Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19134
    Posts
  2. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    1866
    Posts
  3. nochchi

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5896
    Posts
  4. uthayakumar

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    616
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/12/23 in all areas

  1. ஈழத்தமிழர் விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே தனது தேசிய பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்திவந்த இந்தியா இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் இந்தியாவின் உணர்வு குறித்த விடயங்களையும் ராவின் கடிதம் விளக்கியிருந்தது. இந்தியாவின் கரிசணைக்கான நான்கு காரணங்கள் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. முதலாவது, இலங்கைத் தமிழர்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதல்கள் இந்தியாவில் வாழும் தமிழர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் என்பது. தமிழ்நாட்டில் இத்தாக்குதல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்ததோடு, இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்ற இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இரண்டாவது இலங்கையில் காணப்படும் ஸ்த்திரமற்ற நிலமை இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுருத்தலாக மாறும் என்பது. மூன்றாவது, இலங்கையில் ஏற்படும் ஸ்த்திரமற்ற நிலைமையினைப் பாவித்து வெளிநாட்டுச் சக்திகள் இலங்கையினுள் நுழைந்துவிடும் என்பது. நான்காவதாக, இலங்கையில் ஏற்படும் நிலைமைகளைப் பாவித்து இந்தியாவில் ஸ்த்திரமற்ற நிலைமையினை உருவாக்கி பலவீனப்படுத்த வெளிநாட்டுச் சக்திகள் முனையும் என்பது. இலங்கைக்கு ஆயுத உதவிகளைச் செய்யவேண்டாம் என்று இந்தியா கேட்டுக்கொண்டதையடுத்து, அனைத்து நாடுகளும் அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தன. இந்தியாவைப் பிராந்திய வல்லரசாக ஏற்றுக்கொண்ட அந்த நாடுகள் அதன் கோரிக்கைக்கு இணங்க, இலங்கைக்கு உதவிசெய்யப்போவதில்லை என்று தெரிவித்தன. லோக்சபாவில் இந்திரா காந்தியினதும் ராவினதும் பேச்சுக்கள் மற்றும் ராவின் கடிதம் ஆகியவை இந்திராவின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து இலங்கை தொடர்பாக இந்தியா வரிந்துகொண்ட வெளிநாட்டுக் கொள்கைக்கான அடித்தளத்தை தெளிவாகக் காட்டியிருந்தது. இதற்குப் பின்னர் வந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் அந்த வெளியுறவுக் கொள்கையினை வழிநடத்திச் செல்ல உதவியிருந்தன. இதுபற்றி பின்னர் ஆராயலாம். லோக் சபாவில் இந்திரா காந்தியும், ராவும் உரையாற்றுவதற்கு முதல்நாள், ஆவணி 1 ஆம் திகதி இலங்கையரசு வெளியிட்ட செய்தியொன்றில், வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை முயல்கிறது எனும் செய்தியினை முற்றாக நிராகரித்திருந்தது. புது தில்லியில் இலங்கையின் தூதராக கடமையாற்றிவந்த பேர்ணாட் திலகரட்ண இந்தியாவுக்கெதிரான நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய இலங்கை முயல்கிறது எனும் செய்தியினை அறிக்கை ஒன்றின் மூலம் மறுதலித்திருந்தார். இதேவகையான அறிக்கையொன்றினை கொழும்பில் இலங்கையரசும் வெளியிட்டிருந்தது. தில்லியில் வெளிநாட்டமைச்சர் ஹமீது மேற்கொண்டுவந்த பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு உடனடியாக அவரை நாடு திரும்புமாறு ஜெயார் பணித்தார். ஆவணி 1 ஆம் நாள் இரவும் ஹமீது தில்லியிலிருந்து கொழும்பிற்குப் பயணமானார். தில்லி விமான நிலையத்தில் அவரைச் சூழ்ந்துகொண்ட பத்திரிக்கையாளர்கள் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயலவில்லை எனும் இலங்கை அரசின் அறிக்கை பற்றிக் கேட்டபோது, "நாம் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முனைகிறோம் எனில், அது இந்தியாவாகத்தான் இருக்கும் என்பதை உங்களுக்கு உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறிச் சமாளித்தார். இந்திய சஞ்சிகையான "த வீக்" இன் செய்தியாளர் பட்ரிக் மைக்கல் ஜெயாரை ஐப்பசி 1 ஆம் திகதி பேட்டி கண்டிருந்தார். "உங்கள் நாடு இந்தியாவைத் தவிர்த்து வேறு நாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயல்வதாகப் பரவிய வதந்திகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?" என்று மைக்கல் கேட்டபோது, "இது வெறும் புரளியே அன்றி வேறில்லை என்பதை நான் பலமுறை கூறிவிட்டேன்" என்று காட்டமாகப் பதிலளித்தார். ஆனால் இலங்கையின் மறுதலிப்பை எவறுமே நம்பவில்லை, குறிப்பாக இந்தியா இலங்கையரசின் மறுதலிப்புக்களை எரிச்சலுடனேயே பார்த்தது. மேலும், ஜெயார் பின்னாட்களில் அவ்வப்போது வழங்கிய பேச்சுக்களில் தான் வெளிநாடுகள் சிலவற்றிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டிருந்தார். 