Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடிய தமிழ் வானொலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஒரு பரப்புரைப் போரை நடத்தி வருகிறது.

Featured Replies

வணக்கம். மேற்கு நாடொன்றில் இருந்து கொண்டு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் "மக்களுக்கு உதவ முடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறோம்" என்று சொன்னதை வைத்துக் கொண்டு "பின் எதற்காக இவர்கள் எம்பிகளாக இருக்கிறார்கள்?" என்று கேட்பது நல்ல வேடிக்கை.

இதே கேள்வியை அந்த மண்ணில் இருந்து கொண்டு நீங்கள் கேட்டிருந்தால் உங்களை நான் பெரிய துணிச்சல்காரன் என்று அழைத்திருப்பேன். உயிருக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடிவந்த நீங்கள் (நானும்தான்) அந்த மண்ணில் உயிர் ஆபத்துக்கு மத்தியில் செயல்படும் நா.உறுப்பினரை (களை) தரக் குறைவாக விமர்ச்சிப்பது உங்களுக்கு அதிகப் பிரசங்கத்தனமாகப் படவில்லையா? யோகேஸ்வரன் போன்றோரை யோசேப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், சிவநாதன், மகேஸ்வரன் சென்ற பாதையில் மேலுலகம் அனப்பி வைப்பதுதான் உங்கள் ஆசையா?

வட -கிழக்கு இன்று இராணுவத்தின் இரும்புப் பிடியில் இருக்கிறது. பயங்கரவாதச் சட்டத்தின் கீழும் அவசரகால விதிகளின் கீழும் இராணுவத் தளபதிகளால் ஆட்சி நடைபெறுகிறது. தமிழ் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு இராணுவமே கட்டளை இடுகிறது. தமிழ் ஊழியர்கள் வெறும் பொம்மைகளாகவே இயங்குகிறார்கள்.

உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும். கனடிய தமிழ் வானொலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஒரு பரப்புரைப் போரை நடத்தி வருகிறது. சென்ற தேர்தலில் தேசியத்துக்கான தமிழ் மக்கள் முன்னணி என்ற நொண்டிக் குதிரை மீது காசைக் கட்டி மூக்கை உடைத்துக் கொண்டது. தேர்தலுக்கு முன் அப்படியான ஒரு மலட்டு நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்றால் தேர்தலுக்குப் பின்னும் அது தொடர்கிறது என்பதுதான் சோகம்!

உள்ளுராட்சி தேர்தலில் கனடிய தமிழ் வானொலியின் "பஞ்சகல்யாணிக் குதிரை" ஓடும் என்று பார்த்தால் தொடக்கத்திலேயே அது கீழே படுத்துவிட்டது. கேட்டால் யாழ்ப்பாணம் இராணுவத்தின பிடியில் இருக்கிறது அங்கு கொலை கொள்ளை நடக்கிறது தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை எனவே தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து விடடோம் என்று சொல்கிறது. இது ஆடத் தெரியாதவள் கூடம் கோணல் என்று சொன்னவள் கதையை நினைவு படுத்துகிறது. இதுபற்றி உங்களை நேர்காணல் கண்ட அறிவிப்பாளர் ரவீன் கேள்வி கேட்க வசதியாக மறந்து விட்டார்! இன்னும் ஒன்று. தங்களது பாட்டுக்கு தாளம் போடும் அரசியல் ஆய்வாளர்களையே காற்றலைக்கு கொண்டு வருகிறார்கள். திரு துரைரத்தினம், வரதராசா, நிலவன் போன்றோரை - தங்கள் பாட்டுக்குத் தாளம் போட மறுப்பவர்களை - ஓரங்கட்டிவிட்டார்கள்!

அது சரி. எத்தனை நாளைக்கு யாழ்ப்பாணத்தில் வாக்களித்தவர்கள் தொகை மிகக் குறைவு என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? வட - கிழக்கில் 5 தேர்தல் மாவட்டங்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தை மட்டும் ஏன் தூக்கிப் பிடிக்கிறீர்கள்? ஏனைய மாட்டங்களில் போடப்பட்ட வாக்கு விழுக்காட்டை ஏன் நீங்கள் கணக்கில் எடுப்பதில்லை? அது உங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதுதானே காரணம்?

எந்த மணித்துளியும் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்ச்சிக்கும் போது கொஞ்சம் நாகாத்தல் நல்லது.

