Everything posted by Kadancha
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
முதலில் இப்படியாக குறியிடுவதை நிறுத்துங்கள். ஆதரிக்கப்படுவதற்காக எழுதுவது தான் நீங்கள் சொல்லும் உண்மையான conspiracy. ஏனெனில் ஆதரிக்க உள்ளிருந்து அரிப்பது தெரியாமல், எல்லாம் சுகமயம் என்ற போலி உணர்வு ஏற்படுத்த முனைவது. அதை நான் ஏற்படுத்த மாட்டேன், அதாவது ஒருவரையும் comfort-zone இல் வைத்து சிந்திக்காமல் இருக்க விடக்கூடாது. அனால் , நீங்கள் செய்வது கருத்தை shape பண்ணி, தளம் ஒரு சிந்தனை இன்றிய அல்லது உங்களோடு ஒத்து போகும் சிந்தனை ஓட்டத்தை உருவாக்க , comfort zone இல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் போல இருக்கிறது. அதற்கு இணக்கங்கதாருக்கு பட்டங்கள், பெயர்கள் ... அதெல்லாம் எனக்கு ஒரு தாக்கமும் இல்லை. ஆனால், ஆதரிக்காவிட்டால் என்ன, (வரலாற்று உட்பட) தரவுகள் சுட்டுவதை தவிர்க்கிறீர்கள் (மற்ற தவிர்ப்பர்வர்களும் சேர்த்து) உணர்ச்சியால். ஆனால் தரவுகள் உணர்ச்சி அற்றவை, பொய்சொல்லாது. புலிகள் சொல்லுவதை critical ஆக பார்க்க விருப்பம் இல்லை என்றால், அது சார்பு நிலை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நான் இதை போட்டியாக எடுக்கவில்லை எப்போதும். ஆனால் போட்டியாக நீங்களே எடுத்து, நீங்களே இழந்துவிட்ஈர்கள் என்பதை இன்னமும் உணரவில்லையா?
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
அர்ச்சுனா அவரின் கேள்வியை கேட்டு இருக்க வேண்டியது, அதிகாரிகளை நியமனம் செய்த அமைச்சரிடம். இது அரசுன்னாவில் எதிர்பார்த்தது. அர்னா இந்த கேள்வியை அரச அதிகாரிகள் அலுவகத்தில் கேட்பது முறைகேடு. ஒரு அதிகார (பீட) அலுவலகத்துக்கு உள்நுழைவது குறிப்பது, அந்த அதிகாரத்துக்கு உட்படுவது எவராகிலும் ஆண்டியை இருந்து அதிபர் வரை. அதுபோலவே, வ்வேறு எந்த அரச பீடத்துக்கும் இதுகளை யாராவது அர்ச்சுனாவுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அர்ச்சுனவுக்கு தெரியில்லை போலும் - ஸ்ரீதரனும் அவரும் சமம் என்று, அர்ச்சுனா எந்த தகமை உள்ள மருத்துவர் ஆயினும். சிறிதரன் கண்டித்து இருக்க வேண்டும் அர்ச்சுனாவை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஆம், சொல்ல மறந்த்துவிட்டேன். நான் சொன்னதுக்கு ஒத்த கரூத்தை ஏற்படுத்தக்கூடிய வசனங்கள், அமெரிக்காவின் யாப்பின் முதல் வரைபில் இருந்தது என்றே எங்கோ வாசித்த நினைவு. குறிப்பாக, internal threats என்பது பாவிக்கப்பட்டு இருந்ததாக. திருத்தங்கள், மொழியை மாற்றியுள்ளதே தவிர, கருத்தை மாற்றவில்லை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