1987 ஆம் ஆண்டு ஐப்பசி 25 ஆம் திகதி சண்டே ஒப்சேர்வர் பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியில், "இந்தியாவின் அழுத்தம் அதிகமாக இருந்த அந்த நாட்களில் வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவுகளுக்கான நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டதாக‌" ஜெயார் கூறினார். தமிழர்களின் எதிர்ப்புணர்வு எதிர்வரும் அத்தியாயங்களில் இலங்கை தொடர்பான இந்திராவின் நிலைப்பாடு பற்றியும், அதனூடாக வரியப்பட்ட இந்திய வெளிநாட்டுக்கொள்கை பற்றியும் விரிவாகப் பார்க்கலாம். தமிழர் மீதான வன்முறைகளும், அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய ஜெயார் முயன்றதும் இலங்கை தொடர்பான இந்திராவின் நிலைப்பாட்டையும், வெளியுறவுக் கொள்கையினையும் ஒரு திசையில் முன்னோக்கித் தள்ளியிருந்தது. அதேவேளை தமிழர் மீதான சிங்களவர்களின் வன்முறைகள் இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்களை அதுகுறித்து ஒரு திசையில் எதிர்வினையாற்றவும் தூண்டியிருந்தன. இலங்கையில் தமிழர் மீதான சிங்களவர்களின் தாக்குதல்களைக் கண்டித்து தமிழ்நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து முன்னர் குறிப்பிட்டிருந்தேன். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வீதியில் இறங்கிய தமிழர்கள், தமது சகோதரர்களைக் காப்பாற்ற இந்தியா உடனடியாக இலங்கையில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த கரிசணையும், ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற மனோநிலையும் இந்த ஆர்ப்பாட்டங்களை சுமார் ஒருவார காலம்வரை நீடிக்க வைத்தன. பின்னர் தமிழ்நாட்டு அரசியலில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்கும் நடவடிக்கைகள் அரங்கேறத் தொடங்கின. தமிழ்நாட்டில் அன்று ஆட்சியிலிருந்த எம்.ஜி. ராமச்சந்திரனின் அ.தி.மு. க அரசும், எதிர்க்கட்சியாகவிருந்த மு. கருனாநிதியின் தி.மு.க கட்சியும் தமிழர்களுக்கு யார் அதிகளவு ஆதரவினை வழங்குவது என்பதனை மக்களுக்குக் காட்டும் போட்டியில் குதித்திருந்தன. ஆவணி 1 ஆம் திகதி பொது வேலை நிறுத்தம் ஒன்றிற்கு மு. கருனாநிதி அழைப்பு விடுத்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அதே ஆவணி 1 ஆம் திகதி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவினைக் காட்ட பொதுமக்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அந்த திங்கட்கிழமை மொத்த தமிழ்நாடுமே முற்றான ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், அனைத்துக் கட்சிக் குழுவொன்று அதே நாளான ஆவணி 1 ஆம் திகதி பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து இலங்கைத் தமிழரைப் பாதுகாக்க இந்தியா உடனடியாக இலங்கையில் தலையீடு செய்யவேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருந்தது. தமிழர்களைக் கொன்றுவரும் சிங்களக் காடையர்களை அடக்குவதற்கு ஜெயார் எதனையும் செய்ய விரும்பவில்லை என்று அவர்கள் இந்திரா காந்தியிடம் சுட்டிக் காட்டியிருந்தனர். மேலும் தாக்குதல்களின் வீரியம் குறையத் தொடங்கியவேளை நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் பேசிய ஜெயவர்த்தன, தமிழர்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தி ஊக்குவித்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்தியாவுக்கெதிரான நாடுகளிலிருந்து ஜெயார் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றுவருவது குறித்து இந்திரா மெளனமாக இருந்துவிடமுடியாது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். மேலும், வெளிவிவகார அமைச்சர் ராவ் இலங்கைக்குச் சென்றிருக்காதுவிட்டால், இன்றுவரை தமிழர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் என்றும் கூறினர். இலங்கை மீது