Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா வருகிறார் அதிபர் ஒபாமா

Featured Replies

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தீபாவளிப் பண்டிகையன்று தனது இந்தியப் பயணத்தைத் தொடங்குகிறார்.

முன்னதாக நவம்பர் 7ம் தேதி ஒபாமா இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய மக்களின் பெரும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி 5ம் தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் இந்தியாவில் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் ஒபாமாவின் பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 4ம் தேதி இரவு இந்தியா புறப்படுகிறார் ஒபாமா. தீபாவளியன்று இரவு அவர் இந்தியா வருகிறார். முதலில் மும்பை செல்கிறார். அங்கு வர்த்தக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறா்.

பின்னர் 7ம் தேதி அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குப் போகிறார். 8ம் தேதி டெல்லி வருகிறார். அங்கு அவருக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

அன்றைய தினம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு ஒபாமா உரை நிகழ்த்துகிறார்.

தனது இந்தியப் பயணத்தை அன்று முடிக்கும் ஒபாமா அங்கிருந்து இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரிய சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

ஒபாமாவுடன் மனைவி மிச்சல் வருகிறார். ஆனால் மகள்கள் சாஷாவையும், மலியாவையும் அழைத்து வரவில்லையாம். அவர்களுக்கு ஸ்கூலில் லீவு கொடுக்கவில்லையாம், இதனால் அவர்களை விட்டு விட்டு ஒபாமா தம்பதி மட்டும் வருகிறார்களாம்.

http://thatstamil.oneindia.in/news/2010/10/06/us-president-obama-india-visit-deepawali.html

வாஷிங்டன், அக்.2: ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதை அங்கீகரிக்கும் வகையில் ஒபாமாவின் இந்தியப் பயணம் அமையும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உரைநிகழ்த்திய தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறியது: ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவுக்கு 3 நாள் பயணம் மேற்கொள்கிறார். அவரது பயணம் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒபாமாவின் பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கும்.

இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதை அங்கீகரிக்கும் வகையிலும் ஒபாமாவின் பயணம் அமையும்.

http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&artid=312301&SectionID=131&MainSectionID=131&SEO=&SectionName=World

  • தொடங்கியவர்

தற்காப்புக் கொள்கைகள் இருநாட்டு உறவை பலப்படுத்த உதவாது

அயல் நாட்டு தொழில் நெறிஞர்களுக்கான விசா கட்டண உயர்வு, வணிக அயல் பணிக்குத் தடை போன்ற அமெரிக்காவின் தற்காப்புக் கொள்கைகள் இருநாட்டு உறவை பலப்படுத்த உதவாது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வாஷிங்கடனில் அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுடன் நடத்திய சந்திப்பில், ஹெச் 1பி, எல் 1, எல் 2 விசா கட்டண உயர்வு, ஒஹையோ மாகாண அரசு அயல் பணிக்கு விதித்துள்ள தடை ஆகியன குறித்து விவாதித்தபோது இவ்வாறு கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே முதலீடும், வர்த்தகமும் தடையற்றதாக இருந்தால் மட்டுமே அது இரு நாடுகளுக்கும் உதவும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

வளரும் நாடுகளுக்கு எச்சரிக்கை

வாஷிங்டனில் நடைபெற்ற ஜி 24 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, உலகளாவிய அளவிலான பொருளாதார பின்னடைவு தங்களுடைய நாட்டைத் தாக்காமல் வளரும் நாடுகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளில் தற்போது காணப்படும் உணவுப் பொருள் விலையுயர்வு கவலையளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு மீண்டும் வளர்ச்சி நிலைக்கு வருவதில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், இதன் விளைவாக வேலை வாய்ப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தில் வளரும் நாடுகளின் வாக்கெடுப்பு பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறிய பிரணாப் முகர்ஜி, உலகப் பொருளாதாரத்தில் 47.5 விழுக்காடு பங்கு வகிக்கும் வளரும் நாடுகளுக்கு ஐஎம்எ்ப்பில் 39.5 விழுக்காடு வாக்குரிமை மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/finance/news/1010/08/1101008026_1.htm'

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் திரு பாரக் ஒபாமா அவர்களுக்கு,