(இது எல்லோருக்கும் தான்.) புலிகளையும், அசாத்தையும் அல்ல. அவர்களின் பார்வையில், அவர்களுக்குத் தெரிந்த அச்சுறுத்தல்களும், அவற்றை எதிர் கொண்ட (அழித்த) விதமும் (வன்முறை பிரயோகம்). எவ்வாறாயினும், அது நான் சொல்லியதை மாற்றவில்லை. அதாவது, அவர்களின் (அசாத், புடினும் நீங்கள் விரும்பினால் சேர்த்து கொள்ளுங்கள்) பார்வையில் இருப்புக்கான அச்சுறுத்தல், இருப்புக்கான அச்சுறுத்தலை அகற்றுவது. நீங்கள் உட்பட, எல்லோரும் அவர்களை அறியாமலே நான் சொல்லும் நிலைக்கு வந்துள்ளனர். அதை தவிர்ப்பதற்கு, அவர்கள் கின்டியா, மேற்கு, மூளைச்சலவை, டெல்லி அழைப்பு என்று மதி, மனம் போன போக்கில் சுற்றிவளைத்தும், நியாயப்படுத்தியும் அவர்களால் அவர்களை அறியாமல் நான் சொல்லும் நிலைக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அதன் சுருக்கமான காரணம், விளக்கம் - பாலசிங்கம் சொல்லியத்தில் தான். அனால், அதற்கு வசதிக்கு ஏற்ற விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாலசிங்கம் துறைசார் அரசியல் புலமை உள்ளவர் - அந்த புலமையின் அடிப்படையில் அவர் சொன்னதின் (big fish ... ) என்பதன் கருத்து அரசியலுக்கும், அரசுக்கும் பொருந்தி வருவது. அரசியலில், big fish .. என்பது ஓர் குறிப்பிட்ட உட்கருத்து வலியது இருப்புக்கு வாய்ப்பு கூடிய (ஆயுத) அரசியல் எனும் விதியில்லா காட்டில் அல்லது ஆட்டத்தில், (big fish ... என்பது) எவ்வாறு அச்சுறுத்தல்களை விதியில்லாது (அழித்து) நீக்குவது, ஏனெனில் விதியில்லா காட்டில் ஒவ்வொன்றும் மற்றதுக்கு அச்சுறுத்தல், அவை ஒவ்வொன்றின் பார்வையிலும், இது பின் (பலம் ஓங்கியவுடன்) அமைக்கப்படும் அரசு என்பதோடு ஒத்துப்போவது. state (அரசு) என்பதன் பொருள் என்ன - state of mind. பலவேறு அச்சுறுத்தல் மத்தியில் மதி தடுமாறாமல், ஒருமுகப்படுத்தி, இருப்பை எந்தவழியேனும் (வேண்டுமாயின் அதன் விதிகளை கூடி புறந்தள்ளி) தக்கவைப்பது. இதுவே தமிழ் அரசு, ஆங்கிலத்தில் state என்பதன் கருத்து. (பாலசிங்கம் சொன்னதுக்கு அவரவர் தமக்கு விரும்பிய தொப்பியை போடலாம்.) ஆனால், ஒரு தொப்பி தான் அரசோடு, அதன் தன்மையோடு ஒத்து வரும். புலிகள் செய்த அழிப்பை, பாலசிங்கத்துக்கு நியாயப்படுவதில் வேறு பல சொல்லாடல்கள் இருந்தும், குறிப்பிட்ட big fish ... என்பதையே பாவித்து உள்ளார் என்பதும். அரசியல் துறை சார் புலமை உள்ள பாலசிங்கம் சரியாகவே பாவித்து உள்ளார் (அனால் இங்கே பாலசிங்கதுக்கு இங்கே பாடம் எடுக்கப்படுகிறது என்பது வேறு விடயம்). பாலசிங்கம் எதை சொல்லி இருப்பார் என்பதை வாசகர்கள் கணித்து பார்க்கலாம். தவிர, எமது இடத்தில், புலிகளும் அதையே செய்தனர், பிரயோக தன்மையே வேறுபாடு. அதே போல , மற்ற இயக்கங்கள் ஆயுத எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால், புலிகளின் வன்முறை பிரோயோகம் பரவி இருக்கும். மாறாக, பகுதி மக்கள் (மற்ற இயக்கங்கள்) மீது குழுமமாக வன்முறை பிரோயோகித்த பின், தொடருமாயின், எல்லை எது? இருப்பை தக்கவைத்தல். வேடிக்கை, அரசியல் துறை சார் புலமை பெற்ற