Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19134
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46793
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7054
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20019
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/13/23 in Posts

  1. எனது கருத்து, 1. இந்த பிரகடனம் பற்றி எனக்கு இந்த திரி வரும் வரை தெரியவில்லை. எனக்கு மட்டும் இல்லை புலவர் உட்பட பலருக்கு தெரியவில்லை. இது எமது பிழையா? அல்லது இப்படி ஒன்றை தனியே தமிழ் காடியனில் மட்டும் போட்டு விட்டு, மக்களை சம்பந்த படுத்தாமல் விட்ட ஜி ரி எப் வின் பிழையா? பிழை சரிக்கு அப்பால் - இது வெளிப்படைத்தன்மை அதற்காக எனக்கு படுகிறது. 2. இலங்கையோடு நேரடியாக நாம் எழுதும் எதுவும் அது எழுதபட்ட காகிதத்தின் பெறுமதி கூட அற்றது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. டட்லி-செல்வா, பண்டா-செல்வா, திம்பு, ஒஸ்லோ….இப்போ இமாலயன். 3. இதை வாசித்து பார்த்தால் இது ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் மிகவும் உயர் நிலை சாராம்சமாக இருக்கிறது. யாரும் இல்லை என மறுக்கமுடியாத விடயங்கள் - அது மட்டும் அல்ல ஏலவே இலங்கை சட்டத்தில் உள்ளவைதான் இதில் இருக்கிறன. ஆகவே இதில் நான் எந்த முன்னேற்றத்தையுமோ, எமக்கான தீர்வுக்கான blueprint ஐயோ காணவில்லை. இது எல்லோரும் இலங்கையர், இலங்கைக்குள் ஜனநாயகத்தை, மனித உரிமையை, பொருளாதார அசமச்சீரை சரி செய்தால், அதிகாரத்கை மாகாண, மாவட்ட மட்டத்தில் பகிர்ந்தால் இனப்பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற பழைய சிங்கள அணுகுமுறையின் புதிய வடிவாகவே எனக்கு படுகிறது. இது இனைப்பிரச்சினையின் அடிப்படையான தமிழர் அபிலாசைகள் பற்றி எதுவும் சொல்வதாக எனக்கு படவில்லை. 4. அடுத்து வசி சொன்ன விடயம். எமது அபிலாசைகள் நிறைவேறாவிட்டால் கூட பரவாயில்லை, இருக்கும் சட்டத்தையாவது அமல்படுத்த இது உதவினால் பரவாயில்லை. ஆனா தொடரும் நில அபகரிப்பு இதர விடயங்கள் - அது கூட சாத்தியமில்லை என்றே சொல்லி நிற்கிறன. 5. நல்லாட்சியில் சுமந்திரனை வைத்து ரணில் புதிய அரசியல் சட்ட நாடகம் ஆடி நேரம் கடத்தியது போல் இப்போ சுரேந்திரனை வைத்து ஆடுகிறார்.
  2. எழுதுங்கள். ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் வந்தால் அது ஒட்டுமொத்த பிரச்சனையாகாது. ஒரு சில பல இடங்களில் நீங்களும் நானும் முரண்பட்டாலும் உங்கள் எழுத்தின் வாசகன் நான்.
  3. உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி கோசான். எவருக்கும் தெரியாமல் திடுதிப்பென வந்திறங்கியது தான் புதிராக இருந்தது. இனிவரும் வாரங்களில் ஆய்வாளர்கள் பந்திபந்தியாக எழுதுவார்கள்.கவனிப்போம். கந்தையா மேலே உள்ள இலக்குவின் காணொளியைக் கேட்டீர்களானால் இதற்கான முழுவிடையும் கிடைக்கும். அதாவது இந்த ஒப்பந்தத்தால் தமிழர்களுக்கு எதுவுமே இல்லை. ஆனால் இலங்கையும் இந்தியாவும் இதன் பலனை அனுபவிப்பதாக சொல்கிறார்கள். மில்லியன் டாலர் கேள்வி.
  4. எழுதினால்…. எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒவ்வொரு திரியிலும் எழுதுறார்….. சதா யாழில் கிடக்கிறார்…வேலைக்கு போறேல்லையோ…. சுய விலாசம் காட்ட எழுதுறார்…. இத்யாதி…இத்யாதி…. தேவையில்லை அண்ணை…. எதாவது புளிச்சல் ஜோக்கை கொப்பி பேஸ்ட் அடிப்பது, அல்லது கருத்தேதும் எழுதாமல் திரிக்கு திரி ஆட்களை குறிவைத்து தாக்குவது… இப்படி நாட்களை ஜாலியாக கழிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.