இந்திய மக்களின் சார்பில் எனது அன்பும் வணக்கமும் உங்களுக்கும் உங்கள் நாட்டு மக்களுக்கும், உங்களது இரண்டு பெண் குழந்தைகளுக்கு எனதுமுத்தங்களும் உங்கள் மனைவிக்கு எனது அன்பும் இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துக்கொள்ளுகிறேன், உங்களுக்கு தமிழ் படிக்க தெரியாவிட்டாலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பலரை அமெரிக்காவில் தினம் தினம் பார்க்கவும் பழகவும் கூடும், உலகின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் கூட கணினியும் ஊடக வசதிகளும் பெருகி வருகின்ற காரணத்தால் அமெரிக்க அதிபராகிய உங்களுக்கு கடிதம் எழுதுவதற்கு கூட வாய்புகள் தற்காலத்தில் தொழில் நுட்பத்தின் முன்னேற்றம் நமக்கு வழங்கி இருப்பது மிகவும் சிறப்பானது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கருப்பு இனத்தவர்களை வெள்ளைக்கார மண்ணில் அடிமைகளாய் வேலையாட்களாய் பழக்கபட்டிருந்த காலம் மாறி வெள்ளை மாளிகையில் ஜனநாயக முறையில் தேர்வாகி அதிபர் பதவியை பெற்றிருக்கும் உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள், அமெரிக்காவின் பொருளாதாரம் சீர் குலைக்கப்பட்ட சதியிலிருக்கும் சமயம் நீங்கள் அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றது மிகவும் சாலேஞ்சிங்கான வேலை. நாட்டு மக்களுக்கு பொருளாதாரத்தை உயர்த்துவதர்க்கான திட்டங்களை வகுத்து நடைமுறைப் படுத்துவதும் எதிரிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் இன்னும் பல இழப்புகளிலிருந்து காக்கவும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதோடு அவற்றை நடைமுறை படுத்த போதுமான பணபலத்தை மேம்படுத்துவது என்பது லேசான காரியம் இல்லை.

சமீபத்தில் செய்திகளில் நீங்கள் சொன்ன கருத்து ஒன்றைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகின்றேன், அதாவது தற்போதைய இந்திய நாட்டின் படித்தவர்களது எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்திருப்பதை அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் கல்வியை கற்றவர்களது எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி எதிகால அமெரிக்காவில் படித்தோர் அதாவது கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை மிக குறைவடையும் நிலை உருவாகும் என்று கவலை தெரிவித்திருந்தீர்கள், இந்தியாவை பொறுத்த மட்டில் கல்வி கற்ப்பது என்பது தனி மனித பொருளாதாரத்தை, அந்தஸ்த்தை, தேவைகளை உயர்த்திக் கொள்வதற்கு மட்டுமே, மிகவும் முக்கியமான முதலீடாக கருதப்படுவதாலேயே, கல்வி கற்ப்பவர்களின் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது என்பதையும் உங்கள் நாட்டைப்போல தங்களுக்கு பிடித்த கல்வியை அல்லது தங்களது ஆர்வத்திற்கு ஏற்ற வேலையை தெரிவு செய்து அதை கண்ணும் கருத்துமாக இறுதி வரையில் செய்து முடிப்பவர்கள் எங்கள் நாட்டில் எண்ணிக்கையில் கோடியில் ஒருவராக இருப்பது கூட கடினம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

கல்வி என்பது இங்கே பொருளீட்டும் கருவியாக இருப்பதினாலே எந்த துறையை சார்ந்த படிப்பை படித்தால் அதிக வருமானம் ஈட்ட முடியுமோ அந்த கல்வியை டொனேஷன் என்ற பெயரில் பெரும் தொகையை கல்வி ஸ்தாபனங்கள் வசூலித்தாலும் வங்கியிலோ கந்து வட்டியாகவோ கடனை பெற்றாவது குறிப்பிட்ட கல்வியை படிக்க தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கும் நிலை வேரூன்றி எங்கும் காணப்பட்டது, சமீப காலமாக அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கும் கல்வி ஸ்தாபனங்களைத் தவிர அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிலையங்களின் மீது மக்கள் கூட்டம் கூடி எதிர்த்து அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கும் புதிய மாற்றம் ஒன்று செய்திகளில் கடந்த சில மாதங்களாக வெளியாகி வருகிறது, இந்த நிலை வேறு என்ன விதமான மாற்றங்களை அடையப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேலை கிடைக்கும் வரையில் ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி அந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்ற துப்புரவு தொழிலாளி தொடங்கி எந்த பணியில் இருப்பவராக இருப்பினும் அவர்களுக்கு மரியாதையோ மரியாதை என்று அள்ளி அள்ளி கொடுப்பவர்கள், லஞ்சம் என்கின்ற அன்பளிப்பை எந்த வகையிலெல்லாம் கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் வாரி வழங்கி, காலையில் அலுவலகத்தை திறப்பதற்கு முன்பே அதன் வாசலில் மணிக் கணக்காய் காவல் நின்று வேலைக்கான உத்தரவு கையில் கிடைத்து பணி நிரந்தரம் ஆகும் வரையில் 'இந்த பூனையும் பால் குடிக்குமா' என்பது போல உங்கள் ஊரில் இருக்கும் ஹாலிவுட் நடிகர்களை தோற்கடிக்கும் விதத்தில் நிஜ வாழ்க்கையில் அபாரமாக நடித்து பணி நிரந்தரத்திற்கு பின்னர் நீங்கள் பார்க்க வேண்டுமே, அடடா என்ன இருந்தாலும் இந்தியர்களின் அபார தொழில் டெடிகேஷனை,

