Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    32013
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    87993
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/21/23 in Posts

  1. அணில் குஞ்சு.. மாட்டுப் பட்ட தருணம். 😂 🤣
  2. ஒரு குறுகிய 20 அடிகள் நீள உருளைக்குள், ஆழ் சமுத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒக்சிசனும் வெப்பநிலையும் குறைந்து, இறப்பதென்பது கொடுமையான விடயம். இது போன்ற தண்டனையைப் பெறுவதற்கு இந்த ஐந்து பேரும் செய்த குற்றங்கள் செல்வந்தர்களாக இருப்பதும், தங்கள் செல்வத்தைப் பாவித்து ஒரு தனித்துவமான அனுபவத்தைப் பெற முயன்றமையும் மட்டும் தான் என நினைக்கிறேன்.
  3. மக்கள் ஆணையினை இழந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், புலிகளின் கைகளுக்குள் அடைக்கலமாகிய தமிழ் மக்களும் குழந்தைகளுடன் தலைவர் பிரபாகரன் தேர்தல் முடிவுகள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு முற்றான தோல்வியினைக் கொடுத்திருந்தன. 1977 ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கு மக்கள் இக்கட்சிக்கு வழங்கிய ஆணையினை 1983 ஆம் ஆண்டு வைகாசி 18 ஆம் திகதி அது முற்றாகவே தொலைத்திருந்தது. 1977 இல் முன்னணிக்கு தமது ஆணையினை வழங்கியிருந்த தமிழ் மக்கள், 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலில் தமது ஆணையினை மீளவும் உறுதிப்படுத்தியிருந்தனர். ஆனால், 1983 ஆம் ஆண்டு வைகாசி உள்ளூராட்சித் தேர்தல்களில் புலிகளின் வேண்டுகோளினை முற்றாக ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினை முற்றாகப் புறந்தள்ளியிருந்தனர். தேர்தல் முடிவுகள் முன்னணியினை தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணித்திருந்ததைக் காட்டியது. இரு வருடங்களுக்கு முன்னர் 80 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முன்னனி, 1983 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலில் பத்து வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றது. வடமாகாணத்தின் ஒற்றை மாநகராட்சிச் சபையாகத் திக்ழந்த யாழ்ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் 13 வீதமானோர் முன்னணிக்கு வாக்களித்திருந்தவேளை 87 வீதமானோர் புலிகளின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டு தேர்தலினைப் புறக்கணித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்த மூன்று உள்ளூராட்சிச் சபைகளில் சாவகச்சேரியில் 14 வீதமானோர் முன்னணிக்கு வாக்களித்திருக்க 86 வீதமானோர் தேர்தலினை நிராகரித்திருந்தனர். பிரபாகரனின் செல்வாக்கிற்கு உடபட்ட இரு சபைகளான வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறைச் சபைகளுக்கான தேர்தல்களில் வெறும் 2 வீதமான வாக்குகளையே முன்னணி பெற்றிருந்தது. இச்சபைகளில் முன்னணி பெற்ற வாக்குகள், வல்வெட்டித்துறை - 2 %, பருத்தித்துறை - 0.75% என்பது குறிப்பிடத் தக்கது. முன்னணியின் தோல்வி போராளிகளுக்கு மகிழ்வினைக் கொடுத்திருந்தது. 1977 ஆம் ஆண்டு முன்னணிக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையினை அது இழந்துவிட்டது என்று அவர்கள் கூறினர். "தம்மீது மக்கள் வைத்த நம்பிக்கையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இழந்துவிட்டனர். மக்களுக்கு தாம் வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட முன்னணியினர் ஜயவர்த்தன வீசியெறியும் அற்பச் சலுகைகளுக்காக அவர் பின்னால் ஓடுகிறார்கள்" என்று சுதந்திரன் பத்திரிக்கையில் எழுதிய கோவை மகேசன், "மக்களால் முன்னணிக்கு வழங்கப்பட்ட தனிநாட்டினை உருவாக்குவதற்கான ஆணை தற்போது அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு போராளிகளிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது" என்றும் எழுதினார். தமிழ் ஈழம் விடுதலை முன்னணியின் உப தலைவரான ஈழவேந்தன் கூறும்போது, "தேர்தல்களுக்கு முன்னர் மக்களுக்கு தான் வழங்கிய வாக்குறுதியை அண்ணை அமிர்தலிங்கம் நிறைவேற்ற வேண்டும்" என்று கேட்டிருந்தார். "இத்தேர்தலில் மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பினை அவர் ஏற்றுக்கொண்டு, போராளிகள் தமது கடமையினை முன்னெடுக்க வழிவிட்டு விட்டு அரசியலில் இருந்து அவர் விலகிச் செல்லவேண்டும்" என்றும் அவர் கூறினார். மக்களிடையே இருந்த பொதுவான உணர்வும் இதனையே வெளிப்படுத்தியிருந்தது. மக்களிடம் கருத்துக்களை வெளியிட்டு வந்த ஈழநாடு பத்திரிக்கையும் இதே வகையான உணர்வுகளையே வெளியிட்டு வந்தது. 1977 ஆம் ஆண்டு மக்கள் அமிருக்கு வழங்கிய ஆணையின் ஊடாக சுதந்திரத் தமிழீழ நாட்டை உருவாக்குவதற்கான செயற்பாடுகளிலும், அதற்கான அரசியலமைப்பினை உருவாக்குவதிலும் ஈடுபடப் போவதாக உறுதியளித்த அமிர் தலைமையிலான தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனைச் செய்ய முற்றாகத் தவறியுள்ளதையடுத்து தமிழ் மக்கள் அன்று வழங்கிய ஆணையினை இன்று அவர்கள் இழந்துவிட்டார்கள் என்பதே சாதாரண தமிழனின் உணர்வாக இருந்தது. "மக்கள் தமக்கு வழங்கிய ஆணையின்படி நடக்க அவர்கள் தவறிவிட்டார்கள்" என்பதே அனைவரினதும் கருத்தாக இருந்தது. நான் இதுதொடர்பாக அமிர்தலிங்கத்தை டெயிலிநியூஸ் பத்திரிகைக்காகப் பேடி கண்டிருந்தேன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தோல்விக்கான முக்கிய காரணங்களை அலசுமாறு அவரிடம் நான் கேட்டேன். அதற்குப் பதிலளித்த அமிர், தனக்கு ஜெயவர்த்த அளித்த வாக்குறுதிகளைச் செயற்படுத்த மறுத்தமையே தமது தோல்விக்கான காரணம் என்று கூறினார். " மாவட்ட அபிவிருத்திச் சபைகளைச் செயற்படுத்தப் போவதாக அவர் என்னிடம் உறுதியளித்தார், ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க அவர் விரும்பவில்லை. இச்சபைகளை நடத்துவதற்கான நிதியினை வழங்க அவர் மறுத்துவிட்டார். அவர் எங்களுக்குத் தந்ததெல்லாம் வெற்றுக் கோது ஒன்றே அன்றி வேறில்லை. மக்களிடம் சென்று காட்டுவதற்கு எம்மிடம் எதுவும் இருக்கவில்லை. புலிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கவும் எம்மிடம் எதுவும் இருக்கவில்லை" என்று அவர் கூறினார். பிரபாகரனின் துண்டுப்பிரசுரத்தில் இருந்த, "தமிழரின் குருதி குடித்து, வாயில் அந்தக் குருதி இன்னமும் சிந்திக்கொண்டிருக்கும் அரச பயங்கரவாத ஓநாய்" எனும் வாக்கியத்தின் பொருளினைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய அமைர், "ராணுவத்தினரின் பதில்த் தாக்குதல்களால் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் போராளிகளின் கைகளுக்குள்ளேயே அடைக்கலம் தேடுவார்கள் என்று ஜெயவர்த்தனவை நான் எச்சரித்திருந்தேன்" என்று அவர் கூறினார்.
