Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அருவருக்கதக்க கருத்தை விட்டு விட்டு கருத்தாளரை தாக்கும் பதிவு. ஒருவர் தனது தரப்பு நியாயத்தை நீர்த்து போக செய்து, உலக ஒப்பினையை தனக்கு எதிராக திருப்ப இது மிக உதவியாக இருக்கும். சமாதான காலத்தில் புலிகளின் அனுதாபிகள் என பலர் இப்படித்தான் அவர்களுக்கு குழி பறித்தார்கள். இந்த ஜோக் காப்புரிமை செய்யப்பட்டது 😂
  2. மிகவும் நல்ல கேள்வி (எங்கேயோ கேட்ட குரல்😂). சீரியசாகவே இது கேட்க வேண்டிய கேள்வி. ஒருவர் தனது தரப்பு நியாயத்தை இப்படித்தான் கேள்விகள் மூலம் முன்வைக்க வேண்டும். எனது பங்குக்கு மேலதிகமாக…. புலிகள் மன்னிப்பு கேட்ட சமயம் மீள வரும் போது வீடுகளை, வியாபார தலங்களை மீளளிப்பதாக சொன்னார்கள். அதே சமயம் இந்த நகைகளுக்கான ஒரு டோக்கன் நஸ்ட ஈட்டை ஏன் எவருமே கோரவில்லை?
  3. நாங்கள் முதலாளித்துவத்தின் ஊற்றுக்கண் ஐயா… சொகுசு…பவிசு… எது எண்டாலும் முதலில் அவிசு படைக்க வேண்டும்😂. சட்டதில் இடமில்லை இல்லாவிட்டால் பாய் போட்டிருப்போம்😂
  4. கவனிக்க: புலிகள் ஒரு போதும் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்கிருந்தார்கள், காட்டி கொடுத்தார்கள், பாதுகாப்புக்கு வெளி ஏற்றினோம் என்ற எந்த விளக்கத்தையும் கொடுத்து நான் அறியவில்லை. ஏன் வெளியேற்றினார்கள் என்பது, வெளிப்படையானது obvious. கிழக்கில் நடந்த கொடுரத்துக்கு பதிலாக…. இனியும் செய்யவேண்டாம் என மிரட்ட…. கிழக்கு தமிழருக்கு உங்களுக்காக நாம் இருக்கிறோம் என காட்ட….. இவைதான் காரணங்கள். மிக நியாயமான காரணங்கள். ஆனால் …. இந்த நடவடிக்கை நியாயமானதா, விவேகமானதா, நீண்ட கால நோக்கில் அனுகூலமானதா? இல்லை.
  5. இதில் அரசியலும் உள்ளது. புலிகள் முஸ்லிம்கள் மீது செய்ததை சொல்லும் முஸ்லிம் அவர்களிடம் ஹீரோ. முஸ்லிம்களின் குழுக்கள் தமிழர் மீது செய்ததை சொல்லி, புலிகள் செய்ததையும் நியாயப்படுத்துவோர் எம்மிடம் ஹீரோக்கள். இங்கே எவ்வளோ எழுதுகிறார்கள் முக்கி, முக்கி. நான் கேட்ட கேள்வி ஆம் இல்லை அல்லது தெரியவில்லை என பதில் சொல்ல கூடிய எளிய கேள்வி. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிடம் புலிகள் நகை, பணம், இதர பொருட்களை பிடுங்கி கொண்டார்களா? மறுவளமாக முஸ்லிம்களும் இப்படித்தான். வீடமுனையை நாசம் பண்ணினீர்களா? என கேட்டால் எத்தனை முஸ்லிம்கள் உண்மையை ஏற்பார்கள்? ஹிஸ்புலா காளிகோவிலை மாட்டு தொழுவம் ஆக்கினேன் என மேடையில் பேசவில்லையா? அவர்களில் யாரும் பேசினாலும் “முஸ்லிம் அரிச்சந்திரன்” - இப்படியான