Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. அங்கு ஓரிருவர் கதைத்தால் உடனே கட்சி அரசியலாக்கி இந்த வார கட்டுரைக்கு முதலே எழுதி வைத்திருந்தாரோ? நிலாந்தன்.
  2. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி! *** *** *** *மேற்கு - ஐரோப்பிய அரசியல் கோட்பாடுகளை விட, சீன அரசியல் கோட்பாடுகள் மேலெழும் சூழல்... *ஜனநாயகம் - யதார்த்த அரசியல் - என்ற ஏமாற்றை விடவும் சீன ஜனநாயகம் மேல் என்ற உணர்வு... ** *** ****** மேற்கு நாடுகள் எழுதி வைத்த ”ஜனநாயக கோட்பாடு”, ”சட்டத்தின் ஆட்சி” ”அரச இறைமைக் கோட்பாடு என்பற்கு மாறாக கம்யூனிஸ்ட் கொள்கையை பின்பற்றி வரும் சீனா, இன்று உலகத்துக்குப் பெரும் சவலாக மாறியுள்ளது. ”நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தேரணையில் இயங்கும் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளுக்கும், ”ஜனநாயகம்” - ”சட்ட ஆட்சி” என்றால் என்ன என்பதை, சீனா காண்பித்துள்ளது. இப்போது அதனை நூலாக வெளியிடுவதன் ஊடாக, எதிர்காலத்தில் மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கோட்பாடுகளுக்குப் பதிலாக சீன அரசியல் கோட்பாடுகளை மாணவர்கள் கற்கும் நிலை தோன்றும் என்பதில் ஐயமில்லை. ஏன் உலகமே அதனை ஏற்கக் கூடிய சாத்தியங்களும் வரலாம். ஏனெனில் -- டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலிய ஜனாதிபதி நெதன்யாகு ஆகியோர் உள்ளிட்ட சில உலகத் தலைவர்களின் அட்டகாசம் - மிரட்டல் போன்ற செயல்கள், சீன அரசியல் கோட்பாட்டுக்கு மாணவர்களை தள்ளக் கூடிய ஏது நிலை தெரிகிறது. நேர்மையான கம்யூனிஸ்ட் கொள்கையை சீனா பின்பற்றவில்லை என்று பலரும் குற்றச்சாட்டலாம். ஆனால் -- அக் குற்றச்சாட்டுகளைக் கடந்து, சீனா இன்று உலக வளர்ச்சியில் பல முன்னேற்றங்களையும், ஒழுங்கு முறையான அரசியல் நடைமுறைகளையும் (Orderly Political Procedures) அறிமுகப்படுத்தி - நியாயப்படுத்தி உலகத்துக்குக் கற்பிதம் செய்துள்ளது எனலாம். இது சிலருக்கு கசப்பாக இருக்கும். ஆனால் அது தான் உண்மை. சீனாவில் கட்சிக்குள் அரசு - அரசுக்குள் கட்சி என்ற தன்மை உண்டு. ஆனால், ஒரு கட்சி ஆட்சி முறைமை (System) தான் சிறந்தது போல் தெரிகிறது. ஏனெனில் --- ஜனநாயம் - மாற்றுக் கருத்து - யதார்த்த அரசியல் - அபிவிருத்தி அரசியல் என்று ஏமாற்றி, ஈழத்தமிழ் இனம் போன்ற தேசிய இனங்களை மேற்கு - ஐரோப்பிய நாடுகள் கைவிடுகின்றன. இலங்கை போன்ற இன ஒடுக்கல் அரசுகளுக்கு ஒத்தூதுகின்றன. அத்துடன் --- புவிசார் அரசியல் என்ற போர்வையில், தமது அரசியல் - பொருளாதார நலன்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அதேநேரம் -- சீன ஒடுக்குமுறை இல்லை என்று கூறவும் முடியாது. புவிசார் அரசியல் போட்டியை, சீனா பயன்படுத்தி வருகிறது என்பதையும் மறுக்க இயலாது... ஆனால் -- மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் ஓரங்கட்டலை விட அல்லது “நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தோரணையை விடவும், சீனாவின் ஒரு கட்சி ஆட்சி முறைமை சிறந்தது என்ற எண்ணம் உருவாகின்றது. அதேநேரம் --- கம்யூனிஸ்ட் கொள்கையுடை பலர் சந்தர்ப்பவாதிகள் என்ற கருத்து உண்டு. குறிப்பாக -- இலங்கையில் ஒழுங்கான கம்யூனிஸ்ட்கள் இல்லை. இடதுசாரிகளும் அப்படித்தான்...