  4. ராணுவத்திடமிருந்து புலிகள் முதன்முதலாகக் கைப்பற்றிய டி - 56 ரக தானியங்கி ரைபிள் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களையடுத்து பீதியான சூழ்நிலையொன்று தோன்றியது. மீதமாகவிருந்த வேட்பாளர்களும் தமது விலகலை அறிவிக்கும் கடிதங்களுடன் ஈழநாடு பத்திரிக்கைக் காரியாலயத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி தான் தேர்தலில் இருந்து விலகப்போவதில்லை என்று அறிவித்திருந்தபோதிலும், அக்கட்சியின் பெரும்பான்மையான வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டனர். வேட்பாளர்களின் பின்வாங்கலும், விலகிச் செல்லலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையும் வெகுவாகப் பாதித்திருந்தது. யாழ்ப்பாண மாநகரசபையின் ஆணையாளர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளரான நாகராஜா உட்பட அச்சபையில் போட்டியிட விண்ணப்பித்திருந்த 35 வேட்பாளர்களும் விலக்கொண்டனர். ஆனால், அமிர்தலிங்கமோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். சில வேட்பாளர்கள் விலகிக்கொண்ட போதிலும் தனது கட்சி இத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடும் என்று அவர் அறிவித்தார். தேர்தல் நடைமுறையில் இருந்த தவறுகளைத் தனக்குச் சாதகமாகப் பாவித்த அமிர்தலிங்கம், வேட்பாளர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதன் பின்னர் வேட்பாளர்கள் விலகுவது சட்டத்திற்கு முரணானது என்று அவர் அறிவித்தார். சட்டத்தின்படி, வேட்பாளர் ஒருவர் தேர்தலில் இருந்து பின்வாங்கினாலும், இறுதியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் தொடர்ந்தும் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அமிர்தலிங்கத்தின் பிடிவாதமான நிலைப்பாடு தமக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாக புலிகளின் தலைமையினால் கருதப்பட்டது. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை வெளிப்படையாக எதிர்கொள்வதென்று பிரபாகரன் முடிவெடுத்தார். அதன்படி வைகாசி 8 ஆம் திகதி யாழ்ப்பாணத்த்ம் ஓட்டுமடம் பகுதியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூட்டமொன்றினை அமிர்தலிங்கம் நடத்திக்கொண்டிருந்தவேளை, சீலன் தலைமையில் ஆறு போராளிகள் அங்கு சென்றனர். புலிகளின் தடையினை உதாசீனம் செய்யுங்கள், பயப்படாது தேர்தலில் போட்டியிடுங்கள் என்று அமிர் பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட புலிகளின் போராளி ஒருவர், "கடந்த 30 வருடங்களாக நீங்கள் சாதித்தது என்னவென்று கூறுங்கள் பார்க்கலாம்?" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கேட்டார். இன்னுமொரு போராளி, "ஜெயாருடன் தொங்கிக் கொண்டிருப்பதால் எதனைச் சாதிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று அமிரைப் பார்த்துக் கோபமாகக் கேட்டார். அமிர்தலிங்கம் திகைத்துப் போனார். தன்னை நோக்கிக் கேள்விகேட்ட புலிகளுக்கு அமிர் பதிலளிக்கும் முன்னமே வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்கள் புலிகளால் தீர்க்கப்பட்ட அங்கிருந்த கூட்டம் கலைந்து ஓடத் தொடங்கியது. மேடையில் வீற்றிருந்த பேச்சாளர்களும் ஓடத் தொடங்கினர். தன்னைச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் தன்னை விட்டு ஓடிச்சென்ற நிலையில் அமிர் மட்டும் கையில் ஒலிபெருக்கியுடன் அங்கே நின்றிருந்தார். பின்னர் அமிரின் காரினை ஓட்டிச் சென்ற புலிகள், அதனைச் சேதப்படுத்திவிட்டு மயானம் ஒன்றின் முன்னால் கைவிட்டுச் சென்றனர். நிலைமையினை ஆராய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழு வைகாசி 11 ஆம் திகதி கூடியது. ஆனால், அமிர்தலிங்கம் தேர்தலில் பங்கெடுக்கும் தனது முடிவில் பிடிவாதமாக நின்றார். "நாங்கள் துவக்கைக் கண்டு பயப்படத் தேவையில்லை. மரணம் எங்களுக்கு ஒருமுறை தான் வரப்போகிறது, அது இப்போது வந்தால்த்தான் என்ன? நான் தம்பிமாரிடம் ஒரு சவாலினை முன்வைக்கிறேன், முடிந்தால் அவர்கள் மக்களிடம் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு கேட்டுப் பார்க்கட்டும். மக்கள் அதனை முடிவெடுக்கட்டும். மக்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்று பேசினார். வைகாசி 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்துமடம் சந்தியில் நடந்த தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போதும் அமிர்தலிங்கம் இதனையே குறிப்பிட்டார். புலிகளின் புறக்கணிப்புக் கோரிக்கையினை நிராகரித்த அமிர்தலிங்கம், மக்கள் தனது கட்சிக்கு வழங்கிய ஆணையினை புலிகள் மதிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அப்பகுதிக்கு வந்திருந்த புலிகள் வானை நோக்கிச் சில வேட்டுக்களைத் தீர்க்கவே அக்கூட்டமும் பாதியில் கலைந்து போனது. தேர்தல் நாள் அமைதியாக இருந்தது. கடைகள் பூட்டப்பட்டிருந்தன. வீதிகளில் போக்குவரத்து மிகவும் அரிதாகவே காணப்பட்டது. தேர்தலில் அதிக சிரத்தையெடுத்துக்கொண்டிராத பொலீஸாரும் வேண்டாவெறுப்பாகவே வீதிகளில் ரோந்துவந்து சென்றனர். தேர்தல்ச் சாவடிகளில் கடமையிலிருந்த அதிகாரிகள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டு அந்த பிற்பகல்ப் பொழுதைக் களித்துக்கொண்டிருந்தனர். காலையில் காணப்பட்ட ஒரு சில வாக்களர்களின் உற்சாகமும் பிற்பகலில் முற்றாகக் காணாமற் போயிருந்தது. செல்லக்கிளி தேர்தல் சாவடி இலக்கம் 25 இல் நான்கு மணியென்று கடிகாரம் ஒலிக்க, தேர்தல் முடிவடைவதற்கு இன்னமும் ஒரு மணிநேரமே இருக்கிறதென்று அனைவருக்கும் அது கூறியது. யாழ்ப்பாணம் அரசடி வீதியில் அமைந்திருந்த சிவப்பிரகாசர் வித்தியாலயத்திலேயே அந்த தேர்தல் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. தாம் வந்த சைக்கிள்களில் எட்டத்தில் விட்டுவிட்டு நிலையம் நோக்கி சீலனும் செல்லக்கிளியும் இன்னும் இரு போராளிகளும் நிதானமாக வந்துகொண்டிருந்தனர். நிலையத்தின் முற்பகுதிக்குச் சென்ற செல்லக்கிளி தான் கொண்டு வந்த கைக்குண்டை விட்டெறிய, வாயிலில் காவலுக்கு நின்ற ரஜரட்ட ரபிள் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜயவர்தன கொல்லப்பட்டார். மீதியாக காவலுக்கு நின்ற இரு ராணுவ வீரர்களும் பாடசாலையின் உட்பகுதிக்கு ஓடிச்சென்று நிலையெடுத்துத் தாக்கத் தொடங்கினர். அவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. கொல்லப்பட்ட ராணுவ வீரரை நோக்கி ஓடிச்சென்ற செல்லக்கிளி அவர் அருகில்க் கிடந்த டி 56 ரக ரைபிளை எடுத்துக்கொண்டார். ராணுவத்தினர் புலிகளிடம் பறிகொடுத்த முதலாவது தானியங்கித் துப்பாக்கி இதுவே என்பது குறிப்பிடத் தக்கது. தாக்குதலை முடித்துக்கொள்ளுமாறு கட்டளையிட்ட சீலன், தனது போராளிகளை அழைத்துக்கொண்டு தாம் வந்த சைக்கிள்களிலேயே தப்பிச் சென்றார். நிதானமாகவும், துணிவாகவும் செயற்பட்ட சீலனையும் போராளிகளையும் பிரபாகரன் பாராட்டியதோடு, புலிகளால் அன்று ராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டி 56 ரக ரபிளையும் போராளிகளுக்குக் காண்பித்து விளங்கப்படுத்தினார்.
