Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8557
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    88030
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46819
    Posts
  4. போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    4
    Points
    6134
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/26/20 in Posts

  1. சிரித்து... வயிறு நோகுது. தமிழக அரசியல் மீம்ஸ் பகுதிக்காக... இந்தப் படத்தை எடுக்கின்றேன்.
  2. அத்தான்..என்னத்தான்..! "கொரானா" தொற்றை தவிர்க்க உலகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் அடைந்து கிடக்கும் குடும்பஸ்தர்கள், மனைவியை கவர பின்வரும் அருமையான யுக்திகளை கையாண்டால், எப்பொழுதும் இன்பமே..! 21 வாழ்வியல் சூத்திரங்கள். 1. வீடு மனைவியின் அதிகார வரம்பிற்குட்பட்டது. அங்கு நீங்கள் அதிகாரம் செலுத்த முயலாதீர்கள். கிட்டாதாயின் சட்டென மற. 2.எப்போதும் அடக்கத்தை கடைப்பிடியுங்கள். அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். 3.வீடு என்பது நீங்கள் தங்குவதற்கு விசா பெற்றுள்ள இடம். குடியுரிமை பெற முயற்சிக்காதீர்கள். வினாச காலம் விபரீத புத்தி. 4.உங்கள் அன்றாட கடன்களையும் கடமைகளையும் அனுமதி பெற்று கைக்கொள்ளுங்கள். அனுமதி ஒரு வெகுமதி. 5.உணவும் பானங்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் உடனடியாக கிடைக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்து விடாதீர்கள். கிடைக்கும் நேரத்தில் மறக்காமல் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஆசைப் பட்டால் அவஸ்தை. 6. சும்மா இருக்குறதுக்கு ஒட்டடை அடிக்கலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் ஒட்டடை அடித்து விடுங்கள். இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான முதல் கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். முந்தினால் முதலுக்கு மோசமில்லை. 7. சும்மா இருக்குறதுக்கு ஃபேன் துடைக்கலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் ஃபேன் துடைக்க ஆரம்பியுங்கள். ஏங்க ஜாக்கிரைதைங்க, பாத்து க்ளீன் பண்ணுங்க என்று கரிசன வாசகம் உங்கள் காதுகளை எட்டும். இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான இரண்டாவது கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். சுத்தம் சோறு போடும். 8. சும்மா இருக்குறதுக்கு அந்த பாத்ரூமை க்ளீன் பண்ணலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் பாத்ரூம் க்ளீன் பண்ண ஆரம்பியுங்கள். ஏங்க இதையெல்லாம் நீங்க பண்றீங்க, வேலையாள் வச்சி பண்ணிக்கலாங்க என்று கரிசன வாசகம் உங்கள் காதுகளை எட்டும். இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான மூன்றாவது கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். சுத்தம் சுபம். 9. இப்போது சிங்க்கில் இருக்கும் பாத்திரங்களை கழுவ துவங்குங்கள். ஏங்க, இதெல்லாம் நீங்க செய்யிற வேலையாங்க, போயி பேப்பர் படிங்க, டீ போட்டு எடுத்துட்டு வர்றேன் என்று ஒரு வாசகம் வரும். அது திருவாசகம். இப்போது உங்கள் மதிப்புயர்வு உறுதியாகி விட்டது. பாத்திரம் அன்புக்கு பாத்திரம். 10. அழுக்கு துணி களை சேகரித்து வாஷிங் மிஷினில் போடுங்கள். பின், இன்னும் ஏதாவது இருக்காம்மா என்று தணிந்த குரலில் கேளுங்கள். பின்னர் வாஷிங் மிஷினை இயக்கி விட்டு நாற்காலியில் அமருங்கள்.