ஜேவிபி அதற்கு சிறந்த உதாரணம்... அதேநேரம் -- சீன கம்யூனிஸ்ட் ஒரு வகையான முதலாளித்துவ சாயல் கொண்டது என்ற கருத்தும் உண்டு. ஆனால் -- கம்யூனிஸ்ட் என்பதை தவிர்த்து, சீன ”அரசியல் கோட்பாடுகள்” என்று நோக்கினால், ”சீன ஜனநாயகம்”, ”சீன இறைமை” என்பது சிறப்பான மாற்றம் என்ற சிந்தனை எழுலாம். ஆகவே -- சீன அரசியல் முறைமை (Political System) ஆபத்தா அல்லது நன்மையா என்பதை காலம் சொல்லும்... இப்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் பற்றிய செய்திக்கு வருவோம் --- சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China - CPC) மத்தியக் குழுப் பொதுச் செயலாளர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எழுதிய “சட்டத்தின் ஆட்சி” (Rule of Law) என்ற மேற்படி நூல் பீஜிங்க நகரில் வெளியிடப்பட்டுள்ளது. 2012 ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெ்பரவரி மாதம் வரையிலான சட்டத்தின் ஆட்சியில் ஜி ஜின்பிங் எழுதிய கட்டுரைகள், உரைகள் ஆகியவற்றின் மிக முக்கியமான மற்றும் அடிப்படையான படைப்பியல் கருத்துக்கள் 69 பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் சீன பண்புகளுடன் கூடிய சோசலிச சட்டத்தின் அமைப்பை வளர்ப்பதற்கும், சட்டத்தின் கீழ் ஒரு சோசலிச நாடாக சீனாவை உருவாக்குவதற்கும், புதிய வகிபாகத்தில் சட்ட அடிப்படையிலான நிர்வாகத்தை தொடர்ந்து வகுப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது. இதனை 'குளோபல்ரைம்ஸ்' என்ற (globaltimes) சீன அரச ஆங்கில செய்தி ஊடகம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் கட்சி வரலாறு - இலக்கிய நிறுவனத்தால் இந்த நூல் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 1953 ஆம் ஆண்டு பிறந்த ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மத்திய இராணுவ ஆணைக்குழு தலைவராகவும், 2012 ஆம் ஆண்டு முதல் சீனாவின் மூத்த அரசியல் தலைவராகவும் விளங்கினார். 2013 ஆண்டு முதல், ஜி ஜின்பிங், சீனாவின் ஜனாதிபதி பதவியை வகிக்கிறார். ஐந்தாவது தலைமுறை சீனத் தலைமையின் உறுப்பினராக, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்னர் பிறந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளர் நிக்ஸன்
  3. உறுப்பைப் பார்த்து முஸ்லீம் என்கிறீர்களா? அல்லது சும்மா அடித்து விடுகிறீர்களா? ஆளை அடையாளம் காண காணொளிகளை திரும்ப திரும்ப பார்த்தேன். என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. நீங்க பலே கெட்டிக்காரன்.