இந்தியா ராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்வதான சூழ்நிலை அந்தத் திங்கட்கிழமை என்றுமில்லாதவாறு அதிகமாகவே தென்பட்டிருந்தது. சுமார் ஒருவார கால விடுமுறைக்குப் பின்னர் வேலைக்குத் திரும்பியிருந்த எனக்கு லேக் ஹவுஸ் நிலையத்தில் இச்செய்தியே பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது தெரிந்தது. டெயிலி நியூஸின் ஆசிரியர் பகுதிக்கு அன்று நான் நுழைந்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுகுறித்து நாம் பேசவேண்டும். அங்கிருந்த ஆசிரியர் முதல், அலுவலக சிற்றூழியர்கள் வரை அனைவரும் எழுந்து நின்று எனக்கு வணக்கம் செலுத்தியதுடன், "எங்களை மன்னித்துவிடுங்கள்" என்றும் கோரினர். ஆசிரியரான மணிக் டி சில்வா என்னிடம் வந்து, "உங்களுக்கு நடந்த அனைத்து இன்னல்களுக்காகவும் எங்களை மன்னித்துவிடுங்கள், தயவுசெய்து இச்செயல்களுக்கான மொத்த சிங்கள இனத்தையும் எதிரிகளாகப் பார்க்காதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார். நான் உண்ர்ச்சிவசப்பட்டு அழத்தொடங்கினேன். "இல்லை மணிக், சிங்கள மக்களுக்கெதிராக எந்த பழிவாங்கும் உணர்வும் என்னிடம் இல்லை" என்று அவரிடம் நான் கூறினேன். நான் இந்தச் சம்பவத்தையும், இதுபோன்ற இன்னும் சில நிகழ்வுகளையும் தமிழர்கள் மீது சிங்களவர்கள் ஒரு இனமாகத் தாக்கவில்லை, மாறாக ஒரு சிறு பகுதியினரே அரசியல் ஆதாயத்திற்காக அதனைச் செய்தார்கள் என்று தமிழ் நண்பர்களுடன் பேசும்போது உதாரணங்களாக எடுத்துக் கூறியிருக்கிறேன். இத்தாக்குதல்கள் நிச்சயமாக சிங்கள மக்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு செய்த தன்னெழுச்சியான தாக்குதல்கள் இல்லை. தமது அரசியல் அதிகாரத்திற்கு சவால் விட்டார்கள் என்கிற காரணத்தை முன்வைத்து, அரசாங்கமும், அதிகாரத்தில் இருந்தவர்களும் தமிழர்களுக்கு ஒரு பாடத்தினைப் புகட்ட செய்த திட்டமிட்ட வன்முறைகளே இவை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ஆவணி முதலாம் வாரத்தில் சிங்கள மக்களிடையே கடுமையான‌ அச்ச நிலையொன்று உருவாகியிருந்தது. இந்தியா தமது நாட்டின்மீது இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளப்போகிறது என்பதே அது. காமிணி திசாநாயக்கவின் தலைமையில் இயங்கிவந்த ஜாதிக எஸ்டேட் தொழிலாளிகள் தொழிற்சங்க செயற்கூட்டத்திலும் இது எதிரொலித்தது. கூட்டத்தில் நிலவிய அச்ச நிலையினைப் போக்க காமிணி திசாநாயக்க அக்கூட்டத்திலிருந்தவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், "நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், இந்தியா எம்மீது இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ள முன்னர், 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரையும் நாம் கொன்றுவிடுவோம்". இதன்பின்னர் கூட்டம் சலசலப்பின்றி நடந்தேறியது. தம்மீதான மிலேச்சதனமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளும், அதன் பின்னரான அரசாங்கத்தின் தலைவர், அமைச்சர்கள், இனவாதிகள் கக்கிவந்த இனவாத நியாயப்படுத்தல்களும் தமிழர்கள் மனதில் ஆழமான வடுவொன்றை ஏற்படுத்தி விட்டிருந்தன. தாம் பல்லாண்டுகளாக வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து ஒரு இரவில் வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிமுகாம்களில் தஞ்சம் கோரியபோதுதான் தமிழர்கள் தம்மை ஒரு இனமாக உணர்ந்துகொணடனர். பிரதேச வேறுபாடுகள், மத வேறுபாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார வேற்றுமைகள் ஆகிய தடைகள் எல்லாவற்றையும் களைந்து தமிழர்களாக ஒன்றாகும் நிலையினை சிங்களக் காடையர்கள் படுகொலைகள் ஊடாக தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். பிரபல தொழிற்சங்கவாதியான கே. சி. நித்தியானந்தா இந்த வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்தவேளை ஒரு விடயத்தைக் கூறியிருந்தார், "தமிழர்களின் விடுதைப் போராட்டத்திற்கு ஜெயார் செய்திருக்கும் மகத்தான சேவை என்னவெனில், தமிழர்கள் தம்மை தனியான இனமாகவும், தனியான தேசமாகவும் உணரவும் செயற்படவும் உந்தித் தள்ளியிருப்பதுதான்" , மேலும் உதட்டில் புன்னகையுடன் தொடர்ந்த அவர், "நாம் இதுவரை எம்மை ஒரு தேசிய இனமாகவும், எமக்கான தேசம் ஒன்றினை உருவாக்கவும் முயலாததற்கான தண்டனையே அவர் எம்மீது மேற்கொண்ட இந்தப் படுகொலைகள்" என்றும் கூறினார்.
