Everything posted by goshan_che
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இதுவெல்லாம் சரிதான். ஆனால் 2008 சரிவின் அடிப்படை ஒன்றே ஒன்றுதான். வீடுகளை வாங்கியோர் வட்டி வீதம் கொஞ்சம் கூடினால் கூட மாதாந்த தொகையை கட்ட முடியாத நிலையில் இருந்தமையால், வீடுகளை கைவிட்டனர். அல்லாமல் இவர்கள் தொடர்ந்தும் மாதாந்த கொடுபனவை கட்டி கொண்டு வந்திருந்தால், நீங்கள் சொன்ன அத்தனை காரணங்கள் (இதோடு Libor rate களவையும் சேர்க்கலாம்) இருந்தாலும் 2008 சரிவு வந்திராது. ஏன் இந்த பயனாளர்களால் மாதாந்த கொடுப்பனவு கட்ட முடியாமல் போனது? அடிப்படையில் பயனாளரும், வங்கி ஊழியரும் (கொமிசனுக்காக) சேர்ந்து செய்த மோசடி + அதீத ரிஸ்க் எடுத்தல் +பேராசை. ஆயிரம் டொலர் கட்டவே ததிங்கினதோம் போடும் ஒருவரின் தலையில், கள்ள டொக்குமெண்ட் அடிப்படையில், அல்லது போதிய அளவு stress test பண்ணாமல் - அல்லது, நம்பவே முடியாத பண வரத்தை நம்புவதாக கூறி, 2000 டொலர் கட்டவேண்டிய மொகேஜை கட்டி விட்டார்கள். வீடு negative equity க்கு போவது, அல்லது வட்டி வீதம் ஏறல் போன்ற சின்ன தளம்பலே இவர்களை - மாதாந்த கொடுப்பனவை கட்ட இயலாமல் ஆக்க போதுமாய் இருந்தது - கணிசமனா ஆட்கள் இப்படி செய்ய, அது snowball effect ஆகி, காப்புறுதி நிறுவனங்களின் இயலுமையை மீறி போய் விட, அதன் தொடர்சியாக வங்கிகள் இன்னும் பலது வீழ்ச்சியை சந்தித்தன. அது அப்படியே ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் காவு வாங்கி விடும் என்பதால் அரசுகள் தலையிட்டன (too big to fail). யூகேயில் அரசு தலையிட்டு சில வங்கிகளை (அதன் liabilities ஐ) தானே எடுத்து கொண்டது. இதற்கு காரணமான பல வங்கியாளர்கள் சிறை போனார்கள். நாங்கள் too big to fail எனவே எப்படியும் அரசு காப்பாற்றும் என்ற அடிப்படையில், அதீத பேராசையில், விதிகளை மீறி, அதீத ரிஸ்க் எடுப்பது. இதுவும் களவுதான். இலாபம் வந்தால் இவர்களுக்கு, நட்டம் வந்தால் அரசுக்கு. Profit is privatized, risk is socialized. சஞ்சீவ் ஆரணி செய்ததும் இப்படி ஒன்றே.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
பிகு இங்கே பெரு நிறுவனங்களுக்கு end of accounting year + 9 மாதம் வரைக்கும் வரி கட்ட தவணை உள்ளது என நினைக்கிறேன். ஆனால் இவர்களை போல too big to fail, அதாவது திவாலாகினால் அரசு தலையிடும் என்ற நிலை உள்ள வியாபாரங்கள், சில சமயம், வரியை இப்படி இழுத்தடித்து, முடிவில் நாமம் போடுவதும் வழமை என நினைக்கிறேன். அதே போல் இந்த 250 மில்லியனை எச் எம் ஆர் சி க்கான கடன் என்பதுதான் தமிழிலும் technically correct என நினைக்கிறேன். உண்டியலில் விழும் அனைத்தும் அம்மனுக்கே சொந்தம் என்பது போல், கட்டும் திகதியில் இருந்து, அந்த வரித்தொகை, HMRCக்கே சொந்தம். இதனால்தான் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வட்டி அறவிடுவார்கள். ஒருவருக்கு நாம் கொடுக்க வேண்டிய காசுக்கு அவர் வட்டி அறவிட்டால் - அது கடந்தானே?
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஆம் 250 மில்லியன் வரி கட்டாமல் விட்டதைத்தான் சொல்கிறேன். ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதியதால் வந்த பிரச்சனை, the company is in debt to the HMRC to the tune of 250 millions என்பதை அப்படியே தமிழில் எழுதிவிட்டேன்.