  5. பிரபாவின் துண்டுப்பிரசுரம் துரோகிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் பின்னால் வழங்கப்பட்ட தண்டனையும் தமிழரின் அரசியல்த் தலைமைத்துவத்தை தான் ஏற்கவேண்டிய தருணம் வந்துவிட்டதை பிரபாகரன் உணர்ந்தார். 1983 ஆம் ஆண்டு சித்திரை மூன்றாம் வாரத்தில் தான் கைப்பட எழுதிய துண்டுப்பிரசுரத்தை அவர் மக்களிடையே வெளியிட்டார். அந்த துண்டுப்பிரசுரத்தில் தமிழர்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் "துரோகிகள்" என்றும் விளித்திருந்தார். பிரபாகரன் அன்று வெளியிட்ட துண்டுப்பிரசுரம் இப்படிக் கூறியது, "அரச பயங்கரவாத ஓநாய்ககளின் வாய்களில் இருந்து ஈழத்தமிழ் இனத்தின் குருதி இன்னமும் வழிந்துகொண்டிருக்கும் இந்தவேளையிலும், சிங்கள இனவாத அரசு தனது பயங்கரவாதத்தை சர்வதேசத்தின் முன்னால் நியாயப்படுத்த இந்த உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த முயற்சித்து வருகிறது. சிங்கள இனவாதிகளின் இந்த சதிக்குத் துணைபோகும் தமிழினத் துரோகிகளை நாம் அனுமதிக்கப்போவதில்லை". "சிறிலங்கா தேர்தல் மாயையிலிருந்து ஈழத் தமிழினம் தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும். எமது மக்கள் ஆயுதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரள வேண்டும்". ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரோ அல்லது ஏனைய தமிழ்க் கட்சிகளோ இந்தத் துண்டுப்பிரசுரத்தின் தீவிரத் தன்மையினை உணர்ந்துகொள்ளத் தவறின. ஆகவே, அவர்கள் வழமைபோல தமது தேர்தல்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்ததுடன், பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தி வந்தனர். தனது முடிவுகளை செயலாக்குவதில் எப்போதுமே பின்னின்றிராத பிரபாகரன் தனது திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார். ஆகவே, சித்திரை மாதத்தின் நான்காம் வாரத்தில் தேர்தலில் பங்கெடுக்கும் வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்ற புலிகள், அவர்களை தேர்தல்களில் இருந்து விலகிக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்கத் தொடங்கினர். தமது வேண்டுகோளின் முடிவில் ஒரு எச்சரிக்கையினையும் அவர்கள் முன்வைக்கத் தவறவில்லை, "எமது கோரிக்கையினை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், அதனால் வரக்கூடிய பின்விளைவுகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்" என்பதே அந்த எச்சரிக்கை. புலிகளின் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மறுநாளில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிக்கையில் தொடர்ச்சியாக சில விளம்பரங்கள் வெளிவரத் தொடங்கின. அந்த விளம்பரங்களின் சாராம்சம் இதுதான், " ....இந்தக் கட்சியைச் சேர்ந்த ... ஆகிய நான் இத்தாள் தமிழ் மக்களுக்கு அறியத் தருவது என்னவெனில், நடக்கவிருக்கும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் .... தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பாடியலில் இருந்து நானாக விலக்கிக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல சுயேட்சைக் கட்சிகள் இத்தேர்தலில் இருந்து விலகிக்கொண்டன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலில் தொடர்ந்தும் போட்டியிடுவதில் உறுதியாக நின்றன. இவ்விரு கட்சிகளினதும் தேர்தலில் பங்கெடுப்பதான நிலைப்பாடு தமக்கு விடுக்கப்பட்ட சவாலாக புலிகள் எடுத்துக்கொண்டனர். ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பாக செயலில் இறங்க முடிவெடுத்தனர் புலிகள். ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று வேட்பாளர்களை குறிவைத்து புலிகளின் மூன்று அணிகள் சித்திரை 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வலம் வந்தன. இவர்களுள் முதலாமவரான பருத்தித்துறைத் தொகுதியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான 43 வயது நிரம்பிய வைரமுத்து ரத்திணசிங்கம் தனது ஆதரவாளர்களைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை சைக்கிளில் வந்த இரு புலிப்போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சன்னங்கள் அவரது தலையினைத் துளைத்துச் செல்ல அந்தவிடத்திலேயே அவர் இறந்து வீழ்ந்தார். அதேநாள், மாலை 4:30 மணிக்கு, சாவகச்சேரி தொகுதியைச் சேர்ந்த 83 வயதான எஸ் முத்தையா தனது நண்பர்களின் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருக்கையில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே மாலை 5:30 மணிக்கு வல்வெட்டித்துறை உள்ளூராட்சிச் சபையின் வேட்பாளரான எஸ் ராஜரட்ணத்தின் வாகனத்தை வழிமறித்த புலிகள் அவரது மெய்ப்பாதுகாவலரை வெளியே இழுத்து விட்டு ராஜரட்ணத்தைச் சுட்டுக் கொன்றனர். ராஜரட்ணத்தைக் கொல்வதற்கான காரணம் அவர் யாழ்ப்பாணத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரும், சிங்கள இனவாதியான சிறில் மத்தியூவின் நெருங்கிய சகாவும், யாழ்ப்பாணத்தில் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பங்கெடுக்கவேண்டும் என்று உறுதியாக செயற்பட்டுவந்தவருமான கே கணேசலிங்கத்தின் வலதுகரமாகச் செயற்பட்டு வந்ததனால் ஆகும். துரோகிகள் என்று தம்மால் அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்களின் உடல்களின் அருகில் அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணத்தைப் புலிகள் குறிப்பிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன்படி, கொல்லப்பட்டவரின் உடலின் அருகில் அவரது பெயரும், உள்ளுராட்சித் தேர்தலில் பங்கெடுக்க வேண்டாம் என்கிற தமது எச்சரிக்கையினையும் மீறிச் செயற்பட்டு வந்ததினாலேயே இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
  6. அனில் குஞ்சு சிப்புக்குள் மாட்டுப்பட்டதுபோல் நிக்குது......! 😂
  7. அன்னமுன்னா பழம் ......தமிழகத்தில் சீதம்பழம் என்று சொல்கிறார்கள்.........! 😁
  8. வாகன கள்ளர்கள் வாகனத்தில் சிப்சை ஒட்டிவிட்டு பின்பு அதைவைத்து வாகனம் எங்கே இருக்கிறது என்று தேடி கண்டுபிடித்து ஏன் களவெடுக்கிறார்கள்? சிப்சை ஒட்டும் போதே களவு எடுக்கலாமே
  9. Mantras and Miracles · தெருவோரத்தில் ஒரு வாழைப்பழ வியாபாரி பழம் விற்றுக்கொண்டிருந்தார். பலர் அவரிடம் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டிருந்தனர் அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பசு திடீரென்று அந்த கடையை நோக்கி ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். அந்த பசு கடையின் அருகில் வந்து வாழை சீப்புகளை எடுத்து உட்கொள்ள ஆரம்பித்தது. அருகில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அந்த பசுவை கற்களாலும், கம்புகளாலும் தாக்கத் தொடங்கினர். அந்த பழக்கடையின் உரிமையாளர் பதறிப்போய் மக்கள் அனைவரையும் தடுத்தார். அடிக்காதிங்க அடிக்காதிங்க என்று கத்தினார். என்ன ஐயா உங்க பழக்கடைல இருந்து பழங்களை சாபிடுது நீங்க என்னடானா அடிக்க வேண்டாம்னு சொல்லுரிங்க? என்று கேட்டார். அது பாவம் பா, வாயில்லா ஜீவன், நமக்கு ஆறறிவு இருக்கு அதனால நம்ம உழைச்சு சாபிடுறோம்.. நம்ம அளவுக்கு அதுக்கு அறிவு இல்லாதனால அது இப்படி இருக்கு. அந்த பசு என்ன பாவம் பண்ணுச்சு, எத்தனை நாள் தான் அதுவும் மேய புல்லு இல்லாம சுவரோட்டிகலையே தின்னுகிட்டு இருக்கும். விடுங்க அது போகட்டும் என்றார் அவர். என்ன அய்யா இப்படி சொல்லுரிங்க... அந்த பசு இப்படி சாப்டா உங்களுக்கு நஷ்டம் வராதானு கேட்டேன். அதற்க்கு அவர் தந்த பதில் என்னை கலந்கடித்தது. அந்த பெரியவர் சொன்னார் என்ன பெருசா நஷ்டம் வந்துற போகுது? நீங்க பேரம் பேசி என்கிட்ட பழம் வாங்கி நஷ்டப்பட வைகிறீங்க.. அந்த நஷ்டத்த விடவா இந்த பசுமாடு எனக்கு நஷ்டம் ஏற்படுதிர போகுது...? எங்க ஆத்தாக்கு ஆக்கி போட எனக்கு கொடுத்துவைகல எங்க ஆத்தாக்கு கொடுக்குறதா நெனச்சு இந்த பசுமாட்டுக்கு கொடுக்குறேன் என்றார். படித்ததில் பிடித்தது.....!