  5. இதுவரை பார்த்த படங்கள் எல்லாவற்றிலும் பிக்குக்கள் இருக்க எமது ஆட் கள் காலில் விழுவதைதான் பார்த்திருக்கிறேன். முதல் முறையாக ஒரு தமிழன் இருக்க பிக்கு எழுந்து நின்று கொடுப்பதை / வாங்குவதை இப்பொழுது தான் பார்க்கிறேன். 😊
  6. இந்த இமாலய பிரகடனம் பற்றிய விடயம் யஸ்ரின் ஒருவரைத்தவிர இங்கே கருத்தெழுதிய யாருக்கும் இந்தித்திரி உருவாகும் வரை தெரிந்திருக்கவில்லை. இது தமிழர்களுக்கான தீர்வு முயற்சி என்றால் சம்பந்தப்பட்வர்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதற்கு என்ன தயக்கம்?ஏன் ஒரு தமிழ்பத்திரிகையிலோ இணயத்தளத்திலோ இன்று வரை இதூன் இமாலயப் பிரகடனம் என்று குறிப்பிடக்கூடிய அளவில் செய்திகள் வரவில்லை.பிரிஎவ் அமைப்பே தங்களுக்கு இதுபற்றித் தெரிந்திருக்கவில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறது.உலகத்தமிழர் அமைப்பால் ஒரு 50 பேர் கொண்ட கூட்டத்தையாவது கூட்டி விடயத்தைத் தெரிவிக்க முடியாத கையறு நிலையில்தான் காணப்படுகிறது.இது போலித்துவாரகாவின் மாவீரர்நாள் உரை போல இந்த இமாலயப் பிரகடனும் பிசுபிசுத்துப் போகப் போகின்றது.இப்படி ஒரு பிரகடனத்திற்கு புத்த பிக்குகள் எ பிரதான எதிர்கட்சிகள் ஆதவளிப்பதில் இருந்தே சந்தேகம் மேலும் வலுக்கிறது. இந்த பிரகடனத்தை அமுல்படுத்தி தமிழர்களுக்கு தீர்வு வழங்கி விட்தாகக் கூறி அடுத்த ஜனாதிபதித் தேர்தலைக் கறிவைத்து ரணில் போடும் குள்ளநரித்திட்டம்தான் இது.
  7. மேலே சொன்ன பட்டியலில் 87 ஒப்பந்தத்தை வேண்டும் என்றே சேர்க்கவில்லை. அது சம்பந்தமாக என் பார்வை வேறுபட்டது. யாழில் முன்பே பலதடவை எழுதியதுதான். எமக்கு சரியான பொறுப்புக்கூறல், தீர்வு அமைந்த பின் இந்த பொது அடையாளத்தை சுமக்கும் படி கொரோனா அது நியாயம். ஆனால் இவர்கள் அணுகுமுறையோ, பிரச்சனையே நாம் இந்த பொது அடையாளத்தை சுமக்க மறுப்பதுதான் என்பது போல இருக்கிறது.
  8. உலகத்தமிழர் பேரவையின் முயற்சி ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடு - கஜேந்திரகுமார் (நா.தனுஜா) தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளும், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மையமாகக்கொண்டு உலகத்தமிழர் பேரவையினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சியை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடாகவே தாம் கருதுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய 'இமயமலை' பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது. அப்பிரகடனத்தை முற்றாக நிராகரித்தும், உலகத்தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும், இவ்விடயத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியும் இன்று புதன்கிழமை (13) கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்: பௌத்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் நேபாளத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த ஏப்ரல் 27 இல் கைச்சாத்திடப்பட்ட 6 அம்சங்களை உள்ளடக்கிய 'இமயமலை' பிரகடனத்தைக் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ள உலகத்தமிழர் பேரவை உறுப்பினர்கள், அதுகுறித்து இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதுமாத்திரமன்றி இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்து அப்பிரகடனத்துக்கு அங்கீகாரம் கோரியுள்ளனர். முதன்முதலாக உலகத்தமிழர் பேரவை உருவாக்கப்பட்டபோது, அது பல்வேறு அமைப்புக்களையும் உள்ளடக்கியதோர் குடை அமைப்பாகவே காணப்பட்டது. அதன்படி அவ்வமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் அங்கம்வகித்த (பின்னர் அதிலிருந்து விலகிய) பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து இப்பிரகடனத்தைக் கண்டித்தும், விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன. குறிப்பாக உலகத்தமிழர் பேரவையானது புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தம்மைக் காண்பித்துக்கொள்வது தவறு எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் எம்மைச் சந்தித்து இதுகுறித்துக் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரியிருந்தார். இருப்பினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு அக்கோரிக்கையை அடியோடு நிராகரித்ததுடன், அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி அவருக்குரிய பதிலும் அனுப்பிவைக்கப்பட்டது. மாவீரர் நாளில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு ஒன்றுகூடியவர்களுக்கு எதிராகத் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகிக்கின்றது. வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவழிப்பு அரங்கேற்றப்பட்டுவருகின்றது. இவ்வாறு அடக்குமுறைகள் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை மையப்படுத்தி உலகத்தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சியை அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதுமாத்திரமன்றி முன்னைய காலங்களில் தமிழர்களின் நலன்களுக்கு விரோதமாக செயற்பட்டுவந்த உலகத்தமிழர் பேரவை, இன்னமும் அதிலிருந்து மாறவில்லை என்பதையும் இந்நகர்வு வெளிப்படுத்துகின்றது. உலகத்தமிழர் பேரவையின் இந்த நடவடிக்கைகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர், குறிப்பாக இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அங்கீகரித்திருப்பதாகத் தெரிகின்றது. கடந்த காலங்களிலும் கூட்டமைப்பு உலகத்தமிழர் பேரவையுடன் மிகநெருங்கிய உறவைப் பேணிவந்திருப்பதுடன், கூட்டமைப்பிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாத அதன் தொடர்ச்சியாகவே பேரவை இயங்கிவருகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படுவதாகக் கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதன் விளைவாகவே கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் கூட்டமைப்பின் வாக்குவங்கி வெகுவாகச் சரிவடைந்தது. எனவே எதிர்வரும் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் கூட்டமைப்பு 'நல்ல பிள்ளையாக' செயற்பட முயற்சிக்கின்றது. அதன்படி தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபடுகின்றது. 'இமயமலை' பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 6 அம்சங்களும் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினருக்கோ அல்லது அண்மையில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தமைக்காகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கோ எவ்வகையிலும் பயனளிக்காது. மாறாக அவை தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிட்ட விதத்தில் இடம்பெற்றுவரும் இனவழிப்பை மூடிமறைத்து, அதனை நேர்மறையான விதத்தில் காண்பிப்பதற்கும், தற்போதைய அரசியலமைப்பில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதன் ஊடாக தமிழ்மக்களுக்குப் போலியான நம்பிக்கையைக் கொடுப்பதற்கும், பொறுப்புக்கூறலுக்கு முற்றுப்புள்ளிவைத்து போலியான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்குவதற்குமே பங்களிப்புச்செய்யும். எனவே இதனை முற்றாக நிராகரிக்கவேண்டுமெனவும், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாரிய பின்விளைவுகளைச் சந்திக்கநேரும் என்ற பாடத்தை அவர்களுக்குப் புகட்டவேண்டும் எனவும் தமிழ்மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார். உலகத்தமிழர் பேரவையின் முயற்சி ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு 'வெள்ளையடிக்கும்' செயற்பாடு - கஜேந்திரகுமார் | Virakesari.lk
  9. இந்த குழுவில் உங்கள் நண்பரும் கலந்து கொண்டுள்ளார். அவரை கேட்டு எழுதுவீர்கள் என நம்புகிறேன்
  10. சுவியருக்கு எப்ப பாத்தாலும் ஒரு இது...😀
  11. சஜித் பீரேமதாசாவின் தேர்தல் விஞ்ஙாபனத்தில் மூன்றில 2 பங்கு இமாலயப் பிரகடனமாம் என்றால் யோசித்துப் பாருங்கள் தீர்வுத்திட்டம் எவ்வளவு பலவீனமானதென்று. அதனால்தான் இந்தத்தீர்வுத்திட்டத்தை பிக்ககள் எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்க். அதுமட்டுமல்லாமல் தமிழர் அடையாளத்தை அழிக்கச் சொல்லி சஜித் சொல்கிறார் அது படிப்படியாக நடைபெறும் என்று சுரேன் சொல்கிறார். இது தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் இல்லை. தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் குள்ள நரி ரணிலின் தீர்வுத்திட்டம்.
  12. ஏன் எல்லாரும் வீடியோக்களை மட்டும் இணைக்கிறார்கள் இங்கே? என்ன தான் சொல்கிறார்கள் என்று ஒரு சுருக்கமாக எழுதி விடுங்கள்! 😂
  13. மொறு மொறு மீல் மேக்கர் கட்லட் .........! 👍
  14. சாதாரணமாய் வீட்டில் மிளகாய், வாழைக்காய், கத்தரி பஜ்ஜிகள் போடுவதுண்டு ஆனால் மாங்காய் பஜ்ஜி இதுவரை போடவில்லை ஒருக்கால் போட்டுப் பார்க்கத்தான் வேணும்........! 👍 சென்னை வெள்ளத்தில் இருந்து மீண்டு பதிவு இட்டது மகிழ்ச்சி, கவனமாக இருங்கள் தோழர்.......! நன்றி தோழர்......! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.