பாலசிங்கம் சொல்லுவதை, வளைக்க முயற்சித்தும் சூழ்நிலை என்பதை தவிர்க்க முடியவில்லை. பாலசிங்கத்துக்கு பாடம் எடுக்கப்படுகிறது. இங்கே தார்மீகம், நீதி ... போன்றவை பொருட்டு அல்ல இருப்புக்கு அதிகாரத்தை பிரயோகிக்கும் போது. (இது அரசியலிலிருந்து வர்த்தக உலகத்துக்கும் தொத்தி கொண்டுள்ளது என்பதும், குறிப்பாக swot இல், வர்த்தக உலகின் அரசியல் என்று அழைக்கலாம்). ஆனால், இதை முதலில் எழுதும் போது பாலசிங்கம் சொன்னது எனது நினைவில் வரவில்லை, ஆனால் வசித்து இருக்கிறேன் நான் சொன்னது. ... சைரஸ் ... அலெக்சாண்டர் ... ... சோழர் ... (சோழர் கடைசியில் இதில் பிழை விட்டு விட்டனர் அரசின் தந்தையான ஒட்டக்கூத்தர் சொல்லைத் தட்டி. விக்கிரம சோழனின் தகப்பன் இழவு படுக்கையில் இருக்கும் போது அரசின் தந்தையான ஒட்டக்கூத்தரின் கையை பிடித்து, பாண்டியருக்கு சுயாட்சி கொடுத்து, பாண்டிய இளவரசியை விக்கிரம சோழன் மணம் முடிக்க அனுமதிக்கும் படி, அதுவே சோழ இராச்சியத்தின் முடிவின் தொடக்கம்) ஆங்கிலேயர்... ... என்று எல்லோரும் அவரவர் சூழ்நிலை அடிப்படையில் வன்முறையை உள்ளுக்குள் இருப்புக்கு பிரயோகித்தனர். அதெ போன்று, உள்ளுக்குள் இருப்புக்கு வன்முறையையை பிரயோகித்த பின், எல்லை எது புலிகளுக்கு சூழ்நிலையே தீர்மானிக்கும். இருப்பே அடிப்படை காரணமும் உந்துதலும். இங்கே புலிகள் விதிவிலக்கு என்பதே மற்றவர்கள் சொல்லுதுவது. அப்படி இல்லை என்று, பாலசிங்கம் முற்றுப்புள்ளி வைத்தார், அதாவது புலிகளே முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். (பாலசிங்கம் சொல்லுவதை வளைப்பது அவர்களின் பிரச்சனை).
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இவ்வளவு பந்தி பந்தியாக புலிகளுக்கு எழுதியதை , புலிகளின் சிந்தனை ஓட்டத்தின் ஆசிரியர், பொறுப்பானவர் ஓரூ வரியில் சொன்னது தவிடுபொடியாக்கி விட்டது. வெளிநாட்டு நிருபர் பாலசிங்கத்திடம் கேட்டது, சுதாரிக, சிந்திக்க நேரம் இல்லாமல் (சிக்க வைக்கும் பேட்டி உத்தியுடன்) கேட்டது . பாலசிங்கமம் எந்த வித சுதாகரிப்பும், அவகாசமும் இன்றி பிளந்தே வைத்தார் புலிகளின் சிந்தனை ஓட்டத்தை. "big fish swallow(s) small(er) fish." (இதன் உட்கருத்து தெரியா விட்டால் தேடிப்பார்க்கவும்) நான் சொன்னதையே சொல்லி இருக்கிறார். மிகவும் பகிரங்கமாக.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
தமிழ் நாட்டில் நடந்தது என்று அறிநது - எல்லா இயக்கங்களும் தமிழ் நாட்டில் பலவிதமாக உதவி செய்தவரும், புலிகளுக்கு எந்த விதத்திலும் எதிர்ப்பு இல்லாதவரும, உண்மையில் ஆதரவாளரும் சொல்லியது. பெயர் கூட சொன்னார். இதனால் தான் (வேறு ஒருவர் சொல்லியது) விபரம் நான் சொல்ல இல்லை
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