விடயம் பேசாமல் விடுவதே சிறப்பு என ஏனையோர் அடக்கி விடுவார்கள். மன்னிப்பு பற்றி சீமான் திரியில் எழுதியதுதான். Truth and reconciliation உண்மையும், பரஸ்பர மன்னித்து மீள் ஏற்றலும். இதில் உண்மையை தவிர்த்து விட்டு, மன்னிப்பு வெறும் வார்த்தைகளால் வராது. இது முஸ்லிம்களுக்கும், தமிழருக்கும் மட்டும் அல்ல, சிங்களவருக்கும்ப்பொருந்தும். லொஜிக் மருந்துக்கும் இல்லாத நிலைப்பாடு. முஸ்லிம்களை பாதுகாக்க வெளி ஏற்றினால் அது தவறல்ல அவர்களுக்கு செய்த நன்மை. நன்மை செய்யமைக்கு யாராவது மன்னிப்பு கேட்பார்களா? நான் நினைக்கிறேன் இவர்கள் யாருக்காவது பெரும் நன்மையை செய்து விட்டு, நன்மை செய்தமைக்கு மன்னிபும் கேட்கும் அளவுக்கு அப்பாவிகள் என😂
  6. பிள்ளையள் ஒயில் கிழவனுக்கு கல் எறிய வேண்டாம்…பாவம்.😂 கள்ளனே மனிசியையும் கூட்டி கொண்டு நாட்டை விட்டே ஓடீட்டான் 😂. வீட்டையும் விக்க போட்டுட்டு. ஒயில் ஓல்ட் மான் எண்ணையை பூசிகொண்டு ஒரே அலப்பறை😂
  7. மிக நியாயமான கேள்வி. அண்மைய அமைச்சரவை மாற்றம் மூவரை உள்வாங்கி உள்ளது. ஆனால் இன்னும் ஒரு வட மாகாண தமிழர் இல்லை. அனுரவுக்கு அவர்களின் குணமும் தெரியும் போல 😂
  8. இந்த விளக்கம் இங்கே பலமுறை கொடுக்கபட்டு விவாதிக்கபட்ட ஒன்றுதான். ஆனால் இங்கே சிலாகிப்பது வெளியேற்றியமைக்கான காரணம் பற்றி அல்ல. மாறாக தங்கத்தை பறித்து விட்டு அனுப்பினார்களா என்பதை பற்றியே. அதை பற்றி உங்கள் கருத்தை எழுதுங்கள் ஐயா. ஏன் என்றால் இது நடந்த அதே மாதம் சரியாக நான்கு ஆண்டுகளில் ரிவிரெச ஆமி யாழைப் பிடித்த போது தமிழர்களையும் “அவர்கள் பாதுகாப்பு கருதி” புலிகள் முதலில் வரணிக்கும், பின் வன்னிக்கும் இடம்பெயர பணித்தார்கள். ஆனால் யாழ் தமிழர்கள் ஆடு மாடு கோழி, வீட்டு கதவு ஈறாக எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இரெண்டு வெளியேற்றத்துக்கும் வித்தியாசம் உள்ளதா? அப்படியாயின்… ஏன்? அனைவரிடமும் அல்ல. கொடுக்க கூடிய தமிழரிடம் மட்டுமே மண்மீட்பு நிதி சேகரிக்கப்பட்டது. கொஞ்சம் அதட்டி வாங்கினாலும், ரசீது தந்தார்கள். சுழற்சி முறையில் அதிஸ்டசாலிகளுக்கு புலி இலச்சினை போட்டு மீளவும் அளித்தார்கள். இது தமிழரிடம். முஸ்லீம்களிடம் சுபீகரித்தார்கள் எண்டால் - அது இரெண்டு பவுணுக்கு மேலே வருமே, அதுவும் ஏழை பணக்காரன் எல்லாரிடமும்? தலைவர் இருக்கு மட்டும், அதுவும் யாழில், வன்னியில் இதுக்கு வாய்ப்பே இல்லை. அதுவும் ஊரறிய முஸ்லிகளிடம் பணத்தை, பவுனை ஒரு போராளியோ, தளபதியோ வாங்கி தம் பையில் போட்டால் - அவர் கதையே ஓவர்.
