லைத்தான். ஆனால், எந்த அடையாளத்தை ஒதுக்கலுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று கருதுகிறோமோ, அதே அடையாளத்தை வெற்றியைக் கொண்டாடுவதற்கும் பயன்படுத்தக்கூடாது என்பதே ஒபாமாவின் கொள்கை என்பதை, அவரது வெற்றியைக் கொண்டாடுபவர்களே கவனிக்கத் தவறிவிட்டனர்.

ஒபாமா தனது தேர்தல்கால உரையொன்றின்போது சொன்ன வாக்கியம் இதற்கு விடை பகரும். �வெள்ளை அமெரிக்காவோ, அன்றி கறுப்பு அமெரிக்காவோ அல்ல, ஐக்கிய அமெரிக்கா�� என்று தமது தேசத்தை அவர் வர்ணித்திருந்ததை நம்மில் எத்தனைபேர் கவனித்தார்களோ தெரியவில்லை.

ஒபாமா தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தருவாரோ என்று எதிர்பார்த்திருப்பவர்கள் (எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மற்றையவர்களை எதிர்பார்த்திருப்பதே எமக்கு ஒரு பழக்கமாகிப் போய்விட்டது), ஒபாமா தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இந்த விடயத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

அதை அனைவரும் புரிந்துகொண்டால், நமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலிருந்து ஒபாமாக்கள் இங்கு வரத்தேவையில்லை.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இவ்விடயத்தில் நாம் 2 விடயங்களைச் செய்ய வேண்டும்.

1. சிங்கள மக்கள் மத்தியில் ஒபாமா புலிகள் சார்பானவர், சிங்களவர்களுக்கு எதிரானவர் என்று ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும். இது அவர்களுக்கிடையே இடைவெளியை உருவாக்கும். இந்தியா எப்போது எல்லாம் கொந்தளிக்கின்றதோ, அந்த நேரத்தில் சிறிலங்கா அரசு ராஜிவ் கொலையை நினைவுபடுத்தி, தமிழருக்கும், இந்தியாவிற்கும் இடைவெளியை ஏற்படுத்துவது இதே பாணியில் தான்.

2. நமது போராட்டத்தையும், மக்கள் சிங்கள அரசால் படும் அவலத்தையும் அமெரிக்க அரசுக்கு முடிந்தளவு தெளிவுபடுத்த வேண்டும். அது பயங்கரவாதம் என நினைப்பவற்றில் இருந்து நம்மைத் தூர வைத்துக் காட்ட வேண்டும். அல்லது அவ்வாறு செய்வதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும்.

இப்படி ஏதும் செய்யாமல் தங்கத்தட்டில் தமிழனுக்குத் தீர்வைப் பெறலாம், உதவுவார்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள். பிற்பாடு இதே கையால் தான் ஒபாமாவைத் திட்டி எழுத வேண்டியும் வரும்.

ஒருவன் ஆதரிக்கவில்லை என்றால் அதற்குரிய காரணங்களை நிவர்த்தி செய்து, ஆதரவாக்க வேண்டுமே தவிர, திட்டித் தீர்த்து இடைவெளியைக் கூட்டி ஏது பயன்?

முதலில் இவ்விடயத்தில் நாம் 2 விடயங்களைச் செய்ய வேண்டும்.

1. சிங்கள மக்கள் மத்தியில் ஒபாமா புலிகள் சார்பானவர், சிங்களவர்களுக்கு எதிரானவர் என்று ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும். இது அவர்களுக்கிடையே இடைவெளியை உருவாக்கும். இந்தியா எப்போது எல்லாம் கொந்தளிக்கின்றதோ, அந்த நேரத்தில் சிறிலங்கா அரசு ராஜிவ் கொலையை நினைவுபடுத்தி, தமிழருக்கும், இந்தியாவிற்கும் இடைவெளியை ஏற்படுத்துவது இதே பாணியில் தான்.

2. நமது போராட்டத்தையும், மக்கள் சிங்கள அரசால் படும் அவலத்தையும் அமெரிக்க அரசுக்கு முடிந்தளவு தெளிவுபடுத்த வேண்டும். அது பயங்கரவாதம் என நினைப்பவற்றில் இருந்து நம்மைத் தூர வைத்துக் காட்ட வேண்டும். அல்லது அவ்வாறு செய்வதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும்.

இப்படி ஏதும் செய்யாமல் தங்கத்தட்டில் தமிழனுக்குத் தீர்வைப் பெறலாம், உதவுவார்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள். பிற்பாடு இதே கையால் தான் ஒபாமாவைத் திட்டி எழுத வேண்டியும் வரும்.

ஒருவன் ஆதரிக்கவில்லை என்றால் அதற்குரிய காரணங்களை நிவர்த்தி செய்து, ஆதரவாக்க வேண்டுமே தவிர, திட்டித் தீர்த்து இடைவெளியைக் கூட்டி ஏது பயன்?

தூயவன், இவற்றை நாம் சரியான வழியில்தான் செய்யவேண்டும். கிரிக்கெட்டிற்கெதிரான ஆர்ப்பாட்டப் பேரணி போன்றோ, துண்டுப்பிரசுரம் விநியோகிப்பது போன்றோ செய்யக்கூடாது. இவற்றை உரிய முறையில், உரியவர்களால் செய்யப்படவேண்டிய ஒன்று. இதற்கு, அமெரிக்கா, மற்றும் கனடாவிலுள்ள படித்தவர்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்யவேண்டும். எமக்குக் கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் இது. சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் கைமேல் பலனிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.