-
உடன்பிறந்த தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பம்!
😂 ஆராய்சியாளார் நல்ல கதாசிரியர் போல உள்ளது😂. ஆதாம் ஏவாளின் பிள்ளைகளில் (உண்மை எனில்) ஆரம்பித்து, எகிப்திய, கிழக்காசிய, பாரசீக, தென்னமரிக்க என பண்டைய நாகரிகங்கள் பலதில் சகோதர மணம் ஒரு காலத்தில் ஏற்றுகொள்ளபட்ட ஒரு முறையாகவே இருந்தது.
- மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
-
ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது?
பாலித்தீவில் இந்த புனுகுபூனையின் பின்பக்க காப்பியை குடித்து பார்த்தேன். சும்மா…லுலுலுலா 😂
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
மாடு தேடும் கதை யாழில் யாரோ அறிமுகபடுத்தி வாசித்தேன். ஜஸ்டின் அண்ணாவாகவும் இருக்கலாம். யாழின் சமூக சுரண்டலையும் காட்டி இருப்பார். யானை - யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் வன்னியில் போய் படிபிக்காமல், மாணவர்களை தொழிலாளர் போல் சுரண்டுவதை சுட்டும் கதையா? இப்படி ஒரு செ.ஆ கதை பல வருடம் முன்பு வாசித்தேன். குவேனி - யாழில் நான் எழுதி பாதியில் நிற்கும் கவிதை தொடர் ஒன்றின் இன்ஷ்பிரேசன்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
விக்ரமாதித்தனும் வேதாளமும்😂
-
தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
நான் நினைக்கிறேன் - இது அவர்கள் சுயமாகவே, கேள்விகள் கேட்கும் போது இப்படி பதிகிறார்கள் என. அரசு அப்படி ஒன்றாக கருதவில்லை. வட, கிழக்கு, மேற்கு மாகாணத்தில்தான் இப்படி நடக்க்க வாய்புண்டு. மலையக மக்கள் என்ற அடையாளத்தால் கிடைக்கும் ஒதுக்கலில் இருந்து வருங்கால சந்ததிகளை பாதுகாக்கும் வகையில் இதை செய்ய கூடும். இதற்கு யாழ்பாண சாதி அமைப்பின் வரலாற்றில் ஒரு உதாரணமும் உண்டு. பல்வேறு இடைநிலையில் வைக்கப்பட்ட சாதிகள், தம்மை தாமே அடையாள மாற்றத்துக்குட்படுத்தி, வெள்ளாளர் என்ற குடையின் கீழ் வந்ததாயும், இதனால்தான் வெள்ளாளருக்குள் கூட ஏற்ற தாழ்வு பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது என்றும் கூறுவார்கள். மலையகத்தில் இந்த போக்கு இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருக்கும்வரை அவர்களுக்கான உரிமை, சலுகைகளை இது பாதிக்கவும் வாய்ப்பில்லை.
-
தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
நான் கணக்கில ரொம்பவே வீக்- ஆனாலும். இலங்கை தமிழர் தொகை எண்ணிக்கையிலும் சதவீதத்திலும் நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் போக்கை என்னால் கூட காண முடிகிறது. 30 வருட போரில் இளையோரை அதிகம் காவு கொடுத்ததன் பின் விழைவு, இன்னும் சில பத்தாண்டுகளுக்காவது இலங்கை தமிழர் பிறப்பு வீதத்தில் தெரியத்தான் செய்யும். ஆனாலும் ஒட்டு மொத்தமாக இது 15 வருடத்துள் மீள நேர்மறை வளர்சிக்கு வந்துள்ளது நல்ல செய்தியே. ஆனால் இது மட்டுமே நல்ல செய்தியாக எனக்கு படுகிறது. எமது மக்கள் தம் பாரம்பரிய வாழிடங்களில் குறிப்பாக, யாழ், மட்டகளப்புக்கு அப்பால் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் வீழ்சியை அல்லது மந்த நிலையை காட்டுவது கவலையான விடயம். யாரையும் ஒரு மாவட்டத்தில் இரு என கட்டாயம் செய்ய முடியாது. வாய்புக்கள் தேடி கொழும்பு இதர பகுதிகளுக்கு போவது இயல்பே. ஆனால் 1980 ற்கு முந்திய காலம் போல் இப்படி போவபர்கள், ஊருக்கு வருவதையோ, வாக்களிப்பு பதிவை ஊரில் வைத்திருப்பதையோ இப்போ செய்வதில்லை. கொழும்பு போனால் சில வருடங்களில் அங்கே ஐக்கியமாகி விடுகிறார்கள். யாழ் மாவட்டத்தில் கூட நகருக்கு 10 கிமிக்குள் இருக்கவே பலர் விரும்புகிறனர். மட்டகளப்பிலும் எழுவான்கரையில்தான் அநேகர். தரவுகளை பார்த்தால் - சனத்தொகை அடர்த்தி குறைந்த முதல் எட்டு மாவட்டமும் எமதுதான். ஒரு ஒற்றையாட்ட்சி நாட்டில் - குறைந்தளவு மக்கள், இப்படி அதிகளவு மண்ணை ஒரு அளவுக்கு மேல் பிடித்து வைக்க முடியாது. ஏனைய மாவட்டங்களில் வளப்பற்றாக்குறை ஏற்படும் போது, கவனம் எமது மாவட்டங்கள் மீதே திரும்பும். இது மேலும் எமது மாவட்டங்களில் எமது எம் வீதத்தை குறைக்கும். எமது தனித்துவத்தின் அடிப்படையே எமது மண்ணில் நாம் அறுதி பெரும்பான்யாக இருப்பதுதான். ஆகவே ஒட்டு மொத்தமாக சதவீதம் கூடி விட்டது என்ற நற்செய்தியை விட எமது பாரம்பரிய வாழிடத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பாரதூரமான விடயம். இதை சரிக்கட்டும் அளவுக்கு வாய்புகளை ஏற்படுத்த முடியாவிடினும், மூன்று பிள்ளைகள் பெற்று, 8 மாவட்டங்களில் ஒன்றில் வாழ்வோருக்கு மாதாந்த தொகை போல ஏதும் கொடுத்தால் ஒரு சிறிய மாற்றம் வரலாம். ஆனால் நான் உட்பட சிறிய குடும்பமே நன்று என்ற மனநிலை தமிழ் சிங்கள மக்கள் இடையே ஊறிவிட்டது. இதை உதவி தொகைகள் பெரிதாக மாற்ற சாத்தியமில்லை. முஸ்லிம்களை பிழை சொல்ல முடியாது. அவர்கள் ஒன்றும் திட்டமிட்டு இதை செய்வதில்லை. எண்ணிக்கையே பலம், இறைவன் கொடுக்கும் அருள் பிள்ளைகள் என அவர்கள் இயல்பாக நம்புவதால், எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கிறது. அப்போ சிங்களவர், தமிழர் எண்ணிக்கையை கூட்ட என்ன செய்ய வேண்டும்? முதலில் தத்தம் மாவட்டங்களுக்கு பதிவு அளவிலாவது மீள வேண்டும். இன்றைய வேகமான உலகில் இது சாத்தியமே. அடுத்து, தனித்துவத்தை பேண நாம் எம் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற கூட்டு மனோநிலை உருவாக வேண்டும். அப்படி உருவாகி பிறக்கும் பிள்ளைகளை தெருவில் விடாமல், பராமரிக்க சமூக அமைப்புகள் இருக்க வேண்டும். குடும்பகட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்புகள் போல, பிறப்புவீதத்தை ஊக்குவிக்கும் பிரச்சார அமைபுகளும் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் முயன்றுமே - ஸ்கெண்டிநேவிய நாடுகளின் இது போன்ற திட்டங்கள் தோல்விதான். ஆகவே இதற்கு silver bullet முடிவு ஏதும் இல்லை.
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
இந்த பக்கத்துக்கு வந்து வந்து போனாலும், நீங்கள் எழுதிய இந்த பதிவு இப்பதான் கண்ணில் பட்டது😂.
-
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்!
இவரும் என் பி பி - கட்சி இல்லை என நினைக்கிறேன்😂 குற்ற செயலில் ஈடுபடுபவரின் மைத்துனர், பக்கத்து வீட்டுகாரார், ஒரே பஸ்சில் கூடப்பயணித்தவர் என இந்த லிஸ்ட் நீளும் போல உள்ளதே😂. தாம் நிரந்தரமாக ஆட்சி செய்ய, பாதாள உலகம், கட்டுப்பாடற்ற பேரினவாதம் இரெண்டும் ஆபத்து என உணர்ந்த ஜேவிபி, அதனோடு நூலிழை சம்பந்தம் உள்ளோரை கூட கொஞ்சம் கொஞ்சமாக போட்டு தள்ள ஆரம்பித்துள்ளது. தமது சொல்லை கேட்கவில்லை என்பதால் 87 இல் விதானைமார், சப்போஸ்மாஸ்டர், போஸ்ட்மன் ஈறாக போட்டுத்தள்ளிய அமைப்புத்தான் ஜேவிபி.
-
யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது!
ஓம். ஆனால் அனுர வெள்ளை கொடி விவகாரத்தை சொல்லுற வகையில் இவரை தட்டவே மாட்டார். மீளவும் இனவாதம் மூலம் இவர்கள் தம்மை வெல்லாமல் தடுக்க மட்டுமே. மட்டுப்பட்ட தட்டல்.
-
செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு 1995ஆம் ஆண்டுக்கு முந்தையது ?
யார் இந்த நிரஞ்சன்? “நாமல் ராஜபக்ச முறையில்” சட்டத்தரணி ஆகி இருப்பார் போலுள்ளது. 1995 வரை சந்தையில் இருந்த காலணி, 1999, 2000 வரை பாவிக்கப்பட்டிருக்கலாமே? 1995 க்கு முன்னானது என நிறுவ முயல்வதன் மூலம், ரிவிரெசவின் பின் செம்மணி பகுதி படையினர் கட்டுப்பாட்டுக்குள் வரமுதல் புதைத்தவை என நிறுவ முயல்கிறார். ஆனால் இவை மண்டையன் குழுவின் புதைகுழியாகவும் இருக்கலாம். 87 இல் இந்தியன் ஆமியிம் உதுக்குள்ள நிண்டதெல்லோ.
-
யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது!
கிரிமினல் வழக்குகள் என்ற போர்வையில் என் பி பி யின் அரசியல் எதிரிகள் துரத்தபடுவதன் இன்னொரு ஆதாரம் ?
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
மேலே மாட்டை பற்றி கேட்க, மாட்டை கொண்டு வந்து மரத்தில் கட்டி விட்டு, மரத்தை பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதே? போதவில்லையா😂. எமக்கு எப்படி நாமாம்? இது எந்த வகையில் கட்டப்படாமல் தேங்கிய வரி என்பது தெரியவில்லை (மேலே இப்படித்தான் தேங்கி இருக்கலாம் என ஒரு ஊகம் கொடுக்கப்பட்டுள்ளது). ஆனால் முதல் பக்கத்தில் பதிந்த செய்திகளின் அடிப்படையில், திவாலாகுக் போது 240 மில்லியன் வரை HMRC க்கு இந்த நிறுவனம் கடனை கட்டாமல் விட்டு விட்டு திவாலாகியுள்ளது. 250 மில்லியன்க்கு 6-8 secondary schools ஐ கட்டலாம் என்கிறது ஜெமினி. இது ஒவ்வொரு யூகே வரியிறுப்பாளருக்கும் நாமம்தானே?
-
மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? - முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு
சவத்தில் இருந்து கழண்ட உண்ணிக்கு பேச்சப்பாரேன்🤣
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
நான் முதன் முதலில் பார்க்கும் போது சீனோர் இழுத்து மூடிய நிலையில் இருந்தது. அப்படியே கொஞ்ச தூரம் போனால் நேவி காம்ப். சின்னவயதில் செங்கை ஆழியான் கடற்கோட்டை நாவல் வாசித்ததில் இருந்து அதன் மீது ஒரு அதீத காதல். எப்படியாவது காசு உழைத்து அதை வாங்கி, அதில் குடியேறி விட வேண்டும், போர்ட்டில் வேலைக்கு வந்து போகவேண்டும் எனவெல்லாம் கூட யோசித்தது உண்டு. ஜெட்டியில் போய் நின்று பார்த்து வருவதோடு சரி. அப்போ ஊர்காவற்துறை போகும் பாதையும் உடைந்து கிடந்தது. யுத்த முடிவில், கடற்கோட்டை உள் போய் பார்க்கவும், பாதையில் பயணிக்கவும் வாய்ப்புக்கிட்டியது.
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
அந்த காலத்தில் உங்கள் பிரதம எஞ்சினியராக ஒரு நெடு நெடு என வளர்ந்த மனிதர் இருந்தாரா அண்ணை? அதேபோல் போர்மென் உதவியாளராக கொஞ்சம் கட்டையாக நிறைய தலைமுடியோ கொஞ்சம் ரஜனி சாயலில் இன்னொருவர் இருந்தாரா? இப்பவும் எண்ணை மட்டும் அல்ல ரொம்ப சுவையான எள்ளுருண்டை தயாரிப்பும் வீட்டு கைத்தொழிலாக நடக்கிறது. பழக இனிமையான மக்கள்.
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
நல்ல ஆனைக்கோட்டை எண்ணையில் உருட்டிய உருட்டு போல இருக்கண்ணை😀. அந்த மதகில் ஐந்து நீரை கட்டுப்படுத்தும் துவாரங்கள் உள்ளன என்பதால் காரணப்பெயர் என நான் கேள்விப்பட்டேன். கல்லுண்டாய் வெளிக்குள்ளால் போவது 782 வா? முன்னர் நாவாந்துறையை நெருங்கும் போது ஆரம்பிக்கும் சுகந்தம், மாநகரசபையின் கருணையால் வெளியில் இறங்கியதுமே ஆரம்பிக்கிறதாம்.
-
சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?
சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றைச் சார்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் நால்வரும் எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க வந்தபோது, அவர்களில் ஒருவர் கடல் அலையில் சிக்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற முற்பட்டபோது மற்ற மூவரும் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தேவகி, ஷாலினி, பவானி ஆகியோர் திருவள்ளூர் பொன்னேரியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஷாலினி என்பவர் அரசுக் கல்லூரியில் பயின்று வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சடலங்களைக் கைப்பற்றிய போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? https://www.vikatan.com/சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண...
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
2023 இல் நடந்தாய் வாழி வழுக்கை ஆறே என்ற பெயரில் இந்த மாரிகால ஆற்றின் வழி நடக்கும் ஒரு நடை பயணம் நடந்தது. இதன் walk path ஐ ஒரு trekking போல பிரபல்ய படுத்தினால், சாரணரும் உள், வெளி நாட்டு பயணிகளும் ஆர்வமாக கலந்துகொள்வார்கள்.
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
- இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
👆👇 ஏனைய இனங்களை பார்த்து குத்தி முறிவதில் பலனேதும் இல்லை மக்காள். இயற்கையாகவே நீங்கள் ஆப்பை செருகிகொள்வீர்கள். கொழும்பிலும், கம்பஹாவிலும் இலங்கை தமிழர் எண்ணிக்கை சதவீதம் எப்படி கூடியுள்ளது என பார்க்க ஆவல்.- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
நான் எழுதிய கருத்தின் பின்னர் வசி உட்பட பலர் எழுதியவை. தாம் ஒருவரோடு, அல்லது பலரோடு பழகிய அனுபவத்தை மட்டும் வைத்து ஒட்டு மொத்த இனத்தையே எடை போடுகிறார்கள். இது 1990 இல் புலிகள் எடுத்த அதே அணுகுமுறை. அதாவது தனிமனிதர்களின் அல்லது குழுக்களின் தவறுக்கு இனத்தையே பழிகூறுவது. நாம் வாயளவில் மன்னிப்பு கேட்டாலும், பலரின் முஸ்லிம்கள் பற்றிய பார்வை 1990 இல் இருந்து அப்படியே உள்ளது என்பதை இது காட்டுகிறது. சாத்ஸ்சுக்கான பதில் - கோட்ட காலத்தில் முஸ்லிம் ஊர்காவல் படை இருக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் பலர் அரச படையுடன் சேர்ந்து இயங்கினர். அமைச்சராகவும் இருந்தனர். ஆனால் இதை 1990 காலத்தோடு ஒப்பிட முடியாது. 1990 போலன்றி இது அவர்கள் அமைப்பாக அல்லது, தனி மனிதர்களாக அரசுக்கு ஆதரவழித்த நிகழ்வு. டக்லஸ், கருணா என பல தமிழர்களும் ஆதரவழித்தனர். அதை வைத்து ஒட்டுமொத்த தமிழரை குற்றம் சொல்ல இயலாதே. புதிதாக ஒவ்வொரு வருடமும் ஒரு கதை சேர்ப்பது பற்றி ஏலவே என் கருத்தை முதலாம் பதிவிலே கூறிவிட்டேன். நீங்கள் சொல்வது உண்மையே ஆகினும் (எனது தனிப்பட்ட வாழ்வில் சுயநலமிகளை இன வேறுபாடின்றி சகல இனத்திலும் கண்டுள்ளேன்) அதனால் மட்டும் அவர்களுக்கு அவர்கள் வாழிடத்தில் இருக்கும் உரிமையை நாம் இல்லை என மறுக்க முடியாது. - இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.