நீங்கள் அமெரிக்காவில் பார்க்கும் இந்தியர்களை மனதில் வைத்துக் கொண்டு எல்லாரையும் ஒரே மாதிரி நினைத்துவிடாதீங்க, டாலருக்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் உங்கள் சட்ட திட்டங்களை கை கொண்டு ஒழுங்காக வேலை செய்வார்கள் இல்லையென்றால் சீட்டை கிழித்திடுவாங்களே; ஆனால் தங்கள் சொந்த நாட்டில் ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்தான். எங்கள் நாட்டிற்கு நீங்கள் வருகை தரவிருப்பதாக செய்தி ஒன்றில் படித்த ஞாபகம், அப்படி இங்கே வந்தால், வேண்டுமென்றால் மாறுவேடம் போட்டுக்கொண்டு அரசு அலுவலகங்களை ஒரு பார்வையிடுங்களேன், அப்போது தெரிந்துவிடும் உங்களுக்கு. ஒவ்வொருவருக்கும் எத்தனை தொழில் விசுவாசம் உள்ளது என்பது,இன்னும் நிறைய எழுத இருந்தாலும் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை என்பதால் இங்கு தற்போது முடித்துக் கொண்டு பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரையில் நான் எழுதிய இந்த நீண்ட கடிதத்தை நீங்கள் உங்களது வேலைகளுக்கிடையே பொறுமையுடன் படித்ததற்காக நன்றி, மீண்டும் உங்கள் நாட்டு பிரஜைகளுக்கும், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு எனது அன்பும் வணக்கமும் உங்களுக்கு எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மிக்க நன்றி, வணக்கம்'

இப்படிக்கு,

ரத்னா

இந்திய பிரஜை.

  • தொடங்கியவர்

வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா மேற்கொள்ள உள்ள இந்தியப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இரு நாடுகளிடையிலான உறவில் ஒபாமாவின் பயணம் புதிய அத்தியாயமாக இருக்கும் என்றார்.

மேலும் அவரது பயணம், இரு நாடுகளிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, அனைத்துத் துறைகளிலும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளைப் பிரகாசப்படுத்தியுள்ளது.

இரு நாடுகளின் நலன் மட்டுமின்றி சர்வதேச அளவில் பயன்பெறும் வகையில் ஒபாமாவின் இந்தியப் பயணம் அமையும். இரு நாடுகளில் நிலவும் உறுதியான அரசியல் சூழல் இதற்கு உறுதுணையாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1010/15/1101015015_1.htm

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

- அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்காக மும்பையில் தாஜ் ஓட்டல் முழுவதும் 2 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

- ஊழியர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

அமெரிக்க அதிபர் ஒபாமா தமது இந்திய பயணத்தின் போது நவம்பர் 6, 7 தேதிகளில் மும்பை வருகிறார். அப்போது தாஜ் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். இதற்காக, 2 நாட்களுக்கு அந்த ஓட்டல் முழுவதும் ஒபாமாவுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தங்கும் 2 நாட்களும் ஊழியர்களை தவிர வேறு வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

ஒபாமாவுடன் வரும் அதிகாரிகள், ரகசிய படை வீரர்கள் தங்குவதற்காக கஃப் பரேடில் உள்ள தாஜ் பிரசிடென்ட் ஓட்டலில் கூடுதலாக 135 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒபாமா தங்கியிருக்கும்போது ஓட்டலை சுற்றி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஓட்டல் அருகே கடலில் இந்திய கடற்படை கப்பல்கள் மட்டுமே நிற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற கப்பல்களை நீண்ட தூரத்தில் நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=7874

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.