Everything posted by ஈழப்பிரியன்
-
நயினாதீவு கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்; வேலணை பிரதேச சபையிடம் வலியுறுத்து
இந்தப் படகுசேவையில் கடந்த வருடம் நயினாதீவு போயிருந்தேன். அளவு கணக்கில்லாமல் மக்களை ஏற்றுகிறார்கள். ஏதாவது ஒரு விபத்து நடந்தால் கீழ்த் தட்டில் இருப்பவர்கள் உயிர் பிழைப்பது அருமையே. இதுவரை இதுபற்றி யாருமே அலட்டிக் கொள்ளாதது வியப்பாக உள்ளது. நயனை அம்மாளும் நயினை புத்தரும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் போய் வருகிறார்களோ?
-
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!
1000 பேருக்கு மேல் வரமாட்டார்கள் என்றார்கள். ஆனாலும் பெரியதொரு கூட்டமே வந்துள்ளது போல தெரிகிறது. எத்தனை தலைகள் என்று எந்த ஊடகமாவது கணக்கெடுத்துள்ளதா?
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு என்ன நடக்கிறது?
எல்லை தாண்டும் மீனவர்களுக்காக முடடைக் கண்ணீர்விடும் பத்திரிகையாளர் மீனவர்களை எல்லை தாண்டி போகாமல் மீன் பிடிக்க சொல்லலாமில்ல.
-
இலஞ்சம் பெற முயன்ற நெடுங்கேணி பொலிஸ் சார்ஜன் கைது!
சிறி இவர் எப்படி தமிழர் என்று அடித்துக் கூறுகிறீர்கள்? பெயரைப் போடாதபடியால் சந்தேகமாக உள்ளது.
-
வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு!
2017 இல் இலங்கை சுற்றுலா சென்ற போது காலி திருகோணமலை போன்ற இடங்களில் வெள்ளைகளில் பலர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓடுகிறார்கள். இவர்களிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இருக்கிறதா எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். பொலிசாரும் சேர்ந்தே இந்த குற்றத்துக்கு ஒத்துப் போயிருக்கிறார்கள்?
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது பாராளுமன்றில் உறுப்பினரல்லாத இருவரே ஜனாதிபதியின் அருகிலிருந்து பேசுகிறார்கள்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
Story of 2005/06..!!! 2005/06இல் இதே போல் திருகோணமலை பிரதான பேருந்து நிலையத்தில் ஒரு பெரிய புத்தர் சிலை இரவோடு இரவாக வந்தது. நீதிமன்றம் அகற்ற உத்தரவிட்டது ஆனால் எதுவும் நடக்கவில்லை. அன்று பல விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. விக்னேஸ்வரன் அவர்கள் தொடர் கடையடைப்பு போராட்டதுக்கு அழைப்பு விடுத்தார். எத்தனையோ போராட்டங்கள் நிகழ்த்தியும் எந்தப் பயனும் இல்லை. இந்த தொடர்போராட்ட எதிர்ப்பு நிகழ்வுகளால் பேரினவாதம் ஆத்திரமடைந்தது. ஒரு நாள் முன்னாள் ஜேவீபியின் mp ஒருவரின் அனுசரணையில் திருகோணமலை நகரம் காடையர்களால் கொழுத்தப்பட்டது. பலர் வீதிகளில் வெட்டப்பட்டு வீசப்பட்டனர். உயர்தரம் முடிந்து மக்கள் வங்கியில் சிறிதுகாலம் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்கு வந்து வங்கியை உடைக்க முனைந்தார்கள். அதில் சிக்குண்டு மீண்டு வந்தது எனக்கு நினைவிருக்கின்றது. பெளத்த ஆதிக்கத்துக்கான எதிர்பைக் காட்டி உயிர்களை விட்ட பூமி திருகோணமலை. எந்த நாய்கள் வந்தாலும் எந்தக் காட்சியும் இங்கு மாறுவதாக இல்லை. 2005/06 இல் திருகோணமலையில் இடம்பெற்ற கலவரம் இன்றும் நாம் ஓர் எல்லையை மீறி எதுவும் செய்தால் இப்படித் தான் வெட்டி வீசப்படுவோம். அன்றாவது பிடித்துக்கொள்ள ஒரு கை இருந்தது. இன்று? https://www.facebook.com/share/p/1AN23V5Soi/ பலராலும் அறியப்பட்ட ராஜ்குமார் ரஜீவ்காந் என்பவரின் முகநுhலில் இருந்து.
-
நாமலா?கருணாநிதியா?
மானம் கெட்ட சுமந்திரன். கர்ச்சிக்கும் கறுப்பு பட்டி கருணாநிதி. பழைய காலத்து மித்திரன் பத்திரிகை பார்த்த மாதிரி இருந்தது.
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
நாய்க்கு கல் எறிவதே உங்க வேலையா போச்சு. அப்புறம் துரத்துது கடிக்குது என்று முறைப்பாடு வேற. எதுக்கும் சாத்தான் வருமட்டும் பொறுத்திருப்போம்.
-
அமெரிக்காவின் அவலம்
In the U.S., about 41.7 million people received benefits from the Supplemental Nutrition Assistance Program (SNAP) on average per month during fiscal year 2024 — about 12.3% of the population. இலங்கையிலும் ஏதோ ஒரு பெயரில் 10 ஆயிரம் கொடுக்கிறார்கள் என எண்ணுகிறேன். மத்திலுள்ள மாநிலங்களில் உள்ள ஏழைகள் சிகப்பு கட்சிக்கு வாக்கைப் போடுகிறார்கள். இந்த தடவை கொஞ்சம் மாட்டிக் கொண்டார்கள். இவர்களுக்கான மருத்துவ காப்புறுதியையும் மாற்றுகிறார். இதன் தாக்கம் இன்னும் கொஞ்ச காலத்தில் தெரியும்.
-
நீ இயந்திரம் நான் பிரேக்
இரட்டையர்களில் அனேகமானோர் அழகாகவும் ஒரே மாதிரியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பார்கள். இறப்பு ஒன்றாக நடந்திருப்பது புதுமை தான். காரணம் வேறு தெரியவில்லை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அட பாவிகளா வாகனத்தை ஓரமா நிறுத்திவிட்டு ஒழுங்கா அனுபவித்திருக்கலாமே?
-
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
நானும் இதையே யோசித்தேன். இருந்தாலும் சாதாரணமாக ஒருவருடன் உரையாடும் போது எப்படி யோசித்தார். காணொளி பண்ணுகிறா என்று தெரிந்தும் சேட்டை விட்டவர் எப்படியான முட்டாள். இதிலே குடும்பஸ்தர் வேறயாம். மறியலால் வெளியே வந்து வீட்டுக்குள் ஊருக்குள் எப்படி நடமாடப் போகிறான்?
-
கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!
மாநகரசபையை அண்டிய பகுதிகளிலேயே கழிவுத் திண்மங்களை சேகரிக்கிறார்கள். எல்லா இடங்களிலும் சேகரித்தால் முடியும் என எண்ணுகிறேன். கிராமப் புறங்களில் ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் மக்கள் பெருந் தொகையான கழிவுகளை கொட்டுகிறார்கள். அதிலும் சுகாதாரத் துறையினர் வருகிறார்கள் என்றால் இன்னும் கூடுதலாக கொட்டுவார்கள். சுகாதாரத் துறையினரின் கெடுபிடிகளால் எல்லோருமே எரிக்கிறார்கள். கிராமங்களில் மக்களின் கண்ணுக்குள் விரல்விட்டு ஆட்டும் சுகாதார துறையினர் மாநகர சபையில் வாய்க்கால்களில் தேங்கிக் கிடக்கும் துர்மணம் வீசும் கழிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
வாழைப்பூ எப்படி இப்படி நிமிர்ந்து நிற்குது?
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள். தகவலுக்கு நன்றி சிறி.
-
பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை
சுவை உங்கள் நாட்டு வர்த்தகர்கள் யாழுக்கு நேரடியாக வியாபார நோக்கில் விமானசேவை நடாத்த இந்தியாவின் (இறங்கி ஏற)அனுமதி தேவை. இதனால் பெரும்பணம் செலவாகுமென்று ஒரு முறைப்பாட்டை வைத்தார்கள். எனவே இந்தியாவும் ஏதாவது விதத்தில் தடையாக இருக்குமோ தெரியாது. இந்தியா தனது பணத்தை செலவு செய்து காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசு மறுத்துவிட்டது.
-
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
எப்படி காணொளியாக பதிவு செய்தார் என்று இன்னமும் யோசிக்கிறேன்.
-
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
நியூசிலாந்து என்றார்களே?
-
பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை
கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் இந்தியாவுக்கு போகும் விமானங்களில் கொழும்பிலிருந்து கூடுதலான நிறையுடைய பொதியையும் யாழிலிருந்து குறைவான பொதியையுமே கொண்டுபோக அனுமதிக்கிறார்கள். ஒரே நிறையுடைய பொதிகளைக் கொண்டுபோக விட்டால் பல தமிழ் சிங்கள மக்கள் யாழ் விமானநிலையத்தையே விரும்பி பாவிப்பார்கள் என்கிறார்கள்.
-
கொஞ்சம் ரசிக்க
மாமாவுக்கு ஒரு👏👏👏👏👏
-
கருத்து படங்கள்
தெரியாததை கேட்டு தெரிஞ்சுக்கணுமில்ல.
-
கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன்.
எழுதி வைத்துவிட்டே நிகழ்வுக்கு வந்திருப்பாரோ?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஏன் சுவி அவரது டைரியில் கிசுகிசு செய்திகள் எதுவும் இல்லையோ?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வன்னியரே. எப்படி இருக்கிறீர்கள்? கட்சி மாறியதுடன் ஆளையே காண முடியவில்லையே?