எதையும் சொல்லவும். ஆனல், நான் குறிப்பாக நடந்ததை, விபரத்தை சொல்லி இருக்கிறேன். தயவு செய்து திரிக்க வேண்டாம்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
டெலோ புலிகள் சண்டை உக்கிரமாக நடந்த இடத்தின் (கட்டைபிராய் டெலோ இன் முக்கிய இயங்கு தளம் ) அயலில் உள்ள இடத்தில். இது தான் நான் அறிந்தது. அனால், அது நடந்தது புளொட் என்ற சந்தேகத்தில் (டெலோ ஐ தொடர்ந்து புளொட் தடைசெய்யப்பட்டது, குறுகிய காலத்தில்). குடும்பம் என்று சொல்லியது - தந்தை, சகோதரம் - கிட்டத்தட்ட பிணையாக அவர்களாகவே வந்து ஒப்படைக்கும் வரையும். (ஆயினும் அவர்களை ஏன் போட்டு தள்ள வேண்டிய அவசியம் என்பது இப்போதும் நான் யோசிப்பது உண்டு. அவர்கள், எதோ நோட்டீஸ் பதிப்பித்து கொடுத்தவர்கள் என்பதே வெளியில் சொல்லப்டடது. அதாவது கைது செய்ய வந்தவர்கள் சொன்னதாக. ஆயினும், ஏன் பூதவுடல்கள் கொடுக்கப்படவில்லை? சித்திரவதையில் சிதைந்து விட்டது என்றே சந்தேகம். இவர்கள் இளம் குடும்பஸ்தர்கள் அனா நேரத்தில்.) அனால், இது நடந்தது ஓர் பகிரங்க இடத்தில (இங்கே கேட்கிறீர்கள், அதாவது அந்த இடத்தில இருந்த குறித்த சிலரை தவிர எவருக்கும் இது தெரியாது). அதனால் இப்படியான சம்பவங்கள் வேறு ஒதுக்கு புறத்திலும் நடந்து இருக்கலாம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------- அனால், இதை விட கொடுராமானது, தமிழ் நாடில் புலிகள் செய்ததாக நான் அறிந்தது.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
சிரியா - இப்போதும் சிரியாவாக இருக்க, ஆட்சிக்கு வந்திருக்கிற கூட்டத்துக்கு கிடைத்ததற்கு - அசாத்தும், தகப்பனும் காரணம். அடு மட்டும் ஆள்ள - சிரிய சனத்தின் மதத்தீவிர போக்கை முடக்கி, நவீனத்தை நோக்கி நகர வைத்தது தகப்பனும், அசாத்தும். சிரியாவுக்கு 50 வருடங்களில் - எப்போதும் வெளிஅச்சுறுத்தல - முக்கியமாக வல்லூறினால். அசாத் வென்று இருந்தால் தேடித் சென்று தோண்டி எடுத்து எரிக்கும் போக்கு அல்ல - இது தான் அசாத்துக்கும், இப்பொது வந்துள்ளதுக்கும் உள்ள வேறுபாடு (முதலில் அசாத் பகுதியாக வென்று இருந்தார், எதிர்த்த உயிரோடு பிடிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை, கொலை உட்பட) மேற்கு, அதன் எதிரி என்பதால் சிறையை, அசாத்தின் இரும்பகர நசுக்கலை தூக்கி பிடிக்கிறது. (அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக கைது செய்து போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை - மறுக்க முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?) ஆட்சி என்பது சமநிலைப்படுத்தி தான் பார்க்க முடியும், பார்க்கப்பட வேண்டும்.
-
சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்…! – சித்திரவதை மற்றும் சொல்ல முடியாத கொடுமைக்கான ஆதாரங்கள்
