Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனகரட்ணம், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தங்கியிருக்கும் விடுதியில் தடுத்துவைப்பு

Featured Replies

கனகரட்ணம், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தங்கியிருக்கும் விடுதியில் தடுத்துவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பிணையில் கடந்த புதன்கிழமை (13) வவுனியா நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வன்னி இடப்பெயர்வின் பின்னர் சிறீலங்காப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கடந்த 8 மாதங்களாக 4ஆம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தியிருந்தமை அறிந்ததே.

தற்பொழுது, வவுனியாவில் உள்ள வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தங்கியிருக்கும் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் இவரின் குடும்பத்தினரும் இவருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அடுத்த மூன்று மாதத்தக்கு, மாத இறுதி வெள்ளிக்கிழமைகளில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் வெளித் தொடர்புகளைப் பேணக்கூடாது என அரச தரப்பினரால் அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஐனாபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அரச தரப்பினரால் பணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம், சிவசக்தி ஆனந்தனிடம் தொலைபேசியில் எடுத்து அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் அழுத்தங்கள் குறித்து என்ன செய்வது என உரையாடியுள்ளார்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2955&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனகரட்ணம், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தங்கியிருக்கும் விடுதியில் தடுத்துவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பிணையில் கடந்த புதன்கிழமை (13) வவுனியா நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வன்னி இடப்பெயர்வின் பின்னர் சிறீலங்காப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கடந்த 8 மாதங்களாக 4ஆம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தியிருந்தமை அறிந்ததே.

தற்பொழுது, வவுனியாவில் உள்ள வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தங்கியிருக்கும் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் இவரின் குடும்பத்தினரும் இவருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அடுத்த மூன்று மாதத்தக்கு, மாத இறுதி வெள்ளிக்கிழமைகளில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் வெளித் தொடர்புகளைப் பேணக்கூடாது என அரச தரப்பினரால் அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஐனாபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அரச தரப்பினரால் பணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம், சிவசக்தி ஆனந்தனிடம் தொலைபேசியில் எடுத்து அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் அழுத்தங்கள் குறித்து என்ன செய்வது என உரையாடியுள்ளார்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2955&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

என்ன செய்தி இது நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்டார் எண்டு எழுதியிருக்கு !!!!

எங்கட செய்தியள் எல்லாமே இப்பிடியானதாத்தான் இருக்கு... :):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த மே மாதம் முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர்

சதாசிவம் கனகரத்தினம் கடந்த புதன்கிழமை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் தமது குடும்பத்தவர்களுடன், வவுனியாவிலுள்ள அரச சுற்று விடுதி ஒன்றில் அவர் தங்கியுள்ளார் எனத் தெரியவருகின்றது. அவருக்குப் பொலிஸ் பாதுகாப்பும் வாகன வசதியும் அரசால் வழங்கப்பட்டுள்ளன. எனினும், அவர் அங்கிருந்து வெளியே சென்று வந்தார் என்பதற்கான தகவல் எதுவுமில்லை.

நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ள அவரை அரசு தற்போதைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு வசதியாகப் பயன்படுத்துவதற்காக இவ்வாறு வைத்திருக்கின்றதோ என்ற சந்தேகமும் கூட்டமைப்பு வட்டாரங்களில் நேற்று நிலவியதை அறிய முடிந்தது.

http://www.uthayan.com/Welcome/full.php?id=2638&Uthayan1263661796

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.