  9. தகவல்களுக்கு நன்றி. எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். மன்னார் பையன். எல்லாமும் நடந்து முடிந்த பின் கொழும்பில் பழக்கமானோம். நாம் புலிகளை போற்றி ஏற்றும் போதெல்லாம், அவனிடம் எந்த சலனமும் இருக்காது. தமிழ் மொழி மீது அதீத பற்றுடன் இருந்தான். இருபது வருடங்களின் பின் ஒருநாள் மிக சாதாரணமாக ஒரு நாள் சொன்னான் …… “நான் எங்கடா புத்தளம், என் சொந்த ஊர் மன்னார் - ஒரு நாள் இரவு கொட்டும் மழையில், உடுத்த உடுப்பையும் சொப்பிங் பாக்கில் சிலதையும் தவிர மிகுதி அனைத்தையும் பறிகொடுத்து விட்டு, ஒரு வள்ளத்தில் புத்தளம் வந்து இறங்கினோம். போக இடமில்லை. களைப்பு. அந்த கடற்கரை மணலிலே, கொட்டும் மழையில் படுத்து தூங்கினோம், இதுதான் எனக்கும் புத்தளத்துமுமான உறவு”… என்போன்றவர்களிடம் எல்லாம் அவனால் எப்படி சிரித்து பழக முடிகிறது என்பது இன்று வரை புரியவில்லை.
  10. அருச்சுனா மன்னாரில் இருந்து கூட்டிவந்த தங்கமும்… இந்த தங்கமும் ஒண்டா 😂 ஒரு விடயம் நான் சந்தித்த, பேசிய, இவ்வாறு வெளியேற்ற பட்ட ஒவ்வொருவரும் தாம் மிக சொற்ப பணத்தை மட்டுமே எடுத்து சொல்ல அனுமதிக்கபட்டதாக கூறுகிறார்கள். அப்படியாயின் அவர்கள் எல்லாரும் கூட்டமாக பொய் சொல்கிறார்களா? ஆனால் அவர்களின் பாதுகாப்பு கருதி அனுப்பி வைத்தோம் என்கிறனர் யாழ்கள அண்ணைமார். அதே சமயம் புலி போராளிகள் முஸ்லிம்களிடம் தாமாகவே உடமைகளை பறித்து கொள்ளும் அளவுக்கு காவாலிகள் இல்லை. இப்படி நடந்தால் அது தலைமை சொல்லியே நடந்திருக்கும். உண்மையில் என்ன நடந்தது ?
  11. நாங்கள் என்னதான் சோப்பு வாங்கி கொடுத்தாலும் ஒயில் கிழவர் குளிக்கப்போவதில்லை என தெரிந்த பின்னும், வாசகர் நலன் கருதி தரமான பதிலை வழமைபோல் கொடுத்துள்ளீர்கள். அனைவர் சார்பிலும் உங்கள் உழைப்புக்கும் நேரத்துக்கும் நன்றி. இதேபோலத்தான் நீரவ் மோடி, விஜை மல்லையாவும் இந்தியாவில் நாமம் போட்டு விட்டு இலண்டனில் வந்து பதுங்கி உள்ளார்கள். மல்லையா தான் கள்ளனே இல்லை என பேட்டி வேறு கொடுக்கிறார்😂. வியாபாரத்தில் நட்டப்படுவது இயல்பு…பல வியாபார பெரும் சாதனையாளர்களின் பல முயற்சிகள் திவாலாகி பின்னர் அனுபவ அடிப்படையில் அடுத்த நகர்வுகளில் சாதித்தனர். ஆனால் பொய்யான விம்பத்தை கட்டி எழுப்பி, கடன் வாங்கி திவாலாக்குவது அப்படி அல்ல. ஒரு PLC கள்ள accounts காட்டி, போலியாக பங்கு விலையை கூட்டுவதை ஒத்த விடயம் இது. இங்கே ஏமாற்றபடுது கடன்கொடுப்போர், மூலப்பொருள், சேவை வழங்குனர். அங்கே ஏமாற்றப்படுவது முதலீட்டாளர்கள். உண்மையில் கள்ளம் இல்லை எண்டால் ஏன் ஆள் நாட்டை விட்டு ஓடுவான்? பிரித்தானியா போன்ற ஒரு நாட்டை விட்டு ஓடுகிறார் என்றாலே சட்டத்துக்கு பயந்துதான் ஓடுகிறார். நாளைக்கு