  4. இந்தோ - பசுபிக் பிராந்தியமும் அநுரவின் காய் நகர்த்தலும். --- ----- --------- *ரில்வின் லண்டன் செல்கிறார் இந்தியாவுக்கும் பயணம் செய்வார். *புலம்பெயர் நாடுகளில் இளஞ்செழியனுக்கு பாராட்டு விழா! பின்னணி என்ன? *தமிழ்த்தேசிய பரப்பு எல்லைக்குள் ஜேவிபி *ரணில் - மகிந்தவை, சந்திரிகா ஆகியோரை விடவும், அநுரவின் மாறுபட்ட அணுகுமுறை ---- --------- ------ 2009 இற்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியல் உள்ளிட்ட இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த செயற்பாடுகளிலும் மாறுபட்ட அணுகுமுறை ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கையாளுகின்றார் என்பதை, அவருடைய சமீபத்திய காய் நகர்த்தல்கள் காண்பிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளையும் இந்திய - சீன அரசுகளையும் கையாளும் அணுகுமுறையானது, தமது கட்சிக் கொள்கைக்கு ஏற்பவும், சர்வதேச அரசியல் - பிராந்திய பாதுகாப்பு - வர்த்தகம் ஆகியவற்றை பேணக்கூடிய முறையிலும் அமைந்துள்ளது. இது ஒருவகையில் சர்வதேச இரட்டைக் கொள்கை என்று கூறினாலும், இந்தியா - அமெரிக்கா - பிரித்தானிய அரசுகளின் ஒத்துழைப்பும் - உதவிகளும் அவசியம் என்ற கோணத்தில், அநுர காய்நகர்த்துகிறார் எனலாம். ஜேவிபியாக அல்லாமல், தேசிய மக்கள் சக்தியாக பயணிக்க வேண்டும் என்ற அநுரவின் சற்று மாறுபட்ட கொள்கைக்கு ஜேபிவியின் அடிப்படைக் கொள்கைகளை அப்படியே தொடர்ந்து பின்பற்றும் ரில்வின் சில்வா அதற்கு ஒத்துழைப்பதாக இல்லை. ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்களில் பலரும் ரில்வின் சில்வாவுடன் இணைந்திருக்கின்றனர். இப் பின்னணியில்தான் 2025 ஆம் ஆண்டு அநுர கையாண்ட சில நுட்பமான அணுகுமுறை காரணமாக ரில்வின் சில்வா அதனை ஏற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜேவிபியின் ஆரம்பகால எதிர்ப்புகளும், இந்தியாவின் விரிவுவாதக் கொள்கைகள் மீதான அதன் கடுமையான விமர்சனங்களும் இருந்தன. இருப்பினும், 2025 இல் ஜேவிபி அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இந்திய அரசாங்கத்துடன் ஜேவிபி தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. அநுரகுமார இந்த ஏற்பாட்டை செய்திருந்தார். 2025 ஜனவரியில், ஜேவிபியின் தலைவர்கள் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்தனர். இது அநுரவின் அரசியல் அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய பின்னர், இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் இந்திய மத்திய அரசுடன் ஒத்துழைக்க முடிவு செய்தனர். ஆட்சியைக் கைப்பற்ற முன்னரே, 2024 ஆம் ஆண்டு முற்பகுதியில் இந்த நிலைப்பாட்டை ஜேபிவி. குறிப்பாக அநுரகுமார கையில் எடு்த்திருக்கிறார். . இந்தியாவுடனான உறவில் 2026 ஆம் ஆண்டு மேலும் சாத்தியங்கள் அதாவது எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் ஜேவிபிக்கும் இடையிலான உறவுகளில் புதிய வகிபாகத்தை உருவாக்கக்கூடும். அதேவேளை-- தேசிய மக்கள் சக்தியாக அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், அநுர தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான வகிபாகம், ஜேவிபி எனப்படும் சோசலிச – இடதுசாரி தன்மை கொண்ட கட்சிக்குரியது என்பதை அநுர 2025 இல் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வருகின்றார். இதன் காரண - காரியம் என்பது ரில்வின் சில்வா மற்றும் அவரை மையப்படுத்திய தேசிய சபை உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும் என்ற சிந்தனை என்று கூறலாம். இதனை மையமாகக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் (Communist Party of China – CPC) ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை அநுர சென்ற ஒக்ரோபர் மாதம் கைச்சாத்திட்டிருக்கிறார். ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினரான, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சீனாவிற்கு சென்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் உரையாடிய பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அநுர, ரில்வின் சில்வா ஆகியோர் சீனாவுக்கு பயணம் செய்து நடத்திய பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே பிமல் ரத்நாயக்க சீனாவுக்குச் சென்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். முற்போக்கான சீர்திருத்தங்கள் மூலம் சீனாவை எப்படி சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டி வளர்த்ததோ, அதேபோன்று ஒரு செயற்திறன் மிக்க நடவடிக்கைகள் ஊடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என பிமல் ரத்நாயக்க சீனாவில் விபரித்திருக்கின்றார். ரணில், மகிந்தவை பின்பற்றி ஜேவிபியும் சீனாவுடன் அந்த உறவை பேணுவதற்கு ஏற்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது என கூற முடியாது. ஏனெனில், இந்த ஒப்பந்தம் கட்சி அரசியல் மாத்திரமல்ல, புவிசார் அரசியல் - பொருளாதார நலன்கள் என்ற பிரதான அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆகவே, 2025 இல் அநுர கையாளும் அணுகுமுறை என்பது ரணில், மகிந்த போன்ற தலைவர்களைவிடவும், முற்றிலும் மாறுபட்டது. அதாவது -- புவிசார் அரசியல் விவகாரங்களில் சமாளிப்பு அரசியல் என்பதைவிடவும், இதுதான் ஜேபிவி என்பதையும், அதன் அடிப்படைக் கொள்கைகளையும் சிங்கள மக்களுக்கு வெளிப்படுத்தும் உத்திதான் இது. குறிப்பாக -- வோஷிங்டன் – புதுடில்லி அநுர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வரும் பின்னணியில், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை முற்றிலும் மாறுபட்ட உத்தி. ஆகவே -- அநுர அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் சென்றுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான வகிபாகம் ஜேவிபி என்பதை நிரூபித்துள்ளது என்று கூறலாம். இப் பின்புலத்தில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக், ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்து உரையாடியுள்ளார். சென்ற வெள்ளிக்கிழமை, கொழும்பு பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள ஜேவிபியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், அநுர அரசாங்கத்தின் செயற்பாடுகள் – பிராந்திய பாதுகாப்பு விடயங்கள் பற்றி உரையாடப்பட்டுள்ளது. அநுர அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடு மற்றும் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைத்துச் செற்படுவது பற்றி பிரித்தானிய அரசுடன் விரிவாக உரையாட, ரில்வின் சில்வா எதிர்வரும் 21 ஆம் திகதி தலைநகர் லண்டனுக்குச் செல்லவுள்ளார். இதற்கான அழைப்பை உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் ரில்வின் சில்வாவிடம் நேரடியாக கையளித்துள்ளார். ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் கூடுதல் உறவைப் பேணும் என பலராலும் எதிர்வு கூறப்பட்ட நிலையில், அமெரிக்க – இந்திய அரசுகளை மையப்படுத்தியும் பிரித்தானிய ஆதரவோடும், மேற்கு நாடுகளுடன் உறவை பேணும் அணுகுமுறையை அநுரகுமார, மற்றொரு பக்கத்தால் பின்பற்றி வருகிறார் என்பது கண்கூடு. ஜேவிபியின் அடிப்படைக் கொள்கையோடு செயற்பட்டு வரும் ரில்வின் சில்வா, அதற்கு ஒத்துழைக்க தயங்கிய ஒரு பின்னணியிலும், ரில்வின் சில்வா எதிர்காலத்தில் இந்த நாடுகளை விமர்சிக்காமல் இருக்கும் நோக்கிலும் லண்டன் பயணத்தை அநுர ஏற்பாடு செய்திருக்கிறார் என்றும் கூறலாம். அதேநேரம் ரில்வின் சில்வா, இந்தியாவுக்கும் பயணம் செய்யவுள்ளார். ஆகவே -- அநுரகுமார, தனியே இலங்கையின் ஜனாதிபதியாக அல்லாமல், இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விடயங்களில் வெவ்வேறுபட்ட அணுகுமுறை ஒன்றை கையாண்டு, இலங்கைத்தீவின் இறைமை என்ற விவகாரத்தில் மேற்கு - ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீன - இந்திய அரசுகள் என்பதை மிக நுட்பமாக கையாளுகிறார். இலங்கையின் தேசிய தலைமை என்ற அங்கீகாரத்தை நோக்கி அவர் பயணிக்கிறார். ஆனால் -- ஈழத்தமிழர் விவகாரம் முற்றிலும் உள்ளக விவகாரம் என்ற ஜேபிவியின் கருத்தியலை மேற்கு - ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை இந்த ஆண்டு அநுர நிரூபித்துள்ளார். அத்துடன் -- மனித உரிமை மீறல் பிரச்சினைகள் - போதைப் பொருள் பிரச்சினைகள் மற்றும் ஊழல் அதிகாரத் துஷ்பிரயோகம் என்ற விவகாரங்கள் எல்லாமே கடந்த 76 வருட ஆட்சியில் பழம் பெரும் கட்சிகள் விட்ட தவறு என்றும், 2026 ஆம் ஆண்டு அவை முற்றாக ஒழிக்கப்பட்டு வடும் என்ற வாக்குறுதிகளையும் அநுர