Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஜெகதா துரை

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    9
    Points
    802
    Posts
  2. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    1866
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    16477
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/06/21 in Posts

  1. மாவிட்டபுரத்து வெத்திலை......! 😁
  2. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 27, ஐப்பசி , 2006 கருணா பலநூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கடத்திச் சென்றிருக்கிறார் - லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை கட்டுரை உள்நாட்டு மற்றும் சர்வதேச மனிதநேயத் தொண்டு நிறுவனங்களை ஆதாரம் காட்டி லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிக்கையான "தி டைம்ஸ்" வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இன்றுவரை கருணாவும் அவரது சகாக்களும் குறைந்தது 900 சிறுவர்களைக் கடத்திச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தது துணை ராணுவக் குழுவின் நடவடிக்கைகள் இலங்கையில் தற்போது நடந்துவரும் வன்முறைகளுக்குப் பிரதானமான காரணமாக அமைவதோடு, குறைந்தது 2000 அப்பாவிகள் இவ்வருடத்தில் கொல்லப்படுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறதென்றும், 2002 இல் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடிப்படையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை பெரும் நெருக்கடியில் தள்ளி முற்றான போர் ஒன்றினை நோக்கி நாட்டினை இழுத்துச் செல்லும் ஒற்றைக் காரணியாக கருணா குழுவின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் இச்செய்தி மேலும் கூறுகிறது. டைம்ஸ் நிருபர் மட்டக்களப்பில் பொதுமக்களுடனும், தொண்டு நிறுவன ஊழியர்களுடனும் பேசியிருந்தார். அவர்களின் கருத்துக்களை இப்பத்திரிக்கை பின்வருமாறு வெளியிட்டது. "அரசாங்கத்திற்காகவே கருணா சிறுவர்களை நூற்றுக்கணக்கில் கடத்துவதாகவும், அவர்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும் கண்காணிப்புக் குழுவினரும், தொண்டு நிறுவன அதிகாரிகளும் உறவினர்களும், சாட்சிகளும் கருதுகிறார்கள்". "எமது பிள்ளைகளுக்கு நடக்கும் அநியாயத்தில் இந்த அரசாங்கத்திற்கும் பங்கிருக்கின்றதென்பதை மக்கள் நம்புகிறார்கள்" என்று ஒரு தொண்டு நிறுவன அதிகாரி கூறினார். "கருணா குழுவிற்கும் அரசுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக இங்கு மக்கள் நினைக்கவில்லை. அவரை இயக்குவது அரசுதான் என்பதில் எமக்குச் சந்தேகமில்லை" என்று பெற்றோர் ஒருவர் கூறினார். "கறுப்பு உடையிலும், சாதாரண உடையிலும் கனரக ஆயுதம் தரித்த கருணா குழு உறுப்பினர்கள் ராணுவ வாகனங்களிலும், பொலீஸ் வாகனங்களிலும் அவர்களுடன் சேர்ந்து பவனிவருவதை நாம் தினமும் காண்கிறோம்" என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும், மட்டக்களப்பு நகர்வாழ் மக்களும் தெரிவிக்கின்றனர். "வெலிக்கந்தைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கருணா குழுவின் முகாம்களுக்கு பல டசின் கணக்கான ராணுவச் சோதனைச் சாவடிகளைத் தாண்டி கடத்தப்பட்ட சிறுவர்களை கருணா குழு இழுத்துச் செல்ல ராணுவம் அனுமதிக்கின்றது" என்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவிக்கின்றது. "கருணா துணைப்படையின் அரசியல்த்துறை எனும் பெயரில் பல அலுவலகங்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவ முகாம்களுக்கு மிக அருகில் அக்குழு அமைத்துவருவது