  2. இந்தியாவுக்குப் பாடம்புகட்ட வெளிநாடுகளில் ஆயுதம் வாங்க முனைந்த ஜெயார் ஜூலை 31, ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில், வெளிநாட்டுச் சக்தியொன்றிடமிருந்து தனக்கு வரவிருக்கும் இராணுவ அழுத்த‌த்தைச் சமாளிக்க இலங்கை அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்த்தான், வங்காளதேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முயன்றுவருவதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. மிகார எனும் புனைபெயரில் எழுதிவந்த ரணதுங்க, இலங்கைக்குச் சவாலாக இருக்கும் அந்த வெளிநாட்டுச் சக்தி "இந்தியா" தான் என்று எழுதியிருந்தார். கொழும்பில் தங்கியிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை, இந்தியாவுக்கெதிரான நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முனையும் செய்தியை அடிப்படையாக வைத்து அறிக்கைகளை இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார்கள். மேலும், ஜெயவர்த்தனவின் அமைச்சரவையில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் இந்திராவின் தொலைபேசி அழைப்பையும், ராவின் திடீர் விஜயத்தையும் தேவையற்ற தலையீடாகப் பார்ப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தார்கள். இந்தச் செய்தி இந்தியாவுக்குத் தலையிடியாய் மாறியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தாம் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்ந்தார்கள். இந்திரா காந்தி கடும் சினம்கொண்டார். சிலகாலமாகவே அமெரிக்கா நோக்கிச் சாயும் ஜெயவர்த்தனவின் நடவடிக்கைகள் அவருக்கு எரிச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தன. ஆகவே, இந்தியாவின் நலன்களை மீறி ஜெயார் செயற்பட முடியாதென்பதை அவருக்கு உணர்த்தவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டார். இதற்கான அடித்தளத்தை உருவாக்க இந்திரா எண்ணினார். அதன்படி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையினைத் தீர்த்துவைக்க இந்தியாவுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்றும் இந்தியாவைத் தாண்டி எந்தவொரு வெளிச்சக்தியும் இவ்விவகாரத்தில் இலங்கையில் தலையீடு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கு பகைமையான நாடுகள் என்று இந்தியா கருதிய சில நாடுகளிலிருந்து இலங்கை ஆயுதங்களைத் தருவிப்பதைத் தடுப்பதற்கு இந்திராவின் அறிவுருத்தல்களின் பெயரில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் இரு விடயங்களைச் செய்தது. முதலாவது, ராவின் வருகையின் இலங்கை உதாசீனம் செய்யும் பட்சத்தில் இலங்கைக்கெதிரான இராணுவ நடவடிக்கை ஒன்றினை இந்தியா ஆரம்பிக்கும் எனும் வதந்தியை வேண்டுமென்றே ஊடகங்கள் ஊடாகக் கசியவிடுவது. இரண்டாவது, ஜெயவர்த்தன ஆயுதங்கள் வாங்க எண்ணியிருக்கும் நாடுகள் அடங்கலாக அனைத்து சர்வதேச நாடுகளையும் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கவேண்டாம் என்று கோருவது. வெளிவிவகார அமைச்சர் ‍ ஹமீத் நான் முன்னர் குறிப்பிட்டது போல, ஜெயவர்த்தனவைக் கையாள இந்தியா இரு முனைகளைப் பாவிக்க எண்ணியிருந்தது. முதலாவது இராணுவ நடவடிக்கை. இரண்டாவது இராஜதந்திர ரீதியிலான நெருக்குவாரம். இராஜதந்திர ரீதியிலான இந்தியாவின் அணுகுமுறை, ராவை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவது. ராணுவ அணுகுமுறை என்பது பரா இராணுவத்தினரைத் தரையிறக்கி, விமான நிலையங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம் இலங்கையில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட ஜெயவர்த்தனவுக்கு அழுத்தம் கொடுப்பது. ஜெயவர்த்தனவும் அவரது அமைச்சரவை மற்றும் இராணுவத் தலைமைப்பீடத்தினர் போன்றோரும் இந்தியாவின் இராணுவத் திட்டம் குறித்து அறிந்தே இருந்தனர். இந்தியாவின் இராணுவக் கலூரியில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த இலங்கை ராணுவத்தின் மேஜர் ஜெனரல் நளின் செனிவிரட்ன இவ்விடயம் தொடர்பாக இந்தியாவில் பேசப்பட்டதை அறிந்தவுடன் உடனடியாக அதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஹமீதிடம் அறியத் தந்தார். அக்காலத்தில் தென்னாசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சார்க் மாநாடு இந்தியாவின் தலைநகர் தில்லியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இந்த மாநாட்டிற்கு ஹமீதை அனுப்பிய ஜெயவர்த்தன, இலங்கையை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் உத்தேச இராணுவ நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த இந்திராவுடன் பேசுமாறு கோரினார். ஆவணி 1 ஆம் திகதி இந்திராவைச் சந்தித்த