சர்வதேசத்துக்கு வழங்கியியுள்ளார். குறிப்பாக -- நிதி வழங்கும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற பொது நிறுவனங்களுக்கு அந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் -- ரணில், மகிந்த. கோட்டாபய, சந்திரிகா ஆகிய தலைவர்கள் வடக்குக் கிழக்கில் தங்கள் தமிழ் முகவர்களை பயன்படுத்தி, தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைகளை மடைமாற்ற முற்பட்டு தோல்வி கண்ட அணுகுமுறையில் இருந்து, ஜேபிவி மாறுபட்ட உத்தி ஒன்றை கையாள்வதை தமிழ்த்தரப்பு அறியாமல் இருப்பதும் வேடிக்கை. குறிப்பாக --- வடக்கு கிழக்கில் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள தமிழர்களை வேட்பாளர்களாக ஜேபிவி கண்டறிந்துள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அனுபவங்களின் பிரகாரம், வரவுள்ள மாகாண சபைத் தேர்தல் அல்லது அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலாகவும் இருக்கலாம், அதில் போட்டியிட செல்வாக்குள்ள தமிழர்கள் பலரை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகள் இப்போதிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முன்கூட்டிய மதிப்பீடுகள் - தயாரிப்புகளில், ஜேவிபி மிக நுட்பமாக கையாளும் திறன் கொண்டது. இப் பின்னணியில் --- முன்னாள் நீதியரசர் இளஞ்செழியன் உள்வாங்கப்பட்டிருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகின்றது. ஆனால் -- தமிழ்த்தேசியக் கட்சிகள் எதனையும் அறியாமல் இருக்கின்றன. அதாவது -- தமிழ்த்தேசிய பரப்பு எல்லைக்குள் ஜேவிபி வந்துவிட்டது என்பதை தமிழ்த் தலைமைகள் அறியாமல் இருக்கின்றன. புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் அது பற்றி புரிந்து கொண்டதாக இல்லை. சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஜேவிபியின் காய்நகர்த்தல்களை நன்கு தெரிந்து செயற்படுகின்றன என்றும் கூறலாம். அதில் உண்மை இல்லாமலில்லை. ஆகவே -- அமெரிக்க - இந்திய அரசுகள் பிரித்தானிய மற்றும் சீனா போன்ற நாடுகளை கையாளும் ஜேபிவியின் அணுகுமுறை என்பது, இலங்கைத் தேசியம் என்ற ஒற்றைக் கொள்கைக்கும், ஜேபிவியின் அடிப்படைக் கொள்கைக்கும் வலுவூட்டப்படுகின்ற அநுரவின் நுட்பமான காய்நகர்த்தல் என்றால் அது மிகையாகாது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
  5. இந்த வாரம் பல உயர்மட்ட விளக்கங்கள் மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அமெரிக்க படைபலத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வெனிசுலாவில் ஒரு நடவடிக்கை எடுப்பது குறித்து தனது முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். வெனிசுலாவிற்குள் இராணுவ நடவடிக்கைகளுக்கான விருப்பங்கள் குறித்து இந்த வாரம் டிரம்பிற்கு அதிகாரிகள் விளக்கினர், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை வெளியேற்றுவதற்கான ஒரு பரந்த பிரச்சாரத்தைத் தொடங்குவதன் அபாயங்கள் மற்றும் நன்மைகளை அவர் எடைபோடுகையில், நான்கு ஆதாரங்கள் CNN இடம் தெரிவித்தன. இதற்கிடையில், பென்டகன் "ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்" என்று முத்திரை குத்தியதன் ஒரு பகுதியாக, அமெரிக்க இராணுவம் ஒரு டஜன் போர்க்கப்பல்களையும் 15,000 துருப்புக்களையும் பிராந்தியத்தில் குவித்துள்ளது. சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களின் ஓட்டத்தைக் குறைப்பதற்கான தனது முயற்சிகள் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்னோக்கிச் செல்லும் பாதையை நெருங்கி வருவதாக ஜனாதிபதி வெள்ளிக்கிழமை சுட்டிக்காட்டினார். "நான் ஒருவிதத்தில் முடிவு செய்துவிட்டேன் - ஆம். அதாவது, அது என்னவாக இருக்கும் என்று என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது, ஆனால் நான் ஓரளவுக்குச் சொல்லியிருக்கிறேன்," என்று ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் அந்தக் கூட்டங்கள் குறித்தும், அவர் ஒரு முடிவை எடுத்துவிட்டாரா என்பது குறித்தும் நேரடியாகக் கேட்டபோது டிரம்ப் கூறினார். https://www.cnn.com/2025/11/15/politics/venezuela-trump-military-what-we-know Epstein பிரச்சனை நாளாந்தம் கொழுந்துவிட்டு எரியும் போது இன்னுமொரு பெரிய கோட்டை கீறி Epstein கோட்டை சிறியதாக்க முனைகிறார்.