  10. ஜெயார் வைத்த பொறி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு 1983 ஆம் ஆண்டு பங்குனி 4 ஆம் திகதி உமையாள்புரம் பகுதியில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்கும் நடவடிக்கையினால் கொதிப்படைந்திருந்த ஜெயாரின் அரசு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் போராளி அமைப்புக்களுக்கும் இடையே மோதல் ஒன்றினை உருவாக்க மறுபடி முயன்றது. அதன்படி, யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு மாநாடு ஒன்றினை ஒழுங்குசெய்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தது. வெளியில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு இந்த பாதுகாப்பு மாநாட்டின் நோக்கம் தீங்கானதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாநாட்டில் பேசப்படவேண்டிய விடயங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தன, 1. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரத்தினை ஆராய்தல் 2. நிலைமைகளைச் சீராக்கும் வழிவகைகளை ஆராய்தல். 3. உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்தல். 4. மற்றும், ஏனைய விடயங்கள். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் யோகேந்திரா துரைசாமி இம்மாநாட்டிற்கான ஒழுங்குகளைச் செய்வாரென்றும், யாழ்ப்பாண மாவட்ட அமைச்சர் யு. பி. விஜெயக்கோன் இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அரச அதிபர் யோகேந்திராவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கும் விடயத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். அமிர்தலிங்கமும், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த ஏனைய முன்னணித் தலைவர்களும் இந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்கான தமது விருப்பத்தினை உடனேயே அரசுக்கு அறியப்படுத்தியிருந்தனர். முன்னணியினர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்கிற செய்தி கசிந்தபோது, அமிர்தலிங்கத்தைச் சந்தித்த சில இளைஞர்கள் இக்கூட்டத்தில் பங்குபற்றவேண்டாம் என்று அவரைக் கேட்டனர். "இக்கூட்டத்தில் பங்குகொள்வதில் என்ன தவறிருக்கிறது?" என்று அவர்களைப் பார்த்து கோபத்துடன் கேட்டார் அமிர்தலிங்கம். "உள்ளுராட்சி மன்றங்களை மீளவும் நடைமுறைப்படுத்துங்கள் என்று அரசைப் பார்த்துக் கேட்பதில் என்ன தவறிருக்கிறது?" என்று மேலும் அவர்களைப் பார்த்துக் கேட்டார் அமிர். உள்ளுராட்சி மன்றங்கள் முன்னர் முன்னணியினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், 1983 ஆம் ஆண்டளவில் இந்த மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்தபோதும் அவற்றுக்கான தேர்தல்களை அரசு நடத்தியிராமையினால், இம்மன்றங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்துவந்தன. யாழ்ப்பாணத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால், அம்மாவட்டத்தில் தேர்தல்களை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார். தமிழ்ப் பிரதேசங்களில் சுமூகமான நிலையினைத் தோற்றுவித்திருப்பதாகவும், சிவில் நிர்வாகத்தினை மீள ஆரம்பிக்கவிருப்பதாகவும் வெளியுலகிற்குக் காட்டவே இந்த மாநாட்டினை ஜெயார் நடத்துகிறார் என்று போராளிகள் அமிருக்குத் தெரிவித்திருந்தனர். "தமிழர் பிரதேசங்களில் சுமூக நிலை உருவாகிவிட்டதாகக் காட்டி உதவி வழங்கும் நாடுகளிலிருந்து பணத்தினைப் பெற்றுக்கொண்டு, அப்பணத்தினைக் கொண்டு இராணுவத்தை பலப்படுத்தவே ஜெயார் முனைகிறார்" என்று இளைஞர்கள் அமிரிடம் கூறினர். புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாணச் செயலகம் 2002 ஆனால், சித்திரை 2 ஆம் திகதி நடக்கவிருந்த யாழ்ப்பாண பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதென்று அமிர்தலிங்கம் பிடிவாதமாக இருந்தார். அன்று காலை, மாநாடு நடக்கவிருந்த யாழ் செயலகத்தின் பகுதியொன்றினை புலிகள் குண்டுவைத்துத் தகர்த்தனர். பின்னர், செயலகத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மண்டபத்தில் இம்மாநாட்டினை அரச அதிபர் யோகேந்திரா ஒழுங்குசெய்து நடத்தினார். அமிர்தலிங்கம் உட்பட பல முன்னணி உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். யாழ் செயலகக் கட்டிடம் மீதான தாக்குதலுக்கு உரிமை கோரி புலிகள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அதில், "ஒரு ஆயுதப் புரட்சியினை, அரச பயங்கரவாதமும், அரசியல் சந்தர்ப்பவாதிகளும் சேர்ந்து அடக்கிவிட முடியாது. இச்செய்தியினை வழங்கவே செயலகத்தின் மீது தாக்குதல் நடத்தினோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புலிகளின் அறிக்கையினை எள்ளி நகையாடிய அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத்துப் பத்திரிக்கைகளுக்கு அறிக்கையொன்றினை வெளியிட்டார். "ஒன்று, இரண்டு கட்டிடங்களை வெடிவைத்துத் தகர்ப்பதன் மூலம் ஆயுதப் புரட்சியொன்றினைச் செய்துவிட முடியாது எனும் செய்தியினை தம்பிமார் இப்போது நன்கு உணர்ந்திருப்பார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு மத்தியிலும் பாதுகாப்பு மாநாடு திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது என்பதை அவர்கள் அறிந்துகொள்வது அவசியம்" என்று அவரது அறிக்கை கூறியது. அமிர்தலிங்கம் தனது நிலைப்பாட்டில் மிகவும் பிடிவாதமாக நின்றார். தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் தானே தமிழர்களின் தலைவர் என்பதைக் காட்டவேண்டும் என்கிற தேவை அவருக்கிருந்தது. செயலகக் குண்டு வெடிப்பிற்குச் சில நாட்களுக்குப் பின்னர் கூட்டமொன்றில் பேசிய அமிர்தலிங்கம், "ஒரு கப்பலுக்கு ஒரு தலைவன் மட்டும் தான் இருக்க முடியும். கப்பலில் உள்ள அனைவரும் தலைவராக விரும்பினால், கப்பலில் கலவரம் ஏற்பட்டு, இறுதியில் மூள்கியும் விடும். 1977 ஆம் ஆண்டு இந்தக் கப்பலை தலைமையேற்றுச் செலுத்துமாறு மக்கள் என்னிடம் ஆணையொன்றினைத் தந்திருக்கிறார்கள். ஆகவே, நான் தான் இக்கப்பலுக்கான தலைவன், என்னைத் தலைமைதாங்க விடுங்கள்" என்று கூறினார். அமிர்தலிங்கத்தின் இந்தக் கூற்றிற்கு போராளிகள் உடனடியாகக் கடுமையான கண்டனத்தை வெளியிட்டனர். "கப்பலின் தலைவர், அதனைத் தலைமைதாங்கும் தகுதியைக் கொண்டிருக்காதவிடத்து, கப்பலையும், அதிலுள்ளவர்களையும் காத்துக்கொள்ள, ஏனையவர்கள் அந்த மாலுமியைத் தள்ளிவிட்டு, கப்பலுக்கான தலைமையினைப் பொறுப்பேற்பதுதான் சரியானது" என்று தெரிவித்தனர். அமிர்தலிங்கத்தை தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றுவதற்குத் தேவையான சந்தர்ப்பத்தினை ஜெயாரே போராளிகளுக்கு ஏற்படுத்தித் தந்தார். ஆகவே உள்ளூராட்சித் தேர்தல்களை வைகாசி 18 ஆம் திகதி நடத்துவதென்று முடிவெடுத்த ஜெயார், அதற்கான வேட்பாளர் மனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளரைப் பணித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் மற்றும் சில சுயேட்சைக் கட்சிகள் இத்தேர்தலில் பங்கெடுக்க தமது வேட்பாளர்களை நியமித்திருந்தன.