ஹமீத் இதுகுறித்துக் கேட்டார். இதற்குப் பதிலளித்த இந்திரா இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவைக் கவலை கொள்ள வைத்திருப்பதாகக் கூறியதுடன் , இலங்கையினை ஆக்கிரமிக்கும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் உறுதியளித்தார். இந்திராவின் இந்த உறுதியளித்தலை உடனடியாக ஜெயாருக்கு அறிவித்தார் ஹமீத். ராவ் தனக்கு பரிந்துரைத்ததன்படி தமிழ் அகதிகள் பிரச்சினையினைக் கையாள இலங்கைக்கு உதவ இந்திரா முடிவெடுத்தார். ஆவணி 2 ஆம் திகதி லோக்சபாவில் பேசிய இந்திரா இந்த உதவிகள் குறித்துப் பேசினார். அப்பேச்சின்போது இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டினை இந்தியா முழுமையாக மதித்து ஏற்றுக்கொள்கிறதென்று கூறியதுடன் இலங்கைக்கான மனிதாபிமான உடவிகளைச் செய்ய இந்தியா விரும்புகிறதென்றும் கூறினார். தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே தமிழ் அகதிகள் பிரச்சினையும் ஆரம்பித்துவிட்டது. கொழும்பில் மட்டும் 14 அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. திங்கட்கிழமை இரவிற்குள் சுமார் 20,000 அகதிகள் இந்த முகாம்களில் அடைக்கலம் தேடியிருந்தனர். நாடு முழுவதற்கும் வன்முறைகள் பரவியபோது மேலும் பல அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த அகதிமுகாம்களை யார் பொறுப்பெடுப்பது எனும் பிரச்சினை உருவாகியது. இதனையடுத்து வெள்ளியன்று அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளரான பிரட்மன் வீரக்கோனை அகதிமுகாம்களுக்கான நிவாரண வழங்கலை கண்காணிக்குமாறு ஜெயவர்த்தன பணித்தார். அகதி முகாம்களில் அடைக்கலமாகியிருந்த தமிழ் அகதிகளை அவர்களின் தாயகமான இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை பிரட்மன் வீரக்கோன் மேற்கொண்டார். ஆரம்பத்தில் கப்பல்கள் மூலமாகவும், பின்னர் புகையிரதங்கள் ஊடாகவும் தமிழ் மக்கள் தமது தாயகம் நோக்கி அனுப்பிவைக்கப்பட்டார்கள். தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது வார இறுதியில் சுமார் 300,000 தமிழர்கள் இடம்பெயரச் செய்யப்பட்டனர். கொழும்பு துறைமுகத்தில் தாயகம் நோக்கிச் செல்ல கப்பலுக்காகக் காத்திருக்கும் தமிழ் அகதிகள், ஆவணி 1983 பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவந்த தமிழர்களும், கொழும்பில் நிரந்தரமாக வாழ்ந்துவந்த தமிழர்களும் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தனர். இவர்களுள் சிலர் வடமாகாணத்திற்கு அவர்களின் உறவினர்களுடன் தங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர். ஏனையவர்கள் அகதிமுகாம்களிலேயே பல மாதங்கள் வாழவேண்டியதாயிற்று. தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் நாடுமுழுதிலும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 350 மட்டுமே என்று கூறிய அரசு, தமிழர்களுக்குச் சொந்தமான 18,000 வீடுகளும் வியாபார நிலையங்களும் அழிக்கப்பட்டதாகவும், சுமார் 100,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டதாகவும் கூறியது. சுயாதீனமான தரவுகளின்படி கொல்லப்பட்ட தமிழர்களின் உண்மையான எண்ணிக்கை இதனைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்று கூறின. தற்போது குறைந்தது 2,500 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் என்கிற ரீதியில் இலங்கைக்குத் ராவ் மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பாக அவரையே பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு பணித்த இந்திரா, இலங்கை இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயல்வது குறித்த விபரங்களையும் அச்சபையில் தெரிவிக்குமாறு கோரினார். பாராளுமன்றத்தில் ராவ் ஆற்றிய உரை இருபகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது பகுதி இலங்கையில் இருந்த இந்தியர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக் குறித்த கரிசணை பற்றி விளக்கியது. பின்னர் அவர் பேசும்போது, "இந்தியர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் அவர்களின் பாதுகாப்புக் குறித்த கவலைகளுக்கப்பால், இந்தியாவைப் பூர்வீமகாகக் கொண்ட பலர் கொல்லப்பட்டிருப்பது குறித்த, குறிப்பாக நாடற்றவர்களாக்கப்பட்டுள்ள பல இந்திய உறவுகள் குறித்த ஒட்டுமொத்த இந்தியாவின் கவலையும் எமக்கிருக்கிறது. இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. குடியுரிமையினால், நாடுகளின் எல்லைகளால் பிரிக்கப்பட்டிருந்தாலும் எமக்கு மிக அருகில் இருக்கும் நெருங்கிய கலாசார பிணைப்புடைய அயலவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சொல்லொணாத் துயரங்கள் குறித்து