அரசின் துணையுடனேயே இது நடப்பதை உறுதிப்படுத்துகிறது" என்று அப்பத்திரிக்கை மேலும் தெரிவிக்கிறது. தமது பிள்ளைகளை கருணா குழு பலவந்தமாகப் பிடித்துச் சென்று ஆயுதப் பயிற்சியிலும், கட்டாய வேலையிலும் அமர்த்தியிருப்பதை வெளியில் சொன்னால் கொல்லப்படுவோம் என்கிற அச்சத்தில் உறைந்துபோயிருக்கும் தாய்மாரின் சாட்சியங்களையும் நிருபர் பதிவுசெய்தார். இப்பத்திரிக்கையின் அரசியல் ஆய்வாளரிடம் இந்த நிருபர் வினவியபோது, "இன்று நடைபெற்றுவரும் சம்தானப் பேச்சுவார்த்தைகளின் பிரதான முட்டுக்கட்டையாக இருப்பது இக்குழுவினரின் செயற்பாடுகள்தான்" என்று தெரிவித்திருப்பதோடு, "நீண்டகாலமாக இலங்கையில் இடம்பெற்றுவரும் கொடிய யுத்தத்திற்கான சமாதானத் தீர்வொன்றிற்கான முயற்சிகளை இக்குழு முற்றாகக் குழப்பப் போகிறது" என்றும் கூறினார். அந்த ஆய்வாளர் மேலும் கூறுகையில், "வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களிடையே பிரதேசவாதத்தினை ஊக்குவிப்பதன் மூலம், புலிகளை கூறுபோட்டு இறுதியில் முற்றாக அழிக்கும் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலின் இதயமாக கருணா செயற்பட்டு வருகிறாரென்பது தெளிவாகத் தெரிகிறது" என்றும் அவர் கூறினார். புலிகளையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தினையும் தொடர்ச்சியாக விமர்சித்துவரும் இப்பத்திரிக்கை கருணா துணைப்படையின் அரசியல்ப் பிரிவு முக்கியஸ்த்தர் பிரதீப் உடனும் செவ்வியொன்றினை மேற்கொண்டதுடன், சிறுவர்களை தாம் இணைப்பதில்லை எனும் அவரது பசப்பலினையும் மேற்கோள் காட்டி வெளியிட்டிருந்தது.
  3. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, ஐப்பசி , 2006 உடனிருந்தவரால் 3 கருணா துணைப்படையினர் கொலை, எண்மர் காயம் கருணா துணைப்படையில் சில நாட்களுக்கு முன்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட ஒரு உறுப்பினர் தனது சகாக்கள் தூங்கிக்கொண்டிருந்தவேளை அவர்கள் மீது கைய்யெறிகுண்டுகளைப் பாவித்தும் துப்பாக்கியாலும் தாக்குதல் நடத்தி மூவரைக் கொன்றதுடன் இன்னும் எண்மரைக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார். கறுப்புப் பாலம் ராணுவ முகாமிற்கு அருகிலிருக்கும் செங்கலடி பிள்ளையார் கோயிலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் எம் வாசு, கே அருணன், எம் மனோ என்று அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களது உடல்கள் வெலிக்கந்தை வைத்தியசாலை பிரேதவறையில் வைக்கப்பட்டுள்ளன. காயப்பட்டவர்களான கஜன் (39), ஐங்கரன் (37), இமயவன்(21), அருணன் (40), சாந்தன்(35), சுந்தரமூர்த்தி(27), சிறிதவன்(46), கலையரசன்(16) ஆகியோர் பொலொன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். தாக்குதலை நடத்தியவர் தப்பிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, ஐப்பசி , 2006 ராணுவம், கருணா துணைப்படை இணைந்து நடத்திய தாக்குதல் முறியடிப்பு - புலிகள் தெரிவிப்பு புலிகளின் திருகோணமலை அரசியல்த்துறைப் பொறுப்பாளர் எழிலனின் கூற்றுப்படி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரை மீது ராணுவமும் கருணா துணைப்படையும் இணைந்து நடத்திய தாக்குதல் முயற்சியை புலிகள் முறியடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 11 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடந்த இச்சண்டையில் ராணுவத்திற்கும் துணைப்படைக்கும் இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், ராணுவம் வாழைச்சேனைப் முகாமிலிருந்து நடத்திய செல்த் தாக்குதலில் 7 சிவிலியன்களும் காயமடைந்ததாகத் தெரிகிறது. இத்தாக்குதலில் குறைந்தது 