என்னால் மோகேஜ் கட்டமுடியாது போய், வீடு ரிபொசசனுக்கு வந்து, வித்த பின்னும் வங்கி நட்டப்பட்டால் - நான் நாட்டை விட்டு ஓட மாட்டேன். தேவையில்லை. மன்னிச்சு கொள்ளவும் என்பதோடு விடயம் முடியும். ஆனால்…. நான் மோகேஜ் எடுக்கும் போது கள்ள பத்திரம் கொடுத்து, 25K சம்பளத்தை 65 என காட்டி. நாலு வட்டிக்கு 50,000 எடுத்து டிபோசிட் போட்டு விட்டு, வங்கியிடம் அதை என் சொந்த சேமிப்பு என பொய் சொல்லி…. இப்படி பிராடு செய்து மோகேஜ் எடுத்து, பின் கட்ட முடியாமல் - வீடு ஜப்தி ஆகி, வங்கியும் நட்டப்பட்டால் - நான் செய்தது கிரிமினல் குற்றமே. நடைமுறையில் பொதுவாக இப்படி செய்பவர்களை small fish என்பதால் வங்கிகள் (நீங்கள் சொம்னபடி இழப்பை ஏற்கும் காப்புறுதி கம்பனிகள்) திரத்துவதில்லை. ஆனால் திரத்த விரும்பினால் திரத்தலாம். பிறகு இலண்டனில் கள்ள டொகுமெண்ட் கொடுத்து மோர்ச்கேஜ் எடுத்த அண்ணைமார் எல்லாம், சஞ்சீவ் போல இலங்கைக்கு ஓட வேண்டி வரும் 😂. பிகு எனக்கு இந்த ஊத்தவாளி தம்பதியில் ஆகக் கோவம் - கட்டாயம் கடந்த ஒரு வருடத்தில் நிலமை மோசமாவது தெரிந்த பின்னும், 3.5 மில்லியனை கம்பெனியில் இருந்து டிவிடெண்ட் என உருவியுள்ளார்கள். ஆனால் வேலை ஆட்களை சம்பளபாக்கியில் விட்டு விட்டு ஓடியுள்ளார்கள்.
  12. வெளி நாட்டு மோகத்தை தூண்டி, ஒரு அப்பாவியை பலிக்கடா ஆக்கியுள்ளார்கள். பாவம் செய்திகளில் குடு கும்பலோடு ஒருவராக படம் எல்லாம் வந்து அசிங்கபட்டுள்ளார் தக்‌ஷி. இதற்கு துணைபோன ஜப்னா சுரேஸ்சுக்கு உண்மை தெரிந்தும், இந்த பெண்ணை இப்படி ஏமாற்றி உள்ளான் என எண்ணுகிறேன்.
  13. பிகு பர்ஸ்ட் கிளாஸ் லவுஞ்சில் தங்கியதில்லை - அவை சிறப்பாக இருக்க கூடும். மும்பையில் கப்சியூஸ் என ஒரு தூங்கும் பெட்டி எடுத்தேன். ஒரு வசதி மிக்க சற்றே விசாலமாம சவப்பெட்டி🤣. அதை விட கதிரையில் உக்காந்து பராக்கு பார்ப்பது நல்லம் 🤣
  14. நான் இதில் என்னளவில் முரண்படுகிறேன். இது பிழையோ தெரியவில்லை. ஆனால் எனது சூழ்நிலைக்கு இவை சரி வருவதில்லை. எடுப்பதே கடன் - அதில் ஒரு மாதத்துள் மீள செலுத்தாவிடின் அறாவட்டி அதுவும் அமேரிக்கன் எக்பிரஸ்சின் வட்டி சொல்லி மாளாது. இதற்குள் அவர்களுக்கு மாத சந்தா வேறு கட்ட வேண்டுமா? அத்தோடு நான் டி டோட்லர் - அங்கே இருக்கும் இலவச தண்ணியை குடிக்க முடியாது. சிறுவயது முதலே டயபடிக்ஸ், இனிப்பு உணவுகள் தொட முடியாது. அங்கே சாப்பாடு நல்லதுதான். ஆனால் அந்த விலையில் விட குறைந்த விலையில் நல்ல ரெஸ்டூரடன் ஒன்றில் buffett யில் போய் பத்தோடு பதினொன்றாக சாப்பிடாமல் நாமே lay carte யாக தேவையான உணவுகளை ஓடர் பண்ணி சாப்பிடலாம். இஸ்தான்புல், பாங்கொல்கில் மசாஜ் போகலாம். கிட்டதட்ட அதே பணம்தான். எப்படியும் 4 மணத்தியால வெயிட்டிங்கில் கடைசி 1 மணத்தியாலம் போர்டிங் கேட்டில் தொங்க வேண்டும். 