இந்தியா பேசாமலிருக்க முடியாது" என்று கூறிய ராவ், . மேலும், கொழும்பில் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்ந்துவந்த தமிழர்களை அவர்களின் தாயகமான வடக்குக் கிழக்கிற்கு அனுப்பிவைப்பதற்கான கப்பல்களை வழங்குமாறும், அகதி முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களுக்கான எரிபொருள், மருந்துவகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான உதவிகளையும் வழங்குமாறு இலங்கை அரசு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். இந்தியக் கப்பல் ஒன்றில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் ‍ ஆவணி 1983 இலங்கை கேட்டுக்கொண்டதற்கமைய இந்தியா எரிபொருள், மருந்துவகை, உடைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பவற்றை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்தது. தமிழ் அகதிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்ல கப்பல்களையும் வழங்கியது. தனது பேச்சின் இரண்டாவது பாகத்தில் இலங்கையரசாங்கம் அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்த்தான், சீனா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றுவருகிறது என்கிற செய்தியை முன்வைத்தார். தனது விஜயத்தின் பின்னரே இந்த ஆயுதக் கொளவனவு முயற்சியில் இலங்கையரசு இறங்கியிருக்கிறது என்றும் கூறினார். இதுகுறித்த மேலதிகத் தகவல்களை தன்னால் வழங்கமுடியாது என்று கூறிய ராவ், பாராளுமன்றமும் நாட்டு மக்களும் இதுகுறித்து அறிந்திருப்பது அவசியம் என்றும் கூறினார். மேலும், வெளிநாட்டுச் சக்தியொன்று தமது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற விதத்தில் செல்வாக்குச் செலுத்த நினைப்பதாலேயே இலங்கை வெளிநாடுகளிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயல்கிறதென்றும், அந்த வெளிநாட்டுச் சக்தி இந்தியாவே என்று இலங்கை அரசு கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையில் பேசிய ராவ், இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி, இலங்கை ஆயுதக் கொள்வனவில் ஈடுபடப்போவதாகக் குறிப்பிடும் நாடுகளுடன் இந்தியா தொடர்புகொண்டு தனது கரிசணையினை வெளியிட்டிருப்பதுடன், இலங்கையில் நிலவும் சூழ்நிலை தொடர்பாகவும் அந்நாடுகளுக்கு விளக்கமளித்திருக்கிறது. நிலைமைகளின் ஏற்படப்போகும் மாற்றங்களையடுத்து வெளிநாட்டுத் தலையீடுகள் இப்பிராந்தியத்தில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியா கருதுகிறது என்றும் கூறினார். அதன் பின்னர் பேசிய ராவ், எச்சக்தியாக இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று எச்சரிக்கையினையும் விடுத்தார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக சர்வதேசம் கருதக் கூடாது என்றும் கூறினார். இந்தியாவின் தவிர்க்கமுடியாத அயல்நாடாக இலங்கை இருப்பதால் இலங்கையில் நடைபெறும் விடயங்கள் இந்தியாவில் பல பின்விளைவுகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்கமுடியாது இருக்கிறது என்றும் கூறினார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பிலும், நலனிலும் இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் தாக்கம் செலுத்துவதால், அவைகுறித்து இந்தியா வாளாவிருக்க முடியாது என்றும் ராவ் கூறினார். "எம்முடன் பேசிய இலங்கை அதிகாரிகள் எமக்குச் சார்பாகவே பேசினார்கள். இலங்கை தனக்குத் தேவையான உதவிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அது இரு அரசாங்கங்களுக்கும் இடையே பரஸ்பர ரீதியில் இலகுவாகச் செய்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும்" என்று கூறினார். இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சு நடத்திய விசாரணைகளின்போது இலங்கையரசாங்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்று வருவது உண்மையென்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே, இலங்கையின் இந்த வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவு முயற்சியை இந்திய வெளிவிவகாரத்துறை தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது. சர்வதேசமெங்கும் வியாப்பித்திருந்த இந்தியா இராஜதந்திர வலையமைப்பு இந்தப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டது. சர்வதேச நாடுகளில் இந்தியாவின் தூதர்களாக பணிபுரிந்தவர்களை வெளிநாட்டுவிவகார அமைச்சகத்திற்கு அழைத்துப் பேசிய அதிகாரிகள், ராவ் எழுதிய "இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்" என்கிற சாராம்சத்துடனான கடிதங்களை தத்தமது நாடுகளுக்கு எடுத்துச் சென்று வழங்குமாறு கோரினார்கள்.