இப்போது நீங்கள் கால்மேல் கால் போட்டு தைரியமாக அமரலாம். உங்கள் மதிப்புயர்வு ஏற்கனவே உறுதியாகி விட்டதால் உங்களுக்கு ஒன்றும் ஆகாது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள். 11. இனி வாஷிங் மிஷின் துவைத்த துணிகளை மாடிக்கு எடுத்து சென்று கொடியில் கிளிப் போட்டு காய வையுங்கள்.இது மிக முக்கியமான செயல். தவறினால் கஷ்டப்பட்டு கிடைத்த மதிப்புயர்வு பரமபத பாம்பிடம் சிக்கியதைப்போல் சர்ரென சருக்கி விடும். கவனம் கவசம். 12. துணி காய வைத்தபின் வீட்டுக்குள் (கால்மேல் கால் போட்டு) அமர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இப்போது உங்களுக்கு ஒரு டீ அன்பு கொஞ்சம் தூக்கலாக வழங்கப்படும். அசந்து விடக்கூடாது. மெல்ல எமுந்து, பெட்ஷீட், தலையனை போன்றவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்த டீ வழங்கப்பட்டது என்பது பிறிதொரு யோசனையில்தான் புரியவரும். காரணமில்லாமல் காரியமில்லை. 13. சாப்பாட்டு நேரம். ஆச்சரியமாயிருக்கும். உங்களுக்கு பிடித்த உணவு வகைகள் வரிசை கட்டி நிற்கும். இந்த உள்ளடங்கு காலத்துல எதுக்கும்மா இவ்வளவு சிரமம் எடுத்துக்கிறே என்று (சம்பிரதாயமாகவாவது மறக்காமல்) கூற வேண்டும். புகழோடு தோன்றின் இகழ் இல்லை. 14. உண்டபின் அமைதியாக உறங்கி ஓய்வு எடுக்க அனுமதி உண்டு. வாய்திறக்க அனுமதி இருந்தாலும் அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பு. ஆதலின் மௌனமாய் இருத்தல் நன்று. 15. உறங்கி எழுந்த பின் அற்புதமாய் ஒரு டீ வரும். நீங்கள் ஆனந்தமாய் அதை பருகலாம். அதன்பின், காயப்போட்ட துவைத்த துணிகளை எடுத்து வந்து விட வேண்டும். இதில் காலதாமதம் வேண்டாம். நீங்கள் ஆனந்தமாய் பருக வழங்கப்பட்ட டீ இதற்காகத்தான் என்பது விரைவில் புரிய வரும். செய்கை நன்றே. 16. இப்போது அதி தீவிரமான கண்கானிப்புக்கு ஆட்படுவீர்கள். நீங்கள் காய வைத்து எடுத்து வந்த துணிகளை மடித்து வைக்க வேண்டும். இல்லையேல் பரமபத பாம்பு வேலை நடந்து உங்கள் அறிவு கூறாக்கப்பட்டுவிடும் ஜாக்கிரதை. முடிவே விடிவு. 17. நீங்கள் இப்போது ஆல் பாஸ் கேட்டகரியில் உள்ளீர்கள். நிம்மதி நிச்சயம். இரவு உணவு ஏக சுவையாய் பரிமாரப்படும். எப்பிடித்தான் இவ்வளவு வேலையை இழுத்துப்போட்டு செய்றியோம்மான்னு சொல்லீட்டி ( இங்க ரிப்பீட் அனுமதிக்கப்படும்) உறங்கப் போயிரனும் நல்ல பிள்ளையாய். புகழுரை தெளிவுரை. 18. இந்த தினசரி யதார்த்தங்களைத்தவிர, உங்கள் கவனத்தை பரண் மேல் ஒரு நாள் இருத்த வேண்டும். பரண் சுத்தம் பரம சௌக்கியம். 19. இதேபோல் அலமாரியின் மேல் கவனம் செலுத்த வேண்டும்.அற்புத பலன் தரும். அற்புத பலன் தரும் அலமாரி சுத்தத்தை அவ்வப்போது மேற்கொள்வதால் இல்லத்தில் ஆனந்தம் தாண்டவமாடும். அலமாரி அருள் மாரி. 20. கொஞ்சம் கஷ்டமானாலும் கடினம் பாராமல் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, ஒவ்வொரு நாளும் வீட்டின் ஏதாவது ஒரு மூலையை தேர்வு செய்து மூலை சலவை, அதாவது மூலையை சுத்தம் செய்ய வேண்டும். மூலை சலவை மூளை சலவை போக்கும். 21. நீங்கள் அறிவாளி🤔 என்பதையோ, புத்திசாலி🥱 என்பதையோ எப்போதும் நினைவில் கொள்ளாதீர்கள். கொண்டது கொல்லும். மேலே உள்ள 21 சூத்திரங்களையும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நினைவில் இருத்துங்கள். சூத்திரம் சாத்திரம், 21 நாட்கள் மட்டுமல்ல, 21 யுகங்கள் கூட நீங்கள் வெற்றிகரமான குடும்பஸ்தனாக இருக்கலாம். வாழ்த்துக்கள்..! -வாட்ஸ்அப்பில் வந்தது..