நக்கீரன்

thangav <athangav@sympatico.ca>

  • கருத்துக்கள உறவுகள்

ரவீன், சக்தி, பொன்னையா விவேகானந்தன் உள்ளிட்ட பல அறிவிப்பாளர்களுக்கு தமிழர் தாயகம் தொடர்ந்து கொதி நிலையில் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.

அவர்களுக்கு அந்த மக்களைப் பற்றி சிறிது கூட கரிசனை இல்லை என்றே கூற வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏதோ அரசு சார் கட்சியாக சித்தரித்து பரப்புரை வேலை செய்வது என்று முடிவு எடுத்திருக்கின்றனர். இதற்கு அந்த வானொலியின் இயக்குநர் ஸ்ரானும் ஒரு காரணம் என்பதனை இந்த இடத்தில் குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன்.

Edited by nirmalan

தாயகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தம்மிடம் உள்ள "தாம் மக்கள் பிரதிநிகள்" என்ற பலத்தை இன்னும் கூடுதலாக பயன்படுத்தலாம். இது அமைச்சர்களாக, பிரதி அமைச்சர்களாக, எம்.பி.க்களாக, கட்சி பிரதிநிகளாக உள்ள எல்லாருக்கும் பொருந்தும்.

இவர்கள் உலகம் "பயங்கரவாதிகள்" என்று சொல்லப்போவதில்லை. நிச்சயமாக சிங்களத்தால் உயிருக்கு பாதுகாப்பின்மை உள்ளது, இது பல (அப்பாவி) தமிழர்களுக்கு கூட உள்ளது. எனவே, மக்கள் பிரதிநிகள் என்ற வகையில் இவர்கள் மக்களின் பிரச்சனைகளை, அத்தியாவசிய பிரச்சனைகளை சனநாயக முறையில் தீர்க்கவேண்டும், தீர்க்க முயலவேண்டும்.

இந்த செய்தி இரண்டு நாள் முதலே மனிதனில் பதியபட்டிருந்தது.இது ஒரு தேவையில்லாத விடயம் என்றுதான் நான் வெட்டி ஒட்டவில்லை.இந்த நக்கீரன் ஐயா! ஒரு கூட்டணியின் பழுத்த பழம்.சென்ற வருடமும் புரளிகளை கிழப்பியவர். நான் எல்லாரிடமும் கேட்கும் கேள்வி?கொழும்பு தொகுதியை மனோ கணேசன் என்ற தமிழனுக்கு ஏன் ஒதுக்ககூடாது?உங்களால் டெல்லியின் குசினிவரைதான் போகமுடியும்,ஆனால் மனோகணேசன் என்ற தமிழனால் வெள்ளை மாளிகை முன்வாசலால் போகமுடியும்.விலகி நின்று அவனை செல்ல விட முடியுமா?அல்லது முட்டுகட்டையா?இது ஒரு உதாரணம் தான்

ஏன் நக்கிரன் ஐயா! வன்னி இறுதிகட்ட போரின் போது டொரொன்டோவில் அமெரிக்க தூதகரத்துக்கு முன்னால் எமது உறவுகளை காப்பாற்ற நாம் துடியாய் துடித்தபோது ஒரு சிறுவனுடன் வந்து என்ன கேவலமான வேலை செய்தவர் என்பது அவருக்குத்தான் தெரியும்(எமது போராட்டத்துக்கு எதிரான இறுவட்டுக்களை வினியோகித்தவர்தான்)

இந்த சிரிஆர் வானொலி தொண்டை கிழிய கத்தி மக்களிடம் உதவி கேட்டு அதை வாங்கி

சீரொட் மூலமாகவும்,சில கூட்டணி உறுப்பினர்கள் மூலமாகவும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது பிழைகளை தட்டிகேட்கவும் உரிமையுண்டு.முடிந்தால் நக்கீரன் ஐயாவுடன் நேரடி விவாதத்திற்கும் தயார்

  • கருத்துக்கள உறவுகள்
<_< கூத்தமைப்பிற்கெதிராக வேறு யாரும் பரப்புரை செய்யத் தேவையில்லை. அதற்குள் இன்று நடந்துவரும் குத்து வெட்டுக்களைப் பார்த்தால் தாங்களே தங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்துவருகிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்த லட்சணத்தில் யாரோ பரப்புரை செய்கிறார்களாம் என்கிற கனவுப் பிணாத்தல்கள் வேறு ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.