ருசியின் நோக்கில் பார்த்தால் , அதாவது சொந்த சுயநலன் அடிப்படையில், சிரியாவில் அவ்வளவு மாற்றம் இல்லை. ருசியாவுக்கு ( அல்லது எந்த வல்லரசுக்கு) தேவை அதன் நலன்களோடு இணங்கி போகும் அரசு. அது நடக்கிறது. முக்கிய நலன் படைத்தளங்களை வைத்து இருப்பது. மற்றும் படி, சிரியா (அஸாதின் அரசியல் பரிசோதனை) வீண் செலவு. உண்மையில், சிரியாவில் உள்ள பகுதிகள் அப்பச்சண்டை பிடித்தாலே ருசியாவுக்கு (எந்த அரசுக்கும், ஈரானுக்கு கூட, எந்த அரசும் விருப்புவது, நிலைத்தன்மை, கட்டுப்பாடு) பாதகம். hts இன் தலைவர், இரானின் விளையாட்டு திடலாக சிறிய இருக்காது என்பதையே அழுந்தனத்திருத்தமாக சொல்லியது. ருசியா, அமெரிக்கா பற்றி வாய் திறக்கவில்லை - இவற்றின் தளங்கள் வெளிப்படையாக இருந்தும். நடந்தது, சிரிய படை முடிவெடுத்து விட்டது சண்டை பிடிப்பதில்லை என. (இதில் தான் அசாத் பிழை விட்டது ) அத்துடன் அசாத், double game விளையாடுவதாகவும் ரசியாவும் ( இரானுக்கும் ) மிகுந்த சந்தேகமும். அரசின் (அதிகாரத்தின்) அடிப்படை monopoly over violence - அது இல்லை என்ற பின் - எந்த வல்லரசும் அந்த அதிகாரபீடத்தை அகற்றிவிட்டு, வன்முறையை பிரயோகிய கூடிய தரப்பை கொண்டுவரும். அது முன்பு எதிர்த்த தரப்பாகவும் இருக்கலாம். செய்திகள் கூட வந்துள்ளது, அசாத் படை சண்டைபிடிக்கும் என்று நம்பி நிற்பதற்கு முயன்றார் என்றும், ருஷ்யா உளவு தோலவி நிச்சயம் என்று அசாத் சொந்த விருப்பில் விலகுவற்கு இணங்க வைத்ததாக. இதுவே நடந்தது சிரியாவில். சர்வசாதாரணமான cold calculation. முன்பு சொல்லி இருந்தேன் , இந்த சிரிய பகுதிகள் இஸ்ரேல் / அமெரிக்கா மற்றும் மேற்குடன் மத்திம, நீண்டகாலத்தில் ஒட்டு போக முடியாது எனறு. அனால் , இஸ்ரேல் அதை விரைவுபடுத்திவிட்டது. மற்றது, இஸ்ரேல் இப்படி தாக்க, hts வாய் மூடி இருப்பது, hts (இஸ்ரேலுக்கு) பொன்னையன் என்ற பெயர் எடுக்காத குறை. முதலில் அமெரிக்காவிடம் தான் hts கேட்டு இருக்கும் இஸ்ரேல் ஐ தட்டி, அதட்டி வைக்குமாறு . ஏனெனில், hts அமெரிக்காவின் வால் ((ஆக குறைந்தது 2012 இல் இருந்து). அமெரிக்கா மறுத்து இஸ்ரேல் இன் தாக்குதல்களை வேண்டியிருக்கிறது போலும், அல்லது hts ஐ அமெரிக்கா புறக்கணித்து என்பது இஸ்ரேல் தாக்குதல், மற்றும் அமெரிக்கா மௌனத்தின் காரணம் https://www.timesofisrael.com/liveblog_entry/footage-shows-syrian-rebels-in-damascus-vowing-were-coming-for-jerusalem-patience-people-of-gaza/ Footage shows Syrian rebels in Damascus vowing: ‘From here to Jerusalem. We’re coming for Jerusalem. Patience, people of Gaza நான் நினைக்கிறன், hts ருசியா உடன் (அசாத் போல) ஒத்து போவது என்ற நிலைகு செல்வதாக. அசாத்தை விட இது ரசியாவுக்கு வசதியாக இருக்கலாம், ஏனெனில், நன்கு உற்சாகமான படைகள், வன்முறையை வன்முறைக்காக பாவிக்க கூடிய படைகள் - எந்த அரச அதிகார பீடத்தினதும் (அமெரிக்கா கூட) முதல் தெரிவு. பழைய குருடி கதவைத் திறவடி. Who will have the (last) laugh?
-
மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
இது பொதுவாக. ஆங்கிலேயர் எந்த மதமும் இருக்கலாம். அனால், ஆங்கிலேயர் என்ற இன அடையாளம் மாறாது, உ.ம் ஆக ஆர் இஸ்லாம், பௌத்தம் ... போன்று வெவ்வேறு மதத்தை கொண்டு இருந்தாலும். வேறு இனத்தவர் சந்ததி சந்ததியாக வாழ்ந்து ஆங்கிலேயர் ஆக முடியுமா? இல்லை. கலந்து ஆக முடியும் , அதாவது கலப்பவரின் சந்ததி இன அடையாளம் ஆங்கிலேய இன அடையாளத்துக்குள் சீரழிக்கப்பட்டு. ஆனால், யூதர் என்பவர்கள் யூத மதம் அவர்களின் மதமாக இருக்காமல் யூதராக முடியாது. ஆனால், யூதர் என்பதற்கு யூத மதம் மட்டும் போதாது. உடனடியாக மதம் மாறியும் யூதராக முடியாது. மத தொடர்ச்சி இல்லாமல் இருந்து இருக்கலாம், ஆனால், சந்ததிகள் வழியே யூத மதமாக இருக்க வேண்டும். அதே போல யூத (இன) அடியும் இருக்க வேண்டும். திருமணத்தில் மாத்திரம் வேறு இனத்தவர் (மதத்தவர்) யூத மதத்துக்கு மாறி, யூதர் ஆகலாம், அதிலும் பெரிய சச்சரவு, பிரச்சனைகள் இருக்கிறது. ஏனெனில், dna ஐ மட்டும் வைத்து யூதர் என்று சொல்ல முடியாது, ஏனெனில் இந்த dna வேறு (மத்தியகிழக்கு) மக்களிலும் இருக்கிறது (அது வேறு ஒரு பிரச்சனைக்கும் வழிபோடுகிறது, இப்போது யூதர் என்பவர்கள் தான் உண்மையில் முதிச யூதரின் சந்ததியா என்று.). யூதர் என்பவர் யார் என்ற (இஸ்ரேல் இன்) இறுக்கமான நிபந்தனைகளால் Ethno-religious (உண்மையில் religio-ethnic என்று, ஆனால் அப்படியான சொல்லாடல் இல்லை) பூமியாக, அரசாக இஸ்ரேல் இருக்கிறது. (உ.ம்.இஸ்ரேல் இல் இருக்கும் பலஸ்தீனியர் இஸ்ரேல் இன் பிரசைகள், அனல் இஸ்ரயேலியர் அல்ல; அதனால் அவர்களை ஒடுக்க வேறுபாடு காட்டப்படுவது சட்டவிரோதம் அல்ல. ஆம், இஸ்ரேல் இன் சட்டமன்றம் அதையே செய்யும். சொறிசிங்களம் போல, பௌத்தம் எனும் போது மறுவாதத்துக்கு இடம் இல்லை). (மறுவளமாக, இஸ்ரேல் இன் அமைப்பு வார்த்தைகளால் (செய்யப்பட்டு இருப்பது) சரி என்றால், சொறி சிங்களத்தின் அமைப்பும் சரி என்றாகிறது). எனவே அவர் சொல்லுது சரி (அவர் எந்த துறையாக இருந்தாலும்). (சைவத்திலும் இந்த தன்மை இருக்கிறது. ஏனெனில், முன்பு சொல்லி இருக்கிறேன் சைவம் (மற்றும் யூதம், வேறு மதங்களும் இருக்கலாம்) இரத்த சந்ததி (இன) மதங்கள். இரு மதங்களும் தேடிச் சென்று மாற்றுவதில்லை என்பதும்.). கரீபியனில் இருக்கும் அந்தந்த நாட்டில் உள்ளவர்கள் (சஞ்சிக்கூலிகளாக சென்றவர்களின் சந்ததி) மீண்டும் தமிழர் என அறிய (உணர) தலைப்படுவது சைவசமயத்தை அவர்கள் விடாதபடியால், அல்லது சந்ததியில் சைவமாக இருந்த படியால். அனால் தமிழை விட்டு விட்டார்கள். சுருக்கமாக, மதம், இன அடையாளம் (மறைக்கப்பட்டாலும்) துளிர்ப்பதற்கு ஊற்றாக இருக்கிறது). Islamic ... என்பது சமய அடிப்படையில் மாத்திரம் சகோதரத்துவம் (இஸ்லாமுமுக்கு உடனடியாக மாறி இஸ்லாமியர் ஆகலாம்).
- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
-
மன்னராட்சிக் கனவு காணும் விஜய் மக்களாட்சியை புரிந்துகொள்வாரா?
இதில் சொல்லப்பட்டு இருப்பதை பொதுவாக சிந்தித்தேன். அடித்தளம் என்பது அரசியல் செயற்றப்பட்டால் உருவாக்கப்படுவது, ரசிகர்களால் உருவாக்கப்பட முடியுமா? விஜே அரசியல் செயற்றப்பாட்டில் இதுவரை ஈடுபடவில்லை என்றே நினைக்கிறன் - மிகச்சசுலபன அரசியல் செயற்பாடு இப்பொது நடக்கும் ஆட்சியில் அவரின் கட்சி கொக்கை அடிப்படையில் இவரு பார்க்கப்படுகிறது என்ற அரசியல் விவாதமும், அவ்வப்போது பகிரங்க கூட்டமும். அரசியலை - சினிமா படம் தயாரிப்பதை போல விஜே அணுக முற்படுகிறாரோ?
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
அசாத்தின் 9 பில்லியன் டாலர்கள் ரஸ்சியாவிடம் தானே இருக்கிறது. இதுக்கு தானே சிரியா சின்னாபின்னமாக்கப்பட்டது us மற்றும் அதன் வாலான நேட்டோ ஆலும். (வேறு நோக்கங்கள், இஸ்ரேல், ஈரான் போன்றவையும் இருக்கிறது. ) ஆனால் தொடங்கியது அசாத் 9 பில்லியன் ஐ cia இன் கண்ணில் மண்ணைத் தூவி வெட்டியாடியபடியால். என்ன மக்களை அசாத் போட்டு வதைக்கிறார் என்றா? மத்திய கிழக்கில் அசாத் செய்தது - ஆட்சியை எதிர்த்தவர்களுக்கு - அங்கே நடக்காதது ஒன்றும் அல்ல. அசாத்தை ஐடா கொடுமைகள், அப்பாவிகளுக்கு அமெரிக்காவின் வாலுகள் செய்து இருக்கின்றன, இப்போதும் செய்வதாக முன்னணி துருக்கி, இஸ்ரேல் (பலஸ்தீனியரின் காணியை திருடுவதற்கு, அவர்களை வதைத்து அகற்றுவதற்கு us, மேற்கின் இன் முழமையான விருப்பம்)
-
விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு
செய்தது தமிழர் என்றா அல்லாது சிங்களவர் என்றா சந்தேகம்? தமிழர் என்றால், என்ன செய்யப்பட வேண்டும் விசமிகளுக்கு?
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
ஆனால், நான் சொல்வது, அசாத் எதிர்ப்பு கூட்டம், அமெரிக்கா, மேற்கை அணைப்பது அசாத்தை எதிர்க்க. ஆனால், இவர்களின் பிராந்திய அரசியல், இராணுவ போக்கு, மேற்கு சொல்வதுடன் ஒத்து வராது. இஸ்ரேல், ஈரான் போன்றவற்றில் - இவர்கள் உள்ளுக்குள் (சமயத்தால்) அடிபாடு இருந்தாலும்.
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
ஆம், ருஷ்யா அதிகாரிகள் மட்டத்தில் வாய் விட்டு ருசியா சொல்கிறது - அசாத் எதிர்ப்பு பகுதியுடன் பேரம் பேசப்பட்டு, முடிக்கப்பட்டு உள்ளது என்று. https://news.sky.com/story/syrias-president-bashar-al-assad-is-in-moscow-and-has-been-granted-asylum-confirms-russian-state-media-13269955 "Mr Assad's location was confirmed as Russian news agencies said Moscow had struck a deal with Syrian opposition leaders. A source said the rebels have guaranteed the safety of Russian military bases and diplomatic institutions in Syria." பார்க்கப் போனால், (மத்திம , நீண்ட காலத்தில்) us, மேற்கு பொல்லைக்கொடுத்து அடிவங்கப்போகும் கதையாக இருக்கலாம்.
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
ஜேர்மன் சனம் எவ்வளவு அப்பாவிகள், 2 பக்கத்தாலும்.
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
அடுத்த கட்ட அகதிகள் ஐரோப்பாவுக்குள், uk சனம் யோசிக்குது நல்லகாலம் பிரெக்ஸிட் வந்தது என்று.
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
அமெரிக்காஇந்த தளம் கண்ணுக்கு படவில்லையோ? ரஷ்யா தளம் வைத்து இருந்தாலும், எண்ணையை சிரியவே எடுக்கிறது, விற்கிறது அமெரிக்கா தளம் (சிறிது என்பது அமெரிக்கா சொல்வது), என்னை எடுப்பது, விற்றது, முழுமையாக அமெரிக்கா கம்பனிகள். ஆட்சி அசாத்தோ அல்லது சமய, இன பயங்கரவாதிகளோ, ஒற்றுமை என்னவென்றால், வெளிநாட்டு படைகள் சிரியாவில் தொடர்ந்து இருப்பது. அரசன் ஆண்டால் என்ன ஆண்டி ஆண்டால் என்ன, வலாதிக்கங்கள் அவர்களின் நலன், வேலை ஆக வேண்டும். உக்ரைனிலும் இதுவே (அனால் சேலன்ஸ்கியின் மடைத்தனம், ஏன் சொறி சிங்களம் செய்யவில்லை, மேற்றுகின் அறிவுரை சொறி சிங்களத்துக்கு, கிநதியாவுடன் எபோதும் இணங்கி போகவேண்டும், ஏன் அப்போது உக்கிரனுக்கு ருசியாய் எதிர்க்குமாறு அறிவுரை?)
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
இது நான் எதிர்பார்த்தது, சிறிய ராணுவம் டமாஸ்கஸ் ஐ சுற்றி ராணுவ இரும்பு கூட்டை இருக்கிறது என்று சொல்லும் போது, ஆனால் எதிர்ப்பு டமாஸ்கஸ் இந்த அயலில் வந்த போது. மருவளமாக அலப்போ, ஹோமோஸ் என்று விழுந்தபோது, அப்படியே அந்த முன்னேற்றம் டாம்ஸக்ஸ் ஐ நோக்கியே, அசாத் எதிர்ப்பு மேற்கு பக்கமாக செல்லவில்லை , இங்கேயே ருசியா இராணுவ, கடல் படை தளங்கள் உள்ளது. ருசியா தளங்கள் அப்படியே இருக்கிறது. அதை நோக்கியே அசாத்தின் flight உம் சென்றதாக பிபிசி சொல்கிறது. நிச்சயமாக பேசித் தான் முடிக்கப்பட்டு இருக்கிறது - ரசிய விட்டுக்கொடுத்த தோற்றம், அதன் நலன்கள் பாதிப்பு இல்லை என்பதால். ருசியா இநக்கிய பின், ஈரானுக்கு தெரிவு இல்லை. bbc: https://www.bbc.co.uk/news/articles/cqx89reeevgo
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
ருசியாவோ (அல்லது அமெரிக்காவோ) ஆட்சியாளரை பற்றி ஒரு எல்லை வரைக்கும் தான் கவனம் - அவர்களின் நலன் பாதுகாக்கப்படும் வரை. இந்த அசாத் எதிர்ப்பு (உண்மையில் பயங்கரவாத) பகுதி, ருஷ்யாவின் முக்கிய தரை, கடல் படை தளங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தாளர்கள் போல இருக்கிறது. அனால் அசத்துக்கு, ருசியாவின் ஒரு கடப்பாடு உள்ளது. சிரிய யுத்தம் தொடங்கியது, சிறியவை மேற்கு திட்டமிட்டு சின்னாபின்னமாகியது, 9 பில்லியன் டாலர் பணத்தை 2 மணி நேரத்தில் cia அசாத் இடம் இருந்து கைப்பற்ற முடியததால். அந்த பணத்தை ஸத் ரஷ்யாவுக்கு மாற்றி விட்டார் அந்த குறுகிய காலத்த்தில். ஆசாத்தின் குடும்பம் ரஷ்யாவுக்கே சென்றுள்ளது என்பதும்.
-
சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள்: வெளியேறிய ராணுவம் - நடப்பது என்ன?
பகிடி என்னவென்றால் அமெரிக்காவுக்கு ஒன்றுமே தெரியாதாம். அனால். Assad சிரியாவை ஒப்பீட்டளவில், எல்லா இனத்துக்கும் இடம் கொடுத்து வைத்து இருந்த ஆட்சி. சமயத்தால் அரசுக்கு மதம் பிடிப்பதை தடுத்து, கட்டி வைத்து இருந்த ஆட்சி. வரப்போவது மேற்கு நல்லது என்று சொல்லும், மதத்தால், இனத்தால் மதம் பிடித்த ஆட்சி. Assad இலும் கொடுமையானதாக இருக்கும்.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
நான் நினைத்தது சட்ட துறையில் உள்ள bar என்று. பின்பு அனுமதி என்பதை பார்த்து ஆம் இது அதுவல்ல, மதுபானம் விற்கும் bar க்கு அனுமதி என்று. ( ஏனெனில் சட்ட துறையில் உள்ள bar க்கு (தகமை பெற்றவர்களை) அழைப்பது என்பதே மரபு)