Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விசாரணைகளை வலியுறுத்தினார் பிரதமர் டேவிட் கமரூன்

Featured Replies

இலங்கையின் கொலைக்களம்: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது! - விசாரணைகளை வலியுறுத்தினார் பிரதமர் டேவிட் கமரூன்!!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு (14.06.11) ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கொன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் பிரதமர் டேவிட் கமரூனிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இக்கேள்விக்கும் பதிலளித்த பிரதமர் டேவிட் கமரூன்,

இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமானதும், காத்திரமானதுமான விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படத்தில், வன்னியில் பொது மக்கள் செறிவாக வாழ்ந்த இடங்களிலும், வைத்தியசாலைகளிலும் சிறிலங்கா படைத்தரப்பினர் ஷெல் தாக்குதலை மேற்கொண்டமைக்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் இதன்போது காயமடைந்து இரத்தம் தோய்ந்து கதறி அழுவதை இந்த ஆவணப்படத்தில் காண முடிகின்றது.

விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் உயிரிழந்த நிலையில் நிர்வாணமாக டிரக் வண்டிகளில் ஏற்றப்படுவதோடு, நிர்வாணமாகக் காணப்படுபவர்களை நோக்கி சிறிலங்கா படைத்தரப்பினரால் கூறப்படும் தகாத வார்த்தைகளையும் இந்த ஆவணப்படத்தில் சனல் 4 தொலைக்காட்சி தகுந்த சான்றுகளுடன் வெளிப்படுத்தியிருந்தது.

சிறிலங்கா படைத்தரப்பினரால் விடுதலைப் புலிகளின் ஆண் போராளிகள் சுட்டுக் கொள்ளப்படும் காணொளிகளை முன்னர் ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சி, தற்போது பெண் போராளிகளும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இவ்வாறு சுட்டுக் கொல்லபடும் காட்சிகளையும் ஒளிபரப்பியிருந்தது.

அதேவேளை, வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் அவசியம் என்ற தீர்மானத்தை கோரும் மனுவொன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இப்போரின் போது சர்வதேச மனிதவுரிமைகள் மற்றும் மனிதாபிமாகச் சட்டங்களை மீறி சிறிலங்கா படைத்தரப்பு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட வேண்டும் எனத் தெரிவித்து பிரித்தானியாவின் கொன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட்டும், இணைந்து மனுவொன்றை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.

இம்மனு தொடர்பான விவாதம் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இதுவரை நடைபெறாத போதிலும், இலங்கையின் கொலைக்களம் என்ற சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பார்வையிட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பான கலந்துலையாடல் ஒன்றை தொழிற்கட்சிக்கான தமிழர் அமைப்பு (Tamils for Labour) இன்று மாலை 6.30 மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இக்கலந்துரையாடலில் தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டக்லஸ் அலெக்ஸான்டர் (Rt Hon Douglas Alexandra MP - Shadow foreign secretary) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={DBF04571-A566-4D03-87AF-79ADE56F9662}

போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்க பிரித்தானியா சகல வழிகளிலும் முயலும்! - அமைச்சர் Alistair Burt

நேற்றிரவு சனல் 4 தொலைக்காட்சி 'இலங்கையின்; கொலைக்களம்' எனும் கொடுரம் நிறைந்த ஆவணப்படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து இப் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சு சிறிலங்கா அரசக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

'இந்த காணொளி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது' என்கிறார் பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சர் Alistair Burt. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதற்கான வலுவான ஆதாரங்களை இவ் ஆவணப்படம் முன்வைத்துள்ளது. இந்த போர்க்குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சிறிலங்காவைத் தூண்டுவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து பிரித்தானிய அரசு 'சகல வழிகளிலும்' முயற்சியை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Edited by akootha

  • தொடங்கியவர்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம்!

பிரித்தானியாவின் நாடாளுமன்ற வளாகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் ஒன்று நாளை வியாழக்கிழமை (யூன் 16) இடம்பெற இருப்பதாக நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம், பிரித்தானியா அரசியல் மட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நா.த.அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கெடுக்கின்றனர்.

தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் - பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுதல் தொடர்பிலான விவகாரம் மற்றும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் நா.த.அரங்சாங்கத்தின் வகிபாகம் ஆகிய விடயங்களை முன்னிறுத்தியதாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐநா நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவாறு, அனைத்துல நீதிவிசாரணை மற்றும் அனைத்துலக பொறிமுறை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவினையும், இதற்கான அழுத்தம் அரச மட்டத்தில் மேற்கொள்வதற்கு வேண்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={56CCC48A-082B-454F-BC29-650A53F6A317}

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.