  3. இந்தியக் காரணி தமிழர் மீதான வன்முறைகளையடுத்து தேவையற்ற வெளிநாட்டு தலையீடுகளை தனது அரசாங்கம் எதிர்கொள்ளப்போகிறதென்பதை இந்திரா காந்தியுடனான தொலைபேசி அழைப்பினையடுத்து ஜெயார் உணர்ந்துகொண்டார். முதலாவதாக, தமிழர்களை பலவீனப்படுத்த தான் எடுத்திருக்கும் முயற்சிகள் தனது அரசியல் எதிர்காலத்தைப் பலவீனப்படுத்தியிருப்பதையும், சிங்கள மக்களை இனமாகப் பலவீனப்படுத்தியிருப்பதையும், சர்வதேசத்தில் சிங்கள மக்களின் பெயரினைக் களங்கப்படுத்தியிருப்பதையும் அவர் உணர்ந்தார். இரண்டாவதாக தமிழர் மீதான தனது அரசின் வன்முறைகள் இலங்கையில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான சந்தர்ப்பத்தினை இந்தியாவுக்கு ஏற்படுத்தி விட்டிருப்பதையும் அவர் உணர்ந்துகொண்டார். இந்திரா காந்தியின் தொலைபேசி அழைப்பும், அதன்பின்னரான நரசிம்ம ராவின் விஜயமும் ஜெயாரின் சுதந்திரத்தையும் ஆட்சியதிகாரத்தையும் ஓரளவிற்குக் கட்டிப் போட்டதுடன், அவரைத் தற்காப்பு நிலைக்கும் தள்ளி விட்டது. மேலும், எந்த நடவடிக்கைகயினையும் எடுப்பதற்கு தனக்கிருக்கும் அதிகாரம் தற்போது இந்தியாவின் தேசிய நலனினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் உணரத் தலைப்பட்டார். தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் படிப்பிப்பதற்கு அவர் முன்னெடுத்த தாக்குதல்கள் சர்வதேச ரீதியில் அவரையும் அவரது அரசாங்கத்தையும் "கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்" எனும் பட்டியலில் இணைத்துவிட்டிருந்தது. சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் தமிழ்க் கர்ப்பிணிப் பெண் ஒருவர் ‍ இனக்கொலை 1983 வெள்ளிக்கிழமை தனது கண்டிநோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஹமீதுடன் சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பித்தார். தான் பயணித்த இடங்களிலெல்லாம் தமிழர்கள் வீதிகளில் வைத்துச் சிங்களவர்களால் அடித்தும் எரித்தும் கொல்லப்படுவதையும், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்படுவதையும் தான் கண்ணுற்றதாக ஹமீதிடம் கூறினார். மேலும், மலையகப் பகுதிகளில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளை சிங்களவர்கள் மீண்டும் ஒருமுறை நடத்தத் தயாராவதாக தனக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதாக ராவ் கூறினார். "அரசாங்கத்தின் உறுப்பினர்கள், வன்முறைகளை ஒவ்வொரு நகருக்கும் பரப்பி வருகிறார்கள் என்று என்னிடம் கூறப்பட்டிருக்கிறது" என்று ஹமீதிடம் கூறிய ராவ், இந்திய உயர்ஸ்த்தானிகருக்கு காலை முதல் பல தொலைபேசி அழைப்புக்கள் மலையகத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாகவும், அவை நுவரெலியா பகுதியில் உள்ள தமிழர்களைக் குறிவைத்து தாக்குதல்களை ஆரம்பிக்க அப்பகுதியில் வசிக்கும் சிங்களவர்கள் ஒன்றுதிரண்டுவருவதாக முறையிடப்பட்டிருப்பதாகவும் கூறினார். ராவ் கூறியதன்படியே, நுவரெலியா நகரப்பகுதியில் வெள்ளி பிற்பகல் தமிழர் மீதான தாக்குதல்களை சிங்களவர்கள் ஆரம்பித்தனர். அதுவரைக்கும் நகரப்பகுதியை பொலீஸாரும், இராணுவத்தினரும் காவல்காத்து வந்தனர். நகருக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் சோதனையின்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டன. தமிழ்ப் பயணிகளை தமது பஸ்களில் ஏற்ற்வேண்டாம் என்று நடத்துனர்கள் சிங்களவர்களால் அறிவுருத்தப்பட்டனர். பொலீஸாரும் தம் பங்கிற்கு தமிழர்களை அடைந்து கிடக்குமாறு பணித்திருந்தனர். நுவரெலியாவின் பாராளுமன்ற உறுப்பினர் ரேணுகா ஹேரத்தின் அறிவுருத்தலின்படி நகரில் குழப்பங்களை உருவாக்கக் கூடியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களை பொலீஸார் தடுத்து வைத்திருந்தனர். மேலதிக பொலீஸ் ரோந்துகளும் நகர்ப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. ரேணுகா ஹேரத் மகாவலி அபிவிருத்தியமைச்சரும், ஜெயாரின் மிக முக்கிய சகாவுமான‌ காமிணி திசாநாயக்க வெள்ளி காலை 10 மணிக்கு விமானப்படை உலங்குவானூர்தி ஒன்றின் மூலம் நுவரெலியா நகருக்குச் சென்றார். அங்கிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்து கூட்டம் ஒன்றினை நடத்தினார். காமிணி திசாநாயக்க‌ நுவரெலியாவில் தனது ஆதரவாளர்களுக்கு முன்னால் பேசிய காமிணி இனத்துவேஷம் மிக்க கருத்துக்களை வெளியிட்டார், "நீங்கள் நாட்டை