  6. கடவுளே கடவுளே என்று உலகமே கதறுகிறதே எப்பவாவது கடவுள் வந்து வாயை மூடப்பண்ணி இருக்கிறாரா?
  7. சிறிது காலத்திலேயே மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். அதிரடியாக ஆடக் கூடியவர். கடந்த போட்டியில் சொதப்பி விட்டார்.
  8. சவ்வு மிட்டாய் தும்பு மிட்டாய் அப்பளம் என்று சிறுவயதில் வாங்கி சாப்பிட்டோம். இதிலே தும்பு மிட்டாய் இப்போதும் எனக்கு விருப்பம். சவ்வு மிட்டாய் வெறும் கையால் இழுத்து அழைகிறபடியால் இப்போ கஸ்டம்.
  9. அளவு இன்னமும் தெரியவில்லை. அல்லது கைவசம் இல்லையோ? சாவகச்சேரி சுன்னாகம் மானிப்பாய் பேசுபொருளான இடமாக மாறிவிட்டது.
  10. தன்னைவிட கூடுதலாக வைத்திருக்கிறாரோ என்ற ஏக்கமாக இருக்கலாம்.
  11. சிறுவர்களாக இருந்த காலங்களில் ஊரில் குளிக்கக் கூடிய குளங்கள் இருந்ததால் நண்பர்களோடு போய் குளிப்போம். இந்தக் குளங்களில் நான்கு பக்கமும் கிணறு மாதிரி கொங்கிறீற்ரால் கட்டப்பட்ட துருசு என்று சொல்லப்படும் இடம் உள்ளது. எவருக்குமே நீச்சல் தெரியாது. ஆனாலும் ஒல்லித் தேங்காயின் உதவியுடன் எல்லோரும் இறங்கி நீந்துவோம். தற்செயலாக ஒல்லித் தேங்காய் அறுந்தால் தாழ வேண்டியது தான். ஒருபக்கத்து சுவர்மட்டும் பதிவாக இருக்கும். மற்றைய மூன்று பக்கங்களும் உயரமாகவே இருக்கும். அந்த நேரங்களில் கற்றுக் கொண்ட நீச்சலே இப்போதும் கை கொடுக்கிறது. இதே குளங்களில் எமது வயதானவர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.
  12. இந்தக் காணொளியில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய கேள்வி இவர்களின் வர்த்தகத்தை யாழில் நேரடியாக செய்ய நேரடி விமானசேவை செய்ய முடியாதாம். காரணம் யாழில் இறங்கி ஏறும் விமானங்களுக்கு இந்திய அனுமதி பெற வேண்டுமாம். இதனால் பெரும் பணம் விரயமாகும் என்கிறார்கள். இன்னுமொரு ஆச்சரியம் இலங்கை விமானங்களுக்கும் இந்தியாவே இறங்குவதற்கு அனுமதி பெற வேண்டுமாம். இலங்கையில் அதுவும் யாழில் விமான போக்குவரத்தை கட்டுப்படுத்த தனியான கோபுரம் இல்லையா?
  13. 🔴Exclusive - செல்வம் அடைக்கலநாதன் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது! - selvam adaikalanathan">செல்வம் அடைக்கலநாதன் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது!
  14. சிறி முன்பக்க கடிதத்தோடு நெஞ்சுவலி வராமல் விட்டது பிள்ளை செய்த புண்ணியம்.
  15. இது அவனிடம் இருந்து எடுத்த மாதிரி தெரியவில்லை. எப்படியோ உள்ளே போட்டால் சரி.
  16. இவன் எத்தனையாவது தடவை கைது செய்யப்படுகிறான்?
  17. இந்த புத்தகத்தை எரிப்பவர்கள் எல்லோரும் சாமியார்களாகவும் வயது போனவர்களாகவும் இருக்கிறார்களே? சிறியவர்கள் திருந்தி விட்டால் தங்கள் பாடு திண்டாட்டம் என்று பயந்திட்டார்களோ?
  18. ஒவ்வொரு வெங்காய அறுவடை மாதங்களிலும் அரசு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து விலையைக் குறைத்து உற்பத்தியாளர்களின் வருவாயை வீழ்த்துகிறதென்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில் அரசு கவனமெடுக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.