  11. அப்பாவி இளைஞரான நவரட்ணராஜாவை சித்திரவதைகளுக்குப் பின்னர் கொன்றுபோட்ட இராணுவப் புலநாய்வுத்துறை முதலாவது கவசவாகனச் சாரதி வாகனத்தின் தடுப்புக்களைப் பிரயோகித்தார். புலிகளின் தாக்குதலில் அந்த வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த கவச வாகனம் சடுதியாக வீதியின் நடுவே நின்றதைக் கண்ட இரண்டாவது கவச வாகனத்தின் சாரதி, தனது வாகனம் முதலாவது வாகனத்துடன் மோதுப்படுவதைத் தவிர்க்க வீதியின் கரைநோக்கி வாகனத்தைச் செலுத்த, அது கண்ணிவெடியால் உருவாகியிருந்த கிடங்கிற்குள் வீழ்ந்தது. எதிர்பாராது நடந்த இந்த சம்பவத்தை அடுத்து நிலைகுலைந்துபோன புலிகள், தாக்குதல் திட்டத்தினைக் கைவிட்டு, தமது மினிபஸ் தரித்துநின்ற பரந்தன் பகுதிநோக்கி ஓடத் தொடங்கினர். அவசரத்தில், புலிகளின் அணியினைச் சேர்ந்த நால்வர் தமது பாதணிகளை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர். அவற்றினைப் பரிசோதித்த ராணுவப் புலநாய்வுத்துறையினர் அவை காடுகளில் பாவிக்கப்படும் பாதணிகள் என்பதை அறிந்துகொண்டதோடு, அவற்றில் அதன் உரிமையாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதையும் கண்டுகொண்டனர். பாதணிகளில் கிட்டு, கணேஷ், விக்டர் மற்றும் பொட்டம்மான் ஆகியோரின் பெயர்கள் காணப்பட்டன. காடுகளில் பாவிக்கும் பாதணிகளை அதிகப் பாவித்துப் பழகியிருக்காமையினால், அவற்றுடன் ஓடுவதைக் காட்டிலும் வெறுங்காலுடன் ஓடுவதே அவர்களைப் பொறுத்தவரை அன்று இலகுவானதாக இருந்திருக்கிறது. மேலும், ராணுவ வாகனத்தின் அருகில் சிறிய காகிதம் ஒன்றினையும் புலநாய்வுத்துறையினர் கண்டெடுத்தனர். அக்காகிதத்தில் ஒருவருடைய பெயர் இருந்தது. திருகோணமலை மாவட்டம், கிளிவெட்டியை வதிவிடமாகக் கொண்ட சித்திரவேல் சிவானந்தராஜா என்பதே அந்தப் பெயர். இதனையடுத்து, கிளிவெட்டியைச் சேர்ந்த சிவானந்தராஜாவை விசாரிக்க ராணுவப் புலநாய்வுத்துறை அங்கு சென்றது. இராணுவத்தினருடன் பேசிய அவர், சார்ள்ஸ் அன்டனி எனப்படும் சீலன் தனது பாடசாலை நண்பர் என்றும், தன்னை புலிகளுடன் இணைந்துகொள்ளுமாறு அவர் வற்புருத்தி வந்ததாகவும், ஆனால் தான் இணைய விரும்பவில்லையென்றும் கூறினார். அவரை விடுதலை செய்த ராணுவப் புலநாய்வாளர்கள், கிளிவெட்டியைச் சேர்ந்த இன்னொரு இளைஞரான 28 வயது நிரம்பிய கதிர்காமத்தம்பி நவரட்ணராஜாவை பங்குனி 26 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து குருநகர் முகாமிற்கு அழைத்து வந்ததோடு கடுமையான சித்திரவதைகளின்பின்னர், 1983 ஆம் ஆண்டு சித்திரை 10 ஆம் திகதி அவர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணத்தை ராணுவத்தினர் ஒருபோதும் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தம்மால் கொல்லப்பட்ட நவரட்ணராஜாவின் உடலை யாழ் வைத்தியசாலையில் கையளித்த ராணுவத்தினர் அவர் சுகயீனம் காரணமாக இறந்தார் என்று கூறினர். அன்று, ராணுவத்தை எதிர்த்துக் கேள்விகேட்கும் துணிவு வைத்தியசாலையில் இருந்த எவருக்கும் இருக்கவில்லை. யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் தடயவியல் நிபுணராக பணியாற்றிவந்த மருத்துவர் என். சரவணபவனந்தன் கொல்லப்பட்ட நவரட்ணராஜாவின் பிரேதப் பரிசோதனையை நடத்தியிருந்தார். வைத்தியர் சரவணபவனந்தனால் வழங்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை பின்வருமாறு கூறியது, "இறந்துபோன நவரட்ணராஜாவின் உடலில் 25 வெளிக்காயங்களும், பத்து உட்காயங்களும் காணப்பட்டன. அவரது நுரையீரலில் காணப்படும் காயங்கள் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டவையாகும். அவரது மரணம் இதயம் மற்றும் சுவாசத் தொகுதிகளின் செயலின்மையினால் ஏற்பட்டிருக்கிறது. அவரது உடலின் தசைப் பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாலேயே இந்த செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். சரியான நேரத்தில் உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டிருப்பின் அவரது உயிரைக் காத்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறப்பட்டிருந்தது. சித்திரை 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை இளைஞர் நவரட்ணராஜாவின் மரணம் பற்றிய செய்தியைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்ததோடு, வைத்தியர் சரவணபவனந்தனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் வைத்தியசாலையின் சவ அறைக்குச் சென்ற பொலீஸார் நவரட்ணராஜாவின் மரணம் தொடர்பாக வைத்தியர் வெளியிட்ட மருத்துவ அறிக்கையினைத் தேடியதாகவும், ஆனால் அதனை மருத்துவர் சரவணபவனந்தன் பாதுகாப்பாக மறைத்து வைத்துவிட்டதனால் பொலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாகவும் கூறியிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அப்பாவி இளைஞரான நவரட்ணராஜாவின் சித்திரவதையும் அதன்பின்னரான கொலையும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசு மீதும், இராணுவத்தினர் மீதும் அதீத கோபத்தினை ஏற்படுத்தியிருந்ததுடன், அரசிடமிருந்து மேலும் மேலும் அவர்களை அந்நியப்படவும் வைத்திருந்தது. கைதுசெய்யப்படும் அனைவரையும் சித்திரவதைக்குள்ளாகுதல் என்பது அன்றைய கால கட்டத்தில் இராணுவத்தினராலும் பொலீஸாரினாலும் பொதுவான நடைமுறையாகக் கையாளப்பட்டு வந்ததுடன், கைதுசெய்யப்படும் தமிழர்கள் அனைவரும் பாரபட்சமின்றி சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்துவந்தனர். இவ்வாறான செயற்பாடுகளால் தமிழ் மக்கள் அரச இயந்திரத்தின் ராணுவப் பொலீஸ் படைகளுடன் நேரடியான மோதல்களுக்கு தம்மை தயார்ப்படுத்தும் நிலைக்கும் இட்டுச் சென்றிருந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளை அனுபவித்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களால் சித்திரை 5 ஆம் திகதியன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நவரட்ணராஜா கொல்லப்படுவதற்கு ஐந்து தினங்களுக்கு முன்னரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினைக் கலைக்க பொலீஸார் குண்டாந்தடிப் பிரயோகமும், கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலையும் மாணவர் மீது மேற்கொண்டிருந்தனர். சித்திரை 5 ஆம் திகதி காலை, புனித ஜேம்ஸ் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து பிரதான வீதி வழியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்பாடாகியிருந்தது. இதனையடுத்து புனித ஜேம்ஸ் தேவாலயத்தைச் சுற்றித் தடைகளை ஏற்படுத்திய பொலீஸார், அத்தேவாலயம் நோக்கி மாணவர்கள் வருவதைத் தடுக்க எத்தனித்தனர். ஆனால், அருகிலிருந்த புனித மரியாள் பேராலயத்திலிருந்து தமது பேரணியினை மாணவர்கள் ஆரம்பித்து நடத்தவே, அப்பகுதிக்குச் சென்ற பொலீஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்துப் போட்டனர்.