30 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் எழிலன் மேலும் கூறினார். கஜுவத்தை ராணுவ முகாமிலிருந்தும், சின்ஹபுற முகாமிலிருந்து தெற்கு வாகரையில் அமைந்திருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பனிச்சங்கேணி நோக்கியும், கட்டுமுறிவு நோக்கியும் நடத்தப்பட்ட இத்தாக்குதலை தாம் முறியடித்துவிட்டதாகக் கூறும் எழிலன், பனிச்சங்கேணியில் தரையிறக்கத் தாக்குதல் ஒன்றினை மேற்கொள்ள முயன்ற கடற்படையின் நடவடிக்கையினையும் கடற்புலிகள் முறையடித்துவிட்டதாகவும் மேலும் கூறினார். இச்சண்டைகளின்பொழுது கொல்லப்பட்ட மூன்று ராணுவத்தினரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை 5 புலிகளும் இம்மோதல்களில் மாவீரர்களாகியுள்ளதோடு மேலும் 7 போராளிகள் காயங்களுக்குள்ளானார்கள். "சுமார் இரு டிராக்டர் வண்டிகளில் அவர்கள் தமது கொல்லப்பட்ட சகாக்களை எடுத்துச் செல்வதை நாம் பார்த்தோம். விமானப்படையின் கிபிர் விமானங்கள் எமது பகுதிகள் மீது குறைந்தது 4 தடவைகள் குண்டுவீச்சில் ஈடுபட்டதுடன், வாழைச்சேனைக் காகித ஆலையிலிருந்து எமது பகுதிமீது கடுமையான செல்வீச்சினை ராணுவம் நடத்திவருகிறது" என்றும் அவர் கூறினார். இளவயது துணைப்படையினரை ராணுவம் இந்த மோதல்களில் ஈடுபடுத்தியிருந்ததாகக் கூறும் எழிலன், கொல்லப்பட்டவர்களில் துணைப்படையினரும் அடங்கும் என்று கூறினார். இதேவேளை பொலொன்னறுவை வைத்தியசாலைச் செய்திகளின்படி காயப்பட்ட ராணுவத்தினரையும் கருணா துணைப்படையினரையும் தாம் பராமரித்துவருவதாகவும் குறைந்தது 5 துணைப்படையினர் காயப்பட்டவர்களில் அடங்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, புரட்டாதி, 2006 கருணா , ஈ பி டி பி துணைப்படைகளால் 3 இளைஞர்கள் கொலை இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் துணைப்படைகளான கருணா குழு மற்றும் ஈ பி டி பி குழுவினரால் வாழைச்சேனைப்பகுதியில் மூன்று அப்பாவி இளைஞர்கள் கடந்த ஞாயிறு சுட்டுக்கொல்லப்பட்டனர். வாழைச்சேனை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் அமைந்திருக்கு சிங்கள ராணுவ முகாமிலிருந்து இயங்கிவரும் இத்துணைப்படைக் குகுழுக்களைச் சார்ந்தவர்கள் இரவு 7 மணிக்கும் 9:30 மணிக்கும் இடையில் இக்கொலைகளைப் புரிந்துள்ளனர். வாழைச்சேனை - கல்க்குடா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட துணைப்படை ஆயுததாரிகள் தாம் கைதுசெய்து இழுத்துவந்த மூன்று இளைஞர்களை அவர்களின் வீடுகளுக்கருகில், வீதியோரங்களில் இருத்திவைத்து மக்கள் பார்த்திருக்கத் தலையில் சுட்டுக் கொன்றனர். பட்டியடிச்சேனையில் வசித்துவந்த 22 வயதுடைய முடிதிருத்தும் கடை உரிமையாளரான தியாகராஜா செந்தூரன் என்பவரை அவரது வீட்டிலிருந்து இழுத்துவந்து வீதியின் முன்னால் வைத்து 7 மணிக்குச் சுட்டுக் கொன்ற கருணா துணைப்படையினர் கர்ப்பமுற்றிருந்த அவரது மனைவியையும் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றனர். பின்னர் கருங்காலிச்சோலை, நாகதம்பிரான் வீதியில் வசித்துவந்த, ஒரு பிள்ளையின் தந்தையான, 26 வயதுடையசண்முகநாதன் நாகேந்திரன் என்பவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றனர். பின்னர், பேய்த்தாழை , விஷ்ணு கோயில் வீதியில் வசித்துவந்த, வாகனேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயதுடைய கந்தையா கருணாகரன் என்பவரை வீதியில் சுட்டுக்கொன்றுவிட்டுச் சென்றனர். கந்தையா கருணாகரனின் உடல் மட்டக்களப்பு வைத்தியசாலை சவ அறையிலும் மற்றைய இருவரதும் உடல்கள் வாழைச்சேனை வைத்தியசாலை சவ அறையிலும் வைக்கப்பட்டுள்ளன.