  3. நினைவு நாளா..? அது பற்றி எனக்கு தெரியாது.. பாடல் ஞாபகம் வந்தது,கேட்டேன்.. ஜஸ்ட் கோயின்சிடன்ஸ்..! இவ்ளோ பெரிய மண்டையை போட்டு பயமுறுத்தாதீங்க..கவி..!
  4. கெட்டதில் நடந்த நல்லது ================== வானம் விமானப் பறவைகளின் தொந்தரவில்லாமல் நிம்மதியாய் கிடக்கிறது. வீதிகள் அதிக வாகன நெரிசலும் ஒலிகளும் குறைந்து நிம்மதியாய் உறங்கிக் கிடக்கிறது. கடைத்தெருக்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. தொழில் தொழிலென்று குடும்பத்தை மறந்தவர்களின் வாகனங்கள் ஒய்வுபெற்றுக் கிடக்கிறது. படிப்பு படிப்பு என்று புலமைப்பரிசில் பைத்தியத்தில் உணவு உண்ணக்கூட நேரமில்லாமல் பிள்ளைகளை துரத்திய பெற்றோர்களின் தொல்லைகளிலிருந்து பிள்ளைகள் நிம்மதியாய் இருக்கிறார்கள். கொன்றுவிடும் என்ற பயம்தான் வேத புத்தகங்களை மீண்டும் தூசுதட்ட வைத்திருக்கிறது. பிள்ளைகளோடு சேர்ந்து இப்பொழுதுதான் பெற்றோர்கள் தங்கள் பொழுதுகளைக் கழிக்கிறார்கள். குடும்பங்களையும் பெற்ற தாய் தந்தையையும் இப்போதுதான் பலருக்கு ஞாபகம் வந்திருக்கிறது. சிறுகாயத்திற்கும் ஆங்கில மருந்தில் மூழ்கிக் கிடந்த உலகம் இப்போது பெருங்காயம் தேடி அலைகிறது. உயர்ரக உணவு என்று நச்சுக்களை உண்ட சமூகம் இப்போதுதான் இலைவகைகளை தேடி அலைகிறது. மஞ்சளும் சீரகமும் இப்போதுதான் கிராக்கி ஆகிப் போயிருக்கிறது. கைகளை சுத்தம் செய்து கொள்வது அடிப்படை சுத்தமாக இருந்தாலும் இப்போதுதான் அது அமுலுக்கு வந்திருக்கிறது. அடுத்தவர் முகங்களுக்கு நேரே தும்மக் கூடாது என்ற பண்பாடெல்லாம் இப்போதுதான் சட்டமாகியிருக்கிறது. காலை உணவு கடைகளில் சாப்பிட்ட காலம் மாறி இப்போதுதான் வீடுகளில் சமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பிட்டும் இடியப்பமும் குரக்கன் கஞ்சியும் பறாட்டாவுக்கு பதிலாக உண்ணலாம் என்று குழந்தைகளுக்கு கூட இப்போதுதான் தெரிந்திருக்கிறது. பர்கரும் சிக்கண் பண்ணும் கொத்தும் பிறைட் றைசும் மட்டும்தான் இரவுச் சாப்பாடு என்று நினைத்த குழந்தைகளுக்கு இப்போதுதான் தெரிகிறது முருக்கை இலை சுண்டலும் முட்டைப்பொரியலும் சுடு சோறும் சம்பலும் கூட இரவு உணவாய் உண்ணலாமென்று. வீதிகளும் வீடுகளும் என உலகமே சூழலை சுத்தப்படுத்திக் கொண்டுள்ளது. கூடியிருந்து குடும்பமாய் இப்போதுதான் மூன்று வேளை உணவையும் ஒன்றாக உணவருந்துகிறார்கள். இனம் மதம் மொழி என துவேஷம் பேசிய எல்லா குரலும் ஒரே மந்திரம் உச்சரிக்கிறது "கொரோனா" என. அடுத்தவனை சுரண்டி வாழ்ந்த உலகம் அடுத்தவனின் மூச்சுக்காற்றைக் கூட சுரண்டக் கூடாதென்று மூடிக்கொண்டு அலைகிறது. எல்லோருக்கும் நாட்டில் நல்லது நடந்தாலும் அத்தியவசியதுறை மட்டும் அழுது கொண்டிருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.