  12. இரண்டாவது கண்ணிவெடித் தாக்குதல் புலிகளின் மீள் எழுச்சி அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. வடக்கின் பாதுகாப்பு நிலைமையினை அது வெகுவாகப் புரட்டிப் போட்டிருந்தது. இங்கிலாந்துப் பத்திரிக்கையாளரான டேவிட் செல்போர்னுக்குச் செவ்வி வழங்கிய ராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்க, "நாம் தற்போது உச்சத்தில் இல்லை" என்று கூறியிருந்தார். டேவிட் செல்போர்ன் "பயங்கரவாதிகளே தாக்குதலையும் நேரத்தையும் தெரிவு செய்கிறார்கள், நாம் செய்வதெல்லாம் அதற்கான எதிர்வினை மட்டும்தான்" என்று திஸ்ஸ வீரதுங்க அவரிடம் கூறினார். தான் பிரித்தானியச் செய்தியாளரிடம் பேசிக்கொண்டிருக்கும் கணத்தில்க் கூட பிரபாகரன் கண்ணிவெடிப் போரினைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார் என்பதோ அல்லது ராணுவத்தின் நடமாட்டங்கள் முடக்கப்பட்டு அவர்கள் முகாம்களுக்குள் அடைபடவேண்டிய நிலை உருவாவதையோ அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. பொன்னாலைப் பாலத்தைத் தகர்த்து கடற்படை ரோந்து அணியை அழிக்க புலிகள் எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியடைந்தபோதிலும், அவர்கள் கண்ணிவெடித்தாக்குதல்கள் மீதான தமது நாட்டத்தினை ஒருபோதும் கைவிட்டிருக்கவில்லை. தமது தவறுகளில் இருந்து பல புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட அவர்கள், தமது உத்திகளை மேலும் மெருகேற்றிக்கொள்ள எத்தனித்தனர். கண்ணிவெடிகளை இயக்குவதற்கு ஜெனரேட்டர்களை எடுத்துச் செல்வது கடிணமானது என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். காவிச்செல்வதற்குக் கடிணமானதாக இருந்த அதேவேளை, அதன் இரைச்சலும் புலிகளுக்கு சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. ஆகவே, ஜெனரேட்டர்களுக்குப் பதிலாக லொறிகளில் பாவிக்கப்படும் பற்றரிகளைப் பயன்படுத்தலாம் என்று புலிகள் முடிவெடுத்தனர். புலிகளின் இரண்டாவது கண்ணிவெடி முயற்சியும் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டு, பங்குனி 4 ஆம் திகதி கிளிநொச்சி உமையாள்புரம் கோவிலின் அருகிலேயே இத்தாக்குதல் முயற்சி நடைபெற்றது. சீலனே இத்தாக்குதலுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். முதலாவது தாக்குதலைப் போலவே, இத்தாக்குதலிலும் செல்லக்கிளியே கண்ணிவெடிகளை வெடிக்கவைப்பதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். பொன்னாலைத் தாக்குதல் முயற்சியைப் போலல்லாது இந்தமுறை கண்ணிவெடித்தாக்குதலில் இருந்து தப்பியோடும் ராணுவத்தினர்மீது துப்பாக்கித் தாக்குதலையும் நடத்துவதென்று புலிகள் தீர்மானித்திருந்தார்கள். மினி பஸ்ஸில் தாக்குதல் நடைபெறப்போகும் இடத்திற்கு வந்திறங்கிய புலிகளின் அணி, வீதியில் இரு கண்ணிவெடிகளைப் புதைத்துவிட்டு அவற்றின்மீது தாரினை ஊற்றி மறைத்துக்கொண்டது. கண்ணிவெடிகளையும் பற்றரியையும் இணைக்கும் மின்கம்பிகளும் தாரினாலும், மண்ணினாலும் உருமறைப்புச் செய்யப்பட்டன. இரு குழுக்களாகத் தம்மைப் பிரித்துக்கொண்ட புலிகளின் அணி, வீதியின் இருமருங்கிலும் நிலையெடுத்துப் பதுங்கிக்கொண்டது. கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்குக் காவலுக்கு நிற்கும் இராணுவ அணிக்கு உணவுப் பொருட்களைக் காவிவரும் இராணுவ ரோந்து அணியே அவர்களின் அன்றைய இலக்கு. ஆனையிறவு தடை முகாமிலிருந்தே கிளிநோச்சிப் பொலீஸ் நிலைய ராணுவத்தினருக்கு மூன்றுவேளையும் உணவு கொண்டுவரப்பட்டது. காலை வேளையில் அவ்வீதியால் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆதலால், காலையுணவைக் கொண்டுசெல்லும் ரோந்து அணியையே தாக்குவதென்று புலிகள் முடிவெடுத்தனர். இராணுவத்தினருக்கு உணவினை ஏற்றிச்செலூம் ட்ரக் வண்டி காலை 7 மணிக்கு ஆனையிறவு முகாமிலிருந்து கிளம்பியது. அதற்குக் காவலாக நான்கு ராணுவ வீரர்கள் சென்றனர். வீதியில் ராணுவ ட்ரக்கினைக் கண்டதும், தனது சக்காக்களை உசார்ப்படுத்தினார் சீலன். ஆனால் இந்தமுறையும் செல்லக்கிளியின் நேரம் தவறிவிட்டது. பொன்னாலைத் தாக்குதல் முயற்சியைக் காட்டிலும் இம்முறை கண்ணிவெடி இலக்கு அருகில் வரும்போது வெடித்திருந்தது. கண்ணிவெடி வெடித்தபோது வீதியில் உருவான கிடங்கினுள் ட்ரக் இறங்குவதற்குச் சற்று முன்னர் சாரதி ட்ரக்கினை நிறுத்திவிட்டார். ட்ரக்கிலிருந்ஃது வெளியே குதித்த ராணுவத்தினர் தாம் கொண்டுவந்த தானியங்கித் துப்பாக்கிகளால் சரமாரியாக எல்லாத்திசைகளிலும் சுட ஆரம்பித்தனர். புலிகளும் பதிலுக்கு இரு பக்கத்திலிருந்து ராணுவத்தினர் மீது தாக்கத் தொடங்கினர். இரு ராணுவ வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் தமது ஆயுதங்களைக் கீழே எறிந்துவிட்டு ஆனையிறவு நோக்கி ஓடத் தொடங்கினார்கள். சாரதியும், வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு ஏனைய ராணுவ வீரர்களின் பின்னால் ஓடத் தொடங்கினார். வீதிக்கு வந்த புலிகள், ட்ரக் வண்டியின் பின்னால் மீள ஒருங்கிணைந்தார்கள். இருவர் ராணுவத்தினரின் ஆயுதங்களை எடுத்துக்கொள்ள மேலும் இருவர் ட்ரக் வண்டியின் அடியில் சென்று அதன் அமைப்பைச் சோதித்தார்கள். ராணுவத்திற்குக் கொண்டுவரப்பட்ட உணவினை உண்டுவிட்டு, குளிர்பானங்களையும் அருந்தினார்கள். அங்கிருந்து தப்பி ஓடிச்சென்ற இராணுவ வீரர்கள் ஆனையிறவு முகாமைச் சென்றடைந்து, மேலும் ராணுவ வீரர்களை அழைத்துக்கொண்டு அங்கு வருவதற்கு நேரம் எடுக்கலாம் என்பதை அறிந்திருந்த புலிகள், சாவகசமாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மாங்குளம் முகாமிலிருந்து பலாலி நோக்கி இரு ராணுவக் கவச வாகனங்கள் அவ்வீதியால் அப்போது வந்துகொண்டிருந்தன. முகாம்களுக்கிடையே ராணுவ வீரர்கள் இடம் மாறிக்கொள்ளும் வழமையான செயற்பாட்டிற்கமைய இவ்விரு கவச வாகனங்களிலும் ராணுவ வீரர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். முன்னால் சென்றுகொண்டிருந்த கவச வாகனத்தில் சென்றவர்கள் வீதியின் நடுவே தமக்கு முன்னால் ராணுவ ட்ரக் ஒன்று நிற்பதைக் கண்டுகொண்டார்கள். கவச வாகனத்தின் சாரதி, வீதியில் நின்ற ட்ரக் வண்டிக்கு அருகில் சீருடை அணிந்த சிலர் நிற்பதையும் கண்டுகொண்டார். புலிகளும் தம்மை நோக்கி இரு கவச வாகனங்கள் வேகமாக வருவதை அவதானித்தார்கள். உடனே வீதியின் கரைக்கு பாய்ந்த புலிகள், கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.
  13. தங்கத்துரையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு அரச பயங்கரவாதினாலும், அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் உணர்வுகள் பொங்கியெழுந்துகொண்டிருந்தவேளை, மாசி 17 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நீதிமன்றம் ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் அவ்வுணர்ச்சியைக் கட்டுக்கடங்காத கோபமாக மாற்றிவிட்டிருந்தது. பிரபாகரன் மதுரையை விட்டு வெளியேறி தாயகம் திரும்பிக்கொண்டிருந்த வேளை, நீர்வேலி வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் நடேசன் சத்தியேந்திரா நீதிமன்றில் வரலாற்றைச் சுட்டிக் காட்டி ஆற்றிய வாதத் தொகுப்பில் குறிப்பிட்ட சில விடயங்கள் இலங்கையிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்துவந்த ஒவ்வொரு தமிழனின் உணர்வினையும் ஆளமான தாக்கத்தினைச் செலுத்தியிருந்தது. வழக்கறிஞர் நடேசன் சத்தியேந்திரா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எல்.டி. மூனெமலி தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில் பிரதிவாதிகளாக தங்கத்துரை, குட்டிமணி, தேவன், சிவபாலன் மாஸ்ட்டர், நடேசநாதன் மற்றும் சிறி சபாராட்ணம் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர். ஆனால், சிறி சபாரட்ணம் தலைமறைவாகியிருந்தபடியினால், அவரின்றியே வழக்கு நடைபெற்றது. வழக்கில் பேசிய சத்தியேந்திரா, "குற்றஞ்சாட்டப்பட்ட எனது கட்சிக்காரர்கள் தொடர்பாக நான் ஒரு விடயத்தை இந்த நீதிமன்றில் வெளிப்படையாகக் கூறவிரும்புகிறேன். எந்தவொரு தனி மனிதனுக்கும் இருக்கும் விலை மதிக்கமுடியாத பொருளான தனது உயிரை, தனது மக்களின் விடுதலைக்காக கொடுக்க முன்வந்திருக்கும் எனது சமூகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்களின் முன்னால் நான் தாழ்ந்து அடிபணிகிறேன்" என்று உணர்வு மேலிடக் கூறினார். மாசி 24 ஆம் திகதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள்த்தண்டனையினை வழங்குமுன்னர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பார்த்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று நீதிபதி கேட்டார். தங்கத்துரை தமிழில் உணர்வூர்வமான பேச்சொன்றினை வழங்க அதனை ஆரம்பத்திலிருந்தே நடேசன் சத்தியேந்திரா மொழிபெயர்த்துவந்தார். தங்கத்துரையின் பேச்சு நீண்டு செல்கையில் சத்தியேந்திரா அழத்தொடங்கினார். உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்ட சத்தியேந்திரா, தங்கத்துரையின் பேச்சினை தன்னால் தொடர்ந்தும் மொழிபெயர்க்க முடியாது என்று நீதிபதியினைப் பார்த்துக் கூறினார். சத்தியேந்திராவுக்கு இவ்வழக்கில் உதவிபுரிந்த சிவசிதம்பரம் தங்கத்துரையின் மீதிப் பேச்சினைத் தமிழில் மொழிபெயர்த்தார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் நடராஜா தங்கத்துரை - கொழும்பு, மாசி 24, 1983 தமிழர்களின் வரலாறு பற்றியும், சுதந்திரத்தின் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக அரசுகளால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டதையும், தமிழர்களுக்குச் சட்டபூர்வமாக வழங்கப்படவேண்டிய உரிமைகளை மிதவாதத் தலைவர்கள் பெற்றுக்கொடுக்கத் தவறியமையும், அரச பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்க தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்ததையும் விளக்கப்படுத்திய தங்கத்துரை தனது பேச்சினை பின்வரும் வகையில் நிறைவு செய்தார். "நாம் வன்முறையினைக் காதலிப்பவர்கள் அல்ல. மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. எமது மக்களை விடுவிக்க போராடும் ஒரு இயக்கத்தின் போராளிகள் நாங்கள். எம்மைப் பயங்கரவாதிகள் என்று ஓயாமல் தூற்றிக்கொண்டிருக்கும் அந்த உன்னதமான மனிதர்களுக்கு நாம் ஒன்றைச் சொல்ல விழைகிறோம்". "நூற்றுக்கணக்கான தமிழர்கள் இரத்த வெள்ளத்தில் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டபோது பயங்கரவாதம் குறித்து நீங்கள் அச்சம் கொள்ளவில்லையா? இனவாதிகள் தமது வெறுப்பினை இந்த நாடு முழுவதும் காட்டுத்தீயைப் போல பரப்பியபோது உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையா? அப்பாவித் தமிழ்ப்பெண்கள் உங்களால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டபோது உங்களுக்கு பயங்கரவாதம் குறித்த பயம் ஏற்படவில்லையா? எமது கலாசாரப் பொக்கிஷங்களை நீங்கள் எரியூட்டியபோது உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையா? 1977 ஆம் ஆண்டில் மட்டும் 400 தமிழர்கள் பலியிடப்பட்டு, அவர்களின் இரத்தத்தில் வானம் செந்நிறமாகியபோது பயங்கரவாதத்தினை நீங்கள் கண்டுகொள்ளவில்லையா?" "ஆக, தமிழ் ஈழத்தில் ஒரு சில பொலீஸ் காடையர்கள் கொல்லப்பட்டபோதும் சில லட்சம் ரூபாய்கள் வங்கிகளில் கொள்ளையிடப்பட்டபோதும் மட்டும்தான் பயங்கரவாதம் உங்களின் முகத்தில் அறைந்ததோ?" "ஆனால் என்னுடைய வேண்டுதல் என்னவென்றால், அதிகார வெறிபிடித்த சிங்கள அரசியல்வாதிகள் விதைத்த வினையினை அப்பாவிச் சிங்கள மக்கள் அறுவடை செய்யக் கூடாது என்பதுதான். நாம் அனுபவிக்கும் இன்னல்கள் எல்லாம் ஆண்டவன் எங்களைப் புனிதப்படுத்த அருளிய வரங்கள் என்று நான் நினைக்கிறேன். இறுதி வெற்றி எமதே!" இறுதி வெற்றி எமதே என்று தங்கத்துரை எதிர்வுகூறியபடி தனது பேச்சினை முடித்தபோது நானும் நீதிமன்றத்தில் இருந்தேன். அப்பாவிச் சிங்கள மக்கள் அதிகார வெறி பிடித்த சிங்கள அரசியல்வாதிகளின் செயலினால் பழிவாங்கப்பட்டு விடக்கூடாது என்று வேண்டுகிறேன் என்று அவர் கூறியபோது என்னால் அழுகையினைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த அனைத்துத் தமிழர்களும் அழுதார்கள். தங்கத்துரை எம் அனைவரையும் உணர்வுகளால் இணைத்துவிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், இலங்கையிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழர்களையும் அவர் உணர்வால் ஒன்றிணைத்தார். தமிழர்கள் உணர்வுரீதியாக ஒருங்கிணைவதை அவர் அன்று உறுதிப்படுத்திக்கொண்டார். தங்கத்துரையின் உரையின் இறுதிப்பகுதியை, குறிப்பாக அவரது உரையின் இறுதி வாக்கியத்தை மேற்கோள் காட்டித் தமிழ்ப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டதுடன், அந்தப் பேச்சு தமிழ் மக்கள் மேல் எவ்வகையான தாக்கத்தினைச் செலுத்தப்போகின்றது என்பது பற்றிய ஆசிரியத் தலையங்கங்களையும் வெளியிட்டிருந்தன. ஆனால், ஆங்கிலப் பத்திரிக்கைகள் தங்கத்துரையின் பேச்சினை முற்றாக இருட்டடிப்புச் செய்திருந்ததுடன், தங்கத்துரைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழ்ப் பயங்கரவாதத்தினை எவ்வாறு முடிவிற்குக் கொண்டுவரப்போகின்றது என்பது பற்றி எதிர்வுகூறியிருந்தன. சிங்களப் பத்திரிக்கைகளோ ஒரு படி மேலே சென்று, தங்கத்துரைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை ஆரவாரத்துடன் வரவேற்றது மட்டுமன்றி, தமிழ்ப் பயங்கரவாதிகளைக் கைதுசெய்த பொலீஸாரையும், இராணுவத்தினரையும் வானளவப் புகழ்ந்து தள்ளியிருந்தன. தங்கத்துரையின் அன்றைய பேச்சு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் மீதும், இலங்கை அரசியலின் எதிர்காலம் மீதும் செலுத்தவிருக்கும் தாக்கத்தினை சிங்கள ஊடகவியலாளர்கள் அன்று கண்டுகொள்ளத் தவறியிருந்தனர். இலங்கையின் இனப்பிரச்சினையில் இரு தரப்புக்கள் இருக்கின்றனர் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறியிருந்தனர். ஒருபக்கச் சார்பாக செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததன் மூலம் தமது தலைவர்களால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வந்த குற்றங்களைத் தூண்டிவிட்டதுடன், அவற்றினை ஆதரித்தும் அவர்கள் எழுதி வந்தனர்.
  14. பிரபாகரனின் தாயகம் திரும்பலும் அரசியல் வெற்றிடத்தினை நிரப்பலும் பிரபாகரன் தமிழ்நாட்டிற்குச் சென்று சரியாக ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், 1983 ஆம் ஆண்டு மாசி 18 ஆம் திகதி, காலை புலரும் முன் வல்வெட்டித்துறையில் தரையிறங்கினார். 1981 ஆம் ஆண்டு ஆனி 6 ஆம் திகதி, அதாவது யாழ் நூலகம் எரிக்கப்பட்டு ஆறு நாட்களுக்குப் பின்னர் அவர் தமிழ்நாட்டிற்குச் சென்றபோது அவர் மிகுந்த வருத்தமும், கோபமும் கொண்டிருந்தார். அவர் மீது இராணுவத்தினரும், பொலீஸாரும் கடுமையான அழுத்தத்தினைப் பிரயோகித்திருந்தனர். அவரது மறைவிடங்கள் ஒவ்வொன்றாகக் காட்டிக் கொடுக்கப்பட்டு சல்லடை போடப்பட்டன. அவரிடமிருந்த பணமும் அற்றுப்போயிருந்தது. அவரால் நம்பப்பட்ட பல நண்பர்கள் அவரை விட்டுச் சென்றிருந்தனர். தன்னையும், தனது போராட்ட அமைப்பையும் தக்கவைத்துக்கொள்ள டெலோ அமைப்புடன் சேர்ந்து, ஒரு பகுதியாக இயங்கவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். தமிழ்நாட்டில் அவர் தங்கியிருந்த 19 மாதங்களில் அவர் பல சிக்கல்களை எதிர்கொண்டபோதும், பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் புலிகளியக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதில் வெற்றி பெற்றிருந்தார். தனது இயக்கத்தைப் பலப்படுத்தி தனித்து இயங்கும் நிலைக்கு அவர் உயர்த்தியிருந்தார். ஜெயவர்த்தன அரசின் அடக்குமுறைகள் தமிழர் தாயகத்தில் தோற்றுவித்திருந்த உணர்வெழுச்சிப் போராட்டங்கள் தனது ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்குத் தகுந்த சூழ்நிலையினை ஏற்படுத்தியிருப்பதை பிரபாகரன் உணர்ந்தார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஜெயவர்த்தனவிடம் முற்றாகச் சரணடைந்திருந்த நிலையில் மக்களால் அவர்கள் கைவிடப்படுவதன் மூலம் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் ஒன்றும் உருவாகிவருவதையும் அவர் உணர்ந்துகொண்டார். பேபி சுப்பிரமணியம் இவ்விரு விடயங்கள் குறித்தும் அவர் பேபி சுப்பிரமணியத்துடனும் நெடுமாறனுடனும் ஆலோசனைகளை நடத்தினார். "ஒரு ஆயுதப் போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான சூழ்நிலையொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது, ஜெயவர்த்தனவுக்கே நன்றிகள்" என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாக நெடுமாறன் நினைவுகூர்திருந்தார். "நாம் செய்யவேண்டியதெல்லாம் மக்கள் உருவாக்கித் தந்திருக்கும் இந்த உந்துசக்தியை மேலும் தீவிரமாக்குவதுதான். இச்சந்தர்ப்பத்தைத் தவறவிடுவோமானால், இந்த உணர்வெழுச்சி அடங்கிப் போய்விடும்" என்று பிரபாகரன் விவாதித்திருக்கிறார். சீலனின் முழங்கால் காயம் குணமடைந்ததைத் தொடர்ந்து, அவரையும் தன்னுடம் தாயகத்திற்கு அழைத்து வந்த பிரபாகரன் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டச் சூழ்நிலையினை போராட்டத்தின் இன்னொரு படியான ஆயுத மோதலுக்கு முன்கொண்டுசெல்லத் தீர்மானித்தார். தனது சிறுபராயம் தொட்டு எண்ணிவந்த ஆயுத ரீதியிலான தாயக விடுதலைப் போராட்டத்தினை முழுமூச்சுடன் ஆரம்பிக்க முடிவெடுத்தார். எதிரி மீது திருப்பியடிக்க, பலமாகத் திருப்பியடிக்க அவர் முடிவெடுத்தார். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினையிருந்தது. அதுதான் தமிழ்நாட்டில் அவருக்கு இன்னமும் இருந்த நீதிமன்றப் பிணை. தான் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குத் தப்பிவந்தது தெரியவருமிடத்து தனக்குப் பிணைநின்ற நெடுமாறனுக்கு சங்கடத்தையும் அசெளகரியங்களையும் அது ஏற்படுத்தும் என்று அவர் அஞ்சினார். நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்த நாளிலிருந்து அவர் நெடுமாறனின் மதுரை வீட்டிலேயே தங்கியிருந்தார். "நான் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பினால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வருமா?" என்று நெடுமாறனிடம் வினவினார் பிரபாகரன். "என்னைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். உங்களுக்கும் உங்களின் போராட்டத்திற்கும் நண்மையானதைச் செய்யுங்கள்" என்று பதிலளித்தார் நெடுமாறன். பிரபாகரன் வல்வெட்டித்துறையில் வந்திறங்கிய நாள்வரை, சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதலை விடுத்து பெருமளவில் அமைதியாகவிருந்த புலிகளின் படை அன்று மாலையே பொலீஸாரையும், இராணுவத்தையும் கலங்கவைக்கும் தாக்குதல் ஒன்றினை நடத்தியது. நெடுமாறனுடன் தலைவர் - 1980 களில் அன்று இரவு 8:15 மணிக்கு பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலீஸ் பரிசோதகர் எ.கே. ஆர். விஜேவர்த்தன சிகரெட்டுக்களை வாங்கிவர "சிறி கபே" எனும் தேநீர்ச் சாலைக்கு தனது ஜீப்பில் சென்றிருந்தார். அவரது குடும்பம் விடுமுறை நாட்களில் அவரைப் பார்க்க அங்கு வந்திருந்தது. ஆகவே, குடும்பத்தினருடன் பொழுதைக் களிக்க சில நண்பர்களையும் அன்று அவர் இரவு விருந்திற்கு அழைத்திருந்தார். அவர் சிகரெட்டுக்களை வாங்கிக்கொண்டு மீண்டும் தனது ஜீப்வண்டியில் ஏறும்போது அதுவரை அவரைத் தொடர்ந்துவந்த நான்கு புலிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். தனது அதிகாரி வாகனத்தில் ஏறுவதற்கு வாகனத்தின் கதவினைத் திறந்துவிட வெளியே வந்த சாரதி வீரசிங்கவும் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு பொலீஸாரையும் சுட்டுக் கொன்றுவிட்டு அந்தப் பொலீஸ் வாகனத்தில் தப்பிச்சென்றது புலிகளின் அணி. 31 சிறி 5627 எனும் இலக்கமுடைய அந்தப் பொலீஸ் ஜீப் வண்டி மறுநாள் புத்தூர்ப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. விஜேவர்த்தனவின் மீதான தாக்குதலை திட்டமிட்டவர் பிரபாகரனே. இத்தாக்குதல் பற்றி மறுநாள் வெளிவந்த ஈழநாடு பத்திரிக்கை விரிவான தகவல்களை வெளியிட்டிருந்தது. மேலும் தொடர்ந்து வந்த நாட்களில் இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள், மாத்தையாவைத் தேடிப் பிடிப்பதற்கு உருவாக்கப்பட்டிருந்த ராணுவப் புலநாய்வுத்துறையின் குழு வல்வெட்டித்துறைக்குச் சென்றமை போன்ற தகவல்களையும் அது வெளியிட்டு வந்தது. பருத்தித்துறை பொலீஸ் அதிகாரியின் மரணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் நிம்மதியினை ஏற்படுத்தியிருந்ததுடன், மக்களும் அதனை வரவேற்றிருந்தனர். மக்களைப் பொறுத்தவரை பொலீஸ் அதிகாரி விஜேவர்த்தன ஒரு கொடுமையான பயங்கரவாதியாகத் திகழ்ந்தார். பொதுமக்களை அச்சுருத்தவும், துன்புறுத்தவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாகத் தனக்கு வழங்கப்பட்ட அளவுக்கதிகமான அதிகாரங்களை அவர் விருப்பத்துடன் பாவித்து வந்தார். ஆகவே, அவ்வாறான கொடுமையான அதிகாரி ஒருவர் களத்திலிருந்து அகற்றப்பட்டது தமிழ் மக்களைப் பொறுத்தவரை நிம்மதியளிக்கும் விடயமாகவும், புலிகளால் தமக்கு செய்யப்பட்ட உதவியாகவும் தெரிந்தது. தனது ஆயுதப் போராட்டத்திற்கு புதிய குணவியல்பினைக் கொடுக்கும் தாக்குதலாக விஜேவர்த்தனவின் தாக்குதலை பிரபாகரன் திட்டமிட்டார். "மக்களைப் பாதுகாக்கும் காவலர்கள்" என்பதே அந்த விசேடமான குணவியல்பு !

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.