நேசிக்கும் சிங்களவர்கள் இல்லையா? ஏன் இன்னும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்?" நுவரெலியாவின் மிகப்பலமான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளரை பொலீஸார் கைதுசெய்து வைத்திருப்பதாக ஏனைய உறுப்பினர்கள் காமிணியிடம் முறையிட்டதுடன், அவரின்றி தம்மால் தமிழர்கள் மீது தாக்குதல்களை ஆரம்பிப்பது கடிணம் என்றும் கூறினர். அதற்குப் பதிலளித்த காமிணி அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் உறுதியளித்தார். அவர் கூறியவாறே, பிற்பகலுக்குள் அவர்கள் அனைவரையும் பொலீஸார் விடுவித்தனர். பொலீஸாரினால் விடுவிக்கப்பட்ட காடையர்களின் முன்னணித்தலைவர்கள் உடனடியாகச் செயலில் இறங்கினர். பெற்றொல் பரல்கள், இரும்புக் கம்பிகள், வாட்கள், வெட்டரிவாள்கள் என்பன துரித கதியில் சேகரிக்கப்பட்டன. அவர்களின் முதலாவது இலக்கு நுவரெலியாப் பகுதியில் அமைந்திருந்த சைவக் கோயிலும் அங்கே தங்கியிருந்த சைவக் குருக்களும்தான்.தாக்குதல் ஆரம்பித்தவேளை குருக்கள் தப்பிக்கொள்ள, கோவில் முற்றாக இடித்து எரிக்கப்பட்டது. காடையர்களுடன் பெருமளவு சிங்கள மக்களும் தாக்குதல்க் குழுவில் இணைந்துகொண்டனர். அதுவரையில் நகர்ப்பகுதியில் காவலில் இருந்த இராணுவத்தினரும், தமது நிலைகளைக் கைவிட்டு தமிழர்களைத் தாக்கிவரும் குழுவுடன் இணைந்துகொண்டனர். இராணுவ வாகனங்களுக்கு என்று சேமித்துவைக்கப்பட்ட பெற்றொல் பரல்கள் சிங்களக் காடையர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டது. தாக்குதல் ஆரம்பித்து இரண்டு மணிநேரத்திற்குள் நுவரெலியா நகர்ப்பகுதியில் இயங்கிவந்த அனைத்துத் தமிழர்களின் கடைகளும் எரியூட்டப்பட்டன. நகர்ப்பகுதியில் தமிழர்கள் தாக்கப்பட்டு கடைகள் எரிக்கப்படுவதை அறிந்து உடனடியாக அப்பகுதிக்குச் சென்ற அமைச்சர் ரேணுக்கா ஹேரத்தை அக்கும்பல் விரட்டியடித்தது. மிகுந்த வேதனையோடு அவர் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் நுவரெலியாவை விட்டே சென்றுவிட்டதாக அப்பகுதியின் எமது நிருபரான ராஜரட்ணம் கூறியிருந்தார். "நகரமே நெருப்புக்கடலில் மிதந்துகொண்டிருக்க, அவர் நகரை விட்டுச் சென்றார்" என்று அவர் கூறினார். ஹமீதிடம் பேசிய ராவ், "இந்தியத் துணைத் தூதர் மற்றும் அவரது அதிகாரிகள் எனக்கு கூறியிருக்கும் தகவல்களின்படி நுவரெலியாப் பகுதியில் தமிழர் மீதான தாக்குதல்களை உங்களின் அமைச்சரவை முக்கியஸ்த்தர் ஒருவரே முன்னின்று நடத்திவருவதாகக் கூறப்பட்டிருக்கிறது" என்று கூறினார். மாத்தளை சிறி முத்துமாரியம்மன் ஆலயம் கண்டி, மாத்தளை, நுவரெலியா, நாவலப்பிட்டி, பதுளை ஆகிய பகுதிகளில் தமிழர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள் தொடர்பாக தனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களை ஹமீதிடம் கொடுத்த ராவ், இத்தாக்குதல்ப் பட்டியல்களில் தமிழர்களின் ஆலயங்களும் இணைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதனையும் சுட்டிக் காட்டினார். மேலும், மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தை சிங்களவர்கள் முற்றாக எரித்ததை அவர் ஹமீதிடம் காண்பித்தார். அன்று மாலை சிறு எண்ணிக்கையிலான தமிழ்க் கல்விமான்கள் ராவைச் சந்தித்தார்கள். இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் ராவிடம் கூறினர். தமிழர்களின் பொருளாதாரத்தை, கல்வித்தகமையுடனான செல்வாக்கினை, வர்த்தகத் தளத்தை சிதைத்து அழிக்கும் நோக்கிலேயே நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர். இத்தாக்குதல்களின் மூலம் தமிழர்கள் இந்நாட்டில் தமது இருப்புக் குறித்த அச்சத்தைக் கொண்டிருப்பதாகவும் கூறினர். வெள்ளி இரவு கொழும்பிலிருந்து கிளம்பிய ராவ், சனிக்கிழமை இந்திராவைச் சந்தித்து தனது அறிக்கையினைச் சமர்ப்பித்தார். மேலும், இலங்கையின் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், ஆனால் தமிழர்கள் தமது இருப்புக் குறித்த ஐயத்தையும் அச்சத்தையும் கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும், தனக்குக் கிடைத்த தகவல்களின்படி கொழும்பில் அமைக்கப்பட்டிருக்கும் பல அகதி முகாம்களின் நிலை மிக மோசமாகக் இருப்பதாகவும் கூறினார். ஆகவே, தமிழ் அகதிகளைக் கையாளும் நடவடிக்கைக்கு இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும், தமிழர்களைப் பாதுகாக்க இந்திய இராணுவத்தை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.