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, ஆவணி, 2006 வாழைச்சேனைப்பகுதியில் இரு சிவிலியன்களைக் கொன்ற கருணா துணைப்படை கடந்த திங்கள் மாலை மீராவோடைப்பகுதியில் கருணா துணைப்படையினரால கடத்தப்பட்ட இரு தமிழ் இளைஞர்களில் ஒருவரான கந்தசாமி கோவிந்தராஜா துணைப்படையினரால் சித்திரவதையின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். அவரது உடல் மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதியில் மட்டக்களப்பு நகரிலிருந்து 27 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் கோலாவடி பகுதியில் வீதியோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இவருடன் சேர்த்துக் கடத்தப்பட்ட மயில்வாகனம் சசி எனும் இளைஞரின் கதிபற்றித் தெரியவில்லையென்றாலும்கூட, இவரது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை சீனித்தம்பி சங்கர் என்றழைக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞர் ஒருவரையும் கருணா துணைப்படையினர் இன்று கொன்றிருக்கின்றனர். அவரது சகோதரியின் கணவரான தாண்டவம் செல்வராஜாவும் இப்படுகொலை நடவடிக்கையில் கடுமையான காயங்களுக்கு உட்பட்டிருகிறார். திங்கள் இரவு வந்தாறுமூலையில் இடம்பெற்ற இந்தப் படுகொலை பற்றி மேலும் தெரியவருவதாவது. வந்தாறுமூலை, ஆலையடி வீதியில் அமைந்துள்ள இவர்களின் வீட்டிற்குச் சென்று, அவரைப் பெயர் சொல்லி அழைத்த கருணா துணைப்படையினர், அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்மீது சரமாரியாகச் சுட்டதாகவும், துப்பாக்கிச் சத்தம் கேட்டு வாயிலுக்கு வந்த அவரது சகோதரியின் கணவர் மீதும் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. சங்கர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மயிலவெட்டுவான் பகுதியில் பண்ணை ஒன்றில் வேலை பார்த்துவந்த ஒரு விவசாயத் தொழிலாளி என்பது குறிப்பிடத் தக்கது. சங்கரின் சகோதரர் ஒருவர் புலிகள் இயக்கத்தில் இருந்ததாகவும், அதற்கு பழிவாங்கவே சங்கரைத் தாம் கொன்றதாகவும் கருணா துணைப்படை சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறது. தாக்குதலின் பின்னர் சங்கரின் வீட்டிற்கு வந்த பொலிஸார் வீட்ட்னுள் கருணா குழுவினரால் எறியப்பட்டு, வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றைக் கண்டெடுத்தனர்.
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 7, ஆவணி, 2006 மட்டக்களப்பில் இரு வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்திய கருணா துணைப்படை கடந்த திங்கட்கிழமை காலை 6:30 மணியளவில் மட்டக்களப்பு - களுவங்கேணியி வீதியில் அமைந்திருந்த இரு தனியார் வீடுகள் இராணுவ புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கூலிப்படையான கருணா துணைப்படையினரால் கொளுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கொளுத்தப்பட்ட இரு வீடுகளில் ஒன்று கருணா குழுவில் இணைந்து பின்னர் கருணா குழு துணைப்படையின் பல படுகொலைகளில் தொடர்புடைய இனியபாரதி உட்பட இன்னும் ஐவரைக் கொன்றுவிட்டு புலிகளிடம் வந்து சரணடைந்த ஞானதீபன் எனும் உறுப்பினரின் சகோதரியான மயில்வாகனம் ஆறுமுகம் என்பவரின் வீடு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றைய வீடு நான்கு பள்ளிச் சிறார்கள் வாழ்ந்துவந்த வீடென்றும், புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று கருணா துணைப்படையினரால் கருதப்பட்டதனால், அவர்களது வீடும் எரிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. வெள்ளைநிற வான்களிலும், உந்துருளிகளிலும் இவ்வீடுகளுக்கு வந்த கருணா துணைப்படையினர் இவ்விடுகளின் மேல் எரிரசாயனங்களை வீசித் தீமூட்டியதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்னர், ஞானதீபனுடன் கருணா குழுவிலிருந்து தப்பிவந்த புகழ்வேந்தனின் இரு சகோதரிகளை கருணா துணைப்படையினர் கொன்றிருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, ஆவணி, 2006 சுடரொளி, தினக்குரல் பத்திரிக்கைகளை விற்றதற்காக கருணா குழுவால் மட்டுநகரில் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட வியாபார நிலையம் மட்டக்களப்பு நகரில், அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இயங்கிவந்த பத்திரிக்கை விற்பனை நிலையம் ஒன்றினை கருணா துணைப்படையினர் கடந்த சனிக்கிழமை தீயிட்டுக் கொளுத்தினர். முருகேசு அன்ட் சன்ஸ் என்ற பெயரினை உடைய வடபகுதித் தமிழருக்குச் சொந்தமான இவ்வியாபார நிலையம் கருணா துணைப்படையினரால் கொளுத்தப்பட்டிருக்கிறது. மட்டுநகர் சென்ட்ரல் வீதியில் , விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து சுமார் 75 மீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த இந்நிலையம் சில நாட்களுக்கு முன்னர் புலிகளை ஆதரிக்கும் பத்திரிக்கைகளை விற்கவேண்டாம் என்று கருணா துணைப்படையினரால் எச்சரிக்கப்பட்டு வந்ததென்றும், ஆனால் தமது கட்டளையினையும் மீறி தொடர்ச்சியாக தினக்குரல் மற்றும் சுடரொளி ஆகிய பத்திரிக்கைகளை இந்த வியாபார நிலையம் விநியோகித்து வந்ததினால் கருணா துணைப்படையினர் இந்த நிலையத்தினை முற்றாகக் கொளுத்தியிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. . கொழும்பில் பிசுரமாகும் தமிழ் நாளிதழ்கள் ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் சுரேணா ட்ரவெல்ஸ் என்றழைக்கப்படும் தனியார் போக்குவரத்து நிறுவனம் மூலம் மட்டக்களப்பினை வந்தடைந்தன. இந்த மக்கள் பயணச் சேவையினைத் தொடர்ச்சியாக மிரட்டிவந்த கருணா துணைப்படை , முருகேசு அன்ட் சன்ஸ் நிறுவனத்திற்கான பத்திரிக்கைகளை தருவிக்கவேண்டாம் என்றும் மிரட்டியிருந்தனர். வடபகுதியினைச் சேர்ந்தவர்களால், புலிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் பத்திரிக்கைகள் என்று இப்பத்திரிக்கைகளை விமர்சித்த கருணா துணைப்படை இந்த வியாபார நிலையத்தினைக் கொளுத்தியிருக்கிறது. தீயினால் ஏற்படுத்தப்பட்ட நட்டம் குறைந்தது நான்கு லட்சமாவது இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அருகில் இருந்த சில வியாபார நிலைய உரிமையாளர்கள் தீயினை அணைக்க முற்பட்டபோதும்கூட, அவர்களால் அது முற்றாக எரிந்து நாசமாவதைத் தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
  9. சே சே ......இப்படி பன்னி எண்டெல்லாம் அசிங்கமா திட்ட மாட்டாங்க .... டீசண்டா முத்தவெளியில மாடு மேக்கப் போ , சாணி அள்ளப் போ என்றுதான் சொல்லி மிதிப்பாங்கள்...... முன்னால பிள்ளையாரைத்தான் கும்பிட்டுட்டு பள்ளிக்கு போறது அவரும் படிப்புல கொஞ்சம் வீக் என்று நினைக்கிறன். மிஸ் சரசு டீச்சரை கும்பிட்டிருக்க வேணும் மிஸ் பண்ணிட்டன்.....! 😁
  10. டேய்.. தம்பி உன்ர ஆசையில் மண் விழ போகுது..☺️..😊
  11. நம் வாழ்வில் எல்லாம் ஒருநாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது..!
  12. படம்: நந்தா என் நிலா(1977) இசை : தட்சணா மூர்த்தி பாடியோர் : செயசந்திரன் & கலா ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம் நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம் நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம் ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்... இடையோடு விளையாட இடம் தேடி வந்தேன் இதழோடு தேன் பாய நான் ஆடுகின்றேன் பகலான இரவோடு அழகான மலரோடு மனதோடு இசை பாடு விழியோடு ஆடு....(ஒரு) தனியான கனியோடு துணையாக வந்தேன் சுவை தேடி இமை மூடி சுகம் காண வந்தேன் நிழலோடு உறவாட நினைவோடு நடமாட தொடும்போது சுடுகின்ற நதி நீரில் ஆடு (ஒரு)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.