1 மணத்தியாலம் bag drop, immigration. 2 மணத்கியாலத்தை மிக வடிவாக உணவகத்தில் செலவழிக்கலாம். ஏர்போர்டில் airside இல் இருக்கும் டாய்லெட்டுகளும் அவ்வளவு மோசம் இல்லை. நான் ஏர்மைல்ஸ் ஐ பயன்படுத்தி, சலுகையாக என சிலதரம் பாவித்துள்ளேன் (கொழும்பில் அல்ல) ஆனால் இவை overhyped என்பதே என் கருத்து. 3 மணி நேர டிரான்சிட்டுக்கு மேல் எடுப்பதில்லை. அப்படி எண்டால் குறைந்தது 22 , 18 மணி நேரம் எடுத்தால் வெளியே போய் ஊரை ஒரு சுத்து சுத்தி வரலாம். அதுவும் மத்திய கிழக்கு என்றால் ஏர்போர்ர்ட்டில் பெடியள் நிப்பாங்கள் கூட்டி போக🤣
  15. ஓ பெட்டியே…. நீ குசா அண்ணாவிடமும் போய் விட்டாயா…. சபரிமலை ஆண்டவா… உன் மகிமையோ மகிமை😂
  16. தரவு சரி பார்புக்கு நன்றி நன்னி. கட்டுரையை பகிர்ந்தவர் நன்னியின் நியாயமான விமர்சனத்துக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்கிறேன்.
  17. நாலு அல்லவா? நீங்கள் பிலிப்பைன்ஸ் தாதி, யேமனிய சலவைக்காரி, இத்தாலி செக்கரெட்டரி, எல்லாரையும் சேர்த்து கணக்கு போடுகிறீர்களோ?
  18. சுகர் வருத்தம் இருந்தால் அல்லது அறிகுறி இருப்போர் தவிர்க்க வேண்டிய பழங்களில் முதன்மையானது பேரீச்சை பிளம்ஸ் போன்ற உலர்த்திய பழங்கள். சீனி உலரும் போது மேலும் அடர்தியாகும். அதேபோல் வாழை. கிலைசீமிக் இண்டெக்ஸ் மிக அதிகம். சாப்பிட்டவுடன் ரத்த குளுகோஸ் எகிறும்.
  19. 39 குடும்பங்களுக்கு பணம் வங்கியில் இடப்பட்டுள்ளதாக விகடன் எழுதியுள்ளது.
  20. வலிகாமத்தின் பல கோவிலடியில் 80 களில் ஒயில் கிழவன் எண்டு ஒருவர் இருப்பார். கோயில் மாறி கோயில் என அலைவார். பார்க்க பிச்சைகாரன் போல தோற்றம். உடலெங்கும் கழிவு எஞ்சின் ஆயிலை ஊற்றி கொண்டு, ரஸ்யா, ரீகன், சோவியத், வியாழமாற்றம், ரஜனி ஶ்ரீதேவி, டெலோ, புலி என உலக விடயங்களை ஒரு கோர்வை இல்லாமல் ஏதோ, ஏதோ பிசத்தி கொண்டிருப்பார். அடிக்கடி உடைந்த ஆங்கிலமும் வந்து விழும். சில சமயம் ஊர் வாலுகள் கல்லெடுத்து அடிக்கும். அவர்களை துரத்துவார். பிறகு அவர்களே பாவம் எண்டு கல்லடிப்பதை கூட விட்டு விட்டார்கள். ஆனாலும் ஒயில் கிழவன் ஒவ்வொரு கோவிலாக போய் விளங்காத தமிழில் பிசத்துவதை கைவிடவே இல்லை. மக்கள் எட்டி ஒரு பரிதாப பார்வையோடு நகர்ந்து போனாலும்…அவ கடமையே கண்ணாக இருப்பார். 87 ஆக்டோபர் இந்தியன் ஆமி நேரத்தின் பின் ஆளை காணவில்லை. “இந்தியன் சாக்காட்டி போட்டான்” என ஊரார் பேசி கொண்டார்கள். இன்னும் சிலரோ ஒயில் கிழவன் ஒரு இந்திய உளவாளி…வேலை முடிந்து ஊர் திரும்பிவிட்டார் என்றனர். நானும் ஒயில் கிழவன் செத்து போனார் என்றே எண்ணி